Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 6 : வெளியே கடவுள், உள்ளே மிருகம் ! – இரா. சிந்தன்




1953 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 3 வது மாநாடு மதுரையில் நடந்தது. அதற்கு முன்பாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பான இடத்தை பெற்றிருந்த போதிலும், அரசின் தன்மையைப் பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன.

வெளியே கடவுள், உள்ளே மிருகம் !
ஆளவந்தான் திரைப்படத்தில் தனது இரட்டை நிலையினைப் பற்றி நாயகன் பாடும் வரிகளை உல்டா செய்து படித்தால், அதுதான் அப்போது இந்திய அரசின் தன்மையாக இருந்தது. உலக அரங்கில் அவர்கள் ஏகாதிபத்திய முகாமிற்கு மாற்றினை முன்வைத்தார்கள். ஆனால், உள்நாட்டில் முதலாளித்துவ பாதையில் சென்றார்கள்.

இந்த நிலைமை பலருக்கும் விளங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. மூன்றாவது மாநாட்டில், ஒரு சகோதர பிரதிநிதியாக பங்கேற்று பேசிய பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹேரி பொலிட், ‘நேரு தலைமையிலான இந்திய அரசு ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி ஒன்றை உருவாக்குவதில் பங்கு வகிப்பதாக புரிந்து கொண்டிருந்தார்’. எனவே இந்தியா உட்பட உலகம் ழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் நேரு அரசை ஆதரிக்க வேண்டும் என்றார். அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலை எடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வைத்து, முற்போக்கு சக்தியாக மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

நடந்தது என்ன?
இந்திய விடுதலைக்கு பிறகு நேரு அரசாங்கம் முன்வைத்த முதல் ஐந்தாண்டு திட்டம், ஆளும் வர்க்கங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. அயல் துறை கொள்கையிலும் ஏகாதிபத்தியங்களுடன் ஒத்துழைக்கும் போக்கினையே முன்னெடுத்தார்கள். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை என்பதாலேயே கூட்டுச் சேராக் கொள்கையை முன்னெடுத்தார்கள். இந்த மாற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சி முற்போக்கான ஒன்றாக பார்த்தது. ஆனால், இது உள்நாட்டு அணுகுமுறைகளிலும் மாற்றத்தை கொண்டுவருமா என்பதுதான் கேள்வி.

1949 ஆம் ஆண்டில்தான் மக்கள் சீனம் உருவாகியிருந்தது. கொரிய அமைதி ஒப்பந்தம் 1953 ஜூலை 27 ஆம் தேதி கையெழுத்தானது. இப்படியான உலக சூழலில்தான், இந்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுத்தது. அணுகுண்டுகளுக்கு எதிராகவும், சோசலிச நாடுகளுடன் கலாச்சார பரிவர்த்தனை, தொழில்நுட்ப பரிவர்த்தனை, வணிக தொடர்புகள் என்று பல்வேறு கவனிக்கத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. (இந்த சமயத்தில்தான், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ராணுவத்தளத்தை பாகிஸ்தானில் அமைத்தது)

உள்நாட்டில் இந்திய அரசாங்கம் கடைப்பிடித்த கொள்கைகள் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ சக்திகளின் நலன்களை முன்னெடுப்பதாக அமைந்தன. தொழில்துறையும், வேளாண் துறையும் சந்தித்த நெருக்கடிகள் அதிகரித்தன. நிலவுடைமைக்கு முடிவுகட்டுவதில் இந்திய அரசிற்கு விருப்பமே இல்லை. வகுப்புவாதமும் ஒரு முக்கியமான பிரச்சனையாக எழுந்தது. இவற்றிற்கு எதிராக ஒரு புரட்சிகர திட்டம் தேவைப்பட்டது.

