‘பெண் அன்றும் இன்றும்’ – நூல் வெளியீடு
நூல் வெளியீட்டு விழா: வ.உ.சிதம்பரனார் தன்வரலாறு
நூல் : வ.உ.சிதம்பரனார் தன்வரலாறு
ஆசிரியர் : ந.மு.தமிழ்மணி
விலை : ரூ.₹150/-
வெளியீடு : பாரதி புத்தகலாயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
வ உ சிதம்பரனார் தன்வரலாறு ( உரைநடையாக்கம் ந.மு.தமிழ்மணி ) நூல் வெளியீட்டு விழா இன்று (5.9.2022 திங்கள்) காலை 11 மணிக்கு, பாரதி புத்தகாலயத்தில் நடைபெற்றது.
தோழர் ஆர்.பத்ரி தலைமை ஏற்க
தோழர் ஜி.செல்வா வரவேற்புரை நல்கினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், வெளியிட
வஉசியின் மொத்த படைப்புகளையும் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தொகுத்தளித்த பேரா.வீ.அரசு பெற்றுக் கொண்டார்.
பாரதி புத்தகாலயத்தின் நிர்வாக மேலாளர் தோழர் ஜெயஸ்ரீ நன்றியுரை ஆற்றினார்.
வ.உ.சி.யின் தன்வரலாறு முற்றிலும் அகவற்பாவால் வ.உ.சி. அவர்களால் எழுதப்பட்டாலும் இந்திய சுதந்திரம் அடைவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பாக முதல் பதிப்பு 1946 ஆம் ஆண்டு இறுதியில் வெளியானது. அதன் பினபு வெளிவந்த போதும் செய்யுள் வடிவிலேயே வெளிவந்தது.
வ.உ.சி.யின் சுயசரிதை அக்காலச் சமூகநிகழ்வுகளோடு அவரைப் பிணைத்து காட்டுகின்ற ஓர் அரிய இலக்கிய பெட்டகம். எனவும், மேலும் இந்த சுயசரிதத்தை அரசியல் ஆவணம் என்றே ம.பொ.சி.குறிப்பிடுகிறார்.
வ.உ.சி.யின் சுயசரிதை அவரது சொந்த வாழ்க்கை மட்டுமன்று. திலகர் சகாப்தத்தின் முற்பாதியில் தமிழகத்தில் நடந்த விடுதலைப் போரின் வரலாறுமாகும். அந்த வகையில் அதனை அரசியல் தஸ்தாவேஜு என்றும் கருதலாம். கவிதை வடிவம் பெற்றுள்ளதால் தமிழ் இலக்கிய களஞ்சியத்திலேயும் சேர்க்கப்பட்டதாகும் என்றும ம.பொ.சி.கூறும் கருத்து இங்கு முக்கியமானது.
பெரியவர் வ.உ.சி. சிறைக்கோட்டத்தில் இருந்த வேளையில் பரலி சு.நெல்லையப்பர் வேண்டிக்கொண்டதற்கிணங்க தனது நுண்மான்நுழைபுலம் வாய்ந்த ஆற்றலுடன் கவிதை வடிவில் வெளிவந்தாலும் தெள்ளிய உரைநடையுடன் யாரும் பதிப்பிக்கவில்லையே என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது.
அக்குறையை எழுத்தாளர், வஉசி பற்றாளர் ந.மு. தமிழ் மணி உரைநடை வடிவில் தெள்ளிய நீரோடை சொற்றொடர்களுடன் அருமையான துணுக்குகள் நிறைந்த பெட்டிச் செய்திகளுடன் வாசிப்புத் தன்மையை மிகவும் இலகுவாக்கி உருவாக்கியுள்ளார்.
அய்யா ந.மு.தமிழ்மணி அவர்களது தமிழ் உரைநடையில் பெரும் பாய்ச்சலுடன் தமிழ் உலகில் வாசகர்கள் கவனத்தை பெரியவர் வ.உ.சி.யின் தன்வரலாறு சென்றடையும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை.
பெரியவர் 150 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் இந்த நூலினை வெளியிட்டதில் பாரதி புத்தகாலயம் பெருமை கொள்கிறது. இப்பணியை கடுமையான உழைப்பில் சிறப்பாக செய்து முடித்த எழுத்தாளர் தோழர் த.மு.தமிழ்மணி அவர்களுக்கு மிக்க நன்றி.
நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்
நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த மகாத்மா மண்ணில் மதவெறி நூல் வெளியீட்டு விழா ஜூலை 1 2022 அன்று திநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர். தீ.சந்துரு தலைமை தாங்கினார் விழாவுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.
நூலை சி.பி.ஐ-எம்மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார் கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் போரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது ‘மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்எட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் “எற்கனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.
‘மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் சிந்திக்கக் அடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம் இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது கட்டுரை போராடித் தென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள் சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்:
ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல் சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டிருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு. அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் குழ்நினையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.
இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர். 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாய் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த வலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமோ கொல்லலை, தங்ளைத் தாங்களே அழிச்சுக்கிட்டாங்க யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு.
இத்தகைய மண்ணில்தான். தம் வாழ்கிறோம் இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்” என்று மனம் கசந்தவர், “ஹிட்னர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள் இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன்’ தயாராக இருக்கிறது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதை நூலாக வாசித்தபோது எமக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான் இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார் காந்திடமிருந்து நமக்குக்கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான் இப்போதிருக்கும் சூழலில் ஜி ஆரின் நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியச் குழலுக்கே மிகவும் தேவையான நூலி என்று அடையாலம் காட்டினார்.
அவரைத் தொடர்ந்து போசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் வாரலாற்று ஆசிரியர்களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் (சொல்கிறார் மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும் என பேசியமார்ந்தார்.
நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன் இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிக்கையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்ற தலைப்பை முடிவு செய்தோம் பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், மதவாதத்தை வெடித்துச் சிதரவைக்கும் கந்தகம்’ என பொருத்தமாக தலைப்பிட்டிருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான் அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிநீத்த மகாத்மா உள்ளிட்ட தியாதிகளுக்கும் நூலை சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.
தொகுப்பு: சுப்பிரமணியன்
நன்றி: நக்கீரன்
நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதி நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘மகாத்மா மண்ணில் மதவெறி‘ நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஜூலை 1) தி.நகரில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். உடன் ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுரேஷ், ஜானகி ஆகியோர் உடன் உள்ளனர்.
நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
விலை : ரூ. ₹125.
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
நன்றி : தீக்கதிர்