This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் – கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு




This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

நடிகர் நசீருதீன் ஷாவுடன் கரண் தாப்பர் நடத்திய நேர்காணல் தி வயர் யூடியூப் சேனலில் 2021 டிசம்பர் 28 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. வகுப்புவாத துருவமுனைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாட்டில் இப்போது ஒரு முஸ்லீமாக இருப்பதன் பொருள் பற்றி நடிகர் நசீருதீன் ஷா அந்த முப்பத்தைந்து நிமிட உரையாடலில் விரிவாகப் பேசினார். இந்திய முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்புகள் எந்தவொரு விளைவுகளுமில்லாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலில் முஸ்லீம்கள் உணர்ந்துள்ள காயங்களுக்கு சாளரத்தைத் திறந்து வைப்பதாக அந்த உரையாடல் இருந்தது. அவர்களுடைய உரையாடலின் முழுமையான எழுத்தாக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழு நேர்காணலை இங்கே காணலாம்.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

கரண் தாப்பர்: ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த தர்ம சன்சத் கூட்டத்தில் முஸ்லீம்களை இனப்படுகொலை செய்வது, இனச் சுத்திகரிப்பு செய்வது என்று ரத்தவெறி கொண்ட குரல் எழுப்பப்பட்டது. ரோஹிங்கியாக்களுக்கு மியான்மரில் என்ன நடந்ததோ அதை இங்கே முஸ்லீலிம்களுக்கு நாம் செய்ய வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் ஹிந்துக்களுக்கு கூறப்பட்டது. இந்திய குடிமக்கள் தங்களுடைய சக குடிமக்கள் மீதே இதுபோன்று திரும்புவார்கள் என்று என் வாழ்நாளில் ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதுதான் இப்போது நடந்தேறியிருக்கிறது. எனவே நான் இன்றைக்கு உங்களிடம் ‘நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை எவ்வாறு உணர்கிறீர்கள்?’ என்று ஓர் எளிய, வெளிப்படையான கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்…

இன்றைக்கு எனது விருந்தினர் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். அவரது வாழ்க்கையில் ஒரேயொரு அடையாளம் மட்டுமே அவரிடம் இருந்து வந்திருக்கிறது. மதம் என்பது முக்கியமில்லை என்று தன்னை இந்தியர் என்று அவர் நினைத்தது சரிதான். இருப்பினும் இன்றைக்கு அவரது சொந்த நாட்டு மக்களில் பலரும் அவர் மீது மத அடையாளத்தைத் திணிக்கிறார்கள். இப்போது அனைவராலும் நன்கு அறியப்பட்ட, மிகவும் மதிக்கப்படுகின்ற நடிகர் நசிருதீன் ஷா என்னுடன் இணைகிறார்.

நசீருதீன் ஷா! ஹரித்துவாரில் பத்து நாட்களுக்கு முன்பு நடந்த அந்த தர்ம சன்சத் கூட்டத்தில், இன அழிப்புக்காக முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று ரத்தவெறி கொண்ட அழைப்பு விடுக்கப்பட்டது, மேலும் மியான்மரில் ரோஹிங்கியாக்களுக்கு செய்யப்பட்டதை இங்கே ஹிந்துக்களுக்குச் செய்ய வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். உங்கள் சொந்த நாட்டு மக்கள், சக குடிமக்கள், உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்யுமாறு அழைப்பு விடுத்தது குறித்து உங்களிடம் என்ன மாதிரியான உணர்வு இருந்தது?

நசிருதீன் ஷா: என்னிடம் ஏற்பட்ட முதல் எதிர்வினை கோபம். இங்கே நடந்து கொண்டிருப்பது முஸ்லீம்களிடம் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிற கூட்டு முயற்சியாகும். அவுரங்கசீப் மற்றும் முகலாய ஆக்கிரமிப்பாளர்களை துணைக்கழைத்து தலைமையில் இருப்பவர்களிலிருந்து தொடங்கி பலரும் பேசுவதன் மூலம் பிரிவினைவாதமானது ஆளும் கட்சியின் கொள்கையாக மாறி விட்டதாகவே தோன்றுகிறது.

அவர்களுக்கு (வலதுசாரி ஆர்வலர்கள்) என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு நான் ஆர்வமாக இருந்தேன். ஆனால் அவர்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில் இங்கே விவசாயிகளை மோதிக் கொன்ற அமைச்சருக்கு எதுவும் நடக்கவில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை, அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அமைச்சர் பதவியை விட்டு விலகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவில்லை. அந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் அதிக விவரங்களுக்குள் செல்லவில்லை. ஆனாலும் இப்போது இங்கே எங்களை (சிறுபான்மை சமூகத்தினர்) பயமுறுத்துவதற்கான முயற்சி நிச்சயமாக இருக்கிறது. ஆனாலும் ‘நாம் பயந்து விடக் கூடாது’ என்பதை ஒரு பலகையில் எழுதி நான் எப்போதும் கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

வேடிக்கையாகச் சொல்வதென்றால் பயப்படுவது என்பது – ‘நீங்கள் இந்தியாவில் இருக்கப் பயப்படுகிறீர்கள்’ என்று எப்போதும் என் மீது சுமத்தப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டு. அது ஏன் சொல்லப்பட்டதென்றால், சில மாதங்களுக்கு முன்பு எனது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுவதைப் பற்றி பேசியிருந்தேன். ‘என் வாழ்க்கை முடிந்துவிட்டது. என் வாழ்க்கையில் இன்னும் எனக்கு பத்து ஆண்டுகளே எஞ்சியிருக்கின்றன. அதனால் நான் அதைக் காண்பதற்கு உயிருடன் இருக்க மாட்டேன். ஆனால் என்னுடைய குழந்தைகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து எனக்கு கவலையாக இருக்கிறது. காவல்துறை ஆய்வாளரின் மரணத்தைக் காட்டிலும் ‘பசுவின் மரணம்’ இப்போது முக்கியத்துவம் பெறுவது மிகவும் சோகமானது’ என்று நான் அப்போது கூறியிருந்தேன்.

சில காரணங்களால் அந்த அறிக்கை என்னை கேலி, வெறுப்பு மற்றும் தவறான அச்சுறுத்தல்களின் தொடர் இலக்காக ஆக்கியது. அதனால் நான் முற்றிலும் குழம்பிப் போனேன். ஏனென்றால் நான் ஆத்திரமூட்டுகின்ற வகையில் எதையும் பேசியிருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்திருந்த ஒரு திரைப்படம், எ வெட்னஸ்டே அந்த நேரத்தில் இழுத்துக் கொண்டு வரப்பட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் நடித்த ‘சர்ஃபரோஷ்’ படமும் அப்போது இழுக்கப்பட்டது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

சர்ஃபரோஷ் திரைப்படத்தில் உளவுத்துறை ஏஜெண்டாக வரும் நான் பாகிஸ்தான் கஜல் பாடகராக நடித்திருந்தேன். எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கொல்லவில்லையெனில் அவர்கள் தப்பித்து விடுவார்கள் என்று அஞ்சி நான்கு பயங்கரவாதிகளை தனியொரு ஆளாகக் கொல்ல முடிவு செய்கின்ற பாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். என்னைப் பற்றி பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோவில் லாகூருக்கு ஒருமுறை சென்றிருந்த போது நான் பேசியதுடன் அந்த இரண்டு படங்களும் அருகருகே இணைத்துக் காட்டப்பட்டன. லாகூருக்கு சென்றிருந்த சமயத்தில் என்னிடம் லாகூருக்கு வந்திருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. ‘வீட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன்’ என்று சொன்னேன். அது அவர்களைக் கோபமடையச் செய்திருக்கும் என்று தோன்றுகிறது. ‘வீட்டில் இருப்பது போல உணர்ந்தால் நீங்கள் அங்கேயே சென்று விடுங்கள்’ என்று கூற ஆரம்பித்தார்கள்.

அவ்வாறு ஏன் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குப் புரியவே இல்லை. ஒருவரின் வீட்டிற்கு செல்லும் நீங்கள், அங்கே உங்களுக்கு மிகவும் வசதியாக இருந்தால், அவர்கள் உங்களை நன்றாக நடத்தினால் ‘என் வீட்டைப் போலவே இருக்கிறது’ என்று சொல்ல மாட்டீர்களா? அவர்களுக்கு அந்தப் பேச்சு எ வெட்னெஸ்டே திரைப்படத்தில் கரப்பான் பூச்சிகள் போன்றவற்றிடமிருந்து வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி நான் பேசிய பேச்சுக்கு முரண்பட்டதாக இருந்திருக்கிறது. ‘இவர் மிகப் பெரிய துரோகி. ஒருபுறம் அவரது திரைப்பட பிம்பம் இவ்வாறு சொல்கிறது – ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் சொல்வது இதுதான்’ என்று அவர்களால் காட்டப்பட்டது.

நான் இங்கே நன்கு வரவேற்கப்பட்டிருக்கிறேன், மிகவும் வசதியாக உணர்கிறேன் என்றுதான் நான் நிஜ வாழ்க்கையில் சொல்லியிருந்தேன். நமது பிரதமரும், பாகிஸ்தான் பிரதமரும் பள்ளி மாணவிகள் போல கைகளைப் பிடித்துக் கொண்டு லாகூர் விமான நிலையத்தின் தரைப்பாலத்தில் அதே சமயத்தில் நடந்து கொண்டிருந்தனர்.

கரண் தாப்பர்: முற்றிலும் உண்மை. நான் இப்போது தெரிந்தே தர்ம சன்சத் கூட்டத்தில் இருந்த இரண்டு நபர்கள் பேசியவற்றை மேற்கோள் காட்டப் போகிறேன், ஏனென்றால் அங்கு பேசப்பட்ட சில விஷயங்கள் எந்த அளவிற்கு அதிர்ச்சியூட்டுபவையாக, ரத்தவெறி கொண்டவையாக, பயங்கரமானவையாக இருந்தன என்பதை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

‘மியான்மரைப் போல இங்குள்ள காவல்துறையினர், அரசியல்வாதிகள், ராணுவம் மற்றும் ஒவ்வொரு ஹிந்துவும் ஆயுதம் ஏந்தி இந்த சுத்திகரிப்பு இயக்கத்தை நடத்த வேண்டும். அதைத் தவிர வேறு தீர்வு எதுவுமில்லை’ என்று சுவாமி பிரபோதானந்தா அங்கே பேசினார். பின்னர் பூஜா ஷகுன் பாண்டே ‘அவர்களில் இருபது லட்சம் பேரைக் கொல்வதற்கு நம்மில் நூறு பேர் தயாராக இருந்தால் போதும், இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்று விடுவோம்’ என்று பேசினார். உங்கள் வாழ்நாளில் நீங்கள் எப்போதாவது முஸ்லீம்களைப் பற்றி அவர்களுடைய சொந்த ஹிந்து சகோதர சகோதரிகளே இவ்வாறாகப் பேசுவார்கள் என்று நினைத்திருப்பீர்களா? சக குடிமக்களே இப்போது உங்கள் மீது தாக்குதலை நடத்தப் போவதாகச் சொல்கிறார்கள்.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு
ஹரித்துவாரில் நடந்த தர்ம சன்சத் கூட்டம்

நசிருதீன் ஷா: இது போன்ற விஷயங்களைக் கேட்கும் போது மன உளைச்சலே ஏற்படுகிறது. மேலும் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா என்பது உண்மையில் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர்கள் இப்போது அழைத்துக் கொண்டிருப்பது முழு அளவிலான உள்நாட்டுப் போருக்கே ஆகும்… நம்மிடையே இருந்து வருகின்ற இருபது கோடிப் பேர் இதை எங்கள் தாய்நாடு என்றும் நாங்கள் இந்த இடத்திற்குச் சொந்தக்காரர்கள் என்றும் கூறி திரும்ப எதிர்த்துப் போராடும் போது அவர்கள் அனைவரையும் அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது.

நாங்கள் இங்கேதான் பிறந்தோம், எங்கள் தலைமுறைகள் இங்கேயே வாழ்ந்து மடிந்திருக்கின்றன. அத்தகைய இயக்கம் ஏதேனும் தொடங்குமானால், அது மிகப் பெரிய எதிர்ப்பையும், கோபத்தையும் நிச்சயம் சந்திக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இப்போது அதுபோன்று பேசுபவர்களுக்கு எதிராக எதுவும் செய்யப்படுவதிவில்லை. ஆனால் அதேசமயத்தில் ஒரு கவிஞர், நகைச்சுவை நடிகர் தான் சொல்லப் போகின்ற நகைச்சுவைக்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் யதி நரசிங்கானந்த் இதுபோன்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்… வெறுக்கத்தக்க வகையில் பேசுகின்ற இந்த யதி நரசிங்கானந்த் சொல்வது… முற்றிலும் அருவருப்பானவையாக, அபத்தமானவையாகவே இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் இல்லையென்றால் அந்த பேச்சுகள் உண்மையில் வேடிக்கையானவையாகவே இருக்கும்.

கரண் தாப்பர்: தாங்கள் ஓர் உள்நாட்டுப் போருக்குச் சாத்தியமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று நீங்கள் மிக முக்கியமான ஒன்றை சொன்னீர்கள். இருபது கோடி முஸ்லீம்களைத் தாக்கி கொல்லப் போவதாக தர்ம சன்சத் மிரட்டுவதாலேயே நாட்டில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் கீழே விழுந்து அவர்களிடம் சரணடைந்து விடப் போவதில்லை. அவ்வாறு பேசுபவர்கள் நமது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்.

நசிருதீன் ஷா: ஆம், நீங்கள் சொன்னதைப் போல் அவர்கள் தங்களால் இயன்றவரையிலும் இங்கே இருக்கின்ற சக குடிமக்களை மிரட்டி வருகிறார்கள். முகலாயர்கள் செய்த ‘அட்டூழியங்கள்’ என்று சொல்லப்படுபவை மீது தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியமளிப்பதாகவே இருக்கிறது. அவர்கள் முகலாயர்கள் இந்த நாட்டிற்குப் பங்காற்றியவர்கள் என்பதை மறந்து விடுகிறார்கள்; நீடித்து நிற்கின்ற நினைவுச்சின்னங்கள், வரலாறு, கலாச்சாரம், நடனம் மற்றும் இசை மரபுகள், ஓவியம், கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை நமக்கு விட்டுச் சென்றவர்கள் முகலாயர்கள் என்பதை மறந்து விடுகிறர்கள். தைமூர், கஜினி முகமது அல்லது நாதர் ஷா பற்றி யாருமே பேசுவதில்லை. ஏனென்றால் அந்த வரலாறு குறித்த அறிவு கொண்டவர்களாக அவர்கள் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை முகலாயர்கள் இங்கே வந்த கொள்ளையர்கள், கொள்ளையடித்து விட்டுச் சென்றவர்கள் எனப்து மட்டுமே… இந்த இடத்தை தங்கள் தாயகமாக்கிக் கொள்வதற்காக முகலாயர்கள் இங்கே வந்தனர். விரும்பினால் நீங்கள் அவர்களை அகதிகள் என்று வேண்டுமானால் அழைத்துக் கொள்ளலாம், மிகவும் வசதியுடன் இருந்த அகதிகள். ஆனால் முகலாயர்கள் மீது இப்போது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்படுகிறது. ‘அட்டூழியங்கள்’ என்று அவர்களால் விவரிக்கப்படுகின்ற செயல்களுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு முஸ்லீமும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்வது உண்மையில் கேலிக்குரியதாகவே இருக்கிறது.

கரண் தாப்பர்: நசீருதீன் ஷா, உங்களுக்குத் தெரிந்திருக்கும். மக்களை கலங்கச் செய்திருப்பது தரம் சன்சத்தில் பேசிய பேச்சுகள் மட்டும் அல்ல… அதற்கான எதிர்வினையும்தான். காவல்துறையினர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலே நாட்கள் பல கடந்து சென்று விட்டன. இன்று வரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை. இறுதியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டபோது, அது வெறுமனே ‘மத விரோதத்தைத் தூண்டுகின்ற’ என்ற மிகக் குறைவான குற்றத்திற்கானதாக மட்டுமே இருந்தது.

உத்தரகாண்ட் காவல்துறை தலைமை இயக்குனர் மிக முக்கியமான ஊபா சட்டம் (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்) பயன்படுத்தப்படவில்லை என்றும் அது பயன்படுத்தப்படாமலேகூட போகலாம் என்றும் தி ஹிந்து பத்திரிகையிடம் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு கோவிட்-19 பரவியதாக தப்லிகி ஜமாஅத் மீது குற்றம் சாட்டப்பட்ட வேளையில் ​​சிலர் மீது கொலைக் குற்றமே சுமத்தப்பட்டது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. காவல்துறை மிக நியாயமாக, நேர்மையாக இருக்கிறது என்று நீங்கள், முஸ்லீம்கள் நம்புகிறீர்களா? இந்த கொடூரமான குற்றவாளிகளை சட்டத்தின் முன்பாக கொண்டு வந்து காவல்துறை நிறுத்தும் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்களா?

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

நசிருதீன் ஷா: அது காவல்துறைக்கு யார் உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. நீதித்துறையின் இந்த வகையான பாகுபாடு மிக மேலே இருந்து தொடங்குகிறது. எல்லா வழிகளிலும் அது அங்கிருந்தே பரவுகிறது. உயர்மட்டத்தில் இருப்பவர்களே முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். எனவே உத்தரவின் பேரிலேயே காவல்துறை செயல்படலாம். மக்களை அடிப்பதில் காவல்துறையினரிடம் மகிழ்ச்சி அல்லது ஏதாவது ஒரு உணர்வு இருக்கிறதா என்பது இங்கே முக்கியமாக இருக்கிறது. பொதுமுடக்கத்தின் போது நாம் பார்த்த காட்சிகளிலிருந்து காவல்துறையினர் அவ்வாறு செய்து வருவதை நம்மால் வெளிப்படையாகக் காண முடிந்திருக்கிறது. காவல்துறையில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக அல்லது கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும், கூட்டத்தின் மீது லத்தி கொண்டு அடிக்க உத்தரவைப் பெற்றுக் கொண்ட முஸ்லீம் காவலர் ஒருவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதற்கு கீழ்படிவார் என்றால் என்ன செய்வது? இந்த விஷயத்தில் அவருக்கான தேர்வு என்று எதுவும் இருக்கவில்லை.

கரண் தாப்பர்: காவல்துறை எவ்வாறு நடந்து கொள்கிறது, எப்படி எதிர்வினையாற்றுகிறது, நேர்மையாக அல்லது நியாயமாக அவர்கள் நடந்து கொள்வார்களா, சட்டத்தின் முன்பு குற்றவாளிகளைக் கொண்டு வந்து நிறுத்துவார்களா என்பது மேலிட உத்தரவுகளைப் பொறுத்தது என்று மிக முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். அரசியல் எதிர்வினை எவ்வாறு இருக்கிறது என்று பார்ப்போம். கண்டிக்கின்ற வகையில் ஒரு வார்த்தையைக்கூட வெளியிடாத உத்தரகாண்ட் அரசு, ஒன்றிய அரசு, பிரதமர் ஆகியோரின் மௌனம் காதைச் செவிடாக்குகிறது. அது எதுவும் நடக்கவில்லை அல்லது நடப்பவற்றை பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறுவதைப் போலவே உள்ளது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

நசிருதீன் ஷா: அவர் கவலைப்படவில்லை. உண்மையில் அவர் கவலைப்படுவதே இல்லை. தான் வருந்தத் தேவையில்லை என்று கருதுகின்ற விஷயத்திற்காக தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்துபவராக அவர் இருப்பதால் அவரை ஒரு பாசாங்குக்காரர் என்றுகூட உங்களால் குற்றம் சாட்ட முடியாது. அவர் ஒருபோதும் அகமதாபாத் படுகொலைகளுக்காக மன்னிப்பு கேட்டதில்லை, அதுமட்டுமல்ல… அவர் வேறு எதற்குமே மன்னிப்பு கேட்டதாக இருக்கவில்லை. விவசாயிகள் விஷயத்தில் அரை மனதுடன் அவர் கேட்டிருந்த மன்னிப்பும்கூட வஞ்சகம் நிறைந்த மன்னிப்பாகவே இருந்தது.

மோசமாகப் பேசியவர்களில் யாரையும் தண்டிக்கும் வகையில் ஒரு வார்த்தைகூட அவரிடமிருந்து வரவில்லை. உண்மையில் அந்த நபர்களை ட்விட்டரில் பின்தொடர்பவராகவே அவர் இருக்கிறார். அதை அவர் ஏன் செய்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதில் ஒருவித மகிழ்ச்சியை அவர் பெறுகிறார்.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

கரண் தாப்பர்: இந்த நாட்டின் தலைவராக இருக்கின்ற பிரதமர் மௌனம் சாதிப்பது தார்மீக ரீதியாக மட்டுமே சிக்கலானதாக இருக்கவில்லை. அவருடைய மறைமுகமான ஆதரவு இனப்படுகொலைக்கு அழைப்பு விடுப்பவர்களுக்கு இருக்கிறது என்பதைக் காட்டுகின்ற தெளிவான அறிகுறியாகவே அவரது மௌனம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? அவர்களை ஒரு விதத்தில் அவர் ஊக்குவித்தே வருகிறார். அவர்களை நீங்கள் சொல்வதைப் போல அவர் தண்டிக்கவில்லை, அவர்களைக் கண்டிக்கவில்லை. உங்கள் சமூகத்தைப் படுகொலை செய்ய நினைக்கும் அவர்களுக்கு மேல்மட்டத்தில் இருந்து மௌன ஆதரவு இருப்பது உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கிறதா?

நசிருதீன் ஷா: அதுவொன்றும் முழுக்க ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை என்றாலும். கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் அது ஏறக்குறைய நாம் எதிர்பார்த்ததுதான். இப்படி நடந்து விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். ஆனாலும் அனைவரின் மோசமான எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிகவும் மோசமாக விஷயங்களாக அவை எவ்வாறு மாறின என்பதை நான் சொல்ல வேண்டும். இவ்வாறு ஆத்திரமூட்டப்பட்டாலும் மௌனம் காக்கின்ற தலைவர், எல்லோரிடமும் அக்கறை காட்டுபவராக தன்னைக் கூறிக் கொள்பவர், மக்களுடைய வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்பவர், எந்தவொரு மதத்துக்கும் எதிராக தனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக் கொள்பவர் நம்மிடையே இருந்து வருகிறார் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனை. அவர் கணக்கிலடங்கா கேமராக்களின் துணையுடன் தனது சொந்த மத நம்பிக்கைகளை அணிவகுத்துச் சென்று காட்டுபவராக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் முஸ்லீம்களைப் பற்றி குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறும் வகையில் பேசுவதற்கான நேரத்தையும் கண்டுபிடித்து வைத்துக் கொள்கிறார். அது நிச்சயமாக கவலைக்குரியதாகவே இருக்கிறது. ஆனாலும் இதுகுறித்து என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

கரண் தாப்பர்: முஸ்லீம்களுக்கு எதிராக நடந்துள்ள சமீபத்திய சீற்றமாக ஹரித்துவாரில் நடந்திருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளாக முஸ்லீம்கள் மிது லவ் ஜிகாத் என்று பலமுறை குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. பசுக் கொலைக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர். காவலர்கள் மற்றும் கும்பல்களால் தாக்கப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத் போன்ற பாஜக மூத்த தலைவர்கள் பகிரங்கமாக அவர்களை மீண்டும் மீண்டும் பரிகாசம் செய்து வருகிறார்கள். தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்கள் என்ற நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டிருக்கிறார்களா?

நசிருதீன் ஷா: இரண்டாம் தரக் குடிமக்களாகத் தாழ்த்துவதற்கான செயல்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எல்லாத் துறைகளிலும் அது நடந்து வருகிறது. ‘திரைப்படங்கள் சமூகத்தைப் பிரதிபலிக்கின்றன அல்லது சமூகம் திரைப்படங்களைப் பிரதிபலிக்கிறது’ என்று கூறியது உண்மைதான். திரைப்பட உலகில் நடப்பது நிச்சயமாக நாட்டில் பிரதிபலிக்கிறது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

மலேர்கோட்லா மாவட்டத்தில் உள்ள ஜித்வால் கலான் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக முஸ்லீம் குடும்பங்களுக்கு தனது பூர்வீக நிலத்தை வழங்கிய விவசாயி ஜக்மெல் சிங் (நடுவே வெள்ளைத் தலைப்பாகை அணிந்துள்ளவர்)

அது முஸ்லீம்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கிப் பரப்புகின்ற முயற்சியாகவே இருக்கிறது. முஸ்லீம்கள் அதற்கு ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது என்பதையே நான் எப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். நெருக்கடி என்று வந்தால் அதை எதிர்த்து நின்று போராடுவோம் என்பதால் ஒரு விஷயம் நம்மைப் பயமுறுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. நம்மிடம் ‘ஹிந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாக வாழ முடியாது’, ‘இருவரின் கலாச்சாரங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை’ என்று வெளிப்படையாகக் கூறுகின்ற மூத்த தலைவர் அரசியலமைப்பிற்கு முரணாகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே நடந்து கொள்கிறார் இல்லையா? அவர் அதைப் பற்றி எதுவும் நினைத்தவராகத் தெரியவில்லை. அவர் தொடர்ந்து ‘தகனம் செய்யும் மயானம் – கல்லறை’ (சம்ஸ்தான் – கப்ரிஸ்தான்), ‘மசூதி – கோவில்’ போன்ற வேறுபாடுகள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார். முக்கிய பெரும்பான்மை என்று தாங்கள் உணர்கின்ற ஹிந்துப் பெரும்பான்மையினரை ஒருங்கிணைப்பதற்காக அவர்களைப் பிரித்தாண்டு ஆட்சியதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் மிகச் சிறந்த வழியை பாஜக கண்டுபிடித்து வைத்திருக்கிறது. அவர்கள் யாருக்கும் பிடி கொடுப்பதில்லை. முஸ்லீம்கள் ஓரங்கட்டப்பட்டு தேவையற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அவர்களைத் தேவையற்றவர்கள் என்று நிரூபிக்கும் வகையிலான செயல்முறைகள் படிப்படியாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

கரண் தாப்பர்: நீங்கள் மிக முக்கியமான ஒன்றைச் சொன்னீர்கள். ஆனால் அதை மெதுவாகச் சொன்னீர்கள். அவ்வாறு நீங்கள் அதைச் சொன்னதாலேயே அது மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. நெருக்கடி வந்தால் எதிர்த்துப் போராடுவோம் என்று சொன்னீர்கள். அதுதான் அவர் உங்களுக்கு விட்டுச் செல்கின்ற கடைசி வழி இல்லையா? உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் நிலையைத் தற்காத்துக் கொள்ளவும் நீங்கள் ரகசியமாகப் போராட வேண்டும்.

நசிருதீன் ஷா: ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தால் நாங்கள் அவ்வாறே செய்வோம். எங்கள் வீடுகளையும், தாயகத்தையும், குடும்பங்களையும், குழந்தைகளையும் நாங்கள் பாதுகாத்து வந்திருக்கிறோம். எங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி நான் பேசவில்லை; நம்பிக்கைகள் மிக எளிதாக அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. அதாவது அவ்வப்போது ‘இஸ்லாம் ஆபத்தில் உள்ளது’ என்று கூறபப்டுவதை நான் கேட்டு வந்திருக்கிறேன். இப்போது ஹிந்து மதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக நாம் கேள்விப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் எவ்வளவு அபத்தமானவராக இருக்க வேண்டும் தெரியுமா? எங்களை விட பத்துக்கு ஒன்று என்ற அளவிலே அதிக எண்ணிக்கையில் இருந்து கொண்டு ‘என்றாவது ஒரு நாள் ஹிந்துக்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் அதிகமாக இருக்கப் போகிறார்கள்’ என்று இன்னும் பிரச்சாரம் செய்து வரப்படுகிறது. ஹிந்துக்களின் எண்ணிக்கையை என்றாவது ஒரு நாள் முஸ்லீம்கள் மிஞ்சுவதற்கு எந்த விகிதத்தில் நாங்கள் சந்ததியை உருவாக்க வேண்டும் தெரியுமா? நாங்கள் ஏன் அதை விரும்ப வேண்டும்? இருக்கின்ற இடத்தில் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம்; எங்களால் முடிந்ததை நாட்டிற்காகச் செய்திருக்கிறோம். நிம்மதியுடன் வாழத் தகுதியானவர்கள் என்றே எங்களை நாங்கள் முழுமையாக உணர்கிறோம்.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

கரண் தாப்பர்: இன்னும் ஒருபடி மேலே செல்ல விரும்புகிறேன்… இன்றைக்கு அந்தக் கும்பல் குர்கானில் முஸ்லீம்களை தொழுகை நடத்த விடுவதில்லை. உத்தரப்பிரதேசத்து கிராமங்கள், சிறு நகரங்களில் காய்கறிகள் மற்றும் வளையல்களை முஸ்லீம்கள் விற்பதை அந்தக் கும்பல் அனுமதிப்பதில்லை. குஜராத் நகரங்களில் முஸ்லீம்கள் அசைவ உணவுக் கடைகளை நடத்துவதற்கு அந்தக் கும்பல் அனுமதிக்காது. குஜராத்தில் உள்ள ‘தொந்தரவுக்குள்ளான பகுதிகள் சட்டம்’ ஹிந்துக்களுக்கானது என்று கருதப்படும் பகுதிகளில் முஸ்லீம்கள் சொத்துக்களை வாங்குவதை அனுமதிக்காது. நீங்கள் வாழ்ந்து வருகின்ற நாடு மிகக் கூர்மையாக துருவப்படுத்தப்படுவதை, ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் காண்கிறீர்களா?

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

நசிருதீன் ஷா: அது அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதற்கு ஊக்கமளிக்கப்படுகிறது. வெவ்வேறு விஷயங்களைப் போதிக்கின்ற இரண்டு வெவ்வேறு மதத்தினரிடையே உள்ள வெறுப்பு இயல்பானது என்றால், சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பும் குரோதமும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா? சீக்கியர்களும், முஸ்லீம்களும் தேசப் பிரிவினையின் போது எதிரிகளாக இருந்தவர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டவர்கள், இருதரப்பிலும் சிந்திய ரத்தத்தைக் கண்டவர்கள். ஆனால் இன்றைக்கு தொழுகை நடத்த விரும்பும் முஸ்லீம்களுக்காக சீக்கியர்கள் தங்களுடைய குருத்வாராக்களை திறந்து வைத்திருக்கும் நேரத்தில் ஹிந்து அடிப்படைவாதிகள் கூட்டம் வந்து முஸ்லீம்களின் தொழுகையைச் சீர்குலைக்க முயல்கிறது. சீக்கியர்கள் மட்டுமே இப்படியானதொரு நற்காரியத்தைச் செய்யும் அளவிற்கு உன்னதமானவர்களாக இருக்கிறார்கள். இந்த வகையான நற்செயலை முஸ்லீம்கள் பிரதிபலிப்பார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

கரண் தாப்பர்: இந்திய முஸ்லீம்களைப் போன்றவராக நீங்கள் இல்லை என்பது எனக்குத் தெரியும் என்றாலும் நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். அது இரண்டு ஆண்டுகளாக உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் கேள்வி. நரேந்திர மோடியின் இந்தியாவில் ஒரு முஸ்லீமாக இருப்பதை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?

நசிருதீன் ஷா: மிகவும் கோபமாக, வெறுப்பாக உணர்கிறேன். அன்புத் தலைவரை கேள்வி எதுவும் கேட்காமல் வணங்கி வருபவர்கள் அவரைப் பற்றி நகைச்சுவையாகப் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன். நான் பாதுகாப்பற்றவனாக உணரவில்லை. ஏனென்றால் இது எனது வீடு என்று எனக்கு நன்கு தெரியும். என்னை யாரும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது. எனக்கான இடத்தைக் கொண்டிருப்பதற்குத் தேவையான வகையில் எனது பணிகளை நான் செய்திருக்கிறேன். ஆனாலும் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களிடமுள்ள வெளிப்படையான உணர்வுரீதியான வெறுப்பே என்னை அதிகம் கோபப்படுத்துகிறது. அது என்னை அதிகம் தொந்தரவு செய்கிறது. எதிர்காலத்தில் அது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கப் போகிறது என்பதை அறிந்தே இருக்கிறேன்.

