நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி

நூல் அறிமுகம்: என். சரவணனின் ‘தலித்தின் குறிப்புகள்’ – பொன் விஜி




*நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்*
*நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்*
*நம் அரசாங்கம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்*
*நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்
*நம் மொழி சாதி காப்பாற்றும் மொழி*

நண்பர்களே இதை நான் கூறவில்லை, பெரியார் கூறியதாக *ஆசிரியர் சரவணண்*அவர்கள் இக்கட்டுரையில் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆசிரியர் சரவணன் அவர்கள் தான் சொல்ல வந்த விடயத்தை வாசிப்போர் ஆகிய எங்களை தனது சிந்தனைக்குள் இழுத்துச் செல்வதை இந்த நூல் மிக அழகாக எடுத்துச் செல்கின்றது

இன்று நான் ஒரு *பூப்புனித நீராட்டு* விழாவுக்குச் சென்று வந்தேன். அங்கே சில ஆண்டுகள் தவறவிட்ட எனது நண்பனின் *மச்சானைக் * கண்டேன். அவர் ஒரு *மீன்பிடி* த் தொழிலைக் கொண்ட *சாதிப் பரம்பரையில் வந்தவர். அவரிடம் வழக்கம் போல் உரையாடினேன். அவரோடு சேர்ந்து. *டீ * யும் குடித்தேன். ஒரு சிலர் எங்களை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சென்றனர். அதைப் பொருட்படுத்தாது நாம் உரையாடினோம். நான் எனது *சாதியை * அவரிடம் கூறிவிட்டே தொடர்ந்தோம்.
அவர் கூறிய வார்த்தை என்னைக் கொஞ்சம் சிந்திக்க வைத்தது. *சக நண்பர்களுடனோ அல்லது ஏனைய நமது மொழி பேசும் மக்களிடமோ* நான் கதைக்கும் போது மிகவும் பயந்து பயந்து தான் கதைக்கிறேன் என்றார். *ஏன்*என்று கேட்டேன்,அதற்கு அவர், *எங்கே எனது சாதியைத் தெரிந்துவிட்டால் ** மிகவும் தொலைவில் வைத்துவிடுவார்களோ என்று எண்ணியே அவர் தனது நட்பைப் பாதுகாப்பதாக ஆதங்கப்பட்டார்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் ஒரு மனிதனின் பிறப்பிடம் எங்கு என்று தெரிந்துவிட்டால், அவன் இன்ன *சாதி * தான் என்று தெரிவதற்குத் தீயைவிட வலுவான *வேகம்* கொண்டு பரப்பக்கூடிய மக்கள் கூட்டம் அலைமோதுவதை அவதானிக்கலாம்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு முன், பின், மற்றும் இன்றைய சூழ்நிலையில், *சாதியின் * கொடுமைகளில் பெரிதாக மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. (விடுதலைப் புலிகள் காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகக் கூறப்படுவது ஒரு சார்பு நிலை என்றே அறியப்படுகிறது).
உலக வளரும் நாடுகளில் *சாதி யின் பங்கு, இலங்கையில் வெளிப்படையாகச் சொல்லப்படாமல் விட்டாலும், இன்றும் கூட அதன் தாக்கம், பூமியின் நடுப்பகுதியில் தகதகவென்று கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பு பேன்ற மனநிலையில் தான் *ஆதிக்க* சாதியினர் இருப்பதாகக் கூறப்படுகிறது. அது சங்கிலி போல் புலம்பெயர்ந்த நாடுகளிலும் கொடிகட்டிப் பறப்பதை உணரமுடிகிறது.
நண்பர்களே,
# *தலித் – தலித்தியம்* என்றால் என்ன?
# *அருந்ததியர்* என்று குறிப்பிடுவது யாரை?
# *இலங்கையில் வாழும்* அருந்ததியரின் பூர்வீகம் எங்கே?
# *சாதி வசைபாடல் * லின் வடிவம் எப்படி?
# *பஞ்சமரை* விடத் தாழ்த்தப்பட்டவர்கள் யார்?
# *சாதியூறிய* மொழியின் வடிவம் எப்படி?

