santhai novel book reviewed by s.p.agaththiyalingam நூல் அறிமுகம் : சந்தை - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம் : சந்தை – சு.பொ.அகத்தியலிங்கம்

கடல் ஒன்று கைக்குட்டை ஆனது….. “ நம்ம ஊர் சந்தைகள் நவீன மால்களாகும் நிகழ்வின் சமூக விவரிப்பே” யாழ்.எஸ். ராகவன் எழுதிய “சந்தை” நாவல் என ஒண் லைன் ஸ்டோரியாகச் சொல்லிவிடலாம். அபார்ட்மெண்டுகளில் உள்ள சிசிடிவி காமேரா எந்த பரபரப்பும் இன்றி…
அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை – சு. வெங்கடேசன் எம் பி

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை – சு. வெங்கடேசன் எம் பி




கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? : உயர்நீதிமன்றம் |  Why is the central Government stubborn in the Keeladi excavation matter ? :  HC | Puthiyathalaimurai - Tamil News ...

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம்.

தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு நாள்கள் அங்கு போய்வரத்தொடங்கினோம். ஒரு கட்டத்தில் மாதத்தில் பாதி நாள்கள் அங்கே கிடப்பது போலானது.

மதுரை எனும் வசீகர நிலத்தின் வாசல் திடீரென மண்ணுக்குள் திறந்தது. “மண்மூடிப்போக” என்ற சாபம்தான் இது வரை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மண்மூடிகிடக்கும் வளத்தை தோண்டத்தோண்டப் பார்த்து பூரித்தோம்.

தொல்லியல், வரலாறு, இலக்கியம் என எல்லாவற்றையும் நேரங்காலம் அறியாது அகழாய்வு குழிகளின் ஓரம் நின்று நாட்கணக்கில் பேசினோம்.

முதலில் இந்து தமிழ் திசை நாளிதழிலும் பின்னர் ஆனந்தவிகடனிலும் கீழடி பற்றி எழுதத் தொடங்கினேன்.
கீழடி பற்றிய உண்மைகள் சிறிது சிறிதாக வெளிஉலகிற்குத் தெரியத் தொடங்கியது.

அதன் பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின.புதையுண்ட இடத்தை மீண்டும் புதைக்க நினைக்கும் செயல்பாடு தொடங்கியது. அரசியல் வெளியில் கீழடி இயங்கத் தொடங்கியது. அகழாய்வைக் கைவிட நினைத்தவர்கள் அது முடியாது என்ற நிலையில் அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாமிற்கு அனுப்பினர். பின்னர் ஒருவரை நியமித்து “அங்கு எதுவுமில்லை” என்று அறிக்கை கொடுத்தனர். சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என்று அனைத்து மன்றங்களும் கீழடிக்கான போராட்டக்களங்களாக மாறின.

எண்ணிலடங்காப் பொழுதையும் பணியையும் இதன் பொருட்டு செலவழித்தவர்கள் பலர். அவற்றில் முதன்மையானவர் அமர்நாத் இராமகிருஷ்ணன். தனது அலுவல்தொழில் சார்ந்தே இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டார். ஆனால் அதில் ஓர் அநீதி இழைக்கப்பட்ட போது அதனை அவர் எதிர்கொண்ட முறையும் அதன் பொருட்டு அவர் அடைந்த துயரமும் மிகப்பெரியது. என்றும் போற்றுதலுக்குரியது.

கீழடியில் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நாளில் தனது அகழாய்வு அறிக்கையின் நகல் ஒன்றினை எனது பார்வைக்குத் தந்தார். அதனை வாங்கி சில நிமிடங்கள் மட்டுமே கையில் வைத்திருக்க முடிந்தது. இந்த உண்மைகளை உலகிற்கு சொல்லத்தான் இவ்வளவு பாடு. உண்மைகள் எழுத்தாக உருப்பெறும் போதே ஆற்றலின் வடிவங்கொள்கிறது.

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை இவ்வாய்வறிக்கையை வெளியிடும் நாளுக்காக காத்திருக்கிறேன். விரைந்து வெளியிட வேண்டுமெனக் கோருகிறேன்.

சங்ககால மதுரை என்பது இன்றைய மதுரைக்கு கிழக்கே திருப்புவனம் பக்கம் இருக்கலாம் என்று 1960 களில் பேரா. மா. இராசமாணிக்கனார் எழுதினார்.

அவர் சுட்டிய திசையில் 2015 ஆண்டு அகழாய்வு நிகழ்த்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் சங்ககால நகரமொன்றினைக் கண்டறிந்து கொடுத்துள்ளார்.

இதுதான் பழைய மதுரையா அல்லது மதுரையையொட்டிய இன்னொரு நகரமா அல்லது மதுரையின் புறப்பகுதியா என்ற எண்ணற்ற வினாகள் எழுந்து நிற்கின்றன. ஆய்வின் முதற்பணி விடையை அறிவதன்று; வினாவை உருக்கொள்ளச்செய்வதே. கீழடி அகழாய்வு பல வினாக்களை உருக்கொள்ளச்செய்திருக்கிறது.

அதே நேரம் பல விடைகளை தெளிவுபடுத்தியும் இருக்கிறது. புரானீக கட்டுக்கதைகளையே வரலாறென நிறுவும் ஒன்றிய அரசின் முயற்சி தமிழ் மண்ணில் எடுபடாது. “இலக்கியமும் அகழாய்வும் இவ்வளவு இறுக்கமாக கைகுலுக்கும் இடம் வேறெதுவுமில்லை” என்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுவது பேருண்மை.

வளமான சங்க இலக்கியச் சான்றும் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் எச்சங்களும் ஒருங்கே கைகூடி இருக்கும் கீழடி எமது செம்மார்ந்த மரபையும் தனித்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

மதுரையும் வைகையும் எமது மொழியின் முதுசொல்கள். அவை இன்னும் பல அறிஞர்களின் ஆய்வினூடே பற்பல வியப்புகளை நோக்கி நம்மை அழைத்துசெல்வன. அருங்காட்சிகள் வரலாறு நெடுகிலும் நமக்காக காத்திருக்கின்றன.

சு. வெங்கடேசன் எம் பி

நூல் அறிமுகம்: லஷ்மி சரவணகுமாரின் “ரெண்டாம் ஆட்டம்” – இரா யேசுதாஸ்

நூல் அறிமுகம்: லஷ்மி சரவணகுமாரின் “ரெண்டாம் ஆட்டம்” – இரா யேசுதாஸ்




விகடன் பிரசுர 2022 விற்பனையில் 4ம் இடம்…

மதுரையின் மறுபக்கத்தை விவரிக்கும் திரில்லர் நாவல் போன்ற ரவுடியிசத்தை மட்டுமே அலசும் நூல்.

இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல சம்பவங்கள்.. கதாபாத்திரங்கள் மதுரையில் நிகழ்ந்த… நிகழ்ந்து கொண்டிருக்கின்ற உண்மை அரசியல் ரவுடியிச நிகழ்வுகளை விவரிப்பதாக உள்ளது.

கள்ளச்சாராய பாக்கெட்டு விற்பனை, பார் ,கஞ்சா பாக்கெட் விற்பனை, கூலிக்காக கொலைகள், பெண் வியாபாரம், அரசியல் கட்சிகளுக்கு ஆள் சப்ளை, அரசியல் வன்முறைகள், பிக்பாக்கெட், ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே தொடர்ந்துகொண்டே இருக்கும் பழி தீர்க்கும் கொலை படலங்கள், இதில் காவல்துறையின் கைங்கரியம்.. வழக்கம் போல பெண்ணாடல்கள் ,பெண்ணாசை போர்வையில் நிகழ்த்தப்படும் அழித்தொழிப்புகள்… வன்மம் …ஆசை .. அதிகாரப்போட்டி.. கந்துவட்டிக்காக நடத்தப்படும் மேலாதிக்க நிலை.. மாமூல் வாங்க… எல்லை குறித்து செயல்படுவது.. ரவுடிகளுக்கு இடையே கடைபிடிக்கப்படும் தொழில் நேர்மை- சத்திய கட்டுப்பாடுகள்?!… புலி வாலை பிடித்த கதையாய் வாரிசுகளை காப்பாற்ற முடியாமல் திணறும் ரவுடிகளின் பெற்றோர்… வறட்டு கௌரவத்திற்காக உயிரை துச்சமாக மதித்து வெட்டப்பட்டும்.. குத்தப்பட்டும் எழும் மரண ஓலங்கள்( நல்லவேளை துப்பாக்கி கலாச்சாரம் நூலில் வரவில்லை) வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மரண பயத்துடன் வலம் வரும் தாதாக்கள்.. வெற்று உதார் விட்டு சாவதும்… மௌனமாகவே இருந்து சாணக்கியத்தனத்துடன் வஞ்சம் தீர்ப்பதும் ….என ஏராளமான கதாபாத்திரங்கள் … இறுதியில் செல்வமும் ஜெகதியும் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.

