நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

நூல் அறிமுகம்: உச்சிவெயில் – ஜனநேசன்

      கரிசல்,காட்டில் விளைந்த வைரங்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பணி நிறைவு செய்தவர்.  பணியில் இருந்தபோது பா. செயப்பிரகாசம் என்ற பெயரில் சிறுகதைகளையும் , சூரியதீபன் என்ற புனைபெயரில் கவிதைகள்,…
nool arimugam: click -jananesan நூல் அறிமுகம்: க்ளிக் - ஜனநேசன்

நூல் அறிமுகம்: க்ளிக் – ஜனநேசன்

மென்பொறிஞர்களின் அக –புற உலகுள் வெளிச்சமிடும் “க்ளிக்“ உலகமயமாக்கலின் சமூக பொருளாதார மாற்றங்கள் எவ்வாறு மனிதர்களின் பல அடுக்குகளின் மீது தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை முற்போக்கு படைப்பாளிகளான கு.சின்னப்பாரதியும் ,கந்தர்வனும் இரண்டாயிரத்தின் முற்பகுதியில் நாவல்களாக எழுத முற்பட்டனர். கு.சி.பா. மென்பொருள் துறையில்…
நூல் அறிமுகம்: எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியூட்ரான்-ஜனநேசன் nool arimugam: electron-proton-newtron-jananesan

நூல் அறிமுகம்: எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியூட்ரான்-ஜனநேசன்

ஆதி கவியூற்றிலிருந்து கிளைக்கும்  நதி - ஜனநேசன் அய். தமிழ்மணியின் “எலக்ட்ரான்-ப்ரோட்டான்- நியுட்ரான் “தொகுப்பு மதிப்புரை . ஆதிமனிதரது உணர்வுகளும் , வலியும், மகிழ்வும் ஒலியாய், ஓர் ஒழுங்குக்குள்                 அமைந்த ஓசைகளாய், மொழியாய்  ,எழுத்துகளாய் பரிணாமம் கொண்ட முதல்                     கலைவடிவம் கவிதை!.…
ஹைக்கூ - ஜனநேசன் haiku - jananesan

ஹைக்கூ – ஜனநேசன்

குளமும் இல்லை  தவளையும்  இல்லை  தாவி  அலைவுறும்  மனது.              +++ நீ வந்ததும் எழுச்சி  மறைவதும்  நெகிழ்ச்சி  சூரியனே ...              +++ மொட்டைமாடியில்  பறக்கும்…
நூல் அறிமுகம் : சூரியப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் – ஜனநேசன்

நூல் அறிமுகம் : சூரியப்புள்ளிகளும் இளம்வயது மரணங்களும் – ஜனநேசன்

        மக்களுக்கு  உதவாத எந்தக்கலையும் , வழக்கழிந்து போகும். இது  அறிவியலுக்கும்                      பொருந்தும் என்பதை அறிந்தவர் பேராசிரியர் சு. இராமசுப்பிரமணியம் . நெல்லை மாவட்டம்  அம்பாசமுத்திரத்தைச்…
நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – உஷாதீபன்

நூல் அறிமுகம்: சொல்லப்படாத கதைகள் – உஷாதீபன்

இத்தொகுதியின்  முதல் கதையில் நாம் கவனிக்க வேண்டியது இதன் தலைப்புதான். குருகும் உண்டு மணந்த ஞான்றே…. இது குறுந்தொகையின் 25-வது பாடலின் கடைசி வரி. யாருமறியாமல் நான் தலைவனோடு கூடிய காலையில் அங்கே ஓடிக் கொண்டிருந்த நீரிலே ஆரல் மீனின் வருகையும்,…
நூல் அறிமுகம்: தமிழ்மதி நாகராசனின் ‘சொல்ல மறந்த காவியம்’ – ஜனநேசன்

நூல் அறிமுகம்: தமிழ்மதி நாகராசனின் ‘சொல்ல மறந்த காவியம்’ – ஜனநேசன்



வரலாற்றை மறுவாசிப்பு செய்யும் “மருதுகாவியம்”
ஜனநேசன்

வரலாறு என்பது கடந்த காலத்தோடு முடிந்து போவதல்ல ! அது இனி வருங்காலத்தையும் ஆற்றுப்படுத்துவது; அதனால் தமிழில் பொருத்தமாக வரலாறு என்று மொழிகிறோம். சிவகங்கைச் சீமையின் வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் வரலாற்றை மறுவாசிப்புக்குட்படுத்தி தற்காலத்துக்குத் தேவையான கருத்தை உணர்த்தும் விதமாக “சொல்லமறந்த காவியம் “ என்ற பெயரில் கவிஞர் ‘ தமிழ்மதி’ நாகராசன் புதுக்கவிதை நடையில் காவியமாக படைத்துள்ளார்.

கவிஞர் தமிழ்மதி நாகராசன் புதுவயலில் அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி ஒன்றில் முப்பதாண்டு காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ,தமிழ்ப்பற்றும், கற்கும் ஆரவத்தையும் மாணவரிடையே சிற்றிதழ் மூலமும், ஓரங்க நாடகங்கள் மூலமும் தூண்டியவர். இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக காரைக்குடி தமுஎகச கிளை பொறுப்புகளில் பணியாற்றி வருபவர் .கவிதை யாப்பு மரபும் அறிந்தவர் . கவிஞர்கள் கண்ணதாசன் வாலியின் கவிபாணிகளை உள்வாங்கி , அவர்கள் வழியில் புராண காவியங்களை கவிதை காவியமாக்காமல் சிவகங்கை மண்ணின் மைந்தர்களை , அவர்கள் நாட்டுக்கு விதைத்த தியாகத்தை நாட்டுக்கு மீண்டும் எடுத்துரைக்கும் விதமாக இக்கவிதையிடை வசன காவியத்தை படைத்துள்ளார்.

வணிகர்களாக நுழைந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய ஏகாதிபத்தியம், இங்குள்ள சிறு, குறுநில மன்னர்களை, தஞ்சை, புதுகை, இராமநாத புரம், பாஞ்சாலங் குறிச்சி, எட்டயபுரம் பாளையக்காரர்களை, சூழ்ச்சியால் ஒன்றுசேர விடாது பிளவுபடுத்தி, அவர்களை கப்பம்கட்ட வைத்தனர். இதே பானியில் இந்திய துணைக் கண்டத்தையே அடிமைபடுத்தி சுரண்டினர். இந்நிகழ்வுகளை இக்காவியத்தில் வாசிக்கும்போது, இன்றுமேற்கு இந்திய கம்பனிகளோடு கள்ளக்கூட்டு கொண்டு, இனம், சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி, அனைத்து சுயாட்சி நிறுவனங்களை சீர்குலைத்து, கள்ளக்கூட்டு பெரும்வணிக நிறுவங்கள் மூலம் பெரும்பான்மை செய்தி ஊடகங்களையும் கைப்பற்றி இந்திய மக்களாட்சியை கேள்விக்குள்ளாக்கும் பாஜகவின் நடைமுறைகள் நம்முன் தோன்றி எச்சரிக்கிறது.