# *தமிழனுக்குக்* கொடுக்பப்பட்ட நிறம் என்ன?

இது போன்ற 32 வகையான சிறு தலையங்கங்களை உள்ளடக்கி ஆராய்கிறார் ஆசிரியர் *என். சரவணன் அவர்கள்.

*அருந்ததியர் * என்ற ஒரு இனம் *இலங்கையில் * இருப்பதாக இப் புத்தகத்தின் மூலம் அறிந்து ஆச்சரியப்பட்டேன். இதுவரை காலமும் *பஞ்சமரைத் தான், *கிட்ட வராதே * அங்கேயே விலகிநில் என்று ஆதிக்க சாதியினரால் ஒதுக்கப்பட்டவர்கள் என்பதனை, அதனைக் காட்டிலும் மிகக் கீழ்மையான *நீ துப்பரவு செய்யும் வேலைக்குத்தான் லாயக் * என்று போற்றப்படும் இனமான இந்த *அருந்ததியர்* இருந்துள்ளமையும், ஏன் தற்போது கூட அவர்களது அடுத்த நேர சாப்பாட்டிற்குப் *பிச்சை* எடுக்கும் நிலையிலேயே வாழ்ந்து (இலங்கையில்) வருவதை ஆசிரியர் *என். சரவணன்* அவர்கள் தனது மிக நீண்ட தேடலுக்குப் பின் இங்கே பதிவு செய்கிறார்.

குறிப்பாக *சக்கிலியன்* யார்? அவர்கள் *தலித்துக்களில்* இருந்து வேறுபட்டவர்களா?
இது போன்ற கேள்விகளை நாம் எங்களுக்குள்ளே கேட்கும்போது, எங்கள் உள்ளத்தை அது குடைந்து எடுக்கின்றது .
ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இங்கே இலங்கையில் மூன்று விதமான *சாதியை * அடிப்படையாகக் கொண்டு, அதனை *வடகிழக்கு, மலையகம், சிங்களமக்கள் * ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு, நடைமுறை வாழ்க்கையில் அதன் வீரியத்தைப் பல கோணங்களில், பல உதாரணங்களுடன், தனது நேரடி உரையாடல் மூலம் அதனைத் தெளிவாக்குகிறார்.
*சக்கிலியன்* என்ற சொல்லாடல் இந்த உலகத்தைவிட்டு அறவே ஒழித்துக் கட்ட வேண்டும் என்றே ஆசிரியர் கடுமையாக விமர்சிப்பதையும், அதனால் *அருந்ததியர்* தமது வாழ்க்கையில் அனுபவித்துவரும் துன்பங்களை அறிந்து கொள்ள, நண்பர்களே கண்டிப்பாக வாசியுங்கள்.
*தலித்தின் குறிப்புகள் * என்று கொடுத்தாலும், இப் புத்தகத்தில் பலதரப்பட்ட, இந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியே வரமுடியாதா? எனத் துடிக்கும் அவர்களது நிலமையை, ஏன் அவர்கள் *அகமணத்தை * இன்றும் கைவிடாமல் பின்பற்றுகிறார்கள், அவர்களது *குலதெய்வங்கள் * எவரால் *இந்துக் கோயிலாக* மாறியது, எங்கு சென்றாலும் மற்றவர்களால் அரவணைக்கும் *செயலைத் தாங்கிய வண்ணம் நடப்பது, இது போன்ற பல முக்கிய குறிப்புகளை நீங்களும் உற்று நோக்குங்கள் என்று தருகிறார் ஆசிரியர்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட *அருந்ததியர் * அவர்கள் தொடர்ந்தும் தங்களது தாய்மொழியான *தெலுங்கையே* பேசுகிறார்கள். (தமிழும் கதைப்பார்கள்) தங்கள் சமூகத்திலிருந்து வெளியே வருவதற்கான அவர்களது முயற்சிகளை ஆசிரியர் இங்கே எடுத்துக் கூறத் தவறவில்லை. அதன் ஒரு பகுதியாக, அவர்கள் *சிங்கள மொழியைக் * கற்றல், *கிறிஸ்தவ * சமயத்தில் இணைதல், தங்களுக்கென்று சங்கங்கள் அமைத்து அதன் மூலம் தமது உரிமைகளைப் பெற, மாற்ற முயற்சித்தல், இது போன்ற அறியாப்படாத அதிக செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார் ஆசிரியர். அவருக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
இதிலே *வெள்ளைத் திமிரும் வெள்ளாளத் திமிரும் * என்ற தலையங்கத்தில் 3 பிரிவுகளாகத் தந்துள்ளார் ஆசிரியர். கண்டிப்பா இதற்காவுதல் வாசிப்பாளர்கள் அறிந்து கொள்வது அவசியம் என்றே தோன்றுகின்றது.
உண்மையில் எமது சில உதாசீனமான வார்த்தைகளை *என். சரவணன் அவர்கள் நினைவு படுத்துவது இங்கே குறிப்பிடத்தக்கது.
(உண்மையும் தான்).
குறிப்பாக, இலங்கை மக்கள் *சாதியை* எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள், எதில் எல்லாம் அது ஊடுருவி நிற்கின்றது, புலம்பெயர் வாழ்விலும் அதன் ஆட்டம் எப்படி ஆடுகிறது, இனி வரும் அடுத்த *சந்ததியினரின் * உள்ளங்களில் எப்படி விதைக்கின்றார்கள், வெளியே சொல்லிக் கொள்வது *சாதியாவது மண்ணாங்கட்டியாவது * என்று சொல்லுவார்கள், ஆனால் தங்களது சொந்த வாழ்க்கையில் *உடும்புப்பிடி* போல் இருப்பார்கள். இது போன்ற விடயங்களை உதாரணங்களுடன் வாசிக்கக் கூடியதான ஒரு சிறந்த நூல் என்றே சொல்லலாம்..நான் இங்கு குறிப்பிட்டதைத் தவிர இன்னும் அதிக, உறுதியான பதிவுகளை நீங்களும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று கூற ஆசைப்படுகிறேன் நண்பர்களே…
இங்கே நான் எல்லாவற்றையும் குறிப்பிட்டு விட்டால் புத்தகத்தை வாசிப்பது போல் ஒரு அனுபவம் ஏற்பட்டு விடும், அதனால் மேற்கொண்டு அதிலுள்ள பல உன்னதமான சிந்திக்கக்கூடிய பகுதிகளை இதிலே நான் குறைத்துக் கொள்கின்றேன்.
நன்றிகள்.
பொன் விஜி – சுவிஸ்.
நூல் : தலித்தின் குறிப்புகள்
ஆசிரியர்கள் : என். சரவணன்
விலை: ரூ. 180/-
பக்கம் : 196

