ஆனந்தவல்லி - நூல் அறிமுகம் - லஷ்மி பாலகிருஷ்ணன் - Aanantha Valli Book Review - Lakshmi Balakrishnan - BharathiPuthakalayam - https://bookday.in/

ஆனந்தவல்லி – நூல் அறிமுகம்

ஆனந்தவல்லி - நூல் அறிமுகம் எழுத்தாளர் லஷ்மி பாலகிருஷ்ணன் எழுதிய வரலாற்று நாவல் ‘ஆனந்தவல்லி’ வாசித்து முடித்து, ஒரு வாரம் ஆனபிறகும், மனம் அதன் பாதிப்பிலிருந்து வெளிவராமல், அதிலேயே சுழன்று கொண்டிருக்கின்றது. அடுத்த வேளை சோற்றுக்கு உத்தரவாதமில்லாத பரமஏழை வீட்டில் பிறக்கும்…
தன்வியின் பிறந்தநாள் - நூல் அறிமுகம் | தன்வியின் | பிறந்தநாள் | சிறார் | யூமா | Kalaiyarasi | https://bookday.in/

தன்வியின் பிறந்தநாள் – நூல் அறிமுகம்

  எழுத்தாளர் யூமா வாசுகி எழுதிய, ‘தன்வியின் பிறந்தநாள்’ என்ற சிறார் கதைத் தொகுப்புக்கு, 2024ஆம் ஆண்டுக்கான, ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’ கிடைத்துள்ளது. இதைப் பாரதி புத்தகாலயத்தின் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது. இவர் ஓ.வி.விஜயன் எழுதிய ‘கசாக்கிண்ட இதிகாசம்’…
ஞா.கலையரசியின் “நீலமலைப் பயண‌ம்” — நூல் அறிமுகம்

ஞா.கலையரசியின் “நீலமலைப் பயண‌ம்” — நூல் அறிமுகம்

டான்சிங் ரோஸ் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன டான்சிங் பிளான்ட் என்ற புது வகையான தாவர வகை மற்றும் பசுமையான காட்டுப் பயணம் குறித்தும் நூறு ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாத செரோபீஜியா ஒமிசா என்ற காட்டுத்தாவரம் பற்றிய கண்டுபிடிக்கும் பொறுப்பை அரசாங்கம்…
kavithai ; michcham - r.kalayarasi கவிதை: மிச்சம் - இரா. கலையரசி

கவிதை: மிச்சம் – இரா. கலையரசி

சட்டியை இறுக்கி பிடித்தபடி காதலை சொல்லிக் கொண்டிருந்தது மதியம் வச்ச சோறு. பருக்கைகள் பலவாறாய் சிதறி கிடக்கிறது. வெள்ளை கொக்கு வேண்டி நின்றதாய், யாரையோ? வேண்டி காத்திருக்கிறது சோறு. கரண்டிக்கு இசைந்து, ஒரு பாகத்தை வெட்டி எடுத்தேன். தேய்ந்து போன நிலவாய்…
இரா. கலையரசி : கவிதை era.kalaiyarasi : kavithai

 இரா. கலையரசி: கவிதை


”பெருங்காதல்”
வெள்ளை மாவை
தண்ணீர் தெளித்து
எழுப்பி விட்டேன்.
கசகசப்புடன் பிசுபிசுப்பாய்
கைகளுக்குள் சிக்கிக்
கொண்டு விளையாடுகிறது.
அழுத்தி, அமுக்கி
பிசைந்தெடுத்தேன்.
களைப்பில் சுருண்டு
வட்டமாய்ப் படுத்து கொண்டது.
குட்டி வட்டங்களை
பிரித்து, உள்ளங்கையில்
உருட்டி உயிர் கொடுக்கிறேன்.
வட்டமாய் வளைக்கிறேன்
வானவில்லாய்
கொதிக்கும் எண்ணெயில்
இரக்கமின்றி இடுகிறேன்.
முட்டை விட்டுக் கொண்டு
அழகாய்ச் சிரிக்கிறாய்.
தொப்பை மறைக்க
விரும்பாத உன் தைரியம்
பெருங்காதலை
பெருக்கெடுக்கச் செய்து,
என்னைக் கொல்கிறது.
தட்டில் சூடாய் கிடக்கிறாய்
உன் தொப்பையைக் கிழிக்க
மனமில்லாமல்
பெருங்காதலுடன் நான்.
வீட்டுப் பாடம் சிறுகதை – இரா கலையரசி

வீட்டுப் பாடம் சிறுகதை – இரா கலையரசி




“தகிட தகிட தந்தானா.. தரணும் நீயும் எட்டணா! “பாடிகிட்டே பறந்து வருது குட்டிக் குருவி குந்தவை.