திரைப்படங்களை பார்த்துவிட்டு இவர்கள் செய்கிறார்களா …. இவர்களைப் பார்த்துவிட்டு திரைப்படங்கள் எடுக்கப்படுகிறதா .. என்ற அளவிற்கு விறுவிறுப்பான அதே மாதிரியான காட்சிகள் நூல் முழுக்க……

பலி…வலி… வேதனை… ரத்த வாடைக்கவிச்சி… தலையை வெட்டி சீவி எடுத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக செல்வது.. சிறை வாழ்க்கை… கறி விருந்து.. குடும்ப விழா.. கடவுள் வழிபாடு என்று தொடர்கின்ற கொலை.. கொலை .. கொலை என நீள்கிறது இரண்டாம் ஆட்டம் ( சினிமாவின் இரண்டாவது ஷோ முடிந்த பிறகு நடத்தப்படும் கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன)

இந்நூலை படித்துவிட்டு யாரைப் பார்த்தாலும் அவருடைய பின்னணி பற்றி யோசிக்கத் தோன்றுகிறது.. அரசியல் ஆதரவின்றி இவை சாத்தியமில்லை.. அரசியல்வாதிகள்- ரவுடிகளுக்கு இடையேயான உறவும் பாசமும் நூல் முழுதும் விரவி கிடைக்கின்றது.

ரவுடிகள் வாழும் தனி உலகத்தை விலாவாரியாக விளக்குகிறது ரெண்டாம் ஆட்டம்….

நூல் : ரெண்டாம் ஆட்டம்
ஆசிரியர் : லஷ்மி சரவணகுமார்
விலை : ரூ.₹650
வெளியீடு : விகடன் பிரசுரம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

நூல் அறிமுகம்: அ.முத்துகிருஷ்ணனின் “தூங்காநகர நினைவுகள்..” – இரா.இயேசுதாஸ்

நூல் அறிமுகம்: அ.முத்துகிருஷ்ணனின் “தூங்காநகர நினைவுகள்..” – இரா.இயேசுதாஸ்




“தூங்கா நகர நினைவுகள்..”
மதுரையின் முழுமையான வரலாறு.(நூல்)

ஆசிரியர்: அ முத்துகிருஷ்ணன் (பசுமைநடை எனும் தொல்லியல் விழிப்புணர்வு இயக்க நிறுவனர்.. தொடர் பயணங்கள்- ஆய்வுகள் மூலம் எழுதும் எழுத்தாளர்.)

மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர். பழமையான கோவில்கள், கட்டடங்கள், கோட்டைகள் என பழம் பெருமைகள் நிறைந்த ஊர். பண்பாடு கலாச்சாரத்தை பேணும் ஊர். பாண்டியர் முதல் நாயக்கர் வரை பலரது ஆளுகையில் இருந்த மாநகர். ஒவ்வொரு வீதிக்கும் ஒரு வரலாறு உண்டு. தொழிலாளர்களுக்கு என தனியே ரயிலை இயக்கிய மதுரா கோட்ஸ் ஆலை, முதல் ரயிலைக் கண்ட மதுரை மக்களின் மனநிலை, மருதநாயகம் கான்சாகிப் ஆன பிறகு மதுரை கவர்னராக மக்களுக்கு செய்த அரும்பணிகள், வெளிநாட்டினர் மதுரையை நேசித்து வருவது… என பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. திருவிழா நகரம் … பரபரப்பான நகரம்… 3000 ஆண்டுகள் தொடர்ந்து உலகத்தவர் இங்கே வந்து சென்று கொண்டே இருக்கின்றனர். மதுரையில் கிடைக்கும் கற்கருவிகள், பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், ரத்தின பாஸ்கரின் புகைப்படங்கள்… இவையெல்லாம் வரலாற்று ஆவணங்களாகி உள்ளன. வரலாற்று ஆவணங்கள் மதுரை எங்கும் சிதறி கிடக்கின்றன… பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்கருவிகள், ஆகியவற்றை வரலாற்று உணர்வே இல்லாமல்… செம்மொழிக்கு சான்றாக உள்ளவையும் பாதுகாப்பற்று கிடப்பதை பல இடங்களில் ஆசிரியர் முத்துகிருஷ்ணன் ஆதாரங்களுடன், ஆதங்கத்துடன் குறிப்பிடுகிறார். ஆம் …நாடு முழுவதுமே இதுதான் நிலை. வீட்டு மனை போட்டு இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் இவற்றை எல்லாம் சிதைத்து பூமியிலே புதைத்து விடுவதை நாம் பார்க்கிறோம். பழம் ஓவியங்கள் மீது ஹார்ட் ஆரோ போடும் வாலிபர்களையும் நாம் பார்க்கிறோம்!

மீன் கொடியின் வரலாறு.. திரைகடல் ஓடிய தமிழர் வணிகம் …வெளிநாடுகளில் இருந்து வந்து குவிந்த பொன்.. தாது வருட பஞ்சத்தின் வரலாறு …தபால் தொடர்பின் ஆதி அந்த வரலாறு… பல்வேறு மதங்களின் வளர்ச்சி.. விடுதலை வேள்வியில் மதுரை.. இறுதியாக கீழடி என எல்லாவற்றிலும் முக்கியமான செய்திகளின் தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது.. இதை ஒரு விரிவான வரலாற்று பதிவாக கொள்ள முடியாது; குறைவான இடத்தில் நிறைவான செய்திகள் எனலாம்.

அரிய ஓவியங்கள், புகைப்படங்கள் அற்புதம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஆலய பிரவேசம் நடத்தியதை பதிவிடும் அதே நேரத்தில் அதற்கு எதிராக நடத்தப்பட்ட தீவிரமான இயக்கங்களையும் இந்நூல் பதிவு செய்கிறது. மதுரைக்கு வந்த காந்தி அரையாடைக்கு மாறிய நிகழ்வை பதிகிறது. அதிக அளவு தொழிலாளர்களுடன் இயங்கிய மதுரா கோட்ஸ் மில், திருப்பரங்குன்றம் கோயிலுக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் முறையே கோயில் மணி, வெளிச்சம் தர ஜெனரேட்டர் வசதி செய்து தந்த கிறிஸ்தவர்களின் சேவையை குறிப்பிடுகிறது. அதேபோல இஸ்லாமியர்களின் சந்தனக்கூடு திருவிழா, அவர்களின் மத நல்லிணக்க சேவைகளும் இந்நூலில் குறிப்பிடப்படுகிறது.

வணிக மையமாக ..தமிழ் வளர்க்கும் மையமாக.. பழம் பெறும் நகர நாகரிகத்தின் மையமாக மதுரை விளங்கியதை நூல் நெடுக காணலாம். அழகர் மலை, திருப்பரங்குன்றம், தமிழி கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், மதச் சடங்குகள் ஏதுமின்றி இருந்த ஆதி வரலாற்றில் எப்போது கோயில்கள் தோன்றின? வரலாற்றுச் சான்றுகளாக விளங்கும் சங்க இலக்கிய பாடல்கள், மதுரையில் கண்ணகி ,கடல்வழி வணிகம், காற்றின் திசையின் பருவம் அறிந்து கப்பலோட்டிய வணிகர்கள், ரோம- எகிப்திய -சீன- மலேசிய- சாவக… என பல நாடுகளுடன் வணிகத்தொடர்பு, வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள், நாணயங்கள் ,திருமலை நாயக்கர் மஹால் ,கிழக்கு இந்திய கம்பெனி வருகைக்குப் பின் நிகழ்ந்தவை ,தாது பஞ்சத்தின் போது கஞ்சி ஊற்றி பஞ்சம் போக்கிய தாசி குலப் பெண்மணி குஞ்சரத்தம்மாள், நீர்ப்பாசன வசதிக்காக பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக்கின் வரலாறு இடம் பெற்றுள்ளது.

இடிக்கப்பட்ட மதில் கோட்டைகள், வரலாற்று புகழ்மிக்க தபால் ஆபீஸ்.. அதில் ரன்னர்கள் பற்றிய குறிப்பு ..மதுரை பற்றி பழம் ஓவியங்கள்- புகைப்படங்கள், கல்விச்சாலைகள் ,அமெரிக்கன் கல்லூரி ,தாகூர் -அம்பேத்கர் வருகை, வீரமாமுனிவர், சர்ச்சுகள் ,ஆங்கிலோ- இந்தியர், ஹாஜா மூசா எனும் துணி வியாபாரிகள் பற்றியும் நூலில் குறிப்புகள் உள்ளன.

இந்த ஊரின் புகழ்பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள், பாடகர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் ,சினிமா தியேட்டர்கள், மார்வாடிகள் -சௌராஷ்டிரர்கள் பஞ்சாபிகள் போல பலபேருடைய பங்களிப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்பாடு இங்கும் நிலவுவதை நூல் நிறுவுகிறது.

பல பெரும் அரசியல் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி சில வரிகளிலேயே குறிப்பிட்டு விட்டு கடந்து செல்கிறது இந்த நூல்.

கீழடி பற்றிய அத்தியாயத்துடன் இந்நூல் நிறைவு பெறுகிறது.

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல முக்கியமான தகவல்களின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. முழுமையான வரலாறோ, விரிவான வரலாறோ அல்ல…

நூல் : அ.முத்துகிருஷ்ணனின்
ஆசிரியர் : தூங்காநகர நினைவுகள்
விலை : ரூ.₹500
பக்கங்கள் : 271
வெளியீடு : விகடன் பிரசுரம்
அத்தியாயங்கள் : 29
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

– இரா.இயேசுதாஸ்-மன்னார்குடி

விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா

விடுதலைப் போராட்ட தியாகி.. நம்ம மதுரைக்கார சொர்ணத்தம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா




” சரித்திரம் என்பது வெற்றி பெற்றவர்களாலேயே எழுதப்படுகிறது”. 

