புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம் | Celebrating New Year with books - பாரதி புத்தகாலயம் Bharathiputhakalayam - https://bookday.in/

புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம்

புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம் கவிதையாய்ப் புலர்ந்ததென வர்ணிப்பதுண்டு. கவிதையால் பிறந்தது எனக்கான புத்தாண்டு. பாரதி புத்தகாலயம், சென்னையில் அரும்பு சிறார் நூலரங்கில் நடத்திய ‘புத்தகங்களோடு புத்தாண்டுக் கொண்டாட்டம்’ நிகழ்வில் உடல் நிலையின் ஒத்துழைப்போடு தொடக்கத்திலிருந்தே கலந்துகொண்டேன். தமிழ் ஒளி கலைக்குழுவினர் தம்…
அஞ்சலகம் கவிதை – சாந்தி சரவணன்

அஞ்சலகம் கவிதை – சாந்தி சரவணன்




எனக்கு உன் மீது காதல்!
ஏன்?

“அம்மா போஸ்ட்”
“சார் தபால்”
“மணி ஆர்டர்”
“சார் தந்தி”
இந்த சொல்லாடல்கள்
என்னுள் உணர்ச்சிகளை தூண்டியதே
ஆதலால் உன் மீது காதலா?

” தேர்ச்சி அடைந்துள்ளீர்”
என தேனான செய்தி தந்ததாயே
ஆதலால் உன் மீது காதலா?

விடுதி மேலாளர் ஒவ்வொரு பெயர் படிக்கும் போது
நமக்கு கடிதம் வந்துள்ளதா?
என என் மனம் ஏங்குமே!
ஆதலால் உன் மீது காதலா?

எழுதுகோல் கொண்டு கிறுக்கி கிறுக்கி
நாளடைவில்
முத்து முத்தாக எனது கையெழுத்து
பரிமாணம் அடைந்ததே
ஆதலால் உன் மீது காதலா?

அன்புள்ள அப்பா அம்மாவிற்கு
அன்பு சீத்திக்கு
அன்புள்ள தாத்தா பாட்டிக்கு
அன்பு கணவருக்கு
அன்பே ஆருயிரே
என உள்ளத்தின் உணர்வுகளை துவக்கத்திலேயே சொல்லிவிடுவாயே
ஆதலால் உன் மீது காதலா?

“பொண்ணு பிடிச்சிருக்கு”
என ஒற்றை வரியில்
என் வாழ்க்கையை சுமந்து வந்தாயே
ஆதலால் உன் மீது காதலா?

“கிளம்பி வா” என இணையரின் அன்பை ஏந்தி வந்தாயே
ஆதலால் உன் மீது காதலா?

மறைந்த அப்பாவின் கடிதத்தில்
வாழும் உயிராய்
இன்றும் நீ இருப்பதால்
உன் மீது காதலா?

பொங்கல் வாழ்த்து,
புத்தாண்டு வாழ்த்து
தீபாவளி வாழ்த்து,
என எனது மகிழ்ச்சியை
சுமந்து செல்வாயே
ஆதலால் உன் மீது காதலா?

ஸ்டாம்ப் கலெக்ஷன்
என தலைவர்களை
நான் அறிந்து கொள்ள செய்தாயே
ஆதலால் உன் மீது காதலா?

கட் சேவை, குறுஞ்செய்தி, இன்ஸ்டாகிராம்
டிவிட்டர், வாட்ஸ்அப், முகநூல்
என நொடியில் தகவல்களை பரிமாறி கொண்டாலும்
காத்திருந்து நீ கொண்டு வந்த கடிதம் போல் இல்லை என்பதால்
உன் மீது காதலா?

ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
எத்தனை எத்தனை திட்டங்கள்
காடு மேடு கடந்து வந்து எங்களிடம் சேர்ந்தாயே
ஆதலால் உன் மேல் காதலா?

சிக்னல் இல்லை என ஒரு போதும்
நீ சொன்னதில்லை
என்பதால் உன் மீது காதலா?

எத்தனை எத்தனையோ காரணங்கள்
குவிந்துகிடக்கு அஞ்கலகமே
உன் மீது காதல் கொள்ள!

உன் காதலியாக இருப்பதில்
நான் கர்வம் கொள்கிறேன்!

திருமதி. சாந்தி சரவணன்
Mob:9884467730

Sindhuja Sundaraj Poems சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்

சிந்துஜா சுந்தராஜின் கவிதைகள்




ஜனநாயக நாட்டில்
**************************
புலம்பெயர் தொழிலாளர்களின்
புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும்
கேட்கிறது
உயரற்ற உடல்களாய்
ஊர் திரும்புகையில்
உடல் மட்டுமே ஊரையடைந்தது
உறவுகளைத் தேடி
உயிர் பிரிந்தது
இந்த ஜனநாயக நாட்டில்………

உரிமைக்குரல்
*******************
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்றோம்
எட்டு மணி நேர வேலை என்றோம்
குழந்தைகள் கூலித்தொழிலாளியில்லை என்றோம்
ஆண் பெண் சமம் என்றோம்
சுரண்டலே கூடாது என்றோம்
இவையனைத்தும் உழைப்பாளர் உரிமை என்றோம்
அமைப்பாய் திரண்டோம் சிகாகோவின்
ஹேமார்க்ககெட் சிவந்தது
“உழைப்பாளர் தினம் “ உரிமை பிறந்தது
“உலகமயமாக்கல் சூழ்நிலையில்
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”
நோயும்,பேயும் (முதலாளித்துவம்) ,
பசியும்,பட்டினியும்
நம்மை துரத்துகிறது
நாம் நெடும்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது
முழங்குவோம்
வாழ்க மே தினம்! வளர்க்க தொழிலாளர் ஒற்றுமை
ஓங்குக மே தின தியாகிகள் புகழ்………

