‘நிலா பேச்சு’ கவிதை – பாங்கைத் தமிழன்

‘நிலா பேச்சு’ கவிதை – பாங்கைத் தமிழன்




கர்வப்பட வேண்டாம்;
ஆம்ஸ்ட்ராங்கை
அனுப்பி வைத்த
அமெரிக்காவே!
மனிதன்
காலடி பட்டவுடன்
என்
பொன்னிற மேனியை
மண்ணிறமாக
ஏன் மாற்றிக்கொண்டேன்
தெரியுமா?
ஆசையுள்ள மனித இனம்
என் பொன்னிற மேனியை
புரட்டிக்கொண்டு
இந்நேரம் பூமிக்கு
வந்திருக்கும் அல்லவா?
அம்புலி என்னைக் காட்டி
அன்னையர்
தம் குழந்தைகளுக்கு
சோறூட்டாமல்
எத்தனை குழந்தைகள்
ஏங்கி அழுதிருக்கும்?
குழந்தைகள் குதூகலிக்க
வடை சுடும்
பாட்டியைக்கூட
மறைத்து வைத்துக் கொண்டேனே!
இப்போது….
அண்ணாந்து பார்,
மனிதக் காலடி பட்டு
என்ன மாற்றம் கண்டீர் என்னில்?
குழந்தைகளை
வளர விடுங்கள்;
ஆனந்தமாக!

பாங்கைத் தமிழன்