New Year begins with good signs Article in tamil Translated by Sa Veeramani. நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு - ச.வீரமணி

நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு – தமிழில்: ச.வீரமணி




[2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்களே நிறைந்திருந்தாலும், வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் விதத்தில் முடிவுற்றுள்ளது.]

விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தபோதிலும், மக்களுக்கு வெற்றிக்களிப்பை அளிக்கும் விதத்தில் முடிவுக்கு வந்தது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மார்ச் – மே மாதங்களுக்கிடையே மக்களை நாசப்படுத்தியது. மோடியும் அவருடைய அரசாங்கமும் கொரோனா வைரஸ் தொற்றை வென்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்தபோதிலும், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியபோது அதனை எதிர்கொள்ள நாடு தயாராக இல்லை. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். இவற்றில் பல பதிவு செய்யப்படவேயில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணறி இறந்த கொடுமையையும், ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்து சென்றதையும் உலகம் முழுதும் ஊடகங்களால் எடுத்துச்செல்லப்பட்டு நம் நாட்டின் அவலநிலையை உலகுக்குப் பறைசாற்றின. இவ்வளவு மோசமாக நாட்டு மக்களை நாசப்படுத்தியிருந்தபோதிலும்கூட இதற்காகப் பிரதமர் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேபோன்றுதான் தடுப்பூசிகள் சம்பந்தமாக, அவற்றைப் போதுமான அளவிற்குக் காலத்தில் கொள்முதல் செய்ததிலோ, நாட்டிற்குள்ளேயே உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவோ மற்றும் விரைவாக அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதிலோ ஏராளமான அளவில் குளறுபடிகள் செய்ததையும் பார்த்தோம். நாட்டில் முதன்முதலாக அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்கும் விலை வைத்து விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில், டிசம்பர் 31க்குள் (18 வயதுக்கு மேற்பட்ட) வயது வந்த அனைவருக்கும் இரு முறை தடுப்பூசிகள் (two doses of vaccines) முழுமையாகச் செலுத்தப்படும் என்று கூறியது. இது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிவோம். டிசம்பர் இறுதிக்குள், நாட்டிலுள்ள வயது வந்தவர்களில் 65 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 35 சதவீதத்தினர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்படாது விடப்பட்டுள்ளனர். நாட்டை விழுங்கப் போவதாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் இத்தகைய அவலநிலை நீடிக்கிறது.

மோடி அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து, மக்களுக்குச் செலுத்துவதற்கான, திட்டமிடுதலிலும், தயாரிப்பு வேலைகளிலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்விதத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதிலும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மோசமாக இருக்கும் காலத்தை, தன்னுடைய பிளவுவாத மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளவும் பயன்படுத்திக்கொண்டது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தனியாருக்குத் தாரை வார்க்க இலக்கு அறிவிக்கப்பட்டதையும் பார்த்தோம். இதனைத்தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டமும் (monetization of the public sector assets) அறிவிக்கப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு சொத்துக்களை விற்று சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்போகிறார்கள். இது, நாட்டின் துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில்வே பாதைகள், நிலம் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயலே தவிர வேறல்ல.

பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. நிதித்துறையில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டு தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கிறது. ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

மோடி அரசாங்கம் அம்பானிக்கும், அதானிக்கும் அப்பட்டமான முறையில் சலுகைகள் அளித்ததன் மூலம், அவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில்கூட மக்களிடம் மிகவும் அசிங்கமானமுறையில் கொள்ளை லாபம் அடித்ததைக் காட்டின. அம்பானியின் நிகர சொத்தின் மதிப்பு 2021இல் 92.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டன. மிகவும் அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்திய கோவிட் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில், அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களுக்குச் சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருந்ததன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்கள் வாங்கிவந்த சொற்ப வருமானங்களும் சரிந்து, பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளியது. மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளிய மற்றொரு காரணி, வேலைவாய்ப்பு சுருங்கியதால் வருமானங்கள் இழப்பு ஏற்பட்டதுமாகும். 2020-21 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதலாக வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 7 முதல் 8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தபின், அதன் அடையாளத்தையே சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் அதன் சட்டமன்ற இடங்களும் சட்டமன்ற இடங்களுக்கான மறுசீரமைப்பில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற இடங்கள் இவ்வாறு மறுசீரமைக்கப்பட்டு குறைக்கப்படுவது, அதன் பின்னர் தேர்தல்கள் நடத்துவது, அதன்பின்புதான் மாநில அந்தஸ்து என்னும் வரிசைக்கிரமம் அமித் ஷாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அங்கே மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைவிடுவதற்கான எண்ணமோ, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்திருப்பதை மீளவும் அளிப்பதற்கான எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.

பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் ஆட்சி செய்வதைப்போலவே, இப்போது வட கிழக்கு மாநிலங்களிலும் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தினரால் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கே ராணுவத்தின் ஆட்சி தொடர்வதற்காகவே வந்திருக்கிறது என்பதற்கான கடுமையான நினைவூட்டலாகும்.

இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு, ஒரு வலுவான ராணுவ அரசை நிறுவுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களால் அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளுடன் (external and internal enemies) போராட முடியும். உள்நாட்டில் அவர்கள் எதிரிகள் என்று கருதுவது முஸ்லீம்களைத்தான் என்பது தெளிவு. முஸ்லீம்களுக்கு எதிராக, வெறுப்பை உமிழ்ந்திடும் உரைகள், சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், சிறுபான்மையினரைக் குறி வைத்து பாஜக தலைவர்கள் குரைத்தல் திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின்காரணமாக பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்த பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் சமீபத்தில் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)எனக் குற்றஞ்சாட்டி, மதக் கலப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில், கிறிஸ்தவர்கள் மீது கவனம் திருப்பப்பட்டிருக்கிறது.

மதவெறியர்களால் முஸ்லீம்கள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரங்கள்மீது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இந்த ஆண்டில் கிறித்தவர்கள் மீதும் அவர்களுடைய தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் கூர்மையானமுறையில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிந்தது. இத்தகைய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் அன்றும் நடந்திருக்கிறது. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் அனுமதி வாங்கி நிதி வசூல் செய்துவந்த அன்னை தெரசா கருணை இல்லங்களுக்குக்கூட அவ்வாறு அளிக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

மொத்தத்தில், இந்த ஆண்டு, ஒன்றிய அரசாங்கத்தால் கோவிட் பெருந்தொற்று மிக மோசமானமுறையில் கையாளப்பட்டதையும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள்மீதான சுமைகள் ஏற்றப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதையும் பார்த்தது.

இவ்வாறு அடிமேல் அடிவாங்கிய மக்கள் இப்போது அவற்றை எதிர்த்துநின்று, திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக, ஏப்ரலில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டது. அஸ்ஸாமில் மட்டும்தான் அது மிகவும் குறைவான பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்படும் சண்டிகார் மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு நடந்த சமீபத்திய தேர்தலில், பாஜக தன்னுடைய பணபலத்தையும் அதிகாரபலத்தையும் இறக்கிவிட்டிருந்தபோதிலும், இந்துத்துவா அடிப்படையிலான மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதிலும், படுதோல்வி அடைந்தது. அங்கே, தனிப்பெரும் கட்சியாக மேலெழுந்துவந்துள்ள ஆம் ஆத்மி கட்சியிடம் மாநகராட்சியை இழந்தது.

மக்கள் மத்தியில் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அதிகரித்துவரும் பின்னணியில் பாஜக இத்தகைய தேர்தல் தோல்விகளைச் சந்தித்தள்ளது. 2021ஆம் ஆண்டு முழுவதுமே விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் ஆதிக்கம் செலுத்தியது. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி இருக்கிறது. தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓராண்டு காலத்திற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் எவ்விதத்தொய்வுமின்றிக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வந்த பின்னர், மோடி அரசாங்கம் இறங்கிவந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளின் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தின்முன்னே ஒன்றிய அரசாங்கத்தை சரணாகதி அடைய வைத்துள்ளது. இந்த வெற்றியானது உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் ஒன்றுபட்டுப் போராடினால், வெற்றி பெறுவது திண்ணம் என்பதேயாகும்.

விவசாய இயக்கம், கூட்டு நடவடிக்கைகளின்போது, தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமை வளர்ந்துகொண்டிருப்பதையும் பார்த்தது. இது எதிர்காலப் போராட்டங்களுக்கும், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்திற்கும் அடிப்படையாக அமைந்திடும். புத்தாண்டு இத்தகைய நல்லதொரு அறிகுறியுடன் துவங்குகிறது.

(டிசம்பர் 29, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Monetization (பணமாக்கல் - Panamakkal) Short Story By Jaypee. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

*பணமாக்கல்* சிறுகதை – ஜேப்பி



டேய் சோமாரி…

ஓனர் என்னய அப்படித்தான் கூப்புடுவாரு, மாரிங்கிறத சோமாரியாக மாத்தி. எனக்கு என் பேரு அடியோட புடிக்காம போனதுக்கு இவரு தான் காரணம்.

இன்னிக்கு சம்பளம் தருவாருன்னு சொல்லிருக்காங்க. நானும், மாடசாமியும் (இவனை மாடு என்று அழைப்பார்) ஓனர் ரும் வாசல்ல இரண்டு மணி நேரமா தவம் கிடக்கிறோம்.

டேய் வாங்கடா… முதலாளி கூப்பிடுறார்… மேஸ்திரி உள்ளே இருந்து குரல் கொடுத்தான்.

ஏண்டா களவாணிப் பயலுகளா… மூட்டையைத் திருடி விக்கிறீங்களோ…

இல்லைங்க என்றோம் இரண்டு பேரும்.

காவலுக்கு இருக்கச் சொன்னா… கக்கூஸ் போனீங்களோ.

பேச்சு வரல்ல. மேஸ்திரிதான் மூட்ட திருடுனாருன்னு சொன்னால், அவ்வளவுதான் கொன்னே போடுவான்.

போங்கடா… உங்களுக்கு இனிமே இங்க வேல கிடையாது.

முதுகு காட்டாம வெளிய வந்தோம்.

பின்னாலயே வந்தான் மேஸ்திரி. ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து போகச் சொன்னான். காட்டிக் கொடுக்காம இருந்ததுக்கு லஞ்சம். லஞ்சத்துக் கூட்டிக் கொடுன்னு கேட்க முடியுமா?

வேலை போவுறது, சம்பளம் கொறச்சு கிடைக்கிறது, திருட்டுப் பட்டம் கட்டப்படுறது இது எல்லாம் எனக்குப் புதுசா. வேல வாங்குறதுக்கும், வேல வாங்கிட்டு ஏய்க்கிறதுக்கும், பணத்தப் புடுங்குறதுக்கும் ஆயிரம் வழி இருக்குதுல்ல. இந்த வழியெல்லாம் தெரிஞ்சதுனால ஓனர் நிறையவும் மேஸ்திரி கொஞ்சங் கொறச்சும் பணம் வச்சிருக்காங்க. வழி தெரியாத என்ன மாதிரி மாடசாமி மாதிரி ஆளுங்கள்லாம் அன்றாடங் காச்சியா இருக்கோம்.

மாடசாமிதான் உடைஞ்சு போய்ட்டான்.

நான் சைக்கிளை எடுத்துக்கிட்டு கிராமத்துக்குக் கிளம்பினேன். மாடசாமி பின்னால ஏறிக்கிட்டான். ஒரு மணி நேரம் மிதிக்கணும். சட்டப் பையைத் தடவிப் பார்த்தேன், நூறு ரூபாய் இருந்தது.

போற வழியில முக்குத் தெருவுல மாடசாமி இறங்கிக் கொண்டான்.

மாடசாமி இறங்கிப் போன இரண்டாவது நிமிசம் சைக்கிள் செயின் அறுந்துருச்சு. இப்ப எங்க ஒட்ட வைக்கிறது. தள்ளிக்கொண்டே போனேன்.

வீட்டுக்குப் போக வேதனையாக இருந்தது. வீட்டுல அய்யா (எங்க அப்பாவ அப்படித்தான் கூப்புடுவேன்) முகத்த எப்படிப் பாக்குறது. கொஞ்ச நாள்ல நடந்த விசயங்கள்லாம் அவரப் புரட்டிப் போட்ருச்சு. இதில எனக்கு சம்பளம் கிடைக்கலன்னு எப்படிச் சொல்லுறது?

அய்யாவுக்கு வயசாயிடுச்சி, அறுபத்தி மூணு. விவசாயக் கூலியா இருந்து என்னையும் அக்காவையும் படிக்க வைக்க நினைச்சாரு. அக்கா ஏழோட நின்றுச்சு. கட்டிக் கொடுத்த பொறவு ஹோசூர் பக்கம் புருசனோட போயிருச்சு.

அய்யாவுக்கு தொடர் காய்ச்சல் வந்த வருசம் நான் ஆறாப்போட நிறுத்திட்டேன்.

நானும் கூலிதான். ஆனா விவசாயம் எங்க நடக்குது. எந்த வேலை கெடச்சாலும் செய்வேன், மூட்டை தூக்குறது, கல்லு உடைக்கிறது, தார் போடுறது. சாக்கடை அள்ளுறது கூட செய்வேன். உசுர விட முடியாது.

எங்க ஊரு தலைவரோட வயல்ல தான் அய்யா வேலை செஞ்சாரு. தலைவர் வயல் வேலைய நிறுத்திட்டு மில் போட்டுட்டாரு. பல வருசம் ஆச்சு. எல்லாம் மெசின் தான். மனுசனுக்கு கஞ்சி வேணும். மெசினுக்கு?

நிலம் வித்த போது, ஒரு துண்டு நிலத்த அய்யாவுக்கு கொடுத்தாரு தலைவர். அதுல தான் ஓரத்துல கூரை வேஞ்ச எங்க மண் வீடு.

வானம் பாத்த பூமி. தலைவரே ஒண்ணும் பண்ண முடியாம விவசாயத்த விட்டுட்டாருன்னா அய்யா மட்டும் எம்மாத்திரம். கிணத்துல இறைக்க மோட்டார் போட்டு கரண்ட் கனக்சன் வாங்குனது தண்டச் செலவாயிருச்சு.

அப்பத்தான் ஏதோ டவர் கட்டணும்… உங்க இடம் சும்மா இருக்குன்னு கேட்டாங்க, மாசம் ஆயிரம் இரண்டாயிரம் கிடைக்கும்னு சொல்ல, ஏதோ கிடைக்கட்டும்னு அய்யா ஒத்துக்கிட்டாரு. ஒண்ட ஒரு குடிசைதான் இருக்குதே. வத்துன கிணறு இருந்த இடத்த மூடி டவர் கட்டுனாங்க.

Monetization (பணமாக்கல் - Panamakkal) Short Story By Jaypee. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

டவர் கட்டி பல வருசம் இருக்கும். அப்போ நான் மச்சான் சிபாரிசுல ஹோசூர் பக்கத்துல ரோடு போடக் கூலிக்குப் போயிருந்தேன்.

டவர் கட்ட இடம் கொடுக்கலீன்னா… நல்லா இருந்திருக்குமோ?

இப்போ நிலம எல்லாம் மாறின பிறகு பழசப் பேசி என்ன பிரயோசனம்.

எல்லாம் டில்லியில அந்த மந்திரியம்மா ஆட்டி வச்சதுன்னு சொன்னாங்க.

கவர்மெண்டுக்கு செலவுக்கு காசில்லையாம். வீட்டை வித்து கஞ்சி குடிக்குற மாதிரி, கவர்மெண்டு சொத்து எல்லாம் வித்து, நாட்டுக்கு கஞ்சி ஊத்தப் போறாங்கன்னு மாடசாமி சொன்னான்.

நாட்டுக்கு கஞ்சி கிடைச்சுதான்னு எனக்குத் தெரியாது. ஆனா எங்க வீட்டுக்கு நோட்டீசு கிடைச்சுச்சு.

உங்க நிலப் பத்திரம் கொண்டு வாங்கன்னு கடிதாசு வந்துச்சு. டவர வேற யாரோ வாங்கிட்டாங்களாமே. அவங்க கிட்டே இருந்து வந்தது நோட்டீசு.

மண் குடிசைல தலைவர் கொடுத்த பட்டா பத்திரம் வீட்டு மண் கரஞ்ச மாதிரி நாலு வருசம் முன்ன பேஞ்ச மழைல எழுத்து கரைஞ்சிருச்சு.

கிணத்துல தண்ணி இருந்தப்போ தண்ணி எடுக்க மோட்டார் போட்டு கரண்ட் கனக்சன் எடுத்த கார்டு அய்யா பேர்ல இருந்துச்சு.

அதெல்லாம் பத்தாதுன்னு சொன்னாங்க. தலைவர் மவதான் ஏதோ கடிதாசி கொடுத்து சமாளிக்குறேன்னு சொன்னாங்க.

ஆனா, டவருக்கு ஏற்கனவே வந்துக்கிட்டிருந்த வாடகைய நிறுத்திப் புட்டாங்க. எப்பக் கிடைக்கும்னு தெரியல. வக்கீல் நோட்டீஸ் விடுணும்னு மாடசாமி சொல்லியிருக்கான்.

இது நடந்த கொஞ்ச நாள்ல இன்னோரு நோட்டீசு வந்திச்சு. டவருல இருந்து கரண்டு திருடுறோமுன்னு அதுல அபாண்டமா எழுதியிருந்தாங்க. கேட்டா டவர்ல வயர் தொங்குதுன்னாங்க. அய்யா அது கிரமத்துல டிவி பாக்குறவங்க கேபிள் வயர்னு பதில் போட்டோம். எங்களுக்குத் தான் கரண்டே கிடையாதே. குடிசைல விளக்கு எதுக்கு. இருக்குற ஓட்டைல நிலா உள்ள வந்துரும்ல.

அப்புறம் திரும்ப இன்னோரு நோட்டீசு வந்துச்சு. உங்க நிலம் விவசாய நிலமில்ல. டவர் வச்சு வாடகைக்கு விட்டிருக்கீங்க, பத்து வருச வரி பாக்கி ஃபைனு எதெல்லாமோ சேத்து பத்தாயிரம் கட்டுன்னிட்டு. மாடசாமி சித்தப்பா இதைக் கேட்டு கடுப்பாகிப் போனாரு. திருடனுங்க… முதல்ல டவர் கட்ட இடம் கொடுத்தா மானியம் தாரோம்னு சொல்லிட்டு, மானியமும் தாராம இப்ப பாக்கி இருக்கு கட்டுன்றானுவன்னு கம்பெனியத் திட்டுனாரு.

ஆனா, அய்யா மனசு உடஞ்சு போச்சு. நிலத்த விக்கலாம்னு புதுத் தலைவர்கிட்ட கேட்டாரு. ஆனா டவர் இருக்குற நிலத்த விக்கக் கூடாதுன்னு ஆர்டர் வாங்கியிருக்காங்கன்னு சொன்னாங்க. வித்தா டவர் கம்பெனிதான் வாங்குவாங்களாம். அதுவும் ஏதோ கணக்குச் சொல்லி பத்து இருபது கூடத் தேறாதுன்னு சொன்னாங்க.

வாடகை கிடைக்கல, நிலத்த வித்து பணமாக்கி சாப்பிடலாம்னா வழியில்ல.

சைக்கிள் செயின் பாதையில உரசிக்கிட்டே சத்தம் கொடுத்தது.

வீட்டு வாசல்ல கூட்டம். தாயி (முத்தாயி எங்க அம்மா) ஓ…ன்னு கத்தி அழுவுற சத்தம் அப்பத்தான் கேட்டுச்சு. மாடசாமி தங்கச்சி ஓடி வந்து அண்ணே அய்யா தூக்கு மாடிக்கிட்டாருண்ணே… என்று அழுதுக்கிட்டே சொல்லிச்சு.

சைக்கிளைக் கிடத்தி உள்ளார போவுறதுக்குள்ள போலீஸ் ஜீப் வந்துச்சு. டேய் மாரி… இங்க வாடா… சிகரெட்டை பத்த வச்சு உறிஞ்சிக்கிட்டே ஏட்டு கூப்பிட்டாரு.

சார்…

யார்ரா உங்க அப்பனக் கொன்னது. நீயா… இல்ல உங்க ஆத்தாவா…

எனக்கு வெலவெலத்துப் போனது.

ஏறுடா வண்டில…

தாயி கத்திக்கிட்டே வெளிய ஓடி வந்துச்சு.

ஏட்டு என்ன புடனில புடிச்சுத் தள்ளி வண்டில ஏத்துனாரு.

மாடசாமி லாக்கப்புல என்னயப் பாக்க வந்தான்.

மாரி… அய்யாவ உங்க நிலத்துல அடக்கம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க. அறுத்துப் பாக்கணுமாம், ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்ட்டாங்க. முத்தாயிக்கு பிரம புடிச்சிருச்சுன்னு சொன்னான்.

அப்பதான் பாத்தேன். மாடசாமியோட இரண்டு பேர் வந்திருந்தாங்க. இன்ஸ்பெக்டர்கிட்ட ஏதோ பேசி, பேப்பர் ஏதோ கொடுத்திட்டிருந்தாங்க.

ஏட்டு வந்து கதவத் தொறந்தான்.

டேய் மாரி… உங்க அப்பா சாவு எப்படி நடந்ததுன்னு தெரியுற வர உங்க கிராமத்த விட்டு இங்க அங்க நகரக் கூடாது.

மாடசாமியோட வந்த ரெண்டு பேரு பைக்கில என்னையும் அவனையும் ஏத்திக்கிட்டாங்க.

பைக்க நிறுத்தி இறங்குன போது பாத்தேன். சின்ன கல்லு கட்டடம். போர்டு மாட்டி இருந்துச்சு. செவப்பு நெறத்துல, ஆனா போர்டை யாரோ உடைக்க நினைச்சு பாதில விட்டுப் போயிருக்காங்கன்னு நினைக்கிறேன். வலது பக்கம் ..ங்கம்னு சில எழுத்து மட்டும் தெரிஞ்சுது. வாசல்ல ஒரு கொடிமரத்தை உடைச்சிருக்கானுவ யாரோ.

உள்ளார வாப்பா…

பெஞ்சுல நானும் மாடசாமியும் உக்காந்துக் கிட்டோம்.

போர்டை மட்டும் இல்ல உள்ளார வந்து பிளாஸ்டிக் நாற்காலி, மேஜை, சுவர்ல மாட்டியிருந்த படக் கண்டாடி எல்லாத்தையும் உடைச்சிருக்காங்க.

ஒரு பையன் உள்ளே வந்து அரை கிளாஸ் டீ கொடுத்தான்.

முத்தாயி என்ன பண்ணுது, என்ன குடிச்சிச்சோ தெரியலியே.

சட்டைப் பையத் தடவிப் பாத்தேன். ரூபாய் நெருடிச்சு.

அது என்ன ஆபீஸ்னு பாக்க ஆரம்பிச்சேன்…..சுவத்துல கண்ணாடி உடைஞ்ச படங்களப் பாத்தேன். பெரிய தாடியோட சிங்கம் மாதிரி ரெண்டு பேரு. இன்னோரு படத்துல தல வழுக்கையா சின்ன தாடியோட ஒருத்தர்.

படத்துல இருக்கிறவங்க என்னயவே பாக்குற மாதிரி தோணிச்சு. போலீஸ் பாக்குற மாதிரியில்ல. இது வேற ஏதோ… அய்யா என்னய பாசமா பாக்குற மாதிரி.

*************