மேலே சொன்னது ஒரு இரட்டை நிலையாகும். உலக அரங்கில் முற்போக்கு, உள்நாட்டு சூழலில் பிற்போக்கு என்று தோற்றமளித்த இந்திய அரசின் நிலைப்பாடு அதில் இருந்துதான் எழுந்தது. இதனைப் பற்றி குறிப்பிடும் இ.எம்.எஸ் – இந்திய ஆளும் வர்க்கத்திற்கு ‘ஏகாதிபத்தியத்தோடு முரண்பாடுகள் இருந்தன. உள்நாட்டில், இந்திய மக்களுடனும் அதற்கு முரண்பாடுகள் உள்ளன’ – என்று விளக்குகிறார்.

ஆரம்பத்திலேயே மேற்சொன்ன புரிதல் கட்சிக்குள் வரவில்லை. “அயல்துறைக் கொள்கையில் ஒரு முற்போக்கான நிலையை ஏற்கெனவே மேற்கொண்டுவிட்ட அரசு, காலப்போக்கில் படிப்படியாக அதன் உள்நாட்டுக் கொள்கைகளிலும் முற்போக்காக மாறும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது…” என்பதையும் இ.எம்.எஸ் குறிப்பிடுகிறார். அயல்துறைக் கொள்கையில் காணப்பட்ட முற்போக்கான அம்சங்களுக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் கருத்துவேறுபாடு ஏற்படவில்லை…” ஆனால் இந்த “முற்போக்குத் தன்மை அரசின் உள்நாட்டுக் கொள்கையிலும் பிரதிபலிக்கும் என்ற வாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.” என்கிறார்.

அனைத்தையும் விவாதித்த மாநாட்டு, இந்தியாவின் உள்நாட்டுச் சூழலை கணக்கில் கொண்டு, தனது மதிப்பீட்டையும் நிலைப்பாட்டையும் மேற்கொண்டது. அதாவது, அயல்துறைக் கொள்கைகளை வரவேற்கும் அதே சமயத்தில், உள்நாட்டு நிலைமைகளுக்கு ஏற்ற சுயேட்சையான நிலைப்பாட்டை மேற்கொண்டது.

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

முதலாளித்துவ நலன்கள்
முதலாளித்துவ வர்க்கத்தினர், நிலப்பிரபுக்களோடும் இதர பிரிவினரோடும் முரண்பட்டார்கள். நாட்டை வேகமாக தொழில்மயமாக்க வேண்டும் என்று விருபினார்கள். ஆனால், பிற்போக்கு சக்திகள் இதற்கு எதிராக நின்றார்கள். கம்யூனிஸ்ட் கட்சி ‘நிலவுடைமை எதிர்ப்பில் அரசோடு ஒத்துழைக்க முடியும். ஆனால், அரசுக்கு ஒரு புரட்சிகரமான எதிர்ப்பு என்பதே கட்சியின் நிலையாக இருந்தது.’

‘அதாவது புரட்சிகர தொழிலாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினருக்கும் இடையே கூட்டு என்ற லெனினிய நடைமுறையை கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது அகில இந்திய மாநாட்டிலும் அதற்குப் பிறகும் கடைப்பிடித்தது’ என்கிறார் இ.எம்.எஸ். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகள் மேற்சொன்ன நிலைப்பாட்டை ஏற்றார்கள்.

‘இந்திய அரசியல் பற்றி வெளிநாட்டுத் தோழர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினாலும் கூட, இந்திய கட்சி இங்கே கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை, தானே உருவாக்கிக் கொண்டது’

Co-leadership of the Communist Movement (God outside, the beast inside!) Web series 6 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 6 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (வெளியே கடவுள், உள்ளே மிருகம் !)

