தொழிற்கல்வி கவிதை – செ.கார்த்திகைச்செல்வன்

தொழிற்கல்வி கவிதை – செ.கார்த்திகைச்செல்வன்




உலகு செழிக்கும் கலைகள் யாவும்
கற்றல் அழகு!
களைகள் அறுத்து நிலைகள் உயர்த்தும்
கற்பித்தலும் அழகு!
தொய்வின்றித் தோழமை போற்றும்
அந்நியர்தேசம் அழகு!
அங்குச் செழித்தோங்கும் தொழில்கள்
யாவும் மானிடர்க் கழகு!

கடலையும் காற்றையும் ஆவியாக்கும்
சுடும்வெப்பம் அழகு!
ஆவியைக் குளிர்வித்து நன்னீர்பெறும்
தொழில்நுட்பம் அழகு!

தொழிலுக்கு மட்டுமே தோள்கொடுத்தால்
வெற்றி வாராது!
தொழிலோடு நுட்பமும் சேர்ந்தால்
தோல்வி நேராது!

தொழிலென்பது உடலானால்
நுட்பமென்பது உயிராகும்!
தொழில்நுட்பம் உருவானால்
தொழிற் கல்வியே கருவாகும்!

உலகமென்பது மிகப்பெரிதென்றால்
உள்ளங்கையில் கொடுப்பது நுட்பம்!
வானில் அந்நியன் முற்றுகையிட்டால்
அவனை விரட்டியடிப்பது நுட்பம்!

நாளை பூமி பிளவுற்றால் அதை
இன்றே சொல்வதுதான் நுட்பம்!
செவ்வாய் அடையும் செயற்கைக் கோளை
புவியில் இயக்குதலே நுட்பம்!

தொழிலும் நுட்பமும் சந்திக்கிறபோது
தொழிற்கல்வி அவசியமாகிறது!
தொழிற்கல்வி அவசியமாகிறபோது
கற்றல் கற்பித்தல் அத்தியாவசியமாகிறது!

இடையூறின்றி இவ்வையம் இயங்க
தொழிற்கல்வியே எரிபொருள்!
தொழிற்கல்வி வழியே தொழிற்சாலை
மலர மறைந்திடுமிங்கே காரிருள்!

நாட்டின் முதுகை நிமிரச்செய்ய ஏட்டுக்
கல்வி மட்டுமே போதாது!
வீட்டின் வறுமை துடைத்தெறிய
தொழிற்கல்விக்கு இங்கே ஈடேது!

வருமானத்துடன் தன்மானம் தந்திடும்
மூலதனம்தான் தொழிற்கல்வி!
மூடத்தனத்திலே மூழ்கவிடாது கற்றல்
கற்பித்தல்தான் தொழிற்கல்வி!

தொழில்கள் கற்றால் உற்பத்தி பெருகி
தேவைகள் யாவும் பூர்த்தியாகும்!
வேற்றார்களிடம் கைகள் ஏந்தாமலே
வேலைவாய்ப்பும் நேர்த்தியாகும்!

துறைகள்சார்ந்து தொழிலை வளர்த்தால்
குறைகள்இன்றி கோலோச்சலாம்!
இளந்தலைமுறைகள் கற்றுக் கொண்டால்
வரும்தலைமுறைகள் வாழ்வில் வெல்லலாம்!

மானிடர் மிரளும் பேரிடர் ஒழிந்திட
தொழிற்கல்விதானே ஆணிவேர்!
கற்றலும் கற்பித்தலும் கொண்டு
நலம்பேணுவதே நம் ஆதிவேர்!

– செ.கார்த்திகைச்செல்வன்

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Dr. Era. Savitri. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O முனைவர் இரா. சாவித்திரி

நூல் அறிமுகம்: *கற்றல் என்பது யாதெனில், கல்வி 4.O* – முனைவர் இரா. சாவித்திரி



கற்றல் என்பது யாதெனில்
(கல்வி 4.0)
ஆசிரியர்: ஆயிஷா இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம் 
பக்: 296.
விலை: ரூ.270
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

கற்றல் என்பது யாது என்ற வினாவிற்கு விடை 296 பக்கங்களில் விரிகிறது .இந்த வினா எவ்வளவு பரந்த எல்லைஉடையது எவ்வளவு கால எல்லை கொண்டது, இதனுடைய ஆழம் எவ்வளவு என்பதை க்கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற விடையை ஒரு நூலாக ஆக்கி உள்ளார் ஆசிரியர் ஆயிஷா. இரா .நடராசன். இன்றைய மனிதனிடமிருந்து பிரிக்க முடியாதது கைபேசி .எல்லா வேற்றுமையையும் கடந்து இன்றைய மனிதனிடம் நீக்கமற இணைந்திருப்பது கைபேசி. இது தனிமனிதச்சிக்கலா, சமூகச்சிக்கலா, தொழில்நுட்ப வளர்ச்சிச் சிக்கலா என்ற குழப்பத்திற்கு அப்பால் சமூக அக்கறையுடன், பொறுப்புணர்வுடன் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பின் அருமை, அது இன்றைய அவசர யுகத்தில் எந்த அளவுக்குப் பயன்படுகிறது, அதை எப்படி யார் எத்தருணத்தில் கண்டுபிடித்தார்கள் என்பதையும் வரலாற்றுப் பின்னணியில் புள்ளி விவரங்களோடு
புனை கதை போல் சுவைபடஆக்கியுள்ளார் இரா .நடராசன். இந்நூலை தக்க சமயத்தில் அனைவருக்கும் பயன் தரும்படி வெளியிட்ட பாரதி புத்தகாலயம் இதற்காகப் பெருமைப்பட வேண்டும்.

” மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்” என்ற நூல் எலியின் மற்றும் யா.ஸெகால் இணைந்து எழுதியது .மனிதனை உலகின் பேராற்றல் மிக்கவனாக ஆக்கிய ஒரு அம்சத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமானால் அது கல்விதான் என்கிறது அந்த அற்புத மனிதவள வரலாற்று நூல் என்று கல்வியின் சிறப்பை எடுத்துக் கூறுவதை இந் நூலுக்கு நல்ல தொடக்கமாக்கி ஏ.ஜி.குட். மற்றும் ஜெ.டி.டெல்லர் ஆகியோர் இணைந்து எழுதிய உலகக்கல்வி வரலாறு என்பதில் தொடர்கிறது இந்நூல்.கிளாஸ் ஷ்வாப் நாலாவது தொழிற்புரட்சி என்ற நூலை எழுதியுள்ளார் .தொழிற்புரட்சி கால கட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் செயற்கைநுண்ணறிவு ,கணினித் தொழில்நுட்பங்களை அடிப்படை ஆக்கி இந்நூலை விரிவாக்கியுள்ளார்.

கல்வியின் நான்கு கட்டங்களை வகைப்படுத்துதல் அடுத்து வருவது.

1. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதன் காட்டு விலங்குகளைத்தன் கட்டுக்குள் கொண்டுவர எப்படியும் வளைந்து கொடுக்கும் மிக தந்திரமான உயிரியாக மனிதன் எப்படி உருவெடுக்கிறான் என்பது முதல் கட்டம்

2.எழுத்து வடிவ அறிமுகம்/ எண் வடிவங்கள் கற்பிக்கப்படுகிறது கணக்காயர்களாதல் கல்வியின் நோக்கமாக இருந்தது இரண்டாவது கட்டம்

3. மத அடிப்படைவாதக்கல்வி. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் தோன்றின. கல்வி ஆண்பிள்ளைகளுக்கு மட்டுமே என்ற எழுதப்படாத சட்டத்தை அனைத்து மதங்களும் கடைப்பிடித்தன. ஆசிரியர் என்பவர் உருவாகியிருந்தார்