இந்தியா ஆங்கிலேயர் வசம்…

  வாஸ்கோடகாமா  1498 ம் ஆண்டில் கடல் வழியே இந்தியாவுக்கு வந்தார் . இதனால் இந்திய ஐரோப்பிய வாணிகம் வளர்ச்சியடைந்தது டச்சு மற்றும் ஆங்கிலேய வாணிக முகாம்களை  சூரத்தின் வடக்கு கரையோரத்தில் நிறுவினர்.  1619 ம்ஆண்டில் பிரெஞ்சுகாரர்களும்  பின்னர்  வந்தனர். அவர்களிடையே  நடந்த போர்களும், குழப்பங்களும் ஐரோப்பியர் தேடிக்கொண்டிருந்த நுழைவுக்கு  வாயிலாக அமைந்தன. இதன் மூலம் அவர்கள் அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்த ஆரம்பித்தனர். எல்லா ஐரோப்பியா நாடுகளும் தங்களிடம்  இருந்த பகுதிகளை ஆங்கிலேயரிடம் நாளடைவில்,  இந்த நூற்றாண்டில் இழந்தனர். 

  விடுதலைப்போரில் பெண்கள் 

  தமிழகத்தில் 17ம்நூற்றாண்டில் தோன்றிய ஆங்கிலேயக் கம்பெனியின் ஆதிக்கம்  படிப்படியாக அதிகரித்தது.  19 ம் நூற்றாண்டின் துவக்கத்தில்    சில பகுதிகளைத் தவிர ஒட்டு மொத்த தமிழகமும் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1947ம் ஆண்டில் இந்தியா  விடுதலை பெறும் வரை, தமிழகம் ஆங்கிலேயரின் ஆட்சியின்வசமே இருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்கள் வெளியேற, ஆண்கள் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பெண்களும் இணைந்தே  போராடினர். போராடி சிறைக்கும் சென்றனர்.தமிழகப் பெண்களும் போராடி சிறைக் கொட்டடியில் வாழ்ந்தனர்.  ஆனால் அவர்களை பற்றிய பதிவு இந்திய வரலாற்றில் மிகக் குறைவாகவே உள்ளது .

இந்தியன் திரைப்படம் -மதுரைக்கார சொர்ணத்தம்மாள் 

  இயக்குநர் சங்கரின் “இந்தியன்” திரைப்படத்தில் ஒரு காட்சி. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சுகன்யா (நடிகை) உள்ளிட்ட சில பெண்களை ஆங்கிலேய போலீசார் கைது செய்து, அவர்களின் ஆடைகளைக் குறைத்து ஊருக்கு வெளியே இருட்டான பகுதியில் விடுவார்கள்.  திரையில் படம் பார்ப்பவர்களை பதறவைத்தக் காட்சி . ஆனால் இந்த காட்சியின் ஒரிஜினல் ஹீரோயின் மதுரைகார  சொர்ணத்தம்மாள் என்பது  மதுரைவாசிகளுக்குக்கூட தெரியாது. சொர்ணத்தம்மாளை  அவர்கள் அறிந்திருக்க வில்லைஎன்பதே உண்மை.

காந்தியடிகளின் வெள்ளையனே வெளியேறு இயக்கம். 

  மதுரை மாவட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்டத்தின்போது  துணிச்சலின்  சிகரமாக திகழ்ந்தனர்.  சொர்ணத்தம்மாள் அந்நிய துணிகளை மிதித்து, கடைகளின் முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். 1942-ம் ஆண்டு  காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவங்கினார். இதன் மூலம், அவரது வேண்டுகோளான, “செய் அல்லது செத்து மடி” என்பதை உணர்வாக கொண்டு, மதுரை புறநகர் பகுதியில் தெருத் தெருவாக இறங்கி மக்களிடையே சுதந்திரத் தீயை மூட்டினார் மதுரைக்கார சொர்ணத்தம்மாள்.. ஒவ்வொரு நாளும் கைது செய்யப்படுதும், பின்னர்  ஜெயிலில் வைக்கப்படுவதும்,பின்  விடுவிக்கப்படுவதும் வாடிக்கையாக, தொடர் நடவடிக்கையாக  இருந்தது.

    ஆண்களுக்கு நிகராகப் போராடிய சொர்ணத்தம்மாள் 

  நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஆண்களுக்கு நிகராக அதிகமாக போராடியவர் திருமிகு சொர்ணத்தம்மாள். இவர் போராட்டத்தின்போது, அடி உதையோடு பெண் என்பதால் அதிகமான அவமானங்களையும் சந்தித்தார். போலீசார் லத்தியால் அடித்ததால் அவரின் செவிமடல் கிழிந்தது; காது கேட்கும் திறனை இழந்தது.  நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழகத்தின் விடுதலைப் போராளிகளில் மதுரைக்கார சொர்ணத்தம்மாவும் ஒருவர்.  இவர் மதுரையில் கைத்தறி நெசவுத்தொழில் செய்தவர் .

    யார் இந்த சொர்ணத்தம்மாள் 

 மதுரை கடச்சனேந்தலில் வாழ்ந்தவர் சொர்ணத்தம்மாள் . விடுதலை போரில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த அடி, உதை, சிறைவாசம், சித்ரவதை ஆகியவற்றை சொர்ணத்தம்மாளும் அனுபவித்தவர்.  சுதந்திர போராட்ட தியாகி மதுரை எஸ். ஆர். என்.சேஷ பாகவதரின் மனைவிதான்,சொர்ணத்தம்மாள். சேஷபாகவதர் உறுதிமிக்க தேசியவாதி.  இவரது கோஷமும், வீர முழக்கமும் கம்பீரம் நிறைந்ததாகும்.  சேஷபாகவதர் 1930ம் ஆண்டு நடந்த கள்ளுக்கடை மறியலிலும், 1940ம் ஆண்டு நிகழ்ந்த அந்நிய துணி பகிஷ்கரிப்பிலும், 1941ம் ஆண்டு நடைபெற்ற தனி நபர் சத்தியாக்கிரகத்திலும் பங்கேற்று சிறையில் வாடி வதங்கி, வேதனை நிறைந்த  வாழ்க்கையை  அனுபவித்தவர்.  1942 ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்று சிறை சென்றவர். அவர் கைத்தறி நெசவுக் கம்பெனியில் வேலைபார்த்தார்.   சொர்ணத்தம்மாள், தன் கணவர் பணி புரியும் கம்பெனியில் தானும் வேலை பார்த்ததோடு,கணவரின்  சுதந்திர போராட்ட உணர்வு சொர்ணத்தம்மாளையும் தீயாய் பற்றியது. சுதந்திர உணர்வு  தொற்றிக்கொண்டது. சொர்ணத்தம்மாளும் சுதந்திரப் போராட்ட ஜோதியில் கலந்தார். அப்பொழுது அவருக்கு வயது 26 மட்டுமே.  

வந்தே மாதரம் குரலும் , கைதான சொர்ணத்தம்மாளும்

நமது தேசம் சுதந்திரம் அடைய மகாத்மா காந்தி எடுத்த கடைசி ஆயுதம தான்  “வெள்ளையனே வெளியேறு” இயக்கம். இது தொடங்கிய உடனேயே  இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் பற்றிக்கொண்டு பரவியது . 1942-ம் ஆண்டில்,  தென் மாவட்டங்கள் முழுக்க சுதந்திரப் போராட்ட புயல் வீசியது.  1930-களில் இருந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட கே.பி. ஜானகியம்மாள், கேப்டன் லெட்சுமி, ருக்மணி லெட்சுமிபதி, அம்மு சுவாமிநாதன், அம்புஜம்மாள், மீனா கிருஷ்ணசாமி, என்.எஸ். ருக்மணியம்மாள், நாகம்மையார் மற்றும் பத்மாசினி அம்மையார் ஆகியோர் மிகப்பெரிய சமூக, கல்வி, ஜாதி மற்றும்  பொருளாதார பின்புலம் கொண்டவர்களாய் இருந்தனர். ஆனால் மதுரை சொர்ணத்தம்மாள் தினசரி கூலி வேலை செய்யும் சாதாரண குடும்பம். அப்போதெல்லாம் கதர் சட்டை, வேட்டி சேலை அணிந்தாலே போலீசார் லத்தியைக் கொண்டு சுழற்றி அடித்து துவைப்பார்கள்  வந்தேமாதரம் என்று முணுமுணுத்தால்  லத்தியால் அடித்து துவைத்து காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்று விடுவார்கள். 1930ம் ஆண்டு முதல்முறையாக கணவருடன் மறியல் போராட்டத்திற்குச் சென்றார் சொர்ணத்தம்மாள். வந்தேமாதரம் எனக் கோஷமிட்டார். இவர் குரல் அங்கு வந்திருந்த கூட்டம் முழுமைக்கும் உச்சஸ்தாயியில் கேட்டது. கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை, போலீசார் கோபம் கொண்டு  கைது செய்து ஒரு வாரம் சிறையில் அடைத்தனர்.  