1952 கல்கத்தா பிளீனம்:
கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தங்கள் வருவாயில் இருந்து ஒரு சதவீதத்தை கட்சிக்கு லெவியாக வழங்குவார்கள். அதே போல கட்சி உறுப்பினர்களுக்கென்று உரிமைகளும், கடமைகளும் உள்ளன. கட்சியில் ஒருவர் உருப்பினராகும் முன்பு அடிப்படைகளை கற்றுக்கொடுக்க வேண்டும். இதுபோன்ற உட்கட்சி விசயங்களை 1952 கல்கத்தா பிளீனம் (சிறப்பு மாநாடு) விவாதித்தது. கட்சி விரிவாக்கத்தையும், கட்சி ஒற்றுமையும், தத்துவார்த்த – அரசியல் புரிதலை வலுவாக்க வேண்டிய அவசியத்தையும் மனதில் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன உட்கட்சி நடைமுறைகளைப் பற்றிய விரிவான விவாதமும் முடிவுகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அதில் தோழர் இ.எம்.எஸ், ரன்னென் சென் மற்றும் ராமமூர்த்தி ஆகிய தோழர்களை உள்ளடக்கிய குழு, அமைப்பு சட்ட திருத்தங்கள் பற்றிய பரிந்துரைகளை வழங்க பணிக்கப்பட்டது. மூன்றாவது மாநாட்டில் தோழர் இ.எம்.எஸ் முன்வைத்த பரிந்துறைகள் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன.

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்

Co-leadership of the Communist Movement (India's path of revolution!) Web series 5 by Era. Sindhan இரா. சிந்தனின் தொடர் 5 கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை (இந்தியாவின் புரட்சிப் பாதை !)

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 5 : இந்தியாவின் புரட்சிப் பாதை ! – இரா. சிந்தன்




1964 ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டது. அது தனது திட்டத்தில் ‘மக்கள் ஜனநாயக’ புரட்சி என்ற தெளிவான தொலைநோக்கினை முன்வைத்தது என்பதை நாம் அறிவோம்.

உண்மையில், 1951 ஆம் ஆண்டில், முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற இலக்கினை கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துக் கொண்டது என்பதை இ.எம்.எஸ் தனது நூலில் விளக்குகிறார். 1964 ஆம் ஆண்டில் கட்சி பிளவுற்ற பிறகு சி.பி.ஐ ‘தேசிய ஜனநாயகம்’ என்ற புதிய கோட்பாட்டினை உருவாக்கியது. உண்மையில் அதுவொரு வர்க்கப் போராட்ட திட்டமாக இல்லை. வர்க்க சமரசத்திற்கே வழிவகுத்தது. மார்க்சிஸ்ட் கட்சியோ ‘மக்கள் ஜனநாயகம்’ என்ற சரியான இலக்கையே தொடர்ந்து முன்னெடுத்தது.

இந்த இலக்கு, 1951 அக்டோபரில் கல்கத்தாவில் நடந்த சிறப்பு மாநாட்டில் ஏற்கப்பட்ட ஒன்றாகும். அப்போது ஏற்கப்பட்ட ஆவணத்தில் 53 பகுதிகள் இருந்தன.’நாட்டின் அனைத்து கனிம சுரங்கங்களும், கப்பல் கட்டும் தளங்களும், ஆலைகளும், பண்ணைகளும் தேசியமயமாக வேண்டும்’ என்ற புரட்சிகரமான அறைகூவலை விடுத்த அந்த திட்ட ஆவணத்தின் பகுதிகளை விளக்கி இ.எம்.எஸ் குறிப்பிடும் கருத்துக்களை பார்ப்போம்.

மக்கள் ஜனநாயகம் என்றால் என்ன?
அ) மக்கள் அனைவருக்கும் உண்மையான – நம்பகமான – விரிவான ஜனநாயக உரிமைகளை, மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எதிர்பார்த்தது போல பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் உறுதிப்படுத்துவது;
ஆ) அந்த ஜனநாயக அமைப்பில் தொழிலாளி மற்றும் விவசாயி மக்களின் தலைமையை உறுதிப்படுத்த வேண்டும்;
இ) அரசு மற்றும் அரசியல் அமைப்பின் தலைவனாக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும்

‘முதலாளிகளுக்குக் கூட விதிவிலக்கு இல்லாமல் பெரும்பான்மை மக்களாகிய தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துகிற ஒரு அரசு அமைப்பைத் தான்’ மக்கள் ஜனநாயகம் முன்வைக்கிறது. இந்த முடிவு நமது நாட்டின் வரலாற்று சூழலை கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

தேர்தல்களில் பங்கேற்பு
மேலும் அந்த ஆவணம் தேர்தல்களை பற்றியும் பேசியது. ‘கம்யூனிஸ்ட்டுகள் தேர்தல்களைப் பயன்படுத்தி, பெரும்பான்மை பெற்று, ஆட்சியதிகாரத்தில் நீடிக்க முதலாளித்துவ வர்க்கம் அனுமதிக்கும் என்று முடிவு செய்து விடக் கூடாது. மாறாக, நாடாளுமன்ற அமைப்புகளையும் நிர்வாக ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் அமைப்புகளையும், இயக்கங்களையும் பலப்படுத்திட கம்யூனிஸ்ட்டுகள் முயல்கிறார்கள் என்பதை முதலாளித்துவ வர்க்கத்தினர் காண்பார்களானால் அதைத் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் – பலப்பிரயோகம் உட்பட – அவர்கள் மேற்கொள்வார்கள். அப்படியரு கட்டம் வருமானால், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி அதைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளை வகுத்திட வேண்டும்’

இது ஒரு எச்சரிக்கை. இதன் பொருளை கீழே காணும்படி விளக்குகிறார் இ.எம்.எஸ்., “நாடாளுமன்ற அமைப்புகளின் மூலம் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு மக்கள் ஆதரவை வென்றெடுப்பதற்கான போராட்டங்களும் – இந்த போராட்டங்கள் மற்றும் ஆதாயங்களின் மூலமாக ஒரு புரட்சிகர இயக்கத்தை வலுவாகக் கட்டுவதும் – இந்தியப் புரட்சிப் பாதையின் துவக்கமாகும். ஆனால் முதலாளித்துவ படைபலத்துக்கு எதிராக புரட்சிகர வழிமுறைகள் மூலமாகப் போராட வேண்டிய அவசியம் ஏற்படுமானால் அதையும் செய்தாக வேண்டும்.”

தேர்தல்களில் பங்கேற்பது மட்டுமல்ல, பெரும்பான்மை பெறுகிற நேரங்களிலும் இடங்களிலும் அரசுப் பொறுப்பை ஏற்பதும் கூட கம்யூனிஸ்ட்டுகளின் பணியாகும். சோவியத் யூனியனிலோ, சீனாவிலோ, இருந்திராத, இந்தியாவுக்கே உரிய நிலைமையாக இது உள்ளது.

உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிடைத்த பல்வேறு அனுபவங்களை சுட்டிக்காட்டும் இ.எம்.எஸ், “இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கமும் முயற்சிகளும் சோவியத்தைப் போலவோ சீனாவைப் போலவோ இதர சில சோசலிச நாடுகளைப் போலவோ பிரதியெடுத்தார்ப் போன்ற அரசு அமைப்பை ஏற்படுத்துவது அல்ல” என்பதையும் தெளிவாக்குகிறார்.

மேற்சொன்ன ஆவணம் கொடுத்த பார்வையின் அடிப்படையிலேயே 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத்தேர்தலிலும், பிற தேர்தல்களிலும் கம்யூனிஸ்டுகள் பங்கெடுத்தார்கள். விடுதலைக்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியின் பகுதி என்ற முறையிலும், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்தப் பெயரிலும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள்.

இடது, வலது திரிபுகள்:
மேலே குறிப்பிட்ட ஆவணம், சில திரிபுகளைப் பற்றிய எச்சரிக்கையையும் முன்வைத்தது. பிற்காலத்தில் அத்தகைய திரிபுகளை எதிர்த்து போராட வேண்டி வந்ததை நாம் அறிவோம்.