பசி எனும் பிணி
*********************
வருவதும் போவதுமாய் இருந்த
வாழ்கையில்
அழையா விருந்தாளியாய் வந்தது
இந்த நோய்
அரசாங்கம் அழைத்து கொடுத்தது
கையில் தட்டை
முன்பு சாப்பிட்ட மீச்சமிதியை
தேடிகொண்டிருந்ததோம்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
ஆனால்
வயிறு மட்டும்
வாய் திறக்கிறது
பசி பசி பசி
என்று சொல்லிக்கொண்டே………

வேண்டாம் சா(தீ) மனிதநேயம்
************************************
சா(தீ) என்னும் தீயெடுத்து
செங்கழலில் அவளையிட்டு
அவளின் அழுகுரலில்
ஒய்யாரமாய் குளிர்காயும்
உங்ககளை தீயும் கூட
தீண்டமறுக்கும்
காரி உமிழும்
உங்களின் சாதீ
என்னும் சாக்கடையில்
தீயும் தற்கொலை செய்யும்
இந்த மனிநேயமற்ற காட்டுமிரண்டிகளிடமிருந்து……

ஒட்டு அரசியல்
******************
காலம் கடந்து காத்திருந்தோம்
கையில் மையிட்டு
எதிர்காலம் எதுவென்று நினைத்து
காலம் காட்டியது
காலணி இல்லாமல்
கால்நடை பயணம்
நிகழ்காலம் எதுவென்று சொல்லி
பசி ,பரிவு
வறுமை, வலி
துயர், தூக்கம்
அழுகை, ஆற்றுமை
இவையனைத்தும் பாலைவனமானது
எங்கள் பாதங்களில்
வாழ்க பாரதம்…..

விசாரணை
***************
உதிரம் கொட்ட இருவரின்
உடல் உதிரகண்டேன்
அதிகாரம் ஆட்கொண்டு
ஆளக்கண்டடேன்
ஆயிரம் ஆயிரம்
வலிகள் வலியகண்டேன்
வாய்திற என்று உள்ளம்
சொன்னது
வீதிக்கு சென்று உண்மையை
சொல் என்றுது
கணவன் கரம்பிடித்து
மகளின் விருப்பமறிந்து
எழுந்தேன் ரேவதி என்ற
ஒன்றை ஆடையாளமாய்
நின்றேன் ரேவதீயாய்……..

விவசாயின் குரல்
**********************
சட்டமென்று இயற்றி
கையில் கொடுத்து
பரிசு என்றாய்
அது பரிசு அல்ல
பாதகம் என்று
எழுந்து நின்ற கால்களை
உதைத்து சென்றாய்
தடுப்பனைகள் போட்டு
தடுக்க நினைத்து
தடுப்புகள் அடுப்புகளானது
நெடுஞ்சாலைகள் உழுது
எங்களை பதுங்கு குழியில்
அடைக்க சொன்னாய்
மண்ணிற்கு பிரசவம் பார்த்த
மண்ணின் மைந்தர்கள்
நாங்கள்
இதோ
உன் பதங்கு குழிகளின் மேல்
பாலமைத்து
புறப்படுகிறோம்
பார்லிமென்ட் நோக்கி……….

நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய
கைகள்
இன்றைக்கு உங்களின் லத்தியை
கையாள்கிறது
வானம் பார்த்தே விவசாயம் செய்து பழகிய
கண்கள்
இன்றைக்க் கண்ணீர்புகைக்குண்டுகளை
பார்க்கிறது
குயில்களும் மயில்களின் சத்தம் கேட்டே
பழகிய காதுகள்
இன்றைக்கு தண்ணீர் பீரங்கியால்
காதுகளை துலைக்கிறது
வயிற்றுக்கு உணவு அளித்தே பழகிய
கருணை
இன்றைக்கு வீதியிலிறங்கி கையேந்துகிறது
சட்டம் நீதியை மட்டுமே தரும் என்று
நம்பிருந்த எங்களுக்கு
கார்ப்ரேட்க்கு மட்டுமே
சேவகம் செய்யும் என்பதை உணர்த்துகிறது
போராட்டம் எங்கள் விதை எங்களுக்கு
கற்றுத் தந்த பாடம்
கட்டாயம் மீண்டு எழுவோம் விதையிலிருந்து செடிகளாக……