வெள்ளையர்களின் சூழ்சிகளை எதிர்கொண்டு வெல்ல, தலைமறைவான வேலுநாச்சியார், விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கர் மூலம், மைசூரை ஆண்ட ஹைதரலி, திப்பு சுல்தான் உதவியோடு படை திரட்டி வெள்ளையரை வீழ்த்தி விரட்டுவது நமக்குள் எழுச்சியை உணர்த்துகிறது. இங்குதான் இப்படைப்பின் நோக்கமும் வெல்கிறது.

எளிய கவிநடையில், எதுகையும், மோனையும், இயைபும், முரணும் இணைந்து துள்ள, வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டுகிறது தமிழ்க் . காவிய மரபை ஒட்டி, காதலும், வீரமும், விவேகமும், தீரமும் தக்க அளவில் கலக்கும் பொருட்டு,வேலுநாச்சியார், முத்துவடுகர், மருதிருவர், கட்டபொம்மன் போன்ற வரலாற்று மாந்தர்களோடு, குயிலி, கலையரசி, முத்துக்காளை, கதிரவன், இன்பரசி போன்ற கற்பனை பாத்திரங்களையும் கவித்துவத்தோடு உலவவிட்டுள்ளார் . சின்னமருது- முத்தம்மை, முத்துக்காளை- கலையரசி , கதிரவன்- இன்பரசி காதல் இணைகள் , வீரம்விளையும் பூமியின் காதலின் இருப்பையும் கவித்துவத்தோடு எடுத்துரைத்து காதலும் வீரமும் காவிய மரபென்று நிறுவுகிறார்.

‘ஆரணங்கு நாச்சியாரை/ வீரணங்காய் வளர்த்திருந்தார் சேதுபதி ‘/ என்று அறிமுகமாகும் வேலுநாச்சியார், வீரமும், ஈரமும், விவேகமும், அரசியல் தந்திரமும் அறிந்தவராய் இயங்குவதை இக்காவியம் முழுக்கக் காணலாம்.

இதேபோல மருதிருவரை , கவிஞர் அறிமுகம் செய்கையில் , ‘வாளோடு இவர்கள் / வளரியும் வீசுவர்/ எறிந்த வளரி / எதிரிகளை வீழ்த்திவிட்டு / இவர்களிடமே சேருமென்று/ எல்லோரும் பேசுவர் !/ ‘ இப்படி அறிமுகமாகும் மருதிருவரின் வீரமும்,சீர்மையும், நேர்மையும்,சீலமும், வல்லமையும் , வள்ளன்மையும் காவியத்தில் மிகையின்றி,வரலாற்றுப் பிழையின்றி சொல்லப்பட்டுள்ளது.

கோபால் நாயக்கரோடு வேலுநாச்சியார் ,திண்டுக்கல் கோட்டை யில் மைசூர் மன்னன் ஐதர்அலியை சந்திக்கும்போது உருது மொழியில் ,தன் நாட்டுக்கும், மக்களுக்கும் வெள்ளையரால் நேர்ந்த துரோகத்தை உருக்கமாக எடுத்துரைக்கிறார். உடனே ஐதரலி, ”உங்கள் மண்ணின் / உரிமைப்போருக்கு / என் உதவி/எப்போதும் உண்டு / இன்று முதல் நீ / என் சகோதரி/ இனி- இது உன் வீடு !/ “ என்று மொழியக் கேட்கையில் வாசிப்பவருக்கு மெய் சிலிர்க்கிறது.

இவை தவிர இன்னும் சில கவிக்கண்ணிகள் நம்மை இக்காவிய உணர்வோட்டத்தில் பிணைக்கிறது.

வேலு நாச்சியாரின் கூற்றாய் .’கும்பினிகளின் / குடல் உருவ.. /சாதி மதம் கடந்து /ஒன்றிணைவோம் /… இருட்டைக் குறைகூறி / இடிந்து போவதால்/ என்ன பயன் ?/ விளக்கை ஏற்றுவதன்றோ / விவேகம் ! /…. முடியும் என்பது/தன்னம்பிக்கை/ முடியுமா? என்பது / அவநம்பிக்கை / முடியாது என்பது / மூட நம்பிக்கை !/ ‘

இன்னோரிடத்தில் முத்துக்காளையின் மொழியில் ; சர்க்கரைக் காதல் என்ன/ சக்கர வியூகமோ ?/ நுழைவது எளிதாயும் / வெளியேறுவது/ வெகு அரிதாயும்/ இருக்கிறதே…! /’

வெள்ளை கலக்டரிடம் பெரியமருதுவின் குரலில் ; ‘மறவர் சீமை / வானம் பார்த்த பூமிதான் / ஆனால் / மானம் காத்த பூமி ! / எங்கள் கரங்கள் / வாள் பிடிக்குமே அன்றி/ வால் பிடிக்காது ! ‘

இதே போல் சின்ன மருதுவின் ‘ஜம்புத்தீவின் பிரகடனம் ‘ திருவரங்கக் கோயில் கதவிலும் , திருச்சி மலைக்கோட்டைக் கோயில் கதவிலும் எழுதி ஒட்டி வெள்ளையருக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவைக் கோரியது மிக முக்கியமானது.

வெட்டுடைகாளி கோயில், திருப்பத்தூரில் மருதிருவர் தூக்கிலிடப்பட்ட இடம், காளையார்கோயிலில் அவர்களது சமாதி, சங்கரபதி கோட்டை போன்ற படங்களுடன் இந்த வரலாற்று மறுவாசிப்பு கவிதையிடை வசன காவியம் எழுத உதவிய 17 சான்று நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளார்.

பதிப்பாளர் கவிஞர் செயம்கொண்டான், நல்லாசிரியர் சேவு. முத்துக்குமார், தமுஎகச சிவகங்கை மாவட்ட செயலர் முனைவர் அன்பரசன் போன்றோர் வாழ்த்துரைகள் வழங்கியுள்ளனர்.

இப்படி தமிழ்மதி நாகராசன் எழுதிய ‘சொல்ல மறந்த [மருது] காவியம் ‘ இன்றைய காலகட்டத்திற்கு முக்கியமான நூலாகக் கருத முடிகிறது என்பதை வாசிப்பவர் உணரலாம். வரலாற்றை கட்டுரையாக வாசிப்பதினும்,
கவிதையாய், கதையாய் வாசிப்பதில் எழும் உணர்வெழுச்சியை தனித்து உணரமுடிகிறது.

‘சொல்லமறந்த காவியம் ‘
கவிஞர் தமிழ்மதி நாகராசன்
வள்ளுவர் புத்தக நிலையம் , காரைக்குடி.
பக்; 171 . விலை; ரூ.200/.தொடர்புஎண் ; 8344550111.
e-mail; [email protected]

காந்தித் தோட்டம்  சிறுகதை – ஜனநேசன்

காந்தித் தோட்டம் சிறுகதை – ஜனநேசன்




“ அடியே வாங்கடி இங்க , அமாவாசை நெருங்குது. அந்தப்பெரிய மனுசரை உசுரோட நேர்ல பார்த்து நாலு நல்ல வார்தைகளைக் காதில வாங்கிக்குவம் “ என்றவாறு குழுக் குழுவாய் பெண்கள் சுத்துப்பட்டிகளில் இருந்து மலையடிப்பட்டிக்கு மேற்கே இருந்த தோட்டவீட்டை நோக்கி நடந்தனர். இவர்களில் பலர் மலையடிபட்டியில் பிறந்து அயலூருகளுக்கு வாக்கப்பட்டுப் போனவர்களும், அயலூர்களில் பிறந்து மலையடிப்பட்டிக்கு வாக்கப்பட்டும் வந்தவர்கள். காந்தி ராமசாமியைப் பற்றித் தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டபடி நடந்தனர்.