சொர்ணத்தம்மாளின் தொடர் சிறை வாழ்க்கை 

 சிறைவாழ்க்கை முடிந்து, பின்னர்   விடுதலையாகி வெளியில் வந்த சொர்ணத்தம்மாள் சேஷ பாகவதர்  ஜோடி, மீண்டும் 1940ம் ஆண்டில்,  அந்நிய துணை பகிஷ்கரிப்பு மற்றும் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அவர்களை காவல்துறையினர்  மீண்டும் கைது செய்து  ஒரு மாதம் சிறையில் அடைத்தனர்.  மூன்றாவது முறையாக  சொர்ணத்தம்மாள் மட்டும் கணவர் துணையின்றி மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு மதுரையில் இருந்தார். பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்கு ஆறு மாதம் மேலும் அதிக சிறைத் தண்டனைக்காக  மாற்றப்பட்டார்.   “இந்த தேசம் சுதந்திரம் அடைய வேண்டும். அதற்குரிய தருணம் இதுவே. நாம் தொடர்மறியலில் ஈடுபட வேண்டும். காந்தியடிகளின் உத்தரவே வேதவாக்கு” என்ற வெளிப்படையான, வீரமிக்க கொள்கை மட்டுமே சொர்ணத்தம்மாளின் எண்ணங்களிலும், செயல்களிலும் எப்போதும்  நிறைந்திருந்தது. ஆறுமாத சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், மீண்டும் தயாரானார் மறியலுக்கு. 

“தியாகி சொர்ணத்தம்மாளுக்கு தான் அணியும் கதர் சேலை என்பது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம். அதை விடுதலை இந்தியாவின் கொடியாக மதித்தார். அதை அவர் பெருமையாகவும் சொல்லிக் கொள்வார். அதை அவமதிப்பதன் மூலம் சொர்ணத்தம்மாளை அடக்கிவிடலாம் என போலீசார் கருதினர்..அதன் பின்னரே அவர்மீது போலீஸ் தாக்குதல் 

    நடந்த இந்த தகவல்களை அவரே தனது வாக்குமூலமாக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் (1997ல்), ஒரு பத்திரிகை  பேட்டியில் தனது சுதந்திரப்போராட்ட வாழ்க்கை குறித்து சொர்ணத்தம்மாள் கூறினார்.. 

அவர் என்னைத் திருமணம் செய்வதற்கு முன்னரே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போய் வந்தார். அப்படி நான்கு முறை அவர் ஜெயிலுக்குப் போனார். நீங்கள் மட்டும் போகிறீர்கள். நான் ஜெயிலுக்குப் போகவேண்டாமா எனக் கேட்டேன். சிரித்துக் கொண்டே என்னையும் அழைத்துக் கொண்டு போராட்டத்துக்குப் போனார். அந்த காலத்தில் “வந்தே மாதரம்” என்று சொன்னால் போலீஸ்காரர்கள் அடிப்பார்கள்.

 நாங்கள் அப்போது மதுரை சௌராஷ்டிரா ஹைஸ்கூல் பின்புறம் உள்ள வாலண்டியர் சந்தில் குடியிருந்தோம். மறியலுக்குப் போனபோது அவரையும் என்னையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு விட்டுவிட்டார்கள். மீண்டும் மறியல் செய்தோம். மீண்டும் கைது செய்து மதுரை ஜெயிலில் ஒரு மாதம் அடைத்து விட்டார்கள். அவரும் நானும் மாறி மாறி சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குப் போனோம்.

 மூன்றாவது முறையாக மறியல் செய்தபோது என்னை கைது செய்து வேலூர் சிறையில் ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தனர். நான்காவது முறையாக மதுரை விளக்குத்தூண் பகுதியில் மறியல் செய்தபோது தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி என்னை கைது செய்து ஒன்றாம் நம்பர் போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு போய் வைத்தார். சிறிது நேரத்தில் லட்சுமி பாய் அம்மாவையும் கைது செய்து கொண்டு வந்தனர்.

 தீச்சட்டி கோவிந்தன் என் கதர் சேலையைச் சுட்டிக்காட்டி “யார் வாங்கிக் கொடுத்தது?” உன்னை யார் மறியல் செய்யச் சொன்னது ” எனக் கேட்டார். “யாரும் சொல்லல்ல. வெள்ளைக்காரன் நம்ம நாட்டைவிட்டு வெளியேறவேண்டும். நமக்கு விடுதலை வேண்டும்” என்று சொன்னேன். தடியால் அடித்தார். இரவு 11 மணி வரை போலீஸ்காரர்கள் என்னை அடித்தனர்.

உண்மையைச் சொல் உனக்கு சோறு போடுகிறோம்..” என்றனர். “உங்கள் சாப்பாடு வேண்டாம் நாட்டுக்கு சுதந்திரம் வேண்டும்..” என்றேன். நீ கட்டியிருக்கிற சேலையைக் கொடு எனச் சொல்லி அடித்தனர். தடியால் என் காதில் அடித்தபோது காது மடல் கிழிந்து ரத்தம் வந்தது. அன்றிலிருந்து எனக்கு காது சரியாகக் கேட்காது..

காவல்துறை அடியால் காது கிழிந்த சொர்ணத்தம்மாள் 

   ஒவ்வொரு சிறை விடுதலைக்குப் பின்னும், மீண்டும் மீண்டும் மறியலில் ஈடுபட்டுக் கைதாகும் சொர்ணத்தம்மாளைச் சமாளிக்க போலீஸ் நிர்வாகம் ரொம்பவே திணறியது. பெண் கைதி என்பதால் கைது, விசாரணை, சிறை என ஒவ்வொரு கட்டத்திலும் தனித்துவமான வசதியை ஏற்படுத்தி தரவேண்டிய நிலையில் இருந்ததால், போலீஸ் சொர்ணத்தம்மாளை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது காவல்துறை நிர்வாகம். அப்படி ஒரு முறை சொர்ணத்தம்மாள் கைதான பின்னர்,  இவரையும் இவருடன் போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமிபாய் அம்மையாரையும் மதுரை – விளக்குத்தூண் போலீஸ் ஸ்டேசனுக்கு, தீச்சட்டி கோவிந்தன் என்ற போலீஸ் அதிகாரி மூலம் அழைத்து வந்தனர். சற்று வேகமான விடுதலைக் கோஷமிட்ட சொர்ணத்தம்மாளை நோக்கி, போலீசார், “உன்னை மறியலில் ஈடுபடுத்தும் தலைவர் யார்? “என்று  கேட்டு அடித்துத் துவைத்தனர். காலையிலிருந்து இரவு 10 மணி வரை தடியால், செருப்பால், பெல்ட்டால், கையால், காலால் என எவ்வித பாகுபாடும் இன்றி உடலின் எல்லா இடங்களிலும் போலீசார் அடித்துக் கொண்டேயிருந்தனர். எதற்கும் துளியும் அசரவில்லை சொர்ணத்தம்மாள். ஒரு கட்டத்தில் பெரிய தடியால் காதிலும் முகத்திலும் அடிக்க ஆரம்பித்தனர் போலீசார். வலி தாங்க மடியாமல் கதறினார் சொர்ணத்தம்மாள். அப்போதும் உண்மையை போலீசிடம் சொல்லவில்லை. ஆனால் போலீசாரின் அடியால்,  அவரின்  காது ஜவ்வு கிழிந்தது. அன்றிலிருந்து சொர்ணத்தம்மாளுக்கு ஒரு காது செவிடாகிப் போனது. 

சேலை உருவப்பட்ட சொர்ணத்தம்மாளும், லட்சுமிபாயும், 

மற்றொரு முறை மறியல நடத்தியதால், சொர்ணத்தம்மாளையும் லட்சுமியம்மாளையும் காவல் நிலையத்திற்கு அடித்து இழுத்துவந்தனர்.    மறியலைக் கைவிட மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொன்னதால்,,சொர்ணத்தம்மாள், லட்சுமிபாய் இருவரையும்  உடுத்தியிருந்த கைத்தறி சேலைகளை உருவி கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக்கினர் ஒரு கட்டத்தில் சேலையை பிடித்து இழுத்தனர். சொர்ணத்தம்மாள் அதைத் தடுத்ததோடு அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தார். அவரை பெல்ட்டாலும், லத்தியாலும் செருப்பாலும் அடித்தார்கள். அவர் அடிதாங்காமல் விழுந்ததும், அவர்  அணிந்திருந்த கதர் சேலையை அவிழ்த்துவிட்டு நீளம் குறைந்த, ஆளுக்கொரு தாவணி போன்ற குட்டை  சேலையை இருவரிடமும் கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னார்கள்.  அதனால் உடலை முழுமையாக மறைக்கமுடியாது. குட்டை சேலை, அதை கட்டிக்கச் சொல்லி, பின்  சொர்ணத்தம்மாளையும்,லட்சுமி பாயையும் ஒரு காவல்துறை லாரியின் ஏற்றினர். லாரியில் டிரைவர் உட்பட பதிமூன்று காவல்காரர்கள் அதில் இருந்தனர். ஜெயிலில் அடைக்கப்போகிறோம் எனச் சொல்லியே சொர்ணத்தம்மாள் மற்றும் லட்சுமிபாய் இருவரையும் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஜெயிலுக்குப் போகவில்லை. போலீஸ் லாரி   பல சந்துகள்பொந்துகள் மற்றும் இருட்டான பகுதி வழியாகச் சென்றது. பயம் மற்றும் துக்கம் தாங்காமல் லட்சுமிபாய் அழுதார். சொர்ணத்தம்மாளும் பயத்தில் உறைந்து போயிருந்தார்..லாரி போய் கொண்டே இருந்தது.