கரண் தாப்பர்: இதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்: நீங்கள் பாரபங்கியில் பிறந்தவர். அஜ்மீர் மற்றும் நைனிடாலில் படித்தவர். இந்தியாவின் தலை சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். உங்கள் சகோதரர் ராணுவத்தின் துணைத்தலைவர் பதவி வரை உயர்ந்தவர். ‘பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற போது உங்கள் இருவருக்குள்ளும் என்ன மாதிரியான உணர்வு எழுகிறது?

நசிருதீன் ஷா: அதைக் கேட்டு நாங்கள் சிரித்துக் கொள்வோம். ‘பாகிஸ்தானுக்குப் போ’ என்று சொல்பவர்களைப் பார்த்து ‘கைலாசத்திற்கு போ’ என்று சொல்ல நினைக்கிறேன். உண்மையில் அது மிகவும் அபத்தமானது… ‘உருது பாகிஸ்தானிய மொழி’ அல்லது அந்த வார்த்தை… தீபாவளி விளம்பரத்தில் வந்த அந்த வார்த்தை என்ன… ‘ரிவாஸ்’ – ‘ரோஷ்னி கா ரிவாஸ்’ அல்லது அதுபோன்று ஏதாவது… அவையெல்லாம் எவ்வளவு அபத்தமானவை? ஹிந்தி, உருது, மராத்தி, குஜராத்தி மொழிகளில் எத்தனை பார்சி வார்த்தைகள் உள்ளன தெரியுமா? அரேபிய மொழி வார்த்தைகள் எத்தனை உள்ளன என்று தெரியுமா? முஸ்லீம்களின் மொழி உருது என்று தவறாகக் கருதப்படுகிறது. அது முஸ்லீம்களின் மொழி அல்ல, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தின் மொழி என்று பலமுறை ஜாவேத் அக்தர் கூறியிருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் உருதை முஸ்லீம் மொழி என்பதாக முத்திரை குத்தி விட்டது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு
‘இருபத்தைந்து வேதாள கதைகள்’ புத்தகத்தின் உருது பதிப்பை வாசித்துக் கொண்டிருக்கும் தில்லி மெட்ரோ பயணி

கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் இந்தியாவில் வாழ்ந்து வருகின்ற முஸ்லீம் என்ற முறையில் கோபம், வெறுப்பை நீங்கள் உணர்கிறீர்களா?

நசிருதீன் ஷா: சரிதான்.

கரண் தாப்பர்: அவ்வாறு உணர்வது மகிழ்ச்சி தருகின்ற வழியாக யாருக்கும் இருக்கப் போவதில்லை.

நசிருதீன் ஷா: இல்லை. அது அப்படி இருக்காது. நமது பிரதமர் நகைப்புக்குரிய அறிவியல் அறிக்கைகளை வெளியிடுவதைப் பார்க்கும் போது, நிறைய நேரம் உண்மையை அவர் மூடிமறைப்பதைப் பார்க்கும் போது, உண்மைகளை அவர் சிதைப்பதைப் பார்க்கும் போது, எதிரிகள் மீது குற்றம் சாட்டுகின்ற போது அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது, இந்த அளவிற்கு அரசியல் உரையாடல்கள் தரம் தாழ்ந்தவையாக ஒருபோதும் என் நினைவில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

கரண் தாப்பர்: உங்களிடம் நான் பேச விரும்புவது முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மட்டும் அல்ல என்பதால் இந்த கட்டத்தில் நமது விவாதத்தைச் சற்று விரிவுபடுத்திக் கொள்ளலாம். ஒட்டுமொத்த இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்கள் மனைவி ஹிந்து. உங்கள் குழந்தைகள் நவீன, மதச்சார்பற்ற, முன்னோக்குப் பார்வையுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்த மாதிரியான நாடாக மாறியதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நசிருதீன் ஷா: அதைச் சொல்வது மிகவும் கடினம். அதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்றாலும் நமது மத அடையாளங்களை முன்னிறுத்திச் செல்லாமல் இருப்பது முக்கியம் என்பதை உறுதியாக அறிந்திருக்கிறேன். நான் மதம் முக்கியத்துவம் பெறாத நாள் என்று ஒரு நாள் வரும் – நிச்சயமாக அது ஒரு கற்பனாவாத விருப்பமாக இருந்தாலும் – என்றே நம்புகிறேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ளவிருந்த போது, ​​​​எங்கள் குடும்பத்தில் இருந்த பெரியவர் ஒருவரைக் கலந்தாலோசித்தோம். அவர் அப்போது எங்களிடம் ‘அரசியல் பிரச்சனை எதுவும் இருக்காது. ஆனால் வீட்டில் ஹிந்து மதம் இருக்குமா அல்லது முஸ்லீம் நெறிமுறை இருக்குமா, மது அனுமதிக்கப்படுமா, இறைச்சி சாப்பிடலாமா, ஹோலி கொண்டாடப்படுமா… என்பது போன்ற சமூகப் பிரச்சனைகள் நிச்சயமாக இருக்கும்’ என்று கூறினார்.

அரசியல் பிரச்சனை இருக்காது என்ற அவரது கூற்று முற்றிலும் தவறாகிப் போனது. எந்தவொரு சமூகப் பிரச்சனையும் எங்களுக்கு இருக்கவில்லை. எங்களுடைய நண்பர்கள் பலரும் மதங்களை மறுத்தே திருமணம் செய்து கொண்டுள்ளனர். சொல்லப் போனால் என்னுடைய பிள்ளைகள் ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியை முதன்முதலாகச் சந்தித்த போது ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எங்கள் நண்பர்களில் பலரும் ஹிந்து-முஸ்லீம், முஸ்லீம்-கிறிஸ்துவர், ஹிந்து-கிறிஸ்துவர், யூதர்-சீக்கியர் அல்லது அது போன்று திருமணம் செய்து கொண்டவர்களே. அவர்களை அவ்வாறு வைத்திருப்பதற்கான நம்பிக்கையுடன் இருந்த நாடு. இது அப்படிப்பட்ட நாடாக இருந்தது என்று பிள்ளைகளிடம் சொன்னோம். எனக்கும் அதுபோன்ற நாடாக இருந்தது என்றே சொல்லப்பட்டிருந்தது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

பாகிஸ்தானுக்கு செல்வதற்கு எனது தந்தை மறுத்தார். அப்போது அவரது சகோதரர்கள், என் அம்மாவின் சகோதரர்கள் மற்றும் எனது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இங்கிருந்து வெளியேறினர் என்ற போதிலும் என் தந்தை இங்கிருந்து செல்வதற்கு மறுத்து விட்டார். நமக்கு அங்கே எவ்வளவு எதிர்காலம் இருக்குமோ அதே அளவு இங்கேயும் இருக்கும் என்று நன்கு உணர்ந்தவராக அவர் இருந்தார். இன்றைய இந்தியாவில் இப்போது நான் குழந்தையாக இருந்திருப்பேன் என்றால் என்ன மாதிரியான எதிர்காலம் எனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்ல எனக்கு நிச்சயம் தெரிந்திருக்காது.

கரண் தாப்பர்: இன்றைய இந்தியா உங்களை வெளியேற்றியிருக்கலாம். உண்மையில் அது வெளியேற வேண்டுமென்று உங்களை விரும்பச் செய்திருக்கலாம்.

நசிருதீன் ஷா: அவ்வாறு செய்திருக்கலாம் என்றாலும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ‘ஓடி ஒளிந்து கொள்’ என்பது என் வழி அல்ல. நான் அதைச் செய்யப் போவதில்லை. எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலையில்லை. இங்கே எவ்வளவு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அது பற்றி எனக்குக் கவலையில்லை. இங்கிருந்து கொண்டே நான் அதைச் சமாளிப்பேன். அதுபோன்று இருக்குமாறு என் குழந்தைகளுக்கும் கற்பிப்பேன்.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

கரண் தாப்பர்: நசீர்! அனைவரும் சேர்ந்து ஈத், கிறிஸ்துமஸை ஒன்றாகக் கொண்டாடிய அறுபது, எழுபதுகளில் வளர்ந்தவர்கள் நீங்களும் நானும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மூன்று நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. ஆனால் அசாமில் கிறிஸ்தவ கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஹிந்துக்கள் மீது பஜரங் தளம் வன்முறையில் ஈடுபட்டது. குர்கான் மற்றும் பட்டோடியில் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்தவர்களால் பள்ளியில் சிறுவர்களுக்காக நடந்து கொண்டிருந்த அபிநய நாடக நிகழ்ச்சி சீர்குலைந்தது. அம்பாலாவில் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. கர்நாடகாவில் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையற்றவர்களாக மாறி வருகிறார்களா என்ற கேல்விக்கு இல்லை என்று பதில் இங்கே இருக்குமானால் இதுபோன்ற சகிப்பின்மை எங்கே இருந்து வருகிறது?

நசிருதீன் ஷா: நான் சொன்னதைப் போல இது முற்றிலும் உருவாக்கப்பட்ட வெறுப்பு. அடுத்தவர் கொண்டுள்ள நம்பிக்கைகளை சகித்துக் கொள்ளாத தன்மை. மத நம்பிக்கை என்பது மிகவும் ஆபத்தான விஷயம். அது உங்களைத் தீவிர வன்முறைக்கு இட்டுச் செல்லக் கூடியது. தேவாலயங்கள், மசூதிகள் சேதப்படுத்தப்படுவதைப் போல யாராவது ஒருவர் கோவிலைச் சேதப்படுத்த முயன்றால் என்ன நடக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அவ்வாறு சேதப்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுப்பதில் நீதி ஒருபோதும் தாமதிக்காது. ஆனால் மற்ற வழிபாட்டுத் தலங்களை சேதப்படுத்துபவர்களுக்கு அதுபோன்று எதுவும் நடக்காது. ‘உங்கள் கடவுளை விட என்னுடைய கடவுள் பெரியவர்’, ‘நீங்கள் நம்புவதை வணங்குவதற்கான உரிமை உங்களுக்குக் கிடையாது’ என்று சொல்வது உண்மையில் மிகவும் அபத்தமானது. நிலைமை அபத்தமான நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது.

கரண் தாப்பர்: அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு வெளிநாட்டில் இருந்து நிதி பெற அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டதை நேற்று பார்த்தோம். அது கிறிஸ்துமஸ் தினத்தன்று அறிவிக்கப்பட்டது. அதை தற்செயல் நிகழ்வு என்று நினைக்கிறீர்களா? தேதி, நேரம் போன்றவை திட்டமிட்டு தந்திரமாக நிகழ்த்தப்பட்டது என்று நினைக்கிறீர்களா? கிறிஸ்தவர்களுக்கான மோசமான செய்தியை கொண்டு சென்று சேர்ப்பதற்கான மற்றொரு வழியாகவே அது இருந்தது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு
வாக்குச்சாவடி ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருக்கிற மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டியைச் சார்ந்த கன்னியாஸ்திரிகள்

நசிருதீன் ஷா: அது நிச்சயமாக வேண்டுமென்றே செய்யப்பட்டதுதான். வேண்டுமென்றே செய்யப்படாமல் உள்ளதாக நிச்சயம் இருக்க முடியாது. கிரீன்பீஸ், அம்னெஸ்டி இந்தியா அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின் நலனுக்காக உழைக்கின்ற பலருக்கும் எல்லா வகையிலும் தடை ஏற்படுத்தப்படுகிறது. அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முற்போக்காகத் தெரியும் அனைத்தும் அரசுக்கு எதிரானவையாகவே தோன்றுகின்றன. அமைதியான தேவாலய பிரார்த்தனையைச் சீர்குலைக்கும் வன்முறைக் கும்பல் அங்கேயே அமர்ந்து பஜனை பாடத் தொடங்குகிறது என்ற இன்றைய உண்மை நினைத்துப் பார்க்கவே முடியாததாக உள்ளது. இதற்கு முன்பாக இதுபோன்று ஒருபோதும் நடந்ததே இல்லை. இந்தச் செயல்கள் வெளிப்படையாக மேலிருந்து ஒப்புதலைப் பெற்றே நடைபெறுகின்றன.

கரண் தாப்பர்: பெரும்பாலும் இதுபோன்ற செயல்கள் நிறுத்தப்படும் அல்லது கண்டிக்கப்படும். செயலில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அப்படி எதுவுமே நடக்கவில்லை.

நசிருதீன் ஷா: அப்படி எதுவும் நடக்கவில்லை, நடப்பதற்கான வாய்ப்பில்லை. அது இன்னும் மோசமாகக் கூடிய வாய்ப்பே இருந்து வருகிறது.

This is my house No one can evict me from here: Interview with Naseeruddin Shah by Karan Thapar  In Tamil Translated by Chandraguru இது என் வீடு என்னை யாராலும் இங்கிருந்து வெளியேற்ற முடியாது: நசிருதீன் ஷா உடன் நேர்காணல் - கரண் தாப்பர் | தமிழில்: தா சந்திரகுரு

கரண் தாப்பர்: யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிலே நமது நாடு மாறிக் கொண்டிருப்பது மதத்தின் அடிப்படையில் மட்டுமல்ல. விமர்சகர்கள் மற்றும் கருத்து வேறுபாடு கொண்டவர்களுக்கு இப்போது என்ன நேர்கிறது என்பதைப் பாருங்கள். அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றம் சாட்டப்படுகிறது. பாராளுமன்றத்தைப் பாருங்கள். அது செயல்படாதது மட்டுமல்ல, பொருத்தமற்றதாகவும் ஆகிவிட்டது. ஊடகங்களைப் பாருங்கள் — பெரும்பாலானவை உறுமுகின்ற காவல் நாய்களாக இருப்பதைக் காட்டிலும் அரசின் மடியில் கிடக்கின்ற நாய்களாக இருக்கவே விரும்புகின்றன. நீதித்துறையும் கூட அரசாங்கத்தை சங்கடப்படுத்தக்கூடிய வழக்குகளை வேண்டுமென்றே, தெரிந்தே ஒத்தி வைக்கிறது. நம்முடைய இளமைக் காலத்தில் நம்மை மிகவும் பெருமைப்படுத்திய ஜனநாயகத்தின் மீது இந்தியாவிற்கு இருந்த உறுதி, அரசியலமைப்பு விழுமியங்களுக்கான நமது அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் தோல்வியடையும் நிலையில் இருக்கின்றனவா?

நசிருதீன் ஷா: நிச்சயமாக அது சில பிரிவுகளில் அவ்வாறுதான் இருக்கின்றது. நீதித்துறை மிகப்பெரிய அழுத்தங்களின் கீழ் செயல்பட்டு வருவதால் அவை குறித்து அவ்வாறு தீர்மானிப்பது மிகவும் அவசரப்படுவதாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் உச்சநீதிமன்றம் தன்னை உறுதிப்படுத்திக் கொண்டு வருவது மிகவும் நம்பிக்கைக்குரிய அறிகுறியாக இருக்கிறது.

அழிவும், இருளும் நம்மைச் சூழ்ந்துள்ள போதிலும் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் இருப்பதாகவே நான் கூறுவேன். ஜனநாயகத்திலிருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்று சொல்வது முன்கூட்டியதாகவே இருக்கலாம். சில சமயங்களில் நாம் ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984இல் வாழ்கிறோம் என்று தோன்றுகிறது. செய்தித்தாளைத் திறக்கும் போதெல்லாம் கள்ளச் சிரிப்புடன் அந்த ‘பிக் பிரதர்’ உங்களை வரவேற்பார். அங்கே ‘இரண்டு நிமிட வெறுப்பு’ அன்றாடம் கொண்டாடப்படுகிறது. ஃபேஸ்புக் மற்றும் அனைத்து சமூக ஊடக விஷயங்களிலும் அது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையாகச் சொல்வதென்றால் அது இரண்டு நிமிட வெறுப்பு அல்ல – இருபத்திநான்கு மணிநேர வெறுப்பு. அங்கே ‘பிக் பிரதரை நான் நேசிக்கிறேன்’ என்ற கீதம் தொடர்ந்து இசைக்கப்படுகிறது. குடிமக்கள் அனைவருக்கும் ‘நான் பிக் பிரதரை நேசிக்கிறேன்’ என்று சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. அது போல சில சமயங்களில் உணர்கிறேன் என்றாலும் அதைச் சொல்வது மிகவும் முன்கூட்டியதாகவும் தெரிகிறது. ஜனநாயகம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சமீபத்திய நிகழ்வாகவே இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அரசமுறை கொண்டதாக இருந்தது. அதற்கு முன்பு மொகலாயர் காலத்திற்குப் பிறகு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட மகாராஜாக்களின் கூட்டமாக இருந்தது. இந்த நாட்டில் ஜனநாயகம் தன்னுடைய வெற்றியைக் கண்டடைந்திருக்கிறது என்றும் நடந்து செல்கின்ற எந்தவொரு நபரும் தவறாக எடுத்து வைக்கின்ற காலடிகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்

கரண் தாப்பர்: முற்றிலும் சரி. அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் ஜனநாயகத்தை மிகவும் மாறுபட்ட பரப்பில் இருக்கும் மேல் மண் என்பதாகக் குறிப்பிட்டார். நான் முடிப்பதற்கு முன்பாக நீங்கள் பிக் பிரதர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு கணம் அதைப் பற்றி பேச விரும்புகிறேன். இப்போது வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டில் ஓர் ஒளிவட்டம் உள்ளது. பிரதமரைக் கண்டு அவரது சொந்தக் கட்சியே பயப்படுகிறது. அவரை விமர்சித்தால் உங்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே வந்து இறங்குகிறது. தன்னை மூன்றாவது நபராக மட்டுமே அவர் குறிப்பிட்டுக் கொள்வதை நான் கவனித்திருக்கிறேன்.

நசிருதீன் ஷா: ஆமாம். அது முரணாக இருக்கிறது. உங்களுடைய வார்த்தைகள் மீதே மிகப் பெரிய மதிப்பீட்டைக் கொண்டிருப்பது, முகஸ்துதியால் எளிதில் பாதிக்கப்படுவது, தவறாக பல விஷயங்களையும் பேசுவது, தனக்குக் கல்வி இல்லை என்று வெளிப்படையாகப் பெருமை பேசுவது – பிரதமர் ஆவதற்கு முன்பு அவர் இதைச் செய்திருந்தார். அது வீடியோவில் உள்ளது. அவர் அதில் ‘நான் எதுவும் படிக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் அது அவைவரையும் வசீகரமான பேச்சாகக் கருதப்பட்டது. ஆனால் அவர் சொன்ன, செய்திருக்கும் விஷயங்களைக் கொண்டு பார்க்கும் போது இப்போது அது நம்மையெல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் தானே மையமாக இருக்க வேண்டும் என்ற அவரது ஆசை, ‘M’ என்ற எழுத்தில் தொடங்கும் மற்றொரு வார்த்தைக்கு மிக அருகே உள்ளது. அதை நான் சொல்லமாட்டேன். ஆனாலும் அவர் ஒரு ராஜாவாக, கடவுள் போன்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறார். நம்மில் எவருக்குமே அது நல்ல விஷயமாக இருக்க முடியாது.

கரண் தாப்பர்: இந்த நேர்காணலை இன்னும் ஒரே ஒரு கேள்வியுடன் முடிக்கிறேன்: இந்தியா எப்படியெல்லாம் மாறி வருகிறது என்பது பற்றி சிந்திக்கும் போது, ​​உங்களிடம் தோன்றுகின்ற உணர்வுகளை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? வருத்தப்படுகிறீர்களா? ஏமாற்றமடைந்து, மனச்சோர்வடைந்திருக்கிறீர்களா அல்லது விரக்தி உணர்வைப் பெறும் அளவிற்குச் சென்றிருக்கிறீர்களா?

நசிருதீன் ஷா: விரக்தி உணர்வை நான் நிராகரிக்கின்றேன். ஏனென்றால் அது எதற்கும் வழிவகுத்துத் தரப் போவதில்லை. சோகமாக, கோபமாக உணர்கிறேன்; இவை தானாகச் சரியாகி விடும் என்று நம்புகின்ற அளவிற்கு நம்பிக்கையுடையவன் நான் இல்லை என்றாலும் ‘அகாதிஸ்ட்’ என்று அழைக்கப்படுகின்ற வகையில் இருப்பவனாக – காலம் வட்டங்களில் நகர்வதாக இருப்பதால், விஷயங்கள் சரியாக இல்லை என்றாலும் இறுதியாக பழைய நிலைக்குத் திரும்பி விடும் என்று நம்புகின்றவனாக இருக்கிறேன். எந்தவொரு கொடுங்கோலரும் இறுதியில் கவலைப்படும் நிலைக்கே வந்து சேர்ந்திருக்கின்றனர். அந்தச் சுழற்சி இந்தியாவிலும் விரைவிலேயே முழுவதுமாக வரும். அதைப் பார்க்க நான் இல்லாமல் போயிருக்கலாம். தாலி கட்டுவது போன்ற மூடநம்பிக்கைகளை நம்புகின்ற தலைவர்களுடன் நாம் இன்னும் சில வருடங்கள் சேர்ந்து வாழ வேண்டியிருக்கலாம். ஆனாலும் ராட்டினம் முழுவதுமாகச் சுழன்று பழைய நிலைக்கு வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

கரண் தாப்பர்: ஒருவேளை அது ஆறுதல்படுத்திக் கொள்ளும் வகையில் இருக்கலாம். பேச்சுவழக்கில் சொல்வது போல் ‘இதுவும் கடந்து போகலாம்’. ஆனால் இருக்கின்ற ஒரே பிரச்சனை என்னவென்றால், இப்போதைய நிலைமை ​​எவ்வளவு காலம் நீடிக்கும், எப்போது முடியும் என்று நமக்குத் தெரியாது. நசிருதீன் ஷா, இந்த நேர்காணலுக்கு மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.

நசிருதீன் ஷா: புத்தாண்டு வாழ்த்துகள், கரண். வாழ்த்துகள்.
https://thewire.in/communalism/full-text-naseeruddin-shah-karan-thapar-interview

நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது – பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு




 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர் பிரதாப் பானு மேத்தாவுடன் நடத்திய வீடியோ நேர்காணலை 2021 டிசம்பர் 17 அன்று தி வயர் இணைய இதழ் வெளியிட்டது. கடந்த ஏழாண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் அரசியல், சமூகம், பொருளாதார ரீதியாக இந்தியா எவ்வாறு மாறியுள்ளது என்பதைப் புரிந்து கொள்வதற்கான பரந்த தலைப்புகளை உள்ளடக்கியதாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது.

தேர்தலில் பலன்களை ஆளும் கட்சி அறுவடை செய்ய வேண்டும் என்பதற்காக நாட்டில் மதம் மற்றும் சமூக குழுக்களிடையே இருந்து வருகின்ற நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதில் தற்போதைய ஆட்சி எந்த அளவிற்குத் தீவிரமாகப் பங்கேற்று வகுப்புவாத சக்திகளுக்கு உதவி வருகின்றது என்பதை நேர்காணலின் போது விளக்கிச் சொல்ல மேத்தா சற்றும் தயங்கவில்லை. அரசு நிர்வாகத்தைப் பொறுப்பேற்க வைப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் தருகின்ற அழுத்தங்களுக்கு ஊடகங்களும், நீதித்துறையும் கூட எவ்வாறு வளைந்து கொடுத்துள்ளன என்பதையும் வருத்தத்துடன் அந்த நேர்காணலில் அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

நேர்காணலின் எழுத்தாக்கம் கீழே தரப்பட்டுள்ளது. நேர்காணைலை இங்கே காணலாம்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: மேத்தா! பிரதமராக நரேந்திர மோடி இருந்த இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா சமூகரீதியாக குறுகிய நோக்குடைய, பெரும்பான்மைவாதம் கொண்ட, சகிப்புத்தன்மையற்ற நாடாக, அரசியல்ரீதியாக எதேச்சதிகார நாடாக மாறியுள்ளது என்று சிலர் கூறி வருகின்றார்கள். ஏறக்குறைய பிரதமர் தெய்வமாக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிறுவனங்கள் பலவீனமடைந்து வருகின்றன. கண்காணிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன அல்லது கொத்தடிமைகளாக மாறியுள்ளன. இவற்றையெல்லாம் உண்மையல்ல என்று மறுக்கின்றவர்கள் அதுபோன்ற கருத்துகள் பிரதமரை, அரசாங்கத்தை, ஏன் நாட்டையே இழிவுபடுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டவை என்று கூறுகின்றார்கள். இதுகுறித்து உங்கள் பார்வை எவ்வாறு இருக்கிறது?

பிரதாப் பானு மேத்தா: உங்களுடைய விளக்கம் சரியானது என்றே நினைக்கிறேன். மிகுந்த வகுப்புவாதம் கொண்ட நாடாக இந்தியா மாறி விட்டது; அதிக எதேச்சாதிகாரம் கொண்டதாகவும் அது மாறியிருக்கிறது – உண்மையில் இதுபோன்ற விளக்கங்களை யாரும் இப்போது எதிர்த்துப் பேச முடியாது என்றே நினைக்கிறேன். பிரதமரின் நோக்கங்கள் என்னவாக இருக்கின்றன என்பது குறித்து பேச வேண்டியதில்லை என்றாலும் – உச்ச நீதிமன்றம் ஆட்கொணர்வு மனுவைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுக்கும் போது; பெரும்பாலான ஊடகங்கள் குறைந்தபட்சம் தொலைக்காட்சி ஊடகங்கள் (அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்… ஒரு வகையில் பார்க்கும் போது வேறு யாரைக் காட்டிலும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்…) நான்காவது தூண் என்ற தங்களுடைய பங்கைத் தவிர்த்திருக்கும் நிலையில் – நிறுவனங்களின் நடத்தை குறித்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

சமீபத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் பார்த்ததைப் போல் ஒரு வகையில் சங்கராச்சாரியார், சிவாஜியின் கலவையாக பிரதமர் முன்னிறுத்தப்பட்டார். ஒட்டுமொத்த வழிபாட்டு முறையும் இன்று அவரைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை மறுவடிவமைப்பதாக மட்டுமல்லாமல், ஹிந்து மதத்தின் மதம் சார்ந்த மற்றும் மத வடிவங்களை மிகவும் தீவிரமான முறையில் மறுவடிவமைப்பதாகவும் அது உள்ளது. தேர்வு செய்து கொள்கின்ற எந்தவொரு பண்பும் இந்தியா மிகவும் வகுப்புவாதம் கொண்டதாக, எதேச்சாதிகாரம் கொண்டதாக மாறிவிட்டது என்ற எண்ணத்திற்கு எதிராக இருப்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

நான் அதற்குத் தருகின்ற ஒரே காரணத்தை பாஜக ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இப்போதுள்ள எதேச்சாதிகாரத்திடம் உண்மையான ஜனநாயக ஆற்றல் உள்ளது. அதாவது ஜனரஞ்சகத்தின் வேர்களைக் கொண்டதாக அது இருக்கிறது. சில வழிகளில் அதுவே நமக்கு மிகவும் கவலையளிப்பதாகவும் இருக்கிறது. மோடி ஒரு ஜனரஞ்சகமான நபராக இருக்கிறார். தேர்தல்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஒரு வகையில் இந்தியாவின் நிறுவன களத்தை அவர் முழுமையாக மாற்றியமைத்திருக்கிறார். இந்த தருணத்தை அதுவே மிகவும் சிக்கல் மிகுந்ததாக்கி வைத்திருப்பது நன்கு தெரிய வருகிறது.

கரண் தாப்பர்: இப்போதுள்ள வகுப்புவாதமும், எதேச்சாதிகாரமும் ஜனநாயக வேர்களைக் கொண்டவையாக இருக்கின்றன என்று கூறுகின்ற போது, உண்மையில் பெரும்பான்மைவாதம் உள்ளிட்ட இந்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திய மக்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் கூற வருகிறீர்களா? மோடி ஆட்சி செய்து வருகின்ற எதேச்சாதிகார வழியானது மக்கள் தாங்கள் அந்த வகையில் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்று விரும்புவதைப் பிரதிபலிப்பதாக இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: அது மூன்று விஷயங்களைப் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். நிச்சயமாக, மேல்தட்டில் இருப்பவர்களின் கருத்து மட்டத்தில், மோடிக்கும், அவரது வகுப்புவாத, எதேச்சாதிகார திட்டங்களுக்கும் மிகப் பரவலான பெரும் ஆதரவு இருக்கிறது. இந்திய மூலதனத்தின் ஆதரவு, தகவல் ஒழுங்கை உருவாக்கி கட்டுப்படுத்துகின்ற ஒழுங்கமைக்கப்பட்ட முறையான வழிகள் போன்றவை இல்லாமல் உண்மையில் அது சாத்தியப்படாது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

இந்தியாவில் உள்ள தொழில்முறை சார்ந்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் போன்றவர்களின் உடந்தையில்லாமல் அதற்கான சாத்தியமில்லை. வாக்காளர்களைப் பொறுத்தவரை நிச்சயமாக அதற்காக அவர்கள் அவரைத் தண்டிக்க மாட்டார்கள் என்று சொல்ல முடியும் என்றே நினைக்கிறேன். இவ்வாறாக அதைச் சொல்லிப் பார்க்கலாம். குடிமைச் சமூகத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது, எடுத்துக்காட்டாக குர்கான் போன்றதொரு நகரத்திலே வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற தொழுகையைச் சிலரால் சீர்குலைக்க முடிந்திருக்கும் நிலைமையில் அதுகுறித்து தீவிரமான குடிமைச் சமூக எதிர்ப்பு என்று எதுவும் எழவில்லை என்ற உண்மை நாம் அதுபோன்ற செயலில் பங்கேற்கவில்லையென்றாலும், குறைந்தபட்சம் அதற்கு உடந்தையாக இருக்கிறொம் என்பதையே காட்டுகிறது.

கரண் தாப்பர்: அது குறித்த விவரங்களுக்கு சிறிது நேரத்தில் மீண்டும் வருகிறேன். முதலில் இன்னுமொரு பொதுவான கேள்வியை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். இவையனைத்தும் கடந்த ஏழு ஆண்டுகளில் தற்செயலாக நடந்திருக்கின்றனவா அல்லது அரசாங்கமும், மோடியுமே ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்குக் காரணமாக இருந்துள்ளனரா?

