கவிதை: “மறைத்தல்” – ஐ.தர்மசிங்

கவிதை: “மறைத்தல்” – ஐ.தர்மசிங்

      "மறைத்தல்" மறைத்து விட்டதாக மார் தட்டிக் கொள்கிறீர்கள் மறைத்ததால் தான் உற்று நோக்குகின்றன ஊரின் கண்கள் எனும் உண்மை உணராமல் விழிகளை மூடிவிட்டு உலகம் இருண்டு விட்டதாக எண்ணிக் கொள்ளும் உங்கள் பூனைத்தனம் அறிவாளித்தனமா இல்லை அறிவிலித்தனமா…
Kumari I. Dharma Singh Six Poetries in Tamil Language. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam.

ஐ. தர்மசிங் கவிதைகள்



1.மனதின் அருகாமையையும்
மனதின் விலகலையும்
வெளிப்படுத்த
மனங்கள் கையாளும்
மௌன மொழி
” ஸ்பரிசம் “…

2.வசப்படும் பொழுதெல்லாம்
சிக்கனமில்லாமல்
சிந்தி விடு
நீ வெளிப்படுத்த
நினைக்கும் போதெல்லாம்
எளிதில் வசப்படாது
” புன்னகை “…

3.ஒற்றை வடுவின் சுவடோடு
முடிவுக்கு வரும்
நாவினால் சுட்டுவிட்டால்…
” பூக்களை
மென்மையாகத் தூவுமா?
கன்னத்தில்
ஓங்கி அறையுமா?”
விடை தெரியும் முன்
புலனாகாத உயிரோடல்லவா
பூப்பந்து விளையாடி விடுகிறது
“மௌனம் “…

4.சிலரின் உயிர்கள்
ஒரு நாள் வாழ்ந்து விடுகிறது
ஒரு கோப்பை
தேநீரில்…

5.குரங்கின் கையில் பூமாலையை
கை நீட்டி கொடுத்து விட்டு
கதறி அழுவது அறிவீனம்
கடைசிப் பூவையும்
பிரித்து வீசுவதில்தான் அது
புளகாங்கிதம் அடையும்
புதிய நாரெடுத்து
பூத்தொடுக்கத் துவங்குவது தான்
புத்திசாலித்தனம்…

6.பார்த்தவுடன் கைகளை
விரித்தபடியே ஓடோடி வந்து
ஆரத்தழுவ வேண்டும் எனும்
ஆசை துளியும் இல்லை
என் முகம் நோக்கி
உதடுகள் வெளிப்படுத்தும்
ஒரு புன்னகையில் கூட
பொய் ஒளிந்திருக்காத அளவுக்கு
நான் மாற வேண்டும் எனும்
கனவு நனவாகும்
வாழ்வை மிக நேசிக்கிறேன்…

ஐ. தர்மசிங்

Poet Kumari I. Dharma Singh's Idaiveli Poetry in tamil. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

ஐ. தர்மசிங் எழுதிய “இடைவெளி” கவிதை

இடைவெளி " மயக்கும் வாசம் மல்லிகை" என்பேன் " ரோஜா போல வருமா?" என்பாள் " மாங்கனியின் சுவை இனிமை" என்பாள் " பலாச்சுளை போல வருமா?" என்பேன் "ஆலமர நிழல் சுகம்" என்பேன் " வேப்பமர நிழல்தான் நல்லது" என்பாள்…
” தேவதைகள் ” கவிதை – ஐ. தர்மசிங்

” தேவதைகள் ” கவிதை – ஐ. தர்மசிங்

" தேவதைகள் " கவிதை வீதிகளில் நமது துர்நாற்றங்கள் தாதியராய் துடைத்தெறிபவர்கள் அவர்கள் நாம் கூட்டுவோம் வீடுகளின் முன் பெருக்குபவர்கள் அவர்கள் தன்னலம் படைத்த சாக்கடை உற்பத்தியாளர்கள் நாம் பூ போல அள்ளிச்செல்லும் பொதுநலம் கொண்டவர்கள் அவர்கள் மணியடித்து கேட்டு வாங்குவார்கள்…
ஐ. தர்மசிங் கவிதைகள்

ஐ. தர்மசிங் கவிதைகள்

" சிறகடிக்கும் நேரமிது " "பறப்பதற்கு புதிய சிறகுகள் தருவோம் பழைய அலகினை புதுப்பித்து தருவோம் குஞ்சுகளுக்கு பறக்கும் பயிற்சி தருவோம் பாதுகாப்பாக புதிய கூடு கட்டித் தருவோம் ஆங்காங்கே குடிநீர்த் தொட்டி அமைத்து தருவோம் கூடுகளில் இலவம்பஞ்சு மெத்தை அமைத்துத்…