கோவை ஆனந்தனின் கவிதைகள்

கோவை ஆனந்தனின் கவிதைகள்




உன் தூரிகை நானாக
**************************
நீ தூரிகையை கையிலெடுக்கும் போதெல்லாம்-உன்
தூரிகை நானாகிறேன்…

போகுமிடமெல்லாம்  அரங்கேறும் அவலங்களைச்
சித்திரமாக்க…

புரையோடிய ஊழலையும்
கரைபுரளும் லஞ்சத்தையும்
வேரோடு களைந்தெறிய
கறுப்பு வர்ணங்களைத் தொட்டு
காணும் இடமெங்கும் வரைந்த சித்திரங்களால்….

வாய்மையெனும் வெளிச்சத்தைத்தேடி  இன்னும் அலைகிறேன்
ஊழலின் பிடியிலிருக்கும்  வறுமையெனும் பிணிபோக்க….

உன்னிரு விரல்களால்
விடைகொடு நீதிதேவதையே
உன் தூரிகை நானாக….

பூவாசம்
**********
பூக்களின்வாசம் வீசும் வழித்தடத்தில்
தனிமையில் பயணிக்குமொரு நாளில்
கைகள் நிறைய பூக்கள் பறித்து
வாசத்தை நாசிவழியே நுகர்ந்து
நுரையீரலிலுள்ள அசுத்தங்களத்தனையும்
வெளியேற்றிச் சுத்தமாக்கி
அக்கம்பக்கம் சுற்றிலும் பார்த்து
காவலாளியில்லாத வேளையில்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
தன்னைத்தானே உலர்த்தி
துருப்பேறி  நகரும்போதெல்லாம்
கிரீச்சிடும் கம்பிவலைக் கதவுகளை  விலக்கி நுழைகிறேன்
முள்வேலிகளாலான பூந்தோட்டத்திற்குள்…

பூத்துக் குலுங்கும்  சோலைவனத்துக்குள்
எனக்குமுன்னே முன்கதவுகளை திறக்காமல்
இரகசியமாய் நுழைந்து களவாடும் கூட்டமொன்றை
விழிகள் விரித்துக்கண்டேன்
கண்காணாத காட்சிகளாய்…

கண்ணுக்கெட்டிய தூரம்வரை
பசுஞ்செடிகளின் பூக்களில் அமர்ந்தெழும் தேனீக்கள்
துளி துளிகளாய்ச்  சேகரித்த பூந்தேனைச் சுமந்து
போர்விமானங்களைப்போல
சிறகுகளிலிருந்து வெளிப்படும் ரீங்காரஓசையுடன்
பறக்கின்றன திசையெங்கும்….

கொத்துக்கொலைகளாய்க் கைகளில் சேகரித்து  வெளியேறி நுகர்கிறேன்
கையிலிருந்த பூக்களின் வாசத்தை…

பூக்களின்இதழ்களுக்குள் ஒளிந்திருந்த தேனீயொன்று
சிறகுகள் விரித்து பறந்தது வேறொரு சோலைவனத்தைத் தேடி…

–கோவை ஆனந்தன்
கிணத்துக்கடவு
வாஸ்து கவிதை – ச.லிங்கராசு

வாஸ்து கவிதை – ச.லிங்கராசு




அவரவர் கலாச்சாரம் சொல்லும்
ஆடைகளில் நீங்கள் செல்லும்
பொழுதுகளில் அறியவில்லையா
இது பன்முகத்து பூமி என்று?
இல்லை இது ஒரே பூமி என்று
உளறும் நீங்கள் ஏன் உங்கள்
ஒரே ஆடையில் செல்வதில்லை?

வேஷங்களில் உங்களை வீழ்த்த
வேரெவரும் பிறக்கவில்லைதான்
வேறு எதுவும்உங்களிடம் இல்லை என்று
விளங்குவதற்கு இங்கு என்ன விற்பனர்கள் தேவையா?
சாஸ்திரத்தை கட்டிக்கொண்டு
சதிராடும் நீங்கள்
சாமன்யனின் சங்கடங்களைத்
தீர்த்து வைப்ப தெப்படி?

