Posted inPoetry
கிடோ கவிதை – க. புனிதன்
கண் இமைகள் தாழ்த்தி
சோகத்தில் கண்ணுற்று
இருக்கும் துறவி போல்
மழைத்துளிகள் பெய்யும்
பொழுதில்
கடைசி இலை விழ
காத்திருக்கும்
இலை உதிர் மரம்
இலை உதிர் காலத்தை
நினைவுபடுத்தும்
மஞ்சள் நிறத்திலும்
வசந்த காலத்தை
நினைவு படுத்தும்
சிவந்த நிறத்திலும்
வர்ணம் பூசப்பட்டிருக்கும்
அம் மலைப் பகுதி பள்ளியில்
மழை மேகங்கள் எப்பொழுதும்
மன பாடம் இல்லாத பகுதியில்
இருக்கின்றன
இலை உதிர் காலம்
முழுவதையும்
கிடோ எனும் மொழியில்
தெரிந்து வைத்திருக்கிறது
சிட்டுக்குருவி
இந்த இலை உதிர் மரங்களா
மேகத்தை திரட்டி
மழையாய்ப் பெய்து
கடலாய் உருவாகின்றது
என நினைத்தால்
ஆச்சரியமாய் இருக்கின்றது
நான் பாலைவனத்தில்
விதை போல்
நீ பருவம் தந்த மழை போல்
இசைக்கேற்ப
தலை அசைக்கிறான் திருடன்