கார்கவியின் ஹைக்கூ கவிதைகள்

கார்கவியின் ஹைக்கூ கவிதைகள்




பசி
பறிமாறி பசியாறுகிறது
மனிதம்

அம்மாவின் கையில் உணவு
அலைகளில் நுரையில் தீரும்
குளக்கரை மீனின் தாகம்

சுட்டப்பழம்
ஒட்டிய மண்ணில் பிளிருகிறது
மண் யானை

ஏற்க இயலாத மொழி
சரி தவறு குறிக்கும்
பள்ளிக்குழந்தை

அப்பாவின் கை பீடி
பகையோடு பரவலாகிறது
புகை

எட்டாவது அதிசயம்
பிரம்மிப்பின் உச்சத்தில்
சொந்த வீடு

உதிர்ந்த பூக்களின் ஏதிலி இதழ்கள் கவிதை – கார்கவி

உதிர்ந்த பூக்களின் ஏதிலி இதழ்கள் கவிதை – கார்கவி




நான் தினந்தோறும் வாசல் அமறும் பொழுதெல்லாம்
ஒரு தாய்  எல்லை மீறிய குரல் எழுப்புகிறாள்
கடுமையான கோவத்தில் கத்தி வீட்டை அலறச் செய்கிறாள்…………
வீட்டைச் சுற்றம் செய்யும் மகளை வார்த்தைகளில் கொட்டித் தீர்க்கிறாள்…
அவ்வப்போது சீடுமூஞ்சீக் கோவத்தில் மகனை வஞ்சித் தள்ளுகிறாள்……..

பள்ளி செல்லும் அவள் அண்ணனுக்கு தோசை,
அம்மைக்கு சாப்பாடு என அடுப்பை மூழ்க அள்ளிக் கொட்டுகிறாள்
கோவத்தை மகள்….

மகனோ பணிச்சுமையென
இரவைக்கடந்து வீடுவந்து காலை ஏழுமணிக்கே வாட்சப்பில்
தனது கவலைகளை வண்டிகளாய் ஓட்டி களைத்து போகிறான் தின விடியலில்….

பணமில்லை – பல
சொந்தமில்லை
இறுகிய மனதில் எத்தனை எண்ணங்கள்
எத்தனை ஆசைகள்
வைராக்கியம் நிறைந்த உள்ளத்தில்
வெயிலும் மழையும் மாறி மாறி கொட்டித்தீர்த்தாலும்
ஒட்டுமொத்த வாரத்தைகளை உமிழ்கிறாள் இறுகிய வாழ்வில்
யார் உள்ளார் என எண்ணிய
அவள் ஒருத்தி…
திடமான பெண்ணொருத்தி…….

அவள்  ஒருத்தி
காலை எழுந்து தலை வாரவில்லை
முகத்தை முழுவதுமாக கழுவவில்லை
நெற்றி நிறைய பொட்டுமில்லை
நரைத்த மயிர்களில்
அவள் வயதையும் அனுபவத்தையும் கண்ணாடி கண்டு
திகைக்க காலை ஏழுமணியை கடந்து
கைகளில் கூடை ஒன்றை ஏந்தி……

இத்தனை நிலையிலும்
மகனை சத்தமிட்டு
மகளை கத்தி வீட்டை அலரவைத்து
ஒன்றும் இல்லாத வாழ்வை மனதில் ஏந்தி மகளின் வாழ்வையும்
மகனின் வாழ்வையும்
கத்தி கத்தி
கூப்பாடு போட்டு தினம்
வணங்கி செல்கிறாள்
இந்த நிலை கொடுத்த கணவனின் முகத்தை புகைப்படமாய்…..
ஊர் பார்த்து ஒதுங்கும் கோலமாய் திகழும் பெண்ணொருத்தி்………

Take 3 Shortstory By Karkavi டேக் 3 சிறுகதை - கார்கவி

டேக் 3 சிறுகதை – கார்கவி




ரொம்ப பரபரப்பான சூட்டிங் ஸ்பாட்…ஒரு பக்கம் ரிகர்சல்….இன்னொரு பக்கம் சண்ட காட்சினு ரொம்ப பரபரப்பா போய்கிட்டிருக்கு சூட்டிங் பன்ற இடம்….

கேரவன்ல மேக்கப்ல ஹீரோயின் ..இன்னொரு கேரவன்ல ஹீரொனு மேக்கப் ரொம்ப வேகமாக நடந்துகிட்டு இருக்கு…

புரொடக்சன் ரூல்ஸ் படி இடம் சாப்பாடுனு தடபுடல ஒரு படம் ரெடியாகிட்டு இருக்கு…..

அன்னைக்கு காலைல பத்து மணி இருக்கும்…நேத்து நடந்த அந்த சுவாரஸ்யமான குடும்ப சுசிவேசன முனுமுனுத்துகிட்டே வரா கூட்டத்துல ஒருவளா நடிக்கிற ராக்கம்மா…..

நாளைக்கு நடிக்கபோற ஒரு சண்டக் காட்சிக்காக மீச, தாடிய நல்லா சைஸ் பன்னி இந்தமாறி இருந்தா நல்லாருக்கும், அந்தமாறி இருந்தா நல்லார்க்கும்னு…ராக்கம்மா கிட்ட புலம்பிகிட்டே வரான் ராமசாமி…..

அந்த ஸ்டியோவ நெருங்குற நேரத்துல ” என்னக்கா சாப்டாச்சா முன்னடியே வன்டீங்கலா…அண்ண என்ன அந்தரத்துல பறந்துகிட்டே வராரு… என்று கேட்டான் கார்த்தி…..