பொருளாதாரம் புதைகுழிக்குப்
போகின்ற நிலையிலும்
வானுயர சிலை வைத்து
வாழ்த்துப் பாடுகின்றீர்
வாஸ்து பார்த்து வடிவமைத்த
கட்டடத்திலும் நீங்கள் வசைப் பாடப்

போவது இன்னும் வாழும் நீதிகளை தான்!

ச.லிங்கராசு

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்

நூல் அறிமுகம்: சுபாஷ்சந்திரன் ”பணமும் அர்ப்பணமும்” (மலையாளம்) – சுந்தரராமன்




நூல் : பணமும் அர்ப்பணமும்
மொழி : மலையாளம்

ஆசிரியர் : சபாஷ் சந்திரன்
விலை : ரூ. 110
வெளியீடு : மாத்ருபூமி புக்ஸ், கோழிக்கோடு
விற்பனை : 2765381. 0495 2765388.
www.mathrubhumiboos.com

மலையாள மொழிப் பத்திரிகை மாத்ருபூமியின் சிறுவர் வெளியீடான பால பூமியில் ஆசிரியராக இருந்த சபாஷ் சந்திரனின் அவர்கள் அந்த இதழில் எழுதி வெளிவந்த, சிறுகதைகளின் தொகுப்பே இந்த பணமும் அர்ப்பணமும் என்ற சிறுவர் புத்தகம்.

இதில் இடம் பெற்றுள்ள முப்பத்தைந்து கதைகளும் உண்மை, நேர்மை, இலட்சியம், தியாகம், நம்பிக்கை, அறிவு, திறமை, ஒழுக்கம் போன்ற நேர்மறை சிந்தனைகளை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக இருக்கின்றன.

எடுத்துக் காட்டாக சில கதைகளின் சாராம்சங்களையும் அதன் நீதி போதனைகளையும் சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாமென்று எண்ணுகிறேன்.

பிரார்த்தனையும் ஆணவமும் என்ற முதற்கதையில் பிரார்த்தனையால் ஏற்பட்ட ஆணவத்தின் பலனை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆணவம் அழிவை நோக்கியே நம்மை அழைத்துச் செல்லும் என்ற சிறு உண்மையை விளக்குகிறார்.

கல்வி, செல்வம் இதில் எது நிலைத்து நிற்கும் என்ற விவாதத்திற்கு வித்யாதரனும் தனாகரனும் என்ற கதை ஓர் எடுத்துக்காட்டு. ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி மற்றொன்றாய் வருகிறது என்பதை திராட்சை ரசமும் செங்கலும் என்ற கதை வெளிப்படுத்துகிறது. செங்கல் என்பதன் உருவாக்கத்தையும், மது என்பதின் தயாரிப்பையும் ஒப்பிட்டு பகவான் ராமகிருஷ்ணரின் கருத்து மூலம் வெளிப்படுத்தி இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மதுவின் ஆபத்தைப் பற்றிய அவரின் அறிவுரை பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணியாய் பதியும்.

கத்தியும் பேனாவும் என்ற கதையில் கத்தியினால் ஏற்பட்ட தோல்வியும், பேனாவினால் ஏற்பட்ட பெரும் பலனும் விளங்குகிறது. கத்தியை தீட்டாதே, புத்தியை தீட்டு என்று புத்திமதி சொல்கிறது.

ஆசிரியர் சுபாஷ்சந்திரன் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர், சிறுவர்களுக்கான நிறைய தொகுப்புகள் வெளியிட்டிருந்தாலும், அவரின் மனுஷ்யனு ஒரு …. முகம் என்ற மலையாள நாவல் கேந்திரிய சாகித்ய அகாடமிவிருது, கேரள சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது, ஓடக்குழல் விருது என பன்னிரெண்டு பரிசுகளைப் பெற்றிருக்கின்றது. இந்த புத்தகம் A preface to Man என்று ஆங்கிலத்திலும் வெளி வந்திருக்கிறது.

