LIC எப்படி இருக்கிறது? – அறிவுக்கடல்

LIC எப்படி இருக்கிறது? – அறிவுக்கடல்

    LIC நிறுவனம் நலிவடையத் தொடங்கியிருக்கிறது என்றொரு கட்டுரை சில நாட்களுக்கு முன் bookday.in ல் வெளியாகியிருக்கிறது. காப்பீட்டுத்துறையைப் பற்றியோ, வாழ்நாள்(ஆயுள்) காப்பீடு என்பதைப் பற்றியோ, LIC நிறுவனத்தைப் பற்றியோ தெளிவான புரிதலின்றி அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. முதலில் ஒரு…
ஆயுள் காப்பீட்டுக் கழகம் போராடுகிறதா? – சித்தார்த்தன் சுந்தரம்

ஆயுள் காப்பீட்டுக் கழகம் போராடுகிறதா? – சித்தார்த்தன் சுந்தரம்

      இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான `லைஃப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி)’ குறித்த சமீபத்திய செய்திகள் அது தன்னுடைய ஆயுளுக்குப் போராடுகிறதோ என்கிற தோற்றத்தைக் கொடுக்கிறது. இப்போது எல்ஐசி சிரம திசையில் இருப்பதாகத் தெரிகிறது.…
Porada Va En Thozha Kavithai By Theni Sundar. போராட வா என் தோழா கவிதை தேனி சுந்தர்

போராட வா என் தோழா கவிதை – தேனி சுந்தர்




இழந்தால்
இரண்டு நாள் சம்பளம் தான்..
அதுவும் இப்போதைக்கு..!
வாய்ப்புகள் நெறய இருக்கு..
அதையும் திரும்ப பெறுவதற்கு..!!

கடந்த கால
வேலை நிறுத்தங்களில்
அதிகம் இழந்தவர்கள் தான்
இன்று
மற்றவர்களை விட
அதிகம் அடைந்தும் இருக்கின்றனர்..!

இன்றைய இழப்பு முக்கியமா..?
நிரந்தர பென்சன் முக்கியமா..?
முடிவெடு நண்பா..
முடிவெடு தோழி..!

இவர் வேண்டாம் என்கிறார்..
அவரெல்லாம் பங்கெடுக்கவில்லை..
நீஙகள் காரணமாய் சொல்லும்
இவரும் அவரும்
உங்க பென்சனில்
துண்டு விழுகும் போது
எங்கிருப்பர்..??

நிரந்தர பென்சன்
நிச்சயம் என்றால் தான்
நம் குடும்பமே
நம்மோடு இருக்கும்..!!

தெம்போடு இருக்கும் போதே
போராடு..
வர மறுப்பவர்களுடன்
வாதாடு..

போராட்டக் களத்தில்
நீயும் நானும் முன் ஏரு..
இப்போதைக்கு
குழுவில் உந்தன் பேர் போடு

நம் ஊதியம்..
நம் பென்சன்..
நம் வாழ்வாதாரம்..
நம் போராட்டம்..
நமக்கான போராட்டம்..!

நிலம், விதை, உணவை
நம் கையில் இருந்து பறித்து
பகாசுர கம்பெனிகளிடம் ஒப்படைக்கும்
நாசகார அரசுக்கு எதிரான போராட்டம்..

உழைப்பைச் சுரண்டி விட்டு
தொழிலாளர்களை
தெருவில் எரியும் சட்டங்களுக்கு எதிரான போராட்டம்..
இது
விவசாயிகள் தொழிலாளிகள்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

நாடு முன்னேறவில்லை..
பிரதமரின்
நண்பர் தான் முன்னேறி இருக்கிறார்..

300வது இடத்தில் இருந்தவர்
இப்போது 12வது இடத்தில்..!

நாடு முழுவதும் உள்ள
அரசு ஊழியர் CPS தொகை
5 இலட்சம் கோடி..
அதானி ஒருவரின்
சொத்து மதிப்பும்
5 இலட்சம் கோடி..!
யாருக்கான அரசாங்கம் தெரிகிறதா..?
எனவே ஆசிரியர், அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

தடுப்பூசி உற்பத்தி செய்தவர்
இப்போது
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர்..!

எல்.ஐ சி. முதற்கொண்டு
எதையும் விற்கத் துணிந்த
ஊதாரி அரசாங்கத்திற்கு
எதிரான போராட்டம்…

மத்திய, மாநில அரசு ஊழியர்
இணைந்து நடத்தும் போராட்டம்..!

