ஜனவரி 21 - லெனின் நினைவு தினம் (Lenin Memorial Day Article): "மாமேதை லெனின்- புரட்சி உத்திகளின் நாயகன்"- என். குணசேகரன் | www.bookday.in

ஜனவரி 21 – லெனின் நினைவு தினம்: “மாமேதை லெனின்- புரட்சி உத்திகளின் நாயகன்”- என். குணசேகரன்

ஜனவரி 21 - லெனின் நினைவு தினம்: "மாமேதை லெனின்- புரட்சி உத்திகளின் நாயகன்" - என். குணசேகரன் மாமேதை லெனின் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று தனது 53-வது வயதில் மறைந்தார். மானுட வரலாற்றின் பயணத்தை புதிய…
சிபிஐ (எம்) மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் எழுதிய "மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம்" கட்டுரை - www.bookday.in

மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம் – என்.குணசேகரன்

மீண்டும் மானுடத்தை ஒடுக்கும் காலனியாதிக்கம் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில் புகுந்து ராணுவத் தாக்குதல் நடத்தி மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை யும் அவரது மனைவியையும் கடத்திக் கொண்டு  போன அமெரிக்காவின் செயல்,  இதுகாறும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து விழுமியங்களையும் தகர்த்தெறிவதாக…
Karl Marx Frederick Engels The Communist Manifesto (மார்க்ஸ் - எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்)

மார்க்ஸ், எங்கெல்ஸ் பார்வையில் கற்பனா சோசலிஸ்டுகள்  – எஸ்.வி.ராஜதுரை

கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது மார்க்ஸியத்தில் அக்கறை உள்ளவர்களோ விமர்சனப் பகுப்பாய்வுக் கற்பனாவாத சோசலிசமும்  கம்யூனிசம் பற்றி – குறிப்பாக  சேன் சிமோன் (Saint-Simon), சார்ல்ஸ் ஃ பூரியே (Charles Fourier),  இராபர்ட் ஓவன் (Robert Owen) ஆகியோரைப் பற்றி முதன்…
 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

 அரசும் புரட்சியும் – எஸ்.வி.ராஜதுரை

  லெனினின் நூற்றாண்டு நினைவு போற்றப்படும் இந்த ஆண்டில் அவரிடமிருந்து கம்யூனிஸ்டுகள் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம். அவரது மிகச் சிறந்த படைப்புகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை இளம் தலைமுறைக் கம்யூனிஸ்டுகளுக்கு அறிமுகப்படுத்துவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமை. அவர்கள் செய்ய வேண்டிய…
அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

அத்தியாயம் 32: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

      பெண் விடுதலைக்கு அடித்தளம் புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவில் பெண்கள் சமூகத்திலும், குடும்பத்திலும் விலங்கினங்களை விட மோசமான அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஸார் மன்னர் பரம்பரை ஆண்களும், பிரபுத்துவ வர்க்க ஆண்களும், தங்கள் குடும்பப்…
katturai: ulagai ulukkum thaniyar raanuva koolippadaikal - a.bakkiyam கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்

கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்

ரஷ்யாவின் வாக்னரும் அமெரிக்காவின் பிளாக் வாட்டரும் ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவப் கூலிப்படையான வாக்னர் குழுவும், அதன் தளபதி ஜெனியே பெர்கோஷினும்தான் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் விவாத பொருளாக இருக்கின்றனர். குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க ஊடகங்கள்…
அத்தியாயம் 8 : பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி aththiyayam 8 : pen: andrum indrum - narmada devi

அத்தியாயம் 8 : பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

  பெண்களை வதைக்கும் புதிய பேயும், பழைய பேயும் ‘சுரண்டல்தான் விதி’ மூலதன நூலைப் படைப்பதற்காக மார்க்ஸ் முதலாளித்துவ முறையையும், அந்த முறைக்குரிய உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை முறைகளையும் ஆராய வேண்டி வந்தபோது, அதற்கான தூய்மையான சூழல் இங்கிலாந்தில் நிலவியது. தொழிற்புரட்சி…
நூல் அறிமுகம்: மிக்கெயில் ஜாஷ்சென்கோவின் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ தமிழில்: ஆதி வள்ளியப்பன் – அமுதன் தேவேந்திரன்