4 . அச்சுயந்திரம் அறிமுகமான 1436 முதல் நான்காம் கல்வி காலகட்டம். கணிதம் வேதியியல், உயிரியல் என்று தனித்தனி துறைகள் தோன்றி கல்வி அதிவேகப் பாய்ச்சலாய் உருவெடுத்த காலம். 1453 இல்தொடங்கிய அறிவுத்தேடல் புதிய அறிவை, மனிதனின் புரிதலை இணைத்தல் என்று உரு மாற்றிய பொற்காலம். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் பட்டியல் தொடர்கிறது கலிலியோவின் 16 கண்டுபிடிப்புகள் தொலைநோக்கியை வான் நோக்கித் திருப்பியது. நியூட்டனின் பிரின்சிபியா எனும்ஒரு படை 32 புதிய புதையல்களை அறிவுத் தளத்திற்கு வழங்கிய ஆண்டு 1687 தனிமங்கள் துறையை ஆன்லைன் லவாய்சியர் வேதியியல் துறையாக மாற்றிய ஆண்டு. 1789 கல்வியின் முகத்தை மாற்றிய அடுத்த மாமனிதர் பிரான்சிஸ் பேக்கன். கல்வியில் எதிர்கால நோக்கம் என்பதைச்சேர்த்தவர் (1625 )கருவி யுகத்தில் எட்மண்ட் குண்டர் கண்டுபிடித்த (குண்டர் ஸ்கேல்) முதல் கணக்கீட்டுக்கருவி (1617) பிளெயிஸ் பாஸ்கல் தானியங்கி கணக்கீட்டுஇயந்திரத்தைக் கண்டுபிடித்து (1642 )செயற்கை நுண்ணறிவை பள்ளி கல்லூரி வளாகத்தில் அடி எடுத்து வைக்க உதவுகிறார். பாஸ்கலின் கண்டுபிடிப்பை அரித்மோ மீட்டராக மாற்றி கூட்டல், கழித்தல், பெருக்கல் இவற்றோடு வகுத்தலையும் சேர்த்தார் லீப்னிஸ். (1685 )வகுப்பறைகள்
உருவாகின. பாடவேளைகள் வகுக்கப்பட்டன.

30 மாணவர்கள், ஒரு ஆசிரியர் அதற்கான சான்றிதழ்கள், பட்டங்கள் உருவாகின. இந்தியாவில்பொதுக் கல்வி 1834இல் அறிமுகம் செய்யப்பட்டது. வில்லியம் ஹண்டா தலைமையிலான கல்விக்குழு பெண் கல்வியை ஆதரித்தது . 1845 இல் ஐ.நா சபையில் அதே ஆண்டு உருவாக்கிய கல்விக்கான அமைப்பு யுனெஸ்கோ. 1964 இல் அமைக்கப்பட்ட கோத்தாரிக் கல்விக் குழு அளித்த நலத்திட்ட அம்சங்கள் 1984இல் கல்வியைத் தொழில்நுட்பம் ஆக்கி கணினியைப் பள்ளிகளுக்கு வரவழைத்த மைய அரசின் கல்விக்கொள்கை ஆகியன திருப்புமுனைகள். 2000 ஆண்டின் யஷ்பால் கல்விக்குழுவும் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. இனி தொழிற்புரட்சியின் நான்கு கட்டங்களாக ஆசிரியர் குறிப்பிடுவது.
முதல் தொழில் புரட்சி கைகளால் செய்வதை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யும் முறைக்கு மாறியது. இரண்டாம் தொழிற்புரட்சி. மின் உற்பத்தி/ ஆண்டுக்கு ஒரு வகுப்பு /தேர்வு முறை/ ஆசிரியர் பயிற்சிநிலையங்கள், பாடப்பகுதி மைய வகுப்பறைகள் வந்தன மூன்றாம் தொழிற்புரட்சி மின்னணு யுகம், அணுகுண்டு யுகம், செயற்கைக்கோள் யுகம் இந்த காலகட்டம் (1948 முதல் 1969 வரை ) தொலைக்காட்சி, டிரான்சிஸ்டர் வருகை எலக்ட்ரானிக் யுகத்தைப்புரட்சியாக மாற்றிய ஒருவர் அக்கியோ மோரிடா.

ஜப்பான் தனது சோனி நிறுவனத்தின் மூலம் குட்டி ரேடியோ, வாக்மேன் என்று மின்னணு சாதனங்கள் செய்வதை குடிசைத்தொழில் ஆக்கியிருந்தார் என்பது உச்சகட்டம் இரண்டாம் யுகம் (1970 முதல் 1989 முடிய) மைக்ரோ சிப்ஸ் பயன்பாடு /டிஜிட்டல் கேமரா /ரிமோட்’ ஒயர்லெஸ் அறிமுகம் கணினி யுகம் தொடங்கியது. மூன்றாம் யுகம்( 1989 முதல் 1999) மேசைக் கணினி அமெரிக்காவில் அறிமுகம்/ கணினிவழி கடிதப்போக்குவரத்து /அலுவலகம் ,வங்கிகள் கணினி மயமாதல் .

நான்காம் தொழிற்புரட்சி. இந்த யுகம் இணைய யுகம் கூகுள் யுகம் கம்பியில்லா ஐந்தாம் சந்ததி தொழில்நுட்பம் தான் இன்று திறன்பேசி ஆகி நான்காம் கல்விப் புரட்சிக்கு வித்திடுகிறது நானோ தொழில்நுட்பம். நமது கைபேசியை 18 கருவிகளின் சங்கமம் ஆக்கி இருக்கிறது தானியங்கி தொழில்நுட்பம் /ஏடிஎம் /டிஜிட்டல் பண பரிவர்த்தனை என வங்கிகளை உருமாற்றி விட்டது. நான்காம் தொழில் புரட்சியின் விளைவுகள் அறிவு பரவலாக்கம் /கல்வியை உலகமயமாக்கல். ஆயிரம் ஆண்டுகளில் ஏற்படாத மாற்றங்கள் அண்மைக்காலத்தில் வேகவேகமாக ஏற்பட்டுள்ளன. இத்தனை வேகத்தில் உலகை மாற்றிய அந்த ஆளுமைகளை அறிமுகம் செய்து வைக்கும் அழகு அருமை .

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Ku. Sentamil Selvan. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O - கு. செந்தமிழ் செல்வன்உலகை மாற்றிய பத்து ஆளுமைகள் என்கிற மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரையின் சாராம்சம் இந்நூலின் மற்றுமொரு சிறப்பு .

டிம் பெர்னர்ஸ் லீ (1955 ) 1989இல் ஹைப்பர் டெக்ஸ்ட் என்ற வகை மென்பொருளை கணினியில் புகுத்தி ENQUIRE என்னும் அமைப்பை உருவாக்கினார். உலகெங்கும் இருந்த 6000 விஞ்ஞானிகளையும் இணைத்து அடுத்த கட்ட நகர்வு W.W.W.World Wide Web. என்னும் இணையத்தைத் தோற்றுவித்தது. உலகின் முதல் துழாவி (Browser) அவர் கொடுத்ததுதான். கல்வி 4.0வின் இதயம் இணையம்.

செர்ஜி பிரின் (1973) ஸாரி பேஜ் என்பவருடன் இணைந்து செய்த முனைவர் பட்ட ஆய்வின் விளைவாக நேரடி கணினியாக்கச் செயல்பாடாக பேஜ்ராங்க் அல்காரிதம் தேடி (Search engine) வந்தது . தேடியின் பெயர் கூகுள். கல்வி 4.0வின் உயிர்நாடி கூகுள்.

ஜிம்மி வேல்ஸ் (சான் பிரான்சிஸ்கோ) ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பிரிட்டானிகா தகவல் களஞ்சியத்தைத் தேடியவர். நண்பர் லேரி சாஸ்கரைச்சந்தித்தார் நியூ மீடியா என்னும் தகவல் களஞ்சியம் தொடங்கி பல முயற்சிகளுக்குப் பின் 2001இல் உருவானது விக்கிபீடியா.

கிரிஸ் ஹ்யூஸ்( 1983) டிஜிட்டல் வித்தகர். இவருடைய ஸ்பைடர் வலை என்னும் கிளப்பிங் மென்பொருளைப் பயன்படுத்தி 2008 இல் உருவாக்கப்பட்டது ஃபேஸ்புக் என்னும் முகநூல் .