இனி சில கதைகளுக்கு வருவோம். பணிவும் விவேகமும் என்ற கதை மூலம் விவேகத்தோடு கூடிய பணிவே வெற்றியை பெற்றுத் தரும் என்று விளக்குகிறார். ஒரு யானை தன் இனத்தில் யாரோடும் நண்பனாகாமல் மற்ற மிருகங்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, ஆபத்துக் காலத்தில் மற்ற மிருகங்களைவிட தன் இனத்து யானையே உதவிக்கு வருமென்று விளக்குகிறார். புது வருடத்தின் தேவதை என்ற கதை சோம்பலையும் அதை துரத்துவதையும் நாசூக்காகவும் நையாண்டியாகவும் ஒரு குழந்தையின் மூலம் விளக்குகிறார். வாசிப்பும் பேச்சும் என்ற கதை மூலம் பேச்சை விட செயலே சிறந்தது என்று இயம்புகிறார்.

புத்தகத்தின் தலைப்பைப் பெற்றிருக்கும் பணமும் அர்ப்பணமும் என்ற கதை ராஜராஜசோழன் காலத்தை ஒட்டியதாக வருகிறது. வறுமையிலும் ஒரு பெண்ணின் அர்ப்பணிப்பும் மன்னரின் மனமாற்றமும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஒன்பது வயது முதல் பதினாலு வயது வரை உள்ள சிறுவர், சிறுமியரின் வாசிப்பு ரசனையை மேம்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இந்நூலின் கதைகள். எல்லா சிறுவர் கதைகளிலும் உள்ளது போலவே இக்கதைகளிலும் காடுகள் வருகிறது, மலை வருகிறது, கடல் வருகிறது. மற்றும் யானைகள், பூனைகள், சிங்கம் புலிகள், வண்டுகள், குருவிகள், கிளிகள் போன்றவைகள் கதாபாத்திரங்களாக உலா வந்து சிறுவர்களின் மனதில் சந்தோச சலனத்தை உண்டு பண்ணுகின்றன. கற்பனை மனோபாவத்தை வளர்க்கின்றன. மேலும் மன்னர்கள், ராஜரிஷிகள் துறவிகள், திருடர்கள் இராஜகுமாரன்கள் கதை மாந்தர்களாக வருகிறார்கள். எல்லா கதைகளும் சொற் சிக்கனமும் வாசிப்பு லாகவமும், நீதி போதனைகளும் கொண்டவைகளாகவே உள்ளன.

அரேபியா, ஜப்பான் போன்ற வெளி நாடுகளும், கெளசாம்பிகா, மித்ரபுர், குருசேத்திரம், மகதம், காந்தாரம் போன்ற இந்திய நாடுகளும் கதைகளில் கதைச் சூழலாக அமைகிறது. அது வாசிக்கும் சிறுவர்களுக்கு ஒரு மண் சார்ந்த உணர்வை ஏற்படுத்தும்.

இன்றும் நாளையும் என்ற கதை பாண்டவர்கள் மூலம் நன்றே செய்க அன்றே செய்க, அதை இன்றே செய்க என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வண்டுகள் கற்றுத் தந்த பாடம் ஒரு சுற்றுச் சூழல் பேருண்மையை குழந்தைகள் மனதில் விதைக்கிறது. புலியும் பூனையும் என்ற கதை முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தத்துவத்தை விவரிக்கிறது.

மன்னரும் திருடனும் என்ற கதை ஒரு திருடன் திருந்தினால் வீடு திருந்தும், வீடு திருந்தினால் நாடு திருந்தும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் என்ற தத்துவத்தை பேசிச் செல்கிறது பிரச்சினையும் தீர்வும் என்ற கதை.