நடுக்காட்டில், நடுஇரவில் இறக்கிவிடப்பட்ட விடுதலைப் போராளிகள் 

லாரியின் டிரைவர், காவல்காரர் ஒருவரிடம் “எங்க நிறுத்துவது” என்று கேட்கிறார். அதற்கு அவர் இன்னும் 15  மைல் போகட்டும் என்று சொன்னபோது நேரம் இரவு மணி ஒன்று. ஒரு காட்டுக்குள் லாரி சென்றது. அங்கேயே லாரியை போலீஸ்கார்கள் நிறுத்தினர்; நிறுத்தி சொர்ணத்தம்மாளையும், லட்சுமியம்மாளையும், இரு பெண்களையும், பெண்கள் என்றும் கூட பார்க்காமல், நட்ட நடுக்காட்டில் நள்ளிரவில்  இறக்கி விடுகிறார்கள் காவல்துறையினர். அப்போது ஒரு காவல்காரர் சொர்ணத்தம்மாளிடம், “சுயராஜ்யம் வேண்டும் சுயராஜ்யம் வேண்டும் எனக் கேட்டீர்களே .. இந்த பாதை வழியாக போ.. சுயராஜ்யம் கிடைக்கும்,” என்று கூறி  இரண்டு பெண்களையும் இறக்கிவிட்டு, “ஊரை விட்டு ஓடிப்போய் எங்காவது பிழைத்துக் கொள்ளுங்கள்” எனக் கிண்டலடித்தார். மீண்டும் மதுரை எல்லைக்குள் வந்து மறியலில் ஈடுபடக்கூடாது என்று சொர்ணத்தம்மாள் மற்றும் லட்சுமிபாய் இருவரையும் எச்சரித்தும் அனுப்பினர். அதற்கும் சொர்ணத்தம்மாள்,கொஞ்சமும் பயமின்றி  “சுதந்திரத்துக்காக எந்தப் பாதையில் போகவேண்டும் என்று என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போங்கள். உங்கள் வேலை முடிந்தது..” என்றார். அதற்கும் கூட லத்தியால் செமத்தியாக அடி வாங்கினார் சொர்ணத்தம்மாள். காவலர்கள் அவர்களை நடுராத்திரில் அநாதரவான இடத்தில் விட்டுவிட்டு புறப்பட்டு விட்டனர். 

காப்பாற்றப்பட்ட சொர்ணத்தம்மாள் &லட்சுமிபாய் 

பின்னர் மனதில் சிறிதும் பயமின்றி, அரைகுறை ஆடையுடன் சொர்ணத்தம்மாள் , லட்சுமிபாயம்மாள் இருவரும் இருட்டில் நடக்க ஆரம்பித்தனர். அருகில் ஆள் நடமாட்டம் ஏதுமில்லை; வீடுகளும் இல்லை. கும்மிருட்டு. சுமார் ஒரு மைல்(1.6 கி.மீ) தூரம் சென்றதும், ஒரு  பையனும் இரண்டு பெண்களும் அவர்கள் இருவரையும் பார்த்தனர். அவர்கள் சொர்ணத்தம்மாளிடம், ” எங்கே போகிறீர்கள்?” என்று  கேட்டார்கள்.சொர்ணத்தம்மாள், இந்த காட்டுக்கு வந்த கதையை, விடுதலைப் போராட்டத்தால், தான் போலீசிடம் பட்ட அவலத்தை, கொடுமையைச் சொன்னார்கள். அதன் பின்னர், அவர்கள் சொர்ணத்தம்மாளையும், லட்சுமிபாயையும், ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்று, சாப்பிடச் சொன்னார்கள்..  படுக்கத் தலையணையும் பாயும்  கொடுத்தார்கள். சொர்ணத்தம்மாளும் லட்சுமிபாயும் எதனையும் வாங்கவில்லை ; அவர்களிடம்  ஒன்றும் வேண்டாம் எனக் கூறிவிட்டோம். “எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.” என்று பின்னாளில் சொர்ணத்தம்மாள் சொன்னார்.  இருவரையும் ஏற்றி வந்த லாரி டிரைவர் கொஞசம் கருணை உள்ளம் கொண்டவர். அதனால் அவர், சொர்ணத்தம்மாளையும், லட்சுமி பாயையும் இறக்கிவிட்ட விஷயத்தை,  மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் முத்துக்கனித் தேவரிடம் போய் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் முத்துக்கனித் தேவர், அவர் கட்சிக்காரர்கள் சிலரோடு, இரவோடு இரவாக அந்த காட்டுக்கு வந்து, சொர்ணத்தம்மாளையும்,லட்சுமிபாயையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் மதுரை கீழ்பாலத்தில் இறங்கி வைகை ஆற்றில் குளித்துவிட்டு புதிய சேலையைக் கட்டிக்கொண்டனர்.  அங்கிருந்து குதிரை வண்டியில் மதுரை புதுமண்டபத்திற்கு உடன் வந்தவர்கள் கூட்டிச் சென்றார்கள். அங்கு போட்டோகடை வைத்திருந்த ராமலிங்கம் என்பவர் அவர்களுக்கு  சாப்பாடு வாங்கிக்கொடுத்தார். அவரும் சுதந்திரப்போராட்ட தியாகி. பிறகு நடந்தது குறித்த விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. .

சொர்ணத்தம்மாள் வாக்குமூலம் 

“போலீசார் இப்படி என்னை அவமானப்படுத்திய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது இன்னும் அதிகரித்தது. மேடையில் காந்தி பாட்டு பாடுவேன். ஒரு முறை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் காந்திஜி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண்கள் பகுதியை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். திடீரென கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தொண்டர்களை மேடைக்கு வருமாறு காந்திஜி சொன்னார். நான் மேடைக்குப் போய் காந்திஜி காலைத் தொட்டு கும்பிட்டேன். காந்திஜி பதறிப்போய்என்னை ஏன் தொட்டுக் கும்பிடுகிறீர்கள். நான் என்ன பாவம் செய்தேன்?” எனக் கேட்டார்” என்று பழைய தனது நினைவுகளை  ஒரு பேட்டியின்போது  பகிர்ந்து கொண்டார் சொர்ணத்தம்மாள்.. 

இந்திய சுதந்திர பொன் விழா மலரில் 

  இந்திய சுதந்திரப் பொன்விழா  மலரில்  1997 ம்ஆண்டு, தினசரி தீக்கதிர் வெளியிட்ட கட்டுரையில், சொர்ணத்தம்மாள் அவரது  பேட்டியில் “பஸ் பாஸ், ரயில் பாஸ், பென்சன் கிடைக்கும் என்று நாங்கள் போராடவில்லை. சுதந்திரத்திற்காகத்தான் போராடினோம், சிறை சென்றோம்” என்று வீரத்தியாகி சொர்ணத்தம்மாள் கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டுமா என்று ஒரு வேளை மத்திய அரசில் ஆளுபவர்கள் கேட்டிருந்தால் கூட இதே பதிலைத்தான் சொல்லியிருப்பார் பாரதத்தாயின் செல்ல  மகள் சொர்ணத்தாயம்மாள்.  அவரின் இறப்பு எங்கே, எப்படி நிகழ்ந்தது என்ற தகவல் கூட நமக்குப் பதிவாக வில்லை;தெரியவில்லை. இப்படித்தான் இருக்கிறது நிறைய விடுதலைப் போராளிப் பெண்களின் நிலை .. 



 

 

 

– பேரா.சோ.மோகனா

நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 

நூல் அறிமுகம்: சு.வெங்கடேசனின் வைகை நதி நாகரிகம்! – இரா.சண்முகசாமி 




அணிந்துரை : தமுஎகசவின் மிகப்பெரிய ஆளுமை தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள்.

நிறைய தொல்லியல் ஆவணங்களை வரலாற்றுத் தரவுகளுடன் 19 தலைப்புகளில் மிகவும் அருமையாக பதிவு செய்துள்ளார் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள்.

இறுதியாக ஒன்றிய அரசு கீழடியை மூடி மறைக்கிற வேலைகளை செய்த தகிடுதத்தங்களை அம்பலப்படுத்திய எழுதிய கட்டுரைகள் பகீர் என்கிறது. வடமாநில ஆய்வுகளுக்கு, இல்லாத சரஸ்வதி நதியை தேடுவதற்கு, ராமாயண கண்காட்சிக்கு என அதிக நிதியை ஒதுக்கிய ஒன்றிய அரசு கீழடியில் கிடைத்த பொருட்களை கரிம ஆய்வு செய்வதற்கு கிடைத்த நிறைய பொருட்களில் இரண்டே இரண்டை மட்டும் அமெரிக்காவுக்கு ஏனோ தானோ என்று அனுப்பியது இப்படி நிறைய பித்தலாட்டங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

‘கீழடியை மூடி மறைக்கிறான் அநியாயமய்யா
வந்தேறி நாட்டை கெடுக்கிறான் அவமானமய்யா’ என்கிற சங்கத்தலைவனின் பாடல் வரிகள் தான் உடனே நினைவுக்கு வந்தது.