*****
ஐம்பது வருசத்துக்கு முந்தி , ராமசாமியின் அப்பா கிராமத்து நாட்டாமை சுப்பையாவுக்கு உடம்பு சரியில்லை. வயசு அறுபதை நெருங்குது. அறுபதாம் கண்டத்தைத் தாண்டுவது உறுதியில்லை. மூணு பொம்பளைப் பிள்ளைகளுக்குப் பிறகு தாமதமா பிறந்த ஆசைமகனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்காம, பேரப்பிள்ளையைத் தூக்கிக் கொஞ்சாம, கண்ணை மூடீருவோமுன்னு பயம் வந்துருச்சு. ராமசாமி அப்பத்தான் காலேஜுல பரீச்சை எழுதி இருக்காரு. பி.ஏ பாசானதும் கவர்மன்ட் பரீச்சை எழுதி வேலைக்குப் போன பின்னதான் கல்யாணம்னு வைராக்கியத்தில் இருந்தாரு.

ஊருக்குள்ள எவ்வளவுதான் பெரிய சம்சாரியா இருந்தாலும் , ஒரு அரசாங்க அதிகாரி ஊருக்குள்ள நுழைஞ்சதும் , அவருக்கு கிடைக்கிற மரியாதையும், அவுரு பேச்சுக்கு ஊரே கட்டுப்பட்டு நிற்கிறதும் பார்த்து , தான் ஒரு அரசு அதிகாரியா வரணுங்கிற ஆசை சிறுவயசிலிருந்தே ராமசாமி மனசிலே வேர்போட்டுருச்சு.! ராமசாமி வளர வளர தானும், தாசில்தாராகவோ, கலக்டராகவோ ஆகணும்னு ஆசையும் கிளைபரப்பி வளர்ந்தது. ஊருப் பெரியவங்க ராமசாமியிடம் சமாதானம் பேசினர். கல்யாணத்துக்கு பின்னால படிச்சு பரீச்சை எழுதி வேலைக்குப் போயிக்கலாம். பொண்டாட்டி யோகத்தில கூட சர்க்காரு வேலை கிடைக்கலாமுன்னு பல உதாரணங்களைச் சொல்லினர். இப்போதைக்கு அப்பாவின் ஆயுசை நீட்டிக்கறது முக்கியமு’ன்னாங்க. அப்பாவின் உடல்நோயைவிட அறுபதுவயசு கண்டமுங்கிற மனவியாதிக்கு மருந்தாகட்டுமுனு கல்யாணத்துக்கு ராமசாமி சம்மதிச்சாரு. அந்தக் கார்த்திகை மாசமே புதன்கிழமை சாயந்திர முகூர்த்தத்தில் ராமசாமிக்கும் , பக்கத்தூரு நிலக்கிழார் மகள் வேலுமயில்க்கும் கல்யாணம். அப்பவெல்லாம் விவசாய வேலைக கெடாம ராத்திரி எட்டுமணியிலிருந்து பத்துமணிக்குள்ளோ , விடியக்காலை நாலு மணியிலிருந்து ஆறுமணிக்குள்ளோ தான் கல்யாண முகூர்த்தம் ! வீட்டு முன்னாலேயே பந்தல்போட்டு மணமேடை அமைச்சுக் கல்யாணம் ! பல கிராமங்களில் இருந்தும் விருந்தாளுக வந்திருந்தாக. ஊர் முச்சூடும் விருந்து தின்னுச்சு. மூணாம் நாளே ராமசாமியின் அப்பாவுக்கு டிபியின் தாக்கம் அதிகமாகி இருமல் வதைத்தது. கார்த்திகை மாசத்தின் மழைவாடையும், கூதக் காத்தும் ஒரு முனையிலும் , வாழணுங்கிற ஆசை மறுமுனையில் இருந்தும் உயிர்ச்சரடை உள்ளே , வெளியேன்னு இழுத்து புறாக்கள் கத்துவது போல தொண்டைக்குள் கறமுறத்தன. கார்த்திகை தீபம் கனத்த நாளு; சீக்காளி நாட்டாமை உசுருக்கு உறுதியில்லைன்னு பேச்சு பரவலா சுத்தியுள்ள கிராமங்களில் சுத்தி வந்தது. வாழ்ந்து அனுபவித்த பெரியமனுசர் சாவு, கல்யாணச் சாவுன்னு , மகன் கல்யாணத்துக்கு போட்ட பந்தலும், தோரணங்களும் பிரிக்கப்படவில்லை.

சுத்தியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயவேலைக ஓய்ஞ்ச நேரங்களில் சனங்க சாதி பேதமில்லாம கூட்டங் கூட்டமா நலம் விசாரிக்க வந்தார்கள். வீட்டு வெளி முற்றத்தில் வடக்கு பார்த்து நூல்கட்டிலில் கிடத்தியிருந்த நாட்டாமையைப் பார்த்து அவரது அருமை பெருமைகளைப் பேசினர். சனங்க பேச்சைக் கேட்கக் கேட்க வாழுமாசையில் அந்திம ஜொலிப்பு கூடியது. ஆனால், அறுபது வயசுன்னு காலக்கெடு திணிக்கப்பட்ட உயிர்க்கடிகாரத் துடிப்பு குறைந்து கொண்டே இருந்தது. பார்க்க வந்தவர்களுக்கு குடிக்க சுக்குமல்லிக் காப்பி தீரத் தீரக் கொதித்துக் கொண்டிருந்தது. . மெல்லுவதற்கு இதமான ஜெயமங்கலம் வெத்திலையும், தேனி தெக்கம்பாக்கும் வாசல் திண்ணையில் ஒரு தட்டில் குறையக் குறைய அடுக்கி வைத்தார்கள். நாட்டாமையின் பெருமையை மகன் எப்படி காப்பாத்தப் போறானோன்னு வெற்றிலையோடு மென்றுகொண்டே ஊர் திரும்பினர்.

அன்று இரவு வீட்டுக்குள் அறையில் தனித்திருந்த புதுமணத் தம்பதிக்குள் சிக்கல் கனன்றது. கார்த்திகை மாசக் குளிருக்கு ராமசாமி கதகதப்பு தேடினான். அவளுக்கும் ஆசைதான். .” பெரியவருக்கு எந்த நிமிசம் உயிர்த்தீ அணையுமோன்னு பதைபதைப்பில் ஊரும் உறவும் வாசலில் உறங்காம கிடக்க, நாம மட்டும் புனையலில் கிடப்பது சரியில்லை “ என்றாள்.

