Poet Na. Ve. Arul Two Poetries (தவம், மூச்சு) in Tamil Language. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நா.வே.அருளின் இரண்டு கவிதைகள்



தவம்
********

அப்படியான ஓர் எழுதுகோலுக்காகத்தான் தவமிருக்கிறேன்.
கடை கடையாய் ஏறி இறங்கியாச்சு
எந்த எழுதுகோலும் போதுமானதாயில்லை
அது ரொம்பவும் குட்டையாக இருக்கிறது
மேலும் மொண்ணையாக …
சொல் புத்திக் கேட்டுக்கொண்டும்
சுயதம்பட்டம் அடித்துக்கொண்டும்…
இறைந்து கிடக்கும் மண்டையோடுகளைப் புறக்கணித்து
அவற்றின்மேல் அமரும் வண்ணத்துப் பூச்சிகளுக்குக்
கூண்டுகள் தயாரித்துக்கொண்டும்…
அபலைகளின் இதயத்தை அலட்சியம் செய்தும்
காலில் தட்டுப்படும் சடலத்தைக் கண்டு கொள்ளாமலும்…
எந்த எழுதுகோலும் போதுமானதாயில்லை.

காலத்தை மீட்கும் கனவுகளுடன்
புடம் போட்டெடுத்த ஒரு புதிய எழுதுகோல்!
கிடத்தினால் …
தேசத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை
தொடுகின்ற நீளம்
ஒரு நதியைப்போல வளைந்து வளைந்து ஓடி
மரங்களின் சருகுகளைப் படகுகளாக்கி
மண்ணில் புரண்டு கடலில் கலக்க வேண்டும்
கடலை மையாய்ப் புசிக்க வேண்டும்

எழுதுகோல்
உழவனின் தோளில் கலப்பையாய்
பாட்டாளி கையில் ஸ்பேனராய்
தொட்டுத் தொட்டு எழுத இதயமே மைக்கூடாய்
காதலர்களின் கண்களாய்
கடைசி வரைக்கும் கழன்று விழாத
ஆறாம் விரலாய்…

இஸ்லாம் கூறும் ஜனநாயகம் ! - Sri Lanka Muslim

மூச்சு
********

ஜனநாயகத்தின் கூரை மீதேறிக் கத்தும்
கவிஞனுக்கு
புகைக் கூண்டில்
சடலத்தின் நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.

ஜனநாயகத்திற்கோ
தனது முகத்தைப் பார்த்துக்கொள்ள
பொருத்தமானதாக
ஒரு நிலைக் கண்ணாடி கிடைத்தபாடில்லை

நாற்காலிகளின் சர்க்கஸ் கூடாரத்தில்
கவிஞன் மிகப் பெரிய கோமாளியாக்கப் பட்டிருக்கிறான்.
அவன் மூக்கின் நுனியில் செருகப்பட்டிருக்கும் பூசணிக்காய்
தலையில் பல கூம்புகள் கொண்ட குல்லாய்
முகம் முழுதும் கறுப்பு வண்ணம்
வன்முறைகள் ஏவப்படும் வனவிலங்குகளின் ரணங்களை
மேலும் காயப்படுத்தும் கைத்தட்டல்கள்

எழுத பேனா எடுக்கையில்
தாளின் கோடுகள்
சிறைக் கம்பிகளாக மாறிவிடுகின்றன.

வட்ட வடிவிலிருக்கும் நாடாளுமன்றம்
மிகக் கனத்தத்
தூக்குக் கயிறாகக் காட்சியளிக்கிறது!

வழக்குத் தொடுக்கமுடியாத
வார்த்தைகளாகத் தேடி
கவிதை எழுத ஆரம்பித்தால்
நல்ல கிளிக் கவிஞனாகலாம்.

கல்லறையை உறுதி செய்துவிட்டு
எழுத வந்த கவிஞன்தான்
மக்களுக்கான
பொழுதுபோக்கு எலும்புக்கூடு

இப்படியான நெருக்கடிகளில்
எழுத நேர்ந்த கவிதைகளில்தான்
ஜனநாயகம் தன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது.