“எல்லாம் நல்லா தான் இருக்கு. படிப்புதான் வரல”. அம்மா வேதவல்லி சலிச்சுகிட்டாங்க.

கூட்டில் உட்கார்ந்தபடி எங்கிருந்தோ? எடுத்து வந்த” லேசை ” கொரித்துக் கொண்டிருந்தது குந்தவை.

சமையல் கூடத்தில் இருந்து பறந்து வந்த சுள்ளிகள் இரண்டு குந்தவை அலகைப் பதம் பார்க்கத் தவறவில்லை.

”இல்லம்மா வாங்க மாட்டேன்மா வாங்க மாட்டேன்மா” கத்தியபடி வெளியே பறந்தது.

மைதானத்தில் வந்து நின்றாள் குந்தவை. ”அப்பப்பா என்னா அடி? என்னா அடி?” அலகை தொட்டு பார்த்துக் கொண்டது.

சற்று தூரத்தில் இருந்த குளத்தில் இருந்து தலை மட்டும் மேலே எழும்பியது. வாயைக் கொஞ்சம் பிளந்தவாறு ஆமை அசைந்து வந்தது.

“ம்க்கும் எப்பவும் அன்னநடை தான் போ”, சிரித்தது குந்தவை.

ஆமை மூக்கை வருடியபடி வருகிறது: ”குளத்துல இருக்க முடியல. துர்நாற்றமா இருக்கு. வீட்ட மாத்தலாமுன்னு இருக்கோம்”.

“ஆமாமாம். இவரு அம்பானி! பளிங்கு வீட்டுக்கு போக போறாரு. போவியா…!??”

பேசிக் கொண்டிருக்கும் போதே மரத்தில் இருந்து எட்டி பார்த்தது அணில்.

”ஏன் பா? வீட்டுப்பாடம் எழுதாமல் பேசிட்டு இருக்கீங்க? நான்லாம் எழுதிட்டேன்பா”னு சொன்ன அணிலை “விஷம் விஷம் “ னு சொன்னபடி மரத்தில் இருந்து திட்டியது மரங்கொத்தி.

“மயில் டீச்சர் கிட்ட சொல்லி அடி வாங்க விடுவோம்” அணில் அனத்தியது.

“அடிக்கல்லாம் கூடாது. தெரியாதா?. சின்னபுள்ள இல்ல. அதான் தெரியல”. முன்னுக்கு வந்தது முயல்.

“இந்த டீச்சருங்க எல்லாம் நம்ம கிட்ட படிச்சா எப்புடி இருக்கும்?” துள்ளி முன்னே வந்தது மான்.

“அட போங்கப்பா! அவங்க ரொம்ப பாவம்” என்றது அணில்.

“நோ.நோ.நோ.பாவம் லா இல்ல. வீட்டுப் பாடம் தரக்கூடாது. எழுத சொல்லக் கூடாது. வாய்பாடு சொல்ல வைக்கக் கூடாது. ஆமாம். பார்த்துக்குங்க” என்றது குயில்.

“நீ பாடியே கவுத்திருவ” போ..!”

“படிச்சாலும் படிக்கலைனாலும் மீசையை முறுக்கணும்” என்றபடி வந்தது பூனை.

“அது சரி! வீட்டுப் பாடம் குறைக்கணும்னு சொல்லி நம்ம எல்லாம் போராட்டம் பண்ணணும்.”

“ஏய்.ஏய் ரொம்ப தான். படிச்சு எழுதிப் பார்த்தால்தான் அறிவு வளரும்”.

“வந்துட்டாருடா, கைபுள்ள கரடி”. முணுமுணுத்தது மரங்கொத்தி.

“உன்னால தான் நாங்கள் எல்லாரும் திட்டு வாங்றோம். நீ முதல்ல எழுதாத.” சீறியது அங்கு வந்த பாம்பு.

எதிர்ப்பு சற்று கூடுதலாகவே இருக்கிறது. மேகம் மழையை அழைத்து வர காத்திருந்தது.

“யாரது யாரது? குழந்தைகளே! ”

சத்தம் வந்த திசை நோக்கி காதுகளை கொண்டு சென்றனர். மயில் டீச்சர் ஒய்யாரமாய் நடந்து வந்தது.

“ஆத்தி டீச்சருடா!” பயந்த மாதிரி ஓடினர் அனைவரும்!

– இரா கலையரசி

நகராத மணித்துளிகள் கவிதை – இரா. கலையரசி

நகராத மணித்துளிகள் கவிதை – இரா. கலையரசி




விட்டுப் பிரியும்
மரங்களை ரசித்தவாறு
தொடர் வண்டியின்
“கூச் கூச்”சத்தத்தில்
நகராத மணித்துளிகள்.

