ம.செல்லமுத்துவின் கவிதைகள்

ம.செல்லமுத்துவின் கவிதைகள்




வாழ்க்கையே
*******************
முடிவில்லாத் தொடர்
இந்த வாழ்க்கை

பல உயிர்களின் பிறப்பிடமும் இறப்பிடமும் ஒன்றுதான் இவ்வுலகில்

வலிகள் நிறைந்த பாதையில் பலரும் வாழ்க்கை இழந்து மீதியில்

மீள முடியாத துயரத்தில்
துரத்துதே இந்த வாழ்க்கை ஒவ்வொருவருக்கும்

மாறுதல் ஆறுதல் தேடி
காணுதே பல கண்கள்
காலத்தில் கலங்கி

எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை

ஆனால் பலரும் எதிர்கொண்டு இருப்பதே வாழ்க்கை என்றால்

துயரங்களைச் சுமையாக நினைக்காமல் துணையாக நினைத்து வாழ நினைவுகள்

செதுக்கப்பட்ட சிலை போல் பின்னாளில் பிரகாசிப்பாய் இவ்வுலகில்

பின்னாளில் மலரும் இந்த வாழ்க்கையின் அலங்கார ஓவியம்

ஒவ்வொருவரின் உழைப்பின் இதயத்தின் குறிப்பாக

வாழ்க்கையே ..
வறுமை மறுமையில் வழக்கு போட முடியுமா உன்னிடம் ?…

கடன் என்றாரே
**********************
விதவிதமான விந்தைகளில்
நாம் விதைப்பது பின்னாளில் நமக்கே பேராயுதமாய் ..!!

கடன்பட்டாரே கடமையில்
கண்ணீர் கானல் நீருடன், ,

பிறப்பிலும் கடன்
இறப்பிலும் கடன் ..!!
கடல் வற்றினாலும்
கடன் வற்றுவதில்லை..!!

கால் வயிற்றுக் கடன் தீர்க்கத்
தீண்டுது தீமைகள் தினம் தினம்,,
ஏழை என்னும் ஏமாளிகளின் முதுகில் முற்புதர் போல்..!!

பணம் தீண்டும் கையில் பிணம் தீண்டுதே நாட்டில்

நாவிற் கானா களம்
கடன் சுடுவிழி நீர்,,

கடன் பட்ட காலத்தில் களவு போகிறோம்
எதிலும், ,,,

ம.செல்லமுத்து
எம்.ஏ..பி.எட்..
நூத்தப்பூர் அஞ்சல்
பெரம்பலூர் மாவட்டம்