நூல் அறிமுகம்: மிக்கெயில் ஜாஷ்சென்கோவின் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ தமிழில்: ஆதி வள்ளியப்பன் – அமுதன் தேவேந்திரன்




நூல் : குழந்தைகளுக்கு லெனின் கதை
ஆசிரியர் : மிக்கெயில் ஜாஷ்சென்கோ
தமிழில்: ஆதி வள்ளியப்பன்

விலை : ரூ.₹50/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

சோவியத் ரஷ்யா அளித்த மிகப்பெரிய கொடைகளில் ஒன்று தான் புத்தகங்கள் அதுவும் மொழிபெயர்ப்பு நாவல்கள் எத்தனையோ எண்பதுகளில் வந்த காலகட்டத்தில் பல புத்தகங்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பது நமது துரதிஷ்டவசமே..

லெனின் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் தத்துவங்கள் வாசித்து இருப்பினும் ஒரு சிறு புத்தகத்தின் மூலம் குழந்தைகளுக்கான அற்புதமான லெனின் காண்பிக்கிறார் இந் நூலின் ஆசிரியர் ஒரு மொழிபெயர்ப்பு நூலை வாசிப்பது போன்ற கடினமாக இல்லாமல் எளிய நடையில் மிகவும் பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன்.

லெனின் மிகச்சிறந்த போராளி படிப்பாளி மாணவ பருவத்திலிருந்தே படிப்பில் கெட்டிக்காரராக இருந்திருப்பது அவரது அறிவுக்குர்மையை பறைசாற்றுகிறது.

புத்தகத்தில் கூறியிருப்பது போல உலகின் நலம் நாடுகிற,ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமூகத்தைக் கனவு காண்கிற அனைவரின் இதயத்திலும் என்றென்றும் நிலைபெற்றிருக்கும் மாபெரும் தலைவர் லெனின் பற்றிய சின்னஞ்சிறு நூலில் பேரதிசயங்கள் காத்திருக்கின்றன ஒரு முறை வாசித்து விடுங்கள் தோழர்களே நண்பர்களே. ..

எட்டு வயதில் நடைபெற்ற ஒரு சம்பவத்திற்கு தான் பொய் சொல்லி விட்டோமே என்று எண்ணி இரண்டு மாதங்கள் கழித்து தனது மனதை அரித்த அந்த நிகழ்ச்சியை நினைத்து மனம் எண்ணி துன்பப்பட்ட அந்த சிறுவன் நினைக்கும் போது. .. ஆச்சரியம் கொள்ள தான் செய்கிறது. ..

புரட்சி வேலைகளில் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பை பாதிலேயே நிறுத்த முடிவு செய்த பல்கலைக்கழகத்திற்கு சவாலாக பல்கலைக்கழகத்தின் பாடங்களை நேரில் சென்று படிக்காமலேயே வீட்டில் இருந்து தனது பள்ளி படிப்பை முடித்து முதல் மாணவனாக வந்த லெனின் மிகச்சிறந்த படிப்பாளி என்பதை பல்கலைக்கழகமே பாராட்டி சான்றிதழ் கொடுத்திருப்பது அன்றைய பேராசிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது…

நரியை வேட்டையாட வாய்ப்பு கிடைத்தும் நரியின் அழகையும், உயிரையும் மதித்து மனிதநேயத்துடன் நடந்து கொண்ட அந்த லெனின் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எத்தனையோ தலைவர்கள் சொற்பொழிவு செய்ய வரும் போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் இவர் தான் தலைவர் என்று ஆனால் கூட்டத்தில் ஒருவராக வந்து ஒரு தொழிலாளியின் அருகிலேயே அமர்ந்து பேசும்போது மட்டுமே தான் தலைவர் என்று தெரிந்த பின் அந்த சின்னஞ்சிறு குழந்தைக்கு பொம்மை வாங்கி கொடுத்த லெனின் குழந்தைகளின் மனதை குழந்தைக்கான உலகத்தை புரிந்து கொண்டு மாபெரும் தலைவர் என்ற மமதை கொஞ்சம் கூட இல்லாமல் ஒரு குழந்தை மனம் படைத்த அந்த லெனின் கண்டு தொழிலாளர் மட்டுமல்ல வாசிக்கும் நாமும் வியப்புக்கு உள்ளாகுவோம்.

