Posted inPoetry
உழவும் உழைப்பும்……!!!!! கவிதை – ச.சக்தி
“உழவுமாடுகளோடு
உதவாமலே
போன நிலங்களை
விளைநிலங்களாக
சமநிலைப் படுத்திக்கொண்டிருக்கிறார்
உணவுக் கடவுள் ”
“மாடுகள்
முன்னோக்கி
இழுத்துக்கொண்டு போக
பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்
பக்தன்
கைகளில்
கடவுளுக்கே
வழிகாட்டும்
மூக்கனாங்கயிற்றைப் பிடித்தவாறே ”
“பசியோடு
உலகத்தின்
உணவுகளையே
இழுத்துப் போகும்
மாடுகளின்
உணர்வுகளுக்காக
தானும்
பசியோடு நடக்கிறான்
பாய்மரப்
படகுகளைப்போல ”
“கொழ கொழச் சேற்றையெல்லாம்
புரதச் சத்து
உணவுகளாக
மாற்றிக்கொண்டிருக்கும்
உழுது வாழும்
மாடுகளும் உழவனும் ”
கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