பிரதாப் பானு மேத்தா: இந்தக் கேள்வியை இரண்டு நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஒரு நிலையில் பார்க்கும் போது இந்த மாற்றங்கள் நீண்ட வரலாற்றின் விளைபொருளாக இருக்கின்றன. ஹிந்து தேசியம் பற்றி புரிந்து கொள்ள விரும்பினால், இந்திய நாகரிகத்தின் தன்மை, அடையாளம் குறித்து நடைபெற்றிருக்கும் கடந்த நூறு ஆண்டுகால உரையாடலை – குறிப்பாக. முஸ்லீம்களுக்கான இடம் குறித்து நடந்திருக்கும் உரையாடலை – பார்க்க வேண்டும். ஆக ஒரு நிலையில், அது மிக ஆழமாக அடியாழத்திற்குச் செல்கிறது. காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், ஒருவேளை 1950களிலேயே இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்த்திருக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்குமா என்ற அனுமானத்திலான கேள்வி மிகவும் முக்கியமான கேள்வியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

மோடியும், பாஜகவுமே பொறுப்பு என்று சொல்லும் வகையில் அவர்கள் அவற்றைச் சட்டப்பூர்வமாக்கவில்லை என்றாலும் சில வகைகளில் ஒவ்வொரு அரங்கிலும் அவற்றை அவர்கள் விளம்பரப்படுத்தி வந்திருப்பது காரணமாகலாம். ‘மறைந்திருக்கும் போக்குகள்’ என்று சொல்லப்படக் கூடிய வகையிலே அதுபோன்ற விஷயங்களை நம்பி, நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தை குலைக்கின்ற செயல்களில் ஈடுபடத் தயாராக இருப்பவர்கள் எப்போதுமே சமூகத்தில் பதினைந்து முதல் இருபது சதவிகிதம் பேர் இருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களே அவற்றைச் சட்டப்பூர்வமாக்குவது, குறிப்பிட்டவர்களிடம் அதற்கான ஆதரவை பெற்றுக் கொள்வது, மக்களை ஏமாற்றுவது என்று தொடர்ந்து இருந்து வருவதும் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இப்போது நாம் விவரங்களுக்கு வருவோம். முதல் கேள்வியில் நான் குறிப்பிட்டிருந்த அனைத்து விவரங்களையும் பற்றி பேச முடியாது என்பதால் எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்ற நான்கை மட்டும் முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன். தொடர்ந்து சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை இந்தியா நடத்தி வருவது குறித்தும், அரசாங்கங்கள் அடிக்கடி மாறுகின்றன என்பதிலும் எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை. ஆனாலும் நாடாளுமன்றம், அமைச்சரவை, தேர்தல் ஆணையம் போன்ற முக்கியமான அமைப்புகள் நெருக்கடி நிலைக்குப் பிறகு இருந்ததைக் காட்டிலும் மிகவும் பலவீனமாக இப்போது இருக்கின்றன என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலைமையை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பிரதாப் பானு மேத்தா: இந்திய ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. பெரும்பாலான மசோதாக்கள் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டு வருவதால், நாடாளுமன்றம் ஏறக்குறைய ரப்பர் ஸ்டாம்ப் போன்றாகி விட்டது. உச்ச நீதிமன்றம் கை கழுவிக் கொண்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்த நீதித்துறையும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொண்டுள்ளதால் சில வகைகளில் இப்போது இருக்கின்ற நிலைமை நெருக்கடி நிலையைக் காட்டிலும் மிக மோசமானதாகவே இருக்கிறது. அரசியலமைப்பு அடிப்படை நோக்கங்களின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க உச்சநீதிமன்றம் விரும்புவதே இல்லை. பத்திரிகைகள் – நிச்சயமாக அது பற்றி நீங்கள் ஏற்கனவே பேசிவிட்டீர்கள் – தேர்தல் ஆணையம் போன்றவையும் வலுவிழந்து விட்டன. மக்கள் கேள்வியெழுப்பக் கூடிய நிலையை தேர்தலின் நியாயத்தன்மை இன்னும் எட்டவில்லை என்றாலும் அங்கேயும் கவலை தரக்கூடிய அறிகுறிகள் தென்படவே செய்கின்றன.

கரண் தாப்பர்: இன்னும் சிறிது நேரம் கழித்து உச்சநீதிமன்ற விஷயத்திற்கு வருகிறேன். அதற்கு முன்பாக நமது அரசியலின் நிலையை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க விரும்புகிறேன். கட்டுப்பாடுகள் குறைந்து கொண்டே வருகின்ற வேளையில் பிரதமரின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நமது அரசாங்கத்தின் மிகப் பெரிய அதிகாரமிக்க நிறுவனமாகியிருக்கும் பிரதமர் அலுவலகத்தின் ஆதிக்கம், நரேந்திர மோடியைச் சுற்றி வெளிப்படுகின்ற ஆளுமை வழிபாட்டு முறை பற்றி இப்போது பேச விரும்புகிறேன். இந்தக் கலவையானது அவரை, நமது பிரதமரை மிகவும் ஆதிக்கம் செலுத்துகின்ற நபராக மாற்றியிருப்பது எந்த அளவிற்கு கவலையளிக்கின்றது?

பிரதாப் பானு மேத்தா: கடந்த காலத்திலும் குறிப்பாக இந்திரா காந்தி போன்ற ஆளுமை வழிபாட்டு முறைகள் நம்மிடம் இருந்தன. உண்மையில் ஜனநாயக சுய வெளிப்பாட்டுடன் குறிப்பிட்ட அளவிற்கு கலாச்சாரம், ஆளுமை கொண்ட ஒரு வகையான நீண்ட பாரம்பரியம் நமக்கு இருக்கிறது.

நம்பமுடியாத அளவிற்கு இருக்கின்ற தன்னுடைய ஜனரஞ்சகத்தையும், அதிகாரத்தையும் அவர் [மோடி] ஒருவேளை நிறுவனங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகிறார் என்றால், தன்னுடைய எந்தவொரு முன்னெடுப்பிலும் எந்த வகையிலும் அவர் இந்தியாவிற்கு நல்லதைச் செய்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதாகவே இருக்கிறது. மோடி ஓர் இயல்பான ஜனநாயகவாதி அல்ல. பெரும்பாலும் அவரது உள்ளுணர்வு ஊக்குவிப்பதைக் காட்டிலும் கருவறுப்பதாகவே இருக்கிறது. அவரது நோக்கம் வகுப்புவாதத்திற்கு ஆதரவாக குறிப்பிட்டவர்களின் ஆதரவைப் பெறுவதாக மட்டுமே இருக்கிறது. நமது குடிமைச் சமூகத்தில் ஒரு வகையான நச்சு பரவியுள்ளது. சமீப காலங்களில் அது முன்னெப்போதுமில்லாத வகையில் அதிகமாக இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆளுமை வழிபாட்டு முறைகள் நீண்ட காலத்திற்கு ஆட்சி செய்வது கடினம் என்று வரலாற்றிலிருந்து அறிந்திருக்கின்ற அதன் மறுபக்கத்தையும் இந்தக் கட்டத்தில் நாம் கவனிக்க வேண்டியதுள்ளது.

அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மூலமாக நடைபெற்று வந்த அரசியல் இப்போது விவசாயிகள் போராட்டத்தில் நாம் பார்த்ததைப் போல தெருக்களுக்கு வந்திருக்கிறது. நம்மால் இப்போது குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம், விவசாயிகள் இயக்கம் என்று இந்திய குடிமைச் சமூகத்தில் காண முடிகிறது. ஜனநாயக ஆலோசனை போன்ற செயல்முறைகள் எதுவுமே இல்லாமல் தனது அலுவலகத்தை மட்டும் மையமாகக் கொண்ட அரசியலால் மக்களுக்குத் தேவையான நிர்வாகத்தை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதை பிரதமர் சில வழிகளில் ஒப்புக் கொள்ள வேண்டியதாகி இருக்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: தனக்கிருந்த பிம்பத்தில் மோடி சரிவை சந்தித்திருக்கிறாரா? விவசாயிகளிடம் சரணடைந்த விதத்தைக் கொண்டு இதை விட வலுவாக அதை என்னால் எவ்வாறு சொல்ல முடியும்…

பிரதாப் பானு மேத்தா: தனக்கென்றுள்ள ஆதரவு தளத்தில் தன் பிம்பத்தின் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அவர் சந்தித்துள்ளார் என்றே நினைக்கிறேன். அவருடைய ஆதரவாளர்கள் இதுபோன்ற போராட்டங்களைத் துல்லியமாக அடக்குவதற்காகவே அவரைத் தேர்ந்தெடுத்ததாக நினைப்பவர்களாக இருப்பதால், அவரது ஆதரவுத் தளம் சற்று ஏமாற்றமடைந்திருப்பதாகவே கருதுகிறேன். அவ்வாறு நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் அதனாலேயே அவருடைய அடித்தளம் முற்றிலுமாகச் சிதைந்து விடப் போவதில்லை. எனவே அந்தப் பாதிப்பு நீண்ட கால அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கப் போவதில்லை என்றே கருதுகிறேன்.

கரண் தாப்பர்: அவரது ஆதரவாளர்களின் பார்வையில் வெல்ல முடியாதவர் என்பதாக அவருக்கென்றிருந்த பிம்பத்தின் ஒளி சற்றே மங்கியுள்ளதா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். மிகச் சரிதான். ஆனால் அவர் அதை எங்காவது ஈடுகட்ட முயற்சிப்பார் என்பதால் அது ஒரு ஆபத்தான தருணமாகவே மாறக் கூடும். ஆனால் அவரது உத்தி என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

கரண் தாப்பர்: ஜனநாயகத்தில் அரசாங்கம் மற்றும் பிரதமரின் அதிகாரம், செல்வாக்கை அடிப்படையாகக் கட்டுப்படுத்துகின்றவையாக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. இரண்டாவதாக அவ்வாறு கட்டுப்படுத்துவது உண்மையில் ஆளும் கட்சியில் இருக்கும் எம்.பி.க்கள் தான்… ‘எங்களுக்கு உடன்பாடில்லை… இதைச் செய்வதற்கு எங்களுக்கு விருப்பமில்லை’ என்று எதிர்த்து நின்று சொல்கின்ற திறன் அவர்களிடம் இருக்குமானால்… போரிஸ் ஜான்சனின் செயல்திறனை, பிரதமராக அவரது பதவியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அளவிற்கு எம்.பி.க்கள் கீர் ஸ்டார்மர், டோரி எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதைப் பிரிட்டனில் இந்த வாரம் பார்த்தோம். இந்தியாவில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. எனவே மோடியால் தனது கட்சி, எதிர்க்கட்சி என்று அனைவரின் மீதும் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது.

பிரதாப் பானு மேத்தா: கரண் நான் அந்தக் கேள்வி கூடுதலாக சிந்திக்கத் தக்கது. நேர்மையாகச் சொல்வதென்றால், இந்தியாவில் கட்சித் தாவல் தடைச் சட்டம் தான் பெரும் பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் அது தனிப்பட்ட எம்.பி.க்கள் அல்லது சிறிய குழுக்களாக இருக்கின்ற எம்.பி.க்களின் அதிகாரத்தைக் குறைத்திருக்கிறது.

கரண் தாப்பர்: அது சர்வாதிகாரிகளாக கட்சித் தலைவர்களை மாற்றியிருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: மிகச் சரியாகச் சொன்னீர்கள். போதுமான எண்ணிக்கையில் இருந்தாலொழிய அவர்களால் கிளர்ந்தெழ முடியாது. கிளர்ந்து எழுவதற்கு கட்சியில் பாதிப் பேர் வேண்டும் என்பதால் கூட்டு நடவடிக்கை உண்மையில் மிகவும் கடினமாகவே உள்ளது. அது ஒரு கட்டமைப்பு சார்ந்த பிரச்சனையாக உள்ளது.

இன்னொரு பிரச்சனையும் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று அனைவரும் நினைக்கும் நேரத்தில் – குறைந்தபட்சம் அது இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொள்வதாகச் சொல்கின்ற போது – எதிர்க்கட்சிகள் உண்மையில் போதுமான அளவிற்கு ஒன்றுபடவில்லை. இவ்வாறான தருணத்தில் குறுகிய காலக் கருத்து வேறுபாடுகளைப் புறக்கணித்து அவர்களால் ஒன்று சேர முடியாது என்றால், இந்திய ஜனநாயகத்திற்கான மாபெரும் போரில் எதிர்க்கட்சிகளுக்கான பங்கு கேள்விக்குறியாகவே இருக்கும்.

கரண் தாப்பர்: இதுவரையிலான நேர்காணலின் சுருக்கமாக, கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் மோடியின் கீழ் ஜனநாயகம் நலிவடைந்து விட்டது, பிரதமர் எதேச்சாதிகாரியாக மாறியுள்ளார், விவாதங்கள் நிறுத்தப்பட்டு விட்டன, பாராளுமன்றம் செயல்படவில்லை, தேர்வுக் குழுக்கள்கூட செயல்படவில்லை என்று சொல்லலாமா? இந்தியாவின் ஜனநாயகம் நலிவடைந்து, சுருங்கி விட்டதா?

பிரதாப் பானு மேத்தா: மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதை முழுமையாக ஒப்புக் கொள்கிறேன். ஆம். நிலைமை முற்றிலும் அப்படியாகத்தான் இருக்கிறது.

கரண் தாப்பர்: இது அவரது [மோடி] அரசியல் நாட்காட்டியில் உள்ள ஒரு மைனஸ் ஆகும்.

பிரதாப் பானு மேத்தா: சரிதான்.

கரண் தாப்பர்: உங்களிடம் கொண்டு வர விரும்பும் இரண்டாவது விஷயம் கருத்து வேறுபாடு. முதலில் ஊடகங்களின் மீது கவனம் செலுத்தலாம். பிரதமருக்கு சவால் விடும் வகையில் கேள்வி எழுப்புவதற்கு ஊடகங்கள் ஏதாவது செய்கின்றன என்று நினைக்கிறீர்களா? இந்தியாவில் புலனாய்வுப் பத்திரிகைகள் நடைமுறையில் இல்லாமலே போய் விட்டன என்று கூறிய தலைமை நீதிபதி ‘நமது தோட்டத்தில் உள்ள அனைத்தும் ரோஜாக்களாக இருப்பதாகத் தெரிகிறது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பிரதாப் பானு மேத்தா: உச்சநீதிமன்றம் போதுமான சட்டப் பாதுகாப்பை பேச்சுரிமைக்கு வழங்காததால், அந்த உரிமை ஓரளவிற்கு இல்லாமலே போயிருக்கிறது. நீதிமன்றம் என்ற அந்த நிறுவனம் அதற்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்றே நான் சொல்வேன். ஆனால் இந்திய ஊடகங்களுக்கான சவால் என்ற பிரச்சனை உண்மையில் மிக மோசமான நிலையில் இருப்பதாகவே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் வலுக்கட்டாயமாக அரசாங்கத்தை எதிர்த்து பத்திரிகைகள் நின்றிருக்காத வரலாற்று நிகழ்வுகள் உள்ளன என்ற பொருளில் பார்த்தாலும் அது இன்றைக்கு மிகவும் மோசமாகவே உள்ளது. தங்களுடைய வருமானத்திற்காக ஓரளவிற்கு ஊடகங்கள் அரசாங்கத்தையே சார்ந்திருக்கின்றன. இந்திய ஊடகங்களைப் பொறுத்தவரை அந்த நிலைமை எப்போதும் இருந்தே வந்திருக்கிறது. ஆனாலும் இந்திய ஊடகங்கள் இப்போது வெறுப்பை, பாரபட்சத்தை வெளிப்படையாகப் பரப்பி வருவதுதான் கூடுதல் கவலையளிப்பதாக இருக்கிறது.

ஹிந்தி செய்தித்தாள்களை வாசித்தால் – ஒரு சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலான ஹிந்தி செய்தித்தாள்கள் – அவற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட்டவர்களின் ஆதரவைத் திரட்டுகின்ற வகையிலான செய்திகள் நிறைந்திருப்பதைக் காண முடியும். அதிகாரப்பூர்வமாக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைப் பெற்றிருப்பதாகத் தோன்றுகின்ற தொலைக்காட்சி சேனல்களைப் பார்க்கும் போது, அவற்றில் பெரும்பாலானவை சிறுபான்மையினருக்கு எதிராக மறைமுகமாக அல்லது வெளிப்படையாகவே வெறுப்பைப் பரப்பி வருவது தெரியும். ஒருவகையில் ஊடகங்கள் தங்களுடைய கடமையைக் கை கழுவி விடுவது அல்லது குறைந்த பட்சம் அரசாங்கத்தை எதிர்த்து நிற்காமல் இருப்பது என்று வித்தியாசமான வழியில் இந்திய ஜனநாயகத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்ற பாத்திரத்தை வகித்து வருகின்றன.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆக மோடியை ஆதரிக்கின்ற ஊடகங்கள் மோடியை விமர்சிக்காமல் இருப்பது மட்டுமல்லாது, அவர் அடையாளப்படுத்தி வருகின்ற வகுப்புவாதம், எதேச்சாதிகாரத்தையும் அவை முன்னெடுத்து வளர்த்து வருகின்றன.

பிரதாப் பானு மேத்தா: நிச்சயமாக. ஒரு கட்டத்தில் தனது பதவியை விட்டு மோடி விலகிச் சென்று விடலாம். ஆனாலும் இப்போது நடந்திருக்கும் வகுப்புவாத ஊடுருவலும், ஊடகங்கள் அதனை வெளிப்படையாக சட்டப்பூர்வமாக்கி இருப்பதும்தான் இந்திய ஜனநாயகத்திற்கும், இந்திய குடிமைச் சமூகத்திற்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற மிகப் பெரிய சேதமாக இருக்கப் போகிறது. அது முன்னெப்போதுமில்லாத ஒன்றாக இருக்கின்றது.

கரண் தாப்பர்: நாட்டின் பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாக ஊடகங்கள் நம்புவதன் பிரதிபலிப்பாக அது இருக்கின்றதா? ஒருவகையில் மோடி விரும்புவதைப் போல மறைவான வகுப்புவாதத்திற்காக அவை அலைக்கழிகின்றனவா?

பிரதாப் பானு மேத்தா: உண்மையில் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிப்பது மிகவும் கடினமானது. அதாவது அதை எவ்வாறு கண்டறிகிறோம் என்பதில் தெளிவிருப்பதில்லை. உங்களுடைய இரண்டு முன்மொழிவுகளுமே உண்மை என்றே கூறுவேன். அதாவது ஒரு மறைவான போக்கு இருந்து வருகிறது. ஒரு வகையில் தகவல் ஒழுங்கு மற்றும் ஊடக நிறுவனங்கள் அதைப் பெரிதாக்கும் போது, அது தன்னிறைவு கொண்ட தீர்க்கதரிசனமாக மாறுகின்றது. ஓரளவிற்குப் போதுமான மக்கள் இவ்வாறு நினைக்கிறார்கள் என்று நினைக்கின்ற போது, அதிக அளவிலான மக்கள் அவ்வாறு நினைக்க ஆரம்பிக்கிறார்கள்.

கரண் தாப்பர்: பெரிதாக்குகின்றன என்ற குற்றச்சாட்டிற்கு ஊடகங்கள் உள்ளாகின்றனவா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம்.

கரண் தாப்பர்: அரசை இன்னும் விமர்சித்து வருகின்ற சிறிய எண்ணிக்கையிலான ஊடகங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை ஒரு கணம் நீங்கள் பாருங்கள். மோடியை மட்டும் விமர்சிக்காமல் அரசையும் சேர்த்து விமர்சிப்பவர்கள் மீது ட்ரோல்களின் பட்டாளமே இறங்கி விடுகிறது. மாநில அரசுகளும் 2016 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தங்களால் சுமத்தப்பட்டுள்ள தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளை 165% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகள் பத்திரிகையாளர்கள், கார்ட்டூனிஸ்டுகள், வரலாற்றாசிரியர்கள், மாணவர்கள், நடிகர்கள், சில நேரங்களில் இயக்குனர்கள், சிறு குழந்தைகளுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.

நகைச்சுவையாக இவ்வாறு சொல்லப்படுவதுண்டு – இந்தியாவில் மிகவும் முக்கியமாகத் தேவைப்படுவது பேசுவதற்கான சுதந்திரம் அல்ல; நீங்கள் ஏதாவது விமர்சித்துக் கூறும் போது, உங்களைக் கைது செய்வார்கள். நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டி வரும் என்பதால் பேசி முடித்த பிறகு இருக்கின்ற சுதந்திரமே மிகவும் முக்கியம் என்று மக்கள் சொல்வதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பிரதாப் பானு மேத்தா: முறையாக நெருக்கடி நிலையை அறிவிக்கவில்லை என்பது போன்ற சில வழிகளில் இந்த அரசாங்கம் மிகவும் புத்திசாலித்தனமாகவே இருந்திருக்கிறது. அதனால் பெரிய அளவில் கைதுகள் இருக்கவில்லை. ஆயினும் உங்கள் அனைவராலும் சுட்டிக் காட்டப்படுபவை அனைத்துமே மிகச் சரியாக அரசாங்கத்தை மிகவும் திறனுள்ளதாக்குகின்ற வகையிலேயே இருக்கின்றன. அவ்வப்போது​​ பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், குடிமைச் சமூகம், நடிகர்கள் போன்றோரை மிரட்டக்கூடிய வகையில் அரசாங்கம் சரியான சமிக்ஞைகளை அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

மீண்டும் நான் உச்சநீதிமன்றப் பிரச்சனைக்குச் செல்கிறேன். அது மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு கட்டத்தில் தாங்கள் எதிர்பார்க்கக்கூடிய அளவிற்கு நியாயம், நீதியை வழங்கக்கூடிய வேறு நிறுவனங்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளும் போது ஊடகங்கள், தனியார் துணிவுடன் முடிவெடுக்கக் கூடும்.

கரண் தாப்பர்: உச்சநீதிமன்றத்தின் தோல்வி, அது ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காக நிற்க மறுப்பது போன்றவற்றால் ஊடகவியலாளர்கள் எதேச்சாதிகாரம் கொண்ட தலைவர்களால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களாகி விடுகிறார்கள்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: பிணை கட்டாயம் கிடைத்து விடும் என உங்களால் எதிர்பார்க்க முடியாது. ஆட்கொணர்வு மனுவில் நீங்கள் மிகவும் சாதாரணமாக விசாரணையை எதிர்பார்க்க முடியாது. இந்திய அரசியலில், காஷ்மீரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முறையில் பத்திரிகையாளர்கள் மீது ஊபா வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளன. அந்த முறை நாடு முழுவதும் அதிக அளவிலே பிரதிபலிக்கப் போகிறது. அந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்து உச்சநீதிமன்றம் விரைவில் – ஒருவேளை ஓரிரண்டு ஆண்டுகளுக்கு அது வலியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றாலும் குறைந்தபட்சம் ஒரு கட்டத்தில் நீதி வழங்கபப்டுவதை எதிர்பார்க்கலாம் – அவற்றை முடித்து வைத்து இந்தியாவில் நீதித்துறை இன்னும் இயங்கி வருகிறது என்பதை இந்த உலகிற்கு நிரூபித்துக் காட்ட முடியும்.

கரண் தாப்பர்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் போன்றவர்கள் போரின் புதிய எல்லையாக இப்போது குடிமைச் சமூகம் இருக்கிறது என்று காவல்துறையினரிடம் பகிரங்கமாகச் சொல்ல முடிந்திருப்பது உச்சநீதிமன்றத் தலையீடு இல்லாததன் விளைவுகளில் ஒன்றாகவே இருக்கிறது. அதுபோன்ற அணுகுமுறை குடிமைச் சமூகம், எதிராளிகள், கருத்து வேறுபாடு கொண்டவர்களை எதிரிகளாக அரசாங்கம் அல்லது அதன் சிந்தனையாளர்கள் வித்தியாசமாகச் சிந்தித்துப் பார்க்கத் தொடங்கியிருப்பதைப் பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: அது வெறுமனே தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது போன்றதொரு அறிக்கை அவர்களுடைய சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருப்பதாகவே நினைக்கிறேன். அந்த சித்தாந்தத்தின் முக்கிய கூறுகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் போது – ஒற்றைச் சிந்தனையுடனே மக்கள் பேச வேண்டும். அந்த ஒற்றைச் சிந்தனையிலிருந்து யாராவது விலகிச் செல்லும் போது, ‘மக்களிடம் நியாயமான கருத்து வேறுபாடுகள் உள்ளன; பலவிதமான கண்ணோட்டங்களுடன் இருப்பது சிக்கலானது அல்ல’ என்பதாக இல்லாமல் மக்களுக்கு எதிரிகளாக அவர்கள் இருக்கிறார்கள் என்றே அவர்களுடைய விளக்கம் இருக்கிறது.

அது ஒரு வகையில் கண்காணிப்பைச் சட்டப்பூர்வமாக்கித் தருவதாகவே உள்ளது. பெகாசஸ் ஊழலையும் மிக விரைவாகக் கையாண்டிருக்கலாம் என்றாலும் உச்சநீதிமன்றம் ஒரு குழுவை அமைப்பது என்று பெரும் நேரத்தை வீணடித்தது. ஆனால் இப்போது இந்திய குடிமைச் சமூகத்தின் மீதான போர் – பலவீனப்படுத்துகின்ற போரே ஆளும் கட்சியின் மேலாதிக்கச் சித்தாந்தமாக உள்ளது.

கரண் தாப்பர்: இந்த ஆட்சி உண்மையில் எதிராளிகளை, மாற்றுக் கருத்து கொண்டவர்களை, வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட மக்களை எதிரிகளாகவே பார்க்கிறது என்று சொல்ல வருகிறீர்கள்.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். தங்களுடன் உடன்படாதவர்களைக்கூட நாட்டுக்கு நல்லது என்ன என்பதைக் கண்டறிய முயற்சி செய்கிற குடிமக்களாகக் கருதுவதன் மூலமே பொதுவான நிறுவனத்தில் ஜனநாயகம் தழைக்கும் என்பதால் இதுபோன்ற செயல்கள் அவர்களை ஜனநாயகமற்றவர்களாகவே காட்டுகின்றன.

கரண் தாப்பர்: ஆனால் அதுபோன்றவர்களை கருத்து வேறுபாடு கொள்ளும் உரிமை கொண்ட குடிமக்களாக மோடி ஆட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. நம்மிடையே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை இல்லை என்றும் எதிர்ப்பு காட்டுபவர்களை எதிரிகளாகக் கருதி தரமற்ற வகையில் அவர்களை நடத்துகின்ற நயவஞ்சகமாகத் திணிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலை நம்மிடையே உள்ளது என்றும் கூறிய போது இதைத்தான் நினைத்தீர்கள் என்று நினைக்கிறேன்.

பிரதாப் பானு மேத்தா: இன்னும் ஒரு பொருளிலும் அது நயவஞ்சகமாகத் திணிக்கப்பட்டுள்ள நெருக்கடி நிலையாக இருக்கிறது. அதாவது நிறுவன அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் அது எவ்வித தயக்கமும் காட்டவில்லை. அந்த அதிகாரம் நெருக்கடி நிலைக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதைப் போன்று பயன்படுத்தப்படவில்லை. நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து விட்டு தேவைப்படுகின்ற போதெல்லாம் அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை மறுத்து விடலாம். அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுவதில் எவ்வித தயக்கமும் இல்லாமல் மக்களைக் கைது செய்யலாம் என்பதாக இருக்கிறது.

கரண் தாப்பர்: இச்சூழலில் பெகாசஸ் வெளிப்பாடுகள் எந்த அளவிற்கு கவலையளிக்கின்றன? அரசாங்கம் தன்னுடைய பதிலில் அதைத் தெளிவாகத் தவிர்த்திருக்கின்றது – உண்மையாகச் சொல்வதென்றால் அது நேர்மையற்று இருந்திருக்கிறது என்றே கூறுவேன். அது குறித்து நீங்கள் எந்த அளவிற்கு கவலைப்படுகிறீர்கள்?

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: பெகாசஸ் வெளிப்பாடுகள் கவலையளிக்கின்றன என்றாலும் அது குறித்து நாம் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை என்றே சொல்வேன். வெளிப்படையாக நேர்மையாகச் சொல்வதென்றால், இந்த அரசாங்கம் மட்டுமல்லாது, கண்காணிப்புக்கும் ஜனநாயகத்திற்கும் இடையில் உருவாகியுள்ள பதட்டத்தில் உண்மையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயகங்களும் தோற்றே இருக்கின்றன. அதாவது பிரிட்டன், அமெரிக்காவில் உள்ள அரசாங்கங்களும் தங்கள் குடிமக்கள் மீதே உளவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளன என்று சொன்னாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

கரண் தாப்பர்: நான் இந்த அரசாங்கம் மாட்டிக் கொண்டிருப்பதாகவே சொல்ல வருகிறேன். அரசியல் எதிரியாக இருக்கக்கூடிய ராகுல் காந்தியின் நண்பர்களில் இருந்து பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்த உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய பெண்மணிகள் மற்றும் சாதாரண மக்கள் என்று அரசுக்கு எதிராகப் பல்வேறு வகையில் பலரும் பரவியிருப்பது குறித்து நீங்கள் கவலைப்படவில்லையா?

பிரதாப் பானு மேத்தா: கண்காணிப்பு மிகுந்த கவலையளிப்பதாகவே இருந்தது. அது உள்ளார்ந்த கவலையை ஏற்படுத்தியதாக, சில வழிகளில் வெளிப்படையாக இடைஞ்சல் செய்வதாகவும் இருந்தது. ஏனெனில் குடிமக்கள் என்ற நமக்கான தகுதியைக் குறைப்பதாக அது இருந்தது. தனியுரிமை என்பது என்னிடமுள்ளதை மறைத்துக் கொள்வதாக மட்டுமே இருக்கவில்லை. அது அடிப்படை உரிமை சார்ந்ததாக இருக்கிறது. அரசு அதனுள் ஊடுருவது ஆச்சரியமளிக்கவே செய்கிறது. ஜனநாயகத்தின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால் – எடுத்துக்காட்டாக, 1960களில் நடைபெற்ற குடிமை உரிமைகள் இயக்கத்தில் எஃப்.பி.ஐயின் பங்கு ஒருவகையில் இது போன்றே இருந்தது. ஜனநாயக அரசுகள் விரிவான கண்காணிப்புக்குத் தயங்குவதில்லை என்பதற்கான எச்சரிக்கையாகவே அது இருந்திருக்க வேண்டும். எந்த அளவிற்கு அவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதுதான் இங்கே எழுகின்ற கேள்வியாக உள்ளது.

கரண் தாப்பர்: கண்காணிப்பு நடக்கிறதென்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர இந்தியாவில் அது நடப்பதற்கான வாய்ப்பில்லை என்று நினைத்ததாலேயே அதுகுறித்து நாம் அதிர்ச்சியடைந்தோம் இல்லையா?

பிரதாப் பானு மேத்தா: உண்மையில் நான் ஆச்சரியப்படவில்லை. அதாவது அவ்வாறு நடக்கிறது என்பது குறித்து யாராவது ஆச்சரியப்பட்டிருப்பார்களா என்பது குறித்தே நான் ஆச்சரியப்படுகிறேன். உண்மையாகச் சொல்வதென்றால் அவர்கள் பிடிபட்டதுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

கரண் தாப்பர்: முன்னர் நிறுத்திக் கொண்ட விஷயத்திற்கு இப்போது வருகிறேன். அடிக்கடி நீங்கள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதுதான் கவலைக்குரிய மூன்றாவது பகுதியான நீதித்துறை – குறிப்பாக உச்சநீதிமன்றம். அதை இவ்வாறு சொல்லலாம் என்று நினைக்கிறேன். 1970களின் நடுவில் ஜபல்பூர் மாவட்ட துணை நீதிபதி வழக்கிற்குப் பிறகு, இந்திய மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்கு ஆதரவாக மிகப் பெரிய அரணாக உச்சநீதிமன்றம் இருக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால் சமீப காலங்களில் அடிப்படை அரசியலமைப்பு முக்கியத்துவம் உள்ள பிரச்சனைகள், காஷ்மீர் பிரச்சனை, தேர்தல் பத்திரங்கள், ஆட்கொணர்வு, இன்னும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முக்கியமான பிரச்சனைகளில் வேண்டுமென்றே வழக்குகளை விசாரிக்க மறுத்து உச்சநீதிமன்றம் பிரச்சனைகளைத் தள்ளிப் போட்டிருக்கிறது. அந்த வழக்குகளின் விளைவுகள் அரசாங்கத்தைச் சங்கடப்படுத்தக்கூடும் என்று கருதியதால் அவ்வாறு செய்திருக்கலாம். அரசியலமைப்பு தொடர்பான சட்டப் பிரச்சனைகளில் நீதிமன்றம் தன்னுடைய கடமையைத் தட்டிக் கழித்திருப்பது எந்த அளவிற்கு கவலையளிப்பதாக இருக்கிறது?

பிரதாப் பானு மேத்தா: அது கவலையளிப்பதாகவே இருந்தாலும் அதைப் பற்றிய சற்று நுணுக்கமான வரலாற்றுப் பார்வை நமக்குத் தேவைப்படுகிறது. இந்திய நீதித்துறை பற்றிய எனக்கிருக்கும் அறிவார்ந்த பார்வையைக் கொண்டு அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கும், அரசாங்கத்தைப் பொறுப்பாக்குவதற்கும் இந்திய நீதித்துறையிடம் உள்ள திறன் மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே நான் கூறுவேன். நீதித்துறையின் செயல்திறன் மிக மோசமாக இருக்கிறது. நடைமுறையில் அது அரசியல் ஸ்தாபனத்தை எதிர்த்து ஒருபோதும் நின்றிருந்திருக்கவில்லை.

