பொய் மனிதனின் கதை 6-ஜா. மாதவராஜ்

பொய் மனிதனின் கதை 6-ஜா. மாதவராஜ்



“பொய் சொல்லவும், ஏமாற்றவும் தூண்டுகிறது அதிகாரம்”
                                                       – சமூக உளவியலாளர் கெல்ட்னர்

”மோடி எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என நினைப்பார். இந்த இயல்பு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எதாவது ஒரு உச்சத்தில்தான் அவரால் இருக்க முடியும். எதிர்காலத்தில் ஒன்று அவர் பிரதமராக வருவார். அல்லது ஜெயிலுக்குப் போவார்” என்று குஜராத்தின் முன்னாள் முதல்வர் ஒருவர் தன்னிடம் சொன்னதாக ’கேரவான்’ பத்திரிகையின் எக்ஸ்கியூட்டிவ் ஆசிரியர் வினோத் ஜோஸ் 2012ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி எழுதிய கட்டுரையில் ஒரு தகவல் இருக்கிறது.

அந்த குஜராத் முன்னாள் முதல்வர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. மோடியை மிக நெருக்கமாக அறிந்தவர்களாகவும், சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களாகவும், குஜராத்தின் முன்னாள் முதல்வர்களாகவும் பின்னர் அவரது அரசியல் விரோதிகளாகவும் கேஷுபாய் படேலும், சங்கர்ஷின் வகேலாவும், சுரேஷ் மேத்தாவும் இருந்தார்கள்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் சாதாரண பிரச்சாரகராக இருந்து, குஜராத் மாநில பிஜேபியில் சேர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை உட்பட பல்வேறு யாத்திரைகளுக்கு வடிவம் கொடுத்தவராக செயல்பட்டு, குஜராத் மாநில இந்துத்துவ அரசியலில் முக்கியமானவராக உருவெடுத்து, ஆட்சி அதிகாரத்தில் மூக்கை நுழைத்து, அதனால் டெல்லிக்கு இடம் பெயர்க்கப்பட்டு, அங்கிருந்து குஜராத்தில் தன் இடத்திற்கான காய்களை நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் அறிவுரையின் பேரில் வாஜ்பாயால் முதலமைச்சராக்கப்பட்டு, உள்கட்சி எதிர்ப்புகளை எல்லாம் ஓரம் கட்டி, குஜராத்தில் பிஜேபியின் முகமாகி, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்திய பிரதம மந்திரிக்கான பிஜேபி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியின் அரசியல் பயணமெங்கும் வியாபித்திருப்பது ஒரே லட்சியம்தான். ‘அதிகாரம்!’

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Advani Nomination Gandhi Nagar

எல்லாவற்றையும் மறைத்து ‘டீ விற்ற பையன் நாட்டின் பிரதமராக..’ என்று மட்டும் மோடியை அறிமுகப்படுத்தும்போது அதில் அவருடைய உழைப்பு, அதிர்ஷ்டம், அர்ப்பணிப்பு, அனைவரையும் ஈர்க்கும் ஒரு அதிசயம் எல்லாம் அரூபமாக மக்களின் மனதில் தகவமைக்கப்படுகிறது.

குஜராத்திலும் பின்னர் இந்தியாவிலும் அரசு அதிகாரத்துக்கு மோடி வந்ததும் சரி, பிஜேபி கட்சியிலும், இந்துத்துவா குழுமங்களிலும் சர்வ வல்லமை மிக்கவராக ஒரு இடத்தை அவர் பிடித்துக் கொண்டதும் சரி, தனித்தனி கதைகள் இல்லை. குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த சங்கர்சிங் வகேலா மற்றும் கேஷுபாய் பட்டேலில் இருந்து, இந்திய அரசியலில் செல்வாக்கு பெற்றிருந்த வாஜ்பாய் மற்றும் அத்வானி வரை பல அதிமுக்கிய அரசியல் தலைகள் மோடி கடந்து வந்த பாதையில் அங்கங்கு வீழ்ந்து போனார்கள். தாங்க முடியாத துரோகத்தை பார்த்த அதிர்ச்சி அவர்களின் கண்களில் தேங்கி இருந்தன. அந்த பெருங்கதையின் சுருக்கமே அதிர்ச்சி தரக் கூடியது.

1970களில் குஜராத்தில் சங்கர்சிங் வகேலாவும், கேசுபாய் பட்டேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் உறுப்பினர்களாக இருந்து இந்துத்துவாவை மக்களிடம் கொண்டு சென்ற இணை பிரியாத ஜோடிகளாய் அறியப்பட்டிருந்தார்கள். பின்னர் அவர்கள் ஜனசங் கட்சியிலும், பிஜேபி கட்சியிலும் பணியாற்றி குஜராத் அரசியலில் பிரபலமாகத் தொடங்கினார்கள். 1980களில் அதே போன்ற ஒரு இணை பிரியாத ஜோடிகளாய் நரேந்திர மோடியும், பிரவீன் தொகாடியாவும் குஜராத்தில் இந்துத்துவாவை வளர்ப்பதிலும் தங்கள் அமைப்புகளை வலுவாக்குவதிலும் வலம் வந்தார்கள். முன்னாள் பிஜேபி எம்.எல்.ஏ ஹரேஷ் பத், “இருவரும் ஒரே தட்டில் உணவு அருந்தும் அளவுக்கு நெருக்கமானவர்கள்” என ’தி வீக்’ பத்திரிகையில் சொல்லியிருந்தார். 1987ல் மோடி பிஜேபியில் இணைந்து மாநிலத்தின் அமைப்புச் செயலாளராகவும், கிட்டத்தட்ட அதே சமயத்தில் தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச்செயலாளராகவும் தத்தம் பாதைகளில் பிரிந்து, ’இந்துத்துவா’வுக்காக செயல்பட்டார்கள்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Advani ratha Yathra

’அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என்னும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கோஷத்தை 1989ல் பிஜேபி கையிலெடுத்தது. குஜராத்தின் சோமநாதபுரத்திலிருந்து அத்வானி ரதயாத்திரையை ஆரம்பித்தார். அதற்கான ஏற்பாட்டிலும், பயணத்திலும் மோடி முக்கிய பங்காற்றினார். அத்வானிக்கு மிக நெருக்கமானார்.

1991ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அத்வானியை எதிர்த்து பிரபல இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவை டெல்லியில் நிறுத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்தது. தேர்தலில் தனக்கு நிச்சயம் வெற்றி தரக்கூடிய நம்பிக்கையான தொகுதியை அத்வானி தேடியபோது குஜராத்தில் காந்திநகர் தொகுதியை அவருக்கு மோடி காட்டினார். அத்வானியின் நம்பிக்கைக்குரியவராய் மோடி உருவெடுக்கவும், காந்திநகர் தொகுதியில் ஏற்கனவே பிஜேபியின் எம்.பியாக இருந்த சங்கர்சிங் வகேலாவை குஜராத் அரசியலில் முக்கியமிழக்கச் செய்யவும் மோடி நகர்த்திய முக்கிய காய் நகர்த்தல் அது.

குஜராத்தில் 80களில் தொடர்ந்து நடந்த மதக் கலவரங்கள், தொகாடியாவின் வெறியேற்றும் பிரச்சாரம், அத்வானியின் ரத யாத்திரை எல்லாம் அம்மாநிலத்தை இந்துத்துவாவுக்கு இரையாக்கி இருந்தது. 1995ல் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. இரு முக்கிய தலைவர்களாய் இருந்த கேஷுபாய் பட்டேலுக்கும், சங்கர்சிங் வகேலாவுக்கும் அதிகாரப் போட்டி வெடித்தது. சங்கர்சிங் வகேலாவுக்கு மக்களிடமும், குஜராத் கட்சி அமைப்புகளிலும் செல்வாக்கு அதிகமாக இருந்த போதிலும் அத்வானியின் பரிந்துரையின் பேரில் கேசுபாய் பட்டேலே முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். மோடியின் அடுத்த காய் நகர்த்தல் அது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
The old friends are in a distance. Modi and Togadia.

கேசுபாய் பட்டேலிடம் தொகாடியாவுக்கும் செல்வாக்கு இருந்தது. குஜராத் காவல்துறையில் தொகாடியாவின் சிபாரிசில் பலர் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டனர். கேசுபாய் பட்டேல் முக்கிய அரசியல் ஆலோசனைகளை தொகாடியாவிடம் கேட்பது வழக்கமாயிருந்தது. அதே போல் மோடியும் கேசுபாய் பட்டேலிடம் தன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டார். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் கேசுபாய் பட்டேலுக்கும், மோடிக்கும் வேண்டியவர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது,

நிலைமைகளை கவனித்த சங்கர்சிங் வகேலா தனக்கான எம்.எல்.ஏக்களை சேர்த்துக் கொண்டு கேசுபாய் பட்டேல் அரசை கவிழ்த்தார். முதன்முதலாக ஒரு மாநிலத்தில் அமைந்த தங்கள் அரசைக் காப்பாற்ற டெல்லியிலிருந்து வாஜ்பாய் வந்தார். குஜராத் அரசியலில் இருந்து டெல்லிக்கு மோடியை வெளியேற்றவும், கேசுபாய் பட்டேலுக்கு பதிலாக ’நடுநிலையாளராக’ கருதப்பட்ட சுரேஷ் மேத்தாவை முதலமைச்சராக்கவும் வாஜ்பாய் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் வகேலா சமரசத்திற்கு வந்தார்.

பிஜேபியின் தேசீய செயலாளராக மோடி டெல்லியில் பிஜேபி அலுவலகத்தில் நுழைந்தார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், பிஜேபிக்குமான உறவைப் பேணி பராமரிப்பது மோடியின் காரியமாக இருந்தது. அங்கிருந்து வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களின் காதுகளில் பேசிக்கொண்டே தனக்கான காய்களை நகர்த்தி வந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Modi with Keshubai patel shankarsinh vaghela

தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என சங்கர்சிங் வகேலா திரும்பவும் கலகம் செய்தார். பிஜேபியிலிருந்து வெளியேறி ’ராஷ்டிரிய ஜனதா கட்சி’ ஆரம்பித்தார். காங்கிரஸோடு இணைந்து ஒரு வருடம் போல முதலமைச்சராக இருந்தார். பின்னர் நடந்த தேர்தலில் தோற்று முக்கியமற்றவராகிப் போனார். மோடியின் பாதையில் விழுந்த பிரபல தலை அது.

1998ல் மீண்டும் கேசுபாய் பட்டேல் முதல்வரானார். கேசுபாய் பட்டேலுக்கு எதிராக டெல்லியிலிருந்தபடியே மோடி காய் நகர்த்தினார். 2000ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பமும், நிவாரணப்பணிகளில் அரசு காட்டிய மெத்தனமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. வேறொரு புதிய முகத்தை களம் இறக்கி மக்களை சமாதானப்படுத்தும் தங்களுக்கே உரித்தான பாணியை பிஜேபி கையாண்டது. அடுத்த முதலைச்சர் தொகாடியாவா, மோடியா என்று கூட பேச்சு வந்தது. டெல்லியிலிருந்த மோடி குஜராத்திலிருந்த தொகாடியாவை முந்தினார். ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை, அத்வானியுடனான ஆலோசனைக்குப் பின் மோடியை குஜராத் முதலமைச்சராக வாஜ்பாய் அறிவித்தார். கேசுபாய் பட்டேல் என்னும் அடுத்த தலை வீழ்ந்தது.

2001 அக்டோபர் 7ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பதவி ஏற்றார். ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் நின்று அவர் வெற்றி பெற்றாக வேண்டிய நிலைமை ஆனது. கேசுபாய் பட்டேலுக்கு அடுத்தபடி கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்ற தலைவராக உருவெடுத்திருந்த, உள்ளாட்சித்துறை அமைச்சராயிருந்த ஹரேன் பாண்டியாவிடம் அவரது எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை தனக்கு விட்டுத் தருமாறு மோடி கேட்டார். பாண்டியா மறுத்து விட்டார். ராஜ்காட்-2 தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று 2002 பிப்ரவரி 25ம் தேதி மோடி வெற்றி பெற்றார்.

அதிலிருந்து மிகச் சரியாக இரண்டாவது நாளில், 2002 பிப்ரவரி 27ம் தேதி கோத்ராவில் சபர்மதி ரெயிலின் 6வது பெட்டி எரிக்கப்பட்டது என்றும், அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள் என்றும் செய்திகள் பரவின. விஸ்வஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்புகள் முழு வேகத்தில் கலவரத்தில் இறங்கின. காவல்துறை வேடிக்கை பார்த்தது.

மனித உரிமை அமைப்புகள், உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கவும் விழித்துக் கொண்ட வாஜ்பாய் குஜராத் சென்று, “ராஜதர்மம் நடத்தப்பட வேண்டும்” என பத்திரிக்கையாளர்களிடம் தனது கண்டனத்தை மறைமுகமாகவும் சுருக்கமாகவும் தெரிவித்தார். அருகிலிருந்த மோடி வாஜ்பாயை உற்றுப்பார்த்து, “அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.” என்றார். வாஜ்பாயே வெலவெலத்துப் போன இடம் அது.

டெல்லிக்குத் திரும்பிய வாஜ்பாய், மோடி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என கட்சியின் உயர் மட்டத்தில் தனது நிலைபாட்டை தெரிவித்தார். லால் கிருஷ்ண அத்வானி அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, மோடி அரசு கலைக்கப்பட்டால், உதவிப்பிரதமராக இருக்கும் தானும் ராஜினாமா செய்வேன் என முரண்டு பிடித்தார். வாஜ்பாய் பின்வாங்கினார்.

கலவரங்கள் நடந்து முடிந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் நடந்த உண்மையறியும் குழுவிடம் ஹரேன் பாண்டியா சாட்சியம் அளித்ததாக ஒரு செய்தி கசிந்தது. கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட அன்றிரவு மோடியின் இருப்பிடத்தில் நடந்த ரகசிய கூட்டத்தில், “நாளை இதற்கு நீதி கிடைக்க வேண்டும், இந்துத்துவா சக்திகளின் பழிவாங்கலுக்கு காவல்துறையினர் குறுக்கே வரக் கூடாது” என்று மோடி சொன்னதாக பாண்டே சாட்சியத்தில் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிய வந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Haren Pandya death

அதனைத் தொடர்ந்து பிஜேபி கட்சித் தலைமையிடம் பாண்டியா குறித்து மோடி புகார் அளித்தார். அடுத்து வந்த குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாண்டியாவுக்கு எல்லீஸ்பிரிட்ஜ் தொகுதியை ஒதுக்க மோடி மறுத்தார். பதினைந்து வருடமாக அந்த தொகுதியின் வேட்பாளராக இருந்த பாண்டியா என்னும் பிராமணருக்காக கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸும் மோடியிடம் வலியுறுத்தியது. அதற்கு செவி சாய்க்காத மோடி, தனக்கு உடல்நலமில்லை என ஆஸ்பத்திரியில் போய் படுத்துக் கொண்டார். அவர் இல்லாமல் சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்த கட்சியின் மேலிடமும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பின்வாங்கியது. எல்லீஸ் பிரிட்ஜ் தொகுதி வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டது.

2002ல் குஜராத்தில் நடக்க இருந்த அந்த சட்டசபைத் தேர்தலின் போது இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து மோடியிடம், “உங்கள் அரசியல் லட்சியம் என்ன?” என்று கேட்கப்பட்டது. “நான் லட்சியங்கள் கொண்டவனில்லை. கொடுக்கப்பட்ட பணியைச் செய்யக் கூடியவன் மட்டுமே” என்று பதிலளித்தார்.

சரி, கதைக்கு வருவோம்.

பாண்டியாவை இழக்க விரும்பாத ஆர்.எஸ்.எஸ்ஸும் கட்சி மேலிடமும் அவரை பிஜேபியின் தேசீய செயலாளராக்கி டெல்லிக்கு வரவழைக்க முடிவெடுத்தது. டெல்லிக்கு புறப்பட வேண்டிய அன்று பாண்டியா அகமதாபாத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் தீவீரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபானும் , தாவூத் இப்ராஹிமும் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாக காவல்துறையினரால் சொல்லப்பட்டது. 12 பேர் கைது செய்யப்பட்டு 8 வருடம் கழித்து குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்ப்டாமல் விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் ரெயில் எரிப்பு வழக்கு போல பாண்டியாவின் கொலையும் மர்மமாகிப் போனது. மோடியின் பாதையில் வீழ்ந்த இன்னொரு அரசியல் தலையாகிப் போனார் ஹரேன் பாண்டியா.

2004ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி தோற்றது. இடதுசாரி கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகளின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. தோல்விக்கு முக்கிய காரணமாக ‘குஜராத் கலவரங்களை’ வாஜ்பாய் சுட்டிக்காட்டினார். அத்வானி உட்பட யாரும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. “புஷ்ஷைப் போல, ஏரியல் ஷரோனைப் போல இந்தியாவுக்கு மோடி வேண்டும்” என தொகாடியா கருத்து தெரிவித்தார். அசோக் சிங்கால் இறந்ததையொட்டி தொகாடியா விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவராகி இருந்தார் அப்போது. மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருந்தது. அடுத்து நடந்த பிஜேபி உயர் மட்டக் கூட்டத்தில் கூட்டத்தில் வாஜ்பாய் முக்கியத்துவம் இழந்ததோடு மட்டுமில்லாமல், தனித்தும் விடப்பட்டார். மனநிலை, உடல்நிலை எல்லாம் பாதிக்க அவரும் அரசியலில் இல்லாமல் போனார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 6) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Modi and Advani

அடுத்து இந்தியாவில் பிஜேபியின் முகம் என நினைத்துக் கொண்டு இருந்த மோடியின் குருவான அத்வானிக்கும் சோதனை வந்தது. தீவீர இந்துத்துவா தலைவராக அறியப்பட்டதாலும் பாபர் மசூதியை இடிப்புக்கு மூல காரணமாக இருந்ததாலும் தன்னை நாட்டின் பிரதமராக ஏற்றுக் கொள்ள மக்களும், கூட்டணிக் கட்சிகளும் முன் வரவில்லை என்பதை அத்வானியும் அறிந்திருக்க வேண்டும். மோடி தன் மீது படிந்துவிட்ட அதுபோன்ற களங்கத்தை துடைப்பதற்காக கார்ப்பரேட்களின் அரவணைப்பில் ‘குஜராத் வளர்ச்சி’ என மடை மாற்றிய நேரத்தில் அத்வானியும் வேறு விதமான முயற்சியில் ஈடுபட்டார்.

2005ல் பாகிஸ்தானுக்குச் சென்று, தான் பிறந்த இடத்தை பார்த்த கையோடு ஜின்னாவின் கல்லறைக்குச் சென்று, ”ஜின்னா மதச்சார்பற்ற தலைவர்” என்றும் “ஜின்னா இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்டவர்” என்றும் யாரும் எதிர்பாராத வார்த்தைகளை வெளிப்படுத்தினார். ஆர்.எஸ்.எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும், பிஜேபியின் தலைவர்களும் அத்வானிக்கு கண்டனம் செய்தனர். தனக்கு நெருக்கடியும் சோதனையும் வந்த போதெல்லாம் பக்க பலமாகவும், அரணாகவும் நின்ற குருவின் பக்கம் நிற்காமல் மோடியும் அத்வானிக்கு எதிரே போய் நின்று கொண்டார். இந்துத்துவ அமைப்புகளுக்கு நம்பிக்கையானவராகவும். அபிமானம் மிக்கவராகவும் வெளிப்படுத்திக் கொள்ள கிடைத்த தருணத்தை மோடி இழக்க விரும்பவில்லை.

