Nai Nayaga Poem By Jeyasri. ஜெயஸ்ரீயின் நாய் நாயாக கவிதை

நாய் நாயாக கவிதை – ஜெயஸ்ரீ




எப்போதுமே வாலாட்டிக்
கொண்டே இருக்கும் என்பதில்லை
சில சமயங்களில்
குரைக்கவும் கடிக்கவும்
செய்யும்.
காட்டில் வாழ்ந்த
வேட்டை நாய்கள்
வீட்டில் வாழ்வதால்
மனித குணம்
தொற்றிக் கொண்டது

பொமரேனியன்
டால்மேஷன்
தொடங்கி
தெருநாய் சொறிநாய்
வரையில்
தான் இன்ன சாதி
என தெரியாததால்
நாய் இன்னமும்
நாயாகவே உள்ளது

Haiku Poems 3 By JeyasriBalaji. ஹைக்கூ கவிதைகள் 3 ஜெயஸ்ரீ

ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ




#1
முன்னாள் காதல்
இன்னும் வாழ்கிறது
குழந்தையின் பெயரில்

#2
கட்டை விரலால் நசுக்கி
கொல்லப்பட்டது காதல்
குறுஞ்செய்தி

#3
இருசக்கர விபத்து
சாட்சியாய்
ஒற்றைச் செருப்பு

#4
இல்லாமல் இருப்பதில்லை
இருந்தாலும் நிலைப்பதில்லை
கவலைகள்

#5
வியாபாரக் களம் கண்டது
வெந்து குப்பைக்குச் செல்கிறது
அரிசி

#6
சிவலோகம் சென்றாலும்
வசூல் செய்யப்படும்
தனியார் வங்கிக் கடன்

#7
உப்புமா இனிதாக பேசி
பதவி உயர்வு கண்டது
கேசரி

#8
குறிப்பெடுத்துப் படித்தாலும்
புரிந்த பாடில்லை
வாழ்க்கைப் பாடங்கள்

#9
ஆலயத்தில் நிசப்தம்
கடவுள் குரல் கேட்கிறது
அழும் குழந்தை

#10
ராணிக்கு
முழு சுதந்திரம்
சதுரங்கம்

Haiku Poems by Jeyasri ஹைக்கூ கவிதைகள் - ஜெயஸ்ரீ

ஹைக்கூ கவிதைகள் – ஜெயஸ்ரீ




பசியோடு பிச்சைக்காரன் வாசலில்
மாடியில் காக்கைக்கு விருந்து
அமாவாசை..

ஆழ்ந்த தூக்கத்திலும்
என்னை தட்டி எழுப்புகிறது
நாளைய நினைப்பு..

மலடியை கடந்து சென்ற
பூனைக்கு பிரசவத்தில் ஆறுகுட்டிகள்
சகுனம்..

ரேசன் சர்க்கரை கிடைக்க
முறையாக வரிசையில்
எறும்புகள்..

பெண்மை இல்லாத வீட்டை
உணர்த்திக் காட்டியது
அடுப்படியில் தூங்கிய பூனை..

தெய்வங்கள் உண்டு
சாட்சிகள் உள்ளது
இரைந்து கிடக்கும் பொம்மைகள்..

தலைவலிக்கான சிகிச்சை
தலைசுற்றல் ஆனது
மருத்துவமனை கட்டணம்..

வேகமாய் துடுப்பினை போட்டும்
முன்னேறவில்லை
படகோட்டி வாழ்க்கை.

வீடு வசதி குறைவென்போம்
இன்னும் சிறியதில் வாழ வேண்டுமே
கல்லறை..