எடுத்துக்காட்டாக ஜபல்பூர் மாவட்ட துணை நீதிபதி வழக்கில் ஏற்பட்ட அதன் தோல்விக்கான செயல்திறன் இழப்பீடாகவே பொதுநல வழக்கு குறித்த புரட்சி இருந்தது. ஆனால் உண்மையில் அதிலும் கூட வழங்கப்பட்ட தீர்வுகளைக் காட்டிலும் அதன் அறிவிப்புகளே மிகவும் பிரமாண்டமாக இருந்திருக்கின்றன. அதுபோன்றதொரு வரலாறு நீதித்துறைக்கு இருக்கின்றது.

கரண் தாப்பர்: அப்படியென்றால் நாம் நீதிமன்றத்தை கூடுதலாகவே நம்பி பாராட்டியிருக்கிறோமா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு நீதித்துறையை நம்பியிருக்கக் கூடாது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நீதித்துறையை நாடினால், ஏற்கனவே அந்தப் போரில் தோற்று விட்டீர்கள் என்றே அர்த்தம்.

அந்த அளவுகோல்களின்படி பார்த்தாலும்கூட, கடந்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் ஒரு வகையில் அடிப்படை அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து விலகி நின்றிருப்பது முதலாவதாகத் தெரிகிறது. இரண்டாவதாக தன்னுடைய கொலீஜியம் அமைப்பு செயல்பாடு மூலமாக நீதிபதிகள் பதவி உயர்வு பெறும் விதம், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படும் விதம் போன்ற விவகாரங்களில் நிறுவனங்கள் நடந்து கொள்ள வேண்டிய விதத்திலிருந்து விலகி மிகவும் மோசமாக நடந்து கொண்டிருப்பது நீதிமன்றம் நியாயமாக நடந்து கொள்ளும் என்பதைக் கூற முடியாததாக்கி இருக்கிறது.

கரண் தாப்பர்: ஆட்கொணர்வு பற்றி இப்போது எடுத்துக் கொள்ளலாம். அது எந்தவொரு ஜனநாயகத்திலும் எந்தவொரு குடிமகனுக்கும் இருக்கின்ற மிக முக்கியமான அடிப்படை உரிமையாகும். சமீப காலங்களில் நீதித்துறையின் செயல்திறன் முரணுடனே இருந்து வருகிறது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் அர்னாப் கோஸ்வாமிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், ஓராண்டிற்கும் மேலாக குற்றப்பத்திரிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் சித்திக் கப்பன் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நீங்கள் குறிப்பிட்ட காஷ்மீர் விஷயத்தில், நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு மனு மீதான வழக்குகள் விசாரிக்கப்படவே இல்லை. சில வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே காலாவதியாகியுள்ளன. கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கானவர்களின் அவலத்தை உச்சநீதிமன்றம் கண்டு கொள்ளாதிருந்தது. இந்திய குடிமக்கள் மீது இந்த நீதிமன்றத்திற்கு எந்தவித அக்கறையும் இருக்கவில்லை என்றே தெரிய வந்திருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: தாராளவாத அரசியலமைப்பு ஜனநாயகத்தின் தலைமை நீதிமன்றமாக இருக்கின்ற உச்சநீதிமன்றம் தனது கடமைகளைத் துறந்து விடக் கூடாது என்ற கருத்தை மீறியிருக்கிறது. நீங்கள் சொன்னதைப் போல எப்போதாவது அது பிறப்பிக்கின்ற உத்தரவுகளும்கூட ஒரே போன்றதாக இருப்பதில்லை. அர்னாப் கோஸ்வாமி விவகாரத்தில் நீதித்துறை வழங்கிய தீர்ப்பு உங்களுக்குத் தெரியும். வேறெதற்கும் முன்னுதாரணமாக அந்த தீர்ப்பு அமைந்திருக்கவில்லை. பிணை வழங்குவது, பிணையை நிறுத்தி வைப்பது போன்ற நடைமுறைகள் இப்போது மேலும் மோசமாகி இருக்கின்றன.

எனவே தரப்படுகின்ற அழுத்தத்தாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றது என்ற கருத்தை உதறித் தள்ளி விட முடியாது. ஒருவேளை அரசாங்கத்திற்காக உச்சநீதிமன்றத்தில் இருக்கின்ற உண்மையான விசுவாசிகள் அதன் சித்தாந்தத்திற்கு மாறியவர்களாக இருப்பதாலும் அவ்வாறு நடந்திருக்கலாம். எவ்வாறாக இருந்தாலும் தான் செய்ய வேண்டிய பணிகளை உச்சநீதிமன்றம் செய்திருக்கவில்லை என்பதே உண்மை.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: உச்சநீதிமன்றம் நம்மை ஏமாற்றுகின்றதா?

பிரதாப் பானு மேத்தா: அவ்வாறு சொல்லலாம்.

கரண் தாப்பர்: சற்று முன்பு நீங்கள் விமர்சித்த கொலீஜியம் அமைப்பின் கீழ் நீதிபதிகளுக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலுள்ள உறவு பற்றி என்ன சொல்வீர்கள்? 2014 செப்டம்பரில் கோபால் சுப்ரமணியம் தொடங்கி, பலமுறை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களை இந்த அரசாங்கம் நிராகரித்துள்ளது அல்லது கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரங்கள் எதிலும் தன்னுடைய நியமனங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. உண்மையில் அந்த நியமனங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதை நியாயம் என்று கருதியே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருந்துள்ளது. அதற்கு மாறாக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதிகள் பலருக்கு அரசாங்கம் வேலைகளை வழங்கி வருகிறது. நீதிபதிகள் பலரும் பகிரங்கமாக பிரதமரைப் புகழ்ந்து பேசத் துவங்கியுள்ளனர். இருவருக்குமிடையே தங்களுக்குச் சாதகமாக இருந்து வருகின்ற நெருக்கமான உறவு கவலையளிக்கும் வகையில் இருக்கின்றதா?

பிரதாப் பானு மேத்தா: தனக்கான நீதிபதிகளை கொலிஜியம் தேர்வு செய்து வந்த போதிலும் – அதுகுறித்த வரலாற்றுக் கண்ணோட்டத்தைக் கொஞ்சம் சொல்கிறேன் – சற்றே தளர்வாகச் சொல்வதானால், அது எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை நோக்கி ஒரு கண்ணை வைத்துக் கொண்டேதான் இருந்திருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ‘தேசத்தின் மீட்பர்’ என்று புகழ்ந்து நீதிபதி பி.என்.பகவதி எழுதியிருந்த நம்ப முடியாத அந்த வெளிப்படையான கடிதம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஆக இன்று நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பவற்றிற்கு ஏற்கனவே முன்மாதிரிகள் இருக்கின்றன. ஆனால் இப்போது அதன் அளவு, தீவிரம் மிகவும் மோசமாக மாறியிருக்கிறது. இப்போதைய அரசு நிர்வாகி அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்திய ஒருவரின் பெயரை உச்சநீதிமன்றம் கைவிடுகின்ற வரை நூற்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளின் நியமனத்தை பதினாறு மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்திருக்கிறார். அது இதுவரையிலும் நாம் கண்டிராத அளவிலான செயலாகும். எடுத்துக்காட்டாக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த கோகாயின் நடத்தையை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, நீதிபதியாக இருந்த ஒருவர் தன்னுடைய சொந்த காரணத்தை முன்னிறுத்தி செயல்பட்ட நிகழ்வை உலகில் உள்ள எந்தவொரு நீதித்துறையின் வரலாற்றிலும் காண்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும். நீதி குறித்து இருக்கின்ற அடிப்படை அனுமானங்கள் அனைத்தும் முற்றிலுமாகப் புறந்தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

கரண் தாப்பர்: நீதிபதி கோகாய் பின்னர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக்கப்பட்டார். அவருக்கு முன்பாக நீதிபதி பி.சதாசிவம் கேரளாவின் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டிருந்தார்.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். இதுபோன்ற நடைமுறை இன்னும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இப்போது தங்கள் அமர்வுகளிலேயே நீதிபதிகள் வெளிப்படையாக பிரதமரைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கிடையே நெருக்கமின்மை இல்லாமல் போயிருக்கிறது இல்லையா?

பிரதாப் பானு மேத்தா: நெருக்கமின்மை இருக்கவில்லை என்பது மட்டுமல்லாது, அரசாங்கம் தன்னுடைய சித்தாந்தப்படி செய்வதை அவர்கள் இப்போது சட்டபூர்வமாக்குவதும் நடந்து கொண்டிருக்கிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி அருண் மிஸ்ரா வெளிப்படையாக, கருத்தியல் ரீதியாக அரசாங்கம் செய்வதைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறார்.

கரண் தாப்பர்: அரசாங்கத்தை சங்கடப்படுத்தக் கூடும் என்று உணருகின்ற அரசியலமைப்பு முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை. அதுபோன்று எழுகின்ற சங்கடங்களைத் தவிர்ப்பதற்கான வழியாகவே அது இருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: சங்கடத்தைத் தவிர்ப்பதற்கான வழியாக அது இருக்கின்ற அதே நேரத்தில் அதிகாரங்களை நிறைவேற்றுபவர்களைப் பொறுப்பேற்க வைக்க மறுப்பதாகவும் உள்ளது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆக இவையனைத்தும் உச்சநீதிமன்றம் நம்மைக் கைவிட்டு விடுவதற்கான நிகழ்வுகளாகவே இருக்கின்றன என்று மீண்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கத் தவறுகின்ற போது உச்சநீதிமன்றம் குடிமக்களைக் கைவிட்டு விடுகிறது. காஷ்மீர், குடியுரிமை சட்டத் திருத்தம் அல்லது தேர்தல் பத்திரங்கள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகளை விரைந்து விசாரிக்கத் தவறுகின்ற போது அரசியலமைப்பை அது கைவிடுகிறது.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். தான் வழங்குகின்ற தீர்ப்புகளில் முரணாக இருக்கும் போதும் அது அவ்வாறாகவே நடந்து கொள்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: அரசியலமைப்பு வழக்குகளை விசாரிக்காத போது, அரசியலமைப்பிற்கு இழைக்கப்படுகின்ற அநியாயம் நியாயமானதாக ஏற்றுக் கொள்ளப்படுவதே இங்கே மோசமான விளைவாக இருக்கிறது. சில நேரங்களில் அதை மாற்றுவதற்கு மிகவும் தாமதமாகி விடுகிறது.

பிரதாப் பானு மேத்தா: தகாத செயல்கள் மட்டுமல்லாது, அவை உருவாக்குகின்ற அச்சம் கலந்த சூழலும் நம்பிக்கைக்குரியவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆபத்துக்களைச் சந்திப்பதற்கு மக்கள் தயாராகவே இருக்கின்றனர். ‘ஆளுபவர் என்னைத் தாக்குகின்ற போது, குறைந்தபட்சம் நீதித்துறையாவது எனக்கு நீதி வழங்கும்’ என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் இப்போது மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆனாலும்கூட பிணை பெற என்னால் முடியாது என்பதை அறிந்தே இருக்கிறேன். சுதா பரத்வாஜ் வழக்கை எடுத்துக் கொண்டால், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே அவருக்கு பிணை கிடைத்துள்ளது. ஒரு குடிமைச் சமூகத்தில் அபாயங்கள் குறித்த கணக்கீடுகள் வியக்கத்தக்க முறையில் மாறியிருக்கின்றன. ஆக தகாதவற்றை சட்டப்பூர்வமாக்குவது மட்டுமல்லாமல், அச்சத்தை உருவாக்குகின்ற கருவியாகவும் அது உள்ளது.

கரண் தாப்பர்: பொறுப்பு – ‘உச்சநீதிமன்றத்தின் குற்றம்’ என்றே சொல்வேன் – மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் அவர்களிடம் அரசியலமைப்பு குறித்த எதிர்வினை எதுவும் இல்லாததால் பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் அல்லது வழக்கறிஞர்கள் என்று நாம் அனைவரும் உணர்கின்ற அச்சம், மன அழுத்தம் உணர்வுகள் அதிகரிக்கின்றன. நீதிமன்றங்களின் மூலம் இறுதி மாற்று வழி, தீர்வு என்று எதுவும் கிடைக்காததாலேயே நாம் அனைவரும் அவ்வாறு உணர்கிறோம்.

பிரதாப் பானு மேத்தா: உச்சநீதிமன்றத்தைப் பொறுத்தவரை குற்றம் இன்னும் மோசமாக உள்ளது. ஏனெனில் அது அனைத்து அதிகாரங்களையும் கொண்ட மிகவும் சுதந்திரமான நிறுவனம். மற்ற நிறுவனங்கள் எல்லாம் பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தைச் சார்ந்தே இருக்கின்றன. குறைந்தபட்சம் கொள்கையளவில் தன்னுடைய நியமனம் உள்ளிட்டு முற்றிலுமாக தனித்து சுயமாக நிலைத்திருந்த நிறுவனமாகவே உச்சநீதிமன்றம் இருந்தது. அந்த வகையில் பார்க்கும் போது, அரசாங்கத்துடன் இப்போது அது உடந்தையாக இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

கரண் தாப்பர்: அப்படியென்றால், உச்ச நீதிமன்றத்தின் சீரழிவு என்பது மற்ற எல்லா சீரழிவுகளைக் காட்டிலும் மிகவும் மோசமானதாக இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: முற்றிலும் சுயமாக ஏற்படுத்திக் கொண்டதாக இருப்பதால், அது எல்லாவற்றிலும் மிக மோசமான சீரழிவாகவே இருக்கிறது. கரண் தாப்பர்: உங்களுடன் பேச விரும்புகின்ற கவலையளிக்கும் நான்காவது பகுதிக்கு வருவோம். அது முஸ்லீம்களை நடத்துவது குறித்தது. முதலில் முஸ்லீம்கள் மீது ‘லவ் ஜிஹாத்’ என்று குற்றம் சாட்டினார்கள். பின்னர் அவர்களை ‘பசு படுகொலை’க்கு உள்ளாக்கினார்கள். இப்போது கண்காணிப்பாளர்களும், கும்பல்களும் முஸ்லீம்கள் குர்கானில் தொழுகை நடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள். அசைவ உணவுக் கடைகளை நடத்த குஜராத்தில் அனுமதிக்க மறுக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் வளையல் விற்பனையாளர்கள், உணவு விற்பனையாளர்கள், காய்கறி விற்பனையாளர்களைக் கூட அனுமதிப்பதில்லை. தன்னுடைய மௌனத்தாலும், செயல்படத் தவறியதாலும் அரசாங்கம் மட்டுமல்லாது நமது சமூகமும் முஸ்லீம்களை இந்தியாவில் இரண்டாம் தரக் குடிமக்களாக ஆக்குகிறது என்று கருதுகிறீர்களா?

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். பாஜகவின் சித்தாந்தம் ஹிந்துக்கள் பலியாகின்றார்கள் என்பதையே கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ‘பாதிக்கப்பட்ட ஒருவர் எவ்வாறு மீள்வது?’ என்ற கேள்வியை எழுப்பினால் அவர்களிடமிருந்து ‘முஸ்லீம்களின் ஆதிக்கச் சின்னங்களை முறியடிப்பதன் மூலம் ஹிந்துக்கள் பலியாவதை முறியடிக்கலாம்’ என்றே அதற்கான பதில் நேரடியாக வரும். கோவில்கள் மீது வெறி, முஸ்லீம்கள் மீதான ஹிந்துக்களின் கலாச்சார மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவுவதாகவே அந்தப் பதில் இருக்கின்றது. அவர்களிடம் இந்த கருத்தியல் திட்டம் குறித்த மறுபேச்சுக்கான இடம் எதுவும் இருக்கவில்லை.

இதற்கு எதிராக பெரும்பாலான குடிமைச் சமூகம் போதுமான அளவு கோபம் கொண்டு எழவில்லை என்றே நான் நினைக்கிறேன். அது நம்மைப் பாதிக்காது என்றே ஓரளவிற்கு நம்மில் பலரும் நினைத்து வருகிறார்கள். தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக எண்பது சதவிகித இந்தியர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மாயையாக விரைவிலே மாறக் கூடும். சர்வாதிகார அரசுகள் பெரும்பாலும் ஒரு சமூகத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. இதுபோன்று வெளிப்படையாகப் பரப்பப்படுகின்ற வகுப்புவாத நச்சு சட்டப்பூர்வமாக்கப்படுவதை நான் என்னுடைய வாழ்நாளில் பார்த்ததே இல்லை என்று தான் சொல்வேன். அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாது நமது நண்பர்கள், குடும்பங்கள் என்று நமக்குத் தெரிந்தவர்களின் வட்டங்களிலும், இந்தியாவின் அதிகாரம் மிக்க மேல்தட்டினரிடமும் அந்த நச்சு நன்கு ஊடுருவியுள்ளது.

கரண் தாப்பர்: மோடி அரசுதான் இப்போது அதை வெளிக்கொண்டு வந்திருக்கிறதா? அது மறைவாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது என்றே நான் ஊகிக்கிறேன். முன்பெல்லாம் அது எப்படியோ அடக்கி வைக்கப்பட்டிருந்தது. ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதாக கருதப்படவில்லை. மக்கள் அதற்கான ஆதரவுக் குரலை எழுப்பவில்லை. இப்போது அவர்கள் அதைப் பற்றி பேசுவதை, சில சமயங்களில் பெருமையுடன் பேசிக் கொள்வதை எப்படியோ மோடி ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறார்.

பிரதாப் பானு மேத்தா: அதை மட்டுமே மோடி ஏற்றுக் கொள்ள வைக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் அது இப்போது அரசியல் வெற்றிக்கான பாதையாக மாறியிருக்கிறது. அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, சாத்வி பிரக்யா போன்றோரை எடுத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாகச் சொல்வதானால் பாஜகவிற்குள் யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் வரலாறும் இருக்கிறது. இவர்கள் அனைவரும் இந்த வகையான வகுப்புவாத நச்சை வெளிப்படுத்துவதன் மூலம் அதிகாரக் கட்டமைப்பில் தங்களை உயர்த்திக் கொண்டிருக்கும் அனுபவசாலிகள். எனவே மேல்நோக்கி நகர்வதற்கான ஊக்கத்தொகைகளை வழங்குவதாக இருந்தாலும் நமது அரசியல் வட்டாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடாததாக இருந்தவை இப்போது வியத்தகு வகையில் பெருமளவிற்கு ஏதோவொரு வகையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக தொழில்முறை வட்டாரங்களிலும் மாறி விட்டன.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இந்தியாவில் கிட்டத்தட்ட சாதாரண விஷயமாக மாறியிருக்கும் வகுப்புவாத ஆதரவு திரட்டலே கடந்த ஏழு ஆண்டு கால ஆட்சியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. யோகி ஆதித்யநாத் அடிக்கடி ‘அப்பா ஜான்’ பற்றி பேசுகிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நமக்குத் தெரியும். பிரதமரோ அவுரங்கசீப்பைத் தோண்டி எடுக்கிறார். அவரது மனதிலும் அதே கவனம் இருக்கிறது. இப்போது ​​விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் ‘இஸ்லாம் என்பது புற்றுநோய்’ என்றும் அதற்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் பகிரங்கமாக அறிவித்திருப்பதைக் கவனிக்கின்றேன். இதுபோன்ற நடத்தைகள் நமது குழந்தைப் பருவத்திலோ அல்லது இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகவோ ஏற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருந்திருக்கின்றன. பொதுவெளியில் யாரும் இதைச் சகித்துக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு அது வழக்கமான ஒன்றாகி விட்டது. இந்தியா எந்த அளவிற்கு மாறியிருக்கிறது என்பதற்கான அடையாளமாக அது இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: இந்தியா மாறியிருப்பதற்கான அடையாளமாகவே அது இருக்கிறது. ஆனால் அது இந்தியாவில் மட்டும் நடந்திருக்கவில்லை. வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற போது, தெற்காசியாவில் உள்ள அனைத்து குடியேற்றங்களிலும் அது நிகழ்ந்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். பாகிஸ்தானில் நடந்திருப்பதைப் பாருங்கள். ஒருவகையில் பாகிஸ்தானின் இஸ்லாமியமயமாக்கல் குறைந்து விடும் என்றே நாம் அனைவரும் நினைத்திருந்தோம். அந்த சிந்தனை வலுவிழந்து விடும் என்றே நாம் நினைத்திருந்தோம். ஆயினும் அது வலுவுடன் தனது வேகத்தை அதிகரித்திருக்கிறது. எனவே நாம் அனைவரும் இதிலிருந்து பின்வாங்கி, ‘ஒட்டுமொத்த தெற்காசியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். 1947ஆம் ஆண்டின் தீர்வாக மதச்சார்பற்ற குடியரசாக இந்தியா இருக்கும் என்றே நாம் நினைத்தோம். இஸ்லாமிய நாடாக – குறைந்தபட்சம் தொழில்முறை நவீன நிறுவனங்களைக் கொண்ட மிதவாத இஸ்லாமிய நாடாக – பாகிஸ்தான் இருக்கும் என்ற நம்பிக்கை ந்நமக்கு இருந்தது. வங்கதேசம் உட்பட தெற்காசியா முழுவதும் தன்னுடைய பொருளாதார வெற்றி குறித்த பெருமையில் மூழ்கிக் கொண்டிருந்தாலும், உள்நாட்டில் அது தற்போது கடுமையான கருத்தியல்ரீதியான அழுத்தத்திலே இருந்து வருகிறது.

கரண் தாப்பர்: இலங்கையைப் பொறுத்தவரையிலும் அது உண்மையாகவே இருக்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: இலங்கையைப் பொறுத்தவரை அது நீண்ட காலமாகவே உண்மையாகவே இருந்து வருகிறது. தெற்காசியாவில் உள்ள குடியேற்றங்களுக்கு என்னவாயிற்று? ஒவ்வொருவருக்கொருவரிடையே சுதந்திரம், தனிப்பட்ட கண்ணியத்தை மதிக்கின்ற நவீன, சமூக ஒப்பந்தம் இருந்து வந்த அனைத்து இடங்களும் இப்போது முற்றிலும் பிணைக் கைதியாக கூட்டு சுயமோகத்திற்கு ஆட்பட்டவையாக மாறியுள்ளன.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பெரும்பான்மைவாதம் உலகின் இந்தப் பகுதியில் இப்போது பரவி வருகிறது என்ற உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவை மட்டுமே கணக்கில் கொண்டு பார்க்கும் போது இதற்கு முன்பாக, பிரதமர் அல்லது உத்திரப்பிரதேச முதல்வர் போன்ற அரசியல்வாதிகள் முஸ்லீம்களை ‘அப்பா ஜான்’ என்று குறிப்பிட்டதாக அல்லது அவுரங்கசீப்பைக் குறிப்பிட்டு அவர்களைக் கேலி செய்ததாக உங்கள் நினைவில் இருக்கிறதா? விரல்கள் யாரை நோக்கி சுட்டிக் காட்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். சிறுவயதில் அது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகக் கருதப்படவில்லை என்றாலும் இப்போது அது வழக்கமான ஒன்றாகி விட்டது.

பிரதாப் பானு மேத்தா: சரிதான். எனக்குத் தெரிந்தவரை இரண்டு நிகழ்வுகள் உள்ளன. அவை 1930கள் மற்றும் 1940களில் மிகவும் பரவலாக ஊடுருவியிருந்ததாக நினைக்கிறேன். குடிமைச் சமூகத்திடம் அது குறித்து எழுந்த விளைவு நமக்குத் தெரியும்.

கரண் தாப்பர்: நல்லவேளை அவை நாம் பிறப்பதற்கு முன்பே நடந்தவை…

பிரதாப் பானு மேத்தா: ஆம். அணிதிரட்டல் நமக்கான படிப்பினைகளைக் கொண்டுள்ளது. ராம ஜென்மபூமி இயக்கத்தின் போது அவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகள் – ஒருவகையில் அந்த ஒட்டுமொத்த இயக்கமும் குறிப்பிட்டவர்களின் ஆதரவைத் திரட்டுவதாகவே அமைந்திருந்தன. ஆனாலும் அந்த இயக்கம் அடைந்துள்ளதைப் போன்ற போன்ற தேர்தல் வெற்றியை, பரவலான அங்கீகாரத்தை அதன் மூலமாக அவர்களால் பெற முடியும் என்று நாம் நினைத்திருக்கவில்லை.

கரண் தாப்பர்: அதுதான் மோடி அதற்கு கொடுத்திருக்கும் பரிசு.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம் அதுதான் மோடி அதற்கு கொடுத்துள்ள பரிசு. மேலும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி இங்கே எழுகின்றது – அவர்களுடைய சித்தாந்தத்தைத் தழுவுவது, உண்மையான கருத்தியல் மாற்றம் என்று எந்த அளவிற்கு மக்கள் மோடியை, அவரது ஆளுமையை நம்புவதால் நிகழ்ந்திருக்கிறது?

கரண் தாப்பர்: என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உத்தரப்பிரதேசத்தில் பிரச்சாரம் தொடங்கும் போது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அவர்களுடைய பிரச்சாரம் முஸ்லீம்களை மிகக் கொடியவர்களாகச் சித்தரிக்கும் வகையிலேயே இருக்கப் போகிறது. அந்த மாநிலத்தில் இருக்கின்ற எண்பது சதவிகித ஹிந்துக்களுக்கும், இருபது சதவிகித முஸ்லீம்களுக்கும் இடையே துருவப்படுத்துதல், பிளவுபடுத்துதல் நடக்கப் போகிறது. அவர்களுடைய பிரச்சாரத்தில் பொருளாதார செயல்திறன், திறமையான நிர்வாகம், கோவிட்-19ஐ அவர்கள் நிர்வகித்த விதம் போன்ற பொதுமக்களுக்கு முக்கியமானவை எதுவும் இருக்கப் போவதில்லை. மக்களுக்கு இடையே உள்ள வகுப்புவாத உறவின் மேற்பரப்பைச் சொறிந்து விட்டு பிரச்சனையை மோசமாக்குவதாகவே அவர்களுடைய பிரச்சாரம் இருக்கப் போகிறது.

பிரதாப் பானு மேத்தா: அத்தகைய வகுப்புவாத துருவமுனைப்பு முயற்சியில் ஏற்கனவே அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மோடியை நாம் மிகவும் குறைத்து மதிப்பிடுவது இங்குதான் என்று நான் நம்புகிறேன் – ‘இது அல்லது அது’ என்பது போன்ற சூழ்நிலையாக இல்லாமல் இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. பொருளாதாரப் பிரச்சனைகளை அல்லது வகுப்புவாதப் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதற்கு இடையில் இருக்கின்ற முரண்பாட்டைப் பலரும் காண்பதில்லை. எப்படியாவது பொருளாதாரப் பிரச்சனைகளை நோக்கி உரையாடல்களைத் திருப்பி விட முடியும் என்றால், மறைவாக இருக்கின்ற வகுப்புவாத துருவமுனைப்பு மறைந்து விடும் என்ற மாயையில் நாம் ஒருபோதும் இருந்து விடக் கூடாது.

கரண் தாப்பர்: இந்த ‘மறைவான, வகுப்புவாத துருவமுனைப்பு’ இப்போது வெளியே வந்திருக்கிறது. அது தொடர்ந்து இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு இருக்கப் போகிறது என்றே நினைக்கிறேன். அது அப்படியே மறைந்து போய் விடாது இல்லையா?

பிரதாப் பானு மேத்தா: அது பிரித்தெடுக்க மிகவும் கடினமான நச்சாக இருக்கிறது. ஏற்கனவே சொன்னதைப் போல முப்பதுகள் மற்றும் நாற்பதுகளைப் பற்றி, இந்தியப் பிரிவினை மட்டுமல்லாது, அதனுடன் இணைந்து நடந்த பயங்கரமான வன்முறைகளுக்கும் காரணமான செயல்முறைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: மீண்டும் அதுபோன்று ஏதாவது இப்போது நடக்குமா?

பிரதாப் பானு மேத்தா: மீண்டும் அதுபோன்று மட்டுமின்றி வேறு விஷயங்களும் நடக்கலாம். ஒருவேளை மகாத்மா காந்தியின் படுகொலை நடக்காமல் இருந்திருந்தாலும் இந்த வன்முறைகள் எதுவும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது என்பதே உண்மையில் என்னுடைய கணிப்பாகும். குடிமைச் சமூகத்தில் நிறுவப்பட்டு விட்ட இந்த நச்சு எதையெல்லாம் கட்டவிழ்த்து விடும் என்பது குறித்து நாம் மிகவும் மெத்தனமாக இருந்து விடக்கூடாது என்றே நினைக்கிறேன்.

கரண் தாப்பர்: அதன் மூலம் இந்தியா தன்னைத்தானே முறித்துக் கொள்கிறதா?

பிரதாப் பானு மேத்தா: தன்னை மிக ஆழமாகவே இந்தியா முறித்துக் கொண்டிருக்கிறது. நான் இந்தியா குறித்து அதிகமாக கவலைப்பட்டதில்லை என்றாலும் வகுப்புவாதத்தின் இந்த செயல்முறைகள் எங்கே சென்று முடியப் போகின்றன என்பதைப் பற்றி கொடுங்கனவுகள் இப்போது என்னிடம் இருக்கின்றன.

கரண் தாப்பர்: அந்த மோசமான கொடுங்கனவு என்னவாக இருக்கிறது? ஒருவிதத்தில் நாட்டைத் துண்டாடுவது? அல்லது உள்நாட்டுப் போர்?

பிரதாப் பானு மேத்தா: அரசியல் வடிவம் எடுத்தால் அது மிகப்பெரிய அளவிலான வன்முறையாக இருக்கப் போகிறது. இந்தியாவின் மக்கள்தொகைப் பரவலைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பிரிவினை இயக்கங்கள் அல்லது மற்றொரு பிரிவினை போன்ற வழக்கமான வடிவங்களை அது எடுக்காது என்றே நினைக்கிறேன். அரசியல் ரீதியாக அது சாத்தியமாகாது. ஆயினும் அரசால் தூண்டி விடப்படும் வன்முறைகள் அதிகம் கொண்டதொரு நாட்டை நம்மால் பெற முடியும். நமது மக்கள்தொகையில் இருக்கின்ற கணிசமான பிரிவினர் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு என்று நினைத்துக் கொள்ள ‘அனுமதிக்கப்படாது’ முற்றிலுமாக அந்நியப்படுத்தப்படலாம். அது மிகவும் முக்கியமான விஷயம்; அவர்கள் உண்மையில் இந்த நாட்டை தங்கள் சொந்த நாடு என்றே நினைத்து வருகிறார்கள் என்றாலும் அவ்வாறு இருப்பதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட செயல்முறையில் அல்லது ஒரு வகையான வன்முறையில் சென்று அது முடியலாம்.

கரண் தாப்பர்: இருபது கோடி மக்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் – முஸ்லீம் மக்களைப் பற்றி.

பிரதாப் பானு மேத்தா: இந்த வகையான வன்முறை நிறுவனமயமாக்கப்பட்ட பிறகு அது நிச்சயம் குறிப்பிட்ட சமூகங்களை மட்டுமே குறிவைக்காது என்றே நினைக்கிறேன். சமூகக் கட்டமைப்பிற்குள் ஊடுருவி, மிகச் சாதாரண அறிவாக அது மாறி விடும்.

கரண் தாப்பர்: இதுதான் மோடி விட்டுச் செல்லப் போகின்ற மிகப்பெரிய ‘பாரம்பரியம்’ என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவை வெளிப்படையான வகுப்புவாதம் கொண்ட நாடாக மாற்றுவது.

பிரதாப் பானு மேத்தா: இப்போதைய போக்கு தொடர்ந்தால், அதுதான் நடக்கும்.

கரண் தாப்பர்: முடிப்பதற்கு முன்பாக இன்னும் இரண்டு விஷயங்கள் பற்றி பேச வேண்டும். என்னைப் போலவே நாம் அனைவரும் பொது வாழ்வில் ஹிந்துமயமாக்கல் அதிகமாகி வருவதைக் காண்கின்றோம். நீங்கள் அன்றைய தினம் காசியில் என்ன நடந்தது என்று – பிரதமருக்கு ஹிந்து மத நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது பற்றி குறிப்பிட்டீர்கள். நகரங்களின் பெயர் மாற்றம், வரலாற்றைத் திருத்தி எழுதுவது, ராணுவ அணிவகுப்புகளில் ஆரத்தி எடுப்பது போன்றவற்றைப் பார்க்கும் போது அதேபோன்று வேறு விஷயங்கள் நடப்பதுவும் தெரிகிறது. மதச்சார்பின்மை குறித்த இந்தியாவின் அரசியலமைப்பு உறுதிப்பாடு தொடர்ந்து தோல்வியடைந்து கொண்டே வருகிறதா?

