கி.ரமேஷ் எழுதிய “முடி திருத்துநர் தொழிற்சங்கம் - இந்திய சிறுகதைகள்” புத்தகம் | K.Ramesh's Mudi Thiruthunar Tholirsangam - Indiya Sirukathaikal Tamil Book Review | MJ.பிரபாகர் | www.bookday.in

கி.ரமேஷ் எழுதிய “முடி திருத்துநர் தொழிற்சங்கம் – இந்திய சிறுகதைகள்” – நூல் அறிமுகம்

“முடி திருத்துநர் தொழிற்சங்கம் - இந்திய சிறுகதைகள்” – நூல் அறிமுகம் “இந்திய சமூகத்தின் யதார்த்த முகத்தைப் தோலுரித்து காட்டும் நூல்” ‘முடி திருத்துநர் தொழிற்சங்கம்’ என்பது இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களின் கதைகளைத் தழுவி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த ஒரு…
ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் புத்தகம் | John Steinbeck's The Grapes of Wrath Novel Review in Tamil | www.bookday.in

ஜான் ஸ்டீன்பெக் (தமிழில்: கி.ரமேஷ்) எழுதிய “கோபத்தின் கனிகள் (The Grapes of Wrath)” நாவல் – நூல் அறிமுகம்

ஒரு நூலை வாசிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல, ஏனென்றால் எந்தவிதமான காலச் சூழலுக்குள்ளும் வாசிக்க நினைக்கும் மனதை சிதறவிடாமல் அந்த நூலுக்குள்ளேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த நூலின் ஆசிரியர் அதில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன சொல்ல முயல்கிறார் போன்றவற்றை…
Dr.அஜய் கன்சால் (Dr.Ajay Kansal) - தமிழில் கி.ரமேஷ் (K.Ramesh) எழுதிய கடவுள் உருவான கதை (Kadavul Uruvana Kathai) - புத்தகம் ஓர் அறிமுகம்

Dr.அஜய் கன்சால் (தமிழில் கி.ரமேஷ்) எழுதிய “கடவுள் உருவான கதை (Kadavul Uruvana Kathai)” – நூல் அறிமுகம்

"கடவுள் உருவான கதை (Kadavul Uruvana Kathai)" - நூல் அறிமுகம் ஒரு செல் உயிரினங்களில் இருந்து பல்வேறு கட்ட பரிணாம வளர்ச்சியில் இருந்து தாவரங்கள் விலங்குகள் மனிதர்கள் என்று உருவான இந்த உலகத்தில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும்…
வசுந்தரா ராமன் (Vasunthara Raman) எழுதிய பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் (Paarppana Kadainilaiyilirunthu Oru Kural) - நூல் அறிமுகம் - https://bookday.in/

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் – நூல் அறிமுகம்

பார்ப்பனக் கடைநிலையிலிருந்து ஒரு குரல் - நூல் அறிமுகம் கரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்ட Her Stories பதிப்பகம் பெண்களை எழுத வைத்துப் புத்தகங்களை வெளியிடுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. அந்த முறையில் சமீபத்தில் பார்ப்பனக் குடும்பத்தின் உள்ளிருந்தே ஒரு பெண்ணின்…
 திரிசாரணீயம்- thirisaraniyam

திரிசாரணீயம்- நூலறிமுகம்

  சமூகத்துக்கு உதவும் இயக்கம் சாரணர் இயக்கம்-ஸ்கவுட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பள்ளிகளில் என்.சி.சி., பசுமைப் படை போல் சாரணர் இயக்கமும் புகழ்பெற்ற ஒன்று. அந்தக் காலத்தில் நிறைய பள்ளிகளில் சாரணர் இயக்கத்தில் மாணவர்கள் இருந்தனர். மற்றவர்களுக்கு உதவுதல், நேரம் தவறாமல் இருப்பது,…
கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH) | John Steinbeck Kopathin Kanigal

ஜான் ஸ்டீன்பெக்-ன் “கோபத்தின் கனிகள் (GRAPES OF WRATH)” – நூல் அறிமுகம்

  *ஓர் முக்கிய அறிவிப்பு இந்நூலின் விலையோ, அதன் பக்கங்களோ, நூலின் எழுத்தோ வாசிப்பிற்கு குறுக்கே எங்கும் தடையாக நிற்காது; மாறாக எழுத்து உங்களை வசீகரிக்கும்; மனதை கொள்ளை கொள்ளும் என்பதற்கு முழு உத்தரவாதம் அளிக்கிறேன் தோழர்களே. இந்நூலை வாசித்த பின்பு…
"கேள்வி கேட்டுப் பழகு" - கி.ரமேஷ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூல் அறிமுகம் – “கேள்வி கேட்டுப் பழகு” – கி.ரமேஷ்

      "ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை" என்ற எம்.ஜி.ஆர். பாடலைக் கேட்டு வளர்ந்தது முந்தைய தலைமுறைகள். அதில், ‘பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்பதனாலே’. என்று ஒரு வரி வரும். கேள்வி கேட்பது என்பது மனித…
senkodi pathaiyil vaarlikkal book release "செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்" நூல் வெளியீடு

“செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீடு

senkodi pathaiyil vaarlikkal book release "செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்" நூல் வெளியீடு
பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாட்டில், அர்ச்சனா பிரசாத் எழுதி கி.ரமேஷ் மொழியெர்ப்பில் வார்லி ஆதிவாசி மக்களுடைய போராட்டம் குறித்து உருவான “செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்” நூல் வெளியீட்டில் நூலினை #CPIM பொதுச் செயலாளர் தோழர் #SitaramYechury வெளியிட மலைவாழ் மக்கள் சங்க தலைவர் சரவணன் பெற்றுக் கொண்டார்.
‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்