‘தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் கட்சி என்பது அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும்’ ‘கோடிக்கணக்கில் உழைக்கும் மக்கள் பங்கேற்கிற தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் அன்றாடப் போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்தான் உழைக்கும் மக்களின் ஜனநாயக இயக்கத்தின் ஆற்றல்மிகு அடித்தளமாகும்.’ என்பதை ஆவணம் தெளிவாக குறிப்பிட்டது.

· அவ்வாறு அல்லாமல், மக்கள் போராட்டங்களில் உறுதியாகக் காலூன்றாமல், முதலாளித்துவ நாடாளுமன்ற நிர்வாக அமைப்புகளில் செயல்படுவதும் தேர்தல்களில் பங்கெடுப்பதையும் மட்டுமே முன்னெடுத்தால் அது ஒரு வலதுசாரி திரிபு நிலைமையில் கொண்டு போய் தள்ளிவிடும்.

· மக்களைத் திரட்டாமல் அவர்களது போராட்டங்களுக்குத் தலைமை ஏற்காமல் முதலாளித்துவ ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிவந்தால் அது இடது சாரி திரிபுவாதமாக சுருங்கிப் போகும்.

· அதே போல வர்க்கங்களின் சக உறவுகள் மற்றும் அரசியல் கூட்டணிகள் தொடர்பான பிரச்னைகளிலும் ஏற்படக்கூடிய வலது-இடது திரிபுகள் பற்றிய எச்சரிக்கைகளும் அதில் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, மக்கள் ஜனநாயகம் என்ற கோட்பாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலை எடுக்கக்கூடிய முதலாளித்துவ பிரிவினரும் உட்படுத்தப்படுகிறார்கள் என்றாலும் கூட, முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்களும், குழுக்களும் தொழிலாளி வர்க்கத்தின் மீது பகைமை கொண்டவர்கள் தான் என்பதை மறக்கக் கூடாது. எனவே முதலாளித்துவ பிரிவினர் தம்முடைய சொந்த வர்க்க நலன்களுக்காக ஜனநாயக லட்சியத்துக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற வாய்ப்பு உள்ளது. இது குறித்து பாட்டாளி வர்க்கமும் அதன் அரசியல் கட்சியும் தொடர்ந்து விழிப்புடன் இருந்ததாக வேண்டும்.

இதனை இ.எம்.எஸ் விளக்கும்போது சில உதாரணங்களையும் தருகிறார். “விவசாய அரங்கில், பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கத்தை நடத்துவதற்குக் கட்சி முயல்கிறது. ஆனால், பணக்கார விவசாயிகளில் ஒரு பிரிவினர் சில நேரங்களில் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக மாறக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன. இது குறித்தும் விழிப்புடன் இருப்பது கம்யூனிஸ்ட்டுகளின் பொறுப்பாகும். ஆனால் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயி மக்களின் ஒற்றுமையை பாதுகாத்துக் கொண்டே, கட்சி இதனைச் செய்ய வேண்டியுள்ளது.”

சுருக்கமாக, நிலவுடைமை சக்திகளையும், ஏகாதிபத்திய சக்திகளையும், ஏகபோக பெருமுதலாளிகளையும் எதிர்த்து ஜனநாயகத்துக்கு ஆதரவான நிலை எடுக்கக்கூடிய எல்லாரோடும் ஒத்துழைக்க வேண்டும்; அதே நேரத்தில் பாட்டாளி வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும், கூட்டாளிகளின் சமரச முயற்சிகளை எதிர்த்திட வேண்டு. இதுதான் மக்கள் ஜனநாயகத் தொலைநோக்குப் பார்வையின் பொருள் ஆகும்.