பிரதாப் பானு மேத்தா: சரிதான். நீங்கள் விவரித்தவாறு அனைத்து வழிகளிலும் மதச்சார்பின்மைக்கான அரசியலமைப்பு குறித்து இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு நிச்சயமாகத் தோல்வியடைந்தே வருகிறது. இருப்பினும் இங்கே இரண்டு வகையான ஆபத்துகளை வேறுபடுத்துவது முக்கியம். இந்தியா பெரும்பான்மையாக ஹிந்துக்களைக் கொண்ட நாடு. ஜனநாயகம் ஆழ்ந்திருக்கும் போது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்கின்ற வட்டாரமயமான ஜனநாயகம் இருக்கும் போது ஏராளமான குழப்பங்கள் இருக்கும் என்றும் இந்தியாவின் கடந்த காலத்தை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது குறித்து ஏராளமான விவாதங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். பெரும்பாலான விவாதங்கள் நியாயமானவையாகவே இருக்கும். பொதுக் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் விருப்பம் சில பிரிவினரிடம் இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது மறுக்கலாம். அவை அனைத்து சமூகங்களும் கடந்து செல்கின்ற செயல்முறைகளாகும். ஆனால் வெளிப்படையான குடிமைச் சமூக விவாதங்களாக இருந்திருக்க வேண்டியவற்றைத் திசைதிருப்புவதற்காக முறையான அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதே இந்த தருணத்தை மேலும் ஆபத்திற்கு உள்ளாக்குகிறது.

இடைக்காலத்தைப் பற்றி விவாதிக்கலாம். தங்கள் மதங்களுக்கு இடையே நம்பிக்கை குறித்து குடிமக்கள் ரத்தம் சிந்த மாட்டார்கள் என்று உறுதியளிக்க முடியும் என்றால் நிச்சயமாக வரலாற்றாசிரியர்களின் உள்ளடக்கத்துடன் உள்ள பள்ளிகளை வைத்திருப்பது வேடிக்கையாகவே இருக்கும். சிறுபான்மையினரைத் தாக்கத் தொடங்கியதால் மட்டுமே அரசியல் மற்றும் கலாச்சார அதிகாரங்களின் ஒன்றிணைவை ஆபத்தானது என்று கூறி விட முடியாது. ‘உண்மையான ஹிந்துவாகக் கருதப்படுகின்ற எவரொருவருக்கும் நாங்கள் ஆதரவுடன் இருப்போம்’ என்று அரசியல் கட்சிகள் இப்போது கூறுவதே ஆபத்தானதாக இருக்கிறது.

கரண் தாப்பர்: அரசியல் கட்சிகள் என்று பன்மையில் சொன்னீர்கள். ஆனால் உண்மையில் அது ஒரேயொரு கட்சியாக – பாஜகவாக – மட்டுமே இருக்கிறது.

பிரதாப் பானு மேத்தா: மற்ற கட்சிகளும்கூட அதையே பின்பற்றுவதாக இருக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் தீர்த்த யாத்திரை ரயில்களை இயக்குவது பற்றி என்ன சொல்கிறீர்கள்? ராகுல் காந்தியின் எண்ணம் சரியாக இருந்தது என்றாலும், அவரும் ‘உண்மையான ஹிந்து என்று யாரைச் சொல்வது, யார் அவ்வாறு இல்லை என்பதை நாங்கள் வரையறுக்கப் போகிறோம்’ என்று கூறும் நிலைக்கு – ஓர் அரசியல் கட்சி சென்றிருப்பது அதான் நோக்கம் எதுவாக இருந்தாலும் மிகவும் ஆபத்தானதாகவே இருக்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆக இப்போது நடந்து கொண்டிருப்பது ஒரு மதத்தின் வெளிப்படையான அரசியல் ஈடுபாடுதான். அரசியல், மதம் ஆகியவற்றிற்கிடையே இருந்த வேறுபாடுகளும், பிரிவினையும் இப்போது குறைந்து கொண்டே இருக்கின்றன.

பிரதாப் பானு மேத்தா: பொதுவெளியில் அது கிட்டத்தட்ட குறைந்தே விட்டது.

கரண் தாப்பர்: இந்த இடத்தில்தான் மதச்சார்பின்மை சீரழிந்துள்ளதா?

பிரதாப் பானு மேத்தா: ஆமாம்.

கரண் தாப்பர்: நம்முடைய பொது வாழ்க்கை இன்னும் அதிக அளவிலே ஹிந்துமயமாகக் கூடுமா?

பிரதாப் பானு மேத்தா: முஸ்லீம்கள் தங்கள் மதத்தை பொதுக் கலாச்சாரத்தில் வெளிப்படுத்திக் கொள்வதைப் போல தன்னிச்சையான சுதந்திரத்துடன் அது இருக்கும் என்றால் அதனால் எந்தவொரு தவறுமில்லை. ஆனால் அரசியல் அதிகாரத்தை ஒழுங்கமைப்பதற்காக அது அரசாங்கத்தால் சீரமைக்கப்படுவதே அதை மிகவும் ஆபத்தானதாக்குகிறது.

கரண் தாப்பர்: மேத்தா! நரேந்திர மோடி பிரதமராக இருந்த ஏழு ஆண்டுகளில் நடந்திருப்பவை பற்றி இதுவரை பேசினோம். பாஜகவும் நரேந்திர மோடியும் 2024 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால், பலரும் நம்புவதைப் போல், இந்தப் பத்தாண்டின் இறுதியில் இந்தியா என்ன மாதிரியான நிலைமையில் இருக்கும்?

பிரதாப் பானு மேத்தா: மனதில் கொள்ள வேண்டிய இரண்டு எச்சரிக்கை குறிப்புகள் நம்மிடையே உள்ளன. ஒன்று நாம் வரலாற்றில் இருந்து கற்றுக் கொண்டது. ஆட்சி செய்யும் திறனைக் கொண்டு அது நிறைய மாறும் என்றே நினைக்கிறேன். இப்போதைய போக்கு தொடர்ந்தால், இந்தியா ஆளப்படக்கூடிய திறனற்றதாகி விடும் என்பதே என்னுடைய கணிப்பு. நம்மிடையே உள்ள பல முரண்பாடுகள் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வடிவங்களில் அப்போது வெளிப்படும்.

பொருளாதாரம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன் என்றாலும் மக்கள் பொருளாதாரத்திற்காக மட்டுமே வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. மிக அதிக அளவிலே பணவீக்கம், வேலையின்மை கொண்ட பொருளாதாரம் போன்றவை ஒரு கட்டத்தில் மோடிக்கான ஆதரவுதளத்தில் கூட சில அரசியல் எதிர்ப்புகள் அல்லது கோபம் என்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடும். அரசியல் தீர்வுகள் இல்லை என்பதை நாம் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த ஆட்சியைப் பற்றி சட்டப்பூர்வமாகச் சுட்டிக்காட்டப்படக் கூடிய விஷயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக பணவீக்கம் இருக்கிறது என்று நம்புகிறேன். பாஜகவை அது பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் கருதுகிறேன்.

‘இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு புத்திசாலித்தனமான, நம்பகத்தன்மை வாய்ந்த எதிர்ப்பு உருவாகுமா?’ என்பதே இப்போது நம்மிடையே எழுகின்ற கேள்வியாக உள்ளது. மோடி முயற்சி செய்து கொண்டிருப்பதைப் போன்று இந்தியாவைப் போன்ற மிகப் பெரிய, சிக்கலான தேசத்தை முறையாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதை நம்புவது மிகவும் கடினம். எதிரணியினர் பலம் கொண்டிருக்கும் பகுதிகளும் இருக்கப் போகின்றன. ‘ஒளி எப்போதும் விரிசல் வழியாகவே உள்ளே வரும்’ என்று பிரபலமான பாடல் ஒன்று இருக்கிறது.

 The damage that the Modi regime has done to Indian democracy Interview with Karan Tapar by Bhanu Pratap Meta இந்திய ஜனநாயகத்திற்கு மோடி ஆட்சி ஏற்படுத்தியிருக்கும் சேதம் நீடித்து இருக்கக் கூடியது - பிரதாப் பானு மேத்தா | தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: எதிர்க்கட்சிகள் சுதாரித்து எழுந்து கொள்ளா விட்டால் – தங்கள் செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளாவிட்டால் – தவறான நிர்வாகத்துடன் பணவீக்கம், பொருளாதாரம் போன்றவற்றை மிகவும் தவறுதலாகக் கையாண்ட போதிலும் மோடி எவ்விதத் தடையுமின்றி சுதந்திரமாகவே இயங்குவார் என்றே கருதலாம்.

பிரதாப் பானு மேத்தா: ஆமாம். பொருளாதாரத்தை அவர் கையாண்டிருக்கும் நிலை அவருக்கு பின்னடைவை உருவாக்கி பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது தற்போதைய செயல்பாடுகள் எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்ற விதத்தில் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புடன் இருக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

கரண் தாப்பர்: எதிர்க்கட்சிகளின் தோல்வி அல்லது இயலாமை மோடியைப் பொறுத்தவரை மற்றொரு பலமாகவே இருக்கிறது என்று கூறி நாம் முடித்துக் கொள்ளலாம்.

பிரதாப் பானு மேத்தா: ஆம். அவர்களே மோடிக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பரிசு.

கரண் தாப்பர்: பிரதாப் பானு மேத்தா! இந்த நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி. இது எங்களுடைய பார்வையை அகலத் திறந்து வைத்திருக்கிறது. அற்புதமாக இருந்தது என்றாலும் ஆழ்ந்த மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முடிவுகள் எங்கே சென்று முடிவடையும் என்பது பற்றி உங்களிடம் கொடுங்கனவுகள் இருப்பதை நான் கவனித்துக் கொண்டேன்.

பிரதாப் பானு மேத்தா: அவ்வாறு வரக்கூடாது என்று விரும்பினாலும் உங்கள் நிகழ்ச்சியில் உண்மையையே பேசியாக வேண்டும்.

கரண் தாப்பர்: மிக்க நன்றி. கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.

https://thewire.in/rights/full-text-damage-to-indian-democracy-under-modi-is-lasting-pratap-bhanu-mehta

நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் – தமிழில்: தா. சந்திரகுரு




சிறுபான்மையினரைத் தொடர்ந்து துன்புறுத்துவதைத் தவிர இந்தியச் சமூகம் குறித்த வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடி அல்லது பாஜகவிடம் காணப்படவில்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல்

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

எழுத்தாளரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநருமான ஆகார் பட்டேலின் நேர்காணலை தி வயர் இணைய இதழ் டிசம்பர் 11 அன்று வெளியிட்டது. பணமதிப்பு நீக்கம், நான்கு மணி நேரத்துக்குள்ளாக நாடு தழுவிய பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பு வெளியிட்டது போன்ற அதிரடி முடிவுகள் ஏற்படுத்திய விளைவுகள் உள்ளிட்டு மோடி ஆளுமையின் கீழ் உள்ள இந்தியா குறித்த ஆகார் பட்டேலின் பகுப்பாய்வு, வகுப்புவாத துருவமுனைப்பை ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்டு பாஜக, ஆர்எஸ்எஸ்சிடம் வேறு எந்தவொரு திட்டமோ அல்லது சித்தாந்தமோ இல்லாதது போன்றவற்றை உள்ளடக்கியதாக அந்த நேர்காணல் அமைந்திருந்தது. மோடி நிர்வாகத்தின் சாதனைகள் அல்லது தோல்விகளை மதிப்பிடுவதற்கு 1950களுக்கு முந்தைய அரசாங்கத் தரவுகள் மற்றும் உலகளாவிய குறியீடுகளைப் பயன்படுத்தியுள்ள பட்டேலின் சமீபத்திய புத்தகமான ‘மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை’ (பிரைஸ் ஆஃப் மோடி இயர்ஸ்) குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

நேர்காணலின் முழு எழுத்தாக்கம் கீழே உள்ளது. அந்த நேர்காணலை இங்கே காணலாம்.

கரண் தாப்பர்: வணக்கம். க்ளென்லிவெட் புக்ஸ் உதவியுடன் நடத்தப்படும் தி வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். நரேந்திர மோடியின் ஆதிக்கத்தில் ஏழு ஆண்டுகள் முடிந்த பிறகும், மோடியின் குணாதிசயம், அவரது தலைமைப் பாணியை எவ்வாறு புரிந்து கொள்வது என்ற முக்கியமான கேள்விகள் உரிய பதிலுக்காக இன்னும் காத்து நிற்கின்றன. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை’ (பிரைஸ் ஆஃப் மோடி இயர்ஸ்) என்ற தலைப்பிலான புத்தகம் மிகத் துல்லியமாக அந்தச் சிக்கல் குறித்து பேசியிருக்கிறது. அனைவராலும் நன்கு அறியப்பட்டிருக்கும் பத்திரிகையாளர், கட்டுரையாளரான ஆகார் பட்டேல் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.

ஆகார் பட்டேல்! மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய நரேந்திர மோடி எனும் தலைவரிடம் உள்ள குணாதிசயக் குறைபாடுகளின் மூலம் அவரது தலைமையில் உள்ள இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த தரவுகளையும், உண்மைகளையும் விளக்குவதே நோக்கம் என்று உங்களுடைய புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்கள். இன்றைக்கு நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவருடைய குணாதிசயங்கள், தலைமைத்துவ பாணி மீதே நான் குறிப்பாக கவனம் செலுத்த விரும்புகிறேன். அவரைப் பற்றி ‘அவர் தீர்க்கமானவர், முழுமையான உறுதிப்பாடு கொண்டவர், வெளிப்படையானவர், கற்றுக் கொள்ளாதவர், ஆற்றல் மிக்கவர், கவர்ச்சியானவர். உண்மைகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் இருக்கின்ற சில சமயங்களில் அவரிடம் துணிச்சலும் இருக்கிறது’ என்று எழுதியுள்ளீர்கள். பிரதமராக இருப்பவர் ஒருவரின் குணாதிசயங்கள் ‘தீர்க்கமானவர்’, ‘ஆற்றல் மிக்கவர்’, ‘துணிச்சல் நிறைந்தவர்’ என்றிருப்பதுடன் ‘கற்றுக் கொள்ளாதவர்’ என்ற கலவையாக இருப்பது கவலைக்குரியது என்பதாகவே நான் பார்க்கிறேன். அப்படி நான் கூறுவது தவறாக இருக்குமா?

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு
ஆகார் பட்டேல் மோடி காலத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள விலை, வெஸ்ட்லேண்ட், 2021

ஆகார் பட்டேல்: இல்லை. நீங்கள் எதுவும் தவறாகச் சொல்லி விடவில்லை. குறைபாடுகள் நம் அனைவரிடமும் இருப்பதாகவே நினைக்கிறேன்; அந்தக் குறைபாடுகள் நமது சூழ்நிலைகளால், நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர்களால் எந்த அளவிற்கு குறைவாகக் காணப்படுகின்றன என்பதுதான் இங்கே முக்கியம். மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையுடன், தன்னுடைய கட்சிக்குள் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல், அதிக உறுதிப்பாடு கொண்டவராக மோடியைப் போன்ற ஆற்றல் மிக்க ஒருவரின் குணாதிசயங்கள் அவரிடமுள்ள விவரங்களுக்குள் சென்று விடக்கூடாது என்ற குறைபாட்டை மீறிச் செல்பவையாகவே இருக்கின்றன. கடந்த காலத்திலிருந்து விலகி வேறு முடிவெடுக்க விரும்பும் ‘தீர்க்கமான’ ஒருவருக்கு, அது கவலை அளிப்பதாகவே இருக்கும். உண்மையில் அது ஆபத்தானதுமாகும்.

கரண் தாப்பர்: உண்மையில் நீங்கள் அந்த வாக்கியத்தில் பயன்படுத்தியுள்ள ‘தீர்க்கமான’ மற்றும் ‘கற்றுக் கொள்ளாத’ என்ற இரண்டு உரிச்சொற்கள் என்னிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தான் என்ன செய்கிறோம் என்பதில் ‘உறுதியாக’, ‘நிச்சயமாக’ இல்லாமலேயே இன்னும் முன்னேறிச் சென்று அதைச் செய்வதில் அவர் உறுதியுடன் இருக்கிறார்.

ஆகார் பட்டேல்: மோடி அதை ஏற்கனவே நம்மிடம் சொல்லியிருக்கிறார். பத்திரிகையாளர் மது கீஷ்வருடனான அற்புதமான வீடியோ நேர்காணல் உள்ளது. அதில் தன்னுடைய செயல்பாடுகளைப் பற்றி மோடி விரிவாகப் பேசியிருக்கிறார். அது ஏற்கனவே அவர் பதினோரு ஆண்டுகள் முதல்வராக (குஜராத் மாநிலத்தின்) இருந்த பிறகு 2014ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செய்யப்பட்ட நேர்காணல். தன்னைப் பொறுத்தவரை கோப்புகளை வாசிப்பது கற்றலுக்காக புத்தகங்களைப் படிப்பதைப் போன்று இருப்பதால், தான் கோப்புகளைப் படித்துப் பார்ப்பதில்லை என்றும் அதற்கு மாறாக அந்தக் கோப்புகளைப் பற்றி இரண்டு நிமிடம் சுருக்கமாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டு, அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பதாகவும் மோடி அந்த நேர்காணலில் கூறியிருந்தார். மிகவும் தீர்க்கமானவர், அரசியல் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் என்று தான் நம்புகின்ற விஷயங்களைச் செய்ய விரும்புகிறவர் அவர் என்பது போன்றவை உண்மையில்லை என்றால் அது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அவையிரண்டும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதாலேயே இந்தியா பல்வேறு விஷயங்களில் இன்றைய நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

கரண் தாப்பர்: நீங்கள் கூறிய அந்த இரண்டு விஷயங்களைப் பிரித்து ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். பிரதமராக இருக்கும் ஒருவர் அடிக்கடி எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை தன்னிடமுள்ள விடாமுயற்சி, செறிவு, விவரம் மற்றும் கோப்புகளைப் படிப்பதன் மூலம் சிக்கல்களைப் புரிந்து கொள்வதன் அடிப்படையில் எடுப்பதில்லை; அதிகாரி ஒருவர் அளிக்கின்ற இரண்டு நிமிடச் சுருக்கத்தின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கிறார் என்ற மது கீஷ்வரின் கதையை உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அது கேவலமான, மிகவும் சாதாரணமான அணுகுமுறையாக இருக்கிறது. பிரதமராக இருக்கும் ஒருவர் உண்மையிலேயே இப்படித்தான் நடந்து கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆகார் பட்டேல்: அது மது கீஷ்வர் சொன்ன கதை அல்ல; அவையனைத்தும் மோடியின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். அவை வீடியோவில் இருக்கின்றன. அதே பாணியில்தான் அவர் ஏறத்தாழ பன்னிரண்டு வருடங்களை மாநில முதல்வராகக் கழித்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை அதுபோன்று இருப்பது மிகவும் வசதியாகவே இருந்திருக்கிறது என்பதால் அவர் உண்மையைச் சொல்லியிருக்கிறார் என்றே நம்பலாம்.

கரண் தாப்பர்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது நேரடியாக குதிரையின் வாயிலிருந்தே கிடைத்திருக்கிறது. தானே அவ்வாறு கூறியிருப்பதன் மூலம், தனது வார்த்தைகள் மூலமே அவர் தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

ஆகார் பட்டேல்: அவ்வாறு இருப்பதை ஒரு மோசமான விஷயம் என்று அவர் பார்த்தார் என்று நான் நினைக்கவில்லை. அவரை ஆதரிப்பவர்கள், கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் சரியானதையே செய்திருக்கிறார் என்று நினைப்பவர்கள் – இப்போது அவருடைய எட்டாம் ஆண்டில் இருக்கிறோம் – அதை மோசமான விஷயம் என்று நினைக்கவில்லை. அவர் கடந்த காலத்தை தீவிரமாக உடைத்தெறிந்தவர், நல்ல காரியங்களை மட்டுமே செய்தவர், செய்து கொண்டிருப்பவர் என்றே அவர்கள் அனைவரும் நினைத்து வருகிறார்கள். அவருடைய மோசமான முடிவுகள் பற்றி எனக்கு வேறுவிதமான கருத்துகள் இருந்தாலும், எந்த விவரங்களுக்குள்ளும் சென்று விடக் கூடாது என்று தொடர்ந்து இருந்து வருகின்ற அவரைப் பற்றி அவருடைய ஆதரவாளர்கள் மோசமாக நினைக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். 2014ஆம் ஆண்டிலிருந்து இதுபோன்ற அவருடைய அவசர முடிவுகளே நம்மைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.

கரண் தாப்பர்: ‘மோசமாக எடுக்கப்பட்ட முடிவுகள்’ என்று நீங்கள் சொன்ன அந்த விஷயத்திற்கு சிறிது நேரம் கழித்து வருகிறேன். ஒரு கணம் முன்பாக தன்னை மோடி பார்த்துக் கொள்ளும் விதம் குறித்து நீங்கள் சொன்ன அந்த மிக முக்கியமான வாக்கியத்தின் இரண்டாம் பகுதியைப் பற்றி முதலில் பேசலாம் என்று நினைக்கிறேன். ‘தன்னை ஒரு வீரதீரர் என்றே மோடி பார்த்துக் கொள்கிறார். ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீவிர ஆசை அவரிடம் உள்ளது. எதையாவது செய்திட வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் இருக்கிறது. ஆனால் அது என்னவென்று தெரியாமல் இருப்பதும், மிகவும் ஆழமாக அல்லது விவரமாக இருப்பதற்கான ஆர்வம் அவரிடம் இல்லாமல் இருப்பதுதான் இந்தியாவை வழிநடத்துகின்ற அவரது பாணியின் மூலம் விளைந்துள்ளது’ என்று எழுதியிருக்கிறீர்கள். இவையெல்லாவற்றையும் விட, பேச்சுவழக்கில் நாம் ‘பெருவெடிப்பு’ என்று சொல்கின்ற மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த அவர் விரும்புகிறார் என்று நீங்கள் கூற வருகிறீர்களா?

ஆகார் பட்டேல்: அப்படித்தான் நினைக்கிறேன். எப்பொழுதும் – அல்லது பெரும்பாலான நேரங்களில் – தன்னை மூன்றாம் நபராகக் குறிப்பிட்டுக் கொள்பவர், அமெரிக்க அதிபரைச் சந்திக்கச் சென்ற போது தான் அணிந்திருந்த உடையில் தனது பெயரைப் பொறித்துக் கொண்டு சென்றவர், தனக்கு ஐம்பத்தியாறு அங்குல மார்பு இருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒருவர் தன்னைப் பற்றி தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சுயபிம்பத்தை நம்மிடம் வெளிப்படுத்துபவராகவே இருப்பார் என்றே நினைக்கிறேன். அவரது அந்தக் குணம் நீடித்து இருப்பதாகவே உள்ளது. முதலமைச்சராக, பிரதமராக தான் இருந்திருக்கும் ஆண்டுகளில் தன்னை அவர் இப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை உண்மையில் நம்மிடம் காட்டிக் கொண்டே இருப்பவராகவே அவர் இருந்திருக்கிறார்.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடனான சந்திப்பின் போது நரேந்திர மோடி அணிந்திருந்த உடையில் பொறிக்கப்பட்டிருந்த அவரது பெயர்

கரண் தாப்பர்: இந்த இடத்தில் சற்றே நிறுத்தி விட்டு, அதனால் உருவாகியுள்ள பிம்பத்தைப் பார்ப்போம். தன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்து பெரிய அளவில் தீர்க்கமான முறையில் நடிக்க விரும்புகின்ற மனிதர் அவர். அடுத்ததாக ‘கற்றுக் கொள்ளாதவர்’ என்று நீங்கள் குறிப்பிடுகின்ற மனிதர் அவர். கோப்புகளைப் படிப்பதில்லை; முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ஆழமாக, விவரமாக இருக்கவில்லை என்ற போதிலும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுகிறார் என்று சொல்வது அவர் சிந்திக்காது செயலாற்றுகின்றவராக, பொறுப்பற்றவராக இருக்கிறார் என்று நமக்கு உணர்த்துவதாகவே இருக்கிறது இல்லையா?

ஆகார் பட்டேல்: அந்த இரண்டு வார்த்தைகள் அவரை மிகத் துல்லியமாக விவரிக்கின்றன என்றே நான் கூறுவேன். இருப்பினும் புத்தகத்தில் பயன்படுத்த வேண்டாம் என்று நான் குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்துக் கொண்ட உணர்வுயுடனேயே அவை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அவருடைய பதவிக் காலம் குறித்து ஆய்வு செய்த எவரொருவரும் – அவருடைய செயல்திறன் என்னவென்பதை தரவுகள் காட்டுகின்றன – நீங்கள் இப்போது பயன்படுத்திய அந்த வார்த்தைகளைத் தவறானவை என்று நினைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

கரண் தாப்பர்: எனவே நீங்கள் சித்தரித்திருக்கும் பிம்பம் – பின்விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படாத பொறுப்பற்றவர், சிந்திக்காது செயலாற்றுகின்றவர் என்ற பிம்பம் அவருக்கு இருப்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். தீர்க்கமானவர் என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் வகையில் அவர் நடிக்கவே விரும்புகிறார்.

ஆகார் பட்டேல்: அது முற்றிலும் சரியானது. மிகச் சரியாக அதைச் சொல்லியிருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். உண்மையில் அவர் தன்னுடைய செயல்களின் விளைவுகள் என்னவென்று கவலைப்படுபவரே இல்லை. அவரைப் பொறுத்தவரை மற்றவர்கள் தன்னை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதே மிகவும் முக்கியமானது.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: சிந்திக்காது செயலாற்றுதல், பொறுப்பற்ற தன்மை, விளைவுகளைப் பற்றி கவலைப்படாதது போன்றவற்றின் விளைவாக நடந்துள்ளவை குறித்து எடுத்துக்காட்டுகளுடன் பார்வையாளர்களுக்குச் சொல்ல முடியுமா? அவற்றில் ஒன்றாக பணமதிப்பு நீக்கம் இருக்குமா? நான்கு மணிநேர கால அவகாசத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அறிவித்தது அதற்குள் அடங்குமா?

ஆகார் பட்டேல்: அந்த முடிவுகளெல்லாம் அப்படித்தான் எடுக்கப்பட்டிருந்தன. அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு அந்த முடிவின் கீழ் உள்ளவற்றைப் பார்க்க வேண்டும். தேசிய அளவிலான பொதுமுடக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு முன்னதாக அரசாங்கத்தில் யாரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது அல்லது யாரைத் தயார்படுத்தினார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இருநூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பிபிசி தாக்கல் செய்திருந்தது. ஆனால் அந்தக் கேள்விகளுக்கு யாரும் பதில் அளிக்கவில்லை. பொதுமுடக்கம் வரப் போகிறது என்பது பேரிடர் மேலாண்மை அல்லது நிதி அமைச்சகம் என்று அரசாங்கத்தில் இருந்த யாருக்கும் தெரியாது. அதனால் ஒட்டுமொத்த தேசத்திற்கும் மிகவும் குழப்பமான, வலிமிகுந்த காலகட்டமாக இருந்திருக்கக்கூடிய (இருந்த) நிலைமையை எதிர்கொள்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதற்கான அவகாசம் அரசாங்கத்திற்குக் கிடைக்கவில்லை. அப்போது ஏற்பட்ட அந்த வலியை ஏதாவதொரு வகையில் குறைப்பதை உறுதி செய்வதற்கான அக்கறையும் அரசாங்கத்திடம் இருக்கவில்லை.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

இரண்டாவது எடுத்துக்காட்டு, பணமதிப்பு நீக்க முடிவின் கீழ் இருந்த நடவடிக்கைகள். பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியான அதே நாளில் – நவம்பர் 8 அன்று அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தங்களுடைய செல்போன்களை வெளியே விட்டுவிட்டு வருமாறு அமைச்சர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அந்த நாளின் பிற்பகுதியில் அது நடக்கப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அமைச்சர்களுக்குத் தெரியாது, அவர்களின் துறைகளுக்கும் தெரியாது. அரசாங்கம் அவர்கள் யாரையுமே தயார் செய்திருக்கவில்லை. வரவிருப்பதை எதிர்கொள்ள தயாரிப்பு வேலைகள் தேவைப்படும் என்று அரசாங்கம் கருதவில்லை. அந்த செயலின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மோடி புரிந்து கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. நாட்டில் என்ன நடந்திருக்கிறது என்பதை டிசம்பர் மாத இறுதியில் புரிந்து கொண்டபோது அவர் மிகவும் குழப்பமடைந்தார் என்றே நினைக்கிறேன். ஆனால் நவம்பர் மாதம் அறிவிப்பை வெளியிட்ட போது அதன் விளைவுகள் குறித்து எதையுமே அவர் சிந்தித்திருக்கவில்லை. அரசாங்கமே அதற்குத் தயாராக இல்லாத நிலையில் ஏதாவது செய்யுமாறு தேசத்தை அவர் கேட்டுக் கொண்டார். அந்த இரண்டு நிகழ்வுகளிலும் அந்த முடிவுகள் குறித்து அரசாங்கத்திற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பது, முதலில் சுடுவதைத் தேர்வு செய்து ​கொண்டு விட்டு பின்னர் அவர் குறிவைத்துப் பார்த்திருக்கிறார் என்பதையே உறுதியாகச் சொல்கின்றது.

கரண் தாப்பர்: நூற்றி முப்பத்தெட்டு கோடி மக்களைக் கொண்ட நாட்டின் பிரதமராக இருப்பவர் – தனக்கு நல்லது என்று தோன்றுபவற்றை ஆலோசனைகள் எதையும் பெறாமல், தன்னுடைய அமைச்சரவை உறுப்பினர்களைக்கூட கலந்தாலோசிக்காமல், தயாரிப்பு வேலைகள் எதையும் செய்யாமல், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிந்திக்காமல் உள்ளவராக இருக்கிறார் என்பதாக நீங்கள் ஏறக்குறைய சொல்ல வருகிறீர்கள். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உங்கள் முன்வைக்கிறேன்.

ஆகார் பட்டேல்: ஆம். அவரது கவர்ச்சியும், அதிகாரமும் அதிக அதிகாரம் இல்லாதவர்களுடன் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்துடன் இணைந்தே இருந்திருக்கின்றன. அது அவரைப் பொறுத்தவரை மேலும் தீங்கு விளைவிப்பதாகவே இருந்திருக்கிறது. (அருண்) ஜெட்லி, (நிர்மலா) சீதாராமன், (எஸ்) ஜெய்சங்கர், (பியூஷ்) கோயல் என்று இவர்களில் யாருமே தங்கள் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில்லை என்பதைப் பார்த்தாலே அந்த உண்மை உங்களுக்குத் தெரிய வரும். அவர்கள் அனைவருமே எல்லோராலும் பிரபலமானவராக அறியப்பட்ட ஒருவரை வேண்டாம் என்று சொல்லக் கூடியவர்கள் அல்ல. அவர்களால் அவரை மறுக்க முடியாது; அவருக்கு ஆதரவாக இருந்து எதையும் ‘வேண்டாம்’ என்று சொல்லக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை என்பதே நம்மை இந்த நிலைமைக்கு இட்டு வந்திருக்கிறது.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: இப்போது நாம் அவரைப் பற்றி நீங்கள் சொல்கின்ற மற்றொரு விஷயத்திற்கு – நீங்கள் கூறுவதைப் போல தொலைநோக்குப் பார்வை அவரிடம் இல்லாததே அவருடைய குணாதிசயங்கள், தலைமைப்பண்பு ஆகியவற்றை மேலும் மோசமாக்கி இருக்கிறது என்று மோடியைப் பற்றி நீங்கள் உருவாக்கியுள்ள பிம்பம் குறித்து பேசலாம். நான் இங்கே ‘சிறுபான்மையினரை இலக்காகக் கொண்டு தொடர்ந்து சட்டங்களை உருவாக்குவது, அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதை நிராகரிப்பதைத் தவிர இந்தியச் சமூகத்தைப் பற்றிய வேறு பார்வை எதுவும் மோடியிடம் இல்லை’ என்று நீங்கள் எழுதியுள்ளதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன். இரண்டு தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று ஏழாண்டுகள் ஆட்சி செய்தவருக்கு அதுபோன்ற தொலைநோக்குப் பார்வை எதுவுமில்லை என்று உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா?