–நா.வே.அருள்

Kavithai Ula Poetry Series by Poet Na. Ve. Arul. Its Contains Many Types of Poets Poetry in a Different Way. Book Day And Bharathi Puthakalayam

கவிதை உலா 8: மன ஊரின் கவிதைக் குடிசைகள்- நா.வே.அருள்



மன ஊரின் கவிதைக் குடிசைகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கவிஞர்கள்

க. அம்சப்ரியா, ராம் பெரியசாமி, கோ. பாரதிமோகன், டீன் கபூர், கயல், அசோக்ராஜ்

சூட்சுமங்களை உள்ளடக்கிய சின்ன கவிதைகள் சிக்கனத்தின் செய்நேர்த்திகள். சொல்ல வந்ததைச் சுருக்கென்று சொல்லிவிடுகிற வசீகரமான வசியங்கள்; உள்ளத்தைக் கிள்ளும் வாய்த் துடுக்குகள். இலக்கை எய்தி இரையைக் கொத்திக் கொள்கிற சுருக்கச் சொல்லம்புகள்.

பூமி முழுவதும் ‘பொய்’களின் புல்வெளிகள். வசீகரமான ‘வஞ்சகப்’ பூக்கள். படபடக்கும் ‘துரோகங்க’ளின் பட்டாம் பூச்சிகள். பெரிய பெரிய ‘பேராசை’ மரங்கள். காணவில்லை அறிவிப்புப் பலகையின் கீழே சின்ன எழுத்துகளில் பரிதாபமாக எழுதப் பட்டிருந்தது… உருவப் பொலிவிழந்த “உண்மை.”

வரிசை

இந்த வரிசைக்கு எப்படி வந்தேன்
என்று தெரியவில்லை
பின்னால் என்னைவிட உயரமாக
இரண்டு பொய்கள்
முன்னால் என்னிலும் வலுவான
நாலைந்து துரோகங்கள்
வஞ்சகம்தான் வரிசையை
நடத்திக் கொண்டிருந்தது
கட்டக் கடைசியில் பேராசை
நின்று தள்ளிக் கொண்டிருந்தது
நிற்க முடியாமல் விழுந்த
என்னைக் கண்டு எல்லாம் சிரித்தன
என்ன சத்தம் என்று வஞ்சகம்
திரும்பிப் பார்த்தது
உண்மை விழுந்துவிட்டது என்றது
என் பின்னாலிருந்த பொய்!

–அசோக்ராஜ்

சண்டை போடுவதற்காகவே வாய் திறக்கும் காதலன், சாளரத்தைச் சாத்துகிற காற்றுதானே? கண் இல்லாத காற்றே! முகத்தில் அடித்த மாதிரி மூடிவிடுகிற உன்னிடம் முணுமுணுத்து என்ன பயன்? காதலி பாவம் வெக்கையில் கரைந்து போகிறாள்…. ஆனாலும் காதலில் உறைந்து போகிறாள்!

நுட்பத்தில் நெய்த கைக்குட்டைதான் இந்தக் கவிதை….
வருகைக்காக வைக்கப்பட்ட சாளரத்தை
அறைந்து சாத்தியடியே வரும் காற்று
சந்தித்த மறு நொடி
நீ துவக்கும் பிணக்கு.

No description available.

–கயல்.

பிரபஞ்சத்தின் மிகப் பெரிய பேரிடரே “மானுடன்”தான் போலும். மரம்தான். மரம்தான். எல்லாம் மரம்தான். மறந்தான். மறந்தான். மனிதன் மறந்தான்.” பாகப் பிரிவினையின் போது பங்குக்கு வந்து விடுகிற பங்காளிகள் மாதிரி, பார்வையில் படாதவர்கள் எல்லாம் பயன்களை அனுபவிக்க மட்டும் பக்கத்தில் வந்துவிடுகிறார்கள். விதைக்காதவர்கள் அறுவடைக்கு வருகிறார்கள்….

“விதையிடவில்லை
முளைத்த காலம் தெரியாது
வளர்ந்த காலத்தில்
நீரூற்றவில்லை
மரமான பின்
எங்கிருந்தோ வந்தார்கள்
பொருத்தமான ஆயுதங்களோடு”

No description available.

–க. அம்சப்ரியா

அப்துல் ரகுமானைத் தொடர்ந்து ஏராளமான இளைய சக்திகள் கஸலைக் கையில் எடுத்திருக்கிறார்கள். கவிஞர் பாரதி மோகன் கஸல்களின் பேருந்தில் ஜன்னலோரப் பிரசன்னம்! அவை கஸல்கள் அல்ல; காதலின் கையெறிகுண்டுகள்! ஆனால் அவை காதலிக்கோ புளகிக்கும் பூச்செண்டுகள். எல்லோரும் விண்மீனைப் பார்த்துத்தான் வியந்துபோவோம். கவிஞன் கதையைத் திருப்பிப் போடுகிறான். விண்ணுக்கு வாய்க்காத நீர்மீன்கள்… அபாரம் கவிஞனே… இதோ….

கண்ணீர்த் துளிகளில் மையெடுக்கிறான் இந்தக் கஸல் கவிஞன்.

பெருகினாலென்ன கண்ணீர்
எனது கஸலுக்கான மை அது
உனது வேலையெல்லாம்
தீராத துயரைத் தருவதே
புதிதொன்றுமில்லை புகாரி
கள்ளித் தோட்டத்தில் அலையும்
காற்று என் காதல்
அண்ணாந்து மட்டுமே பார்க்கலாம்
விண்ணிற்கு வாய்க்காத நீர்மீன்கள்
வலையோ தூண்டிலோ
தக்கை மூழ்கினால்
முடிந்தது எல்லாம்

No description available.
–கோ. பாரதிமோகன்

ஹைகூவை மிகவும் லாவகமாகக் கவிதையில் வைத்து புள்ளியைக் கோடாக்குகிறான் ஒரு கவிஞன். ஜப்பானியக் கவி பாஷோவின் பரிமாணங்கள் தமிழ்க் கவிதையுலகில் தனக்கான இடத்தைப் பரவலாகத் தக்கவைத்திருக்கிறது. உதிர்ந்த பூவின் வண்ணத்துப் பூச்சியைப் பார்த்த கண்கள்தாம் இப்போது வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் வானவில்லைத் தரிசிக்கிறது. இறகு மனிதனுக்கு இறகு. காகங்களுக்கு காற்றில் சட சடத்து இறங்கும் சடலம்! வார்த்தைகளை வீழ்த்த வார்த்தைகளையே பயன்படுத்தும் விநோதம்தான் வாழ்க்கை! மனதிற்குள் கைநுழைத்துக் கண்டுபிடிக்கிறான் கவிஞன்.

வீழ்ந்து கிடந்த வண்ணத்துப் பூச்சியின் இறக்கையிலிருந்து
வானவில் எழுந்தது.

••••

மனிதன் யாதுமறியாது செல்கிறான்.
ஓர் இறகை உயிரென மதிக்கும்
காகங்கள் கரையத் தொடங்கின.

•••

நான்
நீ
என்ற பாகுபாட்டுடன்தான்
வாழ்கிறது
பிரபஞ்சம்.
சில வார்த்தைகள்
தப்பித்துக் கொள்வதற்காக
இன்னொரு வார்த்தையின் உதவியை நாடவேண்டி இருக்கிறது.

No description available.

–டீன் கபூர்

வாழ்க்கையை விதவிதமாகக் கவிதையில் ஓவியமாகத் தீட்டிவிடுகிறார்கள் நவீன கவிஞர்கள். அதிலொருவன்தான் ரணகளக் கவிஞன் ராம் பெரியசாமி. எந்தவிதப் புகார்கள் எழுதாமல் ஒரு மனு சமர்ப்பித்துவிடுகிற சாமர்த்தியம் நிகழ்கிறது ராம் பெரியசாமியின் இந்தக் கவிதையில். அய்யோ…. அம்மா…. பார்த்தீர்களா…. என்னே கொடுமை…. என்றெல்லாம் வியப்புக் குறி வார்த்தைகளை விலக்கிவிட்டு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறான். பாசி விலக்கித் தண்ணீர் குடிக்கிற பக்குவம். விளக்கமே தேவைப்பாடாத கவிதை… நம் மனசை விட்டு விலகவே விலகாத கவிதை!

ஒரு செருப்புடன்
வீட்டிற்கு வருகிறார் அப்பா…
குடம் ஓட்டையெனத்தெரிந்தும்
தண்ணீர் கொண்டு
வருகிறாள் அம்மா…
பொத்தான் இல்லாத சட்டையை ஊக்கு போட்டு
பள்ளி கிளம்புகிறாள் அக்கா..
பழைய சாதத்தை அடுப்பேற்றி
சொப்புச்சாமானில் சமைக்கிறாள் அம்முக்குட்டி.

No description available.

–ராம் பெரியசாமி

முந்தைய தொடர்களை படிக்க: 

தொடர் 1 :  கவி உலா – நா.வே.அருள்

தொடர் 2 : கவிதை உலா 2 – நா.வே.அருள்

தொடர் 3 : கவிதை உலா 3 – நா.வே.அருள்

தொடர் 4 : கவிதை உலா 4 – நா.வே.அருள்

தொடர் 5 : கவிதை  உலா 5 – நா.வே.அருள்

தொடர் 6 : கவிதை உலா 6 – நா.வே.அருள்

தொடர் 7 : கவிதை உலா 7 (சிலுவை ஆணிகள்) நா.வே.அருள்

Vasanthakumaran Poetry Sannatham Kavithai Thodar (Series 22) By Poet Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.

கவிதைச் சந்நதம் 22 – நா. வே. அருள்

குழந்தையும் தெய்வமும் ஒன்று அல்ல ******************************************* குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நினைத்தவர்களுக்குக் குழந்தைகளின் இன்னொரு உலகம் அதிர்ச்சியைத் தரும். அப்படித்தான், “குழந்தைகள் அன்பின் அவதாரங்கள் இல்லை” என்கிற கவிஞர் அப்துல் ரகுமானின் வாசகம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவரது…
கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்

கவிதைச் சந்நதம் 21 – நா. வே. அருள்

கேள்விகளை நீ கேட்கிறாயா? இல்லை நான் கேட்கட்டுமா? ****************************************************************** மனுசனைப் பார்த்து நாக்கைப் பிடுங்குறாப்போல நான்கு கேள்வி கேட்பது ஒரு ரகம். கடவுளைப் பார்த்து கவிதையாகக் கேள்வி கேட்கிறபோது அதில் ஒரு ரசம். எல்லாவற்றுக்கும் கடவுளை வேண்டுகிற மனிதர்கள்தான் கடவுளுக்கு வேண்டியவற்றையெல்லாம்…
Poetry Sannatham Kavithai Thodar (Series) By Na. Ve. Arul. Book Day Website is Branch Of Bharathi Puthakalaym.

கவிதைச் சந்நதம் 20 – நா. வே. அருள்

முகமற்ற காலம் ************************* முகங்கள் தொலைந்து போகின்றன. முகமூடிகள் ஆள்கின்றன. பிரச்சனை முகமூடிகளை அணியலாமா என்பதல்ல. பொருத்தமான முகமூடிகளைத் தேடிப் பிடிப்பதுதான். அணிந்து கொள்வதற்கு ஒருவனுக்கு இருந்த தயக்கத்தை இந்தச் சமூகம் சாகடித்துவிடுகிறது. சொல்லப் போனால் முகமூடி அணிந்தால்தான் உதடுகள் கோணாத…
நூல் அறிமுகம்: கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” – நா.வே.அருள்

நூல் அறிமுகம்: கவிஞர் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல” – நா.வே.அருள்

ஒரு சுற்று வாழ்க்கை ********************************* வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்……
கவிதைச் சந்நதம் 19 – நா.வே.அருள்

கவிதைச் சந்நதம் 19 – நா.வே.அருள்

கவிதை – நந்தன் கனகராஜ் -இன் “அதுவொன்றன்று” அசையும் பிம்பம் ************************** நகரத்தின் அலங்காரமான பகுதியொன்றில் ஒரு கழிவறையின் ஓவியத்தைப் போலத் தீட்டப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. தார்ச்சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒரு பூனையைப்போல மனிதம் சிதைந்துகிடப்பதைக் காட்சிப்படுத்துகிறது இக்கவிதை. எழும்பூர் உயிர்க்…
கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்

கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 15 – நா.வே.அருள்

சங்கு…திக்ரி…இந்தியா!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு விவசாயியின் தலைப்பாகை தேசியக் கொடியைப் போலவே புனிதமானது ஏனெனில் அவனது உடல் தன்மானக் கம்பம்! கொடிக்கயிறு… முறுக்கேறிய நடுமுதுகு நரம்பு!! கொடித்துணியோ அவனது உழைப்பைப் போலவே பட்டொளி வீசிப் பறக்கக் கூடியது. அவன் கம்பத்தின் கீழ்தான் அனைவரும்…