‘பலூன் தரிசனம்’ ,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா (Book Release) | கவிஞர் மு.முருகேஷ் (Murugesh Mu) - பேச்சு

‘பலூன் தரிசனம்’, ‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா

சென்னை: லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஊடகவியலாளரும் கவிஞருமான தென்னரசன் எழுதிய ‘பலூன் தரிசனம்’,‘பெண்ணாக வாழும் மரம்’ ஆகிய இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா சென்னை லயோலா கல்லூரியின் காட்சித் தகவலியல் துறையின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கவிஞர் மு.முருகேஷ்…
இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜலீலா முஸம்மில் (Jaleela Muzammil) அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ (Manjal Mambu) ஹைக்கூ நூல் வெளியீடு

மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் இலங்கையின் ஏறாவூர் நகரில் வெளியீடு

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியை டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான‌ மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் ஏறாவூர் நகரில் வெளியீடு ******************************** ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாதம்-2024 இறுதி நாள்…
தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ்

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது

தமிழ் இலக்கியத்தில் இன்றைக்கு பெண்களின் படைப்பாற்றல் பாராட்டத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது - பால சாகித்திய புரஸ்கார் விருதாளர் மு.முருகேஷ் நம்பிக்கை நாகர்கோவில்: நாகர்கோவிலை அடுத்த நெய்யூரிலுள்ள இலட்சுமிபுரம் கலை - அறிவியல் கல்லூரியில் வளரி பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமமைப்பின்…
எழுத்தாளர் விட்டல்ராவ் அவர்களுக்கு விளக்கு விருது (Vizhakku Award) அறிவிப்பு, இத்தருணத்தில் அவரைப் பற்றிய ஒரு சிறு வாழ்த்துக்கட்டுரை

விட்டல்ராவுக்கு விளக்கு விருது – பாவண்ணன்

விட்டல்ராவுக்கு விளக்கு விருது - பாவண்ணன் அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும்…
சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...Poet Sirpi Balasubramaniam Award 2024 For 4 Poets in Modern Tamil Poetry - https://bookday.in/

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்…

சிற்பி விருது பெற்ற நான்கு கவிதைச் சிற்பிகள்...   தமிழகத்தின் மூத்த கவிஞர்களில் ஒருவரான சிற்பி பாலசுப்ரமணியத்தின் மணிவிழாவினை ஒட்டி 1996ல் அவரது பெயரில் துவக்கப்பட்ட அறக்கட்டளை ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு ‘சிற்பி விருது’ வழங்கி கௌரவிக்கிறது. கடந்த ஆண்டுகளில், அப்துல் ரகுமான்,…
Create libraries in all schools and colleges for the benefit of students - BAPASI request மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் - பபாசி (BAPASI) வேண்டுகோள்

மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்கள் உருவாக்க வேண்டும் – பபாசி (BAPASI) வேண்டுகோள்



சென்னை, டிச. 7-

அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது என பபாசி தலைவர் எஸ்.வயிரவன் மற்றும் செயலாளர் எஸ்.கே.முருகன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில்…

அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒரு முறை நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியதாக கருதுகிறோம். முன்பெல்லாம் நீதி வகுப்பு மற்றும் பள்ளி, கல்லூரிகளில் நூலக வாசிப்புக்கு என முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதற்கு என நூலகர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பாடப்புத்தகங்களோடு பொது நூல்களும் படிக்கும் ஆர்வம் மாணாக்கர்களிடையே இருந்தது.

பள்ளி படிப்போடு பொது மற்றும் இலக்கிய புத்தகங்களைப் படிக்கும் போது மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக, அறிஞர்களாக, மதிப்புமிக்க பொறுப்பாளர்களாக உயர முடிந்தது. அதோடு மாணவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது. இன்றைய சூழலை கருத்தில்கொண்டு மாணவர்களின் நலன் கருதி நூலக பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதை அனைத்து பதிப்பாளர்கள் சார்பாக தமிழக முதல்வர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பபாசி நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கி மாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை தேர்வு செய்துவதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்க அரசு உதவ வேண்டும் எனவும், அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தரவேண்டும் எனவும் இந்த நேரத்தில் தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில்…ஆண்டுதோறும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் காட்சி நடைபெறுவது வழக்கம். அதுபோன்று 2022ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னைப் புத்தகக்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்கான பணியை பபாசி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பபாசி தலைவர் எஸ்.வயிரவன்,

செயலாளர் எஸ்.கே.முருகன்.

