Posted inPoetry
ஜலீலா முஸம்மில் கவிதை
ஒளித்து வைக்க முடியவில்லை ஒண்டிக் குடித்தனம் பண்ணும்
உணர்வுடன் பின்னிய
உன் ஞாபங்களை!இப்போதெல்லாம்
பெருஞ்சோம்பல் எனக்குள்
சாய்ந்தே கிடக்கிறேன்
தாங்க நீயிருப்பதால்!
உணர்வுடன் பின்னிய
உன் ஞாபங்களை!இப்போதெல்லாம்
பெருஞ்சோம்பல் எனக்குள்
சாய்ந்தே கிடக்கிறேன்
தாங்க நீயிருப்பதால்!
புள்ளிதான் வைத்தேன்
பூமாலையாக வந்து விழுகிறது
உனை நினைத்ததும் கவிதைகள்!
ஏதேனும் பேசியிருக்கலாமோ?
இரைந்து கதறுகிறது
உன் மௌனத்துக்குப் பக்கத்தில்
என் ஆன்மா!
மாபெரும்
மொழித்திறன் கொண்டு
மறுமொழி தருகிறது
ஒவ்வொரு உயிர் வலியிலும்
இந்த மௌனம்!
இதயப்பூட்டை
உடைத்து திறந்தது
உன் ஒரேயொரு
காதல் பூ
எத்தனையோ
கோட்டைகளும் கோபுரங்களும்
உருவாகி விடுகின்றன
ஒரு கணம்
உன் ஆன்மா
என்னுடன் ஊடுருவி
உரையாடுகையில்!