ஆகார் பட்டேல்: 1951ஆம் ஆண்டிலிருந்து ஜனசங்கம், பாஜக கட்சிகளின் கொள்கைகள், தேர்தல் அறிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் உண்மையான நிலைத்தன்மையோ அல்லது சித்தாந்தமோ எதுவும் அவர்களிடம் இல்லை என்பதை உணர முடியும். இயந்திரமயமாக்கலுக்கு ஆதரவாக அவர்கள் இருந்தார்கள் என்றாலும் டிராக்டர்களைப் பயன்படுத்துவது காளைகளைக் அறுத்துக் கொல்வதற்கு ஒப்பானது என்பதால் அதை விவசாயத்தில் அவர்கள் விரும்பவில்லை. பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையைத் தவிர வேறு எந்தத் துறையிலும் இயந்திரமயமாக்கலை அவர்கள் விரும்பவில்லை. இந்தியர்களின் மாத வருமான வரம்பு இரண்டாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அதுதான் வாஜ்பாய் வரையிலும் இருபதாண்டுகளாக அவர்கள் கடைப்பிடித்து வந்த கொள்கையாக இருந்தது.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

சுட்டிக்காட்டக் கூடிய அளவிற்கு குறிப்பிட்ட சித்தாந்தம் எதுவும் இந்தியாவின் அரசியல் சக்தியாகத் திகழ்கின்ற ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு இருந்ததில்லை. அந்த அமைப்பு சிறுபான்மையினருக்கு எதிரான – குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான – நிலைப்பாட்டையே தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது. அந்த நிலைப்பாட்டை 2015க்குப் பிறகு, 2018க்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களில் நம்மால் காண முடியும்.

கரண் தாப்பர்: அப்படியானால் மோடி உருவான கட்சி, அரசியல் பாரம்பரியம் – ஜனசங்கம், பாஜக – அணுகுமுறைகளை, நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வந்துள்ளன; அவர்களுக்குப் பின்னால் எந்தவொரு கருத்தியல் ஒத்திசைவும் இருக்கவில்லை; உண்மையில் தங்களிடமே முரண்பட்டு – மாதத்திற்கு ரூ.2,000 என்ற வருமான வரம்பு போன்ற தங்களுடைய நிலைப்பாடுகள் நியாயமற்றவை என்று கருதி தங்கள் நிலைப்பாடுகளை அடிக்கடி அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்று நீங்கள் கூற வருகிறீர்கள். மோடியின் தொலைநோக்கின்மை அதன் பின்னணியில்தான் வெளிப்படுகிறதா?

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் இளைஞர் நரேந்திர மோடி

ஆகார் பட்டேல்: ஆம். அவர்கள் உள்ளீடற்றவர்களகவே இருந்தனர். எந்தவிதமான வருமானமும் இரண்டாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னது வெறும் சம்பளம் குறித்ததாக மட்டுமே இருக்கவில்லை. அவ்வாறு சொல்லி வந்த அதே கட்சிதான் இப்போது மிகவும் சாதாரணமாக தனியார்மயமாக்கலில் இறங்கி, மோடியின் தலைமையின்கீழ் அரசின் தலையீடுகளற்ற வணிகப் பொருளாதாரம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பாக ஆத்மநிர்பார் பாதையில் அந்தக் கட்சிதான் சென்றது. அந்த அறிவிப்பு குழப்பம் நிறைந்தது என்று கட்சியின் ஆலோசகர்களான (அரவிந்த்) பனகாரியா உள்ளிட்டோர் கூறினர். அவர்களுடைய சிந்தனையில் உண்மையான தெளிவு என்பது இருந்ததில்லை. அவர்களிடம் ஒரேயொரு கொள்கை மாறாத்தன்மை மட்டுமே இருந்து வருகிறது. இந்திய முஸ்லீம்களைப் பின்தொடர்ந்து வேட்டையாடுவோம், அரசியல் ரீதியாக அவர்களை ஒதுக்கி வைப்போம் என்பதை மட்டுமே அவர்கள் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்கள். முஸ்லீம்களைத் துன்புறுத்துவது, சட்டத்தின் மூலம் தொடர்ந்து அவர்களைச் சித்திரவதை செய்வது என்பதை மிகவும் வெற்றிகரமாகச் செய்து கொண்டுமிருக்கிறார்கள்.

கரண் தாப்பர்: மோடி உருவான கட்சிகளைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட கருத்திலிருந்து நான் அவற்றை சித்தாந்த ரீதியாக சிந்திக்காமல் வெறுமனே அணுகுமுறை மட்டுமே கொண்ட கட்சிகளாக தங்களைக் காட்டிக் கொள்ளும் கட்சிகள் என்றே எடுத்துக் கொள்கிறேன். அப்படியென்றால் கடந்த ஏழு ஆண்டுகளில் மோடியின் நடத்தை மற்றும் செயல்திறன் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது? அதுவும் அவருடைய தொலைநோக்குப் பார்வையின்மையையே சுட்டிக்காட்டுகிறதா? ஏனென்றால் ஜன்தன் யோஜனா, ஸ்வாச் பாரத் அபியான், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் சமூகத்தில் ஏழ்மையில் உள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கான தெளிவான பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும், அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அந்த உறவுகளை வியத்தகு முறையில் மாற்றியிருப்பதைப் பார்க்கும் போது வெளியுறவுக் கொள்கை குறித்தும் அவருக்கு ஒரு பார்வை இருக்கிறது என்றும் மக்கள் கூறலாம். அவர்களின் வாதங்களை எவ்வாறு எதிர்கொள்வது?

ஆகார் பட்டேல்: அந்த திட்டங்களைப் பொறுத்தவரை அவர் பல முனைகளில் நியாயமான முறையில் சிறப்பாகச் செய்துள்ளார் – அல்லது அதற்கான முயற்சிகளைச் செய்துள்ளார் – என்றாலும் நேரடிப் பலன்கள் பரிமாற்றத்திற்கான ஜன்தன் திட்டம் உட்பட நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த திட்டங்கள் அனைத்துமே அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து அவர் பெற்றுக் கொண்ட திட்டங்களே ஆகும். ஸ்வாச் பாரத் அபியான் என்பது நிர்மல் பாரத் என்ற திட்டத்தின் தொடர்ச்சியாகும். நிர்மல் என்பதற்கு ஸ்வாச் என்று பொருள். ஏற்கனவே இருந்த திட்டத்திற்கு ஏன் பெயர் மாற்றப்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆக இந்தப் பக்கத்தில் அரசு ஏதோ செய்து கொண்டிருக்கிறது என்று முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியின் சில கூறுகளைக் கொண்டவையாகவே உள்ளன. அதுமட்டுமல்லாது அந்த திட்டங்கள் கடந்த காலத்தில் செய்யப்பட்டதைக் காட்டிலும் இப்போது மிகக்குறைவான திறனுடனே செய்யப்பட்டு வருகின்றன; எட்ட வேண்டிய இலக்கை அந்த திட்டங்கள் இன்னும் எட்டியிருக்கவில்லை என்ற வாதங்களுக்கும் இடமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை நான் தரவுகளின் மூலம் ஆவணப்படுத்தியும் இருக்கிறேன்.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை அவர் செய்திருப்பவை, உலகத்துடன் இந்தியா தொடர்பு கொண்டிருந்த விதத்தின் போக்கையே மாற்றியிருக்கின்றன. அந்த மாற்றங்கள் மிகவும் எதிர்மறையாக இருக்கின்றன என்றே நான் கூறுவேன்; உலக நாடுகளிடம் இந்தியா குறித்து பெரும்பாலும் ‘குழப்பமான ஆனால் தீங்கற்ற நாடு’ என்ற எண்ணமே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதில் தலையிட வேண்டியதன் அவசியத்தை உலக நாடுகள் பலமுறை உணர்ந்துள்ள வகையிலேயே இந்தியா தற்போது தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறது.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு
மனித உரிமை பாதுகாவலர்கள் மீது இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கண்டித்து ஆம்ஸ்டர்டாமில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்

எச்சரிக்கைப் பட்டியலில் சேர்ப்பது; பொருளாதாரத் தடை விதிப்பதாக அச்சுறுத்துவது; நாம் இயற்றியுள்ள சட்டங்களுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை முன்வைப்பது என்று அமெரிக்கா முதல் ஐரோப்பா வரையிலும் உள்ள பல சுதந்திரமான அரசாங்க அமைப்புகள் அண்மைக்காலங்களில் இந்தியாவை எச்சரித்து வருகின்றன. இவையெல்லாம் நமக்கு முற்றிலும் புதியவையாகவே இருக்கின்றன. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக உலகத்துடனான – குறிப்பாக மேற்கத்திய உலகத்துடனான – நமது உறவில் இதுபோன்று நடந்து நான் ஒருபோதும் பார்த்ததில்லை. ஒன்றிய அரசின் சட்டங்கள் மூலமாக அல்லது பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் மூலமாக சிறுபான்மையினரைக் குறிவைத்து மோடி செய்திருக்கின்ற காரியங்கள், இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை உணர்வை உலக நாடுகளிடம் கொண்டு போய் சேர்த்திருக்கின்றன. அதுபோன்று எழுந்துள்ள உணர்வு இதுவரை நடந்துள்ள மற்றும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற நிகழ்வுகளால் மறைந்து விடும் என்று நான் கருதவில்லை.

கரண் தாப்பர்: சுருக்கமாகச் சொன்னால் பொருளாதாரம் குறித்த வேறொருவரின் தொலைநோக்குப் பார்வையே மோடியின் தொலைநோக்குப் பார்வையாக இருக்கிறது. அவருக்கு முன்பு ஆட்சியிலிருந்தவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பார்வையாக மட்டுமே அது இருக்கிறது. முன்பிருந்ததைத் தொடர்வதைத் தவிர தனக்கென்று ஒரு பார்வையை உருவாக்கிக் கொள்வதாக மோடியின் பங்களிப்பு இருக்கவில்லை. வெளிநாட்டு விவகாரங்களில், உலக நாடுகளுடனான உறவுகளில் அதிக நெருக்கத்தை அவர் கொண்டு வந்திருக்கலாம் என்று கூறினாலும், அதே நேரத்தில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது குறித்த எச்சரிக்கை உணர்வை உலக நாடுகளிடம் உருவாக்கி, இந்திய ஜனநாயகத்திற்கு கேடுகளையே விளைவித்திருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்களை அவர் அதிகரித்திருக்கிறார் என்றே கூறுகிறீர்கள். உங்களுடைய பார்வையில் நேர்மறையைக் காட்டிலும் எதிர்மறையே அதிகம் இருக்கிறது.

ஆகார் பட்டேல்: ‘பொருளாதாரம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்றே நினைக்கிறேன். அரசால் செய்து முடிக்கப்பட்டிருக்கும் கூறுகள், விஷயங்கள் யாவை என்று கேட்க விரும்புகின்றேன். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்திலிருந்து அவர் தவறி விலகிச் சென்றிருக்கிறார். 2013, 2020 என்று நடத்தப்பட்டுள்ள இரண்டு அரசாங்க கணக்கெடுப்புகளில் உள்ள தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தைப் பார்த்தால், 2013இல் இருந்ததைக் காட்டிலும் இன்றைக்கு ஐந்து கோடிக்கும் குறைவானவர்கள் வேலை செய்து வருவது தெரிய வரும். மிகவும் அழிவுகரமான விளைவை நாம் கண்டிருக்கிறோம். ஸ்வாச் பாரத் அபியான் போன்ற மற்ற விஷயங்கள் முந்தைய அரசின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.

கரண் தாப்பர்: நரேந்திர மோடியின் ஏழாண்டு கால ஆட்சிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பற்றி உங்களுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறீர்கள். ‘நமது அரசியலமைப்பின் அடிப்படையாக இருக்கின்ற மதச்சார்பின்மை, பன்மைத்துவம் குறித்து அரசியல் கட்சிகள் பேசிடாத ஓரிடத்திற்கு இந்தியாவை மோடி கொண்டு சென்றிருக்கிறார். ஒரு காலத்தில் வகுப்புவாதம் என்று கருதப்பட்டது இன்றைக்கு சட்டப்பூர்வமாகி இருக்கிறது; மதச்சார்பற்ற தன்மையானது போலி என்றாகி இருக்கிறது. ‘மோடி விளைவு’ என்றே அதை நாம் சட்டப்பூர்வமாக அழைக்கலாம். மோடி பிரதமராகப் பொறுப்பேற்று ஏழாண்டுகளுக்குப் பிறகு 2014ஆம் ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்ட நாடாக இந்தியா இருக்கிறது என்ற கருத்துக்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள், இல்லையா?

ஆகார் பட்டேல்: ஆம். அதற்கு நான் ஒப்புதல் அளிக்கிறேன். இந்த நிலைமையிலிருந்து பின்வாங்குவது சுலபமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பாஜக ஆட்சியிலிருந்து சென்று விட்டாலும், தானாக இப்போதைய நிலைமை மாறி விடும் என்றும் நான் நினைக்கவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் அந்த நோய் சமூகத்திடம் தொற்றிக் கொண்டு விட்டது.

மோடி செய்த காரியங்களில் ஒன்று – குஜராத்திலும் அவர் அதைச் செய்திருந்தார் – சட்டப்பூர்வமாக அரசிடம் இருக்கின்ற அதிகாரத்தை தான் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, ஒரு சமூகத்திடம் அந்த அதிகாரத்தை பகிர்ந்தளிக்கின்ற காரியத்தைச் செய்திருக்கிறார். அதன் மூலம் கும்பல் ஒன்றை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதை முடக்கி விடலாம். அதை எதிர்த்து அரசால் எதுவும் செய்ய முடியாது. முட்டை விற்பனைக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை என்று குஜராத் மாநில பாஜக கூறுகின்ற போது, ​​குஜராத் தெருக்களில் முட்டை வியாபாரிகளைத் தாக்கும் கும்பலை அவர்களால் வைத்துக் கொள்ள முடிகிறது. பாஜக எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற முடிவுகளை அந்தக் கும்பல் தன்வசம் எடுத்துக் கொள்கிறது. அதுபோன்ற விஷயங்களைச் செய்வதற்கு இனிமேல் அரசு தேவைப்படாது. எனவே 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த இடத்திற்கு நாம் திரும்பிச் செல்வது மிகவும் கடினமாகவே இருக்கும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம் என்றே நினைக்கிறேன்.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் கும்பல்களை அவர் இப்போது சட்டப்பூர்வமாக்கியுள்ளார். சில வகையான கும்பல் ஆட்சியை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறார். காவல்துறையானது இனிமேல் ஒழுங்குபடுத்துவதற்கு சமூகத்திற்குத் தேவைப்படாது; பெரும்பான்மையினர் தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்வார்கள்.

ஆகார் பட்டேல்: உண்மையில் அது ஒருவகையில் சட்டப்பூர்வமானதாகவே ஆகியிருக்கிறது. மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு எதிராக கண்காணிப்பாளர் ஒருவர் செயல்பட்டால், அது அவருடைய ‘நன்னம்பிக்கை’யின் காரணமாக நடந்தது என்பதால் அதை ஒரு குற்றமாகக் கருதக் கூடாது என்று சொல்கின்ற சட்டங்கள் நான் வசித்து வருகின்ற மாநிலமான கர்நாடகா உட்பட பல மாநிலங்களில் உள்ளன.

கரண் தாப்பர்: இதையெல்லாம் வைத்து ‘மோடி மாபெரும் அதிகாரம் கொண்டவராக பாஜக மூலமாக அல்லாமல், தன்னுடைய ஆட்கள் மூலமே அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்கிறார்; ஒரு மனிதர் கிட்டத்தட்ட தனியாளாக நம் நாட்டின் தன்மையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டார்’ என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

ஆகார் பட்டேல்: அப்படித்தான் நினைக்கிறேன். இன்றைக்கு அவருடைய கட்சியில் அவரது ஆளுமை, சிந்தனை போன்றவை பெரும் செல்வாக்குடன் உள்ளன. அதற்கு மாறான நிலைமை இல்லை என்றே நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் அல்லது ஆர்எஸ்எஸ் தலைவரால் மோடிக்கு ஆணையிட முடியாது. அவ்வாறு செய்தால் தொண்டர்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பார்கள். நாட்டிலேயே நம்மிடம் உள்ள மிகவும் பிரபலமான தலைவராக மோடி இப்போது இருக்கிறார். தன்னை நேசிக்கும் மக்கள்தொகையில் பெரும்பகுதியினரை அவர் கட்டுப்படுத்துகிறார். எனது ஐம்பத்திரண்டு ஆண்டுகளில் இதுவரையிலும் நான் ஒரு தலைவர் போற்றப்படுவதைப் பார்த்திராத அளவிலே அவர் போற்றப்படுகிறார் என்றே நினைக்கிறேன். இந்த அளவிற்கான கவர்ச்சி, விருப்பம், புகழ், அதிகாரத்துடன் வேறு யாரும் நம்மிடையே இருந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.

கரண் தாப்பர்: இப்போது நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் செயல்திறன் பற்றிய உண்மைகள் குறித்த பகுதிக்கு வரலாம். நேர்மையாகச் சொல்வதானால் அதுவே உங்கள் புத்தகத்தின் முக்கியமான பகுதியாகும். இந்தியாவின் செயல்திறனை அளவிடுவதற்கு ஐம்பத்தி மூன்று குறியீடுகளை மேற்கோள் காட்டி, இந்தியா அவற்றில் நாற்பத்தி ஒன்பதில் சரிவைக் கண்டுள்ளதாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்; இந்தியாவின் செயல்திறன் நான்கில் மட்டுமே மேம்பட்டிருக்கிறது. ‘…இருக்கின்ற பதிவுகள் விவாதம் அல்லது சர்ச்சைக்கு சிறிதும் இடமளிக்கவில்லை. 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் அளவும், வேகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உலகத்துடன் இணைந்திருக்கப் போராடிய இந்தியா பல முனைகளில் தோல்வியையே கண்டிருக்கிறது. கவனிக்கத்தக்க மற்றும் அளவிடக்கூடிய வழிகளில் மோடியின் ஆட்சியில் இந்தியா சீரழிவையே கண்டிருக்கிறது’ என்பதே உங்கள் முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். தீர்ப்பின் அளவுகோலாக செயல்திறனை எடுத்துக் கொள்ளும் போது பிரதமராக மோடி மிகப் பெரிய தோல்வியைக் கண்டிருக்கிறார் என்றே நீங்கள் சொல்வது இருக்கிறதா?

ஆகார் பட்டேல்: ஆமாம். அதில் எந்தவொரு சர்ச்சையும் இருக்காது என்றே நினைக்கிறேன். மேலும் நான் குறிப்பிட்டுள்ள அந்தக் குறியீடுகள் உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம், பொருளாதார புலனாய்வுப் பிரிவு போன்ற மிகவும் பழமைவாத அமைப்புகளிலிருந்து வந்தவை. நாம் அந்த நிறுவனங்களை ‘தாராளவாத இடது வகை’ நிறுவனங்களாகப் பார்ப்பதில்லை. பல விஷயங்களில் கவனிக்கத்தக்க வகையில் சரிவைக் கண்டிருக்கிறோம் என்றே நான் நினைக்கிறேன். பல வழிகளில் ஆபத்தான வகையில் சரிந்திருக்கிறோம். ஆனாலும் நம்மால் அதை அரசியல் விவாதப் பொருளாக மாற்ற முடியவில்லை. உண்மைகள் சர்ச்சைக்குரியவையாக மாறியிருக்கவில்லை. உலகப் பட்டினிக் குறியீடு போன்ற விஷயங்கள் வெளிவரும் போது தான் என்ன செய்கிறோம் என்பதைச் சொல்ல அரசாங்கம் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன். ஆனால் இருக்கின்ற உண்மை நிலவரம் – இந்த குறியீட்டு எண்கள் காட்டுவது என்னவென்றால், நாம் மிகவும் மோசமான இடத்திலே இருக்கிறோம். அதிலிருந்து வெளியேறுவது எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: தனது சாதனைகளை, தன்னுடைய அரசாங்கத்தைப் பாராட்டி மோடி நிகழ்த்துகின்ற உரைகளை வெற்றுப் பேச்சு என்று ​​நீங்கள் சொல்கிறீர்கள் – அதுதான் நீங்கள் பயன்படுத்தி இருக்கின்ற துல்லியமான வார்த்தை.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

ஆகார் பட்டேல்: அவருடைய அரசாங்கத்திடமுள்ள தரவுகளைப் பார்க்க வேண்டும். 2018 ஜனவரியில் இருந்து பதின்மூன்று காலாண்டுகளில் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தொடர் சரிவையே சந்தித்து வருகிறது. ஏன்? அதுகுறித்து நாம் விவாதிக்காது இருப்பதால் நமக்கு அதுபற்றி தெரியாது. ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் அல்லது ஐந்து மில்லியன் டன் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லலாம். அதைத்தான் ஷா கூறினார். ஆனால் அங்கே நாம் எப்படிச் செல்லப் போகி்றோம், எப்போது செல்லப் போகிறோம்? ஆனால் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. உண்மையில் இங்கே உள்ள வாய்ச்சவடால்கள் வெற்றுப் பேச்சுகளாகவே என்னுடைய மனதில் தோன்றுகின்றன. அதுபோன்ற பேச்சுகள் எவ்வித அடிப்படையும் கொண்டிருக்கவில்லை.

நம்மிடம் பாகிஸ்தானைக் காட்டிலும் குறைவான வேலை பங்கேற்பு விகிதமே உள்ளது. இப்போது நமது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2014இல் நம்மைக் காட்டிலும் ஐம்பது சதவிகிதம் பின்தங்கியிருந்த வங்காளதேசத்திற்கும் பின்னால் சென்று விட்டது. அவர்கள் நம்மை எட்டிப் பிடித்தது மட்டுமல்லாது நம்மைக் கடந்து மேலே சென்று விட்டார்கள். இந்த வகையான செயல்திறனை வைத்துக் கொண்டு, மார்பைத் தட்டி ‘நான் உங்களுக்கு நன்மை செய்கிறேன்’ என்று கூறுவது வார்த்தைகள் முற்றிலுமாக அத்தகைய பேச்சுகளிடமிருந்து விலகி நிற்பதையே காட்டுகின்றன.

கரண் தாப்பர்: உண்மையில் முரண்பாடு என்னவென்றால், மோடியைப் பற்றி இதுபோன்ற இருண்ட, மோசமான, பழிக்கின்ற தீர்ப்புகள் இருந்து வருகின்ற போதிலும் அவர் நம்பமுடியாத அளவிற்கு பிரபலமாக இருந்து வருகிறார். அவருக்கிருக்கும் பிரபலத்தை – 2002இல் அவர் செய்தவை அல்லது செய்யாதவை என்றென்றைக்கும் பிரபலமானவராக அவர் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது என்ற அடிப்படையில் நீங்கள் விளக்கியுள்ளீர்கள். ‘ஆட்சியின் தரப்பில் விவாதிக்கப்படக்கூடிய தோல்வி இருப்பதை மக்கள் ஒப்புக் கொண்டாலும், அடையாளம் மற்றும் ஆர்வத்தைப் பொறுத்தவரை அவர்கள் விரும்பியதை வழங்குபவராகவே மோடி இருக்கிறார்’ என்றும் நீங்கள் எழுதியுள்ளீர்கள். ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியின் ஒட்டுமொத்த வீழ்ச்சியை மன்னிக்க, மறந்துவிட, கண்டுகொள்ளாமல் இருக்க மக்கள் தயாராகவே இருக்கின்றனர். ஏனென்றால் ஹிந்து அடையாளத்தையும், அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பதற்கான உறுதியையும் அவர் அளித்திருக்கிறார். அதனாலேயே அவரை மக்கள் போற்றுகின்றார்கள்.

ஆகார் பட்டேல்: அப்படித்தான் நானும் நினைக்கிறேன். இங்கே இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். ஒன்று தெற்காசியா முழுவதும் பெரும்பான்மைவாதமே இருந்து வருகிறது; நம்மிடையே உள்ள சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்துவதிலேயே நாம் செழிக்கின்றோம். நமது பிராந்தியத்தில் ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் அது பொருந்திப் போவதாக இருக்கிறது. நேருவும் (இந்திரா) காந்தியும் பிரதமர்களாக இருந்த பல ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார செயல்திறன் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்கள் இருவரும் மிகவும் பிரபலமாகவே இருந்தனர். எனவே இந்தியாவில் உள்ள ஜனநாயக, ஜனரஞ்சக அரசியல் ஒருவகையில் ஜனரஞ்சகத்திடமிருந்து செயல்திறனைப் பிரித்து வைப்பது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

கரண் தாப்பர்: ஆட்சியாளர்களுடன் தங்களை உணர்வுப்பூர்வமாக அடையாளம் கண்டு கொள்வதாலேயே, ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார செயல்திறனை மக்கள் மன்னித்து மறந்து விடுகிறார்களா?

ஆகார் பட்டேல்: தங்களுடைய வாழ்க்கையில் நடப்பதற்கும் மக்கள் அவர்களைப் பொறுப்பாக்குவதில்லை.

கரண் தாப்பர்: மோடியின் ஏழு ஆண்டுகளில் மிக மோசமாகத் தவறவிட்டிருக்கும் வாய்ப்பையே இந்தியா பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதற்கான மிகத் தெளிவான குறிப்பு உங்கள் புத்தகத்தின் இறுதியில் உள்ளது. ‘நரேந்திர மோடியிடம் தேவையான மூலதனம் இருந்தது. கோடிக்கணக்கானவர்களின் வழிபாடு இருந்தது. எதிர்ப்பு என்பதே காணப்படவில்லை. இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு – ஏதாவதொரு திட்டத்தை அவர் தன்னிடம் கொண்டிருந்தால், அதைச் செயல்படுத்த வேண்டுமென்று உண்மையிலேயே அவர் விரும்பியிருந்தால் – அந்த மாற்றங்களை அவரால் செய்திருக்க முடியும். அதைச் செய்யத் தவறியதாலேயே இந்தியா தன்னுடைய வாய்பை இழந்திருக்கிறது. வேறு யாருக்கும் அதைச் செய்வதற்கான அதிகாரம் இல்லை; அவரிடமோ அதற்கான தொலைநோக்குப் பார்வை அல்லது விருப்பம் என்று எதுவும் இருக்கவில்லை’ என்று எழுதியுள்ளீர்கள்.

ஆகார் பட்டேல்: இந்த அளவிற்கு பிரபலத்துடன், பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக, எதிர்ப்புகள் எதுவுமில்லாமல் நம்மிடையே ஒருவர் இருப்பார் என்று நான் நினைத்திருக்கவில்லை. தனது பாரம்பரியத்தை மட்டுமே அவர் வீணாக்கியிருக்கவில்லை என்றே நான் கருதுகிறேன் – அது ஒரு மிகச் சிறிய விஷயமாக இருக்கிறது என்றே நினைக்கிறேன். – ஆனால் இந்த நாட்டிற்கும், நடுத்தர வருமானத்திற்குக்கூட வாய்ப்பில்லாது நம்மிடையே இருக்கின்ற கோடிக்கணக்கான ஏழைகளுக்கும் பாதிப்பை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். அது ஒரு மிகப்பெரும் பேரழிவாகவே இருக்கிறது.

கரண் தாப்பர்: இவ்வாறு வாய்ப்பைத் தவறவிட்டதன் விளைவாக, இந்தியாவின் எதிர்காலம் மங்கியிருப்பதாகக் கூறுகிறீர்களா? ‘வளர்ந்த நாடுகளின் வரிசையில் சேருகின்ற வாய்ப்பை இந்தியா என்றென்றைக்குமாகத் தவற விட்டுள்ளது’ என்றும், அது ‘இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் ஆண்டுகள்’ என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆண்டுகள் தோல்வியைக் கண்டுள்ள மோடி ஆண்டுகளுடன் ஒத்துப் போனதன் விளைவாகவே நிகழ்ந்திருக்கிறது என்றும் எழுதியுள்ளீர்கள். ‘நடுத்தர வருமான வலையின் கடையிறுதியில் இந்தியா இருக்கும்’ என்று இறுதியில் எழுதுகிறீர்கள். நாடு பற்றி வழங்கப்பட்டிருக்கும் கேவலமான தீர்ப்பாக அது உள்ளது.

ஆகார் பட்டேல்: மிகவும் வருத்தமளிப்பதாகவே அது இருக்கிறது. ஆனால் உண்மைகளோ இவ்வாறாக இருக்கின்றன: 2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை – மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலை செய்வதற்குப் போதுமான வயதில் இருந்த போது – மிகவும் சாதகமாக இருந்த ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது. ஆனால் 2014க்குப் பிறகு என்ன நடந்தது? தொழிலாளர் பங்கேற்பு விகிதம் – நாட்டில் வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் – ஐந்தில் ஒரு பங்காகச் சுருங்கி விட்டது. தான் பொறுப்பேற்ற போது இருந்த தொழிலாளர்களின் அளவை ஐம்பத்தியிரண்டு சதவிகிதத்திலிருந்து – அரசாங்கத் தரவுகளின்படி – நாற்பது சதவிகிதம் என்ற அளவிற்கு மோடி குறைத்து விட்டார். அந்த அளவு உலகிலேயே மிகக் குறைவாக, பாகிஸ்தானை விடக் குறைவானதாக இருக்கிறது. உலகின் மிகக் குறைந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை கொண்ட பதினாறு நாடுகளில் ஒன்றாக இந்தியா இப்போது இருந்து வருகிறது.

கரண் தாப்பர்: மோடியின் குணாதிசயங்கள், குறைபாடுகள் மற்றும் பிரதமராக அவரது செயல்திறன் ஆகியவை குறித்து பின்வருமான முடிவிற்கு நாம் வருகிறோம்: தன்னை ஒரு ஹீரோவாகப் பார்த்துக் கொண்ட அவர் தான் செய்வது பற்றி சற்றும் சிந்திக்கவில்லை. தீர்க்கமானவராக இருந்தாலும் அவர் கற்றுக் கொள்பவராக இருக்கவில்லை என்பதால், பொறுப்பற்றவராக, சிந்திக்காது செயலாற்றுபவராகவே அவர் இருந்துள்ளார். அதனாலேயே மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம் போன்ற முடிவுகளை அவர் இந்தியாவின் மீது திணித்தார்; நான்கு மணி நேர கால அவகாசத்தில் பொதுமுடக்கத்திற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அவரது செயல்திறனின் மறுபக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும். அவருக்கிருந்த மகத்தான அதிகாரத்தைக் கொண்டு நாட்டை அவர் மாற்றியிருக்கலாம், அவ்வாறு மாற்றுவதற்கான வாய்ப்பு இந்தியாவால் தவற விடப்பட்டுள்ளது. நீங்கள் சொல்வதைப் போல அதன் விளைவுகளாக இனிமேல் நாம் நடுத்தர வருமான வலையில் சிக்கி இருக்கப் போகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் தன்னுடைய சொந்த ஆதாயத்திற்காக இந்தியாவின் எதிர்காலத்தையே தவற விட்டிருக்கிறார்.

ஆகார் பட்டேல்: ஆமாம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார். நம்மைப் பிளவுபடுத்துவதில், வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைப்பதில் அவர் மிகப்பெரும் வெற்றியைக் கண்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன்; அதிலிருந்து நாம் விலகிக் கொள்வது மிகவும் கடினமானதாகவே இருக்கும். அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். வளர்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா சேருவதை உறுதி செய்வதில், குறைந்தபட்சம் அதற்கான பாதையைத் திட்டமிடுவதில் அவர் தோல்வியே கண்டிருக்கிறார். நம்மிடம் எந்தவொரு திட்டமும் இருக்கவில்லை. நாம் இப்போது கடந்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் பொருளாதாரரீதியாக மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கிறோம். அதிலிருந்து நாம் எளிதாக வெளியேறி விட முடியும் என்று நான் நினைக்கவில்லை.