கூடவே தன் பால்ய நண்பரும், இந்துத்துவா பாதையில் கூடவே பயணித்தவருமான தொகாடியாவை ஒரம் கட்டும் காரியங்களையும் கவனமாக செய்து வந்தார். குஜராத் கலவரங்களுக்குப் பிறகு தொகாடியாவை கலந்தாலோசிப்பது, அவருக்கு முக்கியத்துவம் அளிப்பது எல்லாவற்றையும் படிப்படியாக நிறுத்திக் கொண்டார். 2008ல் அகமதாபாத் சாலையை விரிவுபடுத்த ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த இந்துக் கோவில்களை இடிக்க மோடி உத்தரவிட்டபோது தொகாடியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மோடி சட்டை செய்யவில்லை.

தன்னை முன்னிறுத்துவதில் மிகுந்த கவனமாக மோடி காய்களை நகர்த்தி வந்தார். ‘வளர்ச்சியின் நாயகன்’ என்றும் ‘இந்தியாவின் நம்பிக்கை’ என்றும் கார்ப்பரேட்கள் அவரை ஏற்கனவே தங்களுக்கான பிரதமராக முன்னிறுத்த தொடங்கி இருந்தனர். இந்துத்துவா கூடாரத்தில் அத்வானி மட்டுமே மோடியின் பாதையில் குறுக்கே இருந்தார். என்ன நடக்கப் போகிறது என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. தொடர்ந்து அரசு அதிகாரத்தில் இருந்த மோடி சக்தி வாய்ந்தவராக காட்சியளித்தார். ஒரு காலத்தில் இந்தியாவையே அதிர வைத்த, சென்ற இடமெல்லாம் நெருப்பை பற்ற வைத்த அத்வானி அன்று மோடியின் முன்னே மிகவும் பலவீனமாகவும், பழைய மனிதராகவும் ஆகிப் போயிருந்தார். அவருக்காக ஒலித்த குரல்களும் முணுமுணுப்பாக மட்டுமே கேட்டன. பிஜேபியின் பிரதம வேட்பாளரை முடிவு செய்யும் கூட்டத்திற்கு செல்லாமல், ராஜினாமா கடிதம் எல்லாம் கொடுத்து சண்டித்தனம் செய்து பார்த்தார். எல்லாம் பரிதாபமான, அவலமான காட்சிகளாகிப் போயின.

இந்துத்துவா அமைப்பில் இருந்து வேறு ஒருவரை பிரதம வேட்பாளராக யோசித்துக் கூட பார்க்க முடியாதபடி மோடி தனித்துத் தெரிந்தார்.

2014 பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ’தி எக்கனாமிஸ்ட்’ பத்திரிகையிலிருந்து மோடியிடம் பேட்டி காணப்பட்டது. அதில் மோடி சொன்ன பதில்களில் ஒன்று: “நான் லட்சியங்கள் கொண்டவனல்ல. என் கடன் பணி செய்து கிடப்பதே.”

அன்றும் என்றும் ஒரே பொய்தான்.

Parents of students who committed suicide in NEET exam shed tears. நாங்க ஏழையா பொறந்தது தப்பா? அரசு பள்ளில படிச்சது தப்பா? - NEETஆல் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்

நாங்க ஏழையா பொறந்தது தப்பா? அரசு பள்ளில படிச்சது தப்பா? – NEETஆல் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்



#NEET #BJP #SFI

இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய ”நீட் எதிர்ப்பு மாநாடு 2021”

NEET என்னும் கொடூர தேர்வால் உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர்கள் கண்ணீர் பேச்சு…

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 5 – ஜா. மாதவராஜ்



“பொய்யையும், வஞ்சகத்தையும் விட
உலகில் எதுவும் சிறந்ததே”- லியோ டால்ஸ்டாய்

”கொலைகாரன் மோடி!”

2003 ஆகஸ்டில், லண்டனின் வடமேற்கில் அமைந்துள்ள விம்ப்லேவில் மோடி கலந்து கொண்டு இருந்த கூட்டத்திற்கு வெளியே கோஷங்கள் உக்கிரமாக எழுந்தன. அப்போது அவர் பிரிட்டனுக்கு ஒரு அழையாத விருந்தாளி. ”அரசு ரீதியாக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வரவில்லை. தனிப்பட்ட முறையில் வந்திருக்கிறார்” என தன் தரப்பை பிரிட்டிஷ் அரசு சொல்லி முடித்துக் கொண்டது.

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் மற்றும் வலிந்து அழைக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் மோடி பேசிக்கொண்டு இருந்தார். அடுத்த மாதம் குஜராத்தில் நடக்கவிருக்கும் ‘துடிப்பு மிக்க குஜராத்’ (Vibrant Gujarat) உச்சி மாநாட்டிற்கு அழைப்புகள் விடுத்துக் கொண்டு இருந்தார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
2003 Vibrant Gujarat Summit

2003ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி, ஆயுத பூஜை விடுமுறை நாட்களையொட்டி, ‘துடிப்பு மிக்க குஜராத்திற்கான’ உச்சி மாநாடு அகமதாபாத்திலும் சூரத்திலும் ஒரு சேர நடத்தப்பட்டது. அகமதாபாத்தில் இந்தியாவின் துணை பிரதமராயிருந்த அத்வானியும், சூரத்தில் ஒன்றிய நிதியமைச்சராய் இருந்த ஜஸ்வந்த் சிங்கும் துவக்கி வைத்தனர். குஜராத் மாநிலத்தில் தொழில், சுற்றுலா இரண்டையும் ஊக்குவிப்பதே அதன் நோக்கமாய் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டின் சில கார்ப்பரேட்களும், 48 நாட்டிலிருந்து பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் 14 பில்லியன் முதலீட்டிற்கு 76 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

’துடிப்புமிக்க குஜராத்தின்’ நோக்கம் அப்போது மேலோட்டமாகத்தான் பிடிபட்டு இருந்தது. ‘சகிப்புத்தன்மையற்ற’, ‘மதவெறி மிக்க’, ’பாசிசத்தன்மை கொண்ட’, ‘கலவர’ பூமியாகக் கருதப்பட்ட குஜராத் குறித்த அபிப்பிராயத்தை மாற்றுவதற்கும், நேர்மறை சிந்தனைகளை உருவாக்குவதற்கும் மோடி முயற்சிக்கிறார் என்று ஊடகங்கள் கோடிட்டு காண்பித்தன. தன் மீதும், தன் அரசு மீதும் மனித இரத்தத்தோடு படிந்திருக்கும் களங்கத்தை துடைப்பதற்கு மோடி செய்யும் வித்தைகள் என்று ஜனநாயக சக்திகளும், முற்போக்கு சக்திகளும் கருதின.

2003 லிருந்து 2019 வரை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ‘துடிப்புமிக்க குஜராத்தின்’ மாநாடுகள் நடத்தப்பட்டன. இந்திய கார்ப்பரேட்களோடு மிக நெருக்கமாகவும், அவர்களுக்கு உகந்தவராகவும் மோடி புதிய அவதாரம் எடுத்த தருணம் அந்த மாநாடுகளுக்கு ஊடேதான் இருந்தது. உருமாறி ‘வளர்ச்சி நாயகனாக’ தோன்ற ஆரம்பித்தது அப்போதுதான்.

மே.வங்கத்தில் இருந்த சி.பி.எம் தலைமையிலான அரசு, அம்மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக டாடாவின் நானோ கார் திட்டத்திற்கு அனுமதி அளித்த காலத்தையும் இங்கு சேர்த்து நினைவுகூர்வது, வரலாற்றை அதன் பரிமாணங்களோடு அறிய உதவியாய் இருக்கும். நிலத்திற்கு ஈடாக உரிய முறையில் நிவாரணமும், வேலைவாய்ப்புகள் போன்ற பரிகாரமும் வழங்க மே.வங்க அரசு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. சி.பி.எம்முக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மாவோயிஸ்டுகள், பிஜேபி எல்லாம் தனித்தனியாகவும், இணைந்தும் இயக்கம் நடத்தின. கம்யூனிஸ்டுகள் என சொல்லிக் கொண்டு கார்ப்பரேட்களுக்கு சோரம் போவதாகவும், மக்களை வஞ்சிப்பதாகவும் பிரச்சாரங்கள் நடந்தன. மக்களும் தங்கள் நிலம் பறிபோவதை ஏற்காமல் போரட்டங்கள் நடத்தினர். இறுதியாக டாடாவின் நானோ திட்டத்தை சி.பி.எம் தலைமையிலான மே.வங்க அரசு கைவிட்டது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
The Abandoned Singur Tata Nano Factory

உடனடியாக டாடாவின் நானோ திட்டத்திற்கு ’துடிப்புமிக்க குஜராத்தில்’ இடமளிப்பதாக மோடி அழைத்தார். 2008ல் டாடா மே.வங்கத்தில் இருந்து குஜராத்துக்குத் தாவினார். ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான பூர்வாங்க காரியங்கள் முடிவதற்கு குறைந்தது 90லிருந்து 180 நாட்களாகும். மோடி இரண்டே நாட்களில் அனுமதியளித்தார். அதிவிரைவாக எல்லாம் நடந்தன. ஒரு முணுமுணுப்பும் இல்லாமல் மிக எளிதாக குஜராத்தில் 1100 ஏக்கரில் டாடாவின் நானோ கார் தொழிற்சாலை செயல்படத் துவங்கியது.

2009ம் ஆண்டு நடந்த ‘ துடிப்புமிக்க குஜராத்’ உச்சி மாநாட்டில் ரத்தன் டாடா, “மோடியின் தலைமையில் வேறெந்த மாநிலத்தையும் விட குஜராத் நிமிர்ந்து நிற்கிறது.” என உச்சி முகர்ந்தார். 30000 கோடி திட்டத்திற்கு மானியம், 0.6 சதவீத வட்டிக்கு கடன், 15 சதவீத வாட் வரியிலிருந்து விலக்கு எல்லாம் சும்மாவா?

“குஜராத் தங்க விளக்கைப் போல் ஜொலிக்கிறது. தொலைநோக்குப் பார்வையும், பயன் தரக்கூடிய தலைமையும் கொண்ட மோடிக்கே இந்த பெருமைச் சேரும்” என்று முகேஷ் அம்பானி புகழ்ந்து தள்ளினார்.

“ஒற்றை ஆளாக மோடி குஜராத்தை சக்தி வாய்ந்த மாநிலமாக்கி இருக்கிறார். மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக குஜராத் திகழ்கிறது” என்றார் அனில் அம்பானி.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

“இந்தியாவே குஜராத்தை திரும்பிப் பார்க்கிறது. வளர்ச்சியை நோக்கி செலுத்தும் திறன் இந்த அரசுக்கு உள்ளது.” என்றார் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் மேனேஜிங் டைரக்டர் சாந்தா கோச்சார். (இவரும், இவரது கணவரும்தான் இப்போது 1875 கோடி பணமோசடி வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.)

1980களில் மஞ்சள் நிற பஜாஜ் ஸ்கூட்டர் வண்டியை அகமதாபாத் நகரத்தின் சாலைகளில் ஒட்டிக்கொண்டு குஜராத் அரசு அலுவலகங்களுக்குள் கடன் வாங்கவும், தொழில் துவங்கவும் அலைந்து கொண்டு இருந்த அதானி மோடியின் மிக நெருங்கிய நண்பராகி இருந்தார். அவரது கூரையைப் பிய்த்து மோடி கொடுத்துக் கொண்டு இருந்தார். இந்தியாவின் கார்ப்பரேட்களில் ஒருவராக அதானி வளர்ந்து கொண்டிருந்தார்.

மிக இள வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான மோடிக்கு, இந்திய முதலாளித்துவத்தின் ஆசியும்,. ஆதரவும் இல்லாமல் அதிகாரத்தைப் பெறவோ, தக்கவைத்துக் கொள்ளவோ முடியாது என்பது தெரிந்திருந்தது. 2008ம் ஆண்டு குஜராத் தலைநகரான அகமதாபாத்தில் சாலைகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பல இந்துக் கோவில்களை இடித்திட உத்தரவிட்டார். அம்பானி, அதானி, டாட்டா உள்ளிட்ட இந்திய முதலாளிகளின் நம்பிக்கைக்கு உரியவராய், அவர்களுக்கு மிகுந்த விசுவாசமானவராய் மோடி தன்னை உறுதிபடுத்திக் கொண்டார்.

விகாஸ், விகாஸ் என சதா நேரமும், செல்லும் இடமெல்லாம் மக்களிடம் வளர்ச்சி குறித்தே மோடி பேசினார். ”நாங்கள் வளர்ச்சியை நம்புகிறோம். அந்த வளர்ச்சியின் நன்மைகள் கடைகோடி மனிதனையும் சென்றடைய வேண்டும் என நம்புகிறோம். ஒரு நல்ல காரியத்தை செய்கிறோம்.” என்று மோடி பிரகடனம் செய்தார்.

24 மணி நேரமும் தடை இல்லாமல் மின்சாரம் கிடைக்கும் மாநிலம் என்றும், சாலைகள், போக்குவரத்து, தொழில்நுட்பம் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வளர்ச்சி கண்ட மாநிலம் என்றும் பெரும் அளவில் பிரச்சாரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. வந்த செய்திகளையும் தகவல்களையும் அப்படியே நம்பி ஃபார்வேர்டு செய்து கொண்டு இருந்தனர் நகரத்து இளைஞர்கள். முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழலும், உள் கட்டமைப்பும் கொண்ட மாநிலமானது. பூவுலகின் சொர்க்க பூமி என்று வேற லெவலுக்கு குஜராத் கொண்டு செல்லப்பட்டது.

என்னதான் குஜராத்தில் நடக்கிறது, ஏன் இப்படி குஜராத் முன்னிலைப் படுத்தப்படுகிறது என்று அரசியலறிந்தவர்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர். உண்மையில் குஜராத் வளர்ச்சி அடைந்திருக்கிறதா, மோடி சொன்னது போல் கடைகோடி மனிதனை வளர்ச்சியின் பலன்கள் சென்று அடைந்திருக்கிறதா என ஆய்வுகளும், விவாதங்களும் ஒரு புறம் ஆரம்பித்தன. வளர்ச்சி என்ற பெயரில் பொய்களும், நயவஞ்சகமும் அவிழ்த்து விடப்பட்டு இருப்பதெல்லாம் தெரிய வந்தன.

குஜராத்தில் தனிநபர் வருமானம் அதிகரித்து விட்டது என்று புள்ளி விபரங்கள் காட்டப்பட்டன. அதே வேளையில் தனி நபர் கடனும் கடுமையாக அதிகரித்து இருந்தது. மோடி முதலமைச்சரான போது குஜராத்திற்கு 6000 கோடி கடன் இருந்தது. அவர் முதலமைச்சராக இருந்த பத்து வருடங்களில் இந்த கடன் தொகை 182000 கோடியாக வளர்ந்திருந்தது. அதாவது குஜராத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 35000/- ருபாய் கடனோடுதான் உலகத்தை கண் திறந்து பார்க்க வேண்டியிருந்தது.

குஜராத்தின் நகர்ப்புறம் கண்ட வளர்ச்சிக்கும், கிராமப்புறம் கண்ட வளர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. அதுகுறித்து மோடியும், அவரது அரசும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பது புள்ளி விபரங்களில் அம்பலமானது.

நகர்ப்புறத்திலும் முஸ்லீம்களும் இந்துக்களும் அண்டை வீடுகளில் வசித்து வந்த நிலைமையெல்லாம் காணாமல் போயிருந்து. கலவரங்களால் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் வீடிழந்து, பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்திருந்தனர். அவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்குத் திரும்பவே முடியவில்லை. அரசு அவர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. நகர்ப்புறங்களில் அவலமான பகுதிகளில் ஒதுக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை இருந்தது.

தொழில் வளர்ச்சிக்காக கார்ப்பரேட்களுக்கு அள்ளி வழங்கிய அளப்பரிய சலுகைகளால், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு போதிய நிதியை அரசால் ஒதுக்கீடு செய்ய முடியவில்லை. ஊட்டச்சத்து குறைவால் இறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் குஜராத்தில் அதிகமாயிருந்தனர்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென், “குஜராத் தொழில் ரீதியாக முன்னேறி இருந்தாலும் சமூக ரீதியாக பின்னடைவை சந்தித்திருக்கிறது. குறைந்த கல்வி, குறைந்த ஆயுட்காலம், அதிகரித்திருக்கும் ஆண் பெண் பாகுபாடு, சமத்துவமின்மை, மோசமான சுகாதார அமைப்பைத்தான் காண முடிகிறது. தொழில்துறையில் காட்டும் அக்கறையும் வேகமும் மனித வளத்தின் மீது காட்டப்படவில்லை. இதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது” என மிகச்சரியாக சுட்டிக் காட்டினார்.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

ஊதிப் பெருக்கப்பட்ட ’துடிப்பு மிக்க குஜராத்’ குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும் பேச ஆரம்பிக்கும்போது நிலைமை கிட்டத்தட்ட கை மீறிப் போயிருந்தது. குஜராத்தைப் போல இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல மோடி ஒருவரால்தான் முடியும் என தொடர்ந்து கார்ப்பரேட் ஊடகங்கள் ஊத ஆரம்பித்தன. மோடி என்றால் யாரென்று அறியாதவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைத்தன. மெத்தப் படித்த இளம் தலைமுறையினரில் ஒரு பகுதியினரை என்ன ஏதென்று தெரியாமலே மோடி என்றவுடன் கையைத் தூக்க வைத்தனர். அதற்கு ‘மோடி அலை’, ‘மோடி அலை’ என அவர்களே பேரும் சூட்டிக் கொண்டனர். 2002ம் ஆண்டு குஜராத் குறித்த கொடும் நினைவுகள் எல்லாம் பழங்கதைகளாகவும், கெட்ட கனவாகவும் மங்கிப் போயின.

வளர்ச்சி என்பது புனிதச் சொல்லாகவும், மந்திரச் சொல்லாகவும் ஆகிப் போனது. வளர்ச்சிக்கு எதிராக சிந்தித்தாலும், பேசினாலும் துரோகிகள் போல சித்தரிக்கப்பட்டார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக அதன் பிரஜைகள் தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் சித்தம் கொள்வதே அறம் என்பதாக நம்ப வைக்கப்பட்டு இருந்தது.

நாட்டின் வளர்ச்சி என்பது ஸ்டாக் மார்க்கெட்டின் குறியிடுகளோ, வளர்ச்சி விகிதம் குறித்த பொருளாதார புள்ளி விபரங்களோ அல்ல. அந்த நாட்டில் வாழும் அனைவரின் வாழ் நிலையையும்,. அந்த குடும்பங்களின் முன்னேற்றங்களையும் சேர்த்துதான் வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக கணக்கிட வேண்டும்.

மக்களையும், உழைப்பவர்களையும் விலக்கி வைத்து, அவர்களை ஒரு பொருட்டாக கருதாமல் வளர்ச்சி, வளர்ச்சி என முன் வைக்கப்படும் கோஷங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை மட்டுமல்ல, அயோக்கியத்தனமானவை. அதன்மூலம் அடைகிற அதிகாரம் மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட்களுக்கானது மட்டுமே.

இப்படி குஜராத்திலிருந்து தனது அதிகார எல்லையை இந்தியாவுக்கு வளர்த்துக் கொண்துதான் மோடியின் ‘வளர்ச்சி’.

தனி நபரை விட இயக்கமும், சித்தாந்தமும்தான் பெரிது என சொல்லி வந்த ஆர்.எஸ்.எஸ் மோடியின் இந்த வளர்ச்சி குறித்து மௌனம் சாதித்தது. இந்துத்துவாவின் செல்வாக்கை அதிகரிக்கவும், இந்துத்துவாவுக்கான வெறியர்களை மேலும் உருவாக்கவும் மோடி அவர்களுக்குத் தேவைப்பட்டார். பிரதமர் பதவிக்காக காத்திருந்த அத்வானி ஓரம் கட்டப்பட்டார். மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

“அடுத்த பிரதமர் யார்?” பாராளுமன்றத் தேர்தல் என்றவுடன் இதுதான் முதல் கேள்வியாகவும், சுவாரசியம் நிறைந்த புதிராகவும் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் களம் பற்றி உரையாடுகிற அனைத்து ஊடகங்களிலும் ’அடுத்த பிரதமர் யார்’ குரல் திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. கருத்துக்கணிப்பு ஆய்வுகளும் ‘அடுத்த பிரதமர் யார்’ என்பதைக் குறிவைத்தே நடத்தப்படுகின்றன. அனைத்தும் கார்ப்பரேட்களின் பொம்மலாட்டம் என்பது மக்களின் சிந்தனைகளில் படிவதில்லை.

அந்தப் பிரதமரை ஒரு மகத்தான நாயகனாகவும், வானத்திலிருந்து தரையிறங்கி நம் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கப் போகிறவராகவும் ஒரு சித்திரத்தை முன்வைக்கிறார்கள். அதுகுறித்த மறுபேச்சோ, சிந்தனைகளோ, ஆராய்ச்சிகளோ எதுவும் அற்று எளிய மக்கள் அந்த ‘அவர்’ யாராக இருப்பார் என்று அறிந்துகொள்ள துடிக்கின்றனர். ஒரு‘தேவனின் வருகையை’ எதிர்பார்க்கின்றனர்.

அந்த நாயகனை ‘நீங்கள் தாம் தேர்ந்து எடுக்கப் போகிறீர்கள்’ என இரண்டு அல்லது மூன்று முகங்களை நீட்டுகிறார்கள். ‘அவர் அப்படிப்பட்டவர்’, ‘இவர் இப்படிப்பட்டவர்’ என பின்னணியில் குரல்கள் கேட்கின்றன. ஏற்பாடு செய்யப்பட்ட சிலர் வேகமாக அந்த முகங்களை நோக்கி கை நீட்டுகிறார்கள். மக்களும் தங்களை அறியாமல் அந்த முகங்களை நோக்கி கைகளை நீட்ட ஆரம்பிக்கிறார்கள். அந்த முகங்கள் பெரிது பெரிதாய் ஆகின்றன. ஒன்று மிகப் பெரிதாகிறது. அவரே ‘அடுத்த பிரதமர்’ ஆகிறார். ஒரு மாபெரும் தேசத்தின் மக்கள் தங்கள் மகத்தான ஜனநாயக் கடமையை ஆற்றிவிட்டதாக பெருமை பேசப்படுகிறது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 5) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History
Modi in Adani Plane

ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இப்படி ‘அடுத்த பிரதமர்’கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஐந்து வருடங்களில் அந்த பிரதமர்கள் தங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, தங்களை வாட்டி வதைத்து விட்டார் என்று மக்கள் தெரிந்துகொள்கிறார்கள். இங்கு தவறு செய்தது மக்கள் அல்ல. அப்பாவி மக்களை ஏமாற்றிய அந்த பிரதமர்தான். ஆனால் மக்களோ தாங்களும் தவறு செய்துவிட்டதாக உணர ஆரம்பிக்கிறார்கள். மக்களின் சம்மதத்தின் பேரிலேயே அனைத்தும் நடப்பதாக ஒரு மாபெரும் கண்கட்டி வித்தை இது.

2014லிலும் அந்த கேள்வி கேட்கப்பட்டது.

“அடுத்த பிரதமர் யார்?”

மோடி புறப்பட்டார்.

வளர்ச்சியினால் பலனடைந்த அதானியின் விமானத்தில் அவர் வானில் பறந்தார்.

வளர்ச்சியின் பலன் கிடைக்காத கடைகோடி மனிதர்கள் அங்கே கூடியிருந்தார்கள். மோடியின் வருகைக்காக அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அங்கும் மோடி பல பொய்களை சொல்ல வேண்டி இருந்தது.

முந்தைய தொடர்களை படிக்க: 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 4 – ஜா. மாதவராஜ்

The students union has the power to face the oppression of the majority - Tiruchi Siva. பெரும்பான்மையின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் வல்லமை மாணவர் சங்கத்திற்கு உண்டு - திருச்சி சிவா எம்.பி

பெரும்பான்மையின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் வல்லமை மாணவர் சங்கத்திற்கு (SFI) உண்டு – திருச்சி சிவா எம்.பி



#TiruchiSiva #NEET #BJP #SFI

இந்திய மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு 03.10.2021 திருச்சியில் நடத்திய ”நீட் எதிர்ப்பு மாநாடு 2021”

வாழ்த்துரை – திருச்சி சிவா எம்.பி, மாநிலங்களவை உறுப்பினர்

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE

Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC

To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below

https://thamizhbooks.com/

To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in

நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…

பெற 044 2433 2924

The story of the lying man (பொய் மனிதனின் கதை 4) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 4 – ஜா. மாதவராஜ்



“அம்பு போல் நேராக செல்கிறது உண்மை.
பாம்பு போல் நெளிந்து நெளிந்து செல்கிறது பொய்” – சுசி காசிம்

“அவர்கள் 60 பேரைக் கொன்றார்களா,  இல்லையா” என்று மோடி மேடையிலிருந்து கேட்கிறார்.

“ஆம், கொன்றார்கள்” என்கிறது கீழே நின்றிருக்கும் கூட்டம்.

“நாம் அவர்களைக் கொன்றோமா?” அடுத்த கேள்வி. 

“இல்லை” என பெரும் சத்தம்.

“நாம் அவர்கள் கடைகளுக்குத் தீ வைத்தோமா?”. 

“இல்லை”. 

“நாம் யாரையாவது கற்பழித்தோமா?”. 

“இல்லை”. 

“ஆனால் குஜராத்தின் எதிரிகள் குஜராத்தே தீப்பிடித்து எரிவதாகச் சொல்கிறார்கள்” என்று முடிக்கவும் கூட்டம் கோபம் கொண்டு கத்துகிறது.

“நாம் தீவீரவாதிகளா” என்று கேள்வி. 

“இல்லை” என கொந்தளிக்கிறது கூட்டம்.

“நாம் தீவீரவாதிகளானால்…” என்று நிறுத்தி கூட்டத்தைப் பார்க்கிறார் மோடி. நிதானமாய். சட்டென்று உச்சஸ்தாயில் அதி உக்கிரத்துடன்  “பாகிஸ்தான் உலக வரைபடத்திலேயே இருக்காது” என்று முடிக்கிறார். கூட்டம் கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு நடந்த சட்டசபைத் தேர்தலை ஒட்டி மோடியின் இந்த வெறியேற்றும் பொதுக்கூட்டப் பேச்சினை அப்படியே இயக்குனர் ராகேஷ் சர்மா அவரது ‘இறுதி தீர்வு” (Final Solution)  என்னும் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறார், 

மோடி குறிப்பிட்ட ‘நாம்’ இங்கே இந்துக்களின் குறியீடாகவும்,, ‘பாகிஸ்தான்’ என்பதை ’மூஸ்லீம்களின் குறியீடாகவும் பகுத்துப் பார்க்க ஆழமான சமூக அரசியல் ஞானமெல்லாம் தேவையில்லை. இந்தியாவை அப்படி அவர்கள் பழக்கி வைத்திருக்கிறார்கள்.

2002 பிப்ரவரி 27ம் தேதி  காலையில் கோத்ராவில்  சபர்மதி ரெயிலில் ஆறாவது கோச் எரிக்கப்பட்டதில், அயோத்திக்கு சென்று திரும்பி வந்த கரசேவகர்களில் 59 பேர் உடல் கருகி இறந்து விட்டதாக எங்கும் காட்டுத் தீயாய் செய்திகள் பரவின. நாடு முழுவதும் பதற்றம் தொற்றியது. கோத்ரா மாவட்ட கலெக்டர், “இது ஒரு விபத்து. திட்டமிட்ட சதியல்ல” என்றே முதலில் ஊடகங்களிடம் சொல்லி இருக்கிறார். அன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் ஆகாஷவாணியில் முதலமைச்சராக இருந்த மோடி, இந்த கொடிய சம்பவத்திற்கு பின்னால் ஐ.எஸ்.ஐயின் சதி இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே  ஐ.எஸ்.ஐ என்றும் பாகிஸ்தான் என்றுமே அவர் கூறி வந்தார். 

இது போன்ற பேச்சுக்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் அதே ஆவணப்படத்தில் காணலாம். 

வெளிச்சம் குறைந்த டிசம்பர் 15, 2002 இரவு வேளையில், பாரதீய ஜனதா கட்சியினரும், விஸ்வ ஹிந்து பரிஷத்துக்காரர்களும் குஜராத் சட்டசபை தேர்தலில் மோடி அரசு வெற்றி பெற்றதை ஆரவாரித்துக்  கொண்டாடுகிறார்கள். வாகனங்கள் அலறும் சத்தங்களின் நடுவே நின்று தலையில் காவித்துணி கட்டிய ஒருவன் “பி.ஜே.பியின் வெற்றி எனது வெற்றி” என்கிறான். பத்து வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் “கடவுளுக்கு நன்றி… முஸ்லீம் தாய்களை புணருங்கள்” என்கிறான்.

மோடியின் வார்த்தைகளையும், அந்த சிறுவனிடம் வெளிப்பட்ட வார்த்தைகளையும் சேர்த்துப் பார்த்தால் குஜராத் வன்முறைகளின் ஊற்றுக்கண்ணை அறிய முடியும். 60 பேரைக் கொன்றார்கள் என கோத்ரா ரயில் எரிப்பை, ஒட்டு மொத்த முஸ்லீம் மக்கள் மீதான இந்துக்களின் வெறுப்பாகவும், ஆத்திரமாகவும், வன்மமாகவும் முன்னிறுத்தியது யார் என்பது தெரியும். 

ரெயில் பெட்டியில் கருகிய கரசேவகர்களின் உடல்களை சட்ட விரோதமாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான ஜெய்தீப் படேல் வசம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போனவர்களின் உடல்களோடு ஊர்வலமாய் சென்று  பெரும் கூட்டமாக கலந்து கொண்ட இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலவரங்களும், வன்முறைகளும் வெடித்தது. முஸ்லீம் மக்கள் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். 

மனிதகுலம் அதிர்ச்சியோடு பார்த்த காட்சிகளும் நிகழ்வுகளும் தேசம் குறித்த நினைவுகளில் உறைந்தே இருக்கின்றன. கருகிய உடல்களும், வெட்டப்பட்ட மனித உறுப்புகளும், வாட்களின் முன்பு கதறி கையெடுத்துக் கும்பிட்ட கைகளும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களின் அலறல்களும் நிறைந்த பயங்கரமான நாட்கள் அவை.

2002 பிப்ரவரி 28ம் தேதியும் அப்படியொரு நாள்தான். குல்பர்க் சொஸைசிட்டியில் இந்து மத வெறிக் கும்பலால் முன்னாள் காங்கிரஸ் எம்.பி ஜாஃப்ரியும் 37 பேரும் வெறிகொண்ட இந்துத்துவ கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இறப்பதற்கு முன்பு காவல்துறைக்கும் முதலமைச்சர் மோடிக்கும் மாறி மாறி தங்களைக் காப்பாற்றுவதற்கு ஜாஃப்ரி கதறி போன் செய்திருக்கிறார். எந்த பதிலும் இல்லை. பாதுகாப்பும் கிடைக்கவில்லை. ஜாஃப்ரியின் துணைவியார் ஜாகியா தொடுத்த வழக்கில் மோடியும் முக்கிய குற்றவாளியாய் கருதப்பட்டு இருந்தார். 

வழக்கின் உண்மைகளை அறிய சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழு (Special Investigation Team – SIT ) அமைக்கப்பட்டது. குஜராத் முதலமைச்சராக அதிகாரத்தில் மோடி இருந்த காலங்களில்தான் சிறப்பு புலனாய்வுக் குழுவும் செயல்பட்டது. அதில் இருந்த முரண்பாடுகள், குளறுபடிகள், மேலோட்டமான விசாரணை, காலதாமதம் எல்லாம் பெருங்கதை. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை நடத்திய வர்மா கமிஷனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைகளுக்கு பொறுப்பானவராக சுட்டிக்காட்டப்பட்ட போலீஸ் அதிகாரியும், அதனால் தமிழ்நாடு அரசின் துறை ரீதியான நடவடிக்கைகளால் வெகு காலம் பதவி உயர்வு பெற முடியாமல் போனவரும், வாஜ்பாய் அரசினால் புத்துயிர்ப்பு அளிக்கப்பட்டு சி.பி.ஐ டைரக்டராக ஆனவருமான ஆர்.கே.ராகவன்தான் அந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது ஒரு கிளைக்கதை.

கோத்ரா சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் கழித்து சிறப்பு புலனாய்வுக்குழு 2010ம் ஆண்டு மோடியிடம் மொத்தம் 71 கேள்விகள் கேட்டனர். மோடியின் பதில்களில் அவர் எத்தகைய மனிதர் என்பது புலப்பட்டது.

SIT: கோத்ரா சம்பவத்தை முன்கூட்டியே திட்டமிட்டது என்றும், பாகிஸ்தான் சதி அதில் இருப்பதாகவும் அறிவித்தீர்களா? அப்படியென்றால் அதற்கு ஆதாரமுண்டா?

மோடி : நான் அப்படி எந்த வார்த்தைகளையும் சட்டசபையில் சொல்லவில்லை. ஆனால் ஊடகங்கள் என்னிடம் அதுகுறித்து சில கேள்விகள் கேட்டபோது, விசாரணை முடிவு தெரியாமல் எந்த முடிவுக்கும் வர முடியாது என தெரிவித்திருந்தேன் 

SIT-ன் கேள்விக்கு பதிலாய்ச் சொன்ன மோடியின் வார்த்தைகளுக்கும், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பொதுக்கூட்டத்தில் வெளிப்பட்ட மோடியின் வார்த்தைகளுக்கும் இடையே ஒளிந்திருந்தது பொய். 

தொடர்ந்த கேள்விகளிலும் மோடியின் மழுப்பலான பதில்களிலும் பல பொய்கள் நிறைந்திருந்தன.

சிறப்பு புலனாய்வுக் குழு: 27.02.2002 அன்று கோத்ரா ரெயில்வே ஸ்டேஷனில் சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் கோச் எரிக்கப்பட்டது எப்போது உங்களுக்குத் தெரியும்?

மோடி: 27.2.2002 அன்று காலை ஒன்பது மணி வாக்கில் அடிஷனல் சீப் செக்ரட்டரி  திரு. அசோக் நாராயணன் தகவல் தெரிவித்தார்.

சிறப்பு புலனாய்வுக் குழு: உடனடியாக உங்கள் எதிர்வினை என்னவாக  இருந்தது? அந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

மோடி: உள்ளாட்சித் துறை அமைச்சர் கோர்தான் ஜோடாஃபியா, அடிஷனல் சீப் செக்ரட்டரி அசோக் நாராயணன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசினேன். சட்டசபையில் பிரச்சினையாக எழும் என்பதால் அந்த சம்பவம் குறித்த உண்மைகளை கேட்டறிந்தேன். அந்த ரெயிலின் மற்ற பிரயாணிகளுக்கு மேலும் தாமதம் ஏற்பட்டால் பதற்றம் அதிகரிக்கும் என்பதால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவு பிறப்பித்தேன். கோத்ரா ஒரு பதற்றம் மிக்க பகுதி என்பதால், அங்கு ஊரடங்கு உட்பட நடவடிக்கைகள் எடுக்கவும், தேவைப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் சொன்னேன். 

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பந்தமாக மோடி தகவல் அறிந்தது காலை 9 மணி. மேற்கண்ட துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பேசியது காலை 10.30 மணி அளவில். அதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் மோடியின் தனி உதவியாளருக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேலுக்கும் இடையே  9.39க்கும் 9.41க்கும் இடையே இரண்டு தடவை தொலைபேசி அழைப்புகள் பதிவாகி இருந்தன. அந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தொடர்ந்த கேள்விகளில் உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

சிறப்பு புலனாய்வுக் குழு: விஸ்வஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப் படேல் உங்களுக்குத் தெரியுமா?  அவர் உங்களை கோத்ராவில் சந்தித்து, இறந்து போனவர்களை அகமதாபாத்திற்கு கொண்டு செல்லும் போது தானும் உடன் செல்வதற்கு அனுமதி கேட்டாரா?

மோடி: விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச்செயலாளர் ஜெய்தீப்பை எனக்குத் தெரியும். அவரை கோத்ராவில் சந்தித்தது ஞாபகமில்லை. இறந்தவர்களின் உடலை அகமதாபாத்திற்கு கொண்டு செல்வது குறித்த வழிமுறைகளை தீர்மானித்தது மாவட்ட நிர்வாகம். எனக்கு அது குறித்த விபரங்கள் தெரியவில்லை.

”ஞாபகமில்லை” என மோடி  உண்மைகளை சாதாரணமாக கடந்தார்.

அடுத்தது  தொடர் கலவரங்களுக்கு வித்திட்ட இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள். கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பில் இறந்த கரசேவகர்களுக்கு அகமதாபாத்தில்  நடந்த இறுதிச் சடங்கில் பெரும் கூட்டம் கலந்து கொண்ட காட்சியை ரெய்ட்டர் செய்தி நிறுவனமும், சில இந்துத்துவா அமைப்புகளின் இணைய தளங்களிலும்  பகிரங்கமாக வெளியிட்டு இருந்தன. 

காவல்துறை கண்ட்ரோல் ரூமில் (Police Control Room  – PCR) பதிவான தகவல்களில் பிப்ரவரி 28 காலை 11.58 மணிக்கு ஜந்தநகரிலிருந்து ஹட்கேஷ்வர் மயானத்திற்கு  10 உடல்கள் எடுக்கப்பட்டு ஐயாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேரோடு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்பது பதிவாகி இருந்து. 

Concerned Citizen Tribunal அறிக்கையின் 132ம் பக்கத்தில் பின்வருமாறு விவரிக்கப்பட்டு இருந்தது: ”கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் இறந்த பயணிகளின் உடல்கள் சாலை வழியாக அகமதாபாத்தில் உள்ள சோலா சிவில் மருத்துவமனைக்கு குதிரை வண்டியில் கொண்டு செல்லப்பட்டன. குதிரை வண்டிகளில் ராம சேவகர்கள் நிறைந்து இருந்தனர். இந்த செய்தியை ஒளிபரப்ப அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் பயன்படுத்தப்பட்டது மற்றும் உள்ளூர் ஆகாஷ்வாணி வானொலி நிலையம் அகமதாபாத்தில் குதிரை வண்டிகள் புறப்படும் நேரத்தை அறிவித்தது. இறந்த உடல்கள் சிவில் மருத்துவமனையை அடைந்தபோது, நாங்கள் பழிக்குப் பழி வாங்குவோம்” போன்ற வெறித்தனமான கோஷங்களை ராம சேவகர்கள் எழுப்பினர். அதிக மக்கள் அங்கு கூடியிருந்தனர்.”

இவ்வாறு வெறியூட்டப்பட்ட, கலவரம் தூண்டப்பட்ட நிகழ்வுகள் சம்பந்தமாகவும் மோடியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.

சிறப்பு புலனாய்வுக் குழு: கோத்ரா சம்பவத்தில் இறந்த ராமசேவகர்கள் மற்றும் வேறு சிலரும் அகமதாபாத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனரா?

மோடி: கோத்ராவில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் பதற்றம் அதிகரிக்க விடக்கூடாது என்பதில் அரசு கவனமாய் இருந்தது.  எனக்கு கிடைத்த தகவலின்படி காவல்துறையினர் இதில் முனைப்புடன் செயல்பட்டனர். இறந்தவர்களின் உடலை வாகனங்களில் எடுத்துச் செல்ல உறவினர்கள் சிலருக்கு வலியுறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள்  ஒத்துழைத்தார்கள். எந்த அசம்பாவிதம் இல்லாமல் அமைதியாக நடந்தது. அடையாளம் காண முடியாத உடல்களும், சட்ட ரீதியான விதிகளின்படி  அரசு ஆஸ்பத்திரியிலிருந்து 200  மீட்டர் தொலைவில் தகனம் செய்யப்பட்டன. எனவே இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. 

கிடைத்த ஆதாரங்கள், ஆவணங்களின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு கேள்விகளை எழுப்பி இருக்க முடியும். உண்மைகளை வெளிக்கொண்டு வருவதில் SIT கவனம் செலுத்தவில்லை என்னும் விமர்சனங்கள் மட்டுமே மிச்சமாகிப் போயின. இது போல கலவரங்கள் குறித்து வெளிவர வேண்டிய பல உண்மைகள் காணாமல் போயின. 

2013ல் வெளியான சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கையில் மோடி அப்பழுக்கற்றவராய் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து நாட்டின் பிரதம வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டார். வெற்றி பெற்றார். இந்திய அரசியலில் பாசிசப் போக்கு அதிகாரத்தை நோக்கி பாய முடிந்த சம்பவமாக ’கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட’ தருணம் அமைந்து விட்டது.

இவ்வளவுக்கும் மூல காரணமாக இருக்கும் – சபர்மதி ரயிலை கோத்ராவில் எரித்தது யார்? எப்படி எரித்தார்கள்? அவர்கள் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனரா? என்ன குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன? அவை நிருபீக்கப்பட்தா? தண்டனை வழங்கப்பட்டனரா?

அதுகுறித்த செய்திகள் முக்கியத்துவம் அளிக்கப்படாமலும் கவனம் பெறாமலுமே இருக்கின்றன. 

ரெயில் பெட்டி எரிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 31 பேரில் 11 பேருக்கு தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையிட்டில் அந்த 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கூட  ரஃபீக் ஹூசைன் பதுக் என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 

மிகப் பெரும் வன்முறைகளுக்கு வித்திட்ட  அந்த சபர்மதி எக்ஸ்பிரஸ்ஸின் 6வது பெட்டியை யாரெல்லாம் எரித்தார்கள். எப்படி எரித்தார்கள் என்பது முழுமையாக தெரியவில்லை. ரெயிலின் உள்ளிருந்துதான் தீப்பிடித்திருக்க வேண்டும், வெளியிலிருந்து தீப்படிக்க சாத்தியமில்லை என்ற ஆய்வு உண்மைகளும் இருக்கின்றன. ஜஸ்டிஸ் பானர்ஜி  கமிட்டி அறிக்கையில், “கோத்ரா சம்பவம் சதி அல்ல, விபத்து“ என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் கோத்ரா ரெயில் பெட்டி எரிப்பு சம்பவம் இன்று வரை மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.

மோடியால் திரும்பத் திரும்ப குறிப்பிடப்பட்ட ’சதி’ இன்னமும் நிரூபிக்கப்படமாலேயே இருக்கிறது.

அவர் குஜராத்தின் 14 வது முதலமைச்சராக  12 ஆண்டுகள் இருந்துவிட்டு, இந்தியாவின் 14வது பிரதம மந்திரியாக ஏழு வருடங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்

Corporates - False Bonds of Religious Fanatics - Sitaram Yechury. Article Translated by Sa. Veeramani. கார்ப்பரேட்டுகள் - மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு

கார்ப்பரேட்டுகள் – மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு | சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி



[1991இல் கொண்டுவரப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நாட்டு மக்களின் பல்வேறு தரப்பினரிடையே பல்வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் அனைத்துமே அதன் கொள்கைகள் குறித்துக் கடுமையான முறையில் விமர்சனம் செய்து வந்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி, கடந்த முப்பதாண்டுக்கால நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களின் தாக்கம் குறித்தும், இந்த சீர்திருத்தங்களுக்கும் எதேச்சாதிகாரத்திற்கும், இது இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்மீது விரிவான அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்தும், ஃப்ரண்ட்லைன் செய்தியாளர் டி.கே.ராஜலட்சுமிக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதன் சாராம்சம் வருமாறு:]

கேள்வி: நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இடதுசாரிகள் எப்போதுமே விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுக் கால அனுபவங்களைப் பார்க்கும்போதுஇது தொடர்பாக இடதுசாரிகள் கூறிவந்த விமர்சனங்கள் சரியானவையாகவே இருந்திருக்கின்றன என நீங்கள் கூறுகிறார்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக! நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் நோக்கம், லாபத்தை மையமாகக் கொண்டதேயொழிய, மக்களின் நலன்களை மையமாகக் கொண்டவை அல்ல. கடந்த முப்பதாண்டுக் கால நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் மக்களைப் பட்டினி போட்டு, வறுமையை அதிகப்படுத்தி, மக்களுக்கிடையே பொருளாதார சமத்துவமின்மையை அதிவேகமான முறையில் அதிகரித்து,  தங்களால் முடிந்த அளவுக்குக் கொள்ளை லாபம் ஈட்டுவது, அனைத்து நாடுகளிலுமே மக்களின் உள்நாட்டுத் தேவையில் கூர்மையான வீழ்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்திருக்கின்றன என்பதை இந்திய அனுபவங்களும், உலக அனுபவங்களும் காட்டியிருக்கின்றன. உலகப் பொருளாதார மந்தமும், மக்கள் மீது அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளும் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திற்குப்பின் மேலும் பன்மடங்கு அதிகமாகி அவர்கள் வாழ்வைச் சூறையாடுவது தொடர்கிறது. இது, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் கூறியிருப்பதை நினைவுபடுத்துகிறது. அதில் அவர், “தனக்கே உரிய உற்பத்தி உறவுகளையும், பரிவர்த்தனை உறவுகளையும் சொத்துரிமை உறவுகளையும் கொண்டுள்ள நவீன முதலாளித்துவ சமுதாயம் – இவ்வளவு பிரம்மாண்ட உற்பத்திச் சாதனங்களையும் பரிவர்த்தனை சாதனங்களையும் மாயவித்தைபோல் தோற்றுவித்துள்ள இந்த முதலாளித்துவ சமுதாயம் – தனது மந்திரத்தின் வலிமையால் பாதாள உலகிலிருந்து தட்டியெழுப்பி வந்த சக்திகளை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மந்திரவாதியின் நிலையில் இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் முப்பது ஆண்டுகள் என்பவை, விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்குச் சட்ட உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் போராடுவது தொடர்ந்து கொண்டிருக்கும் பின்னணியில் வந்திருக்கிறது. இவை நூறாண்டுகளுக்கு முன் பிரிட்டிஷார் கட்டாயப்படுத்தி அவுரிச் செடி (indigo plant) பயிரிடச் சொன்னதற்கு எதிராகப் பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் விவசாயிகள் நடத்திய சத்தியாகிரக போராட்டத்தினை நினைவுபடுத்துகின்றன. இவர்களின் கார்ப்பரேட் விவசாய முயற்சிகளும், மோடியின் பணமதிப்பிழப்பு காரணமாக சிறிய அளவிலான உற்பத்தி முறை அழிக்கப்பட்டதும், உணவுப் பற்றாக்குறையும் விரைவில் பட்டினிக் கொடுமை ஏற்படுவதற்கு இட்டுச் செல்லலாம்.

இந்தியாவில் பின்பற்றப்படும் பொருளாதார சீர்திருத்த நடைமுறைகள் சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்திற்குட்பட்ட தத்துவார்த்தக் கட்டமைப்பான நவீன தாராளமயத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாகும். இதன் நோக்கம் முதலாளித்துவத்தின் மிக மோசமான குணமான கொள்ளை லாபம் ஈட்ட வேண்டும் என்ற “மிருக உணர்வை” கட்டவிழ்த்துவிடுவதேயாகும். பொதுச் சொத்துக்களும் மற்றும் அனைத்துக் கனிம வளங்களும் மிகப்பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. நவீன தாராளமயம் உலக அளவிலும் இந்தியாவிலும் கார்ப்பரேட்டுகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன. இது அமல்படுத்தப்படுவது தொடங்கியதிலிருந்தே, பணக்காரர்கள் மீதான வரிகள் உலக அளவில் 79 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. 2008 நிதி உருக்குலைவு (financial meltdown) ஏற்பட்டபின், பில்லியனர்களில் பெரும்பாலானவர்கள் மூன்றாண்டுக் காலத்திற்குள்ளேயே தங்கள் செல்வத்தைக் கரையாது தக்கவைத்துக்கொண்டதுடன், 2018இல் அதனை இரட்டிப்பாகவும் மாற்றிவிட்டார்கள். இந்தச் செல்வத்தை இவர்கள் உற்பத்தி மூலம் ஏற்படுத்திடவில்லை. மாறாக ஊக வணிகத்தில் தில்லுமுல்லுக்களைச் செய்ததன் மூலமே ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்கள். அதனால்தான் உலக அளவில் ஆழமான அளவிற்குப் பொருளாதார மந்தம் ஏற்பட்டபோதிலும் அது பங்குச்சந்தை வர்த்தகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திட வில்லை.

மறுபக்கத்தில், உலக அளவில் வருமானம் ஈட்டக்கூடியவர்களில் 80 சதவீதத்தினர் 2008க்கு முன்பிருந்த நிலைக்குத் தங்களால் திரும்பமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஸ்தாபனரீதியான தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் மீதும் கடும் தாக்குதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 1979இல் வேலை செய்த தொழிலாளர்களில் நாலில் ஒருவருக்குத் தொழிற்சங்கங்களிலிருந்தார் என்ற நிலை இப்போது பத்தில் ஒருவர்தான் தொழிற்சங்கங்களில் இருக்கிறார் என்ற நிலைக்கு மாறியிருக்கிறது.

“நாம் இப்போது சமத்துவமின்மை தொடர்பாகப் பல அடுக்கு நிலையை அடைந்திருக்கிறோம்.  இப்போது ஒவ்வொரு நிமிடமும் பட்டினிச் சாவுக்கு அதிக அளவில் பலர் உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். ஜெப் பெசோஷ் போன்றவர்கள் பதினொரு நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் வானமண்டலத்திற்கு அனுப்புவதற்கு ராக்கெட்டுகளைத் தயார் செய்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் இங்கே  நாம் அநேகமாக ஒவ்வொரு நிமிடத்திலும் ஒருவரைப் பட்டினிச் சாவுக்குப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனை மனிதகுலத்தின்  சாதனை அல்ல மாறாக மனிதகுலம் மேற்கொண்டுள்ள முட்டாள்தனமான நடவடிக்கை,”  என்று ஆக்ஸ்பாம் இண்டர்நேஷனல் உலக சமத்துவமின்மைப் பிரச்சாரத்தின் தலைவரான (Oxfam International’s Global Head of Inequality Campaign) தீபக் சேவியர் ஜெஃப் பெசோசுக்குப் பேட்டி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பெரும் பணக்காரர்கள் வரிசெலுத்தாது ஏமாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டிருக்கும் அதே சமயத்தில் தொழிலாளர் வர்க்கத்தினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் பரிதாபகரமான முறையில் இறங்கியிருக்கிறார்கள்.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் அமெரிக்காவின் பில்லியனர்கள் 1.8 டிரில்லியன் டாலர்கள் அளவு பணக்காரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். கோவிட்-19 தடுப்பூசிகள் உற்பத்தி காரணமாக பிக் ஃபார்மா (Big Pharma) ஏகபோக நிறுவனத்தால் ஒன்பது புதிய பில்லியனர்கள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.

18 மாதங்களில் மத்திய வங்கிகள் (central banks), கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் உலகப் பொருளாதார நிலையைச் சரியான முறையில் மிதக்கவிடுவதற்காக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 834 மில்லியன் டாலர்கள் என்ற விகிதத்தில் கடந்த 18 மாதங்களில் சுமார் 11 டிரில்லியன் டாலர்கள் செலவு செய்திருக்கின்றன. இது பெரிய அளவில் பங்குச்சந்தை வணிகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் மறு பக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி-பட்டினிக் கொடுமைகள் மற்றும் பற்றாக்குறை நிலையையும் ஏற்படுத்தி மக்களைத் துன்ப துயரங்களில் ஆழ்த்துவதும் அதிகமாகியிருக்கிறது-

பில்லியனர்கள் இவ்வாறு செயற்கையாக ஊதப்பட்ட பங்குச்சந்தை மீது சவாரி செய்து கொண்டிருக்கிறார்கள். பொருளாதார மந்தம் ஆழமான முறையில் ஏற்பட்டுள்ள இதுபோன்ற பங்குச்சந்தை வீக்கம் உண்மையில் ‘நீர்க்குமிழி’ போன்றதேயாகும். இது பொருளாதாரத்தை மேலும் மோசமான முறையில் அழிக்கக்கூடிய விதத்தில் வெடித்திடும். இதனால் பல நாடுகள் மேலும் மோசமான முறையில் பேரழிவினைச் சந்தித்திடும்.

நேரு கால சகாப்தமும் இன்றைய நிலையும்

கேள்வி: இடதுசாரிகள் எப்போதுமே 1980களுக்கு முன் நேரு கால சகாப்தத்தில் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்து வந்திருக்கிறீர்கள். இப்போதுள்ள பொருளாதாரக் கொள்கைகளை விமர்சிப்பதிலிருந்து முன்பு மேற்கொண்ட விமர்சனங்கள் எப்படி வித்தியாசமானவை?

சீத்தாராம் யெச்சூரி: நேரு கால சகாப்தத்தில் பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளையும் நாங்கள் கடுமையாக விமர்சித்திதோம் என்பது உண்மைதான். அப்போதைய விமர்சனம், அவர்கள்—அதாவது இந்திய ஆளும் வர்க்கங்களான – பெரு முதலாளிகளால் தலைமை தாங்கப்பட்ட ஒரு முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டணியால் பின்பற்றப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான பாதை என்பது சுதந்திரப் போராட்ட காலத்தின்போது அது மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் மற்றும் அபிலாஷைகளுக்குத் துரோகம் இழைக்கும் விதத்தில் அமைந்திருந்தது.  அவர்கள், வறுமை, பசி-பட்டினிக் கொடுமைகள், வேலையில்லாத் திண்டாட்டம், எழுத்தறிவின்மை ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக இவையனைத்தும் அதிகரித்தன. நேரு சகாப்த காலத்தில் “சோசலிச பாணி சமுதாயம்” (“socialist pattern of society”) என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு தம்பட்டம் அடிக்கப்பட்ட அதே சமயத்தில், எதார்த்தத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்னவென்றால், முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியேயாகும். முதலாளித்துவம் என்பது அதன் வரையறைக்கிணங்க, மனிதகுலத்தின் மீதான சுரண்டலை உக்கிரப்படுத்திக் கொள்ளை லாபம் ஈட்டுவது என்பதும் அதனை நோக்கி முன்னேறிச் செல்வது என்பதுமேயாகும்.

Corporates - False Bonds of Religious Fanatics - Sitaram Yechury. Article Translated by Sa. Veeramani. கார்ப்பரேட்டுகள் - மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு

இப்போதைய ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகள் மீதான விமர்சனம் என்பது முற்றிலும் வேறானதாகும். நேரு சகாப்தத்தின்போது பின்பற்றப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட கொஞ்ச நஞ்ச சாதகமான அம்சங்களும் இப்போதைய ஆட்சியாளர்களால் மிகவும் வேகமான முறையிலும் முரட்டுத்தனமான முறையிலும் அழித்து ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. திட்டக் கமிஷன் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்படுத்தப்பட்டமை, அவை பொருளாதாரத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்வதற்காகச் சுதந்திர இந்தியாவில் அடித்தளம் இட்டமை ஆகிய அனைத்தும் திட்டமிடல் என்னும் இந்தியாவில் ஒரு சுதந்திரமான பொருளாதார அடிப்படைக்கு அடித்தளமிட வேண்டும் என்ற நோக்கத்துடன் நம் “பொருளாதாரத்தை உச்சத்திற்கு” கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டமிடல் என்னும் கருத்தாக்கத்துடன் திட்டக் கமிஷன் மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டன. மோடி அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டுவரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் இவை அனைத்தையும் ஈவிரக்கமற்ற முறையில் அழித்துக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு இவர்கள் தொழில் நிறுவனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததன் மூலம் விவசாயத்தையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள் நம் நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்துவதில் ஒரு பங்கினைச் செலுத்தி வந்தது. அதன் மூலம் தனியார் மூலதனமும் பயனடைந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் இவ்வாறு தனியார் மூலதனத்திற்கு உதவி வந்த அதே சமயத்தில், இந்தியாவையும் மேற்கத்திய மூலதனத்திற்குத் துணைபோகாமலும் இந்தியாவை அவற்றைச் சார்ந்திருக்கும் நிலைக்கு மாற்றாமலும் இந்தியாவைப் பாதுகாப்பதில் அரண்போன்று நின்றன.  இந்தியாவின் சுதந்திரமான பொருளாதார அடித்தளங்களைப் பாதுகாத்திடவும், நம் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாத்திடவும் வேண்டும் என்கிற இத்தகைய புரிதலுடன்தான் இடதுசாரிகள் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இன்றையதினம் வந்திருக்கிறார்கள்.

இந்தியா ஒளிர்கிறதா அல்லது அவதியுறுகிறதா?

கேள்வி: பொருளாதார தாராளமயக் கொள்கைகள் காரணமாக மிகவும் அதிகமான அளவில் வருமானம் மற்றும் செல்வாதாரங்கள் வந்திருப்பதாக நம்புகிறவர்கள் இருக்கிறார்களே! உழைக்கும் மக்கள் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற மற்றொரு பக்கமும் இதற்கு இல்லையா?

சீத்தாராம் யெச்சூரி: நவீன தாராளமய சீர்திருத்தங்களின் விளைவுகள் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மிகவும் வேகமான முறையில் விரிவுபடுத்தியிருக்கின்றன. “ஒளிரும் இந்தியர்கள்” எப்போதும் “அவதிக்குள்ளாகியிருக்கும் இந்தியர்களின்” தோள்களில் உட்கார்ந்துகொண்டுதான் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.  “அவதிக்குள்ளாகியிருக்கும் இந்தியர்களின்” சீரழிவிலிருந்துதான் “ஒளிரும் இந்தியர்களுக்கான” வெளிச்சம் கிடைக்கிறது.

2020 மார்ச்சுக்குப் பின் இந்தியாவில் உள்ள 100 பில்லியனர்களின் மதிப்பு 12,97,822 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் முகேஷ் அம்பானி கொரோனா தொற்றுக் காலத்தில் ஒரு மணி நேரத்தில் பெற்ற ஆதாயத்தை ஒரு சாமானியத் தொழிலாளி ஈட்ட வேண்டுமானால் 10 ஆயிரம் ஆண்டுகள் உழைத்திட வேண்டும். முகேஷ் அம்பானி ஒரு நொடியில் ஈட்டும் பணத்தை ஒரு சாமானிய தொழிலாளி பெற வேண்டுமானால் அவன் மூன்று ஆண்டுகள் உழைத்திட வேண்டும். சமீபத்தில் வெளியாகியுள்ள சமத்துவமின்மை கிருமி (The Inequality Virus) என்னும் ஆக்ஸ்பாம் அறிக்கை இவ்வாறுதான் கூறுகிறது.

மறுபக்கத்தில், 2020 ஏப்ரலில் ஒவ்வொரு மணி நேரத்திலும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என்றும் தரவுகள் காட்டுகின்றன. இந்தியாவில் சமூக முடக்கக்காலத்தில் பில்லியனர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது இது 2009இல் இருந்த 422.9 பில்லியன் டாலர்களைவிட 90 சதவீதம் அதிகமாகும். உண்மையில், இந்தியாவில் உச்சத்தில் உள்ள 11 பில்லியனர்களின் செல்வம் கொரோனா தொற்றுக் காலத்தில் அதிகரித்துள்ளதை மட்டும் வைத்து, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் மக்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு வேலை கொடுக்க முடியும். அல்லது நாட்டின் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் பத்தாண்டுகளுக்கான பட்ஜெட்டை நிறைவேற்ற முடியும்.

உச்சத்தில் உள்ள 20 சதவீதத்தினரில் 93.4 சதவீதத்தில் இத்தகைய முன்னேற்றம் அடைந்த துப்புரவு வளங்களைப் பெற்றிருக்கிற அதே சமயத்தில், ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கும் 20 சதவீதத்தினரில் 6 சதவீதத்தினர் மட்டுமே தனிப்பட்ட முறையில் முன்னேற்றம் அடைந்த துப்புரவு வளங்களைப் பெற்றிருக்கிறார்கள்.

இன்றைக்கும் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 59.6 சதவீதத்தினர் ஓர் அறை அல்லது அதற்கும் குறைவாகவுள்ள இடங்களிலேயே வசிக்கிறார்கள்.

இந்தியா, உலக அளவில் மிகவும் குறைவான அளவே சுகாதார பட்ஜெட்டுக்கு செலவிடும் நாடுகளில் நான்காவது இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியாவில் உச்சத்தில் உள்ள 11 பில்லியனர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் மட்டும் அவர்கள் ஈட்டிய லாபத்தில் 1 சதவீதம் மட்டுமே வரி விதித்தால்கூட, அரசாங்கம் மக்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை அளிப்பதற்காக அறிவித்திருக்கும் ஜன் அபுஷாதி திட்டத்திற்கு (Jan Aushadi Scheme), இப்போத ஒதுக்கியிருக்கும் தொகையைவிட 140 மடங்கு தொகை ஒதுக்க முடியும், அதன்மூலம் ஏழை மக்களுக்கும் விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கும் அவர்கள் வாங்கக்கூடிய அளவிற்கு மருந்துகளை அளித்திட முடியும்.

கடந்த முப்பதாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், ஆட்சியாளர்கள் பின்பற்றிய கொள்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல், அதற்குப் பதிலாக, கார்ப்பரேட்டுகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுத்து, நாட்டில் பொருளாதார சமத்துவமின்மையைக் கூர்மையாக அதிகரித்திருக்கிறது. நாட்டில் இவ்வாறு செல்வத்தை உருவாக்குபவர்களை மதித்திட வேண்டும் என்று பிரதமர் மோடி நமக்குப் புத்திமதி சொல்கிறார். செல்வம் என்பது உழைக்கும் மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட மதிப்பின் பணமாக்கலே தவிர செல்வம் என்பது வேறு இல்லை. இவ்வாறு மதிப்பை உருவாக்குபவர்கள்தான், நம் மக்களின் ஒட்டுமொத்த செல்வத்திற்கும் காரணமாக இருக்கிற உழைப்பாளர்கள்தான், மதிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

திட்டக் கமிஷனை மோடி அரசாங்கம் ஒழித்துக்கட்டியதைத் தொடர்ந்து, நாட்டில் சுதந்திரத்திற்குப் பின்னர், மக்களின் வறுமை அளவினை அளவிடுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த, ஊட்டச்சத்து நெறிமுறைகளுக்கான அடிப்படை நடவடிக்கைகளும் கைவிடப்பட்டன.

ஒரு நபருக்கு ஊட்டச்சத்து தேவை குறித்த வரைமுறை (norm) நமது நாட்டில் கிராமப்புற மக்களுக்கு நபர் ஒருவருக்கு 2,200 கலோரிகள் என்றும், நகர்ப்புற மக்களுக்கு நபர் ஒன்றுக்கு 2,100 கலோரிகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 1993-94இல் தேசிய மாதிரி சர்வே மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த வரைமுறையின்கீழ் கிராமப்புறங்களில் கிராமப்புறங்களில் 58 சதவீதத்தினரும், நகரப்புறங்களில் 558 சதவீதத்தினரும், நகரப்புறங்களில் 57 சதவீதத்தினரும் இந்த வரைமுறையின்படி உணவு உட்கொள்ளாமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என்று காட்டுகிறது.  இதே நிறுவனம் பின்னர் 2011-12இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்த சதவீத அமைப்பு முறையே 68 என்றும் 65 என்றும் மாறியிருக்கிறது. இதற்கு அடுத்து இதேபோன்று இந்நிறுவனத்தின் சார்பில் 2017-18இல் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மோடி அரசாங்கம் இதனை வெளியே சொல்லக்கூடாது எனக்கூறி மறைத்துவிட்டது. இவ்வாறாக உலக அளவில் நிறுவப்பட்ட தரவுகள் தயாரிக்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் ஒழித்துக்கட்டும் வேலைகளில் மோடி அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. எனினும் ஊடகங்களுக்குக் கசிந்துள்ள தரவுகளிலிருந்து கிராமப்புற இந்தியாவில் உணவு உட்கொள்வது மட்டுமல்லாமல் உண்மையான நுகர்வு செலவினம் ஒவ்வொருவருக்கும் 9 சதவீதம் வீழ்ச்சி  அடைந்திருப்பதாகக் காட்டுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாத காலத்திற்கு முன்பே, கிராமப்புற இந்தியாவிலும், நகர்ப்புற இந்தியாவிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வறுமை நிலை மிகவும் மோசமாக மாறியிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப்பின் நிலைமைகள் மேலும் மோசமாக மாறியிருக்கின்றன.

இன்றையதினம், உலக பசி-பட்டினி அட்டவணை (Global Hunger Index), இந்தியாவை மிகவும் “ஆபத்தான வகையினத்தில்” (“serious category”) வைத்திருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 (NFHS-5),  ஊட்டச்சத்தின்மை, குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் அதிகரித்திருப்பதாகவும், குழந்தைகள் இறப்பும் (infant mortality), இதனுடன் தொடர்புடைய இதர அட்டவணைகளும் மிகவும் மோசமாக இருப்பதாகக் காட்டுகின்றன.

சமீபத்தில், உலக அளவிலான நிலையான வளர்ச்சி இலக்கு அட்டவணை (Global Index of Sustainable Development Goals), இந்தியாவை முன்பிருந்த நிலையிலிருந்து மேலும் இரண்டு இடங்கள் கீழே தள்ளியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Centre), கடந்த ஓராண்டில் இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை 60-இலிருந்து 134 மில்லியனுக்கு அதிகரித்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. சென்ற ஆண்டில் உலக ஏழைகள் அட்டவணைக்கு இந்தியா 57.3 சதவீதம் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. நம்முடைய மத்தியத்தர மக்களில் 59.3 சதவீதத்தினர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மீது இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தம்

கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது, இடதுசாரிகள் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக ஐமுகூ அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையைச் சிறிதுகாலத்திற்கு நிறுத்தி வைத்ததாக நம்பப்படுகிறதே! நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதிலிருந்து குறிப்பிடத்தக்க அளவிற்கு விலகி இருந்ததை ஐமுகூ கொள்கைகளைப் பிரதிபலிக்கிறதா?

Corporates - False Bonds of Religious Fanatics - Sitaram Yechury. Article Translated by Sa. Veeramani. கார்ப்பரேட்டுகள் - மத வெறியர்களின் கள்ளப் பிணைப்புசீத்தாராம் யெச்சூரி: ஐமுகூ அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்களை நிறுத்தி வைத்திடவில்லை. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நவீன தாராளமயக் கொள்கைகளை மட்டும் அது பின்பற்றியது.  இவ்வாறு இது நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றியதால்தான் இடதுசாரிக் கட்சிகள் அதற்கு வெளியிலிருந்துகொண்டு ஆதரவு அளித்து வந்தது. இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்பதற்காகவும், குடியரசின் அடித்தளங்களையே அரித்துவீழ்த்திடத் துடித்துக் கொண்டிருந்த மதவெறி சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலிருந்து தடுத்திட வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய ஆதரவு அதற்கு அளிக்கப்பட்டு வந்தது.   ஆம், இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே குறைந்தபட்ச பொது செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முத்திரை பதிக்கத்தக்க விதத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், வன உரிமைகள் சட்டம், உணவு உரிமை, நிலக் கையகப்படுத்துதல் தொடர்பாக ஒரு புதிய சட்டம், தகவல் உரிமைச் சட்டம், கல்வி உரிமை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன. இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் இல்லையெனில் இவையனைத்தும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது.

நம் அரசமைப்புச்சட்டம்  மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளையும், உத்தரவாதங்களையும் அளித்திருக்கிறது. இந்தியா வளர்வதால் இந்த உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களும் விரிவடையக்கூடிய விதத்தில் தொடர வேண்டும் என இடதுசாரிகள் உறுதியாக நம்புகிறார்கள். வேலை அளிக்கும் உரிமை, நம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இல்லை. ஆனால், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் கிராமப்புற மக்களுக்காவது குறைந்தபட்சம் வேலை உரிமையை உத்தரவாதம் செய்தது. இதனை அமல்படுத்திட ஆளும் வர்க்கங்கள் பல்வேறு வடிவங்களில் தில்லுமுல்லுகள் செய்தபோதிலும், கிராமப்புற வேலைவாய்ப்பு உரிமைக்கு இது கணிசமான அளவிற்கு உதவியது.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதே, இதேபாணியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதிச்சட்டம் ஒன்றும் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இடதுசாரிகள் வலியுறுத்தி வந்தார்கள். அதேபோன்றே நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் கல்வி ஓர் அடிப்படை உரிமை கிடையாது. ஆனால் அதனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். அதேபோன்றே தகவல் அறியும் உரிமைச் சட்டம், பழங்குடியினருக்கான வன உரிமைகள் சட்டம் போன்றவைகளும் மக்களுக்கான உரிமைகளாகவும் உத்தரவாதங்களாகவும் கொண்டுவந்தோம்.  இடதுசாரிகளின் நிர்ப்பந்தம் இல்லை என்றால் இவையனைத்தும், நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்களால், சட்டங்களாக வந்திருக்காது.

கேள்வி: நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் என்ன, அதற்கும் எதேச்சாதிகாரம் வளர்வதற்கும் இடையே தொடர்பு உண்டா?

சீத்தாராம் யெச்சூரி: 2014க்குப் பின் உருவாகியிருப்பது என்னவென்றால் கார்ப்பரேட்டுகளின் நலன்களும் மதவெறி அரசியலும் கலக்கப்பட்டுள்ள ஒரு நச்சுக் கலவையாகும். இது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுதல், பொதுத்துறை நிறுவனங்களைப் பெரிய அளவில் தனியார்மயமாக்குதல், கனிம வளங்கள் அனைத்தையும் தனியாரிடம் தாரை வார்த்தல் போன்றவற்றின் மூலமாகக் கொள்ளை லாபத்தை ஈட்டுவதற்கான கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். இது, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்சியாளர்களுக்கான கூட்டுக் களவாணிகளை உருவாக்கித் தந்திருக்கிறது, அரசியலில் ஊழலும் ஆறாகப் பாய்ந்துகொண்டிருக்கிறது. இத்துடன் மக்களின் ஜனநாயக உரிமைகள், குடிமை உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீதும் கண்மூடித்தனமான முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறுபவர்கள் அனைவரும் தேச விரோதிகள் என முத்திரைகுத்தப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் உள்ள தேசத் துரோகக் குற்றப்பிரிவு முதலானவற்றின்கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் வரமுடியாத அளவிற்குச் சிறைப்படுத்தப்படுகின்றனர். இவற்றின்மூலம் அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு அளித்துள்ள உத்தரவாதங்கள் அனைத்தும் அரித்து வீழ்த்தப்பட்டிருக்கின்றன.

இதனால்தான் உலகம், இந்தியாவை ஒரு “தேர்தல் எதேச்சாதிகார நாடு” (“electoral autocracy”) எனப் பிரகடனம் செய்திருக்கிறது. இந்தியாவிற்குச் சென்ற ஆண்டு 79ஆவது இடத்தை அளித்திருந்த உலகப் பொருளாதார சுதந்திர அட்டவணை (Global Economic Freedom Index), இந்த ஆண்டு 105ஆவது இடத்தை அளித்து மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதேபோன்றே இந்தியாவைச் சென்ற ஆண்டு 94ஆவது நாடாக குறிப்பிட்டிருந்த மனித சுதந்திர அட்டவணை (Human Freedom Index), இந்த ஆண்டு அதனை 111ஆவது நாடாகக் கீழிறக்கி இருக்கிறது. இந்தியாவைச் சென்ற ஆண்டு 129 என்று குறிப்பிட்டிருந்த ஐ.நா.மன்றத்தின் மனித வளர்ச்சி அட்டவணை (UNDP Human Development Index), இந்த ஆண்டு 131ஆவது இடத்திற்குத் தள்ளி இருக்கிறது. இவ்வாறு நம் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை வறியநிலைக்குத் தள்ளிக்கொண்டிருப்பதுடன், ஆட்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருக்கும் எதேச்சாதிகாரம் முசோலினி பின்பற்றிய பாசிசத்தின் அச்சுறுத்தும் தீய அறிகுறிக்கிணங்க “ஆட்சியில் கார்ப்பரேட்டுகளையும் கைகோர்த்துக்கொள்வதை” நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

கேள்வி: இப்போது கோவிட்-19இன் காரணமாக நவீன தாராளமயமும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறதே, இதன் எதிர்காலம் என்ன? இதற்கு மாற்று ஏதாவது…?

சீத்தாராம் யெச்சூரி: கொரோனா வைரஸ் பெருந்தொற்றும், அதனைச் சமாளித்து வெற்றிகொண்டு நம் மக்களின் உயிரையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்கும் அளவுக்கு நம் சுகாதாரக் கட்டமைப்புப் போதிய அளவுக்கு இல்லாததும் மிகவும் கூர்மையான முறையில் தோலுரித்துக் காட்டப்பட்டுவிட்டன. இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் ஆழமான பொருளாதார மந்தம் என்பது, உலக அளவில் பின்பற்றப்பட்டு வரும் நவீன தாராளமயக் கொள்கையின் ஒரு பகுதிதான். லாபம் ஈட்டப்படுவது எவ்விதத்திலும் குறையக்கூடாது என்பதற்காக, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊதியங்களை வெட்டுவதன் மூலமாகவும், வேலை நாட்களைக் குறைப்பதன் மூலமாகவும், மிகவும் முக்கியமாக, இந்தியாவில் செய்ததைப்போல ‘பணமதிப்பிழப்பு’ (‘demonetisation’) போன்ற நடவடிக்கைகள் மூலமாக சிறிய அளவிலான உற்பத்தியை ஒழித்துக்கட்டியதன் மூலமாகவும் இவ்வாறாக மக்கள் மீதான சுரண்டலைச் சாத்தியமான அனைத்து வழிகளிலும்  உக்கிரப்படுத்தி இருக்கிறார்கள். நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளுக்கிருந்த அனைத்து வாய்ப்பு வாசல்களையும் ஆக்கிரமித்த பின்னர் இப்போது கார்ப்பரேட்டுகளின் கொள்ளை லாப நோக்கத்திற்காக, ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதன் மூலமாக இந்திய விவசாயத்தையும் ஒழித்துக்கட்ட நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதில், நவீன தாராளமய சீர்திருத்தங்கள் திவாலாகிவிட்டன என்பது உலகம் முழுதும் இப்போது அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் மக்கள் மத்தியில் சமத்துவமின்மை மிகவும் அபாயகரமான முறையில் அதிகரித்துக்கொண்டிருப்பதைக் கண்டு “தி எகனாமிஸ்ட் (The Economist) இதழ் கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “சமத்துவமின்மை என்பது வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்க முடியும் மற்றும் திறமையற்றதாக இருந்திட முடியும் என்ற என்ற கட்டத்திற்கு வந்துவிட்டது.”

ஜோசப் ஸ்டிக்ளிட்ஷ் (Joseph Stiglitz), “சமத்துவமின்மையின் விலை” (“The Price of Inequality”) என்னும் தன்னுடைய நூலில் சமுதாயத்தில் உச்சத்தில் உள்ள 1 சதவீதத்தினரையும் மீதம் உள்ள 99 சதவீத மக்களையும் குறித்துக் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்திருக்கிறார்: “நம்முடைய பொருளாதார வளர்ச்சியை முறையாக அளந்தோமானால், நம் சமூகம் இப்போதுள்ளதுபோல் ஆழமாகப் பிளவுபடாதிருக்குமானால், இப்போதியிருப்பதைக்காட்டிலும் மிகவும் அதிகமானதாக இருந்திடும்.” (“Our economic growth, if properly measured, will be much higher than what we can achieve if our society remains deeply divided.”)

அனைத்து முன்னேறிய நாடுகளும், நவீன தாராளமயக் கொள்கைக்கு வெறுப்பை ஊட்டக்கூடியதாக இருந்தபோதிலும், தன் நாட்டு மக்களுக்கு ஊக்குவிப்புத் திட்டங்களை (stimulus packages) அறிவித்திருக்கின்றன. உள்நாட்டுத் தேவையையும் பொருளாதார நடவடிக்கைகளையும் புதுப்பித்திட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இவ்வாறு இவை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன. பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதனால்தான் அரசாங்கச் செலவினங்களை அதிகப்படுத்தியிருப்பதை நியாயப்படுத்தி சமீபத்தில் உரையாற்றியுள்ளார். “நான் ஒரு கம்யூனிஸ்ட் இல்லைதான், ஆனாலும்…” என்று கூறி இவ்வாறு பேசியிருக்கிறார்.

எனினும் மோடி அரசாங்கம் இதனைச் செய்ய மறுக்கிறது. தன்னுடைய கூட்டுக் களவாணி முதலாளிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்தபோதிலும், மக்களுக்கு ஊக்குவிப்பு திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார். மோடி அரசாங்கம் நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றுவதன் மூலமும், அதன் விளைவாக ஒட்டுமொத்த பணவீக்கம் ஏற்படுவதாலும், மக்கள் மீது சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்றியிருக்கிறது. இதன் காரணமாக உள்நாட்டுத் தேவை சுருங்கியிருக்கிறது, மேலும் பொருளாதார மந்தத்தை ஆழப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் உள்ள நாம், இத்தகைய சீர்திருத்தக் கொள்கைகளை மிகவும் ஆழமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும். நம் முன்னுரிமைகளை மாற்றியமைத்திட வேண்டும். வேளாண்துறையை வலுப்படுத்திட வேண்டும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் முதலீடுகள் செய்திட வேண்டும், பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும், நமக்கு மிகவும் தேவையான விதத்தில், நம் உள் கட்டமைப்பு வசதிகளைக் கூர்மையான முறையில் அதிகப்படுத்திட வேண்டும். இவற்றின் மூலமாக வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும், உள்நாட்டுத் தேவைகளை அதிகப்படுத்திட வேண்டும்.

Corporates - False Bonds of Religious Fanatics - Sitaram Yechury. Article Translated by Sa. Veeramani. கார்ப்பரேட்டுகள் - மத வெறியர்களின் கள்ளப் பிணைப்பு

கேள்வி: பாஜக, 1990களுக்கு முன்பிருந்தே பின்பற்றப்படும் நவீன தாராளமயக் கொள்கைகளைத்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறதே! நவீன தாராளமய சீர்திருத்தங்களை அது பின்பற்றும் விதம், இதர கட்சிகளைக் காட்டிலும் மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கிறதா?

சீத்தாராம் யெச்சூரி: பாஜக எப்போதுமே உள்ளொன்று வைத்துப் புறம்பொன்றுதான் தன்னுடைய இரட்டை நாக்குடன் பேசும். அது என்ன சொல்கிறது என்பதும், அது என்ன செய்கிறது என்பதும் இரண்டு முற்றிலும் வெவ்வேறான விஷயங்களாகும்.  ஆட்சிக்கு வருவதற்கு முன், தாங்கள் ஒரு தேசியக் கட்சி என்று கூறிக்கொண்டு, ‘ஸ்வதேசி’ என்ற முழக்கத்தை முழங்கி வந்தது. உலக வர்த்தக அமைப்பையும் எதிர்த்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தலைகீழாக மாறியது.

குறிப்பாக, 2014க்குப் பின்னர், பாஜக அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்களை மிகவும் மூர்க்கத்தனமாக அமல்படுத்திக்கொண்டிருக்கிறது. இத்தகைய மூர்க்கத்தனம் முன்பு அதற்கு இருந்ததில்லை. இதற்கு ஒரு காரணம் உண்டு. பாஜக என்பது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகும். ஆர்எஸ்எஸ் இந்தியாவில் தன்னுடைய வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் தன்மையிலான ‘இந்துத்துவா ராஷ்டிரம்’ என்னும் அமைப்பை நிறுவிட வேண்டும் என்கிற அரசியல் திட்டத்தையே எப்போதுமே பின்பற்றி வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்தபோது இதனை எய்திட அது தோல்வியடைந்ததன் காரணமாக இப்போது நம்முடைய அரசமைப்புச்சட்டத்தால் நிறுவப்பட்டுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை ஒழித்துக்கட்டிவிட்டு அதற்குப் பதிலாக அந்த இடத்தில் தன்னுடைய பாசிஸ்ட்  ‘இந்து ராஷ்டிரத்தை’ நிறுவிட வேண்டும் என்று உறுதியாகக் கோரிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அது தன்னுடைய குறிக்கோளில் வெற்றிபெற வேண்டுமானால் அதற்குச் சர்வதேச ஆதரவு தேவை. குறைந்தபட்சம் சர்வதேச சமூகம் அதனைக் கடுமையாக எதிர்க்காமல் அது பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்குச் சிறந்த வழி, நவீன தாராளமய சீர்திருத்தக்கொள்கைகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றுவதுதான் என அது கருதுகிறது.  உலக அளவிலான மற்றும் உள்நாட்டில் இயங்கக்கூடிய முதலாளிகளும், கார்ப்பரேட்டுகளும் ஆதரவினைத் தங்களுக்கு முழுமையாக அளிப்பதற்காக நாட்டைச் சூறையாடுவதன்மூலம் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கான புதிய வாய்ப்பு வாசல்களை அவர்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்ற முறையில் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

வலதுபக்கம் இடம்பெயர்தல்

இந்தியா நவீன தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் உலக அரசியலில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சீத்தாராம் யெச்சூரி: உலக அரசியலில் வலதுசாரி இடம்பெயர்வு ஏற்பட்டிருப்பது, நீண்டகாலமாக நிலவிவரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவேயாகும். இதன் காரணமாக உலக முதலாளித்துவம் கொள்ளை லாபம் ஈட்டுவதனைக் கடுமையாகப் பாதித்தது. இதற்கெதிராகத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின்கீழ் உழைக்கும் மக்களின் ஒற்றுமையின்கீழ் கிளர்ச்சிப் போராட்டங்கள் உலகம் முழுதும் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகத் தொழிலாளர்கள் மத்தியில் நிறவெறி, இனவெறி, பிராந்திய வெறி, மதவெறி, சாதி வெறி என வலதுசாரி அரசியல் இடம்பெயர்தலுக்கு இட்டுச்செல்லும் அனைத்துவிதமான வெறிகளும் கிளப்பப்பட்டன. இவற்றுக்கெதிராக தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின்கீழ் அணிதிரளும் உழைக்கும் மக்களைச் சீர்குலைத்திட வேண்டும் என்பதற்காகவே அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் குடிமை உரிமைகள் அனைத்தும் நசுக்கப்பட்டன.

இந்தியாவிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிரம் திட்டத்திற்குச் சேவகம் செய்திடும் விதத்தில்,  மதவெறித் தீயை விசிறிவிட்டும், மதச்சிறுபான்மையினருக்கு எதிராக  விஷத்தைக் கக்கும் வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் வன்முறை வெறியாட்டங்களை மேற்கொண்டும் அரசியலில் வலதுசாரி இடம்பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது, இயற்கையாகவே, பாசிஸ்ட் நடவடிக்கைகளை நோக்கிக் காயை நகர்த்துவதற்கு ஏதுவாக எதேச்சாதிகாரத்தின் வளர்ச்சிக்கு இட்டுச்செல்கிறது.

குறிப்பாக, 2014க்குப்பின், கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப் பிணைப்பு உருவாகி, தொடர்ந்து வலுப்பெற்று வந்திருக்கிறது. இது மிகவும் மட்ட ரகமான கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்கும் இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. கூட்டுக் களவாணி கார்ப்பரேட்டுகள் தங்கள் சொத்துக்களை அபரிமிதமாகப் பெருக்கிக்கொண்டு வருவதிலிருந்தே இதனை நாம் நன்கு பார்த்து வருகிறோம். இந்தியாவின் சொத்துக்கள் அனைத்தையும் பெரிய அளவில் சூறையாடுவதற்கு வசதி செய்துகொடுக்கும் விதத்தில் அரசுத்தரப்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய பணமாக்கல் திட்டம் (NMP-National Monetisation Pipeline), இவர்களது நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களையும், ஆர்எஸ்எஸ் பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிரம் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒட்டுமொத்த திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.

நவீன தாராளமயச் சீர்திருத்தங்களை எவ்விதமான தங்குதடையுமின்றி எடுத்துச்செல்லக்கூடிய இத்தகைய கொள்கையானது, இயற்கையாகவே, இந்தியாவைச் சர்வதேச உறவுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் சர்வதேச நிதிமூலதனத்தின் எடுபிடியாக மாற்றியிருக்கிறது. ஒருகாலத்தில் வளர்முக நாடுகளின் தலைவன் என்றும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் வீரமுதல்வன் என்றும் பெயரெடுத்திருந்த இந்தியா, இன்றைய தினம் இவ்வாறு வரலாற்று ஏடுகளில் தரம் தாழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஓர் இளைய பங்காளி என்ற முறையில், தற்போது மிகவும் மூர்க்கத்தனமான முறையில் நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றிக்கொண்டிருக்கும் கார்ப்பரேட்டுகள்-மதவெறியர்கள் கள்ளப்பிணைப்பு   நம் அரசமைப்புச்சட்டம் வரையறுத்துள்ளபடி தற்போது இருந்துவரும் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக இருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ்-இயக்கத்தின் நோக்கமான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்டிரமாக மாற்றுவதற்கான ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஒரு பகுதியேயாகும்.

(நன்றி: ஃப்ரண்ட்லைன்)

The story of the lying man (பொய் மனிதனின் கதை 3) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 3 – ஜா. மாதவராஜ்



“உண்மை மௌனத்தால் நிரப்பப்படுமானால், அந்த அமைதியும் பொய்யே!”
– யெவ்டுஷெங்கோ

”வதோராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் அவர் என்னை தனது மனைவியாக குறிப்பிட்டு இருக்கிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. அவர் என்னை நினைவில் வைத்திருக்கிறார்.” என்று பா.ஜ.கவின் பிரதம வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட நரேந்திர மோடியின் மனைவியாகிய யசோதாபென் பத்திரிகையாளர்களிடையே 2014ம் ஆண்டு மே 24ம் தேதி சந்தோஷப்பட்டார்.

வேட்பு மனுவில் தனது மனைவியின் பெயராக யசோதாபென் என்று குறிப்பிட்டதைத் தவிர, நரேந்திர மோடி என்னும் ஆண் மகன் தன் திருமணம் குறித்தோ, தன் மனைவி குறித்தோ வேறு ஒரு வார்த்தையும் வேறு எங்கும் எப்போதும் உதிர்த்ததில்லை. .

யசோதாபென் என்னும் பெயரை நரேந்திர மோடியின் பேனா எழுதிய அந்த ஒரே ஒரு கணத்திற்கு பின்னணியாக சதிகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த அதிகார வேட்கை இருந்தது. இந்திய நாட்டின் அரசியல் இருந்தது. ராஜாவின் வெற்றிக்கு ஆட்டத்தின் துவக்கத்திலேயே பலி கொடுக்கப்பட்ட ஒரு பகடைக்காயின் கதை அது. பொய்யாய்ப் போன ஒரு பெண்ணின் கதை அது.

மோடிக்கு திருமணம் நடந்து 25 ஆண்டுகள் கழித்துத்தான் மோடி திருமணமானவர் என்னும் தகவலே வெளியில் வந்தது. அள்ள அள்ளக் குறையாத மர்மங்களின் மனிதர் அவர்.

பத்திரிகையாளர் வகீல் என்பவர் 1993ல் யசோதாபென்னை நேரில் சந்தித்து குஜராத்தின் அரசியல் பத்திரிகையான அபியானில் எழுதி இருந்தார். அப்போது குஜராத் அரசியலில் செல்வாக்கு பெற்ற கேசுபாய் பட்டேலுக்கு பக்கபலமாக மோடி இருந்தார். கட்சி மட்டத்தில் அறியப்பட்டவராய் இருந்தும், மக்கள் மத்தியில் பெரிய அளவுக்கு வெளிச்சம் பெறாதவர். எனவே அந்த செய்தி, முக்கியமற்ற ஒரு மனிதரின் தனிப்பட்ட விஷயமாய் கரைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அப்போதே ஆர்.எஸ்,எஸ்ஸும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் தனக்கு கண்டனங்கள் தெரிவித்ததாக வகீல் குறிப்பிடுகிறார். ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மோடியின் திருமணம் குறித்து ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது என்கிறார் அவர்.

2000ம் ஆண்டில் குஜராத் புஜ்ஜில் ஏற்பட்ட பூகம்பத்தையொட்டி, நிவாரணப் பணிகளில் கேசுபாய் படேலின் அரசு மக்களின் நம்பிக்கை இழந்து, வெறுப்பை சம்பாதித்தது, 2001ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிந்துரையின் பேரில் அப்போது நாட்டின் பிரதம மந்திரியாய் இருந்த வாஜ்பாயால் குஜராத் அரசியலில் ஒரு புதிய முகமாக நரேந்திரமோடி களம் இறக்கப்பட்டார். அரசியல் எதிரிகளான கேசுபாய் பட்டேல் சங்கர்சிங் வகேலா இருவருக்கும் மோடி பொது எதிரியாகிறார்.

மோடிக்கு மாநில அளவில் கட்சியில் பெரிய ஆதரவு அப்போது இருக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே முதலமைச்சரான மோடி ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தலில் நின்று ஜெயிப்பதே பெரும் சிரமமாய் இருந்தது. இந்த நேரத்தில்தான், அயோத்திப் பிரச்சினையின் பின்னணியோடு கோத்ரா ரயில் சம்பவம் உருவானது. அதையொட்டி முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் குஜராத்தில் திட்டமிடப்பட்டு அரங்கேறின. நிகழ்த்தப்பட்ட வன்முறைகளால் தேசமே பதறியது. உலக நாடுகள் அதிர்ந்து கண்டனக்குரல்கள் எழுப்பின. வெறிபிடித்த இந்துத்துவா சக்திகள் அனைத்தும் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க, பா.ஜ.கவில் மோடியின் அரசியல் எதிரிகள் அனைவரின் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின. மோடியின் சுயரூபம் வெளிச்சத்துக்கு வந்த இடம் அதுதான். ஒன்றிலிருந்து ஒன்றாய் ஏற்படும் விளைவுகளிலிருந்து வரலாற்றில் தனிநபர் பாத்திரங்களை அறிய முடிகிறது.

குஜராத் கலவரங்களுக்குப் பிறகு 2003லிருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தங்கள் பகுதியில்தான் மோடியின் மனைவி வசிப்பதாக, முணுமுணுத்தாலும், மூர்க்கத்தனமான அதிகாரத்தின் மீதான பயம் உரக்க பேச விடாமல் செய்திருக்க வேண்டும். 2002 மற்றும் 2007 சட்டசபை தேர்தல்களிலும் அவர் வேட்பு மனுவில், திருமணம் பற்றிய விபரங்களை குறிப்பிடாமல் இருந்தார்.

வகீலுக்குப் பிறகு பதினாறு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு பத்திரிகையாளர் வந்தார். உண்மையைப் போட்டு சத்தமாய் உடைத்தார்.

”மிகச் சாதாரணமான புடவை, பொருத்தமற்ற ரவிக்கை அணிந்து இருந்தார். லேசாக குனிந்த முகம் சுருக்கம் கொண்டிருந்தது. வாழ்வின் கஷ்டமான நேரங்களைப் பார்த்திருந்தன கைகள். முடியை இறுக்கமாக பின்னுக்கு இழுத்து கட்டியிருந்ததால் ஒரு கடுமையான தோற்றம் ஏற்பட்டிருந்தது.. செருப்பு அணிந்த கால்களில் வெடிப்புகள் நிறைந்து அழுக்காயிருந்தது. குஜராத்தில் ரஜோசனா கிராமத்தின் ஒரு பெண்ணாக அவர் இருந்தார்.”

இப்படித்தான் விவரிக்கிறார் பத்திரிகையாளர் ஹைமா தேஷ்பாண்டே. 2009ம் ஆண்டு மே மாதத்தில் ரஜோசனா கிராமத்துப் பள்ளிக்குச் சென்று அங்கு ஒன்றாம் வகுப்பு டீச்சராய் இருந்த யசோதாபென்னை, அவரது 57வது வயதில் நேரில் சந்தித்திருக்கிறார் ஹைமா. அப்போது குஜராத்தின் முதலமைச்சராய் இருந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடிக்கும் யசோதாபென்னுக்கும் இந்து மதச் சடங்கின்படி திருமணம் நடந்து நாற்பத்தோரு வருடங்கள் ஆகி இருந்தது.

ஹைமா தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் ஒரு குழந்தையைப் போல உற்சாகமாகியிருக்கிறார் யசோதாபென். முகமெல்லாம் அப்படி சிரித்திருக்கிறது. தன்னைப் பற்றிச் சொல்லவும் விரும்பி இருக்கிறார். பள்ளியின் தலைமையாசிரியர் பிரவீன்குமார் வியாஸ் குறுக்கிட்டு, அவர் பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டு இருப்பதை நினைவுபடுத்தி இருக்கிறார். ”பள்ளி முடிந்ததும் பேசலாம். இப்போது வகுப்பறைக்குச் செல்லுங்கள்’ என உத்தரவிட்டிருக்கிறார்.

“இடைவெளி நேரத்தில் பேசுகிறேனே… கொஞ்ச நேரம்தான்” என்று சொல்லிப் பார்த்திருக்கிறார் யசோதாபென். தலைமையாசிரியர் அசையவில்லை. வேறு வழியின்றி பணிவுடன் அந்த இடத்தை விட்டு சென்றவர் சட்டென திரும்பி வந்து, “நான் என் கணவருக்கு எதிராக எதையும் சொல்ல மாட்டேன். அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த வேலைதான் என் வாழ்க்கை. பயமாய் இருக்கிறது “ என்று சொல்லி அகன்றிருக்கிறார்.

உடனடியாக தலைமையாசிரியர் யாரிடமோ செல்போனில் பேசி இருக்கிறார். அடுத்து யசோதா பென்னின் வகுப்பறைக்குச் சென்றிருக்கிறார். அதன் பின்னர் யசோதாபென் முற்றிலும் வேறொருவராக தென்பட்டிருக்கிறார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லாமல் போயிருக்கிறது. பதட்டமாக காணப்பட்டிருக்கிறார். திரும்ப ஹைமா சென்று அவரை சந்திக்க முயற்சித்தபோது பேசுவதை புறக்கணித்து, என்னை தனியாக இருக்க விடுங்கள் என சத்தம் போட்டிருக்கிறார்.

தொடர்ந்து சில ஆண்கள் அங்கு வாகனங்களில் வந்திருக்கிறார்கள். தலைமையாசிரியரின் அறைக்குள் நேரடியாக சென்றிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் வெளியேறி இருக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் வெளியே காத்திருந்த ஆட்டோவில் ஓடிச்சென்று ஏறி முகத்தை கைகளால் பொத்தியவாறு 20 கி.மீ தள்ளி இருக்கும் தன் சகோதரர் வீட்டிற்கு அன்றைக்கு போயிருக்கிறார் யசோதாபென். சில நிமிடங்களில் அரசு பத்திரிகையாளர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு இளைஞன் வந்து உடனடியாக இங்கிருந்து சென்று விடுங்கள் என ஹைமா தேஷ்பாண்டேவிடம் சொல்லி இருக்கிறான். அவரும், அவரது குழுவினரும் அங்கிருந்து கிளம்ப வேண்டியதாகி இருக்கிறது.

அந்த கிராமத்து மக்களிடம் ஹைமா விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதே ஊரில் நூறு சதுர அடிக்கும் குறைவான, தகர கொட்டாய் வேய்ந்த ஒரு சிறு வீட்டில்தான் யசோதா பென் வாழ்ந்து வந்திருக்கிறார். கழிப்பிடம் கூட கிடையாது. ஒத்தாசைக்குக் கூட யாரும் கிடையாது. அவரால் வேறொரு இடத்தில் இதை விட சௌகரியமாகக் கூட வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் ஏன் அந்த சிறிய ஊரில் அவதிப்பட வேண்டும் என்பது பிடிபடவில்லை. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவர்தான் முதலமைச்சர் நரேந்திர மோடியின் மனைவி என அங்கு பெரும்பாலோருக்குத் தெரிந்திருந்தது.

ஹைமா தேஷ்பாண்டே மூலம் பத்திரிகைகளில் இந்த தகவல்கள் வந்த பின்னரும் கூட 2012ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் மோடி வேட்பு மனுவில் அவரது திருமணம் பற்றி குறிப்பிடவில்லை. “நான் தனி ஆள். எனக்கு குடும்பம் இல்லை. நான் யாருக்காக ஊழல் செய்ய வேண்டும்? என் உடல் உயிர் எல்லாமே மக்களுக்கு சேவகம் செய்யத்தான்!” என தொடர்ந்து கூட்டங்களில் இரண்டு கைகளையும் நீட்டி முழக்கிக் கொண்டிருந்தார்.

People Representation Act ஐ மீறியதற்காக மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி 2013ம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.. இதில் தேர்தல் கமிஷனே முடிவெடுக்க வேண்டும் எனச் சொன்னது நீதிமன்றம். தேர்தல் கமிஷனும் பழைய கதைகளை எல்லாம் ஆராய விரும்பாமல், “இனி தேர்தலில் நிற்பவர்கள் வேட்பு மனுவில் எதையும் நிரப்பாமல் விடக் கூடாது, கேட்கப்பட்ட அனைத்து விபரங்களும் தர வேண்டும்” என்று பொதுவான ஒரு விதியை எல்லோருக்குமாக அறிவித்து தன் நியாயத்தை முடித்துக் கொண்டது..

இந்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.. பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார்.

நரேந்திர மோடிக்கும், பாஜகவுக்கும் சத்திய சோதனை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் 1968ம் ஆண்டு நடந்த திருமணத்தை 46 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடி 2014ம் ஆண்டில் உலகத்தின் முன்னே ஒப்புக் கொண்டார்.

பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்து விவாதங்களும், மோடியின் மீது கண்டனங்களும் எழுந்தன. “BJP ‘bachelor’ Modi admits marriage” என பிபிசி மானபங்கம் படுத்தியது.

பதில் சொல்ல வேண்டிய மோடியோ கூட்டத்தினிடையே மேடையேறி அங்கும் இங்கும் நகர்ந்து டஸ்டரை வைத்து எதையோ அழிப்பது போல கைகளை அசைத்துக் கொண்டு இருந்தார்.

மோடியின் ஒவ்வொரு பொய்யையும் சமாளிப்பதும், மடை மாற்றுவதும் பாஜக என்னும் ’தூய்மையான’ கட்சி’யின் முக்கிய அலுவல் பணியாகிப் போனது.

“மோடி திருமண விபரத்தை சொல்லவில்லை. அவ்வளவுதானே. திருமணம் ஆகவில்லை எனச் சொல்லி இருக்கிறாரா? இது எப்படி பொய்யாகும், குற்றமாகும்”

“மோடியின் திருமணமா இங்கு முக்கியம்?. நாட்டின் முன் ஊழல் முதற்கொண்டு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பேச வக்கில்லை.”

“மோடியின் மனைவியே இதுகுறித்து கவலைப்படாதபோது, சம்பந்தமில்லாதவர்கள் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்”

இதில் நிர்மலா சீதாராமன் பேசியதுதான் உச்சம். “மோடி அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத் திருமணம். அதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டுமா?”

மோடியின் திருமணம் நடந்தது 1968ம் ஆண்டு. அவரது பிறந்த ஆண்டு 1950 என்று வைத்துக் கொண்டாலும் அவரது 18வது வயதில் திருமணம் நடந்திருக்கிறது. யசோதாபென்னுக்கு 16 வயது. 1929ம் ஆண்டு சட்டப்படி பெண்ணுக்கு திருமண வயது 14 எனவும், ஆணுக்கு 18 எனவும் இருந்தது. எனவே அதனை குழந்தைத் திருமணம் என்று வகைப்படுத்த முடியாது.

திருமணம் நடந்து மூன்றாண்டுகள் மோடி குடும்பத்தாருடன் இருந்தாலும், மோடியுடன் கூட வாழ்ந்தது மூன்று மாதங்கள் போலத்தான் என்றும் அதன் பிறகு அவர் வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், அவரிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை என்றான பிறகு அவரது குடும்பத்திலிருந்து விலகி வந்து தனது சகோதரர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாக யசோதாபென் கூறுகிறார். மீண்டும் படிக்கத் துவங்கியதாகவும், ஆசிரியர் பணிக்குச் சேர்ந்ததாகவும் தனிமை நிறைந்த தன் வாழ்வின் போக்கை தொடர்கிறார்.

மோடியின் சகோதரர் சோமபாய் மோடிவின் கூற்று வேறாக இருக்கிறது. மோடிக்கு அவ்வளவு சிறுவயதில் திருமணம் செய்வது பிடிக்கவில்லை என்றும், குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணம் செய்ததாகவும், எனவே திருமணம் ஆனவுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், பின்னர் குடும்பத்தாருடன் வந்து மோடி தங்கவே இல்லை என்றும் அவர் சொல்கிறார்.

திருமணம் பிடிக்கவில்லை என்றால், திருமணத்துக்கு முன்பே மோடி வீட்டை விட்டு சென்றிருக்கலாமே என்னும் கேள்வி எழுத்தான் செய்கிறது. என்ன நடந்தது, ஏன் நடந்தது என்னும் ஆராய்ச்சிகளுக்கும், விவாதங்களுக்கும், ஊகங்களுக்கும் சென்றாலும் யசோதாபென்னுக்கு யாரும் நியாயம் வழங்கிட முடியாது.

அதிகார பீடத்தின் உச்சியில் இருக்கும் சக்தி வாய்ந்த மனிதரின் மனைவியாகிய அந்த மிகச் சாதாரண பெண்மணி தனது சிந்தனைகள் எல்லாவற்றையும் அப்படியே இனி எப்போதும் வெளிப்படுத்திட முடியாது.

ஆனால் இந்தியா டுடே பத்திரிகைக்கு 2014ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி யசோதாபென் அளித்த பேட்டியில் சில உண்மைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டு இருக்கின்றன.

இந்தியா டுடே: ”இத்தனை நாளும் மனைவி என்ற ஸ்தானத்தை கொடுக்காமல் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா?”

யசோதாபென்: ”இல்லை. நான் மோசமாக உணரவில்லை. விதியாலும் கெட்ட நேரத்தாலும்தான் அவ்வாறு செய்கிறார் என்பது எனக்குத் தெரியும். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் அவ்வாறு பேசுகிறார், பொய்யும் சொல்கிறார். என் நிலைமை ஒன்றும் மோசமாகவில்லை. ஒருவகையில் அதிர்ஷ்டம் என்னை மேம்படுத்தியே இருக்கிறது.”

இந்தியா டுடே: ”ஏன் நீங்கள் மறுமணம் செய்து கொள்ளவில்லை?”

யசோதாபென்: ”இந்த அனுபவத்திற்குப் பிறகு எனக்கு திருமணம் செய்து கொள்ளத் தோன்றவில்லை. என் மனம் அதில் இல்லை.”

சில வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையையே தரிசிக்கும்படி ஆகிவிடும். அப்படி ஒரு உரையாடல் இது.

யசோதாபென் உண்மையாகவும், மோடி பொய்யாகவும் காலத்தின் முன் நிற்கிறார்கள்.

முந்தைய தொடர்களை வாசிக்க: 

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்
பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

பொய் மனிதனின் கதை 2 – ஜா. மாதவராஜ்



அத்தியாயம் – 2

“சாத்தான் ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்கிறவனாக இருக்கிறான்”
– ஜோசப் வெர்த்லின்

“பிரதமருக்கு 56 இஞ்ச் மார்பு இருக்கிறதா என்பதை அறிய நாடு விரும்பவில்லை. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் என்ன, அவர் தனது இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற விபரம், அவருடன் படித்த மணவர்களில் குறைந்த பட்சம் 10 பேர் யார் என்னும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறது” என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி சக்திசிங் கோஹில் 2016 ஏப்ரல் மாதத்தில் கேட்டார்.

கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும்  நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக சந்தித்து இருந்தது.  உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை. 

பிரதமர் மோடியின் வலைத்தளத்தில் அவரது கடந்த காலத்திற்கான தகவல்கள் சொற்பமாகவே இருந்தன.  குஜராத்தில் மிகச் சிறிய நகரம் ஒன்றில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்ததாகவும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தால் கடின உழைப்பு குறித்து அவர் அறிந்திருந்ததாகவும், தேசபக்தி இயக்கமான ஆர்.எஸ்.எஸில் சிறுவயதிலேயே இணைந்து பணியாற்றியதாகவும் குஜராத்தில் எம்.ஏ (Political Science)  பட்டம்  பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அப்புறம் சின்ன வயதில் இந்த டீ விற்றது, முதலையைப் பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தது எல்லாம் கூட்டங்களில் அவரே பேசி இருந்தார். பள்ளியில் கபடி மேட்சில் ஜெயித்தது, தீண்டாமைக் கொடுமையை விளக்கும் நாடகம் எழுதி அரங்கேற்றியது எல்லாம் யார் சொல்லி பத்திரிகைகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. அவ்வப்போது மோடியின் சின்ன வயதுக் கதைகள் இப்படி ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. 

அவைகளையும் பொருட்படுத்தி மெனக்கெட்டு ஆராய்ந்து பார்த்ததில், மோடி எட்டு வயதில், அதாவது, 1958ம் வருடத்தில், டீ விற்ற வடநகரில் ரெயில்வே ஸ்டேஷன் திறக்கப்பட்டதே 1973ம் வருடமாக இருந்தது. மோடி பற்றிய மற்ற கதைகள் குறித்தும் அதையொட்டியே ஒரு அபிப்பிராயத்துக்கு வர, வேண்டி இருந்தது.

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

அவரது பிறந்த தேதி, படிப்பு குறித்த கதைகளை அப்படி எளிதாக எடுத்து விட முடியாது. வரலாறு என்பது கற்பனைகளாலோ, கட்டுக் கதைகளாலோ, ஊகங்களாலோ இருந்து விடக் கூடாது. நாட்டின் பிரதம மந்திரியின் வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல்கள் மொத்த இந்தியாவுக்கானது. உலகத்திற்கானது. எதிர்காலத்திற்குமானது. எனவே அதையும் சமூக ஆர்வலர்கள் ஆராயத் துவங்க, கிணறு வெட்ட பூதங்கள் கிளம்ப ஆரம்பித்தன.

குஜராத்தில், வடநகரில், பி.என். உயர்நிலைப்பள்ளியில் படித்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் எஸ்.எஸ்.எல்.சி சர்டிபிகேட்டில் அவரது பிறந்த தேதி 1949ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறகு எப்படி அவரது பிறந்த தேதி 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது முதலில் வந்த பூதம்.

சர்ச்சைகளும், விவாதங்களும் கேள்விகளும் எழ ஆரம்பித்தன. வழக்கம்போல் நேரடியாக முகம் காட்டி பதில் சொல்லாமல் இருந்தார் பிரதமர் மோடி. அவரது மூத்த அண்ணன் சோமபாய் மோடிதான் வாயைத் திறந்து பேசினார். 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்ததாகவும், பிறந்தவுடன் எழுதப்பட்ட ஜாதகத்தில் அந்த தேதி குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், மோடியை பள்ளியில் சேர்க்கும்போது தவறான பிறந்த தேதியை மோடியின் பெற்றோர்கள் கொடுத்துவிட்டதாகவும், அதை மோடி பின்னாளில் சரி செய்து விட்டதாகவும், பெற்றோர்கள் செய்த தவறுக்கு மோடி எப்படி பொறுப்பாக முடியும் என்று தனக்கு விதிக்கப்பட்ட கடமையை முடித்துக் கொண்டார்.

பள்ளியில் பிறந்த நாளை தவறாகக் கொடுத்து சேர்ப்பது சென்ற தலைமுறை வரைக்கும் சாமானிய மக்களுக்கு நேர்கிற கதி என்பதை ஒப்புக்கொள்ள முடியும். 

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சரியோ, தவறோ பள்ளியின் சர்டிபிகேட்தான் செல்லுபடியாகும். ஆதாரமானதாகும். அதிகாரபூர்வமானதாகும். ஜாதகப்படி என்பதெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகாது. அப்படியென்றால் நரேந்திர மோடி பள்ளியில் தனது பிறந்தநாள் தவறாக கொடுக்கப்பட்டு இருப்பதை எப்போது அறிந்தார், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அதை செப்டம்பர் 17, 1950 என மாற்றினார் என்பதெல்லாம் இன்று வரை அவரது தரப்பில் தெரிவிக்கப்படாமலேயே இருக்கின்றன.

இதையொட்டி அடுத்த பூதமாக மோடியின் கல்வித் தகுதி கேள்விக்குள்ளானது. நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருந்தார். அதாவது, 1950ம் வருடம் பிறந்ததாக சொல்லப்படும் மோடி, அவரது 28வது வயதில் பி.ஏ முடித்து, 33வது வயதில் எம்.ஏ முடித்திருந்தார்.

குஜராத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த ரோஷன் ஷா என்னும் அரசியல் செயற்பாட்டாளர், மோடியின் எம்.ஏ கல்வித்தகுதி குறித்து 2013ம் ஆண்டு RTI மூலம் கேள்விகள் எழுப்பி இருந்தார். அப்போது குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தார். குஜராத் யுனிவர்சிட்டியில் இருந்து பதில் வரவில்லை. திரும்பவும் 2014ம் ஆண்டு பிரதம மந்திரி அலுவலகத்துக்கு கேள்விகள் அனுப்பினார். அப்போது மோடி பிரதம மந்திரியாய் இருந்தார். அது குறித்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்துவிட்டது.  

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் சந்தேகங்கள் எழுப்ப ஆரம்பித்தார். 1978ல் நரேந்திர மோடி என்பவர் டெல்லியில் பி.ஏ படித்திருப்பதாகவும், அவர் இந்த நரேந்திர மோடி இல்லை என்றும் அவரது முழுப் பெயர் நரேந்திர குமார் மகாவீர் பிரசாத் மோடி என்றும், அவர் 1958ல் பிறந்தவர் என்றும் தகவல்களை வெளியிட்டார். 

ஒரு நாட்டின் பிரதமர் தங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால் அது அந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு பெருமை! அதனை தங்கள் வளாகங்களில் பொன்னெழுத்துகளால் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களே, அப்படி எதுவும் ஏன் நிகழவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடியுடன் படித்தவர்கள் இந்த நாட்டில் இருப்பார்களே, அவர்களில் ஒருவராவது மோடி என்னோடு படித்தவர் என எந்த அனுபவத்தையும் பகிரவில்லையே என சந்தேகப்பட்டனர்.

மோடி மௌனம் சாதித்ததாலும், டெல்லி யுனிவர்சிட்டியும், குஜராத் யுனிவர்சிட்டியும் காலதாமதம் செய்ததாலும்  மேலும் சந்தேகங்களை எழுப்பினார் கெஜ்ரிவால். ஊடகங்கள் அமைதியாய் இருந்தன. அப்போதைய டைம்ஸ் நவ் – இப்போதைய ரிபப்ளிக் டிவி – அர்னர்ப் கோஸ்வாமிக்கு அடி வயிற்றிலிருந்து கத்த வேறு பிரச்சினைகள் இருந்தன. தன்னைப் போன்று ஒரு மெழுகுச் சிலை வடிவமைப்பதற்காக மணிக்கணக்கில் போஸ் கொடுத்த மோடிக்கு இந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் போனது.  அவரது பரிவாரங்களும், பக்த கோடிகளும் “இதுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினையா?” என்று அலட்சியப்படுத்த முனைந்தனர். என்னமோ, நாட்டின் வறுமை, வேலையின்மை, தீண்டாமை, பெட்ரோல் விலையேற்றம், விவசாயிகளுக்கான நெருக்கடிகளை எல்லாம் தூக்கிப் பிடித்து தீர்க்கிறவர்கள் போல அலட்டிக் கொண்டனர். 

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

சமூக ஊடகங்களில் மோடி குறித்த கிண்டல்களும், கேலிகளும் குவிய ஆரம்பித்தன. வெக்கையும், புழுக்கமும் தாங்க முடியாமல், பிஜேபி கட்சித்தலைவர் அமித்ஷாவும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூட்டாக இரண்டு காகிதங்களைக் கையில் பிடித்தபடி தங்கள் கூடாரத்தை வெளியே வந்தனர். காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், “இதுதான் மோடியின் கல்விச் சான்றிதழ்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களிடமும், நரேந்திர மோடியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்லிச் சென்றனர். அதுவரை வாயைப் பொத்திக்கொண்டு இருந்த ஊடகங்கள் அனைத்தும் இதனை ’பிரேக்கிங் நியுஸாக’ வெளியிட்டு கத்தித் தொலைத்தன. அந்த பரபரப்பு கொஞ்சம் கூட நீடிக்கவில்லை. 

நாட்டின் அதிமுக்கிய மனிதர்கள் இரண்டு பேர் தங்கள் பிரதம மந்திரி குறித்து வெளியிட்ட அந்த கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்றும், போட்டோ ஷாப்பில் தயாரிக்கப்பட்டவை என்றும், சான்றிதழ்களில் காணப்படும் fontகள் 1991க்குப் பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என்றும், தேதிகள், பெயர்களில் மாற்றம் இருக்கின்றன என்றும், மோடி வாங்கிய மார்க்குகளின் கூட்டல்களில் தவறு இருக்கிறது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மைதான். 23+23+67+23 = 136 தான் வரவேண்டும். மார்க்‌ஷீட்டில் 165 என்றிருந்தது.  திரும்பவும் ஊடகங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடிவாளங்களை மாட்டிக்கொண்டு வேறு பிரேக்கிங் நியுஸுக்காக ஓளிந்து கொண்டன.

நாட்டின் பிரதமரின் மானத்தையும், கல்வி அறிவையும் காப்பாற்ற வேண்டிய பாத்திரம் டெல்லி யுனிவர்சிட்டிக்கு இந்த நாடகத்தில் விதிக்கப்பட்டது. “பிஜேபி தலைவர்கள் காட்டிய ரெகார்டுகள் உண்மையானவை. பிரதமர் மோடி டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.” என்று பஞ்சாயத்தை முடிக்க முயற்சித்தார் யூனிவர்சிட்டி துணை வேந்தர். 

“மார்க்‌ஷீட்களில் இருக்கும் பெயர் வித்தியாசமானதாக இருக்கிறதே?” என்ற கேள்விக்கு அது ஒரு வழக்கமான தவறுதான். இது போன்று வேறு சில மாணவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டையடியாய் ஒரு பதிலைச் சொன்னார்.

“மோடி டிகிரி முடித்தது 1978ம் ஆண்டு. ஆனால் 1979ம் ஆண்டு என சர்டிபிகேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே?” என்ற கேள்விக்கு,  இது போன்ற சின்ன தவறுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்று ஒரேயடியாய் சொல்லி தன் பாத்திரத்தை முடித்துக் கொண்டார்.

அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் ஒரு பொய் எவ்வளவு பேரை அலைக்கழிக்கிறது! ஒன்றை மறைக்க எத்தனை எத்தனை பொய்கள் அவதாரமெடுக்கின்றன.

“போட்டோ ஷாப்பால் வாழ்ந்தவன் போட்டோ ஷாப்பால் வீழ்வான்” என்னும் புது நீதிகள் டுவிட்டரில் தெறித்தன. “முன்னாபாய் எம்.பி.பி.எஸ் போல மோடிபாய் பி.ஏ, எம்.ஏ” என கிண்டல்கள் அள்ளின. 