ஜெப்ரிபெர்ஸ்டன்(1964) இன்று உலகில் எந்த புத்தகமோ, பொருளோ ஆன்லைனில் பெறுவதற்கு உதவும் அமேசான் இவருடைய அறிவுத்தேடல் கண்டுபிடிப்பு. ஜெரான் லானியா (1960) (நியூயார்க்) அடுத்தவர் நினைவை பதிவு செய்யும் அற்புதம் பென்சீவ் (ஹாரிபாட்டர் நாவலில் வரும்) மெய்மை எதார்த்தம். Artificial Intelligenceஎன்கிற செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் 1980களில் சாதித்துக்காட்டினார்.

நான்சி நோல்டான் (கனடா)தொடுதிரை தொழில்நுட்பத்தில் வல்லுநர். அத்தொழில் நுட்பத்தை வகுப்பறையில் பெரிய கரும்பலகையில் பொருத்திப் பார்த்து ரிமோட்டை இணைத்து திரைக்கு மேலே கேமராவைப்பொருத்தி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியவர்.

நரீந்தர்சிங் கபானி பஞ்சாப் (1926) ஒளியிழை என்றழைக்கப்படும் பைபர் ஆப்டிகன் இழைகளை உருவாக்கி நான்காம் தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். இணையப்புரட்சிக்கு முக்கிய காரணி- நமது டவர்களின் உயிர் நாடி . அஜய் பாட் (இந்தியா ) பென் டிரைவ் .இன்று 132 கணினி தொடர்பான கண்டுபிடிப்புகளின் உரிமங்கள் பெற்ற சாதனை மனிதர். வெறும் இணைப்பான் ஆக அறிமுகமான பென்டிரைவில் நிறைய பைல்களைச்சேகரித்து வைக்க முடியும் என்னும் உபரி அம்சத்தைச் சேர்த்தவர். முக்கியமான கற்றல் உபகரணம் .

ஜார்ஜ் டிவால் (ரோபோ கண்டுபிடிப்பு) 1961இல் யுனிமேட் என்னும் தொழில்துறை ரோபோட்டை உருவாக்கிய மாமேதை. செயற்கை நுண்ணறிவின் மனிதத் தோழன் இவன். ஜப்பானில் 23 இன்ச் உள்ள குட்டி ரோபோட் ராபின் சக மாணவர்களுக்கு (எல்கேஜி) இரண்டாம் மொழியாக ஆங்கிலம் சொல்லித் தரப் பயன்படுத்தப்படுகிறது மேட்டுப்பாளையம் தமிழரசிகொடுத்த உலக மாமனிதர்களின் பட்டியல் எவ்வளவு தெளிவு என்று வியக்கும் ஆசிரியர் அப்போட்டித்தாளை இப்போதும் பத்திரமாக வைத்திருப்பதாகச் சொல்கிறார். நாமும் பத்திரப்படுத்துவோம். மேலும் தொகு பெரும் தரவு, இணையச் செயலிகள் கல்வித் துறையில் ஆற்றும் பங்கு அளவிடற்கரியது..

கேம்லோட் என்னும் கணினியாக்கக் குழு நிறுவன துணைத் தலைவர் ஜான் வார்னாக்குடன் இணைந்து கண்டுபிடித்த பி.டி .எஃப் இன்றைய கல்வி4.0வின் முக்கிய ரத்தநாளம் ஆக வர்ணிக்கப்படுகிறது. டிஜிட்டல் தட்டச்சில் பிரம்மாண்ட திருப்புமுனை டெஸ்க்டாப் பப்ளிஷிங். உலகின் பெரும்பாலான அனைத்து நூல்களும் தினசரி, வார, மாத இதழ்கள் தொடங்கி வாட்ஸ்அப் டெக்ஸ்ட் வரை யாவுமே DTPயாக மாறிவிட்டது .

முறைசாரா கல்வி முறையான கல்விக்கு வழிகாட்டும் விந்தையை இந்நூல் கதைபோல் விவரிக்கிறது முறைசாரா க்கல்வியின் ஒப்பற்ற முன்னுதாரணங்கள் சுந்தர் பிச்சை, விசுவநாதன் ஆனந்த் ,கணிதமேதை சகுந்தலா, ஜிடி நாயுடு ஆகிய ஆளுமைகள் நிகழ்த்திய சாகசங்கள் சுவையானவை. முறையான கல்வி முறைசாராக் கல்வி இரண்டையும் ஒன்றிணைக்கும் வல்லமை கல்வி 4.0வுக்கே உண்டு என்பது இந்நூலில் விளக்கப்படுகிறது. “இந்த நூற்றாண்டின் அரிய பதிவு” என்று
இந்நூலுக்கு முதன்மை விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் எழுதிய செறிவான முன்னுரை மிகச் சிறப்பு. கல்வி 4.0வின் அறிவியல், சமூகவியல், கல்வியியல் கூறுகளை இந்நூல் ஆழமாகப் பேசுகிறது என்பது இந்நூலின் உள்ளடக்கம் பற்றிய சுருக்கப் பதிவு. நோய்தொற்றுக் காலத்தில் ஊரடங்குக் காலத்தில் பிற நாடுகளில் எல்லாம் பள்ளிக்கு ச்செல்ல முடியாத நிலையில் கல்வியின் மாற்று வழி பற்றி எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்று உலகையே ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து குறிப்பிடும் செய்திகள் நம்மைச்சிந்திக்க வைக்கின்றன.

கல்வி 4.0. டிஜிட்டல் பள்ளி, கணினி வழி படிப்புகள் .செயலிகளின் பட்டியல் மற்றும் அனிமொட்டோ,குரோக்கடோ, ஸ்கூப்பி மற்றும் ஸ்லைடுஷேர் ,வெப் போஸ்டர் விசார்டு போன்ற கற்றல் உபகரணிகளின் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கின்றது. 4.0வும் இந்தியக் கல்வியும் பகுதியில் கல்வித் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச சுட்டும்போது அதிர்வடைகிறோம்.
வேதித்தொழிற்சாலை உள்ள இடங்களில் அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று பள்ளி கல்லூரி இரண்டிலும் பாடமாக நடத்தப்படவில்லை. பள்ளி என்னும் கட்டடம் மூடப்பட்டால் கல்வியை எப்படி குழந்தைகளிடம் எடுத்துச் செல்வது என்கிற மாற்றுவழி பற்றிய எந்த முன் தயாரிப்பும் நம்மிடம் இருக்கவில்லை இன்னும் இந்த மாதிரி எத்தனையோ விஷயங்கள் எனக்கு சொல்லப்படவில்லையோ எனும் அச்ச உணர்வு தவிர்க்கமுடியாதது. போகிற போக்கில் ஆசிரியர் கூறும் சில கருத்துக்கள் நம்மால் மறக்க முடியாதவை. மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வித் திட்டத்தில் பல ஓட்டைகள் இருந்தாலும் வர்ணாசிரமக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதை மறுக்க இயலாது. எகிப்து முழுவதும் மதக் கல்வி இன்றி யாரும் எந்தப் பதவிக்கும் வர முடியாது. வருத்தத்தில் ஆழ்த்தும் செய்தி.

இணையத்தில் பூஜ்ஜியம் கல்வியாண்டு என்று கேட்டால் வரும் இந்தியா என்ற பதில். மனம் வலிக்கச் செய்யும் சில கசப்பான உண்மைகள். ஆன்லைன் கல்வியின் மிகப்பெரிய பக்கவிளைவு மாணவர்களின் பலர் வீடியோ கேம் வெறியர்கள் ஆகி அதில் போதை ஏறிய வர்களாக ஆகிவிட்ட அவலம்.

சுவையான தகவல்களில் ஒன்று. கல்பானா விமானநிலையத்தில் விக்கி விக்கி என்று டெர்மினல்களுக்கு இடையே ஓடிய அதிவேக பேருந்து (ஷட்டில் )அமைப்பின் பெயரையே தனது தகவல் களஞ்சியத்துக்கு விக்கிபீடியா என்று பெயர் வைத்தார். முரண் -எல்லா நாடுகளுமே விமான சேவையை ரத்து செய்துவிட்டன. அதேசமயம் சர்வதேச இணைய சேவை இணைய வழியே மூலை முடுக்குகளைக் கூட இணைத்திருக்கிறது. சொல்லின் பொருள் குறித்த சுவையான பதிவு.

