சே.கார்கவி கவிதை

சே.கார்கவி கவிதை




நாம்
யாருடனும்
ஒப்பிட முடியாத
காதலில்
முழ்கியிருக்கும் பொழுது
மழைத்துளியின் வருடலுக்கு
சருமங்கள் பதிலளித்து விடுகின்றன
இன்று போய் நாளை வாவென……..

மயில் தோகைகளை
ஆசையாக சேகரித்து
அவள் படித்து முடித்த புத்தகத்தில் செருகி
அதனுடே ஆரம்பமாகிறது
மயில் தோகையின் வண்ணமாகிய
காதல் மழை….!

உன் மனதின் சிறு ஓரங்களின் மறைவுக்காக நெடுங்கால மழையைக் கேட்கிறேன்…
நீ
ஒரு துளி காதல் கொடுக்கிறாய்….!

எனது
உத்திரவாதங்கள்
உனது முத்தங்களின்
மத்தியில் களைந்து போய்விடுகின்றன
இருப்பினும் இதோ
வைத்துக்கொள்
என் இதயம்
அடுத்த முத்தம் தருவதற்கு முன்னே சம்மதம் பெற்றுவிடு…..!

இதழைப்பார்த்தேன்
வானம் பார்த்தேன்
மீண்டும் இதழைப் பார்த்தேன்
மழையைப் பார்த்தேன்
இதழ் வெடிப்பை பார்த்தேன்
வறட்சியை பார்த்தேன்
காதோர முடிப் பார்த்தேன்
தூரமான குதிரையின் அலாதியான வால் பார்த்தேன்
இதயம் பார்த்தேன்
பூசிய வண்ணம் பார்த்தேன்
தூரமாக பூசிக்கொண்டு பறக்கிறது
அணியின் பட்டாம்பூச்சி…….

ஒட்டுமொத்தமாக
சொல்லிவிடு
இந்த மௌன நடையில்
முதல் பாதம் யாருடைய குத்தகை……
யாரை ஈர்த்து தள்ளும் ஒத்திகை….

– கவிஞர் சே கார்கவி

Azhagu Childrens Story By Era. Kalaiyarasi. அழகு குழந்தைகள் கதை - இரா கலையரசி

அழகு குழந்தைகள் கதை – இரா. கலையரசி




கழுத்தை ஆட்டி ஆட்டி “நான் நல்லா ஆடறேனா பா”னு கேட்டபடி வந்தது குட்டி மயில் குந்த்ரா.

“ம்.ம்.நல்லா இருக்கு”னு சொன்ன அப்பா மயிலை பார்த்து, “அப்பா, நீங்க அழகா இல்ல. அம்மா எவ்வளோ அழகா இருக்காங்க. அம்மா தோகை நீளமா விசிறி போல இருக்கு. எனக்கு வேர்த்தா விசிறி விடுவாங்க. நீங்க நல்லாவே இல்லப்பா.எனக்கு அம்மாவைத்தான் புடிக்கும்” னு சொல்லி ஓடியது குந்த்ரா.

அருகே வேய்ந்திருந்த மின் வேலியை நெருங்க அதில் அழகான கொடி படர்ந்து இருந்தது.

பல வண்ண நிறங்களில் பூக்கள் பூத்துக் கண்களைக் களவாடியது. குந்த்ரா மெல்ல வேலியை நெருங்கி விட்டது.

“அழகு பூ பாரு அழகு னா யாரு? வந்து என்னைப் பாரு”.

பாடிக்கிட்டே அலகை வேலியிடம் கொண்டு போக, பாய்ந்து வந்தது அப்பா மயில்.

இலேசாக மின்சாரம் அப்பா உடலில் உரசியது”.க்யாவ் ‘என கத்தியவாறு விழுந்தது அப்பா மயில்.

குந்த்ரா பயந்து ஓடி பார்த்தது. காயத்துடன் இருந்த அப்பா அழகாகத் தெரிந்தார்.

அழகு அன்பிலா? தோற்றத்திலா? குட்டீஸ். சொல்லுங்க பார்ப்போம்.

மயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)

மயில் ஆடிய தருணத்திற்கு அப்பாற்பட்ட உண்மைகள் – டி ஜே எஸ் ஜார்ஜ் (தமிழில்: தா.சந்திரகுரு)

நரேந்திர மோடி செய்திருப்பதைப் போல, வேறு எந்தவொரு பிரதமரும் தன்னை இந்திய வரலாற்றில் இவ்வாறு பதித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் ஆட்சியில் இருந்த ஆண்டுகள் இந்திய வரலாறு எழுதப்படுகின்ற போது, பாஜகவின் காலமாக அல்லாமல், மோடியின் காலம் என்றே அழைக்கப்படும் அளவிற்கு அவரது…
தொடர் 11: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மயில்) – வை.கலைச்செல்வன்

தொடர் 11: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மயில்) – வை.கலைச்செல்வன்

இயற்கை எவ்வளவோ அழகை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.. பறவைகளும் அதிலோர் அங்கம்.. பார்த்தவுடன் மனதைக் கவரும் பறவையினத்தில் மயிலும் ஒன்று..மயில் பற்றி ஒரு கட்டுரை வரைக என்று தேர்வில் கேட்டால் அதன் அழகிய தோகையில் தொடங்கி புத்தகத்தில் வைத்தால் குட்டிபோடுவது (கிடையாது)…