ஆமா தம்பி அந்த ஆளுக்கு என்ன வேள எப்ப பாத்தாலும் அடிதடினு ஸடன்ட் பத்திதான் நனப்பு….தூக்கத்துல பொலம்பல் தாங்கல பா கார்த்தி…..னு ராக்கம்மா சொன்னாள்….இத கேட்டுகிட்டு சிரிச்சிகிட்டே ஸ்டுடியோக்குள்ள நுழஞ்சா கார்த்தி……

கார்த்தி ஒரு முதுகலை படித்த இளைஞன் கிராமத்துல இருந்து சென்னைக்கு டைரக்டர் ஆகுற கனவோட வந்த பல்லாயிரம் பேருல அவனும் ஒருத்தன்…

அப்டி இப்டினு கஸ்டப்பட்டு ஒரு படத்துல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்குற வாய்ப்பு இப்பதான் கிடச்சிருக்கு அவனுக்கு……..

அதுக்காக அவன் பட்ட கஸ்டம் கொஞ்ச நஞ்சம் இல்ல ரொம்ப அதிகம்,….பத்துக்கு பத்து ரூம்ல…நாலுபேருகூட தங்கிகிட்டு நாத்தம் புடிச்ச கக்கூசுலயும் நாலாவது ஆளா வரிசைல நின்னு வாடக கொடுக்க அவ்ளோ சிரமப்பட்டு இந்த இடத்துக்கு வந்துருக்கான் கார்த்தி…..

கார்த்தி முதல் முதலா எழுதுன கதை “டேக் இட் ஈசி” அப்டிங்ர டைட்டில் ல சார்ட் பிலிம் ஆ எடுத்தான்… அவன் அத பெருசாக்கனும் னு ஆசப்பட்டு… இதுவரை கத எழுதிகிட்டு இருக்கான்…..

ஒருநாள் ரொம்ப ஆர்வமா கதைய முழுசா எழுதி முடிச்சிடுவோம்னு எழுத உட்காரும் பொழுது…. ஒரு போனு….”அலோ…அம்மா…யப்பா அப்புனு எப்படிப்பா இருக்க, சாப்டியா …கூட எல்லாரும் எப்டிப்பா இருக்காங்கனு ஒரு சோர்ந்து போன அவன் அம்மாவோட குரல்…..நல்லார்க்கேன் மா அப்டினு அதுக்கு ஈடு கொடுத்த இவனோட குரலு… சரிப்பா பத்ரமா இரு….எங்க போனாலும்…. சூதானமா இருப்பானு சொன்ன அவன் அம்மாவோட போன்கால் முடிவுல தன்னயறியாம கண்ணுல தண்ணி கலங்க ஆரம்பிச்சது……

வாசல் ல ”டக் டக்.””..கதவ தட்டுற சத்தம் ..யாருங்க னு கேட்டான் கார்த்தி…. வெளில “நாங்கதாம் பா…ராமசாமி ராக்கம்மா…….” இதோ வரேன்கா’..னு போய் கதவ திறந்தான் கார்த்தி….

வாங்க கா…வானே இப்பதான் இடம் தெரிஞ்சதா னு இவன் கேட்க….இல்லப்பா டைம் இல்ல ..இல்லனா அடிக்கடி வருவோம்…இன்னைக்கு என் பையனுக்கு நினைவு நாள் ல அதான் அவனுக்கு எடுத்த உடுப்பு உனக்கு கொடுக்கலாமே னு வந்தோம்….வாங்கிகுவீல பா….”அண்ணே…அம்மா அப்பாவ சொந்த ஊர்ல விட்டு இங்க கடக்குற நா…என்ன பையனா நனைக்கிறீங்க நீங்க…இத ஏத்துக்கலனா நல்லாவா இருக்கும்…..முதல வாங்கனா உள்ள….உட்காருங்க….இருங்க காபி போடுற…… அதுக்கு ராக்கம்மா…இரு தம்பி நா போடுறன் நீங்க பேசுங்க னு அந்த மூலைல இருக்குற ஸடவ் அடிக்க ஆரம்பிச்சா……..

அப்ரம் அண்ணே…. திதி நல்லபடியா முடிஞ்சதா…எதும் மனசுல யோசிக்காம தைரியமா இருங்க..எல்லாம் சரியாகிடும்… அப்டினு ராமசாமிக்கும் ராக்கம்மாவுக்கும் தைரியம் சொல்ல…… அந்த பேச்சிலயே….

என்ன தம்பி ரொம்ப சோர்ந்து இருக்க…எதும் பிரச்சனையா.. இன்னைக்கு சூட்டிங் போலயா….னு ராமசாமி கேட்டான்….

இல்லன… இன்னைக்கு ஹீரோ கால்சீட் முடிஞ்சது அது சம்மந்தமா டைரக்டர், புருடியுசர் போயிருக்காங்க அதனால் இன்னைக்கு இல்ல… அதா கதை ஒன்னு முடிக்கலாமேனு இருக்க….. அம்மா போன் பன்னாங்க பேசிகிட்டு இருந்த.. அப்பதான் நீங்களும் வந்தீங்க……

ஓ இதுதான் விசயமா…… சரிசரி அம்மா என்ன சொன்னாங்க… நல்லார்காங்கலா…அப்டினு ராமசாமி சொல்லும் போது….ம் பரவாலனா….அவங்க பேச்சுல கஸ்டம் தெரிஞ்சது…என் கஸ்டத்த காட்டிக்காம அப்டியே பேசிட்டு வச சிட்டனா……னு கார்த்தி சொன்னான்….

