ந.க.துறைவன் : கவிதைகள் kavithaigal by na.ka.thuraivan

ந.க.துறைவன் : கவிதைகள்


அலைகள் தெரியாத குளம்

நீர்மறைக்கும் ஆகாயத்தாமரைகள்
கரையில் மீன்பிடித் தூண்டில்காரன்.

*

பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மையை ஏமாற்றி
இரை தேடும் குருவிகள்.

*
எழுத்து ரூபம்
சொற்கள் அரூபம்
பேச்சினிடையே மௌனம்.
*

அழகு சிதைந்த மலைக்கோட்டை
யாருமற்ற பழைய அரண்மனை
உள்ளே விறகு வெட்டி.

*

மேகங்கள் பயணம்
எதையோ தேடி வானில்
அலையும் ஒற்றை பறவை.

*

இலைகள் மகிழ்ச்சி
வயல் நாற்றுகள் சிரிப்பு
வசந்த காலம்.

*

தவளைகள் நீண்ட உரையாடல்
மகிழ்ச்சி ஆரவாரம்
மழை குறித்து விமர்சனம்.

*

சூடான பால்
சர்க்கரை போட்டதும் மிதந்தது
உயிரற்ற எறும்புகள்.

*

கடந்து போகிறது காற்று
கடந்து போகிறது நிழல்
கடந்து போகிறது மனம்.

*
வாசலில் கோலம்
அழித்து விட்டு போகிறது
பால்காரன் சைக்கிள் டயர்.
*
அழகு மூலிகை வனம்
கொட்டும் அருவி
குரங்குகள் பருகும் குடிநீர்.

*

வாசலில் பூத்திருக்கு
சிவந்த செம்பருத்தி பூக்கள்
தெருவிற்கு அழகு.

‘மேலான’ மனிதப் பிறவி வந்தபின் ‘கீழான’ குரங்கு நீடிப்பது ஏன்..? – அ.குமரேசன்

‘மேலான’ மனிதப் பிறவி வந்தபின் ‘கீழான’ குரங்கு நீடிப்பது ஏன்..? – அ.குமரேசன்

“பூமியின் அனைத்து உயிரினங்களிலும் உயர்வானது மனித இனம்.” –இந்தக் கருத்து உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள், எல்லா உயிர்களும் கடவுளால் படைக்கப்பட்டவையே என்று நம்புகிறவர்கள் ஆகிய இரு தரப்பிலும் பெரும்பாலோருக்கு இருக்கிறது. அதன் காரணமாகவே, பரிணாம வளர்ச்சியை ஏற்றவர்கள், மிக…