கோத்தாரி குழு கல்வியை சேவை என்று அழைக்க கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை கல்வியை முதலீடு என்கிறது .இந்தியாவை சமூகம் என்று முன்னது குறிப்பிட பின்னது இந்தியாவை கல்விச் சந்தை என்று அழைத்தது. மறக்கமுடியாத புதிய வார்த்தைப் பயன்பாடு புதிய இயல்பு நிலை (New normal) இந்திய கல்வியில் உள்ள முரண்களின் பட்டியல் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. விலைக்கு கல்வி/ விலையில்லா கல்வி. முரணை நீக்க அனைத்து குழந்தைகளுக்கும் திறன்பேசியோ மடிக்கணினியோ வழங்கும் அவசர த்திட்டம் தேவை.

பள்ளித்தேர்வு /நுழைவுத் தேர்வு பயிற்சி. இம்முரணை நீக்க மாணவர்களுக்கு ஒரு ஆன்லைன் கோர்ஸ் கட்டாயமாக்கி அரசே செலவு செய்யலாம் மதிப்பெண்கள்/ திறன்கள் படைப்பாக்கம் ,புதிய கண்டுபிடிப்புகள் நடக்கும் இடமாக பள்ளி செயல்படாது இணையக் கல்வி கவிதை ,ஓவியம் சதுரங்கம், சிக்கல் சவால், தீர்வுகள் என வாய்ப்புகளை அள்ளி வழங்குவதால் இணையக் கல்வி தேவையாகிறது உள்ளூர் அறிவு/ உலக அறிவு இறந்தகாலம் நிகழ்காலம் வருங்காலம் மூன்று கோடுகளும் இணையும் மையப் புள்ளியிலிருந்து ஞானம் பெற வைப்பது ஆன்லைன் கல்வி .

கும்பலாகக்கற்றல் /தனிக் கவனக் கற்றல் கல்வி உரிமைச் சட்டம் ன(2009) 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று வகுத்தது. அதைப் பின்பற்ற இந்தியா திணறுகிறது. எனவே மானிட்டரில் ஆசிரியரைக் கண்டு தேவையாயின் திரும்பப்போட்டு கற்கும் ஆன்-லைன் கணினி வழி வகுப்பு சரியான தீர்வாகும் .

மாநிலக் கல்வி/ சர்வதேச கல்வி மெட்ரிக் ,ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சிஎன்று ஐந்து ரகமான கல்வி முறை .நமது கல்வியை ஆன்லைன் கல்வியாக மாற்றும்போது அது மாநிலக் கல்வி ,தேசிய கல்வி, மற்றும் சர்வதேச கல்வி என்ற மூன்றாகவும் ஆகிவிடுகிறது.

வயது அடிப்படை கல்வி/சுதந்திரக்கற்றல் இணையவழி கற்றல் மிகச் சரியான பாதை சீனிவாச ராமானுஜம் கல்லூரி மாணவர்களுக்கு கணக்குப் போட்டுக்கொடுத்தாலும் ஆறாம் வகுப்பு ஓராண்டு முடித்தால்தான் ஏழாம் வகுப்பு வரமுடியும். அனைத்துப்பாட தேர்ச்சி/ ஒரு துறையில் நிபுணத்துவம் .

ஒரு பாடத்தில் அதிக திறன் பெற்றிருந்தாலும் மற்ற பாடங்களை முடிக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. பாடப்புத்தகம் /பொது வாசிப்பு.

பாடம் எனும் சுமை அழுத்தும் போது பொது வாசிப்புக்குத் தடையாகிறது .பொதுவாசிப்பை மேம்படுத்தாத கல்வியால் பயனில்லை.

கல்வி 4.0 கல்வி முறையின் முக்கிய அடித்தளமாக இணையத் தொழில் நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும் புதிய அவதாரம் ஆகும் .

கல்வி 4.0வும் குழந்தைகள் நலமும் பகுதி எடுத்துரைக்கும் சிந்தனைகள் யாவுமே முக்கியமானவை .

இணையக் கல்வி ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உரைப்பது மிகவும் கவனத்துக்கு உரியது மாணவர்களுக்கு மிக தேவையானது அரசாணை எண் 6.5 (பக்கம் 275)

இது பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இராணுவ சேவை போல் மிக முக்கியமானதாகவும் முதன்மையானதாகவும் கருதி பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். பின் விளைவுகள் பற்றிய எச்சரிக்கை இருப்பதால் பொறுப்புணர்வுடன் பெற்றோர் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அச்சுறுத்தல்கள் சுகாதாரக் கேடுகள் எவ்வளவு ஏற்பட்டாலும் அதற்கு அஞ்சி இணையக் கல்வியை விட்டுவிடாமல் தொடர ஆசிரியர்நேர்மறை உளப்பாங்குடன் கூறும் வழிகாட்டுதல்களும் பாராட்டுக்குரியவை. இந்நூலின் பிற்பகுதியில் 3. 4 வயதில் ஐ.டி.ஐ லாவகமாக அறிந்து அப்பாவின் கைபேசியை இயக்கும் ஒரு சந்ததிக்கு நாம் தரும் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்று கோத்தாரிக்குழு அறிமுகம் செய்த நோக்கங்கள் ஆன்லைன் கல்விக்கும் பொருந்துவதை ச்சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர் .

அன்றாட வாழ்வில் போராட்டங்களை ச்சமாளிக்க வேண்டும். சுய கட்டுப்பாடு மிக்க மதச்சார்பற்ற தன்மையுடன் பொதுநல பண்புகளை வளர்த்து, கல்வி ஆர்வத்தை மனதில் விதைத்து எதிர்காலத்தில் நாம் அறியாத புதிய வகை சவால்களை எதிர்கொள்ளும் வலிமையை ஏற்படுத்தக்கூடியதாக கல்வி இருக்க வேண்டும்( பக்.267 )

பிற்சேர்க்கை 1 கணினித்தமிழ்ச் சொல்லாக்க அறிமுகம் தமிழுக்கு அரும்பணி கற்பவருக்குப் பயனளிக்கும் பெரும்பணி. பிற்சேர்க்கை 2 கற்றல் சார்ந்த முக்கிய செயலிகள் 72 இன் தொகுப்புப் பட்டியல் அனைவருக்கும் பயன் தரும் பொக்கிஷம். மொத்தத்தில் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஆசிரியரின் கடும் உழைப்பு தெரிகிறது. ஆங்கிலச்சொற்களை அப்படியே தமிழில் எழுதுதல்நெருடலாக உள்ளது.

தகவல் களஞ்சியமாய் விளங்கும் இந்நூல் ஸ்ரீ திலிப் கூறுவதுபோல் கணினிக் கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நுணுக்கங்களை அள்ளித்தரும் அமுதசுரபியாய் விளங்குகிறது .

ஆசிரியர் ஆயிஷா. இரா .நடராசன் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல நல்ல படிப்பாளியும்கூட என்பதை துணைநூற்பட்டியல் நமக்குஉணர்த்தும். ஆசிரியரின் வாழ்நாள் சாதனை இந்நூல் என்று பாராட்டியிருந்தார் கு.செந்தமிழ்ச்செல்வன். இன்னும் இது போல பல சிறந்த நூல்களை அவர் உருவாக்குவார் என்பதையே இந்நூல் நமக்கு உணர்த்துகிறது. ஆசிரியரின்சமூகப் பணிக்கு அன்பு நல்வாழ்த்துக்கள்.