Modi has no vision other than to persecute minorities Karan Thapar Interview with Aakar Patel in tamil translated by Chandraguru சிறுபான்மையினரைத் துன்புறுத்துவதைத் தவிர வேறெந்த தொலைநோக்குப் பார்வையும் மோடிக்கு இல்லை கரண் தாப்பர் ஆகார் பட்டேல் உடன் நேர்காணல் - தமிழில்: தா. சந்திரகுரு

கரண் தாப்பர்: ஆகார் பட்டேல்! இறுதியாக ஒரு கேள்வி – குறைந்தபட்சம் அண்மைக்காலத்திலாவது அரசியல் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அல்லது மோடியின் மங்காப் புகழ் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் மீள முடியாத பலவீனம் மோடி சகாப்தம் இன்னும் ஆண்டுக்கணக்கில் தொடருவதை உறுதி செய்யும் என்றே நான் நினைக்கிறேன்.

ஆகார் பட்டேல்: உண்மையில் அது தொடரும் என்றே நானும் நினைக்கிறேன். நாட்டின் பல பகுதிகளில் கட்டமைப்பு ரீதியான அனுகூலம் பாஜகவிற்கு இருக்கிறது; அவர்களிடம் ஏராளமான பணம் இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளிடம் எந்தவிதமான ஆதார வளமும் இல்லை. அதற்கு (தேர்தல்) பத்திரங்கள் குறித்து மோடி இயற்றிய சட்டமே முதன்மையான காரணமாகும். இந்தக் கட்டமைப்பு வேறுபாடுகள் காரணமாக, அவருக்கிருக்கின்ற பிரபலத்தில் சில சமயங்களில் சரிவு ஏற்பட்டாலும், அரசியல் துறையில் முதன்மையான சக்தியாக உருவெடுத்திருக்கும் பாஜகவை அகற்றுவது கடினமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன். அத்துடன் நாட்டிலுள்ள சிறுபான்மைக் குழுக்களை முதன்மை இலக்காகக் கொண்டு அவர்கள் கவனம் செலுத்துகின்ற சட்டங்களும் நம்மிடம் இருக்கும்.

கரண் தாப்பர்: ஆனால் ஒரு நாள் நிச்சயம் பிரதமர் பதவியை மோடி துறக்க வேண்டி வரும்; தவிர்க்க முடியாமல் அவரது வயது அதை உறுதி செய்யும். அந்த நேரத்தில் பாஜக தொடருமானால், மோடியின் வாரிசு என்று பலரும் நம்புகின்ற அமித்ஷாவின் தலைமையின்கீழ் நாட்டின் எதிர்காலம் எவ்வாறாக இருக்கும் என்று பார்க்கிறீர்கள்?

ஆகார் பட்டேல்: அவர்களிடம் பெரும்பான்மைவாதத்திற்கு அப்பாற்பட்டு எந்தவொரு குறிப்பிட்ட சித்தாந்தமும் இருக்கவில்லை. நான் கூறியதைப் போல, தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து பல ஆண்டுகளாக அவர்கள் கூறி வருபவற்றில் எந்தவொரு நிலைத்தன்மையும் காணப்படவில்லை. சகஇந்தியர்களை மிருகத்தனமாக நடத்துவதைத் தவிர வேறு திசையில் செல்வதற்கான எந்தவொரு வழிகாட்டுதலும் அவர்களுக்கு இல்லை. மோடிக்குப் பின்னர் வரப் போகின்ற எந்தவொரு வாரிசின் கீழும் இந்த நிலைமையே தொடரப் போகின்றது.

கரண் தாப்பர்: அது நிச்சயம் மனச்சோர்வடைய வைப்பதாகவே இருக்கும். எங்களுடைய பார்வையை அகலத் திறந்து வைத்தமைக்கு மிக்க நன்றி. பார்வையாளர்களில் பலரும் நீங்கள் அவர்களுக்குக் காட்டியிருப்பதை பார்த்தவர்களாக ஒருபோதும் இருந்து விடக் கூடாது என்று விரும்புபவர்களாகவே இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். எச்சரிக்கையுடன் இருங்கள். ஆகார் பட்டேல்! பத்திரமாக இருங்கள்.

ஆகார் பட்டேல்: மிக்க நன்றி தாப்பர்.

https://thewire.in/government/full-text-modi-has-no-vision-for-indian-society-other-than-to-reject-inclusion-aakar-patel
நன்றி: தி வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு

 

Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுரு

மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் – கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுரு




Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருபல்வேறு காரணங்களுக்காக நரேந்திர மோடியுடன் 2007ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் கரண் தாப்பரின் மனதில் நிலைத்து நிற்கின்ற ஆயிரக்கணக்கான நேர்காணல்களில் ஒன்றாக இருக்கிறது. அந்த நேர்காணல் இன்னும் முடிவடையாத கதையாகவே தொடர்கிறது. தொடர்ந்து இப்போதும் அது செய்தியாகிக் கொண்டேதான் இருக்கிறது. நேர்காணல் நடந்த நேரத்தில். நேர்காணலுக்கு முன்பாக, அதற்குப் பின்பு என்ன நடந்தது என்பது பற்றிய ஒரு பகுதி இங்கே:

நரேந்திர மோடி அரசு என்னைப் பற்றி பெரிதாக நினைத்திருக்கவில்லை என்பது ஒன்றும் ரகசியம் இல்லை. நான் நட்புடன் பழகி வந்த வித்தியாசமான அமைச்சர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது குறித்து எனக்குச் சந்தேகமில்லை என்றாலும் – அருண் ஜேட்லி மிகமுக்கியமான எடுத்துக்காட்டு – நான் அவ்வாறு நன்றாகப் பழகி வந்தவர்களில் பெரும்பாலானோர் மோடி பிரதமரான ஓராண்டிற்குள்ளாகவே என்னைத் தவிர்ப்பதற்கான காரணங்களை, சாக்குப்போக்குகளை கண்டுபிடித்துக் கொண்டனர். எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்த போதும், 2014க்குப் பிறகு முதல் ஓராண்டு வரையிலும்கூட எனக்கு நேர்காணலை அளித்து வந்த ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், எம்.வெங்கையா நாயுடு போன்றவர்கள் திடீரென்று தங்கள் கதவுகளை மூடிக் கொள்ளத் துவங்கினர். நேர்காணலுக்கு ஒத்துக் கொண்டு நேர்காணலைப் பதிவு செய்வதற்கான நாளை நிர்ணயம் செய்யும் அளவிற்குச் சென்றிருந்த நிர்மலா சீதாராமன் போன்ற சிலரும் கடைசி நேரத்தில் விளக்கம் எதுவும் சொல்லாமலேயே அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டனர்.

பாஜக செய்தித் தொடர்பாளர்கள் என்னுடைய தொலைக்காட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புகளை நிராகரிக்கத் தொடங்கியபோது, ​​நான் ஒரு தனிமனிதன் என்பது முதலில் எனக்குத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வேறு வேலைகளில் அவர்கள் மூழ்கியிருப்பதாகவே நான் கருதினேன். இருப்பினும் மீண்டும் மீண்டும் அது தொடர்ந்த போது, சாம்பித் பத்ராவிடம் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டேன். என்னுடைய கேள்விக்கு பதிலளிக்கும் முன்பாக மெல்லிய குரலில், தன்னுடைய சங்கடத்தை வெளிப்படுத்துகின்ற விதத்தில், என்னிடம் ஒரு ரகசியத்தைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் கேட்டார். அவர் கேட்ட உத்தரவாதத்தை அளித்த போது, அனைத்து பாஜக செய்தித் தொடர்பாளர்களுக்கும் நான் நடத்துகின்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று கூறப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அடுத்து அமைச்சர்கள்… நேர்காணலுக்கு எப்போதும் தயாராக இருந்தவர்கள், சவாலான உரையாடலை அனுபவித்தவர்கள் இப்போது என்னுடைய அழைப்புகளை ஏற்க மறுக்கின்ற தொலைபேசி எண்களாக மாறி விட்டனர். அவர்களுடைய செயலாளர்களிடமும் ‘மன்னிக்கவும். அவர் பிஸியாக இருக்கிறார்’ என்ற ஒரேயொரு பதில்தான் எஞ்சியிருந்தது

பிரகாஷ் ஜவடேகர் மட்டுமே எனது நிகழ்ச்சியில் தோன்றுவதற்கு என்னால் ஒப்புக்கொள்ள வைக்க முடிந்த ஒருவராக இருந்தார். இல்லை என்று மறுப்பதை அல்லது பதில் சொல்லாமல் தவிர்ப்பதை அவருடைய கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சரவைச் சகாக்கள் ஆகியோர் வழக்கமாகக் கொண்ட பிறகும் ஜவடேகர் அதைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்து வந்தார். அவரிடமும் சில நாட்களுக்குப் பிறகு மனமாற்றம் ஏற்பட்டது. எனக்குப் போன் செய்த அவர் ‘உங்களுக்கு நேர்காணல் தரக் கூடாது என்று எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது… என்ன நடந்தது கரண்? ’ என்று கேட்டார்.

முதன்முறையாக அப்போதுதான், எனக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இருக்கிறது என்று என்னிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டது. ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று ஜவடேகர் சத்தியம் எதையும் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக என்னைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலால் அவர் ஆச்சரியமடைந்து போயிருந்ததாகவே எனக்குத் தோன்றியது. சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அறிவுரை சொல்வதற்காக தொலைபேசியில் என்னை அழைத்த அவர் ‘தலைவரைச் சந்தித்து பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

எனக்கு நன்கு தெரியும் என்பதால், அருண் ஜெட்லிக்குத்தான் என்னுடைய முதல் அழைப்பை விடுத்தேன். நிதியமைச்சகத்தில் அவரைச் சந்திக்கச் சென்ற போது எந்தப் பிரச்சனையும் இல்லை என்று என்னிடம் உறுதியளித்த அவர், நான் கற்பனை செய்து கொள்வதாகக் கூறியதுடன் அனைத்தும் சரியாகிவிடும் என்றார்.

புறக்கணிப்பு அதற்குப் பிறகும் தொடர்ந்ததால் அருண் மௌனமாக இருந்துவிட்டார் என்று நினைத்த நான் மீண்டும் அவரை – இந்த முறை தொலைபேசியில் – தொடர்பு கொண்டேன். பிரச்சனை இல்லை என்று மறுப்பதை அவர் அப்போது நிறுத்தி விட்டு, அதற்குப் பதிலாக பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றார். நான் ‘ஆனால் அருண்… பிரச்சனை பெரிதாகப் போகிறது என்றால், ஊதுவதற்கு யாரோ இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அப்படியானால் பிரச்சனையும் இருக்கிறது’ என்றேன். அருண் வெறுமனே சிரித்துக் கொண்டார்.
Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருபிரச்சனை எதுவாக இருந்தாலும் அருணால் சமாளிக்க முடியாத அளவிற்கு அது பெரிதாக இருப்பதை உணர்ந்தேன். எனக்கு உதவுதற்கான அவருடைய வாய்ப்பை அல்லது எனக்கு உதவி செய்வதற்கான அவரது விருப்பத்தை நான் இன்னும் சந்தேகிக்கவில்லை என்றாலும் அவ்வாறு செய்யக் கூடிய திறன் அவரிடம் இல்லை என்பதை நான் நம்ப வேண்டியதாயிற்று.

பிரச்சனை குறித்து என்னிடம் இருந்த சந்தேகத்தை பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தீர்த்து வைத்தார். அவரிடம் 2017 ஜனவரி தொடக்கத்தில் நேர்காணல் தருமாறு கேட்டேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த நேர்காணல் ஜனவரி 16 அன்று பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட பிறகு நான் அவருக்கு நன்றி தெரிவித்த வேளையில் அவர் கூறிய பதில் என்னையும் – என்னுடைய தயாரிப்பாளர் அரவிந்த் குமாரையும் திகைக்க வைத்தது.

கொஞ்சம் சீரியஸாக சிரித்துக் கொண்டே ‘நீங்கள் எனக்கு நன்றி சொல்லலாம்… ஆனாலும் என்னுடனிருப்பவர்கள் [எனக்கு நன்றி] சொல்ல மாட்டார்கள். நான் இந்த நேர்காணலை ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இந்த நேர்காணலைக் கொடுத்தது குறித்து அவர்கள் நிச்சயம் சந்தோஷம் கொள்ளவில்லை. ஆனாலும் மக்களைப் புறக்கணிக்கக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்’ என்றார்.

அப்போதுதான் நான் அமித்ஷாவை சந்தித்து விடலாம் என்று முடிவு செய்தேன். தொடர்ச்சியாக பல கடிதங்களை எழுதி, பலமுறை தொலைபேசியில் அழைத்த பிறகு 2017ஆம் ஆண்டு ஹோலிக்கு மறுநாள் அவர் என்னைச் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டார். அந்தச் சந்திப்பு அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. நீண்ட நேரம் அந்தச் சந்திப்பு இருக்கவில்லை என்றாலும் என்னுடைய கருத்தைச் சொல்லவும் அவர் அதற்குப் பதிலளிப்பதற்கும் போதுமானதாகவே இருந்தது.

நான் அவரிடம் முதலில் பாஜக செய்தித் தொடர்பாளர்களும், அதற்குப் பின்னர் பாஜக அமைச்சர்களும் கடந்த ஓராண்டாக என்னுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுத்து விட்டதால் அவரைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினேன். செய்தித் தொடர்பாளர்கள் சிலர் அவ்வாறு கலந்து கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரகசியமாக என்னிடம் தெரிவித்திருப்பதாகவும், சமீபத்தில் அதையே மூத்த அமைச்சர்களும் கூறியிருப்பதாகவும் அவரிடம் சொன்னேன். நான் ஜவடேகர், அருண் ஜெட்லியுடன் பேசியதையும் அவரிடம் தெரிவித்தேன். இப்போது என்ன பிரச்சனை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக கடைசியாக அவரிடம் வந்திருக்கிறேன் என்றும், அறியாமல் யாரையாவது வருத்தப்பட வைத்திருந்தாலோ அல்லது அவ்வாறு ஏதாவது சொல்லியிருந்தாலோ மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றும் கூறி விட்டு, நான் என்ன செய்து விட்டேன் என்று அவரிடம் கேட்டேன்.

நான் சொன்னதை அமித்ஷா மிகவும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார். அவரிடம் அதை விளக்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அவருடைய வீட்டின் பெரிய வரவேற்பறையில் நாங்கள் அமர்ந்திருந்தோம். தோட்டத்தைப் பார்க்கும் வகையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார்; அவர் பக்கத்தில் இருந்த சோபாவில் நான் இருந்தேன். அந்த அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.

‘கரண்ஜி’ என்று நட்புடன் அழைத்த அவரது குரலில் குறைந்தபட்சம் தொனியில் அல்லது என்னை அழைத்தவிதத்தில் அதற்கு நேர்மாறான தடயம் எதுவும் இருக்கவில்லை. நிலைமையை நான் தவறாகப் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறிய அவர், என்னுடைய நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ எந்தவொரு அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்திக் கூறினார்.

இறுதியாக அந்த விஷயத்தை மேலும் விசாரித்த பிறகு இருபத்தி நான்கு மணி நேரத்தில் என்னை அழைப்பதாக அவர் உறுதியளித்தார். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அது தீர்ந்து விட்டது என்ற உறுதியுடனும், நம்பிக்கையுடனும் அங்கிருந்து நான் வெளியேறினேன். ஆனால் நான் மிகவும் தவறுதலாகவே அதைப் புரிந்து கொண்டிருந்தேன். அமித் ஷா என்னைத் திரும்ப அழைக்கவே இல்லை. அடுத்த ஆறு வாரங்களில் பல கடிதங்கள், ஐம்பது முறை தொலைபேசி மூலம் செய்திகளை அனுப்பியிருப்பேன் என்றாலும் அவரிடமிருந்து எனக்கு எந்தவொரு பதிலும் வந்து சேரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

அமித் ஷா பதிலளிக்கத் தவறியது என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது. மிகவும் சாதாரணமாகப் பேசக் கூடிய அல்லது தவறான நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற மனிதர் என்று அவரை நினைக்கவில்லை. ஏதோவொன்று அல்லது யாரோ அவரைத் தடுத்துள்ளனர். அப்போதுதான் உண்மையான பிரச்சனை நரேந்திர மோடியாக இருக்கலாம் என்று நான் கருத ஆரம்பித்தேன்.

எந்த அளவிற்கு அதைப் பற்றி அதிகமாக சிந்தித்தேனோ, அந்த அளவிற்கு அதை நான் உறுதியாக உணரவும் செய்தேன். என்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை – குறைந்த பட்சம் அந்த நேரத்தில் இல்லை – ஆனாலும் பாஜக செய்தித் தொடர்பாளர்கள் திடீரென்று என்னுடைய அழைப்பை ஏற்க மறுத்தது, அமைச்சர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்ட நேர்காணல்களை ரத்து செய்தது, ஜவடேகர், ஜெட்லியின் கருத்துக்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றுடன் இறுதியாக இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் மீண்டும் அழைக்கிறேன் என்று உறுதியளித்த அமித் ஷாவின் திடீர் மௌனம் ஆகியவற்றை வேறு எவ்வாறு விளக்குவது?

2007ஆம் ஆண்டு, குஜராத்தில் இரண்டாவது முறையாக மோடி முதலமைச்சராக பதவியேற்பதற்காக நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது நடந்த என்னுடைய நேர்காணலின் போது மோடி வெறுமனே மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளிநடப்பு செய்திருந்தார். ​​ 2007இல் மோடியுடன் நடத்தப்பட்ட அந்த நேர்காணல்தான் இப்போது பிரச்சனையாக இருக்கிறதா? ஒருவேளை அவ்வாறு இருக்கலாம் என்றாலும் அதற்கான காரணம் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எனக்குள்ளே எழுந்தது. கோத்ரா வன்முறை, அதைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லீம்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, 2002 மார்ச் மாதம் நான் எழுதிய ‘ஞாயிறு உணர்வுகள்’ (சன்டே சென்டிமெண்ட்ஸ்) என்ற பத்தியில் அதற்கான ஆரம்பம் இருக்கலாம் என்பதை உணர எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.

எங்களுக்கிடையில் நேர்மையான உரையாடல் இருந்தால் அந்தச் சிக்கலைக் களைந்து விடலாம் என்பதால் மோடியிடம் நேரடியாகப் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்தேன். அது சாத்தியமில்லை என்பதை ஓரளவிற்கு உணர்ந்திருந்தாலும், அதுபோன்ற முயற்சி மிகச்சரியானதாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது. எனவே அவருடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முதன்மைச் செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா ஆகியோரைத் தொடர்பு கொண்டேன். தோவலைச் சந்திப்பதற்கு முன்பாக நான் மிஸ்ராவிடம் பேச வேண்டியிருந்தது. அந்த இரண்டு உரையாடல்களும் ஒரே நாளில் அதாவது 2017 மே 1 அன்று நிகழ்ந்தன.

நிருபேந்திர மிஸ்ரா அலுவலகத்திற்கு நான் அனுப்பியிருந்த செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மோடியின் அமைச்சர்கள், அவரது கட்சியினர் என்னை ஏன் புறக்கணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக மோடியைச் சந்திக்க நான் விரும்புவதாகக் கூறினேன். மேலும் அறியாமல் பிரதமரை வருத்தப்படுத்தும் வகையில் ஏதாவது செய்திருந்தால் மன்னிப்பு கேட்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவரிடம் தெரிவித்தேன் என்றாலும் முதலில் அதற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு 2007இல் செய்த அந்த நேர்காணல்தான் காரணம் என்று என்னால் நம்ப முடியவில்லை என்பதையும் அவரிடம் கூறினேன்.

மோடியிடம் பேசிவிட்டு என்னிடம் திரும்பி வருவதாக மிஸ்ரா தெரிவித்தார். சவுத் பிளாக்கில் இருந்த அஜித் தோவலை அன்றைய தினம் மாலையில் அழைத்து அதே செய்தியை திரும்பவும் கூறினேன். அவர் நிருபேந்திர மிஸ்ரா என்னிடம் திரும்ப வரும் வரை காத்திருப்பதாகக் கூறினார். மிஸ்ராவால் விஷயங்களைச் சீர்செய்ய முடியும் என்றே அவர் நம்பினார். ஆனாலும் அவரால் முடியவில்லை என்றால், நரேந்திர மோடியுடன் தான் நேரடியாகப் பேசுவதாக தோவல் கூறினார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு, நிருபேந்திர மிஸ்ரா என்னை அழைத்தார். மோடியுடன் பேசியதாகவும், பிரதமரைச் சந்திப்பதில் எந்தப் பலனும் இல்லை என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் அப்போது கூறினார். மோடி குறித்து எனக்கு பாரபட்சமான கருத்துகள் இருப்பதாகவும், எனது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் பிரதமர் கருதுவதாக கூறிய மிஸ்ரா. அதனால்தான் அமித் ஷா என்னைத் திரும்ப அழைக்கவில்லை என்றும் கூறினார். ஒருவேளை மோடியிடம் பேசிய அமித் ஷாவும் அதேபோன்ற பதிலைப் பெற்றிருந்திருக்கலாம்.

இனிமேல் சாத்தியமில்லை என்று தெரிந்த போதிலும் தோவாலை அழைத்தேன். மிஸ்ரா கூறியதை அவரிடம் சொன்னேன். மௌனமாக நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டார். ‘விஷயங்கள் தெளிவடையும் என்று நம்புவோம், ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்’ என்பதே அவருடைய ஒரே பதிலாக இருந்தது. ஆக இப்போது அந்தப் பிரச்சனைக்கான காரணம் எனக்குத் தெரிந்து விட்டது. நரேந்திர மோடியை நான் புண்படுத்தியிருக்கிறேன்; அதன் விளைவுதான் அது. ஆனாலும் அவரைப் புண்படுத்திய அந்தக் குற்றம் எப்போது நடந்தது என்பதுதான் எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அது 2007இல் நடந்த நேர்காணலினாலா அல்லது 2002 மார்ச் மாதம் வெளியான எனது ‘ஞாயிற்றுக்கிழமை உணர்வுகள்’ என்ற பத்தியினாலா? பல ஆண்டுகளாக அது கட்டமைக்கப்பட்டு வந்திருப்பதாகலாம் என்றும், அதன் தொடக்கம் அந்தப் பத்தியுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என்றும் நான் சந்தேகித்தேன்.
Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருபிரச்சனை ஆரம்பமானது என்று நான் கருதுகின்ற இடம் சரியாக இருக்குமென்றால், அந்த நேரத்தில் நான் எழுதியதைத் திரும்பச் சொல்வதுதான் நியாயமாகும். அந்தக் கட்டுரைக்கு ‘போய்விடு மிஸ்டர் மோடி, இப்போதே போய்விடு’ என்று நான் தலைப்பு வைத்திருந்தேன். அதில் நான் கூறியிருந்தது இதுதான்:

‘நரேந்திர மோடியை எனக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன். அண்மைக்காலம் வரையிலும் நான் அவரை மதித்தே வந்திருக்கிறேன். அவருடைய ஆலோசனைக்கு நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேன். 2000ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தலைவருடனான (சர்சங்சாலக்) நேர்காணலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது,​​ அந்த அமைப்பைப் புரிந்து கொள்வதற்கு மோடி எனக்கு உதவியதற்கு நன்றிக்கடனுடன் இருந்துள்ளேன். அந்த அமைப்பின் பலவீனங்களை அறிந்து கொள்ளும் வகையில் அவர் என்னுடைய கண்களைத் திறந்து விட்டார். அதன் மோசமான இரண்டாம்தர செயல்பாடுகளை மிகச்சரியான பாரபட்சமற்ற தன்மையுடன் அவர் எனக்கு உணர்த்திக் காட்டினார்.

ஆர்எஸ்எஸ் இப்போது பொருத்தப்பாட்டை இழந்திருப்பது பற்றி சுதர்சன்-ஜியிடம் கேள்வி கேளுங்கள். முன்பு போல அது சிறப்புடன் இருக்கவில்லை. இன்று அனைத்து விஷயங்களிலும் அது இரண்டம்தரத்துடனே இருக்கிறது’ என்று அந்த விவாதத்தை அவர் என்னிடம் ஆரம்பித்தார்.

அவரிடம் ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’’ என்று கேட்டேன். அதுவே கடைசியாக நான் கேட்கின்ற வார்த்தையாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக மோடி ஓர் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர். அந்த அமைப்பின் பாதுகாவலராகவே நான் அவரை எதிர்பார்த்தேனே அல்லாது விமர்சகராக அல்ல.

‘ஆர்எஸ்எஸ் இருபதாயிரம் பள்ளிகளையும், ஐம்பது பேப்பர்களையும் நடத்தி வருகிறது. ஆனால் அவை எதுவும் தேசிய அளவிலான தரத்தில் இல்லை. சமூகப் பணிக்கான அர்ப்பணிப்புடன் ஆர்எஸ்எஸ் உள்ளது என்றாலும் சாய்பாபா, ராதா சோமி பிரிவு, பாண்டுரங் அதவாலேயின் ஸ்வாத்யாயா குழு போன்றவற்றிற்கே அந்தத் துறையில் நல்ல பெயர் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அந்தக் கணக்கில் வராது’ என்றார்.

நான் திகைத்துப் போனேன். மோடி விமர்சித்ததால் மட்டுமே அவ்வாறு இருக்கவில்லை. ஆர்எஸ்எஸ்ஸிற்குள்ளிருந்து வந்த தாக்குதலை அவர் முன்வைத்ததாலேயே நான் திகைத்துப் போனேன். பாரம்பரியமான, தொடர்ந்து வைக்கப்படுகின்ற இடது [சாரி] விமர்சனமாக அது இருக்கவில்லை. மாறாக வலதுசாரிகளின் பெருத்த ஏமாற்றமாக அது இருந்தது. புதிதாக, வித்தியாசமாக இருந்தது.

‘ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் அவர் கலந்து கொண்ட வருகைப்பதிவு குறித்து அவரிடம் கேளுங்கள்’ என்று மோடி தொடர்ந்தார். என்னால் அவருடைய உற்சாகத்தை உணர முடிந்தது. ஒரு பத்திரிக்கையாளரைப் போலவே அவர் நடந்து கொண்டார். அது எனக்குப் பிடித்திருந்தது. மிக முக்கியமாக, நான் அவருடைய நேர்மையைப் பாராட்டினேன். அவருடைய ஆலோசனைக்கு நன்றியுள்ளவனாக இருந்தேன்.

‘கேரளாவைப் பாருங்கள். அங்கே மிகப்பெரிய ஆர்எஸ்எஸ் கிளை உள்ளது ஆனால் அதன் தாக்கம் அங்கே மிகக் குறைவாகவே இருக்கிறது. கம்யூனிஸ்டுகள், சர்ச் மற்றும் சுதேசி நிதி அல்லாமல் வெளிநாட்டு நிதியை சார்ந்து இருக்கும் பொருளாதாரம் என்று ஆர்எஸ்எஸ் விரும்பாத அனைத்தும் அங்கே செழித்து வளர்ந்திருக்கின்றன. அந்த அளவுக்கு அங்கே ஆர்எஸ்எஸ் பொருத்தமற்றதாக இருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் சுதர்சன்-ஜியிடம் கேளுங்கள். என்னைப் போன்றவர்களிடம் உள்ள முக்கியமான பிரச்சனைகளைத் தொடுவீர்கள் என்றால் அது அருமையான நேர்காணலாக இருக்கும்’ என்றார்.

அவருடைய ஆலோசனையைப் பின்பற்ற நினைத்தேன் என்றாலும் மிகவும் முட்டாள்தனமாக என்னுடைய வழக்கமான முறையிலேயே நான் அந்த நேர்காணலைத் தொடங்கினேன். ஹிந்து ராஷ்டிரத்திற்கான ஆர்எஸ்எஸ்சின் உறுதிப்பாடு, அரசியலமைப்புச் சட்டம், பாஜகவின் கூட்டணிகள், வாஜ்பாய் அரசின் செயல்பாடுகள் குறித்து நாங்கள் பேசினோம். மோடியின் கேள்விகளை எழுப்புவதற்கான நேரம் இல்லாமல் போனது.

பலரும் அந்த நேர்காணலைப் பாராட்டினாலும், பத்திரிகைகள் பாராட்டிய போதிலும், அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதை நன்கு அறிந்தவனாகவே நான் இருந்தேன். அது வித்தியாசமாக இருந்திருக்க வேண்டும். அது அசலாகக்கூட இருந்திருக்கலாம். ஒருவேளை மோடியின் கேள்விகளை ஒருங்கிணைக்கும் வழியை நான் கண்டுபிடித்திருந்தால் அது அவ்வாறாக இருந்திருக்கலாம்.

‘அந்த நேரத்தில் கேள்வி கேட்கின்ற வலிமை, சவால் விடக்கூடிய தைரியம், அரசியல் இடைவெளிகளுக்கு அப்பாலும் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரம், பெருந்தன்மை கொண்ட மனிதராகவே நான் நரேந்திர மோடியைக் கருதினேன். அவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியும் என்று என்னால் நடிக்க முடியாது. அவரை நிச்சயமாக நன்கு அறிந்திருக்கவில்லை என்றாலும் அது எனக்குத் தேவையில்லை என்றே நான் உணர்ந்தேன். காண்பதை மட்டுமே நான் விரும்பினேன் – உண்மையில் ரசித்தேன். என்னைப் பொறுத்தவரை அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது.

துரதிர்ஷ்டவசமாக நான் தவறாகப் புரிந்து கொண்டதாகவே தோன்றுகிறது. உண்மையில் அவ்வாறு சொல்வது சரியில்லை. அது நேர்மையுடன் இருக்கவில்லை. ‘தோன்றுகிறது’ என்ற வார்த்தை தவறானது என்ற சந்தேகம் அல்லது தயக்கத்தைக் குறிக்கிறது. ‘தவறு’ என்ற வார்த்தை தவிர்ப்பதை உணர்த்துவதாக இருக்கிறது. உண்மையில் நான் மிகப்பெரிய தவறு செய்திருந்தேன்.

குஜராத்தில் நடந்த வகுப்புவாத படுகொலைகளை நரேந்திர மோடி கையாண்ட விதத்தில் இருந்து வெளிப்பட்ட அவரது பிம்பம் முற்றிலும் வேறாக இருந்தது. குறுகிய மனப்பான்மை கொண்டவராக, மதவெறி கொண்டவராக, கீழ்த்தரமான மனநிலை கொண்டவராக, தன்னுடைய வரம்புகளின் கைதியாக அந்த ‘மற்ற’ மோடி இருந்தார்.

ராணுவத்தை முன்னரே அழைக்காதற்கு அவரது அனுபவமின்மை, ஒருவேளை அவரது முட்டாள்தனமான தனிப்பட்ட பெருமையே காரணம் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்வேன். நிலைமையை இன்னும் திறம்பட வித்தியாசமாகக் கையாள முடியும் என்று அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம், கடினத்தன்மையைக் காட்டுகின்ற அதே வேளையில் புரிதலையும் காட்டலாம் என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அனைத்திற்கும் மேலாக, உங்களைச் சார்ந்தவர்களை, உங்கள் நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களை ஒடுக்குவது என்பது எளிதான காரியமல்ல. துயரத்தை ஏற்படுத்துகின்ற போதிலும், அதுபோன்ற தவறுகள் மனித இயல்பு என்பதால் அவை அடிக்கடி நிகழ்கின்றன.

