The tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமை

நியூட்டனுக்கு பின்னால் ஆமை – பேசும் பிரபாகரன்




உலகில் ஒவ்வொன்றிக்கும் இன்னொன்று என்று மாற்று ஒன்று உண்டு. ஒரு கோட்பாட்டினை மற்றொரு கோட்பாடு மறுப்பதால் தான் கோட்பாடுகளின் உறுதித்தன்மைகள் நிலைநிறுத்தப்படுகின்றன. உண்மையாக நிகழ்கின்ற இயற்பியல், வேதியியல் மாற்றங்களை மெய்மையியல் (LOGICAL) கோட்பாடுகள் பெரும்பாலும் ஓரம் கட்டி விவாதிக்கின்றன.

ஆனால் இந்த மெய்மையியல் கோட்பாடுகள் தான் இயற்பியல் மற்றும் வேதியியல் கோட்பாடுகள் நிலைத்து நிற்க அறிவுரைகள் வழங்குகின்றன என்றால் அது மிகையாகாது.The tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமை20 வயது மதிக்கத்தக்க , நல்ல உடல் நலமிக்க ஒருவர் ஒரு செங்கல்லை எடுக்கின்றார் . அவர் அதனை எந்த தடையும் இல்லாதபோது ஒரு 5 அடி தூரத்தில் கொண்டு சென்று வைக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம் . இந்த இயற்பியல் மாற்றத்தினை அவர் செய்தே தீருவார் என்பது தான் உண்மை.

ஆனால் கணிதத்தின் வாயியலாக மெய்மையியல்(LOGICAL) என்ற கருத்துக் கொண்டு இச்செயலை அவரால் செய்யமுடியாது என்று நிரூபிக்க இயலும். அப்படி நிரூபித்தாலும் ,அந்த மெய்மையியல்(LOGICAL) கோட்பாடு தவறான பதிலை கொடுத்தாலும் அதன் சிந்தனைகள் மனிதனின் அறிவினை பெருக்க துணை புரிகின்றன .

நீங்கள் எடுப்பதில் பாதி சாப்பிடவேண்டும் என்ற ஒப்பந்தப்படி, ஒரு சப்பாத்தியினை சாப்பிடுகின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
உங்களிடம் ஒரு சப்பாத்தி கொடுக்கப்படுகின்றது.

ஒப்பந்தப்படி, முதலில் 1 சப்பாத்தியில் பாதியினை சாப்பிட்டு விடுகின்றீகள். தற்போது, நீங்கள் சாப்பிட்ட சப்பாத்தியின் அளவு 1/2 ஆகும். பிறகு அந்த பாதியில்(1/2) உள்ள சப்பாத்தியின் அளவில் பாதியினை(1/4) சாப்பிடுகின்றீகள்.

அதாவது தற்போது நீங்கள் சாப்பிட்ட சப்பாத்தியின் அளவு 1/4 ஆகும். ஆகவே நீங்கள் தற்போது சாப்பிட்ட மொத்த சப்பாத்தியின் அளவு

1/2 +1/4

பிறகு அந்த மீதியில் (1/4) உள்ள சப்பாத்தியின் அளவில் பாதியினை (1/8)சாப்பிடுகின்றீகள். அதாவது தற்போது நீங்கள் சாப்பிட்ட சப்பாத்தியின் அளவு 1/8 ஆகும் .

ஆகவே தற்போது நீங்கள் சாப்பிட்ட மொத்த சப்பாத்தியின் அளவு
1/2 +1/4+1/8The tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமை

அடுத்து அந்த மீதியில் (1/8) உள்ள சப்பாத்தியின் அளவில் பாதியினை சாப்பிடுகின்றீகள். அதாவது தற்போது நீங்கள் சாப்பிட்ட சப்பாத்தியின் அளவு 1/16 ஆகும். ஆகவே தற்போது நீங்கள் சாப்பிட்ட மொத்த சப்பாத்தியின் அளவு

(1/2 )+(1/4)+(1/8) +(1/16)

ஆகவே நீங்கள் சாப்பிடும் சப்பாத்தியின் அளவுகளை கணிதத்தொடர் தொகுப்பாக

(1/2 )+(1/4)+(1/8) +(1/16)+… என்றவாறு எழுதலாம்

இப்படியே நீங்கள் ஒரு சப்பாத்தியினை சாப்பிட்டு கொண்டிருக்கின்றீர்கள். எப்படியும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த ஒரு சப்பாத்தியினை சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். இதுதான் உண்மை .