ஏன் என்று கேள்வி
எல்லோருகம் எங்களிடத்தில்
வயக்காட்டில் கோதுமை
விளையவில்லை என்று
வீதிக்கு வரவில்லை
கையில் கலப்பை தவிர
உழவேறு எந்த ஆயுதமில்லை
வயலருகே கருவேலம்
வளர தொடங்கியது அது
வேளாண் பாதுகாப்பல்ல
வேலிப்போல தோன்றும் விஷம்
உறைப்பனி, கடுங்குளிர்
கொட்டிய மழை
திட்டிய அரசு
இனி
சுட்டெரிக்கும் வெயிலென
போரடிக்கொண்டியிருக்கிறோம்
போர்களத்தில் நின்றல்ல
எம் நாடு
எம் மக்களிடம்
செவிமடுத்து கேளுங்கள்
பகத்சிங் பிடித்த
செங்கொடி பிடித்து
செங்கொடி ஊன்றி
வருகிறோம்
புரட்சி பாதையில்
சுதந்திர இந்தியாவின்
மிக நீண்டப்போரட்டம்
நடத்தி
கருவேலம்(வேளாண் சட்டம்) எங்கள்
காவலுக்கு தேவையில்லை
என்ற உரிமைக்குரலோடு……
100வதுநாள்
விவசாயின்குரல்

நல்ல இதயம் புன்னகைகட்டும்
************************************
நல்ல இதயம் பூங்காவாகட்டும்
நல்ல இதயம் வேராகட்டும்
நல்ல வார்த்தை பூக்களாகட்டும்
நல்ல செயல்கள் பழங்களாகட்டும்
பட்டாம்பூச்சியாய் சிறக்க
வானம் கேட்கவில்லை
பயந்து நின்றே
பள்ளங்கள் புதைக்குழியானது
இனி புதைகுழி மீது பூக்கும்
புன்னகைக்கட்டும் சிறார்களின்
சிரிப்புகளில்……

பெண் கல்வி
****************
தோட்டாக்கள் என்னை
துளைத்தபோதும்
என் பேனாவின் முனை
உங்களின் மூளைக்குள்
சென்று
கேட்டுகொண்டேயிருக்கும்
பெண் கல்வி என்னும்
முழக்கத்தோடு……

நிறவெறி
*************
எங்கள் நிறம் கொண்டு
உங்கள் அதிகாரம்
எங்கள் மீது பாய்கிறது
நிற வெறியால்
“கான்ட் பரீத்” என்று
நான் சொல்லியது
உங்கள் காதுகளில்
விழவில்லை
ஆனால் இன்றோ
எல்லோர் காதிலும்
விழுகிறது
என் மூச்சுத் துடிப்பின்
“லப் டப்”
நமது உரிமையக்காக
எழுந்து நின்று
போராடுங்கள் என்கிறது…..

அதிகாரம்
*************
உழைப்பாளியின் வலியறியாத
நீங்கள் எங்கள் வாசல் வந்து
கேட்ட பிச்சை
நீங்கள் வைத்திருக்கும்
இந்த அரசாங்கம்
காலம் வரும்
உங்கள் அதிகாரம்
வீழும்……

ஜிகாத்
*********
கொடுமைமிகு நாட்டுகளிலும்
கண்ணியம் காப்பது ஜிகாத்
கடமையொன்றே கண்ணாக களம்
காண்பது ஜிகாத்
பொறுப்போடு பெற்றோருக்கு
பெருமை சேர்ப்பது ஜிகாத்
பொருத்தாலும் மனிதம் போற்றி
மறத்தலும் ஜிகாத்
கால்கடுக்க காதங்கள் பல கடந்து
நீதிக்கு போர் ஜிகாத்
மதமறியாது ,குலமறியாது
மொழியறியாது, இனமறியாது
மனதை பிணைத்தவாறு
அணைத்து கொள்வது ஜிகாத்
அன்பை அள்ளி தெளிப்பது
லவ் ஜிகாத்……..

கருத்து சுதந்திரம்
***********************
கருத்து சுதந்திரம் பேசும்
மக்களின் மொழியாய்
பாமரனின் எழுத்தாய்

கருத்து சுதந்திரம் பேசும்
கேள்விகள் அனலாய்
மதியின் முகமாய்

கருத்து சுதந்திரம் பேசும்
அதிகாரத்தை எதிர்த்து
எங்கள் குரல்கள் நசுக்கப்படுமாயின்
ஆயிரம் ஆயிரம் குரல்கள்
கூக்குரலிடும்
உண்மையை
உடைப்பதற்கு

கருத்து சுதந்திரம் பேசும்
ஊடகத்தின் வழியாய்
மக்களின் முகமாய்
ஊடகவியலாளர்களாய்
உண்மை
எழுதுகோலில் மையாகட்டும்………

எங்கள் குடியுரிமை
************************
கறைப்பட்ட கைகள்
கரம் நீட்டிக்கேட்கிறது
குடிமக்கள் யாருயென்று?
புண்பட்ட நெஞ்சம்
புலம்பலோடு சொல்கிறது

ரத்தம் சிந்தி
யுத்தம் புரிந்தோம்
பிரிவினை இல்லையென்று
மதம் என்னும் கொடாளி கொண்டு
வெட்டப்பட்டது
தொப்புள் கொடி உறவு
எங்கள் குடியுரிமையும்
எங்கள் அடையாளமும்…….