ஏன்பா இவ்ளோ விரக்தியா பேசுற…

ஆமானா…கதை எழுதி, காமிச்சி..நாய் மாறி உழச்சு…அவன்கிட்ட திட்டு, இவன்கிட்ட திட்டு…அப்டினு எவ்ளோ கஸ்டமா இருக்குனா….சில நேரம் லைட் மேன் இல்லனா அதயும் நானே செய்வன்..ராமன்னா……

எல்லாத்தையும் ரெடி பன்னி டேக் போறதுகுள்ள போதும் போதும் னு ஆகிடும்னா….உங்களுக்கு தெரியாததா…னு பேச்ச முடிச்சான் கார்த்தி….

இடையில்….”சரிசரி இந்த காபிய குடிச்சிட்டு அப்ரம் பேசுங்கனு நுழைஞ்சா ராக்கம்மா…..

“யப்பா கார்த்தி நீ இந்த வயசுல அசிஸ்டன்ட் டைரக்டரா இருக்கும் போதே இவ்ளோ யோசிக்கிற….” நான் இங்க வந்து கிட்ட தட்ட முப்பது வருசமாச்சு….

வீட்டு கஸ்டத்துக்கு இந்த ஸ்டுடியோல கூட்டுற வேலைக்கு வந்த…நடிக்கிறதலாம் பாக்கும் போது எனக்கும் ஆச வரும்….இதோ இந்த ஆளு அப்ப ஸ்டன்ட் ல அந்த மாஸ்டர்களுக்கு எடுபுடியா வேல பாத்தாரு…..நா வர போக…என் சாப்பாடு இவரு சாப்ட…அப்ரம் நாங்க பேசி பழகி… ஒருநாள் கல்யாணம் பண்ணிகிட்டோம்… வீட்டுல ஏத்துக்கல அதனால இங்கயே காலத்த ஓட்ட ஆரம்பிச்சிட்டோம்…..கண்ணுக்கு கண்ணா இருந்த மவனும்…இந்த ஆளு ஸடன்டுக்கு இழுத்து அவன் இல்லாம போயிட்டான்……

ஒரு நாள் கிரௌடுல ஆள் இல்லனு என்ன கூப்டாங்க….அதுல டையலாக் சொல்ர பொன்னுக்கு டையலாக் வரல….ஒரு ஆர்வத்துல நான் அத சொல்லிட்ட…உடனே உன்னமாறி டைரக்டரு…”யம்மா நீ சொல்ரியாமா…இத…நீ சொல்லுனு சொன்னாரு……சரிங் க ஐயா னு நானும் சொன்ன…அதில் இருந்து அட்மாஸ்பியர் ஆக்டர்ஸ்ல நா நல்லா எல்லார்க்கும் தெரயுறபடி ஆகிட்ட…..ஏ இப்ப உன் படத்துல நடிக்கிறனே…உனக்கு தெரியாதா…..னு ராக்கம்மா இழுத்தா…….

அதுக்கு இடையிலயே ராமசாமி பேச ஆரம்பிச்சான்…..

ஆமா தம்பி…நான்லாம் உடம்பாலயும் மனசாலயும் படாத கஸ்டமே இல்லபா….. கனவோட ஊர்ல இருந்து வந்து எடுபுடியா இருக்குறது எவ்ளோ சிரம்ம்…அதில் அவ்ளோ மன உளைச்சல் இருக்கு….

ரொம்ப மட்டமா நடத்துவாங்க…அப்டி இருக்கும் போது…ஒரு ஸடன்ட் சூட்டிங்கல ஹீரோக்கு கைல அடி….அதுல நெருப்புல குதிக்குற சீன்…எல்லாரும் தயங்குனாங்க….ஆனா நா உயிர் போனா போகுது ஒருமுறை யாவது நடிச்சிடனும் னு…நா பன்ற சார் னு முன்ன போய் நின்ன….அதயும் செஞ்ச…..”இதோ இந்த தழும்பு” பாத்யா….இது அன்னைக்கு பட்டது தான்……

“கார்த்தி வாழ்க்கைல எல்லாமே ஒரே நாள்ல கிடைச்சிடாது…கஸ்டபடனும்….என்னடா அட்வைஸ் பன்றானே னு கோச்சிக்காத…நீ படிச்சவன் புரியும்…..ஒரு விசயம் தள்ளி போகுது அப்டினா அதவிட பெருசாவோ…இல்லனா இன்னும் ரொம்ப நல்லா நடக்க போகுதுனு நாம நம்பனும்…….

நம்மள பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டேக்….ஆரம்பிச்சிடனும் என்னைக்காது ஒரு நாள் டேக் கட்டாயமா பைனல் ஆகும்…

ஒவ்வொரு டேக்லயும் யாரோ ஒருத்தர் சரியா நடிக்காம போகுறதால தப்பு வருமே தவிர…உன் கதைல எந்த மாற்றமும் வராது….அதனால…விடாம முயற்சி செய்….நீயும் தனியா படம் எடுக்குற நாள் ரொம்ப தூரமில்ல….சரியா……

தைரியாம இரு….நாங்க களம்பிறோம்….சாப்டு உன்னோட திறமைல நம்பிக்க வை….கட்டாயம் எல்லாம் மாறும் னு…சொல்லிட்டு கார்த்தி வீட்டுல நம்பிக்கைய முழுசா நிரப்பிட்டு…களம்புனாங்க ராமசாமியும் ராக்கம்மாவும்……

அந்த புத்துணர்வோட… கதைய வேற ஒரு கோணத்துல மாத்தி எழுத ஆரம்பிச்சா கார்த்தி…..