வைகை நதிக்கரையின் நகர நாகரிகத்திற்கு மிகுந்த எடுத்துக்காட்டுகளை வழங்கிய விதம் அப்பப்பா அருமை!

கண்ணகி வாழ்ந்த ஊர் கடை சிலம்பு ஏந்தல் (கடைச்சநேந்தல்), தேனூர், அந்த நரி (அந்தனேரி), வெம்பூர் (குத்துக்கல்), புலிமான்கோம்பை (புள்ளிமான்கோம்பை), அழகன்குளம் இப்படி ஏராளமான தரவுகளை வாரி வழங்கியிருக்கிறார்.

அரசியல் காரணங்களால் வடஇந்திய தொடர்புகள் அறுபட்ட நிலையில் ரோமானியர்கள் கடல்வழியைக் கண்டறிந்து மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் யவனர்களாக வாணிபம் செய்தது, அதற்கான சான்றுகளாக நிறைய ரோமானிய நாணயங்கள் வைகை நதிக்கரை ஓரம் கிடைத்தது இப்படி ஏராளம் அரிய காட்சிகளை படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழரின் நாகரிகம் இன்னும் பல நூறாண்டுகள் பின்னோக்கி போவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் உள்ளன. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட பொருட்களில் ஒன்றுகூட கடவுள் வழிபாடு சம்பந்தப்பட்ட தகவல்கள் இல்லையென்பதால் ஒன்றிய அரசு கீழடியை கைகழுவும் வேலையை செய்கிறது என்று ஒன்றிய அரசின் சூழ்ச்சியை போட்டு உடைக்கிறார். அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மிகச்சிறப்பாக கீழடியை ஆய்வு செய்த நிலையில் அவரை ஏன் மாற்றவேண்டும். அவருக்குப் பதிலாக வந்த ஸ்ரீராமன் என்பவர் மண்ணின் அடி ஆழத்தில் ஆய்வு செய்யாமல் திட்டமிட்டு மேலோட்ட கிடைத்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி ஆயிரம் ஆண்டுகள் குறைத்துக் காட்டுவதற்கான வேலையை ஒன்றிய அரசின் சூழ்ச்சி வேலையை செய்தார். அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒருநாளைக்கு சராசரியாக 80 நபர்கள் வரை ஆட்களை வைத்து ஆய்வு செய்த நிலையில், ஸ்ரீராமன் ஒரு நாளைக்கு 20 ஆட்கள் வரையே பயன்படுத்தியுள்ளார் என்றும் கூறுவதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை திட்டமிட்டு ஒன்றிய அரசு கீழிறக்கப் பார்க்கிறது என்றே தெரிகிறது.

தமிழ்ச் சமூகம் விழித்திருந்து கீழடியை பாதுகாக்க வேண்டும் என்று மக்களின் ஊழியர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார். 2017ல் வெளியான போது இந்நூல் கண்ணில் படவில்லை. 2022ல் திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கப்பெற்றேன். நிறைய தரவுகளைக் காண இதுவரை வாசிக்காத தோழர்கள் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல் : வைகை நதி நாகரிகம்!
ஆசிரியர் : சு.வெங்கடேசன்
விலை : ரூ.210

வெளியீடு : விகடன் பிரசுரம்
ஆண்டு : 2017ல் முதல் பதிப்பு, ஜூன்2022ல் இரண்டாம் பதிப்பு.
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

தோழமையுடன்
இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.

நூல் அறிமுகம்: தமிழில் ச.சுப்பாராவின் எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு – மணி மீனாட்சி சுந்தரம்

நூல் அறிமுகம்: தமிழில் ச.சுப்பாராவின் எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு – மணி மீனாட்சி சுந்தரம்




நூல் : எம். எஸ் சுப்புலட்சுமி உண்மையான வாழ்க்கை வரலாறு
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ.₹220
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தன்னுடைய பாடும் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூல் இது.

பத்திரிகையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை ச.சுப்பாராவ் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் எழுதப்பட்டதைப் போன்ற உணர்வைத் தருகிறது இவரின் மொழிபெயர்ப்பு.
‘உண்மையான வாழ்க்கை வரலாறு’ என்று ஒருவித பூடகத் தன்மையுடன் தலைப்பு இருந்தாலும், எம்.எஸ் என்ற ஆளுமையின் சிறப்புக்கு மாசு கற்பிக்கும் நோக்கம் எதுவுமின்றி மிகுந்த கவனமும், உண்மையை உரைக்கும் ஆர்வமும், அர்ப்பணிப்பும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பதின்மூன்று தலைப்புகளில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் எம்.எஸ் -இன் வரலாற்றை இப்படித் தொடங்குகிறார்,
“எம்.எஸ்.சுப்புலட்சுமி மதுரை நகர், சண்முகவடிவு என இரு அம்மாக்களுக்குப் பிறந்தார். தமிழ்ப் பண்பாட்டின் மனசாட்சியையும், இதயத்துடிப்பையும் பிரதிபலித்த இரு அன்னையர்!”
“எம்.எஸ்.என்பதில் எம் என்பது வெறும் புவியியல் ரீதியான அடையாளமல்ல, அது தொப்புள்கொடி உறவு “என்பதற்கான காரணங்களை விவரித்துள்ளார்.
மதுரை என்னும் தூங்கா நகரத்தின் எண்ணற்ற பக்கவாட்டுச் பந்துகளில் ஒன்றான மேலக்கோபுரத்தெரு, அனுமந்தராயர் தெருவில் எம்.எஸ்.பிறந்தது முதல் ‘பாரத ரத்னா’ விருது பெற்றது வரையிலான வாழ்க்கைச் செய்திகளைக் கொண்டுள்ளது இந்நூல்.
வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் அடுக்கிக் கொண்டு போகாமல் கர்நாடக இசையின் தோற்றம்,தொடர்ச்சி, கச்சேரிகளில் நிகழ்ந்த மாற்றங்கள், தேவதாசி முறை, மகத்தான பெண் கலைஞர்களின் வரவு, தனித்தன்மையுடைய ஆசிரியர்கள், கலைஞர்கள், தமிழிசையின் வரலாறு , இசையின் அழகியல், இரசனைத் திறன் ஆகியவற்றை எம்.எஸ் -இன் கதையோடு ஊடும்பாவுமாகக் கூறிச் செல்கிறார் ஆசிரியர்.
அந்தக்கால ஆசிரியர்களின் அடி தாங்க முடியாமல் படிப்பை பாதியில் (ஐந்தாம் வகுப்பு) விட்டிருக்கிறார் எம்.எஸ்.(நல்லவேளை!)
தனது பத்தாவது வயதில்,மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட சைக்கிள் கம்பெனி திறப்பு விழாவில்(பின்னாளில் மாபெரும் டி.வி.எஸ் குழுமம்)பாடியதிலிருந்து எம்.எஸ்-ன் கலைவாழ்வு தொடங்குகிறது.
எம்.எஸ் ஒரு பாடகியாக வளர்ந்தது, சினிமாவில் நடித்தது, திருமணம் செய்தது, கர்நாடக இசையை உலகம் முழுமைக்கும் கொண்டு சென்றது, இசையால் பக்தி செய்தது எனப் படிப்போரைக் கரைத்துச் செல்கிறது இந்நூல்.
எம்.எஸ் -க்கும் அவரது கணவர் சதாசிவத்துக்கும் இடையேயான ஆத்மார்த்தமான உறவு பற்றி ஆசிரியர் இப்படிக் கூறுகிறார்,
“இசை எம்.எஸ் இன் வாழ்க்கை என்றால், சதாசிவத்திற்கு எம்.எஸ் தான் வாழ்க்கை. சதாசிவமும் எம்.எஸ்-ம் போல எந்தக் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நன்றிக்கடன் பெற்றிருக்கமாட்டார்கள்.”
வழக்கமாகப் புகழ்பெற்றவர்களைப் பற்றிப் பொதுவெளியில் பரப்பப்படும் புனைவுகளுக்கு எம்.எஸ் -ம் தப்பவில்லை. அவை பற்றிய விவாதங்கள் இந்நூலில் இருந்தாலும் அவை எம்.எஸ் என்னும் பேரொளிக்கு முன் வந்து மறையும் பனித்துளிகளாகவே தெரிகின்றன.
தியாகையரைப் போல இறைவனை நாடும் பக்திபூர்வமான இசையை தமிழகத்தில் இருந்து உலகெங்கும் பரப்பிய இசையரசியின் வரலாற்றை, இசை ரசிகர்களுக்கு மட்டுமன்றி எல்லோருக்குமானதாகத் தந்திருக்கிறது இந்நூல்.
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தனக்குப் பிடித்தமான அடர்நீல நிறப் பட்டுப்புடவையை அணிந்திருக்கிறார். மடிசார் புடவையின் முந்தானை அவரது வலது தோள் வழியாகச் சுற்றப்பட்டிருக்கிறது. அவருக்கு மிக விருப்பமான மதுரை மல்லிகையைச் சூடியிருக்கிறார். மஞ்சள் பூசிய நெற்றியில் வட்டமான குங்குமப்பொட்டு,அவர் அணிந்திருக்கும் வைரத்தோடு, மூக்குத்தியின் பிரகாசத்தில் இசை உலகின் சூரியனாய் தகதகக்கிறது. பக்தியில் கரைந்து எம்.எஸ் பாடத் தொடங்குகிறார். உலகம் தன்னிலை மறந்து கேட்டுக் கொண்டிருக்கிறது. என்றென்றும்….
-மணி மீனாட்சி சுந்தரம்
நூல் அறிமுகம் : ச.சுப்பாராவின்‘மதுரை போற்றுதும்’ – ரமணன்