Sirpiyai Sethukkum Sirpangal book by Jolna Jawahar Bookreview by Ki. Ramesh. நூல் அறிமுகம்: ஜோல்னா ஜவஹரின் சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள் - கி.ரமேஷ்

நூல் அறிமுகம்: ஜோல்னா ஜவஹரின் சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள் – கி.ரமேஷ்




புத்தகம் வாங்கியே குவிப்போருக்கு அதிலிருந்து விடுதலை கிடைப்பது அரிது. எங்கே புத்தகத்தைப் பார்த்தாலும் அதில் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து ரசித்து, வாங்கிக் குவிப்பது ஒரு போதை. அப்படி அலசும்போது நம்மிடம் சில சமயம் எதேச்சையாக நல்ல புத்தகங்கள் மாட்டி விடும். அப்படி நான் பாரதி புத்தகாலயத்தில் துழாவிக் கொண்டிருந்த போதுதான் இந்தப் புத்தகம் மாட்டியது. ஜோல்னா ஜவஹரின் “சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்”.

ஆசிரியர்கள் என்பவர்கள் தனி இனம். எப்போழுதுமே தனது மாணவர்களைப் பற்றியும், அவர்களது கல்வி, எதிர்காலத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் ‘உண்மையான’ ஆசிரியர்கள். தம்மையறியாமலேயே தமது மாணவர்களைச் செதுக்கியபடியே இருப்பார்கள். அந்த மாணவர்களிடம் இருக்கும் குறைகளை அகற்றி நிறைவுகளை மேலும் மெருகூட்டி உலகத்திடம் ஒப்படைப்பார்கள். பல மாணவர்களும் தமது ஆசிரியர்கள் பற்றிப் பெருமிதம் கொண்டு தமது பெயரையே மாற்றியிருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர், பாரதிதாசன், சுரதா, கல்கி என்று அந்தப் பெயர் மிக நீளம்.  

எல்லாம் சரிதான். மாணவர்கள் ஆசிரியரைப் பட்டை தீட்ட முடியுமா? இதென்ன கேள்வி என்கிறீர்களா? அநேகமாக எல்லோரும் ஆயிஷா நடராஜனின் சிறுகதையான ஆயிஷாவைப் படித்தவர்களாகவே இருப்போம். அதில் வரும் ஆயிஷா தனது அறிவியல் ஆசிரியைக் கேள்வி கேட்டே சரி செய்து படிக்க வைத்து விடுவாள். நமது மனதிலும், இரா.நடராசனின் பெயருக்கு முன்னாலும் ஆசனம் போட்டு அமர்ந்து விட்டவள் ஆயிஷா. இதை ஒரு ஆசிரியரே பதிவு செய்தால்?  அதைத்தான் செய்திருக்கிறார் ஜோல்னா ஜவஹர் தனது புத்தகத்தில்.

மாணவர்களுக்கு என்ன தெரியும்? கேள்வி கேட்டால் தட்டி உட்கார வைப்பது, முடிந்தால் மதிப்பெண்ணைக் குறைத்துப் பழி வாங்குவது என்று இருக்கும் சில தவறான முன்னுதாரணங்களுக்கெதிராக தன்னை எப்படி மாணவர்கள் செதுக்கினார்கள் என்ற வித்தியாசமான கோணத்தில் இந்தப் புத்தகத்தைப் படைத்திருக்கிறார் ஜவஹர். அவர் சுட்டிக் காட்டும் மாணவர்களில் பலரும் அவரது பெயரையே தன் பெயரில் இணைத்திருக்க, இவரோ, அவர்களைத் தூக்கிக் கொண்டாடுகிறார், அவர்கள்தான் தம்மைச் செதுக்கினார்கள் என்று. அவர் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்லிச் சொல்லி, மாணவர்களின் புகைப்படங்களுடன் எழுதிச் செல்லச் செல்ல, நமக்கு உற்சாகம் பீறிடுகிறது.

ஒரு மாணவன், அடிப்பது தவறு என்று மண்டையில் அடித்தாற்போல் சொல்லிக் கொடுக்கிறான். நடுபெஞ்சு மாணவர்கள் தம்மால் முடியும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்; ஆசிரியர் உற்சாகம் கொடுத்தால் தம்மால் எதையும் செய்ய முடியும் என்று சொல்லிக் கொடுக்கும் மாணவர்கள்; தாமே முன்னின்று பள்ளிக்கே தலைவனாகச் செயல்பட்டு ஒழுங்கு படுத்தும் மாணவன், கட்டுரை, பேச்சு, கலை என்று கலக்கும் மாணவர்கள். ஆசிரியர் இதைத்தான் பேச வேண்டும் என்று சொல்ல, இடையில் இவர் ஏற்கனவே பதிவு செய்து வைத்தது தகறாறு செய்ய, மாணவர்களோ கலக்கு கலக்கு என்று கலக்குகிறார்கள். ஆசிரியரின் ஆணவம் தகர்கிறது.  மாணவனை நம்பி விட்டால் ஒரு பெரும் விழாவையே நடத்தி விட முடியும் என்று செய்து காட்டிய மாணவர்கள். அதிலும் சிறப்பு அவர்கள் மேசை துடைக்கும் பணியில் ஈடுபட்டு நிதி திரட்டி அந்த விழாவை நடத்தியது.  

இப்படி ஒவ்வொரு கட்டுரையிலும், தமக்கும் ஆசிரியராக இருந்து தம்மை வழிநடத்திய மாண்புமிகு மாணவர்களைப் பற்றிப் பெருமிதம் பொங்கப் பேசிக் கொண்டே செல்கிறார் ஜவஹர். அவரைப் பின்பற்றிய மாணவர்கள் மேலும் மேலும் நல்ல தலைமுறைகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார்கள். ஆசு + இரியர் அதாவது மாசு நீக்குபவர் ஆசிரியர் என்றால் அவரிடம் இருக்கும் மாசுக்களை நீக்கி சுத்தம் செய்பவர்களாக மாணவர்களே இருக்கிறார்கள். இதைத் தமது புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். இந்தப் புத்தகத்தை தன்னைத் தூண்டி விட்டு எழுத வைத்ததே ஒரு மாணவர்தான் என்பதையும் பெருமையாகப் பேசுகிறார். இந்தப் புத்தகத்தைப் படித்தால், மேலும் பல ஆயிஷாக்கள் உண்மையிலேயே இருப்பதையும், அவர்களால் ஆசிரியர்கள் தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் காண முடிகிறது.

கரோனா வந்து நேரடி வகுப்புக்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகக் கெடுத்துள்ளது. ஆனால் ஆயிரம் ஆன்லைன் வகுப்பு வந்தாலும், நேரடி வகுப்பை அடித்துக் கொள்ளவே முடியாது, ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியை ஆன்லைன் வகுப்பு உருவாக்கவே முடியாது. அதன் சாட்சியாக நிற்கிறது ஜவஹர் அவர்கள் உருவாக்கி இருக்கும் இந்தச் சிற்பம். வாழ்த்துகள்!

புத்தகம்: சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 112
விலை: ரூ.100/-
கி.ரமேஷ்

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Ku. Sentamil Selvan. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O - கு. செந்தமிழ் செல்வன்

நூல் அறிமுகம் : *கற்றல் என்பது யாதெனில்- கல்வி 4.O* – கு. செந்தமிழ் செல்வன்



கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.o
ஆயுஷா இரா. நடராசன்,
பாரதி புத்தாலயம்
விலை: ரூ. 270.00
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

சமூகச் செயல்பாட்டாளர்கள் & ஆசிரியர் சமூகத்திற்கு வரும் நூற்றாண்டிற்கான செயல்திட்டம்

“நான்காம் தொழிற்புரட்சியின் விளிம்பில் நாம் நிற்கிறோம்” இந்த செய்தி எத்தனை பேர் கவனத்தில் வந்து சேர்ந்தது. சேர்ந்தாலும் அதற்கு நம்மை, நமது சமூகத்தை தயார்படுத்த என்ன செய்யப் போகிறோம் என்பதை யோசிக்க வைத்துள்ளது என்பதுதான் கேள்வி..

இந்த நான்காம் தொழிற்புரட்சி கடந்த மூன்று தொழிற்புரட்சி போலல்லாமல் பல மாற்றங்களை பெரிய அளவில் பெரிய வீச்சில் அமையும் என்கிறார்கள் அறிஞர்கள்.