ஒட்டு மொத்த
உழைக்கும் வர்க்கமும்
ஒன்றாய் அழைக்கிறது..
தமிழகத்தில் ஆளும் கட்சியும்
ஆதரவாய் இருக்கிறது..

மறக்காதே என் தோழா..
மார்ச் 28,29..!
அறைகூவி அழைக்கிறது
அகில இந்திய வேலை நிறுத்தம்..!

வா.. என் தோழா..
துணிந்து களமிறங்கு..!

The destructive act of destabilizing LIC Article in tamil translated By S Veeramani. எல்ஐசியை சீர்குலைத்திடும் நாசகரமான நடவடிக்கை - தமிழில்: ச.வீரமணி

எல்ஐசியை சீர்குலைத்திடும் நாசகரமான நடவடிக்கை – தமிழில்: ச.வீரமணி




மோடி அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையின் மிகவும் மோசமான அம்சங்கள் முன்னுக்கு வந்திருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களில் நிதித்துறையில் தங்கக் கிரீடமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம் என்னும் எல்ஐசி-யின் பங்குகளைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்கான தொடக்கப் பங்கு விற்பனை (IPO-Initial Public Offering) என்னும் நடவடிக்கை வரும் பிப்ரவரி தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் காப்பீட்டுக் கழகம், நாட்டில் ஆயுள் காப்பீட்டுக் கலாச்சாரத்தைப் பரப்பிக்கொண்டிருப்பதில் முன்னோடி நிறுவனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நிகரற்ற நிறுவனமாகும். நாட்டின் மக்களுக்கு, குறிப்பாக ஏழை மற்றும் வடுப்படத்தக்க நிலையில் உள்ள மக்களுக்கு, அரசாங்கத்தின் மூலம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் எதுவும் வலுவானவிதத்தில் வழங்கப்படாத நிலையில் எல்ஐசி மூலமாக மிகவும் விரிவான அளவில் மக்களுக்குக் காப்பீடு அளிக்கப்பட்டிருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

எல்ஐசி தனித்துவமிக்கதோர் அமைப்பாகும். இது, சாமானிய மக்களுக்கு காப்பீடு அளித்திட வகை செய்கிறது. இதன் மூலம் வரும் லாபப் பங்கீடு, இதன் பிரதான முதலீட்டாளராக விளங்கும் அரசாங்கத்திற்கு, வெறும் ஐந்து சதவீதம் மட்டுமே அளிக்கப்பட்டு, மீதம் உள்ள 95 சதவீதமும் பாலிசிதாரர்களுக்கே அளிக்கப்படும் விதத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கிறது. (இப்போது எல்ஐசியின் பங்குகளைத் தனியார்மயத்திற்குத் தள்ளிவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன், பாலிசிதாரர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அளவு 90ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது.) இவ்வாறு, இதர காப்பீட்டு நிறுவனங்களைப் போல் அல்லாமல், எல்ஐசி-யின் லாபங்கள் பங்குதாரர்களுக்கு (shareholders) வழங்கப்படாமல், பாலிசிதாரர் களுக்கே (policyholders) ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எல்ஐசி, 1956இல் அமைக்கப்பட்டதிலிருந்து, ஆயுள் காப்பீடு முழுமையாக வழங்கப்படுவதற்காக அதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோள்களை முழுமையாக அது நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்களுக்கு விரிவான அளவில் அது காப்பீடு வழங்கியிருக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்த பின்னரும் கூட, எல்ஐசி நிறுவனம் ஆயுள் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் தன் ஆதிக்க நிலையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. 2020-21ஆம் ஆண்டில் ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக, எல்ஐசியின் சந்தைப் பங்கு என்பது அனைத்து நிறுவனங்களும் பெற்றுள்ள ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசிகளில், எல்ஐசி மட்டும் அநேகமாக நான்கில் மூன்று பங்கு பாலிசிகளைப் பெற்றிருக்கிறது. எல்ஐசி 40 கோடி பாலிசிதாரர்களைப் பெற்று, 3.03 லட்சம் கோடி ரூபாய் பிரிமியம் வருமானத்தை ஈட்டியிருக்கிறது. அது துவக்கப்பட்டதிலிருந்து, அரசாங்கத்திற்கு டிவிடிண்ட் தொகையாக 28,695 கோடி ரூபாய் அளித்திருக்கிறது. மேலும் அது வங்கிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. மாநிலங்களில் அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், சமூக நலத்திட்டங்களுக்காகவும் மிகப்பெரிய அளவில் பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. இவ்வாறு அது அளித்துள்ள பங்களிப்புகள், 2020-21ஆம் ஆண்டில் சுமார் 26,322 கோடி ரூபாய்களாகும்.