வெளியீடு : எழிலினி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
bharathiputhakalayam@gmail.com
Pathayam Short Story by Kamaladevi Aravindhan Synopsis 74 Written by Ramachandra Vaidyanath. கமலாதேவி அரவிந்தனின் பத்தாயம் சிறுகதை - ராமச்சந்திர வைத்தியநாத்

சிறுகதைச் சுருக்கம் 74: கமலாதேவி அரவிந்தனின் பத்தாயம் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




தமிழ் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் எழுதிவரும் திருமதி கமலாதேவி அரவிந்தன் சிங்கப்பூரின் முக்கியமான படைப்பாளி.

பத்தாயம்
கமலாதேவி அரவிந்தன்

நீலகேசம் தரவாட்டின் பாரம்பரிய வீடு விற்பனைக்கு என்றபோது போட்டி போட்டுக்கொண்டு வாங்க வந்தவர்களைப் பார்த்து ஒரு கணம் திக்குமுக்காடிப் போனெதென்னவோ உண்மைதான். ஆனால் நாட்டு நடப்பு அறிந்த பிஷாரடி அம்மாவன்   “சிங்கப்பூரிலிருந்து வந்திருக்காங்கன்னதும் சுலபமா அவுங்களை ஏமாற்றிடலாம்னு நினைபாடே! இந்த பிஷாரடி இன்னும் உயிரோடதான் இருக்கேன்” என்று சீறிப்பாய்ந்தபோதுதான் நிலவரமே புரிந்தது.