“ இது நமக்கும் மட்டுமா ? இதே சூழ்நிலையில் காந்தியின் அப்பா மரணப்படுக்கையில் கிடந்தப்ப, காந்தி தன் பொண்டாட்டியோடு சுகம் அனுபவிச்சுக்கிட்டு இருந்தாராம். இதை அவரே எழுதியிருக்கிறார். “ என்று அவளை இழுத்து அணைத்தான்.

“நானும் படிச்சிருக்கேன் ; அவரு அந்த சூழ்நிலையில் அவ்வளவு சுயநலத்தோடு நடந்துகிட்டதுக்கு வருத்தம் தெரிவிச்சுதான் எழுதியிருக்கிறார் “ என்று எழுந்தவளை மீண்டும் இழுத்தணைத்து , “ அப்போ இன்னொன்னு செய்வோம் ; இப்படியே துணிமணி இல்லாம ஒருத்தரை ஒருத்தரைத் தொடாம கெடாம மனக்கட்டுபாடோட விடியிறவரைக் படுத்திருப்போம் “

“ காந்தி அறுபதுவயசில செஞ்ச சோதனையை , இந்த இருபதுவயசிலே நாம நினைக்கிறதே அவத்தம். மச்சான், நீ காந்தி கணக்கா நிசமா மனக்கட்டுப்பாடோட இருக்கனுமுன்னு நினைச்சா , இனி சாராயம் குடிக்கிறதில்லை. உன்னைச் சுத்தி இருக்கிறவங்களுக்கும் குடிக்க உதவுறதில்லைன்னு முடிவெடு ! நான் இப்ப வெளியே காத்திருக்கும் சனங்களோட போயிருக்கேன் “ என்று உடுத்தி சரி செய்துகிட்டு வெளியே இருக்கும் சொந்த பந்தங்களோடு உட்கார்ந்தாள். அங்கிருந்தவர்கள் அவளை பிரமித்து பார்த்தார்கள்.! அந்த நிமிடத்திலிருந்து அவள் அந்தக் கிராமத்துக்கு நாட்டாமைக்காரியாக வளரத் தொடங்கினாள்.

நிலவை மோக முந்தானை மூடிக்கொண்டது. தனிமையில் மோக வேக்காடு தாங்காமல் ராமசாமியும் வெளியே வந்து கனல்போட்டு குளிர் காய்ந்தவர்களோடு குந்திக்கொண்டான். இவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவர்கள், சோக நிலைமையை, அப்பாவின் மீது கொண்ட பிரியத்தை புரிந்து பெருமிதப் பட்டாரகள். ஆறுதலாக இருந்தது. எனினும் , உள்ளே அவள் மூட்டிய சவால் கனன்று கொண்டிருந்தது.!

தலைக்கோழி கூவ எழுந்து போனவன் நண்பர்களுக்கு வாங்கி வைத்திருந்த கேன் சாராயத்தை மந்தைக்காட்டில் குழிதோண்டி கொட்டினான் . மந்தைக் காடெங்கும் ஈரக்காற்றோடு மணந்த சாராயவாடை , ராமசாமியின் வைராக்கியத்தையும் மணக்கச் செய்தது. அப்பாவுக்குப் பின் வந்த நாட்டாமை பட்டம் காந்தியோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டது. அவன் காலத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கவென்று , தனியார் கள்ளு, சாராயக்கடை திறக்க அரசு உத்தரவு போட்டபோதும், அரசே சாராயக் கடையை திறந்த போதும் மலையடிப்பட்டிக்குள் சாராய நாற்றம் ஊர்க்கட்டுபாட்டை மீறி, நுழைய முடியவில்லை. விரும்பியவர் கள் வெளியே போய்க் குடித்து வீச்சம் அடங்க ஊர் திரும்புவார்கள். வேலாம்பட்டை, வேப்பம்பட்டை உரிப்பது குறைந்தது. நரம்பு தளர்ந்தவர்களுக்கு தண்ணீர் பகையானது; மலையடிவாரத்திலிருந்து சிவக்கொழுந்து புகை உறவானது. தோப்பு துறவுகளில் புகைமூட்டத்தில் மிதந்தனர்.

அடுத்தடுத்த பஞ்சாயத்து தேர்தல்களில் , நாட்டாமை காந்திராமசாமி தலைமையிலான ஊர்நலக்குழு முன்மொழிந்தவர்களே தலைவராக, வார்டு உறுப்பினர்களாக தேர்வானார்கள். ஊர்க்காரர்களுக்கே வேலை
ஒப்பந்தம் ! அரசுத்திட்டம் முழுமையாக விரையமில்லாமல் நிறைவேற்றப்பட்டன. ஊருக்கு தெக்கே, கிழக்கே பச்சை பசேலுன்னு திரண்டு,விரிந்திருந்த வாசிமலையிலிருந்து மழைக் காலங்களில் பொங்கிவரும் காட்டாத்து வெள்ளம், விவசாயத்தை அழிக்காம , ஊரைச் சேதப்படுத்தாமத் தடுக்கும் நிரந்தரத் தீர்வாக அடிவாரத்தில் தடுப்பனைக் கட்ட அரசாங்கம் மூலம் காந்திராமசாமி ஏற்பாடு செய்தார். வெள்ளச்சேதமும் , நிலத்தடிநீர் குறைவதும் முடிவுக்கு வந்தது. சுத்தியுள்ள வறண்ட கரட்டுக் காடெல்லாம் பழத்தோட்டங்கள் ஆயின ! சுற்றியுள்ள ஊருகளுக்கும் நல்ல பேரு வரக் காரணம் காந்தி ராமசாமின்னு பரவலாப் பேசப்பட்டது.

காந்தி ராமசாமி –வேலுமயில் தம்பதிக்கு ஒரு ஆண், ஒருபெண் பிறந்தனர். மகன் மோகன்தாஸ் எம்.ஏ . படித்துவிட்டு அரசுத் தேர்வெழுதக் காத்திருந்தான். அப்பாமாதிரி படிச்சிட்டு , விவசாயத்தில முடங்கிறாம , அரசு வேலைக்குப் போகணுமுன்னு வெறி மோகன்தாஸ்க்கும் தனன்றது .. அரசுவேலைக்கான நம்பிக்கை , இலவமரம் காய்த்து பழுத்த மாதிரிதான். வயசு கூடிகிட்டே போனது. எப்படியாவது அரசு வேலையில் உக்காந்திறனுங்கிற வெறி ஆட்டியது. டாஸ்மாக் கடைக்கு சூபர்வைசர் வேலைக்கு ஆளெடுக்கிறாகன்னு தகவல் கிடைச்சது. மகன் அப்பாவிடம் அனுமதி கேட்டான். “ நான் மட்டுமல்ல இந்த ஊரே குடிக்கு எதிராக இருக்கும்போது சாராயக் கடைக்கு வேலைக்கு போறேன்னு சொல்லலாமா ? நீ கவர்மன்ட் வேலைக்கு போகவேணாம். வா இயற்கைமுறை விவசாயப்பண்ணை அமைப்போம். இனிமே இயற்கை விவசாயத்துக்குத் தான் எதிர்காலம் ! இதுனால மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது “ன்னு அப்பா காந்திராமசாமி சொன்னதை மகன் மோகன்தாஸ் ஏற்கவில்லை.