Library letter to all ceo's (1)
2021 Muthamil Dr.Kalaignar Porkili BAPASI Award Announced. 2021-ம் ஆண்டுக்கான 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி' விருது அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிப்பு



2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பபாசி இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.

அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:

1. அபி – கவிதை

2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்

3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை

4. வெளி ரங்கராஜன் – நாடகம்

5. மருதநாயகம் – ஆங்கிலம்

6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.

இவ்வாறு பபாசி தெரிவித்துள்ளது.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர்- பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார்



சென்னை: கல்விச் சிந்தனைகள் குறித்த வளமையான புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஆணையர் கே.நந்தகுமார் கூறினார்.

செப். 5 ஆசிரியர் தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் ஏராளமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆயிஷா இரா.நடராசன் எழுதிய ‘கற்றல் என்பது யாதெனில்: கல்வி 4.0’ நூல் வெளியீட்டு விழா செவ்வாயன்று (செப்.1) சென்னையில் நடைபெற்றது. பேரா. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், நூலை மேனாள்துணைவேந்தர் பேரா. க.அ.மணிக் குமார் வெளியிட முதல் பிரதியை கே.நந்தகுமார் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ‘கல்விச் சிந்தனைகள் நூல் திரட்டு’ விற்பனையை தொடங்கி வைத்து கே.நந்தகுமார், அயல்நாட்டு கல்வியாளர்கள், சிந்தனையாளர்களின் புத்தகங்களை தேடிதேடி படிப்பது என்ற நிலை மாற வேண்டும். தமிழில் முதல் தரமான புத்தகங்கள் வேண்டும். ‘கற்றல் என்பது யாதெனில்; கல்வி 4.0’ போன்று நல்ல நல்ல நூல்களை ஆயிஷா நடராசன் போன்றவர்கள் எழுத வேண்டும். பள்ளிக் கல்வி என்பது அனைவரும் சேர்ந்து இழுக்க வேண்டிய தேர். அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

Ayesha. Era. Natarasan's Kattral Enbathu Yathenil Book Release Event on Teachers Day Celebration. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பேரா.க.அ.மணிக்குமார் குறிப்பிடுகையில், “பல்கலைக் கழக பேராசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல் தரத்தோடு இந்த நூல் உள்ளது. திறமையான ஆசிரியர்களை ஊக்குவித்தால் மிகச்சிறந்த கல்வி முறையை உருவாக்க முடியும்” என்றார்.

“வகுப்பறைகள் மறைந்து, மனிதநுண்ணறிவை கொண்டு ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டி உள்ளது. தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் புறக்கணிக்க முடியாது. தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. மாணவர் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. ஒன்றரை வருடம் கல்விச் சூழலில் இருந்து துண்டிக்கப்பட்டு, பயிற்சிகள் இன்றி கணித அடிப்படைகளை மறந்த நிலையில் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகின்றனர். கற்றல், கற்பித்தல் இயல்பாக இருக்காது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்ந்து கற்பிக்க வேண்டும்” என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி கூறுகையில், “காலையில் எழுந்து பல் தேய்க்க பழகியவர்கள், இப்போது செல் தேய்க்க பழகிவிட்டோம் என்பன போன்ற வாக்கியங்கள் வாசிப்பை நகர்த்தி செல்கிறது. 2010க்குப் பின் பிறந்த குழந்தைகள் பாதி மனிதர்களாகவும், பாதி கருவி களாகவும் உள்ளனர். இந்த அழகையும் ஆபத்தையும் உணர வேண்டும். தமிழக கல்வியில் கற்றல், கற்பித்தலில் உள்ள இடைவெளியை சரி செய்யவேண்டி உள்ளது. அதற்கு இந்நூல் உதவும்” என்றார்.“தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தனியார் பள்ளிகள் கொள்ளையடிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் இயலாமையின் வெளிப்பாடாக, ஆன்லைன் வழி கல்வியை கற்பிக்க ‘அகஸ்தியா’ என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆசிரியர் சமூகத்திற்கு மட்டுமின்றி மாணவர் சமூகத்திற்கும் இந்நூல் பேருதவியாக இருக்கும்” என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் குறிப்பிட்டார்.