‘தோழர்கள்’ – ஜி.ராமகிருஷ்ணன்




தொழிற்சங்க தலைவரும், எழுத்தாளருமான ரமேஷ் அவர்களின் ‘தோழர்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதுவதே பெருமகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கிறது. இந்த நூலை எழுதுவதற்காக அவர் குறிப்பிட்டுள்ள காரணம், மகிழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. கம்யூனிசம் பற்றிய உண்மையான கருத்துக்கள் சென்று சேர்வதற்கு முன்பே, பொய்யான பிரச்சாரங்கள் சென்று மக்களை குழப்பிவிடும். இந்த அனுபவம் மாமேதை காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. இப்போதும் அது தொடர்கிறது. அதனை தன்னுடைய பாணியில் சுட்டிக்காட்டியுள்ள ரமேஷ், தலைவர்களின் வாழ்க்கையை அற்புதமாக விவரிப்பதன் மூலம் அந்த தவறான பிரச்சாரத்தை எதிர்கொள்ள முயற்சிப்பதாக கூறுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் களப்பணிகள் ஒவ்வொன்றுமே, பொய்யான பிரச்சாரங்களுக்கு எழுதப்படும் மறுப்புரைகள்தான். நான் எழுதி இதுவரை 3 தொகுதிகளாக வெளியாகியிருக்கும் ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ என்ற தொடர், அதே பணியை வேறு விதத்தில் செய்கிறது. அன்புத்தோழர் ரமேஷின் தந்தையும் அந்த தொகுப்பில் ஒரு பகுதியாக இடம்பெற்றுள்ளார். வாழையடி வாழையாக மக்களுக்கு உழைப்போம் என்பதை நிரூபிக்கும் விதத்தில் மகனும் செயல்படுகிறார்.

இந்தியாவின் முதல் மோதின கொடி ஏற்றப்பட்டு, பட்டொளி வீசிப் பறந்த சென்னை மண்ணில், தோழர் சிங்காரவேலர் வாழ்க்கையை விவரிப்பதில் இருந்து தொடங்குகிறது இந்த நூல். தோழர் சிங்காரவேலர், கம்யூனிச கருத்தியலை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில், மகத்தான பங்களிப்பை செய்துள்ளார். அதன் பிறகு தோழர் அமீர் ஹைதர் கான் பற்றி விவரிக்கிறது. அவர் தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேர் பிடிப்பதில் முக்கிய பங்காற்றினார். அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும், பொட்டல் காட்டை திருத்திப் பயிர் செய்யும் உழவுப் பணிக்கு ஒப்பானவை. அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் புடம்போடப்பட்ட களப்போராளிகளான சுர்ஜித்தும், இன்றும் நம்மோடு வாழும் நூற்றாண்டு கண்ட நாயகர் என்.சங்கரய்யாவும் வருகிறார்கள். இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வாழ்க்கையும், பல்வேறு ஒத்த அம்சங்களையும், தனிச்சிறப்பான வரலாற்று பங்களிப்புகளையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன. எல்லோருமே ‘தோழர்கள்’ என்ற சொல்லுக்கு தமது வாழ்க்கையே பொருள் என்ற அளவில் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவின் கடைக்கோடி மனிதர்களுக்கும் விடுதலையை உறுதி செய்திட வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியம். எத்தனையோ நிகரில்லாத தலைவர்களை உருவாக்கியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம், எந்த ஒரு தனிநபர் பிம்பத்தையும் கட்டமைப்பதில்லை. வாழும் காலத்திலேயே தமது தனிப்பட வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்ற நிலைப்பாட்டை தலைவர்கள் மேற்கொண்டார்கள். தொழிலாளி – விவசாயி ஒற்றுமை, புரட்சிகர இலக்கை நோக்கிய வர்க்கப் போராட்டம், அதற்காக இன்னுயிர் ஈந்த பல்லாயிரக்கணக்கான தோழர்களின் வடிவமான செங்கொடி, இதைத்தான் நமது முன்னுதாரண தலைவர்கள் தம் வாழ்நாளெல்லாம் முன்னிருத்தி வாழ்ந்திருக்கிறார்கள். மறைவுக்கு பிறகுதான் ஒருவரின் வரலாற்று பங்களிப்பை மதிப்பிட வேண்டும் என்பதில் சமரசமில்லாத உறுதிகாட்டி வாழ்ந்துள்ளார்கள். அதற்கு நியாயம் சேர்ப்பதாக இந்த நூல் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. இதுவரை பல்வேரு மொழியாக்க நூல்களுக்காக விருதுகள் பெற்றும், வாசகர்களின் பாராட்டைப் பெற்றும் வலம் வந்த கி.ரமேஷ், இந்த அற்புதமான கட்டுரைகளின் மூலம் தனது இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்து வன்மையையும் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இந்த நூல் இன்றைய இளைய தலைமுறையை சென்றடைய வேண்டும். தமிழ் வாசகர்களின் பரவலான அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தோழர்கள் இன் நூல் முன்னுரையில் இருந்து

– ஜி.ராமகிருஷ்ணன்

நூல் : தோழர்கள் 
ஆசிரியர் : கி.ரமேஷ்
விலை : ரூ.₹170/-
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com