‘வயசு இருக்கும்போதே அரசோட டாஸ்மாக் சர்வீசில் சேர்ந்துட்டோமுனா , அப்புறமா படிப்புக்கேத்த பதவிக்கு மாறிக்கலாம்’ என்று புரோக்கர் சொன்னதை நம்பி, குடும்பத்துக்குத் தெரியாம , கடனை வாங்கி கைமாத்திட்டு மதுரையில் டாஸ்மாக்கில் சூபர்வைசரா சேர்ந்திட்டான். இந்தத் தகவலைச் சொன்ன மகனின் நண்பனிடம் , “ அவன் , சாராயக்கடை வேலையை உதறிட்டு ஊருக்குள்ளே வரட்டும் !, இல்லாட்டி அவன் இந்த ஊருக்குள்ள நுழையக்கூடாது.! குடும்பத்துக்கும், ஊருக்கும் எதிரா நடந்துக்குற அவன் எங்க பிள்ளை இல்லை.! இனி அவன் எங்க மூஞ்சியில முழிக்கவும் கூடாது ! “ என்று ராமசாமி கறாரா சொல்லிவிட்டார்.

அப்பா மூலம் அறிந்த நெறிமுறைகளும் , இங்கே வாழ்க்கை நடைமுறைகளும் இருவேறு துருவங்களாக இருந்தன . விடுபட ஆசைதான்; ஆனாலும் மோகன்தாஸ்க்கு விவசாயத்தில் ஆர்வமில்லை. வேற கவருமன்ட் வேலைக்கு மாறவும் வாய்க்கலை.. டாஸ்மாக் வேலையை உதறவும் முடியலை. வேற பரீச்சை எழுதிப்போக படிக்க நேரமுமில்லை. தேனை நக்கப்போன தேனீயின் காலும், இறக்கையும் ஒட்டிக்கொண்டன. அப்புறம் அவன் ஊருக்குள்ளே வரலை அவனுக்கு பிடிச்ச பொண்ணைக் கட்டிகிட்டான். அவ்வப்போது பார்க்கும் ஊர்க்கார்கள் மூலம் குடும்பத்தாரை விசாரிப்பதோடு சரி.

ராமசாமி தம்பதிக்கு , ‘ தாம் விதைச்ச விதையிலே முள்ளுச்செடி முளைச்சிருச்சே, உயிர்க்காக்கும் மூலிகை பச்சை நாவியா மாறிருச்சே.. .ஊரையே திருத்திட்டோம் ; பெத்தபிள்ளையை மாத்த முடியலையே என்ற கவலை அரித்துக் கொண்டிருந்தது. மகனை வைத்துக் கண்ட கனவு பலிக்கவில்லை.

ஆசிரியர் பணிக்குப் படித்த மகளை ராமசாமி அக்காமகனுக்கு மணமுடித்து தம் குடும்பத்தோடு வைத்து , அவர்களை இயற்கை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தினார். அவர்களுக்கு பிறந்த பேரக்குழந்தைகள் மூலம் மன ஆறுதலைத் தேட முயன்றார்.

காந்தி ராமசாமி மகன் மோகன்தாஸ் குடும்பத்திலிருந்து அந்நியப் படுத்தப்பட்டு மகள், மருமகன் குடும்பத்தை நாட்டாமையின் பூர்வீக வீட்டில் தங்கவைக்கப் பட்டனர். ராமசாமி தோட்டத்தில் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து இயற்கைவிவசாயத்தில் ஈடுபடலானார். பாரம்பரிய நாட்டமை பட்டமும் மருமகன் கைக்குப் போய்விடுமோ என்று நாட்டாமையின் பங்காளிக்கு பயத்தை உண்டாக்கியது. கிராமத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் பங்காளிகள் நாட்டாமை காந்தி ராமசாமியின் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை கிராம மக்களிடையே பரப்பினர்.

குடிகாரரர்கள் உறுத்தல் இல்லாமல் ஊருக்குள் உலாவினர். இந்த விவரம் ராமசாமியின் நண்பர்கள் மூலம் தெரியவந்தது. ராமசாமியின் மனநோயை அதிகப்படுத்தியது.

எதாவது பொதுக்காரியம் , பங்குனித் திருவிழா என்றால் மட்டுமே அவர் ஊருக்குள் வருவார். மற்ற நேரங்களில் இயற்கை விவசாயப் பண்ணையிலே இருந்தார். அரசுபணிகள் தொடர்பாகத் தேடிவரும் அதிகாரிகள் அவரை பண்ணையிலே போய் பார்ப்பார்கள். இது பங்காளிகள் வதந்தி பரப்ப ஏதுவாக அமைந்தது. ஆனாலும் வேலுமயில் எதாவது ஒரு வேலை சாக்கிட்டு கிராமத்துக்குள் வந்து அனைத்து தரப்பு பெண்களிடமும் உறவாடிப் போனார். இது மகளையும், மருமகனையும் முன்னிறுத்தும் தந்திரம் என்று எதிர்க்குழுவினர் அஞ்சினர். ‘ இனி பகையாடி கவிழ்க்க முடியாது ; உறவாடி கறக்க பார்ப்போம் ‘ என்று பங்காளிகள் களத்தில் இறங்கினர்.

இந்தப் புகைச்சலை முடிவுகட்ட வக்கீலைக் கொண்டு ஒரு உயில் எழுதி தான் இறந்த பிறகு ஊர்ப்பெரியவர்கள் முன்னிலையில் வாசித்து அதன்படி நடக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளதை ஊர்ப்பெரியவர்கள் ஐந்துபேரிடம் சொல்லிவைத்தார். இந்த உயில்பூதம் ஊருக்குள் பல கதைகளை கிளப்பியது. இந்த சூழ்நிலையில் தான், எழுபதுவயதான ராமசாமி , நோய்மை மிகுந்து படுத்த படுக்கையாகக் கிடந்தார். இவரைப் பார்க்கத்தான் சுற்றிலுள்ள கிராமத்து மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இதில் நோயுற்ற காந்திராமசாமியைப் பார்ப்பதை விடவும், ஊருலகமெல்லாம் இயற்கையான பழம், தானிய தவசுன்னு பேரு வாங்கி நூறுபேருக்கு மேல வேலை பார்க்கிற அவரது விவசாயப் பண்ணை எப்படி இருக்கிறது ? உயிலில் என்ன எழுதி இருக்கிறார்? அடுத்த நாட்டாமை யார் ?, விலகிப்போன மகன் டாஸ்மாக் வேலையை விட்டுட்டு குடும்பத்தோடு சேர்ந்திருவாரா , பங்காளிக என்ன பேசிக்கிறாக . என்று அறியும் ஆவல் , நாள்தோறும் கூட்டத்தை கூட்டிக்கொண்டிருந்தது. இதை அறிந்த பிரபல மின்னூடகம் ஒன்று காந்திராமசாமி தோட்ட வீட்டுக்கு படையெடுத்தது.

வாங்களேன் ஒரெட்டு பார்த்துட்டு வந்திறலாம் .
ஜனநேசன். 