மனசுக்குள்ள…..”…டேக்-1……டேக்.-2…….டேக்-3….னு அவன் குரல்ல ஸடார்ட்….ரெடி….ஆக்‌ஷன்.. அப்டினு…சத்தம்…, அது…டேக் பாக்ஸ்ல…’டேக் இட் ஈசி…….னு எழுதியிருந்தது…….கார்த்தி எழுதின கதையோட முடிவுல…

கார்கவியின் கவிதைகள்

கார்கவியின் கவிதைகள்




அளவறிந்து_வாழ்..!
***************************
இரவு பகல் பாராமல் சுக துக்கங்களை மறந்து
பணத்திற்காக ஓடுகிறான் குடும்ப தலைவன்…….

எவ்வளவு பெற்றால் இல்லை என்ற வாரத்தையை மட்டும்
நுனி நாக்கில் வைத்திருக்கிறாள்
குடும்பத் தலைவி…….

அப்பன் சேர்த்த சொத்துக்களை இளமையிலிருந்தே
விரயத்தில் முனைப்பாகிறான் மூத்த மகன்……..

தனக்கு மூத்தவன் பார்த்துக் கொள்வான் என
அண்ணனை மிஞ்சி வலம் வருகிறான் இளைய மகன்…….

இவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும்
வாசலில் யாரோ அழைத்தது போல் எட்டிப் பார்க்கிறது
வாசலில் இப்பொழுது எழுதப்பட்டு நகரும்
“ஆசையில் வாழாதே அளவறிந்து வாழ்”
என வண்ணம் குழைப்பவனின்
தூரிகையில் சொட்டும் கடைசி சொட்டு………

வெண்புகை
******************
இருசக்கர வாகனங்களும் அவ்வப்போது வந்து செல்லும்
நான்கு சக்கர வாகனங்களும்……..
நின்று செல்லும் முச்சந்தியில்
நான்கு கால் ஊன்றப்பட்டு….
ஆலாக்கு நீரில் இரண்டு அடுக்குகளாய் வெந்து
திணறுகிறது இட்டலிகள்

மூன்று ஈடு முடிந்ததும் நீரை அளந்து ஊற்றும் வேளையில்
சாலையை அளந்து வருகிறான் கணவன்…..
வட்ட நாற்காலிகளில் தட்டேந்தி நிற்பவர்க்கு
சுடச்சுட பசியாற்றும் இவளுக்கு முட்டி மோதி தட்டி தூக்கி
சத்தமில்லாமல் மறுகி தவிக்கும் காற்றோடும் காலத்தோடும்
கலந்த தலையெழுத்தாய் கரைந்து வெளியேறுகிறது
கவலை நீரில் கொதித்தெழுந்த வெண்புகை……..

உண்மையான மழை
***************************
நான்கு கால் சௌக்கை மரங்களின் தாங்களில்
தகரங்களை தாங்கியபடி நிற்கிறது பந்தல்
குளு குளு ஏசிபாக்சின் மேல குதுகலமாய்
நிரந்தர துயில் கொள்கிறார் துக்கசாமி

முகம் மறைக்க மாலை நிரம்பியது
யாரோ ஒரு சொந்தகாரன் எடுத்து ஓரம் அடுக்கி வைக்கிறான்…
மனைவி ஒருபக்கம் கண்ணீரில்
மகன்கள் ஒருபக்கம் அடுத்தகட்ட பணிகளில்…
மருமகள் தலையிலும் காலிலும் பிடித்த வண்ணம் அழுகை…
மகள்கள் பெட்டியை பிடித்த வண்ணம் கண்ணீரில் புலம்பிடும் பழைய கதைகள்

தெரிந்தும் தெரியாமல் பெரியோர் அழுகைக்கு ஈடுகொடுத்து
தேம்பலில் அமர்ந்தழும் பேரபிள்ளைகளை என பந்தல் நிரம்பிய நிலையில்
யாரும் அறியாத ஆன்மாவாய் பந்தல் நடுவே நாற்காலி போட்டு
அனைத்தையும் பார்த்து வான் நிமிர்கிறார் துக்கசாமி

நிரந்த பிரவை ஆறுதல் செய்திட
அளவில்லாமல் கொட்டித் தீர்க்கிறது…
இந்த துக்கங்கள் தொண்டையை நனைத்தபடி உண்மையான மழை……..

Nadavandi short story by Karkavi நடவண்டி குறுங்கதை - சே கார்கவி

நடவண்டி குறுங்கதை – சே கார்கவி




பொறந்த ஒரு வருசத்துல எல்லாத்தயும் புடிச்சு நடந்துட்டா…என் மவன் கார்த்திலு…. அவனுக்கு கைப்பிடிச்சு நடக்க கீழ விழாம பழகுற அளவுக்கு ஒரு நடவண்டி செய்யனும்…..”

சுள்ளி பொறிக்கி போகுற வழியில ஒரு தச்சுப்பட்டரைய பாத்து “ஏங்க இந்த நடவண்டி எவ்வளவுங்க” னு கேட்டா அஞ்சம்மா…அதுக்கு கடகாரன் ஏய் உனக்கு இதெலாம் கேட்குதா…போய் வேற வேலய பாரு போ னு அதட்டி சொன்னான் கடைகாரன்….சின்ன நடுக்கத்தோட அந்த இடத்தை விட்டு விலகி போனா அஞ்சம்மா….

தூரமா இத எல்லாம் பாத்து கிட்டு நின்னா புருசன் சேகரு….அவனோ தினக்கூலிக்கு மரம் வெட்டுற வேலைக்கு போய் குடும்பத்த காப்பாத்துறான்….சின்ன மனக்கஷ்டத்தோட அவன் சைக்கிள உருட்டிக்கிட்டு வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சான்…சேகரு…

அந்த விசயத்த பாத்த பிறகுதான் தான் மகன் நடக்க பழகுற அளவுக்கு வளந்துட்டானு அவனுக்கு மூளைக்கு செய்தி வருது….