இவ்வாறு அனைத்து விதங்களிலும் நிகரற்று விளங்கும் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தை இந்திய மற்றும் அந்நிய தனியார் முதலீட்டாளர்களுக்குத் திறந்துவிட ஒன்றிய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இவ்வாறு எல்ஐசியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக 2021-22ஆம் ஆண்டு நிதிச் சட்டமுன்வடிவின் மூலமாக எல்ஐசி சட்டத்திற்குத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அரசாங்கம், எல்ஐசியில் உள்ள தன் பங்குகளை அடுத்த பத்தாண்டுகளில் தனியாருக்குத் தாரை வார்த்திடும் விதத்தில் நீர்த்துப்போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. இப்போது முதல்கட்டமாக அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அரசாங்கத்தின் பங்குகள் 75 சதவீதத்திற்குக் குறைக்கப்படும் என்றும், அதன்பின்னர் அரசாங்கம் எல்ஐசியில் தன் பங்ககுகள் 51 சதவீதமாக இருந்திடும் என்றும் அறிவித்திருக்கிறது. இது எல்ஐசியின் முகத்தோற்றத்தையே கடுமையாக மாற்றியமைத்திடும். இதில் முதலீடு செய்திடும் இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்கள் எல்ஐசி தற்போது அரசமைப்புச்சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு (directive principles of the Constitution) உட்பட்டு மேற்கொண்டுவரும் சமூக நலத் திட்டங்களை ஓரங்கட்டச் செய்வதற்கு நிர்ப்பந்தங்களை அளித்திடுவார்கள்.

பொதுத்துறை மற்றும் பொதுச் சேவைகள் மீதான மக்கள் ஆணையம் (The People’s Commission on Public Sector and Public Services), எல்ஐசி பங்கு விற்பனை குறித்து தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது: “எல்ஐசி பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவு, சமூகத்தில் அனுகூலமற்ற பிரிவினருக்கு எல்ஐசி அளித்துவரும் பங்களிப்பில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். பல லட்சக்கணக்கான அதன் சிறிய பாலிசிதாரர்கள் ஆற்றி வரும் முக்கிய பங்கினை நீர்த்துப்போகச் செய்திடும், லாபம் ஈட்டும் பணக்கார முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக மாறிடும். இம்முடிவானது மறைமுகமாக, இது மிகப்பெரிய அளவிலான குடும்ப சேமிப்புகளை அந்நிய மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு, முட்டாள்தனமாக முறைமாற்றிவிடுவதையே காட்டுகிறது.”

எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பாக மதிப்பீட்டுமுறை (valuation procedure), எவரும் புரிந்துகொள்ளமுடியாத விதத்தில் தெளிவின்றி இருக்கிறது. எல்ஐசியின் மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய் என்றும் அதன் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு (embedded value) நான்கு லட்சம் கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டிருப்பது, முற்றிலும் குறைந்த மதிப்பீடாகும். இவ்வாறுதான் இந்த அரசாங்கத்தால் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்பட்டு, தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு எல்ஐசி பங்கு விற்பனை என்பது தனியார் பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு எல்ஐசி பணத்தை அப்படியே முழுமையாக அள்ளிவழங்கிடும் ஒரு நடவடிக்கை என்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதில் உள்ள ஊழல், சமீபத்தில் ஒன்றிய அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையின் (Department of Scientific and industrial Research) கீழ் இயங்கிவந்த பொதுத்துறை நிறுவனமான சிஇஎல் எனப்படும் சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL-Central Electronics Limited) நிறுவனம் விற்பனை செய்யப்பட்டதில் அப்பட்டமாகத் தெரிந்தது. சிஇஎல் நிறுவனம், நந்த்லால் ஃபைனான்ஸ் அண்ட் லீசிங் பிரைவேட் லிமிடெட் (Messrs.Nandlal Finance and Leasing Private Limited) என்னும் தனியார் நிறுவனத்திற்கு வெறும் 210 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிஇஎல் நிறுவனமானது, சோலார் செல்கள் (solar cells), சோலார் இயந்திரங்கள் (solar plants), ரயில்வே சமிக்ஞை அமைப்புமுறைகள் (railway signaling systems) மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்கள் போன்று மின்னணுத்துறையில் மிகவும் முக்கியமான பொருள்களை உற்பத்தி செய்துவந்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்த நிறுவனம் இந்தத்துறையில் எவ்விதமான அனுபவமுமில்லாத, இரண்டகமான கடந்தகால வரலாற்றைக்கொண்டுள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு விற்கப்பட்டிருக்கிறது. சிஇஎல் நிறுவனத்திற்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்தின் சந்தை மதிப்பே தற்போது 440 கோடி ரூபாய்களாகும். இந்நிறுவனம் 2021 நிதியாண்டில் 124 கோடி ரூபாய்கள் மொத்த லாபம் ஈட்டியிருந்தது. இவ்வாறு அரசாங்கத்திற்கு லாபத்தை அள்ளித்தந்த நிறுவனத்தை அரசாங்கம் அடிமாட்ட விலைக்கு விற்க முன்வந்திருப்பது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பலமாகக் கூக்குரல் எழுந்ததை அடுத்து அரசாங்கம் இப்போது விற்பனையைச் சற்றே ஒத்திவைத்திட நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மோடி அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டின் சொத்துக்களையும் இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கும் திட்டமானது நாட்டின் பொருளாதார இறையாண்மையை அரிக்கச் செய்திடும் நாசகரமான நடவடிக்கையாகும், சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் தொடர்பாக அரசமைப்புச்சட்டத்தில் உள்ள வழிகாட்டும் நெறிமுறைகளை (Directive Principles of the Constitution) சீர்குலைத்திடும் நடவடிக்கையாகும், கடந்த பல ஆண்டுகளாக மக்களால் கட்டி எழுப்பப்பட்ட நாட்டின் வளங்களை இந்திய மற்றும் அந்நிய கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதற்கு வழியேற்படுத்தித்தரும் நடவடிக்கையாகும்.

எல்ஐசி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்குலைத்திடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு நாடு சூறையாடப்படுவதைத் தடுத்திட நாட்டிலுள்ள அனைத்து ஜனநாயக மற்றும் நாட்டுப்பற்றுகொண்ட சக்திகளும் விரிவான அளவில் அணிதிரளவேண்டியது அவசியத் தேவையாகும். எல்ஐசி, பொது இன்சூரன்ஸ் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் ஊழியர்கள் அரசின் இத்தகைய தனியார்மயத்திற்கு பொதுத்துறை நிறுவனங்களைத் தாரைவார்த்திடும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டப்பாதையில் இறங்கி இருக்கிறார்கள். இவர்களின் போராட்டம் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்கள்-ஊழியர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஓர் அங்கமாக மாறிட வேண்டும்.

மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் கூட்டுமேடை வரும் பிப்ரவரி 23-24 தேதிகளில் நடத்திடவிருக்கும் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் இந்தப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கட்டத்தை அடைந்திடும்.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

யாருக்காக? இந்த பங்கு விற்பனை யாருக்காக? – நாராயண் சேகர் (தமிழில் இரா.இரமணன்)

யாருக்காக? இந்த பங்கு விற்பனை யாருக்காக? – நாராயண் சேகர் (தமிழில் இரா.இரமணன்)

  (டைம்ஸ் ஆப் இந்தியாவில் 14.09.2020அன்று நாராயண் சேகர் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் சற்று சுதந்திரமான மொழிபெயர்ப்பு.) எல்ஐசி பங்கு விற்பனைக்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகிறது.  ஒழுங்குபடுத்துவது. மூலதனத் தேவை  சிறு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு. வெளிப்படைத்தன்மை. ‘நாலு குளம் வெட்டினேன்.அதில் மூணு…
எல்ஐசியை பங்குச் சந்தையில் விற்கும் மோடி அரசின் முடிவு மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனத்தின் அழிவில்தான் போய் முடியும்  – பினாய் விஸ்வம் (தமிழில் ரமணன்)

எல்ஐசியை பங்குச் சந்தையில் விற்கும் மோடி அரசின் முடிவு மிகச்சிறந்த பொதுத்துறை நிறுவனத்தின் அழிவில்தான் போய் முடியும்  – பினாய் விஸ்வம் (தமிழில் ரமணன்)

  பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் ஒரு வினோதமான செயல்பாட்டை விடாப்பிடியாக முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிரான ஒன்று என்பதே அதன் சாரம். ‘எல்லோருடனும் ஒற்றுமை;எல்லோருக்கும் வளர்ச்சி’(சப் கா சாத் சப் கா விகாஸ்’) என்ற முழக்கத்தை…