Book Review : Samsudeen Heera's Mayanakaraiyin Velicham book review by Pichumani நூல் அறிமுகம் மயானக்கரையின் வெளிச்சம்

நூல் அறிமுகம்: சம்சுதீன் ஹீராவின் மயானக்கரையின் வெளிச்சம் – பிச்சுமணி



ஆபத்து எதுவென்று அறியாத பசி உணர்வை மட்டும் வெளிக்காட்டும் அந்த பெயரற்றவனும் இம்ரானும் என்னை ஏதோ செய்கிறார்கள். எல்லாவற்றையும் செய்தியாகவோ கதையாகவோ படிக்கும் வேடிக்கை காரனா என ஒருவித கேள்வி புன்னகையுடன் என்னை உலுக்கி கொண்டு இருக்கிறார்கள்.

ஜுபேரின் வெள்ளை குர்தா என் கால் அருகில் விழுந்து கிடைப்பது போல் மனசு படம் பிடித்துக் காட்டுகிறது.. என் கால் பட்டு அது அழுக்காகி விடுமோ என்று கால்கள் பதறி குழலாடுகிறது. போனவாரம் நான் சாப்பிட பீப் பிரியாணி மெளசின் கண்களில் எனக்கு தெரிகிறது.. பாரத்மாதகிஜே, ஜெய் ஸ்ரீ ராம் சொல்லாமல் நீ எப்படி பீப்பை ருசித்தாய் என கேட்டுக்கொண்டே தொடர் தொல்லையை நிரந்தரமாக தவிர்க்க இரயிலிருந்து குதித்து என்னையும் பின்னோக்கி இழுப்பது போல் மனசு அழுத்துகிறது.

ஊரடங்கில் பசி என் உயிரை குடித்து போல் உணர்கிறேன். ஆனால் எனக்கு முன்போ பின்னரோ மரித்த இல்லை… இல்லை.. சாகடிக்க பட்ட பைசல் என்னை நோக்கும் கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. கதைக்கு முடிவரை எழுதும் ஆற்றல் இந்திய பொதுச் சமூகத்துக்கு இருப்பதாய் தெரியவில்லை. பைசல்கள் மீது அவப்பழியை சுமத்துவதை அமைதிகாத்தே அனுமதிக்கிறது. சில மூலைகளில் எப்போதாவது எழும் என்னைப் போன்றோரின் பைசலுக்கான குரல்கள். கடலில் கரையும் பெரும்காயமாகிவிடுகிறது.

படுகொலைகள் வன்கொடுமைகள் மற்றும் வெறுப்புணர்வை விதைப்பதற்கும்; செய்வதற்கும் ஒரு கூட்டம் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதுவும் என் அருகாமையில் உள்ள முருகேசன் சங்கர் பண்ணாரிகளே தேர்வு செய்கிறது.. அவர்கள் ஒருவர்க்குள் ஒருவர் ஆதிக்கம் செலுத்தி அழிந்து போகிறார்கள். ஆனால் கோவலன்ஜீகள் சலீம்கள் மீது அவப்பழியை சுமத்தி ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வை வளர்க்கிறார்கள்.

மயானக்கரையின் வெளிச்சம்.இப்புத்தகத்தில் உள்ள கதைகள் அனைத்தும். நிகழ்கால நிகழ்வுகள்.
ஒவ்வொரு கதையும் கண்ணீர் முடிவில்லாமல் முடிக்கமுடியவில்லை. நடக்கும் அத்தனை கொடூரங்களையும் அமைதியாய் கடக்கும் பொது மனசாட்சியை கண்டிப்பாக தட்டி எழுப்பும்.
ஒரு சமூகத்தின் வலியை சொல்லி இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வை தாங்கி நிற்கவில்லை. சாதாரண உழைக்கும் மீது மதத்தின் பெயரில் வெறுப்புணர்வை கட்டவிழ்த்து விடப்பட்ட காட்சிகள். வாழ்வுக்கும் சாவுக்குமிடையே சம்பாத்தியம் என்று வாழும் சுழல் மாறி எப்படி தப்பித்து உயிர் வாழ போகிறோம் என்று அச்சப்பட்டு நிற்கும் எளிய மக்களின் வாழ்நிலை.. அந்த மக்களை சொந்த வாழ்நிலத்திலேயே அகதிகாளாய் உருமாற்ற நடக்கும் கொடுமைகள்.

இந்த நாட்டில் எதோ ஒரு மூலையில் படுக்கொலையோ வன்கொடுமையோ நடக்கும் போது தன் மன அமைதியை இழந்து வருத்தப்படும் பொது சமூகத்தை.. மனிதவெறுப்புணர்வால் அச்சுறுத்தலால் தன்னை தற்காத்துக் கொள்ளும் சூழலுக்கு தள்ளி.. மதவெறி படுகொலைகளை பல்வேறு வழிகளில் அரசதிகாரம் துணைக்கொண்டு சங்கி கூட்டம் அரங்கேற்றி வரும் இந்த தருணத்தில் இப்புத்தகம் மிக அவசியமானது.

இக்கதைகள் படித்த எனக்கு தோன்றியதெல்லாம்
இந்த கதை அனைத்திலும் நாம் இருப்பது போலவும் நடக்கும் கொடூரங்களையும் அனைத்தையும் எதோ ஒரு காரணத்தால் வேடிக்கை பார்ப்பது போலவும்..மனசு உறுத்தியது.. ஆனால் தோழர் சம்சுதீன் கதையின் முடிவில் இப்படி முடித்திருப்பார்.” ஒரு பெரும் மக்கள் திரள் முகாமின் முன் கதவை உடைத்தெறிந்து உள்ளே நுழைந்தது..” ஆம் அந்த பெரும் மக்கள் திரளில் இப்புத்தகத்தை படிக்கும் நாம் இருப்போம்..

உங்களை ஆரத்தழுவி இறுக்க கைகளை பற்றிக்கொள்கிறேன் தோழர் சம்சுதீன் அவர்களே..
உங்களின் கடைசி பக்க பயோடேட்டா உங்கள் மீதான அன்பையும் மரியாதையையும் மேலும் உயர்த்தி நிற்கிறது.
உங்கள் தொழில் சுத்தியல் பிடிப்பதாயினும் உங்கள் ஆயுதம் பேனா என நிறுவித்து இருக்கிறேர்கள். எளிய மக்களின் வாழ்நிலை வலியை சொல்ல பெரும் கல்வியாளர் தேவையில்லை.. வலியை உணர்ந்தவர்கள் எழுத வரவேண்டும். நீங்க வந்திருக்கிறேர்கள் பெரும் மகிழ்ச்சி.. தொடந்து எழுதுங்கள். நன்றி.

நூல்: மயானக் கரையின் வெளிச்சம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:₹ 120
ஆசிரியர்: Samsu Deen Heera

mayanakarayin velitcham book review - book day website is branch of bharathi puthakalayam

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் *மயானக்கரையின் வெளிச்சம்* – கார்த்தி டாவின்சி

நூல்: மயானக் கரையின் வெளிச்சம் ஆசிரியர்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்  விலை: ரூ. 108 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mayanakaraiyin-vellicham-by-samsuthin-heera/ 7, இளங்கோ தெரு, தேனாம்பேட்டை, சென்னை -600 018. தொலை பேசி: 044 – 24332424 , 24332924 , 24356935…
mayanakarayin velitcham book review - book day website is branch of bharathi puthakalayam

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் *மயானக்கரையின் வெளிச்சம்* – சு.பொ. அகத்தியலிங்கம்

நூல்: மயானக் கரையின் வெளிச்சம் ஆசிரியர்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்  விலை: ரூ. 108 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mayanakaraiyin-vellicham-by-samsuthin-heera/ 7 ,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை , சென்னை -600 018. தொலை பேசி : 044 –…
நூல் அறிமுகம்:  எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் *மயானக் கரையின் வெளிச்சம்* – கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவின் *மயானக் கரையின் வெளிச்சம்* – கருப்பு அன்பரசன்

நூல்: மயானக் கரையின் வெளிச்சம் ஆசிரியர்: எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா வெளியீடு: பாரதி புத்தகாலயம்  விலை: ரூ. 108 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/mayanakaraiyin-vellicham-by-samsuthin-heera/ ஒருவரின் படைப்பு, அவரின் எழுத்து வாசிப்பவரின் மனதை கலைத்துப் போட வேண்டும்.. அவரின் மனதை சமன் குலைக்கச் செய்ய…