ஆம்‘நமது புரட்சிப் பாதை… இந்தியாவின் சொந்தப் பாதை, அதன் வடிவத்தை இந்திய மக்களே முடிவு செய்வார்கள்’

முந்தைய தொடர்களை வாசிக்க :

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 1 – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 2 : தனி நபர்கள், செயல் திட்டம், தத்துவம் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 3 : பாசிச எதிர்ப்பும், தேசிய இன உரிமைகளும் ! – இரா. சிந்தன்

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டுத்தலைமை 4 : குழப்பங்கள் அலையடித்த காலம் ! – இரா. சிந்தன்

Fake impersonation in the name of democracy (Joe Biden America Rule). ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் பீப்பிள்ஸ் டெமாக்ரசி

ஜனநாயகம் என்ற பெயரில் போலி வேடம் – தமிழில்: ச.வீரமணி



அமெரிக்க ஜனாதிபதி, ஜோ பைடன், டிசம்பர் 9-10 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த “ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு”, மேம்போக்காகப் பார்க்குங்கால், உலகம் முழுவதும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒன்று போன்றும், ஜனநாயகத்தை அரித்துவீழ்த்திட “எதேச்சாதிகாரிகளால்” மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தடுப்பதற்கான ஒன்று போன்றும் தோன்றும். இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருள்களாகக் கூறப்பட்டவை, மூன்று. அவை, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல், ஊழலுக்கு எதிராகப் போராடுதல் மற்றும் மனித உரிமைகளுக்கான மதிப்பையும், மரியாதையையும் மேம்படுத்துதல் என்பனவாகும்.

இணையம் வழியாக நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டிற்கு 100 அரசாங்கங்களின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 89 பேர் பங்கேற்றனர். இவ்வாறு பங்கேற்றவர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இந்த உச்சிமாநாடு, “ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகவோ, எதேச்சாதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற் காகவோ” கூட்டப்பட்ட ஒன்று அல்ல என்பதும், மாறாக இது, அமெரிக்கா, “ஜனநாயக உலகத்தின்” மீதான தன் மேலாதிக்கத்தைப் பேணிப் பாதுகாத்திடவும், சீனாவையும், ரஷ்யாவையும் கட்டுக்குள் வைத்திடுவதற்கான தன் போர்த்தந்திரத் திட்டங்களை விரிவாக்கிடுவதற்குமானது என்பதும் நன்கு தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், “எதேச்சாதிகாரத்தைப் பின்னுக்குத் தள்ளுவது” பற்றி பேசியபின், மாநாட்டில் அவர் சென்று அமர்ந்த இடத்தில் அவர் அருகில் அமர்ந்திருந்தவர்கள் யார் தெரியுமா? தங்கள் நாடுகளில் எதேச்சாதிகார ஆட்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜயில் பொல்சனாரோ (Jair Bolsonaro)வும், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ துதெர்த்தே (Rodrigo Duterte)யும் ஆவார்கள். பொல்சனாரோ, தங்கள் நாட்டின் பூர்வகுடியினரின் உரிமைகளை ஒடுக்குவதன் மூலமும், அமேசான் மழைக்காடுகளை அழிப்பதன்மூலமும், மக்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டபோது அத்தொற்றின் ஆபத்து குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாததன் மூலமும் மக்களால் மிகவும் வெறுப்புக்கு ஆளாகியிருக்கும் நபராவார். ரொட்ரிகோ துதெர்த்தே, போதை மருந்துக்கு எதிராகப் போராடுகிறேன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கானவர்களை கொன்று குவிக்கும் ஆட்சியை நடத்துவதாலும், இதழாளர்கள் மீதும், மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் அடக்குமுறையை ஏவி, அவர்களைச் சிறையில் அடைத்திருப்பதன் மூலமும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பவர்.

