நூல் அறிமுகம்: ஆயிஷா இரா. நடராசனின் ‘ஈரடிப்போர்’
நூல் : ஈரடிப்போர்
ஆசிரியர் : ஆயிஷா இரா. நடராசன்
விலை : ரூ.₹10/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
(ஆர்.எஸ். எஸ்.) ஆளுநர் ரவி திருக்குறளை இந்துத்துவ நூலாகவும் திருவள்ளுவரைக் காவிச் சாமியாராகவும் காட்ட முனைகிறார். எட்டினால் குடுமியைப் பிடிப்பதும் எட்டாவிட்டால் காலைப் பிடிப்பதும் ஆரியருக்குக் கைவந்த கலை.
திருக்குறளை அழிக்கவும் திரிக்கவும் ஆரியர் செய்த சூழ்ச்சிகளை விளக்கியுள்ளதோடு அதைப் போராடி முறியடித்த வரலாற்றைப் பதினாறு பக்கங்களில் ஆயிஷா இரா. நடராசன் நச்சென எழுதியுள்ள கட்டுரையே “ஈரடிப் போர்-திருக்குறளுக்கு நடந்த 100வருட யுத்தம்”.
தெளிவாக எழுதப்பட்ட இக் கட்டுரை திருக்குறளின் சிறப்புகளையும் பெருமைபடச் சொல்லுகிறது .
இது அளவில் சிறியது தான்.
ஆனால் சிறு பொறியை உண்டாக்கும்
தீக்குச்சி.
தமிழர்களையும் தமிழர் பண்பாட்டையும் கலை இலக்கியங்களையும் ஒழிக்கத் துடிப்போரை எரிக்கும் காட்டுத் தீயை மூட்ட வந்த சிறு பொறி
அந்தமான் தமிழ்ச் சங்க செயலாளர் காளிதாஸ் முகநூல் பகிர்விலிருந்து…