கோடுகள் கவிதை – ச.சக்தி

கோடுகள் கவிதை – ச.சக்தி




இறந்த
உடல்களை
வேக வைத்துக்கொண்டிருக்கும்
தாத்தாவின்
வயிற்றில்
நெருப்பாக எரிகிறது
நெளியும் புழுவாகிய பசி,

கிழிந்த
செருப்புகளைத்
தைத்துக் கொண்டிருக்கும்
அப்பாவின் கைகளில்
நெளிய ஆரம்பிக்கிறது பலரது பாதங்களுக்கான
பாதைகள்,

தேநீர்க் கடையில்
யாரோ குடித்து
வைத்த தேநீர்க் குவளையைக்
கழுவ முற்படும்
சிறுவனின்
கண்களில்
வழிய ஆரம்பிக்கிறது
குடும்பத்தின் வறுமை,

வேகமாக சென்று
கொண்டிருந்த
இருசக்கர வாகனத்தில்
அடிப்பட்டு
இறந்து போன
அணில் குஞ்சின்

தலையில்
வரையப் பட்டிருக்கிறது
நில்,கவனி,செல் என்ற
மூன்று மந்திர கோடுகள்,

கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791742986,