புத்தாண்டு பிறக்கட்டும்
*****************************
ஆஸ்திரிய காடுகள்
அழிந்தன
விலங்குகள் கலங்கின
எரிமலை வெடித்தது
என்குமியிர்கள் மாய்ந்தன
கிருமிகள் கால் பதித்தன
காலமின்றி காலம் பதில் சொல்கிறது
புலம்பெயர் தொழிலார்களின் புலம்பல்கள்
நெடுஞ்சாலை முழுதும் செப்ப்பனிகின்றது
கறுப்பின கொலை நிகழ்ந்தது
உலகம் கொதித்து எழுந்தது
கால்பந்து நாயகன்
களம் காணாது மண்ணில் போனது
விவசாயிகள் வீதியிலிறங்கி
போரட்டங்கள் நிகழ்கின்றன
என் உலகம் முழுதும்
துயர்கள் சுழ்ந்தன
பூமி புன்னைகக்க
புத்தாண்டு பிறக்கட்டும்
இப்படிக்கு காலம்

சட்டமும் சுற்றுச்சுழலும்
****************************
தென்றல் தடுப்பனையால் நிற்பதுயில்லை
அலைகள் ஒருபோதும் பேசுவதை நிறுத்தாது
பெய்யும் மழை நதியின் ஓட்டத்திற்கு காத்திருக்காது
விடியும் கதிரவன் வெப்பத்தை காணாது
கானகம் விலங்குகளின் குடாரம்
கிளையமைப்புரு கலைந்தனவே பேராசைப் பெருந்தீனியர்
கணமும் காத்திருக்காது
கடைசி மரம் காணமல் போகும் வரை
கடைசி நீர்த்துளி விஷமாகும் வரை
கடைசி மூச்சுக்காற்று நச்சுயாகும் வரை
கடலில் கடைசி மீன் பிடிக்கும் வரை
கணப்பொழுது தாமதிக்காமல்
இயற்கை அன்னையின்
ஆற்றல் அறிந்தவர்கள் நாம்
விழித்தெழு சவக்கிடங்கில் சொர்க்கம் ஒருபோதும் மலரது……….

நிறம் மாறும் மனிதிர்கள்
அலைகள் இல்லா கடற்கரைகள்
எதிரொலிக்காத மலை முகடுகள்
ஈரமில்ல்லாத பாறைகள்
அழகாய் தோன்றும் புதைக்குழிகள்
இயன்றவரை உதவாத உள்ளங்கள்
பசுமையை பிரசிவிக்கும் –கார்புகனிகள்
நறுமணம் வீசும் நச்சுமலர்கள்
விண்ணிலிருந்து விழும் குண்டுமழைகள்
இப்படி நிறம் மாறும் மனிதர்கள்
பச்சோந்தியின் விசுவரூபங்கள்…..

ஆம் போர் நடக்கிறது
**************************
துயருள்ளம் துடித்திடர் தூக்கிலிடும்
போர் நடக்கிறது
காயமுற்ற கால்கள் கானகத்திலிடும்
வன்மம் நடக்கிறது
பட்டினிக்கு மக்கள் பலியிடும்
கொலைதொழியில் நடக்கிறது
கண்கள் பார்த்துகொண்டு
தான் இருக்கும்
காதுகள் கேட்டுக்கொண்டு தான்
வாய் மட்டும் பேசாது எதிர்வினையாற்ற
ஊமையாய் ஊடகம்
ஊமையாய் ஊமையாய்
எம் மக்கள்…….

பெருந்தொற்று
*******************
பெருந்தொற்றுக்கு
ஏது சாதி, மதம்
விலகி
இருப்பதில்லை
மனிதனிடம்
வீதியெங்கும்
பிணக்குவியல்
சுவாசிக்கும்
காற்றும்
சுவாச மற்றுப்போகிறது
வான் உயர்ந்த
சிலைகளுக்கு
இடமிருக்குமிடத்தில்
உயிருடனிருக்க
ஒரு படுக்கையில்லை
மாத்திரை மருந்து
மந்திரிகளுக்கு மட்டும்
மரணபடுக்கையில்
எண்ணற்ற உயிர்கள்
ஏன் என்று
கேட்க
நாத்தியற்றவர்களை
நடுத்தெருவில்
புலம்பல்
இன்னொரு
பொது முடக்கம்
பட்டினியை
காட்டவிருகிறது
ஆனால்
அங்கோ காட்டமாய்
கூட்டமாய்
தேர்தல் பரப்புரை
கும்பமேளாவில்
குளியல்
ஏதுமற்றவர்களாய்
நாளும்
இந் நாட்டில்….

சிவப்பு சிந்தனையில்
*************************
சிவப்பு சிந்தனையில்
உதித்தது
சுதந்திரம் சுய உரிமையென
பதிந்தது
இயக்கங்கள் இயக்கியது
நேர்மைக்கு மட்டுமே
தலைவாங்குயென்று
போராட்டங்கள் , புரட்சிகள்
வீதியெங்கும் வழிந்தோடும்
உழைப்பவனின் உரிமையென்று
முதுமை ஒருபோதும்
முடக்கியது இல்லை
போராடி பெற்ற
சுதந்திரத்தை பாதுகாக்கவும்
போராட்டம் தேவைப்படுகிறது
இன்றைய சுழலில்……..

மாதவிடாய்
***************
மாதம் மாதம்
மாதவிடாய்
மங்கை இவள்
தீட்டுனால்
மானுட பிறப்பும்
தீட்டே…
மாதத்தில் வரும்
மூன்று நாட்டுகளுக்கு
முற்றத்தை
முடுடுபவனும்
முடனே…
மாதம் மாதம்
முதுகுதண்டு
முச்சுயிரைக்கிறது
உதிர்ந்த உதிரம்
உடுத்ததுணி
கந்தலும் கிழிச்சலுமே
மங்கையின் உடல்
மாற்றம்
எப்படி
மனிநேயமற்றோக்கு
தீட்டாகிறது தெரியவில்லை?

முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – கமலாலயன்

முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – கமலாலயன்




முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி – புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி – ஓசூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முன்னெடுப்பு – 31-12-2021  காலை 09.30 முதல் ஜனவரி 1, 2022 இரவு 09.30 வரை … ஒரு நேரடிப் பதிவு கமலாலயன்
The Thirty-Six Hour Book Fair is a new venture to welcome the New Year Article By Kamalalayan முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி - கமலாலயன்

இன்றைய காலைப்பொழுதில் எழுந்தபோது வெளியே நிலவிய கடும் குளிர் பயமுறுத்துவதாக இருந்தது. ஓசூரின் சிறப்பு என்று இங்கே தொடர்ந்து பொழியும் மழையையும், இதமான குளிர்ந்த தட்பவெப்ப நிலையையும் தயக்கமில்லாமல் சொல்லலாம். இந்த ஆண்டில், தொடர்ந்து பெய்த பெரு மழையைத் தாங்கிக்கொண்டதுபோல், குளிரைத் தாங்க முடியவில்லை. அவ்வளவு சில்லிட்டுப் போகவைக்கும் குளிர் காற்று ! இன்று காலை ஒன்பது முப்பது மணியிலிருந்து நாளை – ஜனவரி முதல் நாளன்று இரவு ஒன்பதரை மணிவரை தொடர்ந்து முப்பத்தி ஆறு மணி நேர மாரத்தான் புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் நண்பர் சிவகுமார் அழைப்பு விடுத்திருந்தார். ஓசூரின் செயலூக்க மிக்க மாநகராட்சி ஆணையர் திரு பாலசுப்பிரமணியம் கண்காட்சியைத் திறந்து வைக்க இசைவு தெரிவித்திருப்பதாக அழைப்பிதழ் கூறியது. 

இந்த 36 மணிநேரம் என்ற அம்சம் எனக்கு ஆவலைத் தூண்டியது. சரி, என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிட்டு வருவோமே என முடிவு செய்து காலையில் குளிருக்குத் தகுந்த ஆடைகளுடன் புறப்பட்டுப் போனேன். நடந்து போவது- அதிலும் இந்தக்காலைநேரக்குளிரில், ராமநாயக்கன் ஏரிக்கரை யோரம் சில்லிடும் காற்றில் உடலசிலிர்க்க நடப்பது ஓர் அரிய அனுபவம். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இதை நான் தவறவிடுவதில்லை. காலை ஒன்பது மணிக்கெல்லாம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது, அங்கு கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. சிவகுமார், சந்துரு, சத்தியமூர்த்தி, அரிசசந்திரன் உள்பட அறிவியல் இயக்கத்தின் முன்னணி ஊழியர்கள், செஞ்சோலை பதிப்பக நண்பர்கள்,’வசந்தம் வெளியீட்டகம்’ அருணன் புத்தகங்களின் விற்பனையாளர்கள் என ஒரு பெரும் தொண்டர் குழாம் பரபரவென்று கண்காட்சித் தொடக்க நிகழ்வுக்கான வேளைகளில் மூழ்கி யிருந்தனர்.’

வீரம் விளைந்தது ‘என்ற புகழ்பெற்ற சோவியத் நாவலை இளையோருக்கான சுருக்கப் புத்தகமாகப் பத்திரிகையாளர் ஆதிவள்ளியப்பன் எழுதி, பாரதி புத்தகாலயம் வெளியீட்டிருக்கிறது. அந்த நூல் கண்களில் பட்டது. ப. கு. ராஜனின் அணுவின் ஆற்றல், இரா. நடராசனின் அறிவியல் தேசம் நாவல்,உதயசங்கரின் ‘ பொம்மைகளின் நகரம் ‘ சிறார் நாவல்,ஒரே ஒரு ஊரிலே என்ற விழியனின் நாவல், துளிர் அறிவியல் சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பு மலர், துளிர் இதழ்,சிறகு இதழ் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அத்தனை வெளியீடுகளும் வரிசை வரிசையாகக் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
The Thirty-Six Hour Book Fair is a new venture to welcome the New Year Article By Kamalalayan முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி - கமலாலயன்

செஞ்சோலைப் பதிப்பகம் என்ற பெயர் இங்கு ஓசூர் வந்த பிறகு சமீபகால மாகக் கண்களில் பதிந்துவரும் பெயர். இடதுசாரித் தத்துவ நூல்களையும், வியட்நாம் தொடர்பான புதிய நூல்களையும், அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைத் தாங்கிய சிறு நூல்களையும் இவர்கள் வெளியீட்டுள்ளனர். பொதுவாக ரஷ்ய, சீனப் புரட்சி இலக்கிய நூல்கள்தாம் தமிழ் வாசகர்களுக்குப் பெரும்பாலும் அறிமுகமாகியுள்ளன. வியட்நாம் புரட்சி, அந்த நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இலக்கியங்கள் மிக மிக அரிதாகவே தமிழில் கிடைக்கின்றன. இதைப்பற்றிய மணக்குறையை தோழர் சு. பொ. அகத்தி யலிங்கமும், நானும் பலமுறை பேசிப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது, செஞ்சோலை வெளியீடுகளில் மூன்று நான்கு நூல்களைப் பார்த்த போது மிகவும் மகிழ்வாக இருந்தது. ஹோசிமின் எழுதிய வியட்நாம் புரட்சி என்ற சிறிய நூலை முதலில் வாங்கினேன். அடுத்துப் போகும்போது மற்ற நூல்களை வாங்க எண்ணம்.

