மங்கையின் கண்கள் மணற்கேணி கவிதை – நவகவி
நீர்ஊற்றை ஒளித்து வைக்கும்- அந்த
மணற்கேணி- உன்
நேத்திரங்கள் ஆனதுவோ- என்
மகாராணி?
உன்- விழியின் ஓரமே
பார்- கசியும் ஈரமே!
கண்ணீர் அல்ல…. காதல் கசியுது மெல்ல
கண்ணே கண்ணே…. மறுப்பதேன் அதைச் சொல்ல?
(நீரூற்றை)
இமை இரண்டும்- விரல்- என ஆகி
மனதை மீட்டுமே!
எண்ணங்களை -உன்- வண்ணங்களை
எழுதிக் காட்டுமே!
இனியாவது கனிவாய்திற பேசடி!
ரதமாகநீ வடமாக நான் பாரடி!
மனது வையடி
மௌன தேச பிரஜையாக
மாறினாயடி!
(நீரூற்றை)
கூம்புகிற- பூ- இதழ்களுமே
வீசும் வாசமே!
மூடுகிற- உன்- உதடுகளும்
பேசும் பேசுமே!
கன்னக்குழி முத்தப் புயல் மையமோ?
அன்னக்கிளி உனக்குப்பணி செய்யுமோ?
சொல்வாய் சம்மதம்.
செவ்வாய் திறந்து சிரித்தால் செவ்வாய்
கிரகம் என்வசம்!
(நீரூற்றை)
உன்- கால் சுவடு -ஒரு- ஏடாக
கவிதை வடிக்கிறேன்!
நேர் வகிடு -சொர்க்க- வழி ஆக
நிலவில் நடக்கிறேன்!
மௌனம் உடை தயக்கம் உடை கண்மணி!
காதல் வினா தொடுத்தேன் விடை சொல்க நீ!
கனிவாய் பேசடி
கனிவாய் முத்தம் தருவாய் கண்ணே
இனிதாய் பேசடி!
(நீரூற்றை)