கரிக்கட்டையும் வாழ்க்கையும் என்ற ஜப்பானியக் கதை உழைப்பின் உயர்வை உணர்த்திச் செல்கிறது. இறக்கையின் சக்தி ஆணவத்தின் ஆபத்தை உணர்த்துகிறது. கடைசி வாய்ப்பு என்ற கதையில் மகாபலி, வாமனன் மூலம் ஓணப் பண்டிகையின் தத்துவார்த்தங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. முத்தாய்ப்பாக கப்பலும் தடியும் மூலம் முயற்சியின் உயர்வு விளக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் முப்பத்தைந்து கதைகளும் பிஞ்சு உள்ளங்களில் நாட்டுப்பற்று, சுற்றுச்சூழல், நேர்மை, நீதி, தியாகம், செம்மை, அறிவின் தேடல் போன்ற உயர்ந்த சிந்தனைகளை விதைத்துச் செல்கிறது என்பது திண்ணம்.

– சுந்தரராமன்

கணம் கோர்ட்டார் அவர்களே! காவல்துறை தலைவர் அவர்களே!! – அ.பாக்கியம்

கணம் கோர்ட்டார் அவர்களே! காவல்துறை தலைவர் அவர்களே!! – அ.பாக்கியம்



கணம் கோர்ட்டார் அவர்களே!
காவல்துறை தலைவர் அவர்களே!!

நீங்கள் இப்படி ஒரு உத்தரவை அறிவிக்கலாமா? ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்தையும் மக்கள் ஒற்றுமை காக்கும் மனித சங்கிலி இயக்கத்தையும் நீதித்தராசின் ஒரே தட்டில் வைத்து எடை போடலாமா?

தேச விடுதலைக்காக போராடிய பகத்சிங் லாகூர் சதி வழக்கில் நீதிபதியிடம் பேசுகிற பொழுது செயலை நோக்கத்திலிருந்து பிரித்துப் பார்க்கக் கூடாது என்று வாதிட்டார்.

கொலை செய்யும் கொலைகாரணையும், யுத்த களத்தில் போரிடும் ராணுவ வீரனையும் செயலை மட்டும் வைத்து எடை போடலாமா?

எலியை பிடிக்க விஷம் வைக்கலாம் மனிதனுக்கு கூட அந்த விஷம் மரணத்தை ஏற்படுத்தும்.? விஷம் வைத்த நோக்கத்தை விட்டு விட்டு செயலை மட்டும் பார்ப்பது நியாயமாக இருக்காது என்று தேசவிடுதலைக்காக போராடியவர்களையும் கிரிமினல் குற்றவாளிகளையும் ஒன்றாக எடை போடுவதை எதிர்த்தார்.

இப்போது தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதின் நோக்கம் மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து கலவரத்தை நடத்துவதற்காக என்று தெள்ளத் தெளிவாக தெரிகிற நோக்கம். கடந்த கால வரலாறும் அதுதான்.

மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடிய மனித சங்கிலி இயக்கம் மக்களிடையே ஏற்படுத்தக்கூடிய பிணக்குகளை நீக்கி ஒற்றுமை உணர்வை உருவாக்கக் கூடியது.

இரண்டு அமைப்புகளின் நோக்கத்தை கவனியாமல் செயலை மட்டும் வைத்தது தடை விதிப்பது எப்படி நியாயமாகும்.

கன்னியாகுமரியில் மண்டைக்காடு நடைபெற்ற மதக்கலவரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் நடத்தும் வன்முறை போன்று இருந்தது என்று அப்போது எம்.ஜி.ஆரால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் நீதிபதி வேணுகோபால் தெரிவித்து இருந்தார்.

கோவையில் தென்காசியில் திருவல்லிக்கேணியில் என பல இடங்களில் நடத்தப்பட்ட வன்முறைகளுக்கு எல்லாம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்காயாக தெரியும்.

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆரம்பித்து பிறகு தான் மத கலவரங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

அதுவரை இந்தியாவில் மத நெகிழ்வுத் தன்மை இருந்த வரலாற்றை காண முடியும்.

அக்பருக்கு இந்து படை தளபதியும் ராணா பிரதாப் சிங் மன்னருக்கு இஸ்லாமிய படை படைத்தளபதியும் சத்ரபதி சிவாஜிக்கு பீரங்கி படைக்கும் கப்பற்படைக்கும் இஸ்லாமிய படைத்தளபதியும் இருந்தனர் என்பதை வரலாறு அறியும்.