நூல் அறிமுகம்: ”தெளிவு” ஜனநேசன் மூன்று குறுநாவல்கள் – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: ”தெளிவு” ஜனநேசன் மூன்று குறுநாவல்கள் – தேனிசீருடையான்




எழுத்தாளர் ஜனநேசன் பதினேழு நூல்களின் ஆசிரியர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனத் தடம் பதித்து இன்று குறுநாவல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியராய் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனது இரு மகன்களையும் நன்கு படிக்க வைத்து அந்தஸ்தான பணியில் அமர்த்தியிருக்கிறார். மூத்த மகன் ஐ ஏ எஸ் முடித்து தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சித் தலைவராய் இருக்கிறார். இளையமகன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராய்ப் பணியாற்றுகிறார்.

ஆட்சித் தலைவருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் சுற்றுலா சென்று வந்திருக்கிறார் ஜனநேசன். கிடைத்த அனுபவங்களை இலக்கியமாக்கிப் படைப்பியக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்கள் அவரின் பல படைப்புகளுக்குக் களம் அமைத்துத் தந்திருக்கின்றன. மேகாலயா மாநிலத்திற்குச் சென்றபோது கிடைத்த அனுபவம்தான் “பயணம்” என்ற குறுநாவலாகப் பரிணமித்திருக்கிறது.

இந்தத் தொகுப்பில் மூன்று படைப்புகள் இருக்கிறன. முதல் கதை “பயணம்” எளிமையானதும் வலிமையானதுமான படைப்பு.

1 பயணம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பகுதியாய் இருந்து பிரிந்து இன்று மேகாலயா மாநிலமாக உருவாகியிருக்கும் பகுதியின் முக்கிய் நகரம் ஷில்லாங். மலைச் சிகரங்களும் அடர்ந்த காடுகளும் நிறைந்த நிலப்பரப்பு.

அங்கு அமைந்த ராணுவ முகாமின் துணைக் கேப்டனாகப் பணி புரிந்தான் தென் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன். (வயது 22) ஞாயிறு ஒருநாள் மட்டும் ராணுவ வீரர்களுக்கு ஃப்ரீடே. நான்கு மணிநேரம் வெளியில் சென்று வரலாம். அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை நகரத்தின் மிகப் பெரிய பொழுதுபோக்கு இடமான பூங்காவுக்குச் செல்கிறான். மாநிலத்துக்கு அன்று ஒருநாள் விடுப்பு என்பதால் அனைத்துப் பணியாளர்களும் அங்கு வந்து மகிழ்ச்சியாய் இருந்து செல்வர். குடும்பத்தோடு கட்டுச் சோறு கட்டி வந்து அனுபவிப்பார்கள். அரசுப் பேருந்தோ ஆம்னி வண்டிகளோ அதிகம் புழக்கத்தில் இல்லாத மாநிலம் அது. ஆட்டோ அல்லது கார் குறைந்த வாடகைக்கு இயங்கின.

ஐந்துபேர் அடங்கிய குடும்பம் ஒன்று ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ந்திருந்த போது அவர்களின் கட்டுச் சோற்றை ஒரு குரங்கு தூக்கிக் கொண்டு மரத்தில் ஏறிவிட்டது. இதைப் பார்த்த பாண்டியன் குரங்கை விரட்டியபோது அது பக்கத்தில் இருந்த குளத்துக்குள் பொட்டலத்தை எறிந்துவிட்டது. பனியாய்க் குளிரும் நீருக்குள் குதித்து உணவை மீட்டுத் தருகிறான் பாண்டியன். அவனை அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் பிடித்துப் போகிறது. நாட்டுக்கு உழைக்கும் ராணுவ வீரன் என்பதால் கூடுதல் பிரியம். குடும்பத்தின் மூத்த மகள் ஹாஷிமா பாண்டியன்மீது காதல் கொள்ள வாராவாரம் மையல் தொடர்கிறது.

அவர்கள் ஹாஸி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அனைவரும் குள்ளமான மனிதர்கள். சீன மக்களைப்போல் தோற்றம் கொண்டவர்கள். ஹாஷிமாவின் தந்தையிடம் தங்கள் காதலைச் சொல்லி அவர் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறான் பாண்டியன். நாடு காக்கும் வீரன் என்ற வகையில் பெண் தரக் குடும்பத்தாருக்குச் சம்மதந்தான். அதற்கு இனக்குழுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும். ஆனால் அவர் மறுத்துவிடுகிறார். ஹாஷிமா பாண்டியன்மீது கொண்ட அப்பழுக்கற்ற அன்பால், காதலன் அழைப்பை ஏற்று அவனோடு மதுரைக்கு வந்து விடுகிறான்.

பாண்டியன் ஹாஷிமா தம்பதிக்கு முதலில் மகன் பிறக்கிறான். பிறந்த வீட்டுக் குல தெய்வத்தின் அடையாளம் சேவல் என்பதால் சேவற்கொடியோன் என பெயர் சூட்டப்படுகிறார்கள். ஆனாலும் பாண்டியன் ஒரு வெற்றி வீரன் ஆதலால் மகன் ஜெயக்கொடி, எனவும் அழைக்கப் படுகிறான். கணவன்மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக குடும்ப அட்டையிலும் பள்ளிச் சான்றிதழிலும் “ஜெயக்கொடி” பதிவாகிறது. அடுத்து மல்லிகா என்ற பெண்குழந்தையும் பிறக்க பாண்டியன் இறந்துபோகிறான். 35 வருடங்கள் ஓடிவிட்டன. இரு தரப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஹாஷிமா ஷில்லாங் போகவேண்டும் என்ற ஆசை இல்லாமல் தன் கணவன் ஊரிலேயே உயிர்விட ஆசைப் படுகிறாள்.

ஹாஷிமாவின் அம்மா இறந்து போனதாக ஒரு தந்தி ஷில்லாங்கில் இருந்து வருகிறது. ”அம்மாவின் சொத்தில் மகளுக்குச் சேர வேண்டியதை வந்து வாங்கிச் செல்லவும் என்றும் எழுதப் பட்டிருக்கிறது. கருமாதிக்கு சம்மந்தவழி சீர் செய்ய வேண்டும். கணவன் பெயருக்குக் களங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் மகனை மட்டும் சீர் செய்துவிட்டு தன் குடும்பத்தார் தருவதை வாங்கிவரும்படி சொல்லி அனுப்புகிறாள்.. அம்மாவுக்குக் கிடைக்கப் போகும் அந்தச் சொத்தைத் தான் அபகரித்துவிட வேண்டும் எனற நோக்கத்தோடு ரயில் ஏறுகிறான் ஜெயக்கொடி.

