Aindhu Latcham Short Story By Era Kalaiyarasi ஐந்து லட்சம் குறுங்கதை - இரா.கலையரசி

ஐந்து லட்சம் குறுங்கதை – இரா. கலையரசி




“பயங்கரமா இருக்கும். நீ எப்படி அங்கேயே இருக்கமுடியும் சொல்லு. எனக்கு என்னமோ சரியா படல பார்த்துக்க”னு சொன்ன சம்பத் திகிலோட தான் இருந்தான்.

“சரி எல்லாத்தையும் எடுத்து வச்சுக்க. அவங்க கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பேசிட்டியா?”

“ஆமாம் பேசிட்டேன். ஐந்து லட்சம் ரூபாய் நிச்சயமா தருவாங்க”.

அந்த ஒரு நாள் இரவு பத்தி யோசிக்க, யோசிக்க பயம் பிடரியை பதம் பார்த்தது. அந்த வீட்ல ஒரு நாள் இருக்க இரவின் இருளுக்கு துணையாக இரண்டு பெட்டி மட்டுமே இருந்தது.

“சரக் சரக்” கால் சத்தம் அடுத்த அறையில் கேட்டது. முன்னும் பின்னும் அசைந்த திரைசீலையில் பெண் ஒருத்தி நடக்க ஆந்தைகள் அலறின.

அரண்மனை முழுசா ஆட்கள் பேசும் சத்தம். ஆனால் ஆட்கள் இல்லை. ஏதாவது எபக்ட்ஸ்னு நினைத்தவனுக்கு பல அறையில் இருந்து வரிசையாக வந்தபடி இருந்தனர்.

மயங்கி விழுந்தவரை தாங்கின கைகள்.

“யோவ் எந்திரியா ..நாங்க தான் தெரியாமல் மாட்டிகிட்டோம். உனக்கு அறிவில்ல?” என்றது ஒரு குரல்.

“அஞ்சு லட்சம் லாம் இல்ல. ஆள் புடிக்றாங்க கிட்னி திருட. இது தெரியாமல் வந்து மாட்டிகிட்டியேடா” னு ஒப்பு வச்சு அழுகறாங்க.