நூல் அறிமுகம் : ச.சுப்பாராவின்‘மதுரை போற்றுதும்’ – ரமணன்




ச.சுப்பாராவ் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மதுரை போற்றுதும்’ புத்தகத்தை மதுரை பார்சல் பாசஞ்சர் போல மெதுவாகப் படித்தேன். மனிதர் கடுமையாக உழைத்திருக்கிறார். சிறு வயது முதல் தான் அலைந்த மதுரை தெருக்களில் மீண்டும் ஒருமுறை சுற்றியிருக்கிறார். இம்முறை வேடிக்கையாக மட்டும் அல்ல; பார்த்த ஒவ்வொன்றிலும் ஒளிந்திருந்த வரலாற்றை, சோகத்தை, அழகை ஆழமாகப் பார்த்திருக்கிறார். ஆனாலும் எளிமையான, ஜனரஞ்சகமான கதை போல் சொல்கிறார். போகிற போக்கில் அவர் தெளித்துச் செல்லும் இலக்கிய குறிப்புகளை அறிவதற்கு என்னைப் போன்ற வாசகன் சற்று முயற்சி எடுக்க வேண்டும்.கம்பராமாயணத்தில் தொடங்கி நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் வழியாக சி.சு செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’, ஒரு எழுத்துப் புலியின் மதுரை குறித்த வர்ணனை (யார், என்ன புத்தகம் என்று சொல்லி விடுங்கள் ராவ்),’காவல் கோட்டம்’ என ஆங்காங்கே மதுரை தொடர்பான இலக்கியப் படைப்புகளைக் கொடுக்கிறார். இருந்தாலும்…..

தனது ஆளுமையை உருவாக்கியவர்களில் ஜனதாக் கட்சி, எழுத்தாளர் சுஜாதா, மதுரையில் நடைபெற்ற அரசியல் கூட்டங்கள், இசைக் கச்சேரிகள், இடது பக்கம் திருப்பிய டெய்லர் மணி என ஒரு அத்தியாயம். அதில் இடதுசாரிகள் குறித்து நல்ல விவரிப்பு. அன்று அவர் கேட்ட அரசியல் தலைவர்களில் மோகன், நன்மாறன் ஆகியோருடன் பின்னாளில் நெருங்கிப் பழகியதையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும்….

நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்து அவற்றின் சாரத்தைச் சுவையான கட்டுரையாக எழுதுபவர் அல்லவா? அதனால் மதுரையில் இருக்கும் பதிப்பகங்களைப் பற்றிக் கிட்டத்தட்ட பத்து பக்கங்கள் எழுதியிருக்கிறார். மீனாட்சி புத்தக நிலையம், என்சிபிஎச், அன்னம், பாரதி புக் ஹவுஸ் என பரந்துபட்ட தொடர்புகள். ஆனாலும்….

பழம்பெரும் நடிகர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குத் திருப்பாவை கற்று தந்த மாமி என கலைகளைப் பற்றிய ஒரு 365 சுற்று அனுபவத்தைத் தருகிறார். இருந்தாலும்…..

மதுரைக்காரன் மீனாட்சி அம்மன் கோயிலைப் பற்றி எழுதாமல் இருப்பானா? சங்கப் புலவர்களுக்குச் சன்னதி, மதுரையை முன்னொட்டாகப் போட்டுக்கொண்ட புலவர்களின் பெரிய பட்டியல், பள்ளியறை போகும்போது கோயில் கணக்கு படிப்பது, அப்போது எதுவரை தேவாரம் ஓதுவார்கள், எங்கிருந்து நாதஸ்வரம் வாசிக்கப்படும், பெண்கள் படுக்கப் போகுமுன் நகைகளைக் கழற்றி வைப்பது போல மீனாட்சி அம்மனும் செய்வது (தொ.பரமசிவன் மக்களுக்கும் கடவுள் வழிபாட்டிற்கும் உள்ள தொடர்பைக் கட்டுரையாக விளக்குவதை இந்த இரண்டு வரிகளில் விளக்குவது போல தோன்றுகிறது. ஐயப்பனின் மனைவியாகக் கருதப்படும் புஷ்கலை என்பவர் ஒரு சவுராஷ்டிரப் பெண்; அவரின் திருமண சடங்குகள் இன்றும் சவுராஷ்டிர சமுதாயத்தினரால் நடத்தப்படுவது என்கிற சேதியும் இது போன்றதாகக் கருதுகிறேன்.) போன்றவை குறித்த புதிய செய்திகள் சிறப்பு. இருந்தாலும்……

பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் அவர் படித்தது; தன் பள்ளியைப் பற்றி விரிவாக எழுதியிருக்கும் அவர் நினைவாற்றல்; கல்லறையையும் ஆய்வு செய்யும் அவரது விந்தை மனம்; அதிலும் ஜாக்சன் துரையையும் ஜம்புரோவையும் ஒப்பிட்டிருப்பது; இருந்தாலும்…

மதுரையின் உணவு வகைகளை ஆங்காங்கே சுவையாகச் சொல்லியிருப்பது; தானும் நண்பர்களும் டீ குடித்துக்கொண்டே கச்சேரிகளையும் அரசியல் பேச்சுக்களையும் கேட்டது; பீப்பிள்ஸ் நாடக்குழுவில் நடித்தது; தன்னால் விலை குறைந்த பொருட்களையே வாங்க முடிந்தது என்பது போன்ற வருணனைகள் அவரின் எளிய பின்னணியை காட்டுகிறது என்றாலும்…….

புத்தகம் முழுக்க நகைச்சுவை உணர்வு விரவிக் கிடக்கிறது; இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு வந்த அன்று எதிர்த்த வீட்டு அக்கா தூக்கில் தொங்கியதைச் சொல்லும்போது சோகம் பின்னணியாய் ஒலிக்கிறது ஜார்ஜெட் தாவணி போட்டால் அந்த அக்கா சினிமாவுக்குப் போகிறார்கள் என்ற இடத்தில் தமிழ் மக்களின் மனத்தில் சினிமா எத்தகைய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதைப் போகிற போக்கில் சொல்கிறார். இருந்தாலும்…..

மதுரையின் கட்டிடங்கள்,தெருக்கள்,திருவிழாக்கள் எல்லாமே சிறப்பாக விவரிக்கிறார். இருந்தாலும்……

(இந்தப் பதிவின் முடிவில் நான் சொல்ல நினைத்ததைச் சரியாக ஊகிக்கும் முதல் ஐந்து நண்பர்களுக்கு சுப்பாராவின் புத்தகம் பரிசாக அளிக்கப்படும்.)
– ரமணன்

நூல் :
மதுரை போற்றுதும்

ஆசிரியர் : ச.சுப்பாராவ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை : 200
தொடர்பு எண் : 098411 91397

தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி

தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசி




மெட்டுக்குப் பாடல் எழுதுவது புதிதாக வருகிறவர்களுக்கு பெரும் சிரமமான காரியமாக இருக்கும். மெட்டுக்கு எப்படிப் பாடல் எழுதுவது என்று சில தம்பிமார்களும் நண்பர்களும் கேட்பார்கள். முதலில் உங்களுக்குத் தெரிந்த திரைப்பாடலின் மெட்டுக்கு எழுதிப் பழகுங்கள் என்பேன். அப்படி எழுதிப் பார்க்கிற போது நம்பிக்கை பிறக்கும். எழுதிய பாடல் வரிகளை ஒரு மெட்டில் பார்ப்பதில் ஓர் ஆனந்தம் உண்டாகும். ஒருவகையில் தெரிந்த மெட்டிற்குப் பாடல் எழுதுவது சுலபமாக இருக்கும் அதில் அவர்கள் பெறுகிற புரிதலை வைத்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடலாம் என்பது என் எண்ணம். அதனைத் தொடர்ந்து கேட்காத இந்திப் பாடலை அல்லது வேறு மொழிப் பாடலை எடுத்துக் கொண்டு அதன் மெட்டுக்கு எழுதச் சொல்வேன். அதையும் எழுதிவிட்டால் அவர்களின் நகர்வை என்னாலும் அவர்களாலும் உணர முடியும். அதன் பின் நான் எனக்குக் கொடுக்கப்பட்ட என் பாடலின் மெட்டை அந்த பாடல் வெளிவந்த பிறகு கொடுத்து எழுத வைப்பேன். அதிலும் எழுதிப் பழகிவிட்டால் அவர்கள் மெட்டுக்கு எழுதுகிறவர்களாக மாறிவிடுவார்கள். இப்போது மெட்டுக்கு எழுதிப் பழகிவிட்டார்கள் ஆனால் அவர்களின் கருத்தும் கவித்துவமும் அழகிலும் எப்படிக் கைவரப் பெற்றிருக்கிறது என்பது அடுத்த கேள்வி. இது குறித்தும் பயில நமக்கு நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பாடலாசிரியருக்கும் ஒரு பாணி இருக்கிறது. தமிழ் பாடலாசிரியர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு சந்திப்பில் ஒவ்வொருவரின் பாடல் எழுத்துமுறையையும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளும் வண்ணம் நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும் என எனக்குக் கூட ஓர் எதிர்காலத் திட்டம் இருக்கிறது.