கல்வி பற்றி பேச வந்துவிட்டு தொழிற்புரட்சிப் பற்றி ஏன் நாம் பேச வேண்டும்? இன்று கல்விப் பற்றி பேசும் பலர் தொழிற்புரட்சிக்கும் கல்வி முறைக்குமான தொடர்பை விவாதிப்பதே இல்லை. சமூகத்திலிருந்தும் உலகத்திடமிருந்தும் பிரிக்க முடியாத செயல்பாடு கல்வி என்பதை முழுமையாக விவாதிப்பதே இந்தப் புத்தகம்.

“நமது கல்வி கடந்து வந்த பாதையை நாம் அறிதல் எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு – கல்வி எதை நோக்கி பயணிக்கிறது என்பதை அறிவதும் அதற்காக நம் சமூகத்தை தயார்படுதுவதும் அவசியம். உண்மையான ஆசிரியன் உலகத்தை உற்று நோக்குவதை நிறுத்துவதே இல்லை.” – கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ் – கேனல்

அனைவருக்கும் தரமான, சமமான அடிப்படைக் கல்விக்காக நாம் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவுடன் (( Artificial Intelligence) நடைபெறும் இந்த மாற்றத்திற்கு தயார்படுத்த வேண்டியதுதான் கல்வி- 4.o இன்றைய கல்வி முறையினை முழுமையாக புரிந்து கொள்ளவும் கல்வி- 4.o உருவாக்கிடவும் அழைக்கிறது. இந்தப் புத்தகம்.

ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது பல புதிய எண்ணங்கள் பளிச்சிட வேண்டும், நமது வாழ்வை புதிய பாதையில் பயணிக்க வெளிச்சமிட வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் நமக்கானது மட்டுமல்ல நமது அடுத்த தலை முறையினருக்கும் அடுத்த யுகத்திற்குமானது. கற்பனைக்கு எட்டா மாற்றங்களை எதிர்கொள்ள அழைக்கிறது இந்தப் புத்தகம்.

பெரும்தரவுகளையும் (Big data’s) செயற்கை நுண்ணறிவையும் கொண்டு இயக்கும் திறம் கொண்ட இயற்கை நுண்ணறிவைப் பெற மக்களைத் தகவமைக்க வேண்டும். இது வகுப்பறையில் முறைசார் கல்விக்கு அப்பால் கற்றல் தொடர வேண்டியதை வலியுறுத்துகிறது. முறைசாரா கல்விக்குக்கும் முன்மொழிகிறது.
இது தனிமனித இலக்கல்ல, சமூகத்திற்கான திசைவழி.
வரும் ஆண்டுகளுக்கானதல்ல வரும் நூற்றாண்டுகளுக்கானது
ஆசிரியருக்கானது மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூக செயற்பாட்டாளர்களுக்கானது
இது அசைவு அல்ல …. அசல் செயல்திட்டம்.

கல்வி , அறிவியலில் மற்றும் பிற பொருட்களில் பல புத்தகங்களை படைத்தவர் இதன் ஆசிரியர் திரு இரா. நடராசன் அவர்கள். இவரது புத்தகங்களை வாசித்து பிரமித்துப் போன நமக்கு இவைகளை எல்லாம் விட ஒரு பிரமிப்பான புத்தகம் தர வேண்டும் எனும் சவாலுடன் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தப் புத்தகம் திரு இரா. நடராசன் அவர்களின் வாழ்நாள் சாதனை. நம்மோடு வாழ்ந்து கொண்டே இவரால் மட்டும் எப்படி அடுத்த யுகத்திற்கு தாவ முடிந்தது.?

இவைகள் கற்பனைகள் அல்ல. எத்தனைப் புத்தகங்களில் தேனெடுத்து இந்தத் தேன் கூட்டினை கட்டியுள்ளார். அவர் கொடுத்துள்ள தரவுகளையும் துணை நின்ற புத்தகங்களையும் ஒரு முறை புரட்டுவதற்கே நமது வாழ்நாள் கடந்துவிடும். அவரது சீரிய முயற்சிக்கு இந்த சமூகம் அவருக்கு மிகவும் கடமைபட்டுள்ளது. தலை வணங்குகிறது.

அவரது முயற்சியினை பாராட்டும் ஒவ்வொருவரும் இந்த புத்தகத்தை முழுமையாக கற்க வேண்டும். வாய்ப்புள்ளவர்கள் அவர் குறிப்பிடும் புத்தகங்களையும் தரவுகளையும் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இந்தப் புத்தகமும் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து படித்து படித்து நமது புரிதல் நிலையினை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Ku. Sentamil Selvan. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O - கு. செந்தமிழ் செல்வன்இந்தப் புத்தகம் அனைத்து ஆசிரியரிடமும், சமூக செயல்பாட்டாளர்களிடமும் இருக்க வேண்டும். அவர்களின் கடமைகளை மறுவரைவு செய்ய உதவிடும்.
புத்தகம் முழுவதும் ஏராளமான எண்ணச் சிதறல்கள்.. அனைத்தினையும் உள்வாங்கி அசைபோட வேண்டியது அவசியம். அவரது விதைப்புகள் சிலவற்றை இனி பார்ப்போம்.

“அவர்கள் நிலா பார்த்து சாப்பிடவில்லை
அம்மா செல் பார்த்து சாப்பிட்டு வளர்ந்த்தார்கள்”

இப்படி வளர்ந்தவர்களுக்கான டிஜிட்டல் வகுப்பிற்கு இன்றைய கல்விமுறை மாறவேண்டும். ஆசிரியர்களும் அதற்கு தயாராக வேண்டும். இருபத்தி ஓராம் நூற்றாண்டில் கல்வி எப்படி இருக்க வேண்டும். அதன் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்ற “ கற்றல்: உள்ளார்ந்த புதையல்” எனும் ஜாக்குஸ் டீலர் அறிக்கையில் நான்கு தூண்களைச் சுட்டுகிறது.

  1. அறிந்து கொள்ளக் கற்றல் ( Learning to Know )
  2. செயல்படக் கற்றல் (Learning to do )
  3. இணைந்து வாழக் கற்றல் (Learning to live together )
  4. உய்வித்திருக்கக் கற்றல் (Learning to be)

கல்வியின் நோக்கம் செயல் என்பதைச் சாதித்ததுதான் தொழிற்புரட்சி. எனவே, தொழிற்புரட்சி மையக் கல்வி பற்றி நாம் அறியும் தருணம் வந்து விட்டது. கல்வி- 4.o இன் ஆன்மாவும் அதில்தான் உள்ளது.

“ ஒவ்வொரு தொழிற்புரட்சியும் தன் கூடவே ஒரு கற்றல் புரட்சியையும் கொண்டதாக இருக்கிறது.” ஸ்பேனிய கல்வியாளர் அலெக்சாந்தர் டி கிரேட்

“அறிவியல்- தொழில் நுட்பத்தின் பார்வையில் கற்றல் என்றால் – ஒரு ஒட்டுமொத்த சமூகத்தையே ஒரு பெரிய கருவியாக மாற்றுதல் ஆகும். ஒவ்வொருவரும் ஒரு உதிரிப் பாகமாக அதன் இயக்கத்தில் பங்கு பெறுதல்” ஜோய், இட்டோ, இயக்குனர், எம்.ஐ.டி ஆய்வகம்

அறிவியல் பார்வையில் இன்றைய கல்வி முறையினை முழுமையாக அலசுகிறது. மூளைக் கல்வி அறிவை எய்திட எய்திட அவரின் நடத்தை அணுகு முறை அனைத்தும் மாறுகிறது.

நடப்பது மூளை வளர்ச்சியா? அல்லது மூளைச் சலவையா?

கல்வி என்பதே ஆளும் வர்க்கம் தனக்கு சாதகமான பிரஜைகளை வடிவமைக்க நடத்தும் நாடகம் தானே?

எல்லையற்ற கற்றல், சுவர்களற்ற வகுப்பறை, உலகம் திறந்து கிடக்கிறது, கதவுகளைத் திறந்து வெளியே வாருங்கள். நமக்கான கற்றல் உலகம் காத்திருக்கிறது. உங்களுக்கு விடுதலை. இதுதான முறைசாராக் கல்வி.

உணர்தல், புலனுணர்வு, தொடர்பு படுத்தல், நினைவாற்றல், கற்பனைத் திறன், பாகுபடுத்தல், சீர்தூக்கிப் பார்த்தல் இவற்றோடு பகுத்தறிவும் இணைதலே நுண்ணறிவு ஆற்றல் எனப்படுகிறது.

நுண்ணறிவு பெரும்பாலும் சுயதேடல், தன்வயப்படும் விருப்ப வேலைகள் மூலமே வளர்ச்சிப் பெறுகிறது.

கல்வியில் இன்றைக்கு முறையாக போதிக்கப்படும் பாடங்கள் பல முறைசாரா கல்வி ஜாம்பாவான்கள் வழங்கியது.தான். சீரான கல்வி சாதிக்காத்தை சுயசிந்தனை தேடல் மூலம் அவர்கள் சாதித்தனர்.

ஆன்டனி ஷெல்டன்

The contemporary History –Hand Book

“எனக்குத்தான் தெரியும் பள்ளிகூடம் போனேன். ஆனால், யாருக்குமே நான் மாணவியாக இருந்த்து கிடையாது” அகதா கிருஸ்டி, நாவலாசிரியை

நமது மண்ணின் அறிவுத்திறனின் அடையாள மாந்தர்களது முறைசாரா வகுப்பறையில் நுழைந்து நுண்ணறிவு வளர்க்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம்.
முறைசாரா கல்வி மூலம் உச்சம் தொட்டவர்கள் சுந்தர்பிச்சை, விஸ்வநாதன் ஆனந்த்,சகுந்தலா தேவி, நோபல் அறிஞர் அமிர்தியா சென், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான், ஜி.டி.நாயுடு இவர்களின் நுண்ணறிவுப் பெற்ற வரலாறு நினவுக் கூறத்தக்கது. இவர்கள் முறையான வகுப்பறைக் கல்வியைப் பெற்றத்தில்லை அல்லது கற்ற கல்வியில் இவர்களின் நிபுணத்துவம் அடையவில்லை.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Review By Ku. Sentamil Selvan. கற்றல் என்பது யாதெனில் - கல்வி 4.O - கு. செந்தமிழ் செல்வன்

கல்வி 4.o என்பது என்ன?

மனிதர்களும் கணினிகளும் சேர்ந்து ஒத்துழைக்கும் ஒரு செயல்பாடாக கல்வி மாறிவிடும் என்றே தோன்றுகிறது. நம் காலத்தில் காகிதம் நோட்டு பேனா எல்லாமே கணினியாக இருக்கப் போகிறது.

டேவிட் வார்லிக் , கணினி கல்வி அறிஞர்

செயற்கை நுண்ணறிவு கல்விப் புராட்சியைத் தான் கல்வி 4.0 என அழைக்கிறார்கள். நான்காம் தொழிற்புரட்சி கால வேலை ப்பணி இடங்களில் வேலை கிடைத்து சேர்ந்த்திட என்னென்ன திறன்கள் தேவையோ அவற்றை வழங்கிட தகுந்த கல்விக்குத்தான் 4.0 என்ற பொதுப் பெயர் தரப்பட்டுள்ளது. அவை, படைப்பாற்றல், சமூகவியல் நுண்ணறிவு , இயல்திறன், தொகுப்பு நுண்ணறிவு மற்றும் ஏனைய நுண் அளவீடுகள் எனலாம்.

கல்வி 4.0 வும் தொழில்நுட்பமும்

சமூகத்தை தொழில்நுட்ப மயம் ஆக்காமல் நாம் நான்காம் தொழிற்புரட்சியை கொண்டு செல்ல இயலாது. அதற்கு நாம் சமூகத்தையே கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டி இருக்கிறது.

ராபர்ட் ஜெ.ஷிலர், யேல் பல்கலைக்கழகம்

ஆன்லைன் கல்வி கோட்பாடுகள்:

சாதாரண வகுப்பரை கற்றலின் அதே அம்சங்கள் பாடப் பொருள், பாட அச்சாக்கம் அப்ப்படியே இணைய வழி நடத்துவதற்கு பெயர் கல்வி 4.0 அல்ல.
இணையத்தில் கிடைக்கும் செயற்கை நுண்ணறிவு , டிஜிட்டல் மயமானப் பாடப்பொருள் இவை பயன்படுத்தப்பட்டு பாடங்கள் நடப்பவைதான் இணையக் கல்வி என்று அழைக்கமுடியும்.

பிலிப் ரெஜ்யர், டீன் ஏ.எஸ். யு ஆன் லைன்

ஒரு மாணவர் கல்வி கற்க தூண்டுதலாகிருப்பவை என உளவியலாளர்கள் குறிப்பிடுவது :
 மாணாவரின் கற்றல் சூழல்
 மாணவரின் ஆர்வம் மற்றும் உணர்வுகள்
 சமூக சக்திகள்
 உடலியல் ஒத்துழைப்பு
 உளவியல் ஆரோக்கியம்
இவைகள் கல்வி 4.0 க்கும் பொருந்தும்.

“இ” கற்றல் கோட்பாடுகளை உற்று கவனித்து ஆய்வு செய்பவர்கள் கற்றல் தொழில்நுடப வாதிகள் (Education technologist).

இவர்கள் கற்றல் செயல்பாடுகளை உற்று நோக்கி ,பதிவு செய்து பகுத்தாய்வு செய்து, தகவமைத்து உருவாக்கி,அமல்படுத்தி, மேம்படுத்துவர்.
சமத்துவக் கல்விக்கு மாற்றாக இந்த கல்வி 4.0 அமையுமா?

உலக அளவில் டிஜிடல் ஆசிரியர் பயிற்சி எப்படி இருக்கிறது? நம் இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது ? இதுவே நம் முன் மிச்சமிருக்கும் கேள்வி.
கல்வி 4.o வும் டிஜிடல் பள்ளியும்
கல்வி 4.o வும் இந்தியக் கல்வியும்
கல்வி 4.o வும் குழந்தைகள் நலனும்
என்ற தலைப்புகளில் முழுமையாக மூழ்க வைகிறார்.

அனைவருக்கும் ஒரே சீரான தரமான பொதுப் பள்ளிகள் என்பது நமது நீண்டநாள் கனவு. இந்தக் கனவினை எட்ட விடாமல் இந்தியக் கல்வி முறண்கள் உள்ளன.

  • 1. விலைக்கு கல்வி Vs விலையில்லாக் கல்வி
    2. பள்ளிக் கல்வி Vs நுழைவுத் தேர்வு பயிற்சி
    3. மதிப்பெண்கள் Vs திறன்கள்
    4. உள்ளூர் அறிவு Vs உலக அறிவு
    5. கும்பலாக்க் கற்றல் Vs தனிக்கவனக் கற்றல்
    6. மாநிலக் கல்வி Vs சர்வதேசக் கல்வி
    7. மனப்பாடல்கல்வி Vs புரிந்து படிக்கும் கல்வி
    8. வயது அடிப்படைகல்வி Vs சுதந்திரக் கற்றல்
    9. அனைத்துப்பாட தேர்ச்சி Vs ஒரு துறை நிபுணத்துவம்
    10. பாடப் புத்தகம் Vs பொது வாசிப்பு

நான்காம் தொழிற்புரட்சியின் அங்கமாகக் கருதப்படும் கல்வி 4.0 என்பது பள்ளிக் கூடமோ ஆசிரியர்களோ தேவைபடாத வகைக் கல்வி அல்ல .ஆனால், கல்வி முறையின் முக்கிய அடித்தளமாக இணைய தொழிற்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் இணைக்கும் கல்வியின் புதிய அவதாரம் ஆகும். டிஜ்டல் சந்ததியின் நாளைய சாதனைகளுக்கு ஏற்றார் போல அவர்களை செதுக்கிட உதவும் சூழல்களைக் கொண்ட நவீன என்பதே கல்வி 4.0.

இணைய வழி கற்றல் – கணினிமயக் கற்றல் என்பதை கல்வி 4.0 இந்தப் பள்ளிகளுக்குள் நடக்கும் உலகக் கல்வியாகவே முன் மொழிகிறது. அது,
தமிழக, இந்திய அரசின் மக்கள் நலக் கல்வியாக அனைத்து வகை குழந்தைகளையும் சென்றடைய அவர்கள் யாவருக்கும் விலையின்றி அதற்கான உபகரணங்களை வழங்கி இணைய வசதியோடு 21 ஆம் நூற்றாண்டு கல்விச் சேவையாக அறிமுகமாக வேண்டும் என்பதே நமது நிலபாடு. அதை, அவசரமாக, அரசு கையில் எடுக்கவில்லையெனில் பெரிய கார்பரேட்டுகளின் மூலதனமாகி கல்வி வர்த்தக வலையில் வீழ்ந்து விடும்.

நவீன யுகத்தை நோக்கிய கல்வியாக, நான்காவது தொழிற்புரட்சி சார்ந்த கல்வி 4.0 சிறப்பாகச் செயல்பட நாம் மூன்று விஷயங்களை விட்டுக் கொடுக்கவே முடியாது.

  • 1. கல்வி எப்போதும் மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டும்
    2. அனைவருக்கும் விலையில்லா இ-கற்றல் எனும் புதிய அரசு – கல்விக் கொள்கை எட்டப் பட வேண்டும்
    3. உலகக் கல்வித் தேவை. அது தாய் மொழியில் உருவாக்கிட வேண்டும்.

இவைகளை சாத்தியப்படுத்திட இந்தச் சமூகமே திரண்டெழ வேண்டும். சமூகச் செயல்பாட்டாளர்களும் ஆசிரியர் சமூகமும் ஒன்றிணைந்து அந்தச் செயல்திட்டத்தை உருவக்கியே தீர வேண்டும். அதற்கு இந்தப் புத்தகம் வழிகாட்டி நூலாக உதவிடும்.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர்- பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார்



சென்னை: கல்விச் சிந்தனைகள் குறித்த வளமையான புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் கூறினார்.

செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ‘கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (செப்.1) சென்னையில் நடைபெற்றது. பேரா. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூலை மேனாள்துணைவேந்தர் பேரா. க.அ.மணிக் குமார் வெளியிட முதல் பிரதியை கே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ‘கல்விச் சிந்தனைகள் நூல் திரட்டு’ விற்பனையை தொடங்கி வைத்து கே.நந்தகுமார், அயல்நாட்டு கல்வியாளர்கள், சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடிதேடி படிப்பது என்ற நிலை மாற வேண்டும். தமிழில் முதல் தரமான புத்தகங்கள் வேண்டும். ‘கற்றல் என்பது யாதெனில்; கல்வி 4.0’ போன்று நல்ல நல்ல நூல்களை ஆயிஷா நடராசன் போன்றவர்கள் எழுத வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பேரா.க.அ.மணிக்குமார் குறிப்பிடுகையில், “பல்கலைக் கழக பேராசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல் தரத்தோடு இந்த நூல் உள்ளது. திறமையான ஆசிரியர்களை ஊக்குவித்தால் மிகச்சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும்” என்றார்.

“வகுப்பறைகள் மறைந்து, மனிதநுண்ணறிவை கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டி உள்ளது. தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது. தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மாணவர் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. ஒன்றரை வருடம் கல்விச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு, பயிற்சிகள் இன்றி கணித அடிப்படைகளை மறந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். கற்றல், கற்பித்தல் இயல்பாக இருக்காது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்ந்து கற்பிக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “காலையில் எழுந்து பல் தேய்க்க பழகியவர்கள், இப்போது செல் தேய்க்க பழகிவிட்டோம் என்பன போன்ற வாக்கியங்கள் வாசிப்பை நகர்த்தி செல்கிறது. 2010க்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதி மனிதர்களாகவும், பாதி கருவி களாகவும் உள்ளனர். இந்த அழகையும் ஆபத்தையும் உணர வேண்டும். தமிழக கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டி உள்ளது. அதற்கு இந்நூல் உதவும்” என்றார்.“தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக, ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க ‘அகஸ்தியா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு மட்டுமின்றி மாணவர் சமூகத்திற்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் குறிப்பிட்டார்.

May be an image of 4 people, indoor and text that says 'கற்றல் என்பது யாதெனில் sed'

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராஜன், “கடந்த ஒன்றரை வருடத்தில் ஆன்லைன் வாயிலாக முறைசாரா கல்வி பயின்று மாணவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். எனவே, கல்வி 4.0வை ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார்.“இந்தியாவிலேயே கியூஆர் கோடு என்ற முறையை பாடத்திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தமிழக பாடத்திட்டம் முதலில் குழந்தையை குழந்தையாக அணுகும். அடுத்து மாணவனாக, தேடலில் ஈடுபடும் நிபுணனாக, எதிர்காலத்தை திட்டமிடுபவராக உயர்த்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டத்திற்குள் இவ்வளவையும் வைக்கும் அளவிற்கு அரசு பள்ளி ஆசிரியர்களிடம் திறமை உள்ளது. செயல்திறன் மிக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ள சூழலில், கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு தொழில் நுட்பத்தையும் கைக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், பாரதி புத்தகாலய நிர்வாகிகள் க.நாகராஜன், ப.கு.ராஜன், சுரேஷ் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

ஆசிரியர்கள் தேவையற்ற வகுப்பறையை நோக்கித் தள்ளும் கலப்பு முறை கற்பித்தலும், கற்றலும் – தா.சந்திரகுரு

ஆசிரியர்கள் தேவையற்ற வகுப்பறையை நோக்கித் தள்ளும் கலப்பு முறை கற்பித்தலும், கற்றலும் – தா.சந்திரகுரு

2020ஆம் ஆண்டு மே 29 அன்று பல்கலைக்கழக மானியக் குழுவின் 547ஆவது கூட்டத்தில் இணைய வழியிலான படிப்புகள் குறித்து விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றிய கருத்து குறிப்பு இப்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், தொடர்புடையவர்கள் அது குறித்து ஜுன் 06ஆம் தேதிக்குள் தங்களுடைய…
Kattral Enbathu Yathenil Book Oriented Ayesha. Era. Natarasan's Interview on Bharathi Tv. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கற்றல் என்பது யாதெனில் | ஆயிஷா. இரா. நடராசன் | Writer Ayesha Era. Natarajan



#Buddhist #TamilLiterature #BookReview #Interview

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

குழந்தைகளை வளர்த்தெடுக்க கிராமம்தான் தேவை – கணினித் திரைகள் அல்ல – ஜெயந்த் சின்ஹா எம்.பி (தமிழில் தா.சந்திரகுரு)

குழந்தைகளை வளர்த்தெடுக்க கிராமம்தான் தேவை – கணினித் திரைகள் அல்ல – ஜெயந்த் சின்ஹா எம்.பி (தமிழில் தா.சந்திரகுரு)

  குழந்தையை வளர்த்தெடுப்பதற்கு, கிராமம்தான் தேவை. குழந்தையின் வளர்ச்சிக்கு பலருடன் அணுகல், கற்றல் அணுகுமுறைகள் மற்றும் விருப்பங்கள் தேவைப்படுவதால், அவர்களுக்கான முக்கியமான கல்வியை இணையவழிக் கற்றல் முறையிடம் ஒருபோதும் ஒப்படைத்து விடக் கூடாது. 180 நாடுகளில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக…

கண்டேன் புதையலை!

திறமை இல்லாத குழந்தைகளே இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உள்ளது. எல்லாருக்கும் எல்லாத் திறமைகளும் இருப்பதில்லை. எனவே ஒரு சில திறமைகள் இல்லாத (உதாரணமாக, கணிதத்திலும், ஆங்கிலத்திலும் திறமை இல்லாத) குழந்தைகளை முட்டாளாகச் சித்திரிப்பது தவறு. அப்படிச் சித்திரித்தால் அது அவர்களுடைய…