ஆனால் ‘ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை இருக்கும்’ என்று கூறிய போது, கும்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் குறிப்பிட்டு ஈசன் ஜாஃப்ரியின் கொலையை விளக்க முயன்ற போது, ​​​​ அகமதாபாத்தில் இறந்தவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு தொகையை கோத்ராவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கான காரணத்தைக் கண்டறிந்த போது, அவர் தன்னை தார்மீகமற்ற மனிதராகவே வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஒரு முஸ்லீமைக் காட்டிலும் கூடுதலாக ஒரு ஹிந்துவின் உயிரை மதிப்பது அல்லது படுகொலைகளைப் பற்றி பேசும் போது அவை தவிர்க்க முடியாதவை என்று பேசுவது போன்ற பேச்சுகள் புரிந்து கொள்ள முடியாதவையாக இருக்கவில்லை – உண்மையில் அவை வெறுக்கத்தக்க பேச்சுகளே…

ஒரு தலைவர் என்றே நான் அவரைப் பற்றி நினைத்திருந்தேன். குறுகிய வரம்புகளுக்கு அப்பால் உயரக் கூடிய, எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளக் கூடிய, பத்திரிகையாளர்களின் பாராட்டைப் பெறுவதற்கான, பிறருக்கு வழிகாட்ட, பின்பற்ற வைக்கின்ற ஆற்றலும், அறிவும் அவரிடம் இருந்தது. ஆனால் கடந்த வாரம் நான் கண்ட அந்த மனிதர் தவறான எண்ணம், குறுகிய பழிவாங்கும் மனப்பான்மை, இரட்டை நிலை, புன்படுத்தும் வார்த்தைகளைப் பேசுகின்ற உயிரினமாக மட்டுமே இருந்தார். முதலாமவர் முதலமைச்சராக இருக்கத் தகுதியானவர். இரண்டாமவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்குத் தகுதியானவராகவே இருக்கிறார்’.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியவற்றை இன்று வாசித்த போது,​​நடந்திருப்பவற்றின் வெளிச்சத்தில் அந்தக் கட்டுரை என் மீது குற்றத்தை எவ்வாறு ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் காண முடிந்தது. அப்பட்டமாகவும் கடுமையாகவும் நான் அவரை விமர்சித்திருந்தேன். மிகவும் காயப்படுத்தக்கூடிய இடத்தில் நான் மிகத் தெளிவாக அவரை அடித்திருந்தேன்.

அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2007ஆம் ஆண்டில் நரேந்திர மோடியுடனான எனது நேர்காணல் நடந்தது. என் நினைவுகள் சரியாக இருக்குமென்றால், அந்த நேர்காணலுக்காக அருண் ஜெட்லியிடம் நான் உதவி கேட்டிருந்தேன். அருண் ஜெட்லியின் தலையீடுதான் குஜராத் முதல்வரை நேர்காணலுக்கு ஒப்புக்கொள்ள வைத்தது என்றே நம்புகிறேன். அக்டோபர் மதியம் அகமதாபாத்தில் நேர்காணலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதிகாலை விமானத்தில் நான் அங்கே சென்றேன். பல ஆண்டுகள் நாடு கடத்தப்பட்டிருந்த பெனாசிர் பூட்டோ கராச்சிக்குத் திரும்பிய மறுநாள் காலை அது. பெனாசிரின் ஊர்வலத்தைச் சிதறடித்த பயங்கரமான குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். விமானம் அகமதாபாத்தில் தரையிறங்கியபோது அன்றைய நாளில் திட்டமிடப்பட்டிருந்த மோடியுடனான நேர்காணலைக் காட்டிலும் கராச்சி குண்டுவெடிப்பு நிகழ்வுதான் என் மனதை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.
Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருகாரில் ஏறியவுடன் எனது தொலைபேசி ஒலித்தது. அப்போது இன்னும் விமான நிலைய எல்லைக்குள்தான் நாங்கள் இருந்தோம். ‘கரண்-ஜி, வந்து சேர்ந்து விட்டீர்களா?’ என்னை வரவேற்கும் வகையில் நரேந்திர மோடியின் குரல் ஒலித்தது. ஊடகங்களைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருக்கிறார் என்பதற்கான முதல் அறிகுறி அது. ‘நான்கு மணிக்கு நமது நேர்காணல், ஆனாலும் கொஞ்சம் சீக்கிரமே வாருங்கள், பேசிக் கொண்டிருக்கலாம்’ என்றார். அவர் பேசிய விதம் 2002இல் நான் எழுதிய பத்தியை நரேந்திர மோடி படித்திருக்கவில்லை அல்லது மறந்து விட்டார் என்பதையே உறுதிப்படுத்தியது. என்னை அன்புடன் வரவேற்று நான் அவருடைய பழைய நண்பர் என்பதைப் போலவே என்னிடம் அவர் பேசிக் கொண்டிருந்தார். அன்ரைய நேர்காணலில் இருந்த எந்தவொரு விஷயத்தையும் பற்றி நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. மாறாக எங்களுக்குள் பரிகாசம் செய்து கொண்டு சிரித்தோம், கேலி செய்தோம்.

அந்த உரையாடல்கள் என்னை நிராயுதபாணியாக்குவதற்காகவா என்று எனக்குத் தெரியவில்லை. பெரும்பாலும் இத்தகைய தந்திரத்தையே புத்திசாலி அரசியல்வாதிகள் கடைப்பிடிப்பார்கள் என்றாலும் என்னிடமிருந்த அச்சங்கள் விரைவில் மறைந்து விட்டன.
Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருஅரை மணி நேரம் கழித்து கேமராக்கள் முன்பு அமர்ந்தோம். வெளிர் மஞ்சள் நிற குர்தா அணிந்திருந்த மோடியின் தலைமுடி அப்போதுதான் வெட்டப்பட்டிருந்தது.

எனது முதல் கேள்விகள் 2002ஆம் ஆண்டைப் பற்றி இருந்தன. முதலில் அந்த சங்கடமான விஷயத்தை முடித்து விட்டு மற்ற விஷயங்களுக்குப் பின்னர் செல்வதே என்னுடைய நோக்கமாக இருந்தது. அந்த விஷயத்தை எழுப்பாமல் விட்டிருந்திருந்தால் அது அவருக்கு உடந்தையாக இருந்ததாக அல்லது கோழைத்தனம் என்பதாகவே தோன்றியிருக்கும். அதே சமயம் என்னிடம் அதைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விருப்பமும் இருக்கவில்லை. எனவே முதலிலேயே அவற்றை எழுப்பி அதிலிருந்து விரைவாக வெளியேறுவது என்று முடிவு செய்திருந்தேன்.

‘மிஸ்டர் மோடி, உங்களைப் பற்றி பேச ஆரம்பிக்கலாம்’ என்று ஆரம்பித்தேன். ‘குஜராத்தின் முதல்வராக இருந்த ஆறு ஆண்டுகளில், குஜராத்தை சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலமாக ராஜீவ் காந்தி அறக்கட்டளை அறிவித்துள்ளது. இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நீங்கள் மிகவும் திறமையான முதல்வர் என்று இந்தியா டுடே அறிவித்திருக்கிறது. அப்படியிருந்தும், மக்கள் உங்கள் முகத்திற்கு நேராக இன்னும் உங்களை மாபெரும் கொலைகாரன் என்றே அழைக்கிறார்கள். நீங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக பாரபட்சத்துடன் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அந்தப் பிம்பம் குறித்து உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா?’

அவர் சற்றும் கலங்கியதாகத் தெரியவில்லை. அவருடைய முகத்தில் எந்த உணர்ச்சியையும் என்னால் காண முடியவில்லை. அவருடைய முகபாவத்தில்கூட எந்தவொரு மாற்றமும் இல்லை. எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் அது அமைதியாகவே இருந்தது. மேலும் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆங்கிலத்தை அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தது. அவரது ஆங்கில மொழிப் புலமை இப்போது கிட்டத்தட்ட சரளமாக இருந்தாலும், 2007இல் அதுபோன்று இருக்கவில்லை.

எங்கள் உரையாடல் இவ்வாறு இருந்தது:

‘மக்கள்’ என்று சொல்வது முறையல்ல என்றே நினைக்கிறேன். அதுபோன்ற வார்த்தைகளில் பேசுபவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும் என்றே நான் எப்போதும் சொல்வேன்’.

‘அதை இரண்டு மூன்று பேரின் சதி என்று சொல்கிறீர்களா?’

‘நான் அப்படிச் சொல்லவில்லை’.

‘ஆனால் இரண்டு மூன்று பேர் என்று சொல்கிறீர்கள்’.

‘அதுதான் என்னிடம் உள்ள தகவல். அது மக்களுடைய குரல் அல்ல.’

இரண்டு மூன்று பேர்தான் அப்படிப் பேசியதாக முதலமைச்சர் சொன்னது சரியில்லை என்பதே உண்மை. இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் துல்லியமாக இது குறித்து நீதிபதிகள் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

‘குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம் என்று 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் கூறியதை நான் உங்களுக்குச் சுட்டிக்காட்டலாமா? 2004 ஏப்ரலில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதரவற்ற குழந்தைகளும், அப்பாவிப் பெண்களும் எரிக்கப்படும்போது மறுபக்கம் பார்த்துக் கொண்டிருக்கும் நவீன காலத்து நீரோவைப் போல் இருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் கூறினார். உங்களிடம் உச்சநீதிமன்றம் பிரச்சனை கொண்டிருப்பது போல் தெரிகிறது’ என்றேன்.

‘கரண், என்னிடம் ஒரு சின்ன வேண்டுகோள் இருக்கிறது. தயவு செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பாருங்கள். நீங்கள் சொல்வது ஏதாவது அந்தத் தீர்ப்பில் இருக்கிறதா? எல்லாவற்றையும் தெரிந்து கொண்டால் சந்தோஷமாக இருப்பேன்’.

‘தீர்ப்பில் எதுவும் இல்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. அது ஒரு கருத்து மட்டுமே’.

‘தீர்ப்பில் அவ்வாறு இருந்தால், அதுகுறித்து உங்களுக்குப் பதில் அளிப்பதில் நிச்சயம் சந்தோஷம் அடைவேன்.’

‘அப்படியென்றால் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி செய்த விமர்சனம் முக்கியமில்லை என்று சொல்கிறீர்களா?’

‘உங்களுக்கு என்னுடைய எளிய வேண்டுகோள். தயவுசெய்து நீதிமன்றத் தீர்ப்புக்குச் செல்லுங்கள். நீங்கள் மேற்கோள் காட்டிய வாக்கியத்தை அதில் கண்டுபிடியுங்கள். இந்திய மக்கள் அதை அறிந்து கொண்டால் நான் நிச்சயம் சந்தோஷப்படுவேன்’.

‘தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து மட்டும் அவ்வாறு இருக்கவில்லை. 2004 ஆகஸ்ட் மாதத்தில் உச்சநீதிமன்றம் 4,600க்கும் அதிகமான வழக்குகளில் 2,100-க்கும் மேற்பட்ட – நாற்பது சதவீதத்திற்கும் அதிகமான – வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. குஜராத்தில் மோடியின் ஆட்சி நீதியுடன் நடக்கவில்லை என்று கருதியதாலேயே அவர்கள் அவ்வாறு செய்தனர்’.

‘நான் சந்தோஷமாக இருக்கிறேன். அந்தத் தீர்ப்பின் காரணமாக மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கிறேன். ஏனென்றால் நீதிமன்றம்தான் இறுதியில் முடிவை எடுக்கும்’.
Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருநேர்காணலில் இருந்து முறையாக நீதிமன்றத் தீர்ப்பில் எழுதப்பட்டதற்கும், வெறுமனே நீதிமன்றத்தில் பேசப்படுகின்ற கருத்துகளுக்கும் இடையே உள்ள சட்டப்பூர்வமான வேறுபாட்டை மோடி என்னிடம் சுட்டிக்காட்டினார். இருப்பினும், தேர்தலைச் சந்திக்கும் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அது நிச்சயம் உறுதியான தற்காப்பாக இருக்கப் போவதில்லை. தலைமை நீதிபதி உங்களை விமர்சித்திருப்பார் என்றால், அந்த விமர்சனம் தீர்ப்பில் எழுத்து மூலமாகச் செய்யப்பட்டதா அல்லது வாய்மொழியாகச் செய்யப்பட்டதா என்பது இங்கே முக்கியமாக இருக்காது. மிக முக்கியமாக அனைத்து பத்திரிகைகளும் தங்கள் முதல் பக்கங்களில் அந்த நீதிமன்ற விமர்சனத்தைக் கொண்டு சென்றிருந்தன. எனவே மோடி இரண்டாவது முறை தனது மறுதேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்யப் போகும்போது தன் மீதான பிம்பம் குறித்து அவர் எதிர்கொள்ளப் போகும் பிரச்சனையின் மையமாகவே அந்த விமர்சனம் இருந்தது. வார்த்தை ஜாலங்களால் அதை இல்லாமல் செய்து விட முடியாது. அதைத்தான் அவரிடம் தெரிவிக்க முயன்றேன்.

உண்மையாகச் சொல்வதென்றால் நான் மேற்கோள் காட்டியிருந்த நவீன காலத்து நீரோ என்ற நீதிமன்றத்தின் கருத்து அந்தக் கால செய்தித்தாள்களில் வெளிவந்தவாறு நீதிமன்றத்தில் வாய்மொழியாக மட்டுமே பேசப்படவில்லை என்ற உண்மை அந்த நேரத்தில் எனக்குத் தெரியாது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் எழுதப்பட்ட ஒரு பகுதியாகவே அது இருந்தது என்ற விவரங்களை மோடியுடனான அந்த மூன்று நிமிட நேர்காணலைப் பார்த்த தீஸ்டா செடல்வாட் என்னிடம் தெரிவித்தார்.

ஜாஹிரா ஹபிபுல்லா ஹெச். ஷேக் எதிர் குஜராத் மாநிலம் வழக்கில், 2004 ஏப்ரல் 12 அன்று நீதிபதிகள் துரைசாமி ராஜு மற்றும் அரிஜித் பசாயத் அமர்வு வழங்கிய தீர்ப்பில் ‘பெஸ்ட் பேக்கரி மற்றும் அப்பாவி குழந்தைகளும், ஆதரவற்ற பெண்களும் எரிந்து கொண்டிருந்த போது நவீன காலத்து ’நீரோக்கள்’ வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தனர். குற்றம் இழைத்த குற்றவாளிகளை எவ்வாறு காப்பாற்றலாம் அல்லது பாதுகாக்கலாம் என்று அவர்கள் ஒருவேளை ஆலோசித்துக் கொண்டிருந்திருக்கலாம்’ என்றே எழுதப்பட்டிருந்தது. உண்மையைச் சொல்வதென்றால் நான் கூறியதை விட தீர்ப்பில் எழுதப்பட்டிருந்தது மிகவும் மோசமாக இருந்தது. ‘குற்றம் செய்தவர்களை எவ்வாறு காப்பாற்றுவது அல்லது பாதுகாப்பது என்பது குறித்து மோடி ஆலோசித்திருக்கலாம்’ என்றும் தீர்ப்பின் எழுத்துப் பதிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மோடியை நேர்காணல் செய்த போது அதைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கவில்லை என்பதால் என்னுடைய கேள்வியில் நான் குறிப்பிட்டது அந்த தீர்ப்பில் இருந்ததை விட பலவீனமாகவே இருந்தது. ஆனால் அவ்வாறு நீர்த்திருந்த அந்தக் கேள்வியே அவரைத் தூண்டுவதற்குப் போதுமானதாக இருந்தது.

‘என்ன பிரச்சனை என்று சொல்கிறேன்’ என்று நான் அந்த நேர்காணலைத் தொடர்ந்தேன். ‘2002-ம் ஆண்டு குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆன பிறகும், கோத்ரா என்ற பேய் இன்னும் உங்களைத் துரத்துகிறது. அந்தப் பேயை அடக்க நீங்கள் ஏன் இன்னும் எதுவும் செய்யவில்லை?’

‘அந்தப் பணியை கரண் தாப்பர் போன்ற ஊடகவியலாளர்களுக்கே நான் வழங்குகிறேன். அவர்கள் அனுபவித்து மகிழட்டும்’.

‘நான் உங்களுக்கு ஏதாவது பரிந்துரை செய்யலாமா?’

‘அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை’.

‘நடந்த கொலைகளுக்கு வருந்துவதாக உங்களால் ஏன் சொல்ல முடியவில்லை? முஸ்லீம்களைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் இன்னும் கூடுதலாகச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை?’

‘சொல்ல வேண்டிய அனைத்தையும் அந்த நேரத்திலேயே சொல்லி விட்டேன். என்னுடைய அறிக்கைகளை நீங்கள் கண்டுபிடித்துப் படித்துப் பாருங்கள்’.

‘இப்போது மீண்டும் சொல்லுங்களேன்’.

‘நீங்கள் பேச விரும்புகின்றவற்றை 2007இல் நான் இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை’.

‘ஆனால் அதை மீண்டும் சொல்லாமல், அந்தச் செய்தியை மக்கள் மீண்டும் கேட்க விடாமல், குஜராத்தின் நலனுக்கு முரணானதொரு பிம்பம் தொடர்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள். அதை மாற்றுவது உங்கள் கைகளில்தான் உள்ளது’.

இந்த உரையாடல் நீடித்த அந்த இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் நரேந்திர மோடியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வெளிப்படாமலே இருந்தது. ஆனால் அவர் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதுவும் தெரிந்தது. உணர்வுகளைக் காட்டாமல் அவரது கண்கள் இறுக்கமாக இருந்தன. ஒருவேளை தன்னுடைய முகத்தை அமைதியாக, ஒரேபோன்று வைத்திருக்க அவர் முயற்சி செய்து கொண்டிருந்திருக்கலாம். ஆனாலும் அதற்குப் பிறகு அவரது பொறுமை அல்லது அவரது உறுதி முறிந்தது. போதும் போதும் என்று சொல்லி அந்த நேர்காணலை அவர் முடித்துக் கொண்டார். ‘நான் ஓய்வெடுக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே ஒலிவாங்கியைக் கழற்ற ஆரம்பித்தார்.

உண்மையிலேயே அவருக்குத் தாகம் இருப்பதாகவே முதலில் நான் நினைத்தேன். அவரது பக்கத்தில் இருந்த சிறிய மேஜையில் ஒரு குவளையில் தண்ணீர் இருப்பதை அவருக்குச் சுட்டிக்காட்டினேன். இருப்பினும் அது ஒரு சாக்கு என்பதையும், நிச்சயமாக அந்த நேர்காணல் முடிந்தது என்பதையும் உணர எனக்கு அதிக நேரம் ஆகவில்லை.

அப்போதும் கூட மோடி கோபத்தை அல்லது கேவலப்பட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அடுத்த நாள் சிஎன்என் – ஐபிஎன் (CNN-IBN) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பிய அந்த மூன்று நிமிட டேப்பில் ‘அப்னி தோஸ்தி பானி ரஹே. பாஸ். நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். நான் உங்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன். இந்த நேர்காணலை என்னால் செய்ய முடியாது… ஆப்கே ஐடியாஸ் ஹைன், ஆப் போல்தே ரஹியே, ஆப் கர்தே ரஹியே…தேகோ மே தோஸ்தானா சம்பந்த் பனானா சஹ்தா ஹூன் (அவை உங்கள் கருத்துக்கள், நீங்கள் பேசிக்கொண்டே இருங்கள்… நான் உங்களுடன் நட்புறவைப் பேணவே விரும்புகிறேன்)’ என்று மோடி கூறியவை திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருந்தன.

உண்மையில் அந்த நிகழ்வில் வித்தியாசமானதாக இருந்தது என்னவென்றால், அதற்குப் பிறகும் நான் அவருடன் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் செலவழித்திருப்பேன். அவர் தேநீர், இனிப்புகள், குஜராத்தி டோக்லா போன்றவற்றை எனக்கு கொடுத்தார். அந்த கடினமான சூழ்நிலையில் அவரது விருந்தோம்பல் விதிவிலக்காகவே இருந்தது.

நேர்காணலைத் தொடர்வதற்கு அவரைச் சம்மதிக்க வைப்பதற்காக நான் அந்த நேரத்தைச் செலவிட்டேன். நேர்காணலை மீண்டும் செய்ய நான் முன்வந்தேன். 2002ஆம் ஆண்டு பற்றிய கேள்விகளை இறுதியில் வைக்கிறேன் என்று அவருக்கு உறுதியளித்தேன். நேர்காணலில் வேறு பல விஷயங்களை எழுப்பவிருப்பதாகக் கூறினேன். தொடக்கத்திலேயே அந்த விஷயத்திலிருந்து வெளியேறி விடுவது நல்லது என்பதாலும், கோத்ரா, முஸ்லீம் கொலைகளைத் தவிர்ப்பது இருவருக்குமே தவறாக இருந்திருக்கும் என்பதாலேயே அதிலிருந்து நேர்காணலைத் தொடங்கியதாகவும் நான் அவரிடம் கூறினேன்.

ஆனால் அந்த தர்க்கம் எதுவும் நரேந்திர மோடியிடம் வேலை செய்யவில்லை. ‘நேர்காணலை அந்த மூன்று நிமிடங்களிலேயே முடித்து விட்டால், மறுநாள் தொலைக்காட்சி சேனல் அதைத் திரும்பத் திரும்பக் காண்பிக்கும்’ என்று அவரிடம் சொன்னேன். ‘அது செய்தியாக மாறிவிடும். அநேகமாக அது ஒவ்வொரு செய்தித் தொகுப்பிலும் இடம்பெறும். மாறாக முழு நேர்காணலையும் செய்து கொடுத்தால், அது ஒரு முறை மட்டுமே ஒளிபரப்பப்படும். கூடுதலாக மீண்டும் ஒரு முறை ஒளிபரப்பப்பட்டு, பின்னர் அது அநேகமாக என்றென்றைக்கும் மறந்து போகும்’ என்றேன். ஆனால் அதுவும் அவரிடம் வேலை செய்யவில்லை.

தன்னுடைய மனநிலை மாறி விட்டது என்று மோடி சொல்லிக் கொண்டே இருந்தார். வேறொரு முறை நேர்காணலை நடத்தித் தருவதாகக் கூறிய அவர் நாம் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதை அந்த சமயத்தில் திரும்பத் திரும்பச் சொன்னார். அவர் முன்பு சொன்ன ‘தோஸ்தி பானி ரஹே’ மீண்டும் மீண்டும் என்னிடம் சொல்லப்பட்டது.

ஒரு மணி நேரம் ஆன பிறகு, ‘நான் கிளம்ப வேண்டும் இல்லையென்றால் தில்லிக்குச் செல்லும் விமானத்தைத் தவறவிட்டு விடுவேன்’ என்றேன். அவரிடம் கைகுலுக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அந்தச் சேனல் மோடியின் நேர்காணலை ஒளிபரப்பியது. உடனடியாக அது தலைப்புச் செய்தியாக மாறியது. நான் முன்னர் கூறியபடியே ஒவ்வொரு செய்தித் தொகுப்பிலும் அது இடம் பிடித்திருந்தது. நேர்காணலில் இருந்து மோடி வெளிநடப்பு செய்தது மிகப் பெரிய செய்தியாகிப் போனது. குஜராத் பிரச்சாரத்திற்கு நடுவே அது நடந்ததால், காங்கிரஸ் கட்சி மகிழ்ந்து போனது.

திங்கள்கிழமை மதியம் மோடி என்னை அழைத்தார். ‘என் தோளில் துப்பாக்கியை வைத்து நீங்கள் சுட்டிருக்கிறீர்கள்’ என்றார். இதைத்தான் நான் ஏற்கனவே கணித்திருந்தேன். வெளிநடப்பு செய்வதற்குப் பதிலாக அவர் நேர்காணலை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அன்றைய தினமே நான் உணர்ந்திருந்தேன். மோடி சிரித்தார். அவர் அப்போது கூறியதை என்னால் மறக்கவே முடியாது.

‘தம்பி கரண், நான் உன்னை நேசிக்கிறேன். தில்லிக்கு வரும் போது நாம் இருவரும் ஒன்றாகச் சாப்பிடலாம்’ என்றார்.

உண்மையில் அவை வெறுமனே புத்திசாலித்தனமான பிரிவுபச்சார வார்த்தைகளாகவே இருந்தன. அதன் பிறகு நான் மோடியைச் சந்திக்கவே இல்லை. நாங்கள் பேசிக் கொள்ளவுமில்லை. எனவே சேர்ந்து சாப்பிடுவது குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை.

இருப்பினும் அந்த நேர்காணலுக்குப் பிறகு அந்த விஷயம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பாஜகவுடனான எனது உறவை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்பது மிகவும் முக்கியமானது. கட்சியின் மூத்த தலைவர்களில் பெரும்பாலானோர் அந்தக் கதையை தனிப்பட்ட முறையில் என்னிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினர். அவர்களிடம் அதுபற்றி சொல்லி மகிழ்ந்தேன் என்பதையும் நான் ஒப்புக்கொள்ளவே வேண்டும். மிக முக்கியமாக அதற்குப் பிறகு அவர்கள் யாரும் நேர்காணல்களை வழங்குவதைத் தள்ளிப் போடப்படவில்லை அல்லது நேர்காணலுக்கு ஒப்புக் கொள்ளத் தயங்கவில்லை.

2007 முதல் 2015 வரை – ஏன் 2016இன் தொடக்கம் வரை அப்படித்தான் இருந்தது. நரேந்திர மோடியின் ஆட்சியின் முதல் ஆண்டு அல்லது பதினெட்டு மாதங்கள் வரையிலும்கூட என் மீதான பாஜகவின் அணுகுமுறை மாறவில்லை. எனது நிகழ்ச்சிகளில் தோன்றுவதற்கு அல்லது நேர்காணல்களை வழங்குவதற்கு கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள், அமைச்சர்கள் எப்போதும் ஒப்புக் கொண்டனர். மோடியுடனான அந்த நேர்காணலே நடக்கவில்லை அல்லது மறக்கப்பட்டது என்பது போலவே இருந்தது. ஏனெனில் 2014க்குள் அதற்கு ஏழு வயதாகியிருந்தது.

அதனாலேயே அந்தத் ‘தீண்டாமை’ காலகட்டம் தொடங்கியபோது அந்த நேர்காணல்தான் அதற்கான காரணம் என்று ஏற்றுக் கொள்ள முதலில் விரும்பவில்லை. அது உண்மைதான் என்பதை உணர்ந்து கொள்ள உண்மையில் எனக்குச் சிறிது காலம் ஆனது. அதுகுறித்து எழுத்தாளரும், அரசியல்வாதியுமான பவன் வர்மா 2017 அக்டோபர் 18 அன்று எனக்கு ஆதாரம் அளித்தார். அவர் சொன்னது நிருபேந்திர மிஸ்ரா என்னிடம் ஏற்படுத்திய உணர்வை உறுதிப்படுத்தியது. பவன் சொன்ன அந்தக் கதை ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருந்தது.
Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுருஎனது அலுவலகத்தில் அமர்ந்திருந்த பவனின் பார்வை நரேந்திர மோடி புகைப்படத்தின் மீது விழுந்தது. நான் நேர்காணல் கண்டிருந்த முன்னாள் பிரதமர்கள் குழுவில் அந்தப் படமும் பிடித்திருந்தது. இருப்பினும் மோடியின் அந்தப் படம் தொலைக்காட்சித் திரையில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது, தன்னுடைய ஒலிவாங்கியைக் கழற்றி அந்த நேர்காணலை முடிக்கத் தொடங்கும் துல்லியமான தருணத்துடன் அது இருந்தது. திரையில் தெரிந்த CNN-IBN என்ற தலைப்பு அந்தப் புகைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதில் ‘இந்த நேர்காணலைச் செய்ய முடியாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

‘அந்த நேர்காணல் குறித்து பிரசாந்த் கிஷோர் என்னிடம் என்ன சொன்னார் என்று தெரியுமா?’ என்று திடீரென்று பவன் என்னிடம் கேட்டார். ‘2014ஆம் ஆண்டு தேர்தலுக்கு மோடியைத் தயார்படுத்திய போது அவரை முப்பது முறை அந்த வீடியோவைப் பார்க்க வைத்தேன்’ என்று தன்னிடம் பிரசாந்த் கிஷோர் கூறியதாகத் தெரிவித்த பவன் கடினமான கேள்விகள் அல்லது மிகவும் சங்கடமான மோசமான தருணங்களை எவ்வாறு கையாள்வது என்பதை மோடிக்கு கற்றுக் கொடுக்க பிரசாந்த் கிஷோரின் குழு அந்த நேர்காணலையே பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார்.

தொடர்ந்து பிரசாந்த் கிஷோருடனான தனது உரையாடலின் கூடுதல் விவரங்களை பவன் என்னிடம் சொன்ன போது கூடுதல் ஆச்சரியம் அளிப்பதாகவே அது இருந்தது. நேர்காணல் முடிந்த பிறகு வேண்டுமென்றே ஒரு மணி நேரம் என்னை அங்கே காக்க வைத்திருந்ததாகவும், அதன் மூலம் என் மீது எந்தவொரு மோசமான உணர்வும் மோடிக்கு இல்லை என்று நம்பி நான் அவரது வீட்டை விட்டு வெளியேறுவேன் என்றும் பிரசாந்திடம் மோடி கூறியிருந்தார். தேநீர், இனிப்புகள், தோக்லா என்று அனைத்துமே என்னை நிராயுதபாணியாக்கும் உத்தியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கின்றன. மோடி என்னிடம் மிகவும் நட்புடனே இருந்தார் என்றும், நேர்காணலின் முடிவில் எந்தவித வருத்தமும் அவரிடம் இருக்கவில்லை என்றும் நான் பவனிடம் கூறியபோது, ​​ அது வேண்டுமென்றே செய்யப்பட்டது என்று பவன் கூறினார். அது நன்கு தெரிந்தே மோடியால் கடைப்பிடிக்கப்பட்ட உத்தி.

Modi is not going to forgive you he will not rest until he avenges you Article by Karan Thapar in tamil translated by Tha Chandraguru மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை; உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் - கரண் தாப்பர் | தமிழில்: தா.சந்திரகுரு
கரண் தாப்பர் டெவில்ஸ் அட்வகேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி, ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம், 2018

‘இன்னும் வேறு ஏதாவது உங்களுக்குத் தெரிய வேண்டுமா?’ என்று கேட்ட பவன் ‘பிரசாந்திடம் மோடி உங்களை மன்னிக்கப் போவதே இல்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் பழிவாங்குவேன் என்றும் கூறியிருக்கிறார். அதை இரண்டு மூன்று முறையாவது பிரசாந்த் திரும்பத் திரும்ப என்னிடம் சொன்னார். அதுவொன்றும் அப்போதைக்கு மோடி கூறிய கருத்தாக இருக்கவில்லை. அதுதான் அவரது நோக்கம். உங்களைப் பழிவாங்கும் வரை அவர் ஓயமாட்டார் என்றே பிரசாந்த் உறுதியாக நம்பினார்’ என்று மேலும் கூறினார்.
பவனை நம்பாமல் இருப்பதற்கு என்னிடம் எந்தக் காரணமும் இருக்கவில்லை. என்னைத் தவறாக வழிநடத்துவதாலோ அல்லது உண்மையைப் பூசி மெழுகுவதாலோ எதுவும் அவருக்குக் கிடைக்கப் போவதில்லை. மிக முக்கியமாக அவர் கூறியது 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பாஜக என்னை நடத்திய விதத்தை விளக்குவதாக இருந்தது. அதனாலேயே கட்சியின் செய்தித் தொடர்பாளர்களை எனது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியது, என்னுடைய நேர்காணல்களை அமைச்சர்கள் நிராகரிக்கத் தொடங்கியது, இறுதியில் அமித் ஷா ஆரம்பத்தில் கொடுத்த உறுதிமொழிக்குப் பிறகு, திரும்ப என்னை அழைக்கவோ அல்லது எனது அழைப்புகளை ஏற்றுக் கொள்ளவோ தவறிவிட்டது போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. எனவேதான் நிருபேந்திர மிஸ்ரா பேசிய போது, என்னைச் சந்தித்து பிரச்சனைகளைத் தீர்க்க மோடி மறுத்திருக்கிறார்.

2007ஆம் ஆண்டு நேர்காணலின் போது மோடி வெளிநடப்பு செய்தது ஏன்? – கரண் தாப்பர் எழுதி ஹார்பர் காலின்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘சாத்தானின் வழக்குறைஞர்: சொல்லப்படாத கதை’ (டெவில்ஸ் அட்வகேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி) என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி.

https://thewire.in/books/narendra-modi-karan-thapar-interview
நன்றி: வயர் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு