வெ.நரேஷ் கவிதைகள்

வெ.நரேஷ் கவிதைகள்




எட்டுவழிச் சாலை
விரைந்து செல்கிறது
வயலில் புகுந்து
வீட்டின் மேல்

********************
என் வீட்டு
அலார பொத்தானை
அழுத்தும் முன்
பல்லியின் சத்தம்

*********************
என் வருகை
உறுதியானதால்
கதவுகள் அடைக்கப்பட்டன
இப்படிக்கு மழைச்சாரல்

**********************
பேருந்தில் வாசகம்
திருடர்கள்
ஜாக்கிரதை

**********************
இவ்வுலகில்
எப்படியேனும் வாழ்ந்துவிடலாம்
என நினைத்தேன்

பூமி வரவேற்றது மரணத்தின்
வழியில்

**********************
நீ இருப்பதை விட
இறப்பது மேல் என்று
கோபத்தில் கசிந்து விழும் அம்மா
கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்கவில்லை
இறந்து போவேன் என்று

– வெ.நரேஷ்