ஓடிப் பிடித்தும்
பறந்து விட்ட
பேருந்தின் முதுகுப்புறத்தில்
“நினைத்தது நடக்கும்”
வாசகத்தில் தோய்ந்தன
நகராத மணித்துளிகள்.

மணி கணக்கில்
ஒற்றைப் பெஞ்சில்
நடை பயில்வோரைப்
பார்த்தபடி அமர
அசைவற்ற கால்களில்
தேங்கி இருந்தன
நகராத மணித்துளிகள்.

எங்கோ இருந்து
விழுந்த “ஒற்றைக்கல்”
குளத்தின் மௌனத்தைக்
கலைத்து விட
வளைகோடுகளில் அதிரும்
வட்டங்களின் பார்வையில்
நகராத மணித்துளிகள்.

எப்பொழுதோ வந்து போகும்
ரெட்டைவால் குருவி
சாளரத்தில் நலம்
விசாரித்து உண்ணும்
கம்பந் தட்டையில்
நகராத மணித்துளிகள்.

கடந்து சென்ற
பேருந்தில் தெரிந்த
பழகிய முகத்தில்
தோன்றி மறைந்த
நினைவுகளின் கோடுகன்
நகராத மணித்துளிகள்.

தீவாளி பொங்கலுக்கு
அம்மா சுடும்
கல் இட்டலியைப்
பிய்த்து எடுக்கும்
முயற்சியில்
நகராத மணித்துளிகள்.

வசை பாடி
விட்டு சென்ற
அப்பாவின் கோபத்தில்
முட்டியுடன் பேசும்
முகவாயில் தங்கியபடி
நகராத மணித்துளிகள்.

நேற்று பேசிய தோழி
மணமேடை செல்லாது
தகன மேடையில்
மாலையும் கழுத்துமாய்
நகராத மணித்துளிகள்.

இரா.கலையரசி. 

திமிரு கவிதை – இரா.கலையரசி. 

திமிரு கவிதை – இரா.கலையரசி. 




அறுத்துக் கொண்டு ஓடும்
காளையின் சீற்றம்
பெண்ணுக்கு இருப்பின்
திமிரு.

“பட்பட்” பட்டாசாய்
கேள்விகளுக்கு பதில்!
பெண்ணுக்கு
“பேச்சுல திமிரு”.

சீண்டியவன் சட்டையை
இழுத்து பிடித்து
அறைந்தால்
பெண்ணுக்கு
“நடத்தையில திமிரு”.

இன்னைக்கு சமையல்
வேண்டாமென்றால்
“வெளங்கிடும்”
என்ற சொல்லின்
புது மொழி
பெண்ணுக்கு
“படிச்ச திமிரு”.

விரும்பிய பொத்தானை
ரிமோட்டில் அழுத்தினால்
பெண்ணுக்கு
“சம்பாதிக்கிற திமிரு”.

குழந்தையை
பள்ளிக்கூடத்துல
விட்டுட்டு  வரீங்களா?
பெண்ணுக்கு
“தான்” ங்கற திமிரு.

திரைப்படம் போவோமா?
என்ற கேள்விக்கு
எப்பவும்
ஊர் சுத்த வேண்டியது.
பெண்ணுக்கு
“எல்லாம் தெரியுங்”கற திமிரு..

நாடே ஆண்டாலும்
வீட்டுல
சமையல்காரி தான்
“திமிரு காட்டாதே”.

திமிரும் அறிவை
அடக்கி கொண்டு
திமிறி வர
வழி இன்றி
ஒரே அடைமொழிசொல்
” பெண்ணுக்கு “திமிரு”.

இரா.கலையரசி. 

எதுவும் நல்லது  குழந்தைகள் கதை – இரா.கலையரசி

எதுவும் நல்லது குழந்தைகள் கதை – இரா.கலையரசி




மூங்கிலை வளைத்து தன் விருப்பபடி தொங்கியது குட்டி மைனா.

‘ஏய் ஜாலி! ஜாலி!’

அதன் இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுத்தது மூங்கில்.

அடுத்து ஆலமரத்திற்கு தாவியது.கிளையில் தொங்க முயன்று தோற்றது.

“.ம.ம்.மம்”னு அழுதபடி அம்மாவிடம் வந்தது.  ஆலமரத்தைக் குறை சொன்னது.

அம்மா மைனா கேட்டது.”நம்ம கூடு எங்க இருக்கு?”

“ஆலமரத்துல!”

பட்டென பதில் வந்தது.

“போன மழையில நம்ம கூடு விழுந்துச்சா?

“இல்ல”.

“சரியாச் சொன்ன.  இந்த நிழலில உக்காந்து இருக்கோமே, ஆலமரத்தால தான? ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு  விதமா பலன் தரும்”னு
சொன்னது அம்மா மைனா.