ரயில் பீகார் மாநிலத்தைக் கடந்த போது கிடைத்த ஓர் அனுபவம்! பிச்சை எடுக்கும் கூட்டம் அங்கு அதிகம். வட மாநிலங்கள் பலவும் மிக நீண்ட வறுமைக் கோடு கொண்டவை. ஒரு சிறுவன் கையேந்திய போது அடித்து விரட்டும் மக்கள் காவி உடை தறித்த சாமியார் பிச்சை கேட்டபோது வணங்கி பவ்வியமாய்க் காசு தருகின்றனர். திருநங்கைகளுக்கும் இதே அந்தஸ்துதான். இன்னொரு மாற்றுத் திறனாளி மனிதன் ரயிலில் ஏறி பிரஷ் கொண்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டுக் கையேந்துகிறான். செய்த வேலைக்குக் கூலியாகக் கூடப் பலரும் தர மறுக்கின்றனர். ஆக பிச்சையிடுவது அனுதாபம் கருதி, அல்லது சக மனிதனின் பசி போக்கவேண்டும் என்ற இரக்கம் கருதி அல்ல; ஆண்டிகளுக்கும் அணங்குகளுக்கும் தர்மம் தந்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பதால்தான். காவியைக் கடவுளாய் நம்பும் மூடத்தனம் இன்றளவும் வட மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழகம் போலவோ கேரளம்போலவோ மனிதநேயப் பண்பாட்டை வலுவிழக்கச் செய்யும் காவி சித்தாந்தத்தை அவர்கள் எதிர்ப்பதில்லை.

கௌஹாட்டி ரயில் நிலயத்தில் இறங்கிய போது மைத்துனன் பாண்டுங் வந்து வரவேற்று அழைத்துச் செல்கிறான். ஷில்லாங் நகரின் விடியலும் அந்தியும் வித்தியாசமாய் இருக்கின்றன. காலை ஐந்து மணிக்கு எட்டு மணிபோல் வெயில். மாலை ஐந்து மணிக்கு இரவு பத்துமணிபோல் இருண்டிருக்கிறது. (இந்தியாவின் காலத்தரவு (srandard time) வடகிழக்கு மாநிலங்களின் காலத்தரவோடு ஒத்துப் போகவில்லை என்பது முக்கியக் குறிப்பு.) மனித விலங்குகளின் உடலமைப்பும் அப்படித்தான். சமவெளி மனிதர்கள் ஐந்தடிக்குமேல் சராசரி உயரம் என்றால் அவர்கள் ஐந்தடிக்கும் கீழேதான். விலங்குகளும் குட்டைப் பிறவிகளாய் இருக்கின்றன. முகவெட்டு சீன, மங்கோலிய, நேப்பாள கலவையாய் இருக்கிறது.

மதச் சடங்கு முறைகளும் வித்தியாசமானது; அவர்களின் சொந்த மதம் ‘ஹாஸி’; ஆங்கிலேயர் வருகைக்குப் பின் கிறித்துவத்தைச் சிலர் தழுவினாலும் சொந்த மதச் சடங்குகளையே பின்பற்றுகின்றனர். சேவல்கொடி ஏந்தி சாஸ்திரங்கள் செய்கின்றனர். குடித்துக் கும்மாளமிடும் மனிதர்கள் அங்கு அரிது; ஆனால் பான்பராக் உறிஞ்சும் உதடுகள் அதிகம்.

ஷில்லாங் நிலப்பரப்பு வித்தியாசமானது. மலையும் பள்ளத்தாகுமாய் அதீத உழைப்பைக் கோரிய நிலப்பகுதி. மலையைக் குடைந்துதான் சாலை அமைத்திருந்தார்கள்.

அந்த மக்களின் காலை விருந்து என்பது ரசகுல்லாவும் ‘போகா’ என்ற அவல் உப்புமாவும்.

ஹாஷிமாவின் தம்பி நாற்பது வயதைக் கடந்திருந்தார். அக்கா மகனைப் பார்த்தது. அவர் கூறிய வார்த்தைகள் ஜெயக்கொடியை நெகிழ வைத்தன. ”முப்பது வருடத்தில் என்னவெல்லாம் மாறியிருக்கிறது! அம்மா இல்லை; அப்பா இல்லை; அத்தானும் இல்லை. எங்கள் வீட்டுக்கு நான், உங்கள் வீட்டுக்கு நீ; வாழ்க்கை ஓடுகிறது, இந்த மேகம் மாதிரி; நினைவுகள் சூரிய சந்திர நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன; நினைவுகள் இல்லாட்டி மனிதனும் மிருகம்தானே?”

ஜெயக்கொடிக்குத் தன் தாயின் உறவினர்கள் காட்டிய அன்பினால் மனமுருகிப் போகிறான். தனது சுயநல சிந்தனையைக் கைவிடுவது என முடிவெடுத்து செய்முறை செய்துவிட்டு, அம்மாவின் சொத்தில் இருந்து மகள் ஹாஷிமாமாவுக்குச் சேர வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகிறான்.

சொத்து அபகரிப்புச் சிந்தனையைக் கைவிட்டு, அந்தத் தொகையை அப்படியே அம்மாவிடம் தந்து விடுகிறான்.

2 வேடிக்கை மனிதரோ?

நெருஞ்சிக்குடி கிராமத்தில் ஜாகையிட்ட திருநங்கைகள் 13 பேர் அவ்வழியே செல்லும் ரயில்களில் ஏறி யாசகம் பெற்று வாழ்ந்தனர். ஒருநாள் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அந்த ரயிலில் பயணம் செய்தபோது திருநங்கைளைக் கவனித்து, அவர்கள் நிலையறிந்து, அரசு நிவாரணம் வாங்கித் தர ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அவர்களில் கீர்த்தனா என்பவள் எம்காம் படித்தவள் என்பதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக ஊதவியாளர் பணி கிடைக்கிறது. போட்டித் தேர்வு எழுதி வெற்றிபெற்றால் உயர் பதவி கிடைக்கும். அரசு ஊழியர்களின் முயற்சியால் அனைவருக்கும் வீட்டடி வழங்கப் படுகிறது.

சமுதாயத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாய்த் திகழ்பவர்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும். அவர்களை “பிரம்மாவின் தும்மல் துளிகள்” என்று பரிகாசம் செய்கின்றன நமது புராணங்கள். (பிரம்மாவின் தும்மல் துளிகள்; சிறுகதை; இதயநிலவன்.)

“நம்மல ஏன் ஒம்பதுங்குறாங்க?” என்று ஒருத்தி கேட்கும் கேள்விக்கு இன்னொருத்தி பதில் சொல்கிறாள். “பூஜ்யம் பக்கத்துல ஒண்ணு மாதிரி இருக்குல்ல; அதனாலதான்.”

வேறொருத்தி வேறுமதிரி சொல்கிறாள். “ஒன்பது என்ற நம்பரை எந்த நம்பரால் பெருக்கினாலும் அதன் கூட்டுத் தொகை ஒன்பதுதான் வரும். ஒன்பதின் பெருக்கம் புது எண்ணை உற்பத்தி செய்யாது; இனப் பெருக்கத்துக்கு உதவாத எண் ஒன்பது.”

சமுதாயத்தின் ஏச்சுக்குப் புது அர்த்தம் கண்டுபிடித்து சமாதானம் அடைகின்றனர்.

வாழ்க்கை சுமூகமாக நடந்தபோது கொரோனாத் தொற்று பரவி வாழ்க்கையைத் தலைகீழய் மாற்றிவிடுகிறது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் கொரோனாப் பராமரிப்புக் கூடத்தில் வேலை செய்து மனித உயிர்களைக் காப்பாற்றப் போராடுகின்றனர். கீர்த்தனா போன்ற அலுவலகப் பணியாளர்களும் அந்த வேலையில் இறக்கி விடப்படுகின்றனர். கீர்த்தனாவின் சக தோழிகளும் முழு முடக்கத்தால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு யாசகம் வாங்க வழியில்லாமல் திண்டாடிய போது, அவர்களுக்கும் உதவியாளர் பணி கிடைக்கிறது.

