Paalkari Arukkani poem by Ka. Amsapriya க.அம்சப்ரியாவின் பால்காரி அருக்காணி கவிதை

பால்காரி அருக்காணி கவிதை – க.அம்சப்ரியா




நாலு மாடு கறக்கறீங்க
இவ்வளவுதான் பால் இருக்குமா?
பால்காரரின் ஒரே கேள்விதான்
நாளுக்கு ஒரு தொனியில் வலமாகும்
அருக்காணிக்கோ ஒரே பதில்தான்
புள்ளத்தாச்சி பால்னு வரும்போது
அதுக்கு எப்படிப் பணம் வாங்குறது..
சொல்லிய மறுவினாடி
எப்போதும் போல்
வெற்று அடிமடியை
ஒரு முறை கைகள் தொட்டு மீளும்