செம்மலர், தீக்கதிர் ஏடுகளில் தொடர்ந்து பல்லாண்டு காலம் அயராமல் மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும், இடதுசாரித் தத்துவங்களையும் எளிய இனிய தமிழில் கட்டுரைகளாகத் தந்தவர் பேராசிரியர் அருணன் அவர்கள். இப்போது பணி ஓய்வுக்குப் பின், தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரியக் கொள்கைகளைப் பெரு முழக்கமிடும் குரலில் ஓங்கி ஒலித்து வரும் சொற்பொழிவாளர்.இவருடைய வசந்தம் வெளியீட்டகம் பதிப்பக நூல்கள் அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பிராமணியம்- அன்று முதல் இன்று வரை என்ற பெருந்தொகுப்பு நூல்கள், கடவுள் பற்றிய நூல்வரிசை, கோட்சேயின் குருமார்கள், ஆர். எஸ். எஸ். எனும் மர்மதேசம் போன்று அருணன் எழுதிய புகழ்பெற்ற நூல்கள் அனைத்தும் கவனத்தை ஈர்த்தன.
The Thirty-Six Hour Book Fair is a new venture to welcome the New Year Article By Kamalalayan முப்பத்தி ஆறு மணிநேரப் புத்தக்கண்காட்சி புத்தாண்டை வரவேற்க ஒரு புதிய முயற்சி - கமலாலயன்

குளிர் சில்லென்று நெஞ்சை நிறைத்தாற்போல் உணர்ந்தேன். அது பனியின் விளைவால் மட்டுமன்றி, இத்தனை புத்தகங்களையும் ஒருசேரப் பார்த்ததால் கிடைத்த மனநிறைவினாலும் கூடத்தான்.இப்படியாக இன்று காலைப்பொழுது புத்தகங்களுடன் விடிந்தது; மனம் புத்துணர்வில் எழுந்தது.

ஓசூரில் புத்தக்கண்காட்சிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய சிறப்பம்சம் எதுவெனில், கடந்த 2020 , 2021 ஆகிய இரு ஆண்டுகளிலும் கொரானா தீநுண்மிப் பெருந்தொற்றுக் காரணமாக தமிழ்நாட்டின் வேறெந்த நகரத்திலும் புத்தக்கண்காட்சிகள் நடத்தப்படாதிருந்த போதிலும், ஓசூரில் மட்டும் தகுந்த பாதுகாப்பு முன்னேற் பாடுகளுடன் தலா மூன்று நாள்கள் கண்காட்சிகளை நடத்தினார்கள். இந்த முன்னெடுப்பு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், ஓசுர் அனைத்துப்பகுதி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்ட தாகும்.

இந்த ஆண்டு, மூன்று நாள் கண்காட்சியில், ஓசூர் படைப்பாளிகளின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஓவிய-புகைப்படப் பதிவுகள் என அனைத்து வகைப் படைப்புகளையும் உள்ளடக்கிய ‘ வாசல் ‘ என்ற இலக்கியத்தொகுப்பு நூலை 10-ஆம் ஆண்டுப் புத்தகக் கண்காட்சி சார்பில் சிறப்பாக வெளியிட்டுள்ளனர். 2022-ஆம் ஆண்டை, இப்படி 36 மணி நேரப் புத்தகக் கண்காட்சியுடன் வரவேற்கத் தயாராகி விட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களுக்கு நாம் நல்வாழ்த்துக் கூறுவோம். தமிழ் நாட்டின் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு புத்தாண்டைப்  புத்தகங்களுடன் வரவேற்க பாரதி புத்தகாலயமும்,புத்தகம் பேசுது இதழும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. நல்ல முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் ! வாழ்த்து  கள் .. !

New Year begins with good signs Article in tamil Translated by Sa Veeramani. நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு - ச.வீரமணி

நல்ல அறிகுறியுடன் தொடங்கும் புத்தாண்டு – தமிழில்: ச.வீரமணி




[2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்களே நிறைந்திருந்தாலும், வெற்றிக் களிப்பைக் கொண்டாடும் விதத்தில் முடிவுற்றுள்ளது.]

விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2021ஆம் ஆண்டு முழுவதும் துன்பங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தபோதிலும், மக்களுக்கு வெற்றிக்களிப்பை அளிக்கும் விதத்தில் முடிவுக்கு வந்தது.

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மார்ச் – மே மாதங்களுக்கிடையே மக்களை நாசப்படுத்தியது. மோடியும் அவருடைய அரசாங்கமும் கொரோனா வைரஸ் தொற்றை வென்று விட்டோம் என்று தம்பட்டம் அடித்தபோதிலும், இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியபோது அதனை எதிர்கொள்ள நாடு தயாராக இல்லை. இதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கானோர் மடிந்தனர். இவற்றில் பல பதிவு செய்யப்படவேயில்லை. ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் மூச்சுத்திணறி இறந்த கொடுமையையும், ஏராளமான சடலங்கள் கங்கையில் மிதந்து சென்றதையும் உலகம் முழுதும் ஊடகங்களால் எடுத்துச்செல்லப்பட்டு நம் நாட்டின் அவலநிலையை உலகுக்குப் பறைசாற்றின. இவ்வளவு மோசமாக நாட்டு மக்களை நாசப்படுத்தியிருந்தபோதிலும்கூட இதற்காகப் பிரதமர் கிஞ்சிற்றும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

