காங்கேயம் கார்த்திகா கவிதை

காங்கேயம் கார்த்திகா கவிதை

புதைக்க இடமில்லாததால் புதைகுழிகளாய் மாறுகின்றன பூங்காக்கள்... பற்றாக்குறை விறகுகளால் அடுத்து வரும் சடலங்களுக்கு விறகாகிறது முந்தைய பிரேதம்... அவசர, அவசரமாய் திறக்கப்படுகின்றன மூடிய தொழிற்சாலைக் கதவுகள் உயிர்வளிக்காய்... உயிரறுக்கும் காலனின் கயிறறுக்க உயிரையும் பணயம் வைக்கிறார்கள் மனிதக் கடவுள்கள்... எல்லாம் தெரிந்தும்…
காங்கேயம் கார்த்திகா கவிதை

காங்கேயம் கார்த்திகா கவிதை

மன்னரை மக்களாக்கும் மக்களும் மன்னராகும் மாபெரும் திருவிழா... வெறும்புள்ளிகளைப் பெரும்புள்ளிகளாக்கி பெரும்புள்ளிகளெல்லாம் வெறும்புள்ளிகளாக்கும் விரலின் கரும்புள்ளிகள் கொண்டாடும் வெற்றித் திருவிழா... பாமரனும் ,படித்தவனும் வரிசைகட்டி ஜனநாயகம் பாடும் பண்பாட்டுத் திருவிழா... ஆண்டுகள் ஐந்திற்கொருமுறை ஆண்டான் அடிமைச் சமூகம் மாற்ற அவசியமான அற்புதத்திருவிழா...…
கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

நான் அறிந்திருக்கிறேன் நீங்கள் அணிந்திருக்கும் போலியான உங்கள் முகக் கவசங்களை... நான் அறிந்திருக்கிறேன் என் முதுகுக்குப் பின்னால் பேசிடும் உங்கள் வார்த்தைகளின் அடி நாதங்களை... நான் அறிந்திருக்கிறேன் உங்கள் சிரிப்பினில் மறைந்திருக்கும் துரோகங்களின் கூர்வாட்களை... நான் அறிந்திருக்கிறேன் உங்களின் புகழுரைகளுக்குப் பின்னால்…
*புகை* – *கார்த்திகா*

*புகை* – *கார்த்திகா*

கையில் பிடித்திருக்கும் கணேஷ் பீடியை அப்படியே வாய்க்குள் திருப்பி தீக்கங்கோடு வெளியே எடுக்கையில் ஒரு  நடிகரின் பெயர் சொல்கையில் அப்படியே சிலாகித்துப் போவார் அப்பா... சுருள் சுருளாய் வெளிவரும் புகை ., நீள்வட்டமாகிப் பின் காற்றில் கரைகையில் வானத்தில் பறப்பதாய் நினைத்துக்…
*தனிமை* – கார்த்திகா

*தனிமை* – கார்த்திகா

முன்பொரு நாள் நான் ரசித்துக் கேட்ட பாடலை இப்போது யாரோ சிலர் முணுமுணுக்கிறார்கள்... முன்பொரு நாள் நான் ரசித்த கவிதையை இப்போது யாரோ ஒருவர் சிலாகிக்கிறார்கள்... முன்பொரு நாள் நான் குளித்த நிலவினில் இப்போது யாரோ சிலர் குளிக்கிறார்கள்... முன்பொரு நாள்…
கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

உங்களின் முள்கிரீடங்களைச் சூட்டுங்கள்., தயாராகவே இருக்கின்றன அவர்களின் தலைகள்... உங்களின் பாவமூட்டைகளையும் சுமத்துங்கள் தயாராக இருக்கின்றன அவர்களின் முதுகுகள்... தன்னை அறையப் போகும் சிலுவை எனத் தெரிந்தேதான் அதனைச் சுமக்கத் துணிகிறார்கள் அவர்கள் ... இதோ கை,கால்கள் மட்டுமல்ல , அவர்களின்…
கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

நள்ளிரவில் விழித்துக் கொண்ட அதன் கையில் மந்திரக்கோல் இருந்தது... நிலவொளி வெளிச்சத்தில் பால்வெள்ளை நிறத்தினில் தெரிந்த அதன் கரங்கள் பிடித்திருந்த கோலை சுழற்றத் தொடங்கியதும்., வடிந்த கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளின் ஈரம் காயத் தொடங்கியது... காயங்களின் மீது அடர்களிம்புகள் பூசத் தொடங்கின...…
கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

அவர்களின் பாதைகள் அடைக்கப் பட்டிருந்தன... அவர்களின் குரல்கள் நசுக்கப் பட்டிருந்தன... அவர்களின் முகங்கள் திரையிடப் பட்டிருந்தன... அவர்களின் இரைப்பைக்குள் தண்ணீர் மட்டுமே நிரம்பியிருந்தது... இருந்த போதும், சிட்டுக் குருவிகளுக்கு சிறுதானியம் இறைத்துக் கொண்டிருந்தார் ஒருவர்... அடிக்கிற குளிருக்கு நட்டு வைத்த நாற்றுக்கு…
கார்த்திகா கவிதை

கார்த்திகா கவிதை

அந்தரத்தில் மிதக்கிறது திசையிழந்த பறவையின் கூடொன்று... தாகத்தில் கட்டுண்ட அதன் அலகுக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன சில தண்ணீர்க் குடுவைகள்... இரைப்பைக்கு வெளியே எட்டிப் பார்க்கும் அமிலவாசனையில் அடைபட்டுக் கிடக்கின்றன அதன் சிறகுகள்... ஆனந்த பைரவி பாடும் அதன் முனகல்கள் யாவும்…