கண அடுப்பை தயாரிக்கும் தொழிலாளரிடம் மரியாதையாக நடத்தும் பாங்கு ஒரு தோழனுக்கு உரியதாகும்.

முன்னரே பதிவிட்ட மீனவ தலைவரிடம் நடத்தப்படும் உரையாடலும் மீனவ தலைவர் கொண்டுவரும் மீனை வாங்கிக் கொள்ளாமல் மிகக் கடுமையான பஞ்சத்தில் மக்கள் வாழ்கின்ற போது தலைவனுக்கு மட்டும் உன்ன ஏன் மீன் அந்த மீனை பஞ்சத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் என் மக்களுக்கு கொடுங்கள் என்று சொன்ன மாமேதை தான் லெனின். ..

இவர்தான் புரட்சியின் தலைவர் லெனின் என்று தனது இறுதி கட்டுரையை முடித்துக் கொள்கிறார்.

நாம் லெனினை பற்றிய பல புத்தகங்கள் வாசித்திருப்பினும் நவம்பர் புரட்சி நூற்றாண்டை ஒட்டி சிறார் நூல் வரிசையில் ‘குழந்தைகளுக்கு லெனின் கதை’ சிறுவர் நூல் வரிசையில் இருப்பினும் அனைத்து பெரியவர்களும் வாசிக்க வேண்டிய மிக அற்புதமான படைப்புதான் இந்த புத்தகம் மிகச்சிறந்த முறையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் ஆதி வள்ளியப்பன் மற்றும் விக்டர் கிரிலோவின் ஓவியங்கள் வெகு சிறப்பாக இருக்கின்றன.
இதைப்போன்ற படத்துடன் கூடிய புத்தகங்களை வாசிக்கும் போது நம் மனநிலை ரஷ்யாவுக்கே செல்வதை போல இருக்கிறது.

மிக்கெயில் ஜாஷ்சென்கோ எளிய நடையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் லெனினின் வாழ்க்கை வரலாறு சென்றடைய அருமையாக கதைகளைப் போன்று வரலாற்றை படைத்திருக்கிறார்.

புத்தகம் கொண்டு வர உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள். சிறுவர்களுக்கான இலக்கியம் தமிழில் மிகக் குறைவு அதை புக்ஸ் ஃபார் சில்ட்ரன் கடந்த ஆண்டுகளில் மிகச் சிறப்பாக அந்த இடத்தை பூர்த்தி செய்து வருகிறது.

குழந்தைகளுக்கான இலக்கியம் தமிழில் நிறைய மலரட்டும்.

அமுதன் தேவேந்திரன்

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 2 – என்.குணசேகரன்

சமகால நடப்புகளில் மார்க்சியம் தொடர் 2 – என்.குணசேகரன்



மார்க்சியம் “மறைந்து போன” தத்துவமா?
என்.குணசேகரன்

“மார்க்சியம் காலாவதியாகி விட்டது; அது தோல்வியடைந்த தத்துவம்” என்றெல்லாம் மார்க்சிய எதிரிகள் பேசுவது வழக்கமானதுதான்.

அநீதிகளின் மொத்த உருவமாக இருக்கும் ஒரு சமூகத்தை ‘சகித்துக்கொண்டு வாழுங்கள்’ என்று மார்க்சியம் போதிக்கவில்லை; சில ஒழுக்க போதனைகளை மேலோட்டமாக சொல்லி விட்டுப் போகிற தத்துவமாகவும் அது இருந்ததில்லை; மாறாக, அநீதியான, சுரண்டல் சமூகத்தை அடியோடு மாற்றும் கடமையை மார்க்சியம் பேசுகிறது.