என்ன பன்னலாம் னு …தினம் யோசிச்சு அதுக்காக அதிகம் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் சேகரு……..

வீட்டு வேலை பாத்துட்ட மீதம் இருக்கிற நேரத்துல பனமரத்துல பனங்கொட்டை நடுர வேலைக்கு ……. அஞ்சம்மா அப்பப்ப போய் அஞ்சோ பத்தோ சம்பாதிப்பா……..

எப்படியோ கஸ்டப்பட்டு பணம் சேத்துட்டான் சேகரு…… அவனுக்கு தெரியாம அஞ்சம்மாவும் பணம் சேத்துட்டா….

ஒருநாள் ராவுல ஏயா…நா பனங்கொட்ட புதைச்சதுல அம்பது ருபாய் சம்பாதிச்சுட்டயா… நம்ம பைய நடக்க செவுத்த புடுக்கிறான்யா….இந்த காசுல அந்த மொக்கன் பட்டரையில. புதுசா நடவண்டி விக்கிதுயா…அத வாங்கலாம்யா….னு அவ ரொம்ப அஸ்கி குரலுல மவன மடியில போட்டு தட்டிகிட்டே புருசன் கிட்ட சொல்லுரா…

அப்ப இன்னொரு அதிர்ச்சியா…”ஏய் இந்தா புள்ள அம்பதுருவாய்…” நீ அன்னைக்கு அந்த கடைல பேசினத பாத்த…மொக்கன் உன்ன திட்னதயும் பாத்த…இந்தா நாளைக்கு முத வேலயா பையலுக்கு அத வாங்கிடு…சரியா…னு சொன்னான் …..அத கேட்டதும் அஞ்சம்மாக்கு அவ்ளோ சந்தோசம்…..

அடுத்த நாள் காலைல ரெண்டு பேரும் போய் அந்த மொக்கன் பட்டரைல…” யோவ் மொக்க அன்னைக்கு என் பொன்சாதிய சத்தம் போட்டியாமே…ஏன்யா இருக்குறவன்தான் வாங்கனுமா…எடுயா அந்த நடவண்டிய அப்டினு சத்தம் போட்டு….எவ்வளவுயா னு கேட்டான்….அம்பத்தி அஞ்சு சேகரு…அப்படினு மொக்கன் சொல்ல…இந்தா புடி னு கொடுத்துட்டு…வண்டிய வாங்கு அஞ்சம்மா கைல கொடுத்தான் சேகரு…..

அவசரமா வாங்கி அத தொட்டு தடவி ரொம்ப சந்தோசத்தோட மகன் கைல கொடுத்து ” செல்லம் புடிங்க அப்படி புடிங்க..அங்க பாரு அப்பா பாரு…தள்ளு தள்ளு தள்ளு….நடங்க அம்மா கூடவே வர…அப்பா உனக்கு முன்னாடி போறாங்க பாரு….னு மகன உற்சாகப்படுத்துனா….அஞ்சம்மா….நடவண்டிய கைல வாங்குன சந்தொசத்துல வேகவேகமா தள்ளி கீழ விழுகிறான் கார்த்திலு……..அடுத்த நொடி சின்னதா ஒரு அதிர்வு…திரும்பி பாத்தா….அஞ்சம்மாவும் சேகரும்…பொடி நடையா கார்த்திலு கைய புடிச்சிகிட்டு…..

என்ன இடம் பா இது…ஏங்க உங்களுக்கு தெரியுமா…னு கேட்ட… இதுவா மா….இது தா நாம இனிமே இருக்க போற இடம்மா….எனக்கு ஒரு பெரிய கம்பேனில வேலை கெடச்சிருக்குல….அந்த கம்பேனில கொடுத்த வீடுமா……அங்கதா நாம போறோம் னு சொல்லி….அஞ்சம்மாவையும், சேகரையும் ரெண்டு பக்கமும் கைப்பிடிச்சு…அவனுக்கு நடவண்டி சொல்லிக் கொடுத்த. கடந்த காலத்த நினைச்சுகிட்டே…சந்தோச நட போட்டான்….கார்த்திலு…

Aangiri Shortstory By Karkavi ஆங்கிரிசாமி குறுங்கதை - கார்கவி

ஆங்கிரிசாமி குறுங்கதை – கார்கவி

இவர்தான் ஆங்கிரிசாமி… இவர் பத்தாவது வரைக்கும் படிச்சிட்டு அந்த காலத்து வேலைனு அப்பப்ப பீத்திக்கிர அளவுக்கு ஒரு ஆபிசுல பியுனா இருக்கார்……

அழகான பொண்டாட்டி லவ்லிரோசா ஆனா.. அவருக்கு எப்போதும் அவளமட்டும் புடிச்சதே இல்ல….

எப்போதும் வேலை உண்டு வீடு உண்டுனு பணத்த சேக்குரதுல மட்டும்தான் குறியா இருப்பாரு…

தொட்டதுக்கு எல்லாம் குத்தம் சொல்லிகிட்டு கோவத்த நுனி மூக்குலயே வச்சிக்கிட்டு திரிவார்…

இப்படியே சண்டையுமா, மனஸ்தாபமா போன இவங்க வாழ்க்கைல ரெண்டு குழந்தை வந்து பிறந்தாங்க….. அவங்தான் ஆதிரன், ஆதிரா…. இவங்க ரெண்டு பேரும்ணா ஆங்கிரிசாமிக்கு கொள்ள பிரியம்… ஆனா மனைவிய மட்டும் எரிஞ்சி விழ எப்படி கத்துக்கிட்டாரனு தெர்ல….