எனவே 1/2 +1/4+1/8+1/16+…… என்ற கணிதத்தொடர் தொகுப்பின்

கூடுதல் 1 .
1/2 +1/4+1/8+1/16+………..=1

ஏனென்றால் 1/2 , 1/4, 1/8, 1/16 ..

இவைகள் ஒரு சப்பாத்தியின் சிறிய துண்டுகள் தானே. ஒரு சப்பாத்தியின் அனைத்து துண்டுகளையும் சேர்த்தால் ஒரு சப்பாத்தி தான் வரும். ஆனால் நான் உங்களை குழப்ப அல்லது தெளிவாக்க கணிதத்தில் மெய்மை என்ற ஆயத்தத்தினை எடுக்கிறேன்.

1/2 +1/4+1/8+1/16+… என்ற வகையில் நீங்கள் சப்பாத்தியினை சாப்பிட்டால் நீங்கள் அந்த ஒரு சப்பாத்தியினை சாப்பிட்டிருக்கவே மாட்டீர்கள் என்று நிரூபிக்க தொடங்குகிறேன். எடுப்பதில் பாதி சாப்பிடவேண்டும் என்ற கோட்பாட்டின் படி ஒரு சப்பாத்தியில் முதலில் பாதியினை சாப்பிட்டுகின்றீகள்.

பிறகு அந்தப் பாதியில் பாதியினை சாப்பிட்டுகின்றீகள். பிறகு அந்தப் பாதியில் பாதியினை சாப்பிட்டுகின்றீகள். இப்படியே போனால் பாதி, பாதி என மிக மிகக் குறைவான ஒன்று இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படியிருக்க நீங்கள் ஒரு முழு சப்பாத்தியினை ஒரு போதும் சாப்பிட்டு முடிக்க முடியாது என்பதே மெய்மையான ஒன்றாகும்.

கிரேக்கத் தத்துவஞானியான ஜீனோ ஆப் இலியா ( கி. மு. 490 – 430 ) வின் புதிர்த் தத்துவமும் இதனைத்தான் சொல்லுகின்றது. ஜீனோ ஆப் இலியா வின் அகிலஸ் ஆமை முரணுரையை எடுத்துக்கொள்வோம்.

இதில் வரும் கதாபாத்திரங்கள் அழகும் நல்ல உடல்வாகும் உள்ள கிரேக்கத் தடகளவீரர் அகிலஸ். அளவில் சிறியது ஆற்றலில் பெரியதான ஆமை.
ஆற்றல் மிக்க ஆமையானது வலிமை மிக்க போர்வீரனான அகிலசினை ஓட்ட பந்தைய போட்டிக்கு அழைத்தது.

அகிலசுடன் ஆமையானது ஒரு ஒப்பந்தம் போட்டது. நான் ஒரு ஓடுதளத்தில் பாதி தூரம் சென்றவுடன், நீங்கள் ஓடத்தொடங்கலாம் ஆனால் நான் சென்ற தூரத்தில் பாதிவரை தான் தாங்கள் வரவேண்டும் என்றது.

ஆமையின் அழகான பேச்சுக்கு மயங்கிய அகிலஸ் ஒப்பந்ததினை ஒப்புக்கொண்டார். ஆமையானது அகிலெஸிலிருந்து 2 மீட்டர் தொலைவில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம்.