இதனால், இதர தத்துவங்களை விட மாற்றத்திற்கான தத்துவமான மார்க்சியத்தின் மீது கடும் எதிர்ப்பு, காட்டாற்று வெள்ளமாக இருந்து வருகிறது. ஆளும், மேல்தட்டு வர்க்கங்களின் இந்த எதிர்ப்பாற்றில் எதிர்நீச்சலடித்து மார்க்சியம் முன்னேறி வருகிறது.

தமிழக ஆளுநர் மார்க்சியம் மடிந்து போன தத்துவம் (“dead “) என்று பேசினார். அது மட்டுமல்ல; மார்க்சியம் மறைந்து போன (“gone”) தத்துவம் என்றும் புறக்கணிக்கப்பட்ட தத்துவம் (“abandoned “) என்றும் தாக்குதல்களை தனது உரையில் அடுக்கிக் கொண்டே சென்றார்.

வேடிக்கை என்னவென்றால் ‘இறந்து போனது’ என்று அவர் கருதுகிற தத்துவத்தை அவர் வலிந்து வலிந்து மறுத்துப் பேசியதுதான்.

மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் இதழில் எழுதிய கட்டுரைகளைக் குறிப்பிட்டு அவர் ‘விளக்கங்கள்’ அளித்தார். மார்க்சிசம் மடிந்து போன தத்துவம் என்று கருதுகிற ஆளுநர் “மடிந்து போன, மறைந்து போன” தத்துவத்தின் ஆசிரியர் எழுதிய எழுத்துக்களைப் பற்றி எதற்காக இவ்வளவு பேச வேண்டும்? மார்க்சின் எழுத்துக்களை சிரமப்பட்டு வரிக்கு வரி விளக்கி மறுக்க வேண்டிய அவசியம் என்ன?

இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும்; மார்க்சியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னமும் மக்கள் சிந்தனையை கவ்விப் பிடிக்கும் தத்துவமாக அது விளங்குகிறது. இந்த உண்மை காரணமாகவே, தமிழக ஆளுநர் போன்ற மார்க்சிய எதிர்ப்பாளர்கள் மார்க்சின் எழுத்துக்களை மேலோட்டமாக வாசித்து, அவதூறு செய்கின்றனர்.

மார்க்சிசம் தழைத்த நாடுகளிலேயே அதனை மக்கள் புறக்கணித்து விட்டதாகவும் அங்கெல்லாம் மார்க்சிஸ்ட்கள் என்று யாருமில்லை என்றும் போகிற போக்கில் ஆளுநர் கூறுகின்றார். சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை மையமாக வைத்துத்தான் இந்தக் கருத்தை அவர் கூறுகிறார். ஆக, அவரது உரையின் நோக்கம் மார்க்சிய தத்துவம் புறக்கணிக்க வேண்டிய தத்துவம் என்ற கருத்தை பிரச்சாரம் செய்வதுதான்.

இதேபோன்று, தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைகிற போதெல்லாம் மார்க்சியத்திற்கு எதிர்காலம் இல்லை என்று பலர் பேசுவதுண்டு. மேற்கு வங்காளம், திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியை இழந்ததை முன்வைத்து மார்க்சியம் இந்தியாவில் நிராகரிக்கப்பட்டது என்று பலர் பேசி வருகின்றனர்.

தொடரும் வரலாறும், மார்க்சியமும்

மானுட வரலாற்றில் முற்போக்கு மாற்றங்களை கொண்டு வந்த பல புரட்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. 1789-இல் நிகழ்ந்த பிரெஞ்சு புரட்சி, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அது, நிலப்பிரபுக்கள், மன்னர்கள் ஆதிக்கம் செலுத்திய அன்றைய பிரான்சில் எழுந்த மாபெரும் புரட்சி.