மேலும அமெரிக்காவின் நலன்களுக்கு சேவகம் செய்திடும் நபர்கள் அழைக்கப்பட்டிருப்பதும் நன்கு தெரிந்தது. தன்னுடைய சொந்தக் கொள்கையான “ஒரே சீனம்” கொள்கையை மீறிச் செயல்படும் தைவான் பிரதிநிதிகளுக்கும், வெனிசுலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மதுராவின் அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க ஆதரவுடன் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஜூன் குவைடோ (Juan Guaido)விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த உச்சிமாநாட்டிற்கு தெற்கு ஆசியாவில் உள்ள அரசாங்கங்கள் எவை எவை அழைக்கப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தால், அமெரிக்காவில் சூழ்ச்சித் திட்டங்கள் நன்கு விளங்கும். பாகிஸ்தானை அழைத்திருந்த அதே சமயத்தில் (பாகிஸ்தான், அழைப்பை ஏற்க மறுத்துவிட்டது), வங்க தேசத்தையோ அல்லது இலங்கையையோ அது அழைக்கவில்லை. இந்தியா, நேபாளம் மற்றும் மாலத்தீவுகள் ஆகியவை அழைக்கப்பட்ட இதர நாடுகளாகும். பாகிஸ்தானைக் காட்டிலும் வங்க தேசம் ஜனநாயகத்தில் கீழான நாடா? அமெரிக்காவிற்கு, ஆப்கானிஸ்தானத்திற்குச் செல்ல பாதை தேவை. அதற்கு பாகிஸ்தானின் தயவு தேவை. இதுதான் அமெரிக்காவிற்கு, பாகிஸ்தானை அழைப்பதற்கான தீர்மானகரமான காரணியாக இருந்தது.

File:The Prime Minister, Shri Narendra Modi addressing at the 1st  Uttarakhand Investors Summit, at Dehradun, Uttarakhand on October 07, 2018  cropped.jpg - Wikimedia Commons

பிரதமர் மோடி உச்சிமாநாட்டுக்கு அனுப்பியிருந்த அறிக்கையில், தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், “எங்கள் நாகரிக சமுதாயத்தின் அடிப்படைக்கூறுகளுக்கு, ஜனநாயக உணர்வு என்பது பிரிக்கமுடியாது பின்னிப்பிணைந்த ஒன்று என்றும்” அறிவித்தார். இவ்வாறான சுய-தம்பட்ட உரையில், அவர் இந்தியாவில் ஜனநாயக அமைப்புமுறைக்கு ஏற்பட்டிருக்கிற அச்சுறுத்தல்கள் அல்லது பிரச்சனைகள் குறித்து எதுவும் இல்லை.

பைடன், மாநாட்டைத் தொடங்கிவைத்து உரையாற்றுகையில், அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியுடன் செயல்பட்டுவரும் அரசு சாரா நிறுவனமான, ஃப்ரீடம் ஹவுஸ் (Freedom House) அளித்திருந்த அறிக்கையானது 2020இல் உலகத்தில் சுதந்திரம் என்பது தொடர்ந்து 15 ஆவது ஆண்டாக பின்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். இதே ஃப்ரீடம் ஹவுஸ் 2021இல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவை “சுதந்திரமாக இருந்த நாடு” (“free”) என்ற நிலையிலிருந்து “ஒரு பகுதி சுதந்திரமாக உள்ள நாடாக” (“partially free”) மாறியிருப்பதாகத் தரம் தாழ்த்தி இருக்கிறது.

ஜனநாயகத்தின் வீழ்ச்சி குறித்து, பைடன் தாக்கல் செய்துள்ள மற்றுமொரு அறிக்கையானது, ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவிக்கான சர்வதேச நிலையம் (International Institute for Democracy and Electoral Assistance) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலிருந்து கையாளப்பட்டிருக்கிறது. இந்த நிலையமானது, ‘2021 ஜனநாயகத்தின் உலக நிலைமை’ (‘The Global State of Democracy, 2021) என்ற தன்னுடைய அறிக்கையில், “ஜனநாயகம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையை, இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் … போன்ற நாடுகளில் பளிச்செனத் தெரிகிறது,” என்று குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பது குறித்து மிகவும் மோசமாக அறிக்கைகள் வெளிவந்திருந்தாலும், அதனையெல்லாம் அமெரிக்கா பொருட்படுத்தாது என்பது தெளிவாகவே தெரிகிறது. ஏனெனில் அதற்கு அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கிற்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு மதிப்