1925 ஆம் ஆண்டு ஆர் எஸ் எஸ் ஆரம்பிக்கப்பட்ட பிறகு திட்டமிடப்பட்ட மதக் கலவரங்கள் நடத்தப்பட்டது.
1927 ஆம் ஆண்டு நாக்பூரில் கலவரத்தை உருவாக்கினார்கள்.
1927 28 ஆம் ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட மத கலவரங்கள் மகாராஷ்டிராவில் நடைபெற்றது.
1929 ஆண்டு பம்பாய் ஆயில் மில்லில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தை மத கலவரமாக மாற்றினார்கள்.
1932, 1935, 1937 ஆண்டுகள் பம்பாயில் தொடர் மதக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டது.
1948 ஆம் ஆண்டு பிரிவினைவாத காலத்தில் மதக் கலவரங்கள் நடைபெற்றது நாடறியும்.

1960 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சங்கிகளின் திட்டமிட்ட செயலால் மத கலவரங்கள் பெருகியது.

1968 ஆம் ஆண்டு மட்டும் 348 கலவரங்கள் நடைபெற்று உச்சத்தை எட்டியது. இந்த ஆண்டுதான் டெல்லியில் தங்கி இருந்த பெருந்தலைவர் காமராஜர் ஆர் எஸ் எஸ் காரர்களால் தாக்கப்பட்டார்.

1969 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தில் 660 பேர் மரணம் அடைந்தனர் இதில் 430 பேர்கள் இஸ்லாமியர்கள்.
1969 ஆண்டு ராஞ்சியில் நடைபெற்ற கலவரத்தில் 184 பேர்கள் மரணமடைந்து இதில் 164 பேர்கள் இஸ்லாமியர்கள்.
1970 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 512 பேர்கள் மரணம் அடைந்ததில் 417 பேர்கள் இஸ்லாமியர்கள்.

இந்த கலவரத்தில் இஸ்லாமியர்களின் 6071 வீடுகள் பிடிக்கப்பட்டு சேதம் அடைந்தது என்பதையும் இது போன்ற திட்டமிட்ட தாக்குதலை இந்துத்துவவாதிகள் அரங்கேற்றினார்கள் என்று அஸ்கர் அலி இன்ஜினியர் தொகுத்த புத்தகத்தில் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்.

1980ல் மொராதாபாத் 1985இல் குஜராத் 1987ல் மீரட் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்ட கலவரங்கள் நிகழ்த்தப்பட்டது.

1983 ஆம் ஆண்டு அசாம் மாநிலத்தில் நெல்லியில் மூன்று மணி நேரத்தில் 21 91 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். பத்தாயிரம் பேர் வரை இறந்திருப்பார்கள் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கிறது.

1989 ஆம் ஆண்டு பகல்பூரில் நடைபெற்ற மத கலவரத்தில் ஆயிரம் பேர்கள் இறந்தனர் இதில் 900 பேர்கள் இஸ்லாமியர்கள்.

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் 1044 பேர் மரணம் அடைந்தவர்களில் 790 பேர்கள் இஸ்லாமியர்கள் என்று விகாரப்பூர்வ பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் இறந்தவர்கள் 2000 பேர்கள் வரை இருக்கும் இதில் இஸ்லாமியர்கள் 1800 பேர் வரை அடங்குவார்கள் என்று அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1992 இல் நடைபெற்ற மும்பை கலவரத்தை உலகம் அறியும்..
2013 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் தலைவராக அமித் ஷா பொறுப்பேற்றவுடன் முசாபர் நகர் மாவட்டத்தில் மட்டும் 62 பேர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் இதில் 42 பேர் இஸ்லாமியர்கள்.

2020 ஆம் ஆண்டு டெல்லி கலவரத்தில் 52 பேர் இறந்ததில் 32 பேர் இஸ்லாமியர்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
இதைவிட கொடூரமா ஆர்எஸ்எஸ் இன் இந்துத்துவா சக்திகள் வெடிகுண்டு கலாச்சாரத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதுதான்.
2006 மாலேகான் குண்டு வெடிப்பு,
2007 ல் சம்சுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா, 2008 மொடசர் ஆகிய இடங்களில் சங்கிகளால் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளால் மொத்தம் 121 பேர் மரணம் அடைந்தார்கள் என்பதை கணம் நீதிபதி அவர்களும் தமிழக காவல்துறை தலைவரும் அறிந்திருப்பார்கள்.

இப்படிப்பட்ட நாசகர நோக்கத்தோடு செயல்படுகிற அமைப்பையும் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்க கூடிய அமைப்புகளையும் அதன் நோக்கங்களை அறிந்து கொள்ளாமல் நீங்கள் முடிவு எடுப்பது மனித குலத்திற்கு உகந்ததல்ல.

– அ.பாக்கியம்.

En Vervayil Uppirukku Engirukku Saathi Poem by Adhirai. என் வேர்வையில் உப்பிருக்கு....எங்கிருக்கு சாதி? கவிதை - ஆதிரை

என் வேர்வையில் உப்பிருக்கு….எங்கிருக்கு சாதி? கவிதை – ஆதிரை




குடி….
குலம்….என்பது
ஏமாற்று வேலை!
சாதி…
குடித்தனம் செய்யுது
தமிழினத்தாரை!

மேடையில் முழங்கிடும்
மூடரே!உங்கள்
மூளையில் இல்லையா
சாதியின் செல்கள்?

ஆதியில் வந்த தா
சாதி?-யெனில்
எப்படி வந்தது
மீதியாய் சேரி?

பாதியில் வந்த தே
சாதி!
பாவி பயல்களே
சமத்துவ….
பாதையில் போவதே
நீதி!

என்னை நீ…ஏய்ப்பதில்
ஏதடா நீதி?
என் வேர்வையில்
உப்பிருக்கு…
எங்கிருக்கு சாதி?

பிடுங்கிய எம்மண்ணில்
இல்லையா சாதி?
பல தலைமுறை உழைப்பிலே….
இல்லையா சாதி?

கும்பிடும் சாமியில்
சாதி!நாங்கள்
செய்திடும் தொழிலிலும் மேவிடும்
சாதி!

பள்ளி நுழைகையில்
சாதி!நீ… படைத்தவன்
பள்ளியறை நுழையினும் சாதி!

வீதியிலே எங்கும்
சாதி!போகும்
ஊரெங்கும் பெயரிலே
உலவுது சாதி!

வேலை தளத்திலே
சாதி! வெட்டி வீழ்த்துது
உயிர்களை ஆணவ
கொலையென சாதி!

பிறக்கையில் ஒட்டிகொள்ளும் சாதி!
சுடு காட்டிற்கு போனாலும் தொடருதே
சாதி!

என்னடா…மனுநீதி?அதை எட்டி உதை
பிறந்திடும்….
சமூகநீதி!

காரி உமிழடா….
சாதியின் முகத்திலே
கரியினை பூசடா!

மோதி மிதியடா…
சனாதனத்தின் இடுப்பு
எலும்பை உடைடா!

அட…டா…!
போதி எமதென
மார்தட்டு!போக்கிரி
ஆரிய கும்பலை
நீ…விரட்டு!

புரட்சிப் பாதையை
நீ எட்டு!எங்கும்
சமத்துவம் மலர்ந்திட
அறத்தின் கொடி கட்டு!

ராமனின் ராஜ்ஜியத்தில் சீதையின் சிதைகள் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

ராமனின் ராஜ்ஜியத்தில் சீதையின் சிதைகள் – சுபாஷ் (இந்திய மாணவர் சங்கம்)

ராமனின் ராஜ்ஜியத்தில் சீதையின் சிதைகள்.. குங்குமத்திற்குப் பதிலாக ரத்தவாடை கமழ்கிறது. சந்தனத்திற்குப் பதிலாகக் குருதியோடை உழல்கிறது. துப்பட்டாவில் தொங்க வேண்டியது அவள் கழுத்து அல்ல, அவள் யோனியில் கௌரவம் புதைத்த உங்கள் ஆணவத் திமிரும், அறுக்கப்பட வேண்டிய ஆண் குறிகளும். உடைக்கப்பட…