யார பாத்தாலும் அடியில நெருப்பு வச்சமாறி இருக்குரதால அவரோட அழகான பேரு அரவிந்த்சாமி இப்பலாம் ஆங்கிரிசாமி யா ஆகிடாப்ல…..

என்னதான் வெளில, மனைவிகிட்ட கோவப்பட்டாலும் புள்ளைங்ககிட்ட சக்கரையா கரஞ்சிடுவாரு நம்ம சாமி்… அதபாத்து நம்ம லவ்லிரோசா மனச ஆறுதல் படுத்திக்குவா…

பசங்களுக்கும் பத்து வயசு வந்துச்சு.. ஈரத்தோட டம்ளர் தந்தாளும் கோவபடுற சாமிக்கு ரொம்ப கஸ்டமான நிலை வந்துச்சு….

நேரம் தவறாம சோறுபோடும், அக்கரையா பாத்துக்குர அழகு ரோசாக்கு உடம்புல நோவு.. ..

காலம் போக போக சத்தம் குறைய ஆரம்பிச்சது அன்புகாட்டுன புள்ளைங்க எல்லாம் அடுத்தடுத்த அன்பு தேடி போயிட்டாங்க

ஒருநாள் எல்லாத்தையும் இழந்தது போல ஒரு சூழ்நிலை… காரணம் ரோசா தவறிட்டா…

அழகு மல்லி…அவளுக்கு புருசனா உயிரு…அம்மா அப்பா பாத்துவச்சாலும் குனிஞ்ச தல நிமிராம புருசன ஏத்துகிட்டா..மல்லிகைப்பூ வலிக்காம தலையில வச்சி எடுப்பா..இப்ப ஊரே கொண்டு வந்துருக்கு பாக்க அவ இல்ல…

ஓரமா ஒரு சேர்ல உட்காந்துருந்த சாமிகிட்ட ஆறுதல் சொல்லகூட யாரும் கிட்ட வரல…ஏன்னா அவர் குணம் அப்டி..தூரமா நின்னு புள்ளைங்களுக்கு ஆறுதல் சொல்லி வநத வங்க இறுதிசடங்க முடிச்சிட்டு போனாங்க….

வந்தவங்கலாம் போனாலும் இன்னும் ரோசா அந்த வீட்டுலதா இருக்கா அந்த அடுப்பங்கரையா…பாத்ரம் கழுவ சத்தமா… வார்க்கோல்ல கைரேகையா… இப்படி பாக்ர இடமெல்லாம் நிரம்பி இருந்த ரோசாவ நனச்சிகிட்டே வாசல் வர போனான் சாமி….

எப்போது அடுத்த வீட்டு சுவத்துல உச்சா போனாலே அந்த தெரு நாய கல்லால அடிப்பான்…இப்ப “ச்ச்ச்ச” னு கூப்டு கைல குடிக்க கொடுத்த டீ ய அந்த நாய்க்கு ஊத்துனான்…. அத குடிச்சிகிட்டே அவன் கைய புடிச்சது அந்த நாய்….மனசுல தேங்கிங்கிடந்த கோவம் எல்லாம் கண்ணீரா வழிஞ்சி ஓடுனது அந்த வாசலோட ஆங்கிரி சாமிக்கு……….

“இருக்கும் பொழுது தெரியாத அருமை அவங்க இல்லாதப்ப புரிஞ்சாலும் பயனில்ல அப்டிங்கரதுக்கு நம்ம ஆங்கிரிசாமி…ஒரு நல்ல எடுத்துக்காட்டு………

Thanmunai kavithaigal By Karkavi. தன்முனைக் கவிதைகள் - கார்கவி

தன்முனைக் கவிதைகள் – கார்கவி

மனிதனும் மண்ணும்
**************************
நீர் குழைத்த சேற்றில்
ஈரமானது வாழ்க்கை
ஏற்றத்திற்கு ஐம்பதும்
இறக்கத்திற்கு ஐம்பதும் ஆனது

ஈரமான மண்ணில்
ஓங்கி நிற்கும் கட்டிடங்கள்
கூரை மேய்ந்தவன் அவனே
தாரை ஊற்றியவன் அவனே

களத்து மேட்டு நெல்லி்ல்
பசியும் பட்டினியும்
பசுமையோடு உலவி வரும்
பச்சையம் நிறைந்த காற்று

நீர் பாய்ச்சிய மண்ணில்
பரிணாமம் விளைகிறது
பட்டினிகளில் கரங்களுக்கு
பெய்கிறது பசுமை மழை

உடலோடு ஒட்டிய மண்ணில்
உழைப்பு படிகிறது
இரத்தம் வடிதலும்
யுத்தம் பிறப்பதும் இயல்பாகிறது.