சென்னைக்கும் மதுரைக்கும் என்னைவிட அதிகம் பயணித்தவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் இதில் விதிவிலக்கு. இன்னொன்று இதற்கு நான் நடத்துநர் வேலையோ ஓட்டுநர் வேலையோகூட செய்திருக்கலாமோ என்றுகூடத் தோன்றும். அப்படி நான் பயணிக்கையில் மோசமான அனுபவமும் சந்தோசமான அனுபவமும் ஓரிடத்தில் கிடைக்கும். அந்த இடம் தான் ஹோட்டல். அங்கே கழிப்பறை மட்டமாக இருக்கும். பள்ளிக்கூட அனுபவத்திற்குப் பிறகு ஒருவரைக் கையில் குச்சியோடு பார்த்தேனென்றால் அது இங்கு தான். ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு கக்கூஸ்க்குள் அனுப்ப ஓர் அண்ணன் ஆசிரியர் வேலையைச் செய்வார். என்ன மாணவர்களுக்குத் தான் வயது கொஞ்சம் அதிகம். அதே போல் அங்கிருக்கும் ஹோட்டலில் தோசையும் சால்னாவும் சாப்பிட்டால் அடுத்த பத்தாவது நிமிடத்தில் பஸ் ஒரு நான்ஸ்டாப்பில் நின்று ஒருவர் வாட்டர் பாட்டிலோடு காடுகரை நோக்கி ஓட வேண்டும் தான். இப்போ விசயம் இதுவல்ல பஸ் நிற்கும் அந்த 15 நிமிடங்களில் அங்கே நான்கு ஐந்து பாடல்கள் ஒலிக்கக் கேட்கலாம். அந்த பாடல்களின் மூலமாகத்தான் நான் தமிழகத்தின் பல முக்கிய நாட்டுப்புற கானா பாடகர்களை அறியப்பெற்றிருக்கிறேன். அங்கு எல்லாவிதமான பாடல்களும் ஒலிக்கும். அங்கேயே கேசட் பிற்காலத்தில் சிடி விற்பனையும் நடக்கும். அங்கே என் பாடல் ஒலித்தால் எத்தனையோ பேரைச் சென்றடையுமே என்று ஏங்கியிருக்கிறேன். இப்போதெல்லாம் என் பாடல் இரண்டாவது ஒலித்துவிடுகிறது ஆனால் நான் இப்போது மதுரைக்கும் சென்னைக்கும் ரயிலில் பயணிக்கிறேன்.

ஒரு முறை சிங்கப்பூர் சென்றிருந்த போது அங்கே உள்ள பப் ஒன்றுக்கு நண்பர்களோடு போயிருந்தேன். யாரும் கற்பனை செய்ய வேண்டாம் நான் சும்மா வேடிக்கை மட்டுமே பார்த்தேன். அங்கே என் பாடல்களைத் தமிழ் நாட்டிலிருந்து வந்த பாடகர்கள் பாடும்போதும் அவற்றை அங்கிருந்த நண்பர்களும் நண்பிகளும் கேட்கும் போது எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது எனக்கு றெக்கை முளைத்தது.

ஒருமுறை “வானவில்” என்கிற ஒரு படத்திற்குக் கேரளா சென்றிருந்தேன். அந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எழுதினேன். மிகச் சிறப்பாக வந்திருந்தது. அந்த டீம் கேரளத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் பெயர்கள் மறந்தபோயின. ஆனால் அவர்கள் ஒரு தமிழ் கவிஞனுக்குக் கொடுத்த மரியாதையும் உபசரிப்பும் மறக்க முடியாத நினைவுகள். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை என் பாடல்களும் தான். இதை எதற்காக சொன்னேனென்றால் பத்தாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரியில் என் அருமைத் தம்பி அமைப்பொன்றின் ஆல்பத்திற்காக பத்துப் பாடல்கள் எழுத ஒரு மழைக்கால இரவில் ஒரு காட்டுப் பங்களாவில் தங்கவைத்தான். உடனிருப்பானென எண்ணினேன் இருக்கவில்லை. பேப்பர் பேனா எடுத்து எழுதத் தொடங்கினேன். கரண்ட் கட்டானது. மழைக் கொட்டியது ஆனால் குடிக்கத் தண்ணீரில்லை. யாரோ ஒருவர் நான்கு இட்லியைத் தந்துவிட்டு குடையோடு ஓடி மறைந்தார். மெழுகுவர்த்தியும் இல்லை. பேய் பயம் எனக்கில்லை. ஆனால் பயம் இருந்தது. தூங்குவதற்குத் தொந்தரவாக வெக்கை இல்லை ஆனால் சரியான விரிப்பான் இல்லை.
கொசுக்களின் துணை இருந்தது ஆனால் கடித்தன. விடிய விடிய தூங்கவில்லை. அந்த நான்கு இட்லியையும் சாப்பிடவில்லை பத்து பாடல்களும் எழுதவில்லை.

Paadal Enbathu Punaipeyar Webseries 27 Writter by Lyricist Yegathasi தொடர் 27 : பாடல் என்பது புனைபெயர் – கவிஞர் ஏகாதசிகேரளா போய் பாடல் எழுதிய அனுபவம் போல் கேரளத்து நண்பர்கள் சென்னை வந்து என்னிடம் பாடல் வாங்கிய விதமும் அழகானது தான். படத்தின் பெயர் “ட்ராமா” இது இரண்டே ஷாட்டில் எடுக்கப்பட்ட சினிமா. இன்னும் திரைக்கு வரவில்லை. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் திரைக்கு வரும். இந்த வாய்ப்பு என் பெற்றெடுக்கா மகள் விஜயலட்சுமியால் கிடைத்தது. அவர் வாட்ஸ்அப்பில் உரையாடும் போது நீங்கள் மண்வாசனை பாடல் மட்டும் தான் எழுதுவீர்களா வேறு வகைப் பாடல்களும் எழுதுவீர்களா எனக் கேட்டபோது சின்னதான கோபத்தில், நான் இங்கிலீஷ் படத்திற்கே பாடல் எழுதியிருக்கிறேன் என்னப் போய் இப்படி கேட்டிட்டியே மகளே என்றேன்.(அதற்கு அவர் என்ன.. இங்கிலீஷ் படமா என வாயைப் பிளந்தது, பிறகு அது என்ன படம் எனக் கேட்டபோது என் வாய் மூடிக் கொண்டதெல்லாம் எடிட்) அதன் பிறகு தான் இந்த வாய்ப்பு, ஏனெனில் அந்தப் படத்திற்கு விஜயா தான் வசனக்கர்த்தா. அந்தப் படத்தின் இயக்குநர் அஜய்குமார் என் அன்புக்குரியவர். அந்தப் படத்தில் மதுரையின் பெருமையைச் சொல்லும் விதமான ஒரு பாடல் ஜெய கே தாஸின் இசையில் வேல்முருகனின் குரலில்.

தொகையறா

மல்லிகைப் பூ வாசம் எங்க மதுரையோடது
நாயக்கர் மஹால் தூண்களால பெரும கூடுது
தெப்பக்குளத்தில பசங்க பாரு கிரிக்கெட் ஆடுது
நம்ம கோனார் மெஸ்ஸு கறி தோச நாக்கு தேடுது

பல்லவி

ஜிகர்தண்டா பேருபோன மதுரைதானுங்க
சிங்கப்பூரத் தோக்கடிக்கும் எங்க ஊருங்க
டீக்கடைங்க எங்களுக்கு சட்டமன்றம் தான்
அடிகுழாயில் நடக்கும் பட்டிமன்றம் தான்

வாழத்தார வச்சதுபோல் நான்கு கோபுரம்
வைகை ஆத்து இடுப்புலதான் நாங்க வாழுறோம்

சரணம் – 1

வருஷத்துல ஆறு மாசம் சென்ரல் ஜெயிலு
வந்ததுமே கோழி அடிக்கும் பொண்டாட்டி மயிலு
உசுப்பிக் கேளு ஒரு மணிக்கும் இட்டிலி கிடைக்கும்
சாமத்துக்கும் சலிக்காமல் சட்னி இருக்கும்

நண்பனை தொட்டவனை பிடித்திடும் சனிதான்
உசுரு கூட எங்களுக்கு பாக்கெட் மனிதான்

சரணம் – 2

கேலி கிண்டல் நக்கல் பேச்சு கூட பிறந்தது
பூமி போல எங்க ஊரு தூங்க மறந்தது
தியேட்டரில் புதுப் படன்னா விசில் தான் பறக்கும்
வெள்ளைக்காரச் சனங்க பாரு டவுசரில் நடக்கும்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது எங்களின் மண்ணு
நீ அதை நீதி கேட்டு எரிச்சதுங்க கண்ணகிப் பொண்ணு