மு.அழகர்சாமியின் கவிதைகள்

மு.அழகர்சாமியின் கவிதைகள்




உன் மௌனம்
******************
உனது
மையிட்ட கண்கள்
மையிடாத கண்களை
விழி ஈர்ப்பு விசையால்
வீழ்த்தி விடவே!

மையிருட்டு
இரவுகளை
களவாடுகிறதோ!

இந்த
இரவுகளை
முழுவதும்
களவாடினாலும்..

இன்னும்
இரவுகள்
வேண்டுமென
நினைக்கும்
உன்
மௌனம்…

மின்னலாய்
**************
விட்டு விட்டு அடிக்கும் மழை
விடாமல் துரத்தும்
உன் நினைவுகள்..

மழை வரும் போது
நீயும் …..
மின்னலைப்  போல்
வந்து
செல்வாயே!

ஒத்திவைப்பு
****************
தேதி
குறிப்பிடாமல்
ஒத்தி வைத்து விட்டாய்
நம் சந்திப்பையும்

நாடாளுமன்ற
கூட்டத் தொடர்
போலவே!!!
********************

உன்னை.
அவ்வளவு சீக்கிரம் விட்டுச்செல்ல. ..நான்
ஒன்றும் நீ பயணித்த.
புகைவண்டி அல்ல…….

உன்னை விரைவாக கடந்து செல்ல
நான் ஒன்றும்..எப்போதாவது கடந்து செல்லும்
புயல் காற்றும் அல்ல…

உன்னை அழகை மட்டும் ரசித்து விட்டு
அப்படியே கடந்து செல்ல நான் ஒன்றும்
ரசிகன் மட்டும் அல்ல..

உன்னை அவர்களுக்கு தேவைக்கு
மட்டுமே பயன்படுத்தி விட்டு சென்று விட
நான் ஒன்றும் பயன்பாட்டாளன் அல்ல…

உனக்கு ஆலோனை மட்டும் சொல்லிவிட்டு
அவ்வளவு சீக்கிரம் விட்டு செல்ல
நான் ஒன்றும் மனநல ஆலோகர் மட்டும் அல்ல…

நீ செய்யும் வேலை எல்லாம் ஓவ்வொரு நாளும் உள்வாங்கிக்கொண்டு…
அடுத்த நாளுக்கும்
உன்னை தயார் படுத்த
நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்
நான் ஒன்றும் நீ குடியிருக்கும்
வீடு அல்ல…

நீ செய்யும் கடமையெல்லாம்
பார்த்துக்கொண்டு குறை மட்டுமே
சொல்லிக்கொண்டிருக்கும்
நான் ஒன்றும் உன் அருகில்
குடியிருக்கும்.
உன் உறவினர் அல்ல…

உன்னை
அடுத்த நிலைக்கு கொண்டு
செல்லக்ககூடிய.
அத்தனைக்கும்
மாற்றானவன்.
நான்..

மு.அழகர்சாமி
கடமலைக்குண்டு