நம்பிக்கை
*************
பரிகாரங்களை முடித்த
பாவமான ஆண்மகன்
பக்கத்தில் அமர்கிறாள்
ஒரே நட்சத்திர பெண்மணி

கழுத்தில் மாலையிட்டு
தொட்டு தொட்டு பார்க்கிறான்
நவக்கிரகங்கள் தான்
இடை மறித்து நிற்கின்றன

அவனும் அவளும்
அருகருகே அமர்வு
அந்த செவ்வாய்
திரும்பினால் திருமணம்

நெடுந்தூரம் வேண்டி
கால் கடுக்க பயணம்
காதலித்திருந்தாள் அந்த
மைல்கள் அருகிலோ

உறவுகள் நினைத்திருந்தால்
நீ உற்று உற்று
கும்பிட வேண்டாம்
ஊமைக் கல்லை

காதலிசம்
*************
உன்னை நினைத்த பின்
உலகமே மறக்கிறது
உண்மை தெரிந்த பிறகு
காதலே மறக்கப்படுகிறது

நிலவுக்கு பெயர் வைத்தேன்
நீ என்று
உண்மையில் கரைவது
நான் மட்டும் தான்

ஆற்றோர அமர்வில்
காதல் பயணிக்கிறது
எறிந்த கல்லில்
எத்தனை எண்ணங்களோ

வறண்ட
நிலத்தலும்
சாகுபடி செய்யும் காதல்
வயது என்பதையும்
மறக்கிறது ஒரு காதல்

வானமெல்லாம் எண்ண மழை
தேங்குகிறது மனதில்
விருப்பத்திலும் விருப்பமில்லாமலும்
தேங்கும் பெற்றக்குளம்

Kazhipparai Kagitham Article By Karkavi. கழிப்பறைக் காகிதம் - கார்கவி

கழிப்பறைக் காகிதம் – கார்கவி

” இந்த கக்கூஸ் இருக்கே”

“அட என்னயா இது நாலுபேர் மத்தியில இப்படி ஒரு வார்த்தையை சொல்ர.. கேட்கவே ரொம்ப ஒரு மாதிரி இருக்கேயா….” ஏன்டா மாடசாமி நீ என்ன வேல பாக்ர… நான் விவசாயம் பன்றன்டா ராமசாமி …

சரி இந்த இருபத்தோறாம் நூற்றாண்டுல நாம வயல்வெளியில கஸ்டபட்டு கண்ணுக்கு தெரியாதவன் பலபேருக்கு வயித்து பசிய போக்குறோம்…

ஆனா நம்ம புள்ளைங்க பள்ளிக்கூடத்தில உங்க அப்பா என்ன வேல பாக்ராங்கனு கேட்கும் போது…பல புள்ளைங்க அப்பா டாக்டர், இன்ஜினியர்,வக்கில் னு சொல்லும் போது ரொம்ப பெருமையா விவசாயம் னு சொல்ரத கவனிச்சிருக்கியா…

அதுவே அடுத்த வேல சாப்பிட வழி இல்லாம இன்னும் கஸ்டபடுற மக்கள் நம்ம நாட்டுல ஏதோ ஒரு மூலைல இருக்கதான் செய்ராங்க…..

“போனவாரம் நா அந்த மலைக்காட்டுக்கு பின்னாடி இருக்குற ஊர்க்கு என்னோட பொன்னுக்கு தொடர்ந்து காய்ச்சலுனு மூலிகை வாங்க போன.. அங்க ரொம்பவும் இருக்க வசதி இல்லாத இடத்துல எனக்கு மூலிகை கொடுத்தாங்க நானும் கொண்டு வந்து என் புள்ளைக்கு கொடுத்த இப்ப அவ நல்லார்க்கா…!

அங்க இருக்குற மக்களுக்கு இருக்க சரியான வீடு இல்ல, போட்டுக்க ஒழுங்கான துணி இல்ல, அடுத்த வேல சாப்பாட்டுக்கு வழி இல்ல..

அவங்களோட முக்கியமான வேலையே அவங்கள சுத்தி, அந்த மலையில கிடைக்க கூடிய ஆடு, மாடு விலங்குகளை பட்டிப்போட்டு வளர்த்து அதயே அவங்களோட வாழ்வாதாரத்து தேவையானதா மாத்தி பயன்படுத்திகிறாங்க, அவங்கள சார்ந்த மக்கள அவங்களே பாத்துகிறாங்க..

அதிலயும் நம்ம விளைவிக்கிற அரிசி அவங்களுக்கு சரியான விதத்தில் போய் சேருறது இல்ல..அவங்க அத பாத்ததும் கூட இல்ல கிராமத்துல இருந்து நகரத்துக்கு வந்து பெரிய வீடுகளுல்ல வேலை பாத்து,,,தெருவ கூட்டி,சுத்தம் செஞ்சி அவங்களோட வயித்து புழைப்ப பாத்துகிறாங்க, ஆம்பளைங்க வேட்டைக்கு போறாங்க, பல இடத்துல கூலீக்கு வேலை பாத்து குடும்பத்த பாதுகாக்குறாங்க….

இதுல முக்கியமான விசயம் னு சொல்லனும்னா… அவங்க வீட்லயே வளர்ப்பு பிராணியா பன்றிகளையும்,ஆடு,மாடு எல்லாம் வளர்த்து…அத தன்னோட உணவாகவும் விற்பனைக்கும் மலைக்கு கீழ கொண்டு வராங்க..

பன்றிகளோட கழிவ மூட்டைகள் ல சேகரிச்சு நம்மலோட விவசாயத்துக்கு உரமா கொண்டு வந்து தராங்க…

என்னோட பொன்னுக்கு மருந்து வாங்க போன்னு சொன்னல.. அந்ந மருந்து கொடுத்தவர் பேரு கூனியன் அவர்தான் என்னோட நிலத்துக்கு உரம் கொடுக்குறாரு…

“என்னயா ராமசாமி சொல்ர நீ அந்த உரமா வாங்கி போடுற… ஆமா முனுசாமி அதுவும் உரம் தான்…அத பயன்படுத்துறதுல என்ன இருக்கு…ஒருகாலத்துல பல பண்ணையாருங்க அத்தான் பயன்படுத்துனாங்க இப்ப பன்னுறது இல்ல…

இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகைல அப்படி ஒரு கூட்டம் இருக்குனே யாருக்கும் தெரியிறது இல்ல…