இதேபோன்றுதான் தடுப்பூசிகள் சம்பந்தமாக, அவற்றைப் போதுமான அளவிற்குக் காலத்தில் கொள்முதல் செய்ததிலோ, நாட்டிற்குள்ளேயே உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவோ மற்றும் விரைவாக அவற்றை மக்களுக்கு விநியோகிப்பதிலோ ஏராளமான அளவில் குளறுபடிகள் செய்ததையும் பார்த்தோம். நாட்டில் முதன்முதலாக அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசிகள் செலுத்தப்படுவதற்குப் பதிலாக, அதற்கும் விலை வைத்து விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஒன்றிய அரசாங்கம், உச்சநீதிமன்றத்தில், டிசம்பர் 31க்குள் (18 வயதுக்கு மேற்பட்ட) வயது வந்த அனைவருக்கும் இரு முறை தடுப்பூசிகள் (two doses of vaccines) முழுமையாகச் செலுத்தப்படும் என்று கூறியது. இது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிவோம். டிசம்பர் இறுதிக்குள், நாட்டிலுள்ள வயது வந்தவர்களில் 65 சதவீதத்தினருக்கும் குறைவானவர்களுக்கே முழுமையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் 35 சதவீதத்தினர் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்படாது விடப்பட்டுள்ளனர். நாட்டை விழுங்கப் போவதாக ஓமிக்ரான் வைரஸ் தொற்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டில் இத்தகைய அவலநிலை நீடிக்கிறது.

மோடி அரசாங்கம், கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான அளவிற்குத் தடுப்பூசிகளைத் தயாரித்து, மக்களுக்குச் செலுத்துவதற்கான, திட்டமிடுதலிலும், தயாரிப்பு வேலைகளிலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ளும்விதத்தில் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்துவதிலும் மோசமான முறையில் படுதோல்வி அடைந்தது மட்டுமல்ல, இவ்வாறு நாட்டில் நிலைமைகள் மோசமாக இருக்கும் காலத்தை, தன்னுடைய பிளவுவாத மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரலை உந்தித்தள்ளவும் பயன்படுத்திக்கொண்டது.

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தனியாருக்குத் தாரை வார்க்க இலக்கு அறிவிக்கப்பட்டதையும் பார்த்தோம். இதனைத்தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்று பணமாக்கும் திட்டமும் (monetization of the public sector assets) அறிவிக்கப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு சொத்துக்களை விற்று சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்போகிறார்கள். இது, நாட்டின் துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில்வே பாதைகள், நிலம் மற்றும் சொத்துக்களை குத்தகைக்கு விடுகிறோம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரைவார்க்கும் செயலே தவிர வேறல்ல.

பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது தொடர்கிறது. நிதித்துறையில் பொதுத்துறை வங்கிகளில் இரண்டு தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கிறது. ஆயுள் இன்சூரன்ஸ் கழகத்தின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

மோடி அரசாங்கம் அம்பானிக்கும், அதானிக்கும் அப்பட்டமான முறையில் சலுகைகள் அளித்ததன் மூலம், அவர்கள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில்கூட மக்களிடம் மிகவும் அசிங்கமானமுறையில் கொள்ளை லாபம் அடித்ததைக் காட்டின. அம்பானியின் நிகர சொத்தின் மதிப்பு 2021இல் 92.7 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பு 78.7 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உயர்ந்தது.

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மீது மேலும் மேலும் சுமைகள் ஏற்றப்பட்டன. மிகவும் அதிகமான அளவில் நாசத்தை ஏற்படுத்திய கோவிட் தொற்றின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த சமயத்தில், அதிகரித்த வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களுக்குச் சொல்லொண்ணா துன்பங்களை ஏற்படுத்தியது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலைத் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே இருந்ததன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து மக்கள் வாங்கிவந்த சொற்ப வருமானங்களும் சரிந்து, பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளியது. மக்களை வறுமைக்குழிக்குள் தள்ளிய மற்றொரு காரணி, வேலைவாய்ப்பு சுருங்கியதால் வருமானங்கள் இழப்பு ஏற்பட்டதுமாகும். 2020-21 கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்தில் கூடுதலாக வறுமைக் குழிக்குள் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 7 முதல் 8 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ்-இன் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை வெறித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்தபின், அதன் அடையாளத்தையே சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் அந்தஸ்தைக் குறைக்கும் விதத்தில் அதன் சட்டமன்ற இடங்களும் சட்டமன்ற இடங்களுக்கான மறுசீரமைப்பில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற இடங்கள் இவ்வாறு மறுசீரமைக்கப்பட்டு குறைக்கப்படுவது, அதன் பின்னர் தேர்தல்கள் நடத்துவது, அதன்பின்புதான் மாநில அந்தஸ்து என்னும் வரிசைக்கிரமம் அமித் ஷாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், அங்கே மக்கள் மீதான ஒடுக்குமுறையைக் கைவிடுவதற்கான எண்ணமோ, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்திருப்பதை மீளவும் அளிப்பதற்கான எண்ணமோ இருப்பதாகத் தெரியவில்லை.

பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் ஆட்சி செய்வதைப்போலவே, இப்போது வட கிழக்கு மாநிலங்களிலும் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றனர். நாகாலாந்து மாநிலத்தில் ராணுவத்தினரால் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது, அங்கே ராணுவத்தின் ஆட்சி தொடர்வதற்காகவே வந்திருக்கிறது என்பதற்கான கடுமையான நினைவூட்டலாகும்.

இந்துத்துவா ஆட்சியாளர்களுக்கு, ஒரு வலுவான ராணுவ அரசை நிறுவுவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களால் அந்நிய மற்றும் உள்நாட்டு எதிரிகளுடன் (external and internal enemies) போராட முடியும். உள்நாட்டில் அவர்கள் எதிரிகள் என்று கருதுவது முஸ்லீம்களைத்தான் என்பது தெளிவு. முஸ்லீம்களுக்கு எதிராக, வெறுப்பை உமிழ்ந்திடும் உரைகள், சமூக ஊடகங்களில் பிரச்சாரங்கள், சிறுபான்மையினரைக் குறி வைத்து பாஜக தலைவர்கள் குரைத்தல் திட்டமிட்டு படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின்காரணமாக பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்த பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும் சமீபத்தில் கர்நாடகாவிலும் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் ‘புனித ஜிகாத்’ (‘love jihad’)எனக் குற்றஞ்சாட்டி, மதக் கலப்புத் திருமணங்கள் செய்துகொள்ளும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில், கிறிஸ்தவர்கள் மீது கவனம் திருப்பப்பட்டிருக்கிறது.

மதவெறியர்களால் முஸ்லீம்கள் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரங்கள்மீது தொடர்ந்து தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது இந்த ஆண்டில் கிறித்தவர்கள் மீதும் அவர்களுடைய தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் கூர்மையானமுறையில் அதிகரித்திருப்பதையும் பார்க்க முடிந்தது. இத்தகைய தாக்குதல்கள் கிறிஸ்துமஸ் அன்றும் நடந்திருக்கிறது. வெளிநாட்டு நிதி உதவி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் அனுமதி வாங்கி நிதி வசூல் செய்துவந்த அன்னை தெரசா கருணை இல்லங்களுக்குக்கூட அவ்வாறு அளிக்கப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டது.

மொத்தத்தில், இந்த ஆண்டு, ஒன்றிய அரசாங்கத்தால் கோவிட் பெருந்தொற்று மிக மோசமானமுறையில் கையாளப்பட்டதையும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள்மீதான சுமைகள் ஏற்றப்பட்டிருப்பதையும், சிறுபான்மையினர் மீது அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல்கள் தொடுக்கப்படுவதையும் பார்த்தது.

இவ்வாறு அடிமேல் அடிவாங்கிய மக்கள் இப்போது அவற்றை எதிர்த்துநின்று, திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக, ஏப்ரலில் நடைபெற்ற ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளாவில் கடும் பின்னடைவுகளை எதிர்கொண்டது. அஸ்ஸாமில் மட்டும்தான் அது மிகவும் குறைவான பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் நிர்வகிக்கப்படும் சண்டிகார் மாநகராட்சிக்கு, இந்த ஆண்டு நடந்த சமீபத்திய தேர்தலில், பாஜக தன்னுடைய பணபலத்தையும் அதிகாரபலத்தையும் இறக்கிவிட்டிருந்தபோதிலும், இந்துத்துவா அடிப்படையிலான மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டபோதிலும், படுதோல்வி அடைந்தது. அங்கே, தனிப்பெரும் கட்சியாக மேலெழுந்துவந்துள்ள ஆம் ஆத்மி கட்சியிடம் மாநகராட்சியை இழந்தது.

மக்கள் மத்தியில் போராட்டங்களும், கிளர்ச்சிகளும் அதிகரித்துவரும் பின்னணியில் பாஜக இத்தகைய தேர்தல் தோல்விகளைச் சந்தித்தள்ளது. 2021ஆம் ஆண்டு முழுவதுமே விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் ஆதிக்கம் செலுத்தியது. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் வெகுஜனப் போராட்டங்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் துவக்கி இருக்கிறது. தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஓராண்டு காலத்திற்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் எவ்விதத்தொய்வுமின்றிக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்தி வந்த பின்னர், மோடி அரசாங்கம் இறங்கிவந்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளின் உறுதியான ஒன்றுபட்ட போராட்டத்தின்முன்னே ஒன்றிய அரசாங்கத்தை சரணாகதி அடைய வைத்துள்ளது. இந்த வெற்றியானது உழைக்கும் மக்களுக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்பியிருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் ஒன்றுபட்டுப் போராடினால், வெற்றி பெறுவது திண்ணம் என்பதேயாகும்.

விவசாய இயக்கம், கூட்டு நடவடிக்கைகளின்போது, தொழிலாளர்கள்-விவசாயிகள் ஒற்றுமை வளர்ந்துகொண்டிருப்பதையும் பார்த்தது. இது எதிர்காலப் போராட்டங்களுக்கும், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களுக்கு எதிரான போர்க்களத்திற்கும் அடிப்படையாக அமைந்திடும். புத்தாண்டு இத்தகைய நல்லதொரு அறிகுறியுடன் துவங்குகிறது.

(டிசம்பர் 29, 2021)
நன்றி:பீப்பிள்ஸ் டெமாக்ரசி