ஒப்பந்தப்படி ஆரம்பத்தில் அகில்லெஸ் 1 மீட்டர் பயணம் செய்வதன் மூலம் இந்த தூரத்தை பாதியாக குறைக்கிறார்.

The tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமைThe tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமை

 

 

மேலும் 1/2 மீட்டர் பயணம் செய்வதன் மூலம் அவர் இந்த தூரத்தை மீண்டும் பாதியாக குறைக்கிறார். மீண்டும் பாதியாக்க இப்போது 1/4 மீட்டர் தூரத்தில் இருக்கிறார்.

இப்படியே இவர் பாதியாக்கி பாதியாக்கி பயணத்தினை தொடர்வார். இந்த செயல்முறை எல்லையற்றது. எனவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் உண்மையில் ஆமையை அடைய முடியாது என்று ஜீனோ வாதிட்டார். ஒவ்வொரு முறையும் பயணித்த தூரங்களின் எல்லையற்ற கூட்டுத்தொகையாக இந்தக் கருத்தை நாம் கணித ரீதியாக வெளிப்படுத்தலாம்: 1 + 1/2 + 1/4 + 1/8 …

இப்போது, ​​இது உண்மையில் ஒரு வடிவியல் தொடர்
இங்கு முதல் எண் a = 1 மற்றும்
பொதுவான விகிதம் r = 1/2.

எனவே நாம் ஒரு வடிவியல் தொடருக்கு எல்லையற்ற கூட்டுத்தொகை சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்
(இது ஜீனோவிற்குப் பிறகு சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு பெறப்பட்டது!):

கூட்டுத்தொகை = a/(1-r)
கூட்டுத்தொகை = 1/(1-0.5)
கூட்டுத்தொகை = 2

கூட்டுத்தொகை உண்மையில் ஒன்றிணைகிறது என்பதை இது காட்டுகிறது. எனவே அகில்லெஸ் உண்மையில் 2 மீட்டர் தொலைவில் இருந்த ஆமையை அடைவார். எவ்வாறாயினும், இங்கே ஏதோ ஒரு சாமர்த்தியம் பயன்படுத்தப்படுகிறது.

முடிவில்லாத கால அளவு கொடுக்கப்பட்டால், அகில்லெஸ் ஆமையை அடைவார். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஆமையை அடைவது கூறவேண்டுமானால் , தூரங்கள் எப்போதும் சிறியதாக இருப்பதால், அவற்றைக் கடக்க வேண்டிய நேரமும் பூஜ்ஜியத்தை நெருங்குகிறது.

எனவே தூரம் 2 மீட்டராக மாறும்போது, ​​​​எடுத்த நேரமும் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணாக மாறும் என்று நாம் கூறலாம். கடைசி வரை மெய் மையியல் கோட்பாடு படி அகிலஸ் ஆமையினை ஒருபோதும் கடக்க மாட்டார். ஓடிக்கொண்டேதான் இருப்பார்.

ஒருபோதும் ஆமையினை அகிலஸினால் முந்த முடியாது. இருவரும் போட்டியினை முடிக்க மாட்டார்கள் என்பது தான் மெய்மையியல் உண்மை. ஆனால் இதுபோன்ற செயல்கள் பெரிய நிகழ்வுகளுக்கு தெரிந்த அளவுடன் வேண்டு மென்றால் இந்த வகையான மெய் மையியல் கருத்துக்களை நாம் பயன்படுத்தலாம் .

இதுபோன்ற தர்க்க நிகழ்வுகள் குழப்பங்களல்ல புதுவுலகை உருவாக்க புறப்பட்ட குதூகலங்கள்.

The tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமைஎந்தவொரு முரண்பாடும் அதன் முக்கியமான அனுமானங்களை போதுமான அளவு கைவிடுவதன் மூலம் விளக்கப்படுகின்றது. அப்படிப்பட்ட முரண்பாடுகளில் முக்கியமானது ஜீனோவின் முரண்பாடுகள். ஜீனோவின் முரண்பாடுகளின் நிலையான தீர்வில் நுண்கணிதத்தின் வளர்ச்சி மிக முக்கியமான படியாகும்.The tortoise behind Newton Article By Pesum Prabhakaran. பேசும் பிரபாகரனின் நியூட்டனுக்கு பின்னால் ஆமைநியூட்டனுக்கு லீப்னிஸுற்கும் அகிலஸ் ஆமை முரண் புதிரில் தூரங்கள் எப்போதும் சிறியதாக இருப்பதால், அவற்றைக் கடக்க வேண்டிய நேரமும் பூஜ்ஜியத்தை நெருங்குகிறது என்ற கருத்து நுண்கணிதத்தினை தோற்றுவிக்க உறுதுணையாக இருந்தது.

அப்படி அவர் நுண்கணிதத்தினை சிந்திக்காமலிருந்தால் பொறியியலில் இவ்வளவு வளர்ச்சிகள் இருந்திருக்காது. ஆகவே இதுபோன்ற தர்க்க நிகழ்வுகள் குழப்பங்களல்ல புதுவுலகை உருவாக்க புறப்பட்ட குதூகலங்கள். எனவே நியூட்டனின் நுண்கணித கண்டுபிடிப்புக்கு பின்னால் எந்த அகிலஸ் ஆமையின் முரணுரை முதுகெலும்பாய் இருந்தது என்பது மறுக்கமுடியாது .

துணை நூல்கள்
https://hal.archives-ouvertes.fr/hal-01929811/file/A_discrete_solution_for_the_paradox_of_A.pdf
https://slate.com/technology/2014/03/zenos-paradox-how-to-explain-the-solution-to-achilles-and-the-tortoise-to-a-child.html
https://gori70.medium.com/the-solution-of-the-paradox-of-achilles-and-the-tortoise-f618b23c25e
மேலும் தகவல்களுக்கு rpcitcbe@gmail.com

Ayesha Era. Natarasan's Newton Kadavulai Nambiyathu Yen Book Review by Thandapani Thendral. Book Day is Branch of Bharathi Puthakalayam.

நூல் அறிமுகம்: நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்? – தண்டபாணி தென்றல்



நியூட்டன் – கடவுளை நம்பியது ஏன்? 
ஆயிஷா. இரா. நடராசன்
பாரதி புத்தகாலயம்

விலை: ₹145.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

வெளிநாட்டுல புதுசுபுதுசாக் கண்டுபிடிச்சு சாப்டுறாங்க. அதுல பெஸ்டா இருக்குற உணவு வகைகள ஒவ்வொரு பகுதில இருந்தும் வரவழச்சு 13 வாழ இலைல மொத்தமா படையல் போட்டு ஏறக்குறைய முனி லாரன்ஸ் மாதிரி உட்கார்ந்து ஒவ்வொன்னா சாப்டா எப்டி இருக்குமோ அந்த சுவையனுபவத்த இந்த புத்தகம் கொடுக்கும்.

என்னடா அறிவியல்னு திங்குறதுல ஆரம்பிக்குறானேனு பாக்காதீங்க. 13 வாழ இலைல வந்து உட்காரப்போர பதார்த்தங்களும் 13புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிறந்த 13 அத்தியாயங்கள். ஆக மேற்சொன்ன வரையறை இப்போது தெளிந்திருக்கும்.

முதலில் பிரபஞ்சத் தோற்றத்தில் இருந்து துவங்குகிறது. பெருவெடிப்பு விசைகள், துகள்கள், உயிர்கள் உருவாகி கோள்கள், சூரியக்குடும்பம், அண்டம் அமைந்த விதங்களை ஸ்டீபன் ஹாக்கிங் சொல்கிறார். இக்கட்டுரையின் தலைப்புதான் புத்தகத்தின் தலைப்பு. நியூட்டன் ஏன் கடவுளை நம்பினார் என்று கேட்டால் எல்லாம் அவர் நேரம். ஒருபக்கம் மதம் என்கிற வீச்சரிவாள் இன்னொரு பக்கம் பாலமில்லாத தட் போதிய அறிவியல் முன்னேற்றங்களை அடையாத புதைகுழி. இடையில் மாட்டிய நீயூட்டன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டார். ஆனால் இதை ஸ்டீபன் ஹாக்கிங் நொறுக்கினார்.

அடுத்து வேதியியல் புத்தகத்துல வேலூர் கோட்டை மாதிரி ஒன்ன பாத்துருப்போம். அதாங்க தனிம வரிசை அட்டவணை அல்லது ஆவர்த்த அட்டவணை. எப்படி உயிரியலுக்கு டார்வினோ அதேமாதிரி வேதியலுக்கு நம்ம மெண்டலீவ். முன்னவர் உயிரை அதன் தோற்றம் கொண்டு நோக்கினார். பின்னவர் தனிமங்களைக் கையாண்டார். ஆனா மெண்டலீவ் ஏறக்குறைய தஸ்தாயேவ்ஸ்கி மாதிரிதான். சூதாட்டக் கடன்களை அடைக்க சூதாடி எழுதுனமாதிரி இவரு ஆர்கானிக் பத்தி புத்தகம் எழுதியிருக்கார். கடைசி வாரம் தகவல்களை அட்டவணைப்படுத்தினா நல்லா இருக்குமே, வேலைப்பளுவும் குறையுமேனு யோசிச்சு எழுதியிருக்கார். புத்தகம் வெளிவந்தப்ப அட்டவணைல நிறைய காலி இடங்கள் இருந்துருக்கு. எங்கடா கோட்டைல பாதி செங்கல்ல காணோம்னு வேதியியல் படை கிளம்பித் தாக்க, இனிமே கண்டுபிடிக்குற தனிமத்துக்கு அந்த இடத்த ரிசர்வ் பண்ணிட்டேன்னு சொன்னார். இந்த அட்டவணைல அடங்காத தனிமத்த கண்டுபிடிச்சுட்டன்னு கத்துன பிராங்காயிஸ்க்கு அப்போ தெரியல அதுவும் அந்தக் கோட்டையோட செங்கல்தான்னு. வழக்கம்போல அதற்கான இடத்துல எடுத்து வெச்சாரு மெண்டலீப். அந்த கல் சாரி தனிமம்தான் காலியன்.

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? - ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா.  இரா.நடராசன்) - Bookday

அடுத்து ஐன்ஸ்டீனோட E=mc^2 சமன்பாட்ட பத்தின கட்டுரை. இதை நூலகத்தில் நுழையும் குழந்தை அங்கு காணும் புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள புதிர்த்தன்மையைக் கண்டறிந்து ஒரேயொரு புத்தகத்தை எடுக்கிறது என்பதன் மூலம் விளக்கியுள்ளார். அதாகப்பட்டது எல்லாரும் தனித்தனியா சோறு குழம்புனு வச்சுட்டிருந்தப்ப ஐன்ஸ்டீன் மொத்தமா அரிசிம்பரும்பாக்கினார். அதுதான் அந்த ஒன்றுபடுத்திப் பார்க்கும் தன்மைதான் ஐன்ஸ்டீனுக்கு மாபெரும் புகழைக் கொடுத்தது.

டார்வினால் மட்டுமே டார்வினாக முடிந்தது ஏன்? இது யாவரும் அறிந்த மீம்ஸின் விதைபோட்ட ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியது. டார்வின் கடல் பயணத்தில் கொண்டுசென்ற நூல்கள். எத்தனை புத்தகங்கள் படித்தார். அவற்றின் பொருண்மை பற்றியும் இருக்கிறது. குறிப்பா ஓரிடத்தில் கிடக்கும் கல், கடிகாரம் கொண்டு டார்வினின் பரிணாமம் பிரிச்சுப் பிரிச்சு வைக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ-14,15ன் மூலம் மனிதன் சந்திரனில் இறங்கியது உண்மையா?? என்று கேட்டு உண்மைதான் என்று கொண்டுபோன கட்டுரை முடிக்கையில் நமக்கும் உண்மையா? என்றே தோன்றுகிறது.

அடுத்து கணிதம். பயப்படாதீங்க. எப்படி பிதாகரஸ் தேற்றத்த என்னனு நிரூபிக்க 400வருசமாச்சோ அதேமாதிரி அதோட அடுத்த கட்டமான அதாவது க்யூப் பெர்மட்டோட தேற்றத்த நிரூபிக்க 358வருடங்கள் ஆன கதையத்தான் இந்தப் பகுதி பேசுது.

எப்படி உயிரின் அடிப்படை அலகு டி.என்.ஏவோ அதேமாதிரி நம்மோட மனசுக்கு மூளையோட மென்படலம்தான் அடிப்படை என்கிற கட்டுரை. யாரும் அறிந்த விளையனூர் எஸ். ராமச்சந்திரனின் புகழ்பெற்ற கட்டுரை. அவரின் ஆய்வுகள் பிரதானமாக மூளை பற்றியது. அவருடைய சில நூல்களும் கூட.

இதனைத் தொடர்ந்து எதிர்கால இயற்பியல் குறித்தும் அதில் என்னென்ன கண்டடைய வேண்டி இருக்கு. அதாவது ஐன்ஸ்டீன் மாதிரி தொடர்புபடுத்துனீங்கனா நீங்கதான் ஐன்ஸ்டீன் என்று நம்முன் 5 சவால்களை வைக்கிறது.என் ஏரியாவுக்கு (உயிரியல்) வாங்கயா வாங்கயானு இத கடக்கவேண்டியதாகிடுச்சு. பை த பை எனி பிசிக்ஸ் ஸ்டூடன்ட்ஸ் கேன் டிரை திஸ்.

அப்புறம் பிளாஸ்டிக். ஆமா நீங்க நல்லவரா கெட்டவரா?? ஒருபக்கம் நீங்க வந்ததால யானைகளைக் கொன்று தந்தத்துல பூரா பயலும் தனக்குத் தேவையான வெளாட்டு சாமான்ல இருந்து விருந்து சாமான்கள் வரைக்கும் தயாரித்துக் கொண்டிருந்தவர்கள் முற்றிலும் கைவிட்டதால் யானைகள் பிழைத்தது. இன்னொரு பக்கம் யூஸ் அன் த்ரோ சூழலியல் சீர்கேடு(சூழலியலையும் கவர் பண்ணுவோம்). அன்புள்ள ப்ளாஸ்டிக் மதில்மேல் பூனையாவே இருக்கீங்களே. பீனால் (அதாங்க பெனாயிலு) ஆரம்பிச்சு பாலி வினைல் குளோரைடு அப்புறம் பாலி எத்திலீன் சோ கால்டு பாலித்தீன்னு அசுர வளர்ச்சி. எதிர்காலத்துல பிரமீடுக்கு பதிலா ப்ளாஸ்டிக் சவக்குழி பண்ணுவாங்க பாருங்க.

அடுத்து நம்ம சிதம்பரத்துக்காரர். வெங்கி ராமகிருஷ்ணனின் கட்டுரை. இந்த நூலை ஆங்கிலத்துலயே படிச்சு ரிவ்யூவும் எழுதியிருக்கேன். தேடிப் பாருங்க. X கதிர் மூலம் எப்படி மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் காண்பது எனும் பெர்னார்டு டோரத்தி ஆகியோரின் ஆய்வியல் பயணம்.

அடுத்து இப்ப நாம விண்வெளி வீரர் ஒருத்தர மீட் பண்ணி ஒரு கேள்வி கேட்குறோம். விண்வெளியில புத்தகம் வாசிக்க முடியுமா ? முடியும். இதுபோன்ற கேள்வியும் அதற்கான ஆழமான பதில்களுமே இக்கட்டுரை.

சமீபத்துல ஸ்க்ரோடிஞ்சர் பிறந்தநாள் வந்ததே. இவரோட பூனை எக்ஸ்பரிமண்ட். ரொம்ப ஆர்வத்த கொடுக்கும். டார்வின் தொடாத உயிரற்ற மூலக்கூறுல இருந்து உயிர் எவ்வாறு தோன்றி இருக்கும் என்பதை எழுதினார். குவாண்டமை உயிரியலுடன் இணைத்துப் பார்த்தவர்.
குட்டிச் சாத்தான் மூலக்கூறு வரைக்கும் அலசிறுக்காங்க.

கடைசியா மீண்டும் ஹாக்கிங் எழுதிய கட்டுரைக்கு வருகிறோம். நம் குழும ஜெயராஜ் சார் சொன்னமாதிரி சொல்லனும்னா மெது வடைய பதமா பொரிச்ச மாதிரி இருந்த கருந்துளையோட படத்த பாத்துருப்போம். ஆனா அத போட்டோ எடுக்காததற்கு முன்பே அது எப்படியிருக்கும்னு அச்சு பிசகாம கணித்திருக்கார் ஸ்டீபன் ஹாக்கிங்.

அதாவது இந்த 13 கட்டுரைகளும் எடுக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்னனு சொல்லலைனா வாசிப்புக் குத்தமாயிடும்கற காரணத்துனால அதயும் சொல்லிடறேன்

1. The grand design- Stephen Hawking
2. The disappearing spoon- Sam Kean
3. E=mc^2- David Bodanis
4. The God delusion- Richard Dawkins
5. It’s not Rocket science- Ben Miller
6. Fermat’s Last theorem- Simon Singh
7. This Explains Everything -Edited by John Brockman
8. The trouble with physics- Lee Smolin
9. Napoleon’s Buttons- Couteur, Burreson
10. Gene Machine- Venki Ramakrishnan
11. Ask an Astronaut- Tim Peak
12. The Demon in the Machine -Paul Devis
13. The theory of everything – Stephen Hawking

ஆக மொத்தத்துல சொல்லனும்னா இதுவொரு அறிவியல் ஆல்ரவுண்டர்.

-Thandapani Thendral (தண்டபாணி தென்றல்)

Ayesha Era Natarsan in Newton Kadavulai Nambiyathu Yen? Book Review By K. J. Raju (TNSF). Book Day is Branch of Bharathi Puthakalayam.

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்? – 21ம் நூற்றாண்டின் அறிவியல்

நியூட்டன் – கடவுளை நம்பியது ஏன்?  ஆயிஷா. இரா. நடராசன் பாரதி புத்தகாலயம் விலை: ₹145.00 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘ஆயிஷா’ என்ற குறுநாவல் மூலம் தனது அறிவியல் பயணத்தை தொடங்கிய இரா. நடராசன் அண்மையில் பாரதி…
நியூட்டன் | உலகை உலுக்கிய அறிஞர்கள்| முனைவர்.பாலாஜி சம்பத்

நியூட்டன் | உலகை உலுக்கிய அறிஞர்கள்| முனைவர்.பாலாஜி சம்பத்

  LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Follow Us on:- Facebook: https://www.facebook.com/thamizhbooks/ Twitter: https://twitter.com/Bharathi_BFC To Buy New Tamil Books. Visit Us Below https://thamizhbooks.com To Get to know more about…
நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா. இரா.நடராசன்)

நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்..? – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் (தமிழில்- ஆயிஷா. இரா.நடராசன்)

   (தி கிராண்ட் டிசைன்…. நூலில் இருந்து)      நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் என்பதை புரிந்துகொள்ள நாம் புவி எனும் ஆச்சரியத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் சீனாவில், ஹசியர் ஆட்சிகாலத்தில் (கிமு 2205 முதல் கிமு1782 வரை) நடந்ததாக ஒரு நம்பிக்கைவாத…