தீநுண்மி பராமரிப்புக் கூடத்துக்கு ஏராளமானவர்கள் வந்து குணமாகியும் குணமாகாமல் மரணமடைந்தும் போகின்றனர். இறந்தவர்களைப் புதைக்க மயானக் கிடைக்கவில்லை; குணமடைந்து செல்லும் ஏழைகள் ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடூர நோயினால் மன பயம் அதிகரித்து அனைத்து மனிதர்களும் நடைபிணமாய் அலைகின்றனர்.

கீர்த்தனாவுக்கும் சோதனையில் பாசிடிவ் என வர 15 நாள் மருத்துவம் பார்த்துக் குணமடைகிறாள். இன்னும் இரண்டு வாரம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நெரிஞ்சிக் குடியில் இருக்கும் தனது சக தோழிகளுக்குக் கைபேசியில் அழைக்கிறாள். அந்தக் குடிலுக்கு வர அவர்கள் அனுமதிக்கவில்லை. தனிமைக்காலம் முடிந்தபின் வந்தால் போதும் என்கின்றனர்.

நோய்த்தொற்றுத் தடுப்பகத்தில் பணியாற்றியவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப் பணியாளர்கள் உட்பட, பணிச்சுமை காரணமாகவும், ஓய்வின்மை மற்றும் மக்கள் அறியாமையால் ஒதுக்குதல் காரணமாகவும் விரக்தி நிலையில் துவண்டு போவதை நிறைவாகச் சித்தரிக்கிறது கதை.

போக்கிடம் இல்லாமல் அலைந்த கீர்த்தனா ரயில் ரோட்டு வழியாய் விரக்தியோடு நடந்து செல்கிறாள். அப்போது, இருள் வெளியில் ஓர் ஆட்டோ டிரைவர் தற்கொலைக்குத் தயார் ஆவதைக் கவனித்து விடுகிறாள்.. அவனைக் காப்பாற்றி மீட்டெடுத்துத் தைரியம் சொல்லி “நாம் சாகவேண்டாம்” என்கிறாள். ”ரயிலை மறித்துப் போராட்டம் நடத்துவோம்; அதிகாரிகள் வந்து நிவாரணம் வழங்கட்டும்” என்கிறாள். இருவரும் சேர்ந்து ரயிலை மறிக்கின்றனர் என்பதோடு கதை முடிகிறது.

இந்தக் கதையில் முக்கியச் செய்தி ஒன்று உண்டு; தமிழகத்தில் இருந்து வட இந்தியத் தொழிலாளிகள் சாரி சாரியாய் நடந்து சென்று துயரப் பட்டதை அறிந்திருக்கிறோம். அதே நிலை தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது; மகாராஷ்ட்ரா உட்பட வட மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்திருக்கிறார்கள். இது பலருக்கும் புதிய செய்தி. நோய்த்தொற்றுக் காலம் என்பது அங்கிங்கெனாதபடி துயர முட்களைத் தெளித்திருந்தது; ஆசிரியர் மிக அழுத்தமாக இதைப் பதிவு செய்திருக்கிறார்.

தீநுண்மி துயரத்தின் ஏறத்தாழ முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது இந்தக் கதை.

3 தெளிவு;-

பிரியா ஒரு கட்டுமானப் பொறியாளர். அவள் கணவனும் அவளும் ஐ ட்டித் துறையில் வீட்டில் இருந்தே இருவேறு காலமுறைமையில் பணியாற்றுகின்றனர். சென்னை நகரின் நெருக்கடியான வாழ்க்கை! இளமையை இன்பமாய் அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுகின்றனர். ஒரே வீட்டில் உள்ள தம்பதிகளுக்கு அமையும் முரண்பட்ட வேலை முறைமையிலும் கிடைக்கும் நேரத்தில் அதீதக்கூடுதலும், பணி நெருக்கடியும் அவனிடத்தில் உடல் சோர்வையும், அவளிடத்தில் போதாமையையும் உணர்த்துகின்றன. அதனால் தாம்பத்திய இடைவெளிகள் அதிகரிக்கின்றன. ஒரு கட்டத்தில் அடங்கா வேட்கையுடன் தாம்பத்தியம் கொள்ள பிரியா ஆசைப்பட்ட போது கணவன் பணிநெருக்கடியைச் சொல்லி ஒத்திப்போடுகிறான். அலைக்கழிக்கும் காமவிகார எண்ணங்களிலிருந்து தப்ப நினைக்கிறாள். கொஞ்சநாள் பிரிந்திருந்தால் அவன் சரியாகலாம் என்று பிரியா பிடிவாதமாய் வீட்டை விட்டுத் தேனி மாவட்டத்தில் இருக்கும் தன் சொந்த கிராமத்துக்குச் செல்கிறாள் .

தன்னை எடுத்து வளர்த்த பெரியம்மா வீட்டுக்குப் போகிறாள். அன்பு பொழியும் கிராம வாழ்க்கை அவளுக்குச் சில படிப்பினைகளைத் தருகிறது. தாம்பத்தியம் ஒரு பொருட்டல்ல; வாழ்வதுதான் முக்கியம் எனப் புரிந்துகொள்கிறாள்..

கணவன் நிறையக் குறுஞ்செய்தி அனுப்பி அவளை அழைத்துக் கொண்டிருந்தான். அவள் கிளம்பத் தயாராய் இல்லை. மூன்றாம் நாள் மதுக் கோப்பையைப் பதிவிட்டு “கோப்பையில் உதடுவைத்து மதுவைச் சுவைக்கையில் உன் உதட்டில் என் உதடு வைத்து உறிஞ்சுவதுபோல் பித்தேறிக் கண் சொக்குதடி” என வசனம் எழுதுகிறான். ஏற்கனவே குடிகாரனாய் இருந்தவனை மீட்டெடுத்து வைத்திருக்கிறாள். இப்போது மீண்டும் அடிமையாகி விட்டானே எனப் பதறுகிறாள். உடனடியாக டாக்ஸி எடுத்துக் கொண்டு சென்னைக்குச் செல்கிறாள். அங்கு அவன் மதுபோதையில் தன்னுணர்வு இல்லாமல் கிடக்கிறான். டாக்சி டிரைவர் உதவியால் மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்கிறாள்.

தாம்பத்திய வாழ்க்கையின் வெக்கையும் வேட்கையும் சரியாகபுரிந்து கொள்ளபடாதை தெளிவு சொல்கிறது. இருவருமே பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள் என்பதை இருவர் நடத்தைகளும் கரை தாண்டாமல் வாழவைக்கிறது. இந்தக் காலகட்டத்தின் முக்கிய படைப்பு நூல் இது.

– தேனிசீருடையான்

வெளியீடு:
Pustaka digiral media pvt ltd
#7,002 mantri recidency
Bennergharra main road.
Bengaluru 560 076
Karnataka. India.