The story of the lying man (பொய் மனிதனின் கதை 2) Web Series By Writer J. Mathavaraj (ஜா. மாதவராஜ்). This Article About Modi Lies History

இன்னொருபுறம், “டெல்லி நிர்வாகத்தை கவனிக்காமல் கெஜ்ரி்வால் ஏன் மோடியையே மோப்பம் பிடிக்கறார்?”, “இதுபோல் தனிநபர் குறித்த ஆராய்ச்சிகளால் நாட்டின் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது“, “கெஜ்ரிவால் படித்தவர்தானே, அவர் செய்யக் கூடிய செயலா இது?”, “இதற்காக கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை”, “மோடியின் படிப்பைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?” என்னும் விமர்சனங்கள் வந்து மோதின. 

மோடி படித்தவரா, படிக்காதவரா என்பது விவாதமே அல்ல. நாட்டு பிரதமரின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அது. அவர் எப்படி மக்களை மதிக்கிறார்  என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது.

ரோஷன் ஷாவும் விடவில்லை. ”ஏன் அமித்ஷா டூப்ளிகேட் சர்டிபிகேட்களை காண்பிக்க வேண்டும். மோடியிடம் இருந்து ஒரிஜினல் சர்டிபிகேட்களை வாங்கி காண்பிக்கலாமே?” என்று  கேட்டார். ”பள்ளிக் கல்வி முடிந்ததும், வீட்டை விட்டு கிளம்பி விட்டதாகவும், இமாலயக் காடுகளில் எல்லாம் சுற்றித் திரிந்ததாகவும் மோடியே ஒரு பேட்டியில் சொல்கிறார். இமாலயத்தில் இருந்து கொண்டு அவர் டெல்லி யுனிவர்சிட்டியிலும், குஜராத் யுனிவர்சிட்டியிலும் எப்படி பட்டம் வாங்கினார். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியுமா?” என கேட்டார். யாரிடமும் பதில் இல்லை.

Rediff.comலிருந்து ரோஷன் ஷாவிடம் கேட்டார்கள். ”நீங்கள் ஏன் மோடியை நம்ப மறுக்கிறீர்கள்?”.

அதற்கு ரோஷன் ஷா, “மோடி தொடர்ந்து தவறுகள் செய்யும் வழக்கம் கொண்டவர். ஒரு தவறை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இல்லாத ஆதாரங்களை உருவாக்குவார் அல்லது இருக்கும் ஆதாரங்களை அழித்துவிடுவார். அது அவரது இயல்பு.” என்றார்.

நாட்டின் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருப்பவர்களுக்கு டெல்லி மற்றும் குஜராத் யுனிவர்சிட்டிகளில் கல்விச் சான்றிதழ்களை உருவாக்குவதோ அல்லது சான்றிதழ்கள் இருக்கின்றன எனச் சொல்ல வைப்பதோ மிகச் சாதாரண விஷயம்தான். 

ஆனால் நாட்டின் பிரதம மந்திரியின் கல்வித்தகுதிக்கான ஒரிஜினல் சான்றிதழ்கள் இதுவரை இல்லையென்பதும், இருந்தவையும் போலியானவை என்பதும் சாதாரண விஷயமல்ல.

பொய் மனிதனின் கதை – ஜா. மாதவராஜ்

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  – நிஷித் சௌத்ரி



உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று கூறி மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு சமீபத்தில் நான்கு வருட தேசிய பணமாக்கல் திட்டத்தை (NMP) அறிவித்துள்ளது. உண்மையில் நாட்டில் செயல்பட்டு வருகின்ற பெரும் உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் பெருநிறுவனங்கள், வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பெரிய வணிக நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே இந்த தேசிய பணமாக்கல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்களின் பணத்தில் கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தி பெரும் பணத்தைச் சுருட்டிக் கொள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

நம் நாட்டில் தேசிய சொத்துக்களை தனியார்மயமாக்குகின்ற செயல்முறை 1991ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தக் கொள்கைகளை மாறுபட்ட அளவு தீவிரத்துடன் அடுத்தடுத்து மத்தியில் ஆட்சிக்கு வந்த அரசுகள் பின்பற்றி வந்திருக்கின்றன. பல வழிகளில் அந்தக் கொள்கை தொடர்ந்து வந்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேசிய பணமாக்கல் திட்டம் தேசிய சொத்துக்களை தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக மட்டுமே உள்ளது. எந்த விலை கொடுத்தாவது, எந்த வகையிலாவது தனியார்மயமாக்கலை மேற்கொள்வது என்பது மோடி ஆட்சியின் கீழ் இருக்கின்ற பாஜக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகவே மாறியிருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் நிலையான, தொடர்ச்சியான ஒன்றுபட்ட தலையீடுகள் மற்றும் பிற காரணிகளும்  சேர்ந்து பல துறைகளில் தனியார்மயமாக்கலுக்கான தடைகளை உருவாக்குவதில் முக்கியமான பங்கை வகித்து தனியார்மயமாக்கல்  நடைமுறையின் வேகத்தைத் தணித்தன. அவ்வாறான அரசியல் பொருளாதார சூழ்நிலையில் தேசிய, உலக அளவில் உள்ள தனியார் தொழில் முனைவோர் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாக அரசு சொத்துகளின் விற்பனை ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் மோடி ஆட்சியின் கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 3.96 லட்சம் கோடிக்கு அரசு சொத்துகள் விற்கப்பட்டுள்ள போதிலும் பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அவர்களுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறிடவில்லை.

குறைவான அதிகாரம் கொண்ட இளைய பங்காளியாக

தன்னுடைய லட்சியமான தனியார்மயமாக்கல் இலக்குகளை அடைய முடியாத மோடி அரசு அரசுக்குச் சொந்தமான பெரிய உள்கட்டமைப்பு சொத்துக்களை நடைமுறையில் இலவசமாகவே தனியார் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அவர்களிடம் ஒப்படைக்க முயல்கிறது. பொதுச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து சிறு பகுதியை தனக்கென்று பகிர்ந்து கொள்கின்ற அரசு குறைவான அதிகாரம் கொண்ட இளைய பங்காளியாக மட்டுமே இருக்கப் போகிறது. இவ்வாறாக தேசிய பணமாக்கல் திட்டம் என்றழைக்கப்படுகின்ற அந்த திட்டத்தின் வடிவமைப்பு மோசமாக அமைந்துள்ளது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

தேசிய பணமாக்கல் திட்டம் குறித்த ஆவணத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலை தொடர்பான சொத்துகளில் 22 சதவிகிதம், 400 ரயில் நிலையங்கள், 1,400 கிமீ நீள ரயில் பாதை, 741 கிமீ நீள கொங்கன் ரயில்வே, 90 பயணிகள் ரயில்கள், 15 ரயில் நிலையங்கள், 265 ரயில்வேக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே காலனிகள், நான்கு மலை ரயில்வேக்கள், 25 முக்கிய விமான நிலையங்கள், 28,608 சர்க்யூட் (ckt) கிமீ மின்பரிமாற்றச் சொத்துகள், 160 நிலக்கரி சுரங்கச் சொத்துகள், 14,197 தொலைத்தொடர்பு கோபுரங்கள், 2.86 லட்சம் கிமீ கண்ணாடி இழைகள், என்டிபிசி  மற்றும் என்எச்பிசியின் மின்னுற்பத்தி சொத்துக்கள், ஐஓசிஎல், ஹெச்பிசிஎல், கெயில் நிறுவனங்களின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியத் தயாரிப்புகளின் குழாய்கள், ஒன்பது முக்கிய துறைமுகங்கள் சார்ந்த 31 திட்டங்கள், எஃப்.சி.ஐ மற்றும் மத்திய கிடங்கு கழகத்தின் 39 சதவிகித சேமிப்புத் திறன், ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மற்ற மூன்று சொத்துக்கள் என்று அரசு சொத்துகள் பணமாக்கப்படுவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.

அரசாங்கமோ இந்தச் சொத்துகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படாத நிலையில் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ள (பிரவுன்ஃபீல்ட்) உள்கட்டமைப்பு சொத்துக்கள் என்பதாகக் கூறி வருகிறது. ‘அபாயகரமானவை’ என்று இந்தச் சொத்துக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தனியாருக்கு உறுதியளிப்பது மட்டுமல்லாது, மூலதனச் செலவிற்கான தேவை குறித்த அவர்களுடைய கவலையையும் அரசாங்கம் தணிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தும் வகையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று மக்களை நம்ப வைக்க அரசாங்கம் தவறாக முயல்கிறது.

அரசாங்கத்தின் இந்தக் கூற்று மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் முற்றிலும் தவறான கூற்றாகும். சொத்துகளின் மீது முறையான உரிமை எதுவும் இல்லாமலேயே அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுவதற்கான முதலீட்டை தனியார் நிறுவனங்கள் ஏன் செய்ய வேண்டும்? மாறாக அந்த தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளின் பயனர் கட்டணத்தை தங்கள் விருப்பப்படி அதிகரிக்கவே போகின்றன. அவை புதுமையான முறையில் வணிகமயமாக்கி முப்பது முதல் ஐம்பதாண்டு காலப் பரிர்த்தனைக் காலத்தில் நுகர்வோரை கொள்ளையடித்து அந்த சொத்துக்களில் இருந்து அதிக அளவிலே பணம் சம்பாதித்துக் கொள்ளப் போகின்றன. உள்கட்டமைப்பை அதிகரித்து,  விரிவுபடுத்தும் வகையில் அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யப் போவதான மாயையை உருவாக்கிட அரசாங்கம் விரும்புகிறது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

பணமாக்குதலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்கள் நலிவடைந்து வருபவையாக, முழுமையாகப் பணமாக்கப்படாதவையாக அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுவதாக இருப்பதாக அரசாங்கம் வாதிடுகிறது. மீண்டும் அது ஒரு தவறான, ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது! நெடுஞ்சாலைகள், மின் பரிமாற்றத்திற்கான கம்பிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், ரயில்வே நெட்வொர்க்குகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரங்கள் போன்ற அனைத்து உள்கட்டமைப்பு சொத்துகளும் பல ஆண்டுகளாக தங்களுக்கான பயனர்களைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. இந்த உள்கட்டமைப்புகளின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டு நிலைகள் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைப் பொறுத்ததாகவே இருக்கின்றன. நாட்டில் உள்ள உள்நாட்டு மின்னுற்பத்தித் திறன் மற்றும் மின்னுற்பத்தி நடவடிக்கைகளின் பயன்பாட்டைப் பொறுத்ததாகவே பவர் கிரிட் நெட்வொர்க்கின் பயன்பாடு உள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தித் துறையில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான சரிவின் விளைவாக மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் மீது யாராவது குற்றம் சுமத்த முடியுமா?

இலவசமாக ஒப்படைக்கும் நேர்மையற்ற வழி 

இந்த அறிவிப்பு முழுமையான விற்பனை நடவடிக்கையாக இல்லை என்றும் அரசாங்கம் பொய் கூறுகிறது; முன்பணம், வருவாய்ப் பங்கு, சொத்துக்களில் முதலீட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஈடாக குறிப்பிட்ட பரிவர்த்தனை காலத்திற்கு மட்டுமே தனியாருக்கு வருவாய் உரிமைகளை மாற்றித் தரப் போவதாக அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் தேசிய உள்கட்டமைப்பு மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டு பெருநிறுவனங்களிடம் நீண்ட காலத்திற்கு ஒப்படைக்கப்படப் போகிறது. இவ்வாறு இலவசமாக தேசிய உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது நேர்மையற்ற வழியாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றின் உள்கட்டமைப்புச் சொத்துகளும் தன்னம்பிக்கை பொருளாதாரம், பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் நிச்சயமாக முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றன – இன்னும் வகித்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது தனியார் துறை தொழில்கள் மற்றும் சேவைகளின் கணிசமான வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் அவை பங்களித்துள்ளன. தற்போது மேற்கொள்ளப்படப் போகின்ற இந்த முயற்சி எதிர்காலத்தில் நாட்டிற்கும், மக்களுக்கும் எந்த வகையில் உதவப் போகிறது என்பது குறித்து  எந்தவொரு விளக்கமும் இதுவரையிலும் தரப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் வேலை இழப்பே ஏற்படப் போகிறது. வேலையின்மை பிரச்சனை ஏற்கனவே மோசமாக இருந்து வரும் நிலையில், தனியார் துறை வேலைகளில் சமூகத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு இருக்காது என்பதால் ஏற்படப் போகின்ற வேலைவாய்ப்பு இழப்பு இன்னும் மோசமாகவே இருக்கும். தொழிலாளர்கள், மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள் மோசமடையவே போகின்றன; இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாளிகள் மட்டுமே பயனடையப் போகிறார்கள்.

மேலும் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. பணமாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு சொத்துகள் என்பதற்கு அரசாங்கக் கஜானாவில் அந்த அளவிலான தொகை முன்பணமாகச் செலுத்தப்படும் என்பதாக அர்த்தமில்லை.

சொத்துக்களின் மூலதனத்திற்கான செலவை இன்றைய விலையில் கணக்கிட்டு, கைவரப் போகின்ற பணத்தின் இலக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அரசு சொத்துக்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதை எளிதில் நிறுவிட முடியும்.

எடுத்துக்காட்டாக 26,700கிமீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 22 சதவிகிதம் பணமாக்கப்பட உள்ளது. அந்த சொத்தில் இருந்து கிடைக்கப் போகின்ற 1.6 லட்சம் கோடி ரூபாயை முன்கூட்டிய விலையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய உள்கட்டமைப்பிற்கான மூலதனச் செலவு எந்த அளவிற்கு இருந்திருக்கும்? 2019ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூலதனச் செலவை இன்றைக்கு எடுத்துக்கொண்டால், 26,700கிமீ நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானச் செலவு குறைந்தது எட்டு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.

எட்டு லட்சம் கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்கள், இப்போது அதிகபட்சமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் என்று முன்கூட்டிய கட்டணமாக அரசாங்கம் தேர்வு செய்யும் தொழில்முனைவோருக்கு வழங்கப்படப் போகிறது. மேலும் தனியார் நிறுவனம் – அரசாங்கத்திற்கிடையே உள்ள தொடர்பின் காரணமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த தொகை மேலும் குறைக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதுதவிர அந்த தனியார் நிறுவனங்கள் விருப்பப்பட்ட எண்ணிக்கையில் சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துக் கொள்ளலாம். மேலும் சுங்கச்சாவடிக் கட்டணமாக எந்தவொரு தொகையையும் வசூலித்துக் கொள்ளும் அதிகாரமும் அவற்றிற்கு அளிக்கப்படும். எந்தவொரு முதலீடும் இல்லாமலேயே வருவாய் பகிர்வு ஒப்பந்தம் மூலமாக சம்பந்தப்பட்ட பெருநிறுவனங்கள் சேகரித்துக் கொள்ளும் வருவாயில் 70-80 சதவிகிதத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பெருநிறுவனங்களிடம்  இவ்வாறு ஒருபுறம் மக்களின் பணத்தில் கட்டப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு வழங்கப்படுகிற வேளையில், மறுபுறம் அந்தப் பெருநிறுவனங்களால் பயனர் கட்டணங்கள், சுங்கச் சாவடிக் கட்டணங்கள் போன்றவை அதிகரிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படும் வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகின்றது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

அதேபோல இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் ஐம்பது சதவிகித அளவிற்கு அதாவது 8,154 கி.மீ. அளவிலான குழாயை அதிகபட்சமாக 24,642 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் மாதத்தில், இயற்கை எரிவாயுவைக் கடத்தும் பயன்பாட்டைச் செயல்படுத்துவதற்கான மூலதனச் செலவு கிமீ ஒன்றிற்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. அந்த அளவைக் கொண்டு பார்க்கும் போது. மொத்தம் 8,154 கிமீ குழாய்களுக்கான மூலதனச் செலவு நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருகிறது. இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டணம் இப்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. பெருநிறுவனங்களிடமே சேவைக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதால் நாளடைவில் அந்த அதிகாரமும் ஒழிக்கப்பட்டு விடும்.  ஆக சொத்து கைமாறிய பிறகு இந்தக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உயர்த்தப்படுகின்ற சாத்தியம் தெளிவாக இருக்கின்றது. அதன் காரணமாக குழாய் இயற்கை எரிவாயுவின் விலைகள் நிச்சய அதிகரிக்கும். இயற்கை எரிவாயுவை மூலப்பொருளாக அல்லது எரிபொருளாகப் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் விலையும் அதன் விளைவாக அதிகரிக்கும் என்பதால் மீண்டும் பாதிக்கப்படப் போவது மிகவும் சாதாரண எளிய மக்கள்தான்.

அற்ப பணம் அரசுக்கு, அதிக பணம் தனியாருக்கு

மற்ற பிற உள்கட்டமைப்பு சொத்துகளின் விஷயத்திலும் இதேபோன்றே நிகழப் போகிறது. பல ஆண்டுகளாக மக்களின் பணத்தில் கட்டப்பட்டிருக்கும் அரசு சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்படுவதால் கஜானாவிற்கு மிகவும் அற்பமான தொகையே கிடைக்கப் போகிறது. தங்கள் பணத்திலிருந்து கட்டப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு இனிமேல் பயனர் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் மக்கள் அதிக அளவு பணத்தை தனியார் நிறுவனங்களுக்குச்  செலுத்த வேண்டியிருக்கும்.

சுதந்திரம் பெற்ற இந்த எழுபதாண்டுகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை நெட்வொர்க்கால் நிறுவப்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு விரோதமாக இந்த தீவிர வலதுசாரி பாஜக ஆட்சி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை நேரடியாக பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்ற தனியார்மயமாக்கும் திட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் எழுந்த உறுதியான எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாத மோடி அரசாங்கம் அரசாங்க கஜானாவுக்கு வருவாயில் சொற்ப பங்கைப் பெற்றுக் கொண்டு மிகப்பெரிய உள்கட்டமைப்பு சொத்துக்களை கிட்டத்தட்ட இலவசமாக தனியார் பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு பைசா கூட முதலீடு செய்திராத பெருநிறுவனக் கொள்ளையர்கள் இந்த திட்டத்தின் மூலம் பொது உள்கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டு வருவாயின் மிகப்பெரும் பகுதியை சுருட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

ஆளும் கட்சி 2017-18ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட மொத்த நிறுவன நன்கொடைகளில் 92 சதவிகிதத்தை தன்வசம் கைப்பற்றிக் கொண்டதற்கு காரணம் இல்லாமல் இருக்கவில்லை. பெருநிறுவனங்கள் மற்ற தேசியக் கட்சிகளை விட 2017-18ஆம் ஆண்டில் பன்னிரண்டு மடங்கு அதிக தொகையை ஆளும் பாஜகவுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. 2014 முதல் 2018 வரையில் வழங்கப்பட்ட மொத்த நிதியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் ஆளும்கட்சி நன்கொடை பெறுவது தெரிய வருகிறது. இதுவரையிலும் அரசியல் நிதியுதவி அளித்தவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றாலும், அவ்வாறு நன்கொடையாக நிதியளித்துள்ளவர்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டின் பலனைப் பெற்ற அதே பெருநிறுவன/வணிகங்கள் என்பதும், அவர்களுக்காகவே இப்போது நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்புச் சொத்துகளின் கதவு கொள்ளையடிக்கவும் சூறையாடவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் நன்கு தெளிவாகிறது.

https://peoplesdemocracy.in/2021/0912_pd/national-monetisation-pipeline-pipeline-drain-public-wealth-corporate-coffers

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 2021 செப்டம்பர் 12 
தமிழில்: தா.சந்திரகுரு