நாய் நாயாக கவிதை – ஜெயஸ்ரீ
எப்போதுமே வாலாட்டிக்
கொண்டே இருக்கும் என்பதில்லை
சில சமயங்களில்
குரைக்கவும் கடிக்கவும்
செய்யும்.
காட்டில் வாழ்ந்த
வேட்டை நாய்கள்
வீட்டில் வாழ்வதால்
மனித குணம்
தொற்றிக் கொண்டது
பொமரேனியன்
டால்மேஷன்
தொடங்கி
தெருநாய் சொறிநாய்
வரையில்
தான் இன்ன சாதி
என தெரியாததால்
நாய் இன்னமும்
நாயாகவே உள்ளது