விரலின் தடயம்….!!!! கவிதை – சக்தி
ரேகைகள்
கிழிந்த விரல்களால்
சோற்றைக் குழைத்து
குழைத்த சோற்றை
உருண்டை பிடித்துக்
குழந்தைக்கு
சோற்றை
ஊட்டிக்கொண்டிருக்கிறார் அப்பா
வாய் நீட்ட
வாங்கிய குழந்தையின்
தொண்டைக் குழியில்
அடைப்பட்டு நிற்கிறது ஒரு உருண்டை சோறு
நேற்று
இரவெல்லாம்
சேற்றையும் தன் வியர்வையும்
ஒன்றாக பிசைந்து சூளையில்
செங்கல் அறுத்த
அப்பாவின்
தேய்ந்த விரல்களில்
ஒரு விரலின்
முள்ளாகிய தடயம் ,
கவிஞர் ச.சக்தி ,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,