அந்தப் புரட்சியின் போது “அனைத்து மக்களும் சமம்” என்று சமத்துவ இலட்சியத்தை மக்கள் முழங்கினர். “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்து மக்கள் புரட்சிகரமான முறையில் ஆளுகிற கூட்டத்தை வீழ்த்தினர்.

அடிமைத்தனமும், மூடத்தனமும், அநீதிகளும் நிலவிய அன்றைய சமூகத்தில் “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற இலட்சிய முழக்கங்கள் மிகப் பெரிய முன்னேற்றமாக திகழ்ந்தன. ஆனால், பிரெஞ்சு புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.

அதன் காரணமாக, அந்தப் புரட்சி முன்வைத்த ஜனநாயக முழக்கங்களை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது சரியானதா? தமிழக ஆளுநர் வெளிப்படையாக அவ்வாறு சொல்வாரா?

இன்று உலக நாடுகளில் ஜனநாயக உணர்வும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களும் வளர்ந்துள்ளன. வாக்குரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் சட்ட அமைப்புகள், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன. ஜனநாயக சட்டங்கள் அரசாங்கங்களை வழிநடத்தும் நெறிமுறைகளாக மாறியுள்ளன. ஜனநாயக மீறல்கள் பல நடக்கிற போது மக்களின் எதிர்ப்பியக்கங்களும் நடக்கின்றன.

இதற்கெல்லாம் அடித்தளமிட்டது பிரெஞ்சு புரட்சியும், 18,19-ஆம் நூற்றாண்டுகளில் உலகின் பல பகுதிகளில் நடந்த மக்கள் புரட்சிகளும்தான். பிரெஞ்சு புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தாலும், மானுட வரலாற்றை சமத்துவ, ஜனநாயக இலக்குகளை நோக்கி செல்வதற்கான உந்துதலை பிரெஞ்சு புரட்சி அளித்துள்ளது.

ஆனால், வரலாற்றின் இயக்கம் அத்துடன் முடிவடையவில்லை. பிரெஞ்சு புரட்சி எட்டாத இலக்குகளை அடைய வேண்டிய தேவை நீடிக்கிறது. லெனின் எழுதினார். “பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை நுணுகிப் பயிலும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமான புரட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள். இந்த பிரெஞ்சு புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது.”

நிலப்பிரப்புக்கள், மன்னர்களின் ஆட்சியை பிரஞ்சு புரட்சி முடிவுக்கு கொண்டு வந்தது. எனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பு உலகில் நிறுவப்பட்டது. எனவே பிரெஞ்சு புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக நீடிக்கின்றன. இதற்கு மார்க்சியம் சரியான தத்துவமாக பயன்படுகிறது.

பிரெஞ்சு புரட்சியின் போது, 1791-ல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போன்று ஒரு பிரகடனத்தை வியட்நாம் புரட்சியாளர்கள் ஹோசி மின் தலைமையில் காலனிய ஆட்சிக்கு எதிராக போராடிய போது 1945-ல் வியட்நாம் விடுதலை பிரகடனத்தை வெளியிட்டனர். இது வியட்நாமில் கம்யூனிஸ்ட்கள் சோசலிச வெற்றியை சாதிக்க இட்டுச் சென்றது. மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் 1917-ல் நடந்த ரஷிய சோசலிசப் புரட்சி சாதித்தது. இவ்வாறு வரலாறு தொடர்வதை விளக்கிக் கொண்டே போகலாம்.

சமத்துவ இலட்சியங்களை ஜீரணிக்க முடியாதவர்கள், வரலாற்றைத் திரித்து மாற்றங்களுக்கான பெரு முயற்சிகளுக்கு ஏற்பட்ட தோல்விகளை கொண்டாடுவார்கள். உலக வரலாற்றையும், மார்க்சிய தத்துவ வரலாற்றையும் ஒரு சேர ஆய்வு செய்கிறவர்கள், மார்க்சியம் தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி வருகிறது என்பதையும், இடையில் ஏற்படுவதெல்லாம் தற்காலிக சறுக்கல்கள் என்பதையும் அறிவார்கள்.