அது ஒரு நாலு கட்டு வீடு. சேதுலட்சமி சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தாலும், ஒவ்வொரு விடுமுறைக்கும் முடங்காது, கேரளத்தில் உள்ள இந்தத் தரவாட்டு வீட்டில்தான் வளர்ந்தாள். அன்று ஜே ஜே எனத் தாய்மாமன், சித்தி, தாத்தா, பாட்டி, சின்னத் தாத்தா, முறை வைத்த ஏட்டன்மார்கள், சேச்சிமார்கள் என வீடு முழுக்க உறவுகள் கொண்டாட விளையாடி மகிழ்ந்த நாட்களை அவ்வளவு லேசில் மறக்க முடியாது.

சித்தார்த்துக்கும் இந்த வீடு பிடிக்கும்தான் என்றாலும், விஸ்தரித்துக் கிடந்த சொத்துக்களை எவ்வளவு நாட்களுக்குத்தான் மற்றவர்களையே நம்பி விட்டு வைப்பது?  பையன்கள் இருவருமே கேரளத்தில் நிரந்தர வாசத்துக்குக் கூட பெற்றோரை விட விரும்பவில்லை.  அவ்வப்போது வந்து போவதற்கு முற்றிலும் நவீன மோஸ்தரில் கட்டிய புதிய வீட்டில்தான் அவர்கள் தங்கவேண்டும் என்று அன்புக் கட்டளை வேறு. 

தரவாடு பழையவீடுதான் என்றாலும் சேதுலட்சுமியின் உள்ளம் களித்த உவகை பொங்க வைக்கும் சம்பவங்கள் மட்டுமல்ல, மறக்கமுடியாத புகை படிந்த லிகித மாயையும் இங்குண்டு.  ஒரு விடுமுறைக்கு நடனம், அடுத்த விடுமுறைக்கு கர்நாடகச் சங்கீதம், இன்னொரு விடுமுறைக்கு அட்சரம் பிசகாமல் சொல்லும் நாராயணீயம் வகுப்பு என அப்படியே கேரளத்துக் குட்டியாகவே அவளைப் பழக்கியிருந்தனர் பெற்றோர்.  இந்த வீட்டில் வைத்துத்தான் சித்தார்த் அவளைப் பெண் பார்க்க வந்தான்.

அது முற்றம் ரேழி என்ற வீடமைப்பு அல்ல.  வீட்டு முகப்பே கிளிக்கூண்டில் வரவேற்கும் அழகிய வேலைப்பாடு அமைந்த விசாலமான வாசல் கட்டு. உள்ளே நுழைந்தால் தொங்கும் ரவிவர்மா ஓவியங்கள். சுவரெல்லாம் அழகிய குட்டிக் குட்டி சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த சுவரோவியங்கள் என எதுவுமே இடிந்து சிதிலமாகிவிடவில்லை. ஒவ்வோர் அறையிலும் பெரிய பெரிய கட்டில்கள் மர அலமாரிகள், விசாலமான ஜன்னல்கள். மாடிக்குச் செல்லும் படிக்கட்டே வேலைப்பாடு மிக்கதுதான்.  பதினெட்டு அறைகள் மேலும் கீழுமாகி கொண்ட அந்த விசால வீட்டைச் சுத்தப்படுத்தவே கொச்சு கேசவனுக்கும் அவன் மனைவிக்கும் நேரம் சரியாக இருந்தது,

வீடா அது? அப்படி ஒரு மகிழாலயம்.

அடுக்களைக்குப் போகும் அறைக்கு முன்னால் வெங்கல உருளிகள், வெங்கல தாம்பாளங்கள், உயரம் உயரமான குத்து விளக்குகள், எண்ணிக்கையே இல்லாத சமையல் பாத்திரங்கள் என எல்லாமே பொன்போல் துலங்கிய தூய்மையில் வீட்டை வாங்க வந்தவர்கள் உடனே வாங்க அவசரப்பட்டதொன்றும் கம்பச் சித்திரமல்ல.  

அடுக்களைக்கும் அங்கண அறைக்கும் இடைவழி அறையில்தான் நீண்ட அந்தப் பத்தாயம் இருந்தது.  உப்பு தொட்டு கற்பூரம் வரை அந்தப் பத்தாயத்தில்தான் சேகரமாய்ப் பத்திரம் காக்கப்பட்டிருந்தது.  இதுதான் இந்தப் பத்தாயம்தான் சேது லெட்சுமியை நிலை மறக்கச் செய்தது. தவறாது வரும் மாதவிடாய்பேல் இந்த பத்தாயம் காணும்போது மறவாது வரும் நினைவுகள். சிலந்தி வலையாய்ப் பின்னிய ஞாபக அடுக்குகளிலிருந்து நொறுங்கிப்போன கனவுச் சிப்பம், மூச்சுத் திணற அதைச் சுமக்கும் துக்கம், இப்படியே மோனம் முற்றாகச் சித்தித்து விடாதா என்றுகூட பேதையாய் ஏங்கினாள்.

வழவழப்பான நல்ல தடித் தேக்கில் செய்யப்பட்ட பத்தாயம், இன்றும் மெருகு குலையாமல் ஜம்மென்று வீற்றிருக்கிறது. பட்டுப்போல் பராமரிக்கப்பட்டு வரும் மென்மையான அதன் மேல் உட்காரும்போது ஏனோ விக்கி விக்கி அழவேண்டும்போல் இருந்தது. சிலந்தி வலையாய்ப் பின்னிய  ஞாபக இடுக்குகளிலிருந்து நொறுங்கிப் போன நோக்காடின் உசாவல்கள். சேதுலெட்சுமி பரிதவித்துக் கிடந்தாள்.

விலை ஒன்றரை கோடிக்குப் பேரம் படிந்ததில் சித்தார்த்துக்கு மகிழ்ச்சிதான். ஆனால் சித்தார்த்துக்குப் புரியாத புதிர் ஆரம்பத்தில் எல்லாவற்றுக்கும் உற்சாகமாய் ஆமாம் சாமி போட்டவள் இங்கு வந்தபிறகு ஏன் அடியோடு மாறிப் போனாள்?  

சேதுலெட்சுமி பருவம் மலர்ந்து நின்ற நேரம். அந்த விடுமுறைக்கு நாராயணீயம் வகுப்பில் மாணவன் ஒருவன் படுசுட்டியாய் உச்சாடனங்களை அவ்வளவு அழகாச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியர் இவர்களைத் திருத்திக் கொண்டே அந்த மாணவனை வியந்து ரசித்துக் கொண்டிருந்தார். அவ்வளவு பத்திச் சிரத்தையோடு நாமம் சொல்லும் வேணுவின் சொல்வளம் தாங்காது. சேது லட்சுமிக்கும் இவளது சேச்சிமார்களுக்கும் வேணு உற்ற தோழனானான்.  

இந்தப் பழக்கத்தின் சுவாதீனத்தில்தான் இவள் சிங்கப்பூர் திரும்பும் முன்தினம் மாலை அவளைத் தேடி வீட்டுக்கே வந்து விட்டான். அவளுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க கையில் ஒரு புத்தகத்தோடு அவளைத் தேடி வந்த வேணு, அவள் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே  வந்து விட்டான்.   

அதோடாவது நிறுத்தியிருக்கலாம். அல்லது அங்கிருந்தேயாவது அவளை அழைத்திருக்கலாம். ஆனா என்ன இருந்தாலும் அவனும் சிறுவன்தானே, யாரோ அவள் பத்தாய அறையில் இருப்பதாகச் சொல்ல நேராக  பத்தாய அறைக்கே தேடிச் சென்றுவிட்டான். அன்று உண்ணி அப்பமும் இலை அப்பமும்தான் பிரதானச் சிற்றுண்டி. கையில் உண்ணி அப்பத்தைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சேது லெட்சுமி கையிலிருந்த உண்ணி அப்பத்தை அவனை நோக்கி நீட்டினாள். அடுத்த கணம் தட்டு அப்படியே விசிறியடிக்கப்பட்டு தூரத்தில் போய் விழுந்தது என்ன ஏது என்று கூட புரியாமல்.

சேதுலெட்சுமி என்று அரண்டுபோய், அந்த 15 வயது சிறுவன் திகைக்க, “மடியிலிட்டுப் பெயர் வைத்தவன்போல் என்னடா சேதுலெட்சமி? தம்புராட்டி என்ற வாசலில் நின்று அழைக்க வேண்டியவன் நடு வீட்டுக்குள்ளேயே நுழைவதென்றால் என்ன தைரியம்?”  பிஷாரடி மாமன் அவன் செவியைப் பிடித்துத் திருகி வாசலில் கொண்டு போய்த் தள்ளாத குறையாய் விரட்டியடித்த கோலம், இந்த ஜென்பத்தில் சேதுலெட்சமியால் மறக்க முடியாது.  

அவளுக்கு ஜாதீயம் கற்றுக் கொடுக்கப்பட்டடதுகூட அன்றுதான். மிகக் கடுமையாக இவர்கள் பாரம்பரியமும் தரவாடு மகிமையும் விளக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்ட அனுபவமும் பல நாட்களுக்கு வடுவாகிப் போனது. 13 வயதுப் பெண் குழந்தையும், 15 வயது சிறுவனும் தரவாடு மகிமையில்தான் பேச வேண்டுமா?  பழக வேண்டுமா? யாரிட்ட சட்டம் இது?

பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் இன பேதம் தெரியாது வளர்ந்தவன் சேதுலெட்சுமி. கபடமற்றுச் சீன மலாய் என அனைவரிடமும் கலந்துறவாடும் பண்பு கற்ற அவளுக்குள் பெருந்திரையொன்று விழுந்தது. இற்றுப் பொடிந்த கனவில் சடங்கும் சம்பிரதாயங்களும் பூதாகரமாய் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.  

திருமணம் நிச்சயமானதும்  சமையல் வேலை கற்றுக் கொடுத்த வந்த அம்மாயியிடம் லேசாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். வேணு சாதாரண சமையல்காரனின் மகன் என்பது மட்டுமே தெரியவந்தது. மாந்தோப்பில் பழுத்த மாம்பழங்களில் இரண்டு கூடை எப்போதுமே இவள் ஆசையாய்க் கொடுக்கும் பள்ளி ஆசிரியர் மாதவன் நாயரின் மகள் தேவயானியின் மூலம்தான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு வேணுவின் பெற்றோர் ஊரை வீட்டே போய் விட்டார்கள் என்ற செய்தி கிட்டியது. என்றேனும் ஒரு நாள் வேணுவைக் கண்டு அந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற நினைப்பும் கருகியே போனது.

சித்தார்த் மகிழ்ச்சியோடு வந்தவரை வரவேற்றான். பிஷாரடி அம்மாவனுக்கும் பரம திருப்தி. என்ன தீட்சண்யம். பார்த்த கணமே மரியாதை பொங்கியது, சேதுலெட்சுமி மட்டும் இவரைப் பார்த்தால் வீட்டைக் கண்டவரிடம் கொடுத்துவிட்டுப் போகிறோமே எனும் அவள் கவலையே பறந்தோடிவிடும்.

ஒவ்வோர் இடமாகப் பார்த்துக் கொண்டே வலம்வந்த அந்த ஆங்கிலப் பேராசிரியம் அந்த இடைநாழி அறைக்கு முன்னே வந்ததும் சட்டென்று நின்றுவிட்டார். நின்று நிதானமாக அந்த அறைக்குள் நுழைந்தவரை சேதுலெட்சுமி அப்பொழுதுதான் ஏறிட்டாள்.

“நமஸ்காரம்” என்று கரம் கூப்பியவளை முகம் மலர மலர நிமிர்ந்து பார்த்தார்.

“தம்புராட்டி என்னைத் தெரியவில்லையா?”

சேதுலெட்சுமி வெலவெலத்துப் போனாள். அந்தத் தேஜஸ் அந்தக் கூர்மை அந்த மென்மை இவர். . . இவர். . . ஒரு வினாடி பிரபஞ்சம் கிடுகிடுத்தது. பொத்திப் பொத்தி இதயத்துள் போட்டு அழுத்திய லிகித மாயை சட்டென்று விலக “வேணு” என அவள் நாத்தழுதழுக்க, வேணு பத்தாயத்தின் மேல் கம்பீரமாக அமர்ந்தார்.

கேரளப் பல்கலைக் கழகத்தில் Involuted writing  எனும் தெரிவில் முதல் பரிசு பெற்ற கதை)

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.