காதலர் தினப்பரிசு சிறுகதை – ஹேமலதா
ராஜு விஜி இருவருடைய அப்பாக்களும் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்கள். வெவ்வேறு சாதி. நல்ல நண்பர்கள். ஒரே தெருவில் வீடு கட்டிக் கொண்டு இவர்கள் குழந்தைகளாக இருந்தபோதே வந்தவர்கள். குடும்ப நண்பர்கள். பிள்ளைகளின் பழக்கம் காதலாக மாறியது. பெற்றோர் களுக்கு சற்று தாமதமாகத்தான் தெறிந்தது.
விஜி மூத்தவள். தங்கை இரண்டு வயது இளையவள். ராஜு ஒரே பிள்ளை. செல்லமாக வேறு வளர்த்து விட்டனர். இவர்கள் காதலின் குறுக்கே ஜாதி.
பெற்றவர்கள் பாடு திண்டாட்டமாகி விட்டது. அக்கம் பக்கத்தார் அரசல் புரசலாக பேசியவர்கள் காது பட பேசத் தொடங்கினர்.
ஏனோ ஜாதி மாறி சம்மந்தம் செய்ய யாரும் விரும்புவதில்லை. நண்பர்களால் முன் போல இயல்பாய் இருக்க முடிய வில்லை.
விஜியின் பெற்றோர் தடை போட ஆரம்பித்தனர். தங்கையின் வாழ்வைச் சொல்லி விஜியைக் கட்டுப் படுத்தினர்.
விஜி நல்ல பெண். தனக்காக தன் தங்கையின் வாழ்வைக் கெடுக்க விரும்பவில்லை. ராஜு விடம் பேசி சந்திப்பை நிறுத்தி விட்டாள்.
ஆனால் காதல் நெஞ்சில் இருந்து வளர்ந்தது. காலம் கனிய காத்திருந்தனர்.
நல்ல வேளையாக ராஜுவிற்கு வெளியூரில் வேலை கிடைத்தது. போய் விட்டான்.
விஜி வேறு யாரையும் மணக்க மாட்டேன் என உறுதியாக கூறி விட்டாள். சின்னவள் அக்காவிற்கு பின்தான் என்றாள். அக்கா விஷயம் வெளியே தெரிந்தால் உனக்கு பிரச்சனை என்றார்கள். அவளை விட்டு எனக்கு கல்யாணம் செய்கையில் என்ன காரணம் சொல்வீர்கள்.
தவிர எனக்கு மணம் ஆனபின் அக்கா காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்களை ஏமாற்றி விட்டோம் என நினைக்க மாட்டார்களா. அப்படி செய்யக் கூடாது எனச் சொல்கிறாள். அவள் சொல்வதும் ஞாயம் தானே
அலுவலகத்தில் திடீர் என ராஜுவின் அப்பாவிற்கு நெஞ்சு வலி வர நேரே ஹாஸ்ப்பிடல் போய் விட்டனர். விஜியின் அப்பா சேகர் தான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டார். ராஜு தகவல் அறிந்து வர மூன்று நாட்கள் ஆயிற்று. அவன் அப்பா வீட்டிற்கு வந்ததும் சேகரும் அவர் மனைவியும் பார்க்கச் சென்றனர்.
ராஜுவின் அம்மா சீக்கிரம் ராஜு விஜி கல்யாணம் முடிக்க வேண்டும். எனக்கு ஆபத்து சமயத்தில் வந்து உதவி செய்த நல்ல நண்பரை விட ஜாதி பெறி தில்லை. தவிர ஜாதிக் காரர்கள் யாரும் உதவ முன் வர வில்லை என்பதே உண்மை என்றார் பிறகென்ன. உண்மைக் காதல் வென்றது.
விஜி கோவிலில் இருப்பாள் என ராஜு அவளைத் தேடிச் சென்றான் அவளுக்கு பிடித்த மலர்களோடு.
அந்த மலர்களை விட சிவந்து மலர்ந்த அவள் முகத்தை தைரியமாகக் கைகளில் ஏந்திக் கொண்டான்.
பெற்றோர்கள் அளித்த காதலர் தினப் பரிசை அனுபவிக்க தேன் நிலவை தாஜ்மகாலை பார்த்துக் கொண்டே கொண்டாட திட்டம் போட்டனர் இந்தக் காதலர்கள்