May be an image of 4 people, indoor and text that says 'கற்றல் என்பது யாதெனில் sed'

ஏற்புரையாற்றிய நூலாசிரியர் ஆயிஷா இரா.நடராஜன், “கடந்த ஒன்றரை வருடத்தில் ஆன்லைன் வாயிலாக முறைசாரா கல்வி பயின்று மாணவர்கள் தங்களை புதுப்பித்துக் கொண்டுள்ளனர். எனவே, கல்வி 4.0வை ஒவ்வொரு பள்ளிக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கேற்ப ஆசிரியர்களும் தயாராக வேண்டும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது” என்றார்.“இந்தியாவிலேயே கியூஆர் கோடு என்ற முறையை பாடத்திட்டத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். தமிழக பாடத்திட்டம் முதலில் குழந்தையை குழந்தையாக அணுகும். அடுத்து மாணவனாக, தேடலில் ஈடுபடும் நிபுணனாக, எதிர்காலத்தை திட்டமிடுபவராக உயர்த்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. ஒரே பாடத்திட்டத்திற்குள் இவ்வளவையும் வைக்கும் அளவிற்கு அரசு பள்ளி ஆசிரியர்களிடம் திறமை உள்ளது. செயல்திறன் மிக்க ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்ள சூழலில், கல்வியில் மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு தொழில் நுட்பத்தையும் கைக்கொள்வோம்” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில், பாரதி புத்தகாலய நிர்வாகிகள் க.நாகராஜன், ப.கு.ராஜன், சுரேஷ் இசக்கிபாண்டி உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி: தீக்கதிர் நாளிதழ்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: கற்றல் என்பது யாதெனில் – கல்வி 4.0

Delhi Daryaganj Sunday Book Bazar (Kitab Bazar) Article By Writer Muthu Krishnan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

டெல்லி தரியாகஞ்ச் புத்தக சந்தை (Kitab Bazar) – எழுத்தாளர் முத்து கிருஷ்ணன்



20 வருடங்களாக டெல்லி சென்று வருகிறேன், எப்பொழுது டெல்லி சென்றாலும் நான் திரும்புவது ஞாயிறு இரவு ரயிலில் தான். இந்த ஞாயிறுக்காக பல நேரம் நான்கு ஐந்து நாட்கள் டெல்லியை சுற்றியலைந்து காத்திருந்ததும் உண்டு. யமுனைக்கரையில் ஷாஜகான்பாத் பகுதியில் பெரும் மதில் சுவர்கள் சூழ தரியாகஞ்ச் பகுதி அமைந்திருக்கும். ஞாயிறு காலை விடுமுறை நாள், அன்று வழக்கமான கடைகள் ஏதும் இருக்காது ஆனால் டெல்லி முழுவதும் இருந்து நுற்றுக்கணக்கான பழைய புத்தக வியாபாரிகள் இங்கு சாலையின் இருபுறமும் கடை போடுவார்கள்.
காலை 6 மணியில் இருந்தே மெல்ல மெல்ல வியாபாரிகள் வந்து தங்களின் புத்தகங்களை இறக்கி வைத்து கையில் தேநீர் கோப்பையுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தபடி இருப்பார்கள். மெல்ல மெல்ல பெரும் தார்பாய்கள் விரித்து விதவிதமான தினுசுகளில் புத்தகங்களை அடுக்கத் தொடங்குவார்கள். ஒரு கனிம சுரங்கத்தில் தங்கம், வைரம் கிடைப்பது போல் தரியாகஞ்சு கடைகளில் மூழ்கி எழுந்தால் நிச்சயம் உங்கள் விருப்பம் போல் ஒரு புதையல் காத்துக்கிடக்கும். புத்தகம் கிடைத்தவுடன் அடுத்த வேலை பேரம் பேசுவது தான். பொதுவாக காலையில் கொஞ்சம் கறார் விலைகளுடன் இருக்கும் வியாபாரிகள் மதியத்திற்கு மேல் நாம் கேட்கும் விலைக்கு சமயங்களில் கொடுக்கத் தொடங்குவார்கள். சில வியாபாரிகள் புத்தகங்களை எடை போட்டு விற்பனை செய்வார்கள்.
File:Sunday morning roadside second-hand book market at Daryaganj, Delhi  -1.jpg - Wikimedia Commons
உலகில் பதிப்பிக்கப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் நீங்கள் இங்கே காணலாம். புது தில்லியில் உலகின் எல்லா நாடுகளின் தூதரகங்களில் இருக்கும் நூலகங்களில் இருந்து வரும் பழைய புத்தகங்கள் என இங்கு நீங்கள் எதிர்பாராத விஷயங்களும் கொட்டிக் கிடக்கும். நேசனல் ஜியாகிரப்பியின் கடைசி இதழை கூட கொஞ்சம் தேடினால் எடுத்துவிடலாம்.
இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பலரை நான் இங்கு சந்தித்திருக்கிறேன், அப்படித்தான் ஒரு முறை குஷ்வந்த் சிங் அவரை சந்தித்து கை குலுக்கினேன். பல நேரங்களில் ஒருவர் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருப்பார் அவரை சுற்றி ஏ.கே 47 துப்பாக்கியுடன் நால்வர் நின்று கொண்டிருப்பார்கள். ராணுவ அதிகாரிகள், அரசதிகாரிகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஒரு லட்சம் பேர் கூடும் பழைய புத்தக சந்தை இது. ஆய்வு மாணவர்களின் எல்லா தேடுதல் வேட்டைகளும் தரியாகஞ்சில் தான் முடியும். என் ஒவ்வொரு பயணத்திலும் டெல்லியில் இருந்து பெரும் அட்டை பெட்டிகளில் புத்தகங்களுடனும், என் டெல்லி நண்பர்களிடம் கடன் பட்டும் தான் வீடு திரும்பியிருகிறேன்.
270 பழைய புத்தக வியாபாரிகள் என்றால் 300க்கும் மேற்பட்ட விதவிதமான இடைத்தீனி கடைகள் இந்த சாலையை அலங்கரிக்கும். வாரம் ஒரு முறை நடக்கும் இந்த பெரும் திருவிழாவை இனி நடக்கக்கூடாது என்று தடை செய்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். இந்த சந்தை அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது என்பதால் இந்த தடை உத்தரவு என்கிறது உயர் நீதிமன்றம்.
File:Sunday morning roadside second-hand book market at Daryaganj, Delhi  -3.jpg - Wikimedia Commons
இந்தச் செய்தியை வாசிக்கையில் என் கண்கள் குளமாயின, எத்தனை முட்டாள் தனமான உத்தரவு இது. இப்படி ஒரு கலாச்சார திருவிழா நடைபெறுகிறது என்றால் அன்றைய ஒரு நாள் அந்த சாலையை வாகனப் போக்குவரத்திற்கு தடை விதித்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது தானே அரசின் வேலை. எத்தனை சொரணையற்று செயல்படுகிறது போக்குவரத்து காவல்துறை மற்றும் நம் நீதிமன்றங்கள். உலகின் வளர்ந்த நாடுகளில் இப்படி ஒரு ஏற்பாடு எங்கு இருந்திருந்தாலும் இந்த இடத்தை அவர்களின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக அறிவித்திருப்பார்கள், வேண்டிய வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருப்பார்கள்.
50-60 ஆண்டுகளாக தாங்களாகவே ஒரு சுயவேலைவய்ப்பை ஏற்படுத்தி அதன் வழியே 1000 குடும்பங்கள் பிழைத்து வரும் ஒரு ஏற்பாட்டை ஒரு உத்தரவின் வழியே சிதைப்பது எந்த வகையில் ஞாயம். போக்குவரத்தை ஒழுங்கு செய்யலாம் அல்லது ஒரு பெரும் மைதானத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இவர்கள் பயண்படுத்த அரசு ஏற்பாடு செய்யலாம். ஏதோ ஒரு வகையில் இந்த சந்தை ரசவாதம் பெற்று மீண்டும் உயிர் பெற வேண்டும்.