பழனித்தாத்தா சொன்ன கதைகள் : ”நிலாச்சோறு” கட்டுரை – முனைவர் ம. அபிராமி

பழனித்தாத்தா சொன்ன கதைகள் : ”நிலாச்சோறு” கட்டுரை – முனைவர் ம. அபிராமி




வானம் அன்று பிரகாசமாகக் காட்சியளித்தது நேரம் ஆக ஆகப் பௌர்ணமி நிலா முழு வெள்ளித் தட்டு போல வெளிப்பட்டு புது மணப்பெண் போல் மேகத்தில் சிறிது மறைந்தும் வெளிப்படும் விளையாட்டு காட்டியது.

வீட்டின் வெளியில் குதிரை வண்டி வந்து நின்றது. சாரு கிளம்பிட்டியா அம்மாவின் குரல் சாரு புத்தாடை அணிந்து கொண்ட மகிழ்ச்சியோடு ஓடிவந்தாள் குதிரை வண்டியில் அப்பொழுது சமைத்த சாம்பார் சாதம் எலுமிச்சை சாதம் பொரித்த வத்தல் அடங்கிய பாத்திரங்கள் ஏற்றப்பட்டன.

அப்பா, அம்மா, சாரு, பழனித்தாத்தா, எதிர்வீட்டு அத்தை, பாட்டி, மாலா, பக்கத்துவீட்டுக் கௌரி, சித்தி பரிமளா, அத்தை என அனைவரும் வண்டியில் ஏறினர்.

குதிரை இவ்வளவு சுமைகளையும் தாங்கிக்கொண்டு நடக்கமுடியாமல் நகர்ந்த

வந்தாயிற்று தேவநாத பெருமாள் கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது, கூட்டத்தில் நின்று சாமி தரிசனம் முடித்தாயிற்றும் கோயில் பின்புறம் உள்ள கெடிலம் ஆற்றுக்கு அனைவரும் சென்றனர், ஆற்றின் கரையோரம் முழுவதும் கும்பல் கும்பலாக மக்கள் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்,

சாரு குடும்பம் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து. அமர்ந்தனர். கொண்டுவந்த சாப்பாட்டை நடுவில் வைத்துச் சாமி கும்பிட்டன.ர் சாருவுக்கு மனதில் பல சந்தேகங்கள். வெட்டவெளியில் வாளியில் கொண்டுவந்த சாப்பாட்டை மூடியைத் திறந்து வைக்கின்றனர். சிறுசிறு பூச்சிகள் விழாதா?

லூசு லூசுபடியாக யோசித்துக் கொண்டிருந்த அவளின் கவனத்தைச்

”சாரு உருண்டையைக் கையில் வாங்கு” என்ற அம்மாவின் குரல் கலைத்தது.

சாப்பாட்டைக் கையில் வாங்கிய சாரு சாப்பிடாமல் கையில் உள்ள சாப்பாட்டு உருண்டையைப் பார்ப்பதும் மற்றவர்களைப் பார்ப்பதுமாக இருந்தாள். இதனைப் புரிந்துகொண்ட பழனித்தாத்தா

”சாரு இது நிலாச்சோறு. நிலவு ஒளியில் அமர்ந்து சாப்பிட்டால் அறிவு வளரும். அழகு கூடும். சாப்பிடு” என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்ட சாரு மகிழ்ச்சியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.

பௌர்ணமி அறிவியல் பயன்கள் குறித்துத் தாத்தா பேச ஆரமித்தார். ”சிறுவயதில் பெரியவர்கள் கூறும் காரணங்கள் புரிவதில்லை. நாம் வளர்ந்த பிறகு அதற்குரிய காரணங்களை அறியும்போது வியப்பாக உள்ளது.

பௌர்ணமி என்பது பூமி சூரியனைச் சுற்றி வருவது போல, நிலவும் பூமியைச் சுற்றி வருகிறது. நிலவு பூமியை ஒரு முறை சுற்றி வலம் வருவதற்கு ஒன்பதரை நாட்கள் ஆகின்றன. பொதுவாகச் சூரியனிடமிருந்து தான் நிலவுக்கு ஒளி கிடைக்கிறது. பின் நிலவானது சூரியனிடமிருந்து வாங்கிய ஒலியைப் பூமியில் பிரதிபலிக்கிறது.

இந்தப் பவுர்ணமி நிலவொளியில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன இதனால்தான் அக்காலத்தில் பெரியவர்கள் பௌர்ணமியில் நிலாச்சோறு சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டுவந்தனர்.

நிலவொளியில் சாமி கும்பிட்டுச் சிறிது நேரம் உணவில் நிலவொளி படும்படி இருக்க வேண்டும். அப்பொழுது நிலவின் கிரணங்கள் அதில் படிந்து சத்து மிகுந்ததாக மாறும். அவ்வுணவை நாம் உண்ணும் பொழுது அந்தச் சத்துக்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

தேனீக்கள் கூட நாள் முழுவதும் கொண்டுவரும் தேனியைச் சேமித்துப் பௌர்ணமி அன்று அவற்றை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை இங்கு யோசித்துப் பார்க்க வேண்டும்.”

முனைவர் ம. அபிராமி,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி, ஆவடி