அவங்களும் மனுசங்கதான்.. அவங்களுக்கும் வாழ்வாதாரம் அப்படினு ஒன்னு வேணும்ல…

இந்த டீக்கடைல கக்கூஸ் கட்டனும் னு சொன்னதுக்கே நீ அவ்வளவு பெருசா முகம் சுழுச்சியே…பல சமுதாய மக்கள் அதயே தொழிலா செய்யுறாங்களே அத எல்லாம் நீ நனச்சி பாத்ருக்கியா…

பணவாதிங்க இருக்குற ஊர்ல கழிப்பற இல்லாத காலத்துல இரண்டு கல்லு வச்சு காலைக்கடன முடிச்சிட்டு போவாங்க… பிழைப்புக்காக அத சுத்தம் செஞ்சு கொடுத்துட்டு வயித்து பிழைப்புனு மனச கல்லாக்கிகிட்டு போற சமுதாய மக்கள நாம இதுவரை நாம நனச்சி பாத்ததே இல்ல அப்டிங்கரதுதான் உண்மை….

மலை,காடுனு இருந்த கூட்டம் இப்பதான் கிராம்ம் நகரம்,படிப்புனு கொஞ்சம் முன்னேறி வருது…

காலத்துக்கு ஏத்தமாறி அவங்களும் புள்ளைங்கல படிக்க வச்சு, பின்தங்கிய நிலையில இருந்து கொஞ்சம் மேல வந்துகிட்டு இருக்காங்க…

அதாவது உனக்கு ஒன்னு தெரியுமாடா மாடசாமி அவங்க தான் நம்ம பூமியோட பூர்வகுடி ன்னு சொல்றாங்க ஆனா நகரத்துல நாத்தம் புடிச்ச குப்பைகளுக்கு மத்தியிலயும் சாக்கடை சகதியிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ்றாங்க, கழிவுநீர் தொட்டியில் விழுந்து சாவரது யாரு இவங்க தான் டா இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அந்த மக்கள இப்போ இருக்கிறதுக்கு இடமில்லாமல் அழிஞ்சிட்டு வராங்க..

“சமுதாயம் என்பது மக்களை மேம்படுத்த ஒன்றுபட வேண்டுமே தவிர இழிவு படுததக்கூடாது” இனம்,மொழி, மதம் இவைகளை ஒன்றுபடுத்தி வாழ முற்படும் நாம் மக்களின் சூழல்,வாழ்வாதாரம் அவற்றிற்கான வழியை சற்று திரும்பி பார்த்து அனைத்து தரப்பு மக்களின் அடுத்த கட்ட நிலையை மேம்படுத்த போராடுவோம்…

மனிதம் உணருவோம்
மனிதம் காப்போம்…!
மனிதம் போற்றுவோம்…
மனிதம் புகட்டுவோம்…

Pothum endru solvathu Unavil Mattumalla Article By Karkavi போதும் என்று சொல்வது உணவில் மட்டுமல்ல - கார்கவி

போதும் என்று சொல்வது உணவில் மட்டுமல்ல – கார்கவி

வாழ்வில் எத்துணையோ இடங்களில் மனிதன் போதும், மனம் நிறைவாகி விட்டது என்றது ஒரு போதும் சொன்னதில்லை…

அப்படி ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் மனம் விரும்பி, வயிறு நிரம்பி அதற்கு மேல் உண்டால் வெடித்துவிட கூடுமோ என்ற சிறு அச்சத்திலும், பெரும் நிறைவிலும் கூறும் இடம் உணவாகத்தான் இருக்க கூடும் என்பது அனைவரும் அறிந்த விடயமே…

ஆனால் அது மட்டும் முடிவல்ல….

தம்பி தங்கைக்காக போதும் எனலாம்… அம்மாப்பா வின் அன்பை போதும் எனலாம்…

ஏதோ ஒரு கையேந்திபவனில் உனக்கு வரவிருக்கும் இட்டலியின் பெயரில் ஊர்ந்துவரும் பிச்சைகாரன் பெயர் உள்ளதென்றால் அங்கு போதும் எனலாம்…..

மற்றவனின் பணம் உன்னிடம் வந்தால் உனக்கானது இல்லை என்று போதும் எனலாம்…

அடுத்த குடம் ஊற்றினால் நிறைந்துவிடும் தொட்டியில் அளவாக ஊற்றிட போதும் எனலாம்….

அடுத்தநாள் வேண்டி அளவாக இரை தூவி விட்டு அடுத்த கோழிகளுக்கு வேண்டுமென அந்த இடத்தில் போதும் எனலாம்…..

அதீத கஸ்டத்தில் ரணத்தை மறைத்து சிரித்துகொண்டே போதுமென சொல்லிவிடலாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கடவுளிடம்…..

ஆயாவின் வெத்தலையில் வெந்துவிடாது இருக்க சுண்ணாம்பு போதும் எனலாம்….

சுற்றாத்தார் வத்தி வைப்பில் சுருக்கென கண்படுமே கண்டதெலாம் போதும் எனக்கும் காலம் உண்டு என போதும் எனலாம்…

இருபது வயதினில் வரும் கோவத்தினை போதும் எனலாம்….

கொஞ்சிடும் சேவலை கோழி முட்டையிடும் வரை போதும் எனலாம்…

எட்டாவது பிரசவத்திலும் பெண் என்றால் இதற்குமேல் வேண்டாம் என பெண்ணே போதும் எனலாம்….

போதும் என்பதற்கு உணவு மட்டும் அல்ல… உறவுகளையும் பல நேரங்களில் போதும் எனலாம்…

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து…