பிச்சுமணியின் கவிதைகள்

பிச்சுமணியின் கவிதைகள்




குழந்தை மனசென்பது
வேறொன்றுமில்லை
தான் விரும்பிய
எல்லாவற்றிற்கும்
உயிர் தருவதுதான்.
—-
உதிரும் இலைகள்
காற்றின் மீது கோபப்படுவதே
இல்லை..
அது அழைக்கும் இடங்களுங்கெல்லாம்
கூடவே செல்கின்றன.
—-
மொழியின் எழுத்துக்களை
முதன் முதலில் அறியும்
குழந்தையிடம்
“பார்க்காமல் எழுது” என்றால்
கண்களை மூடிக் கொண்டு எழுதுவது
இலக்கணப் பிழை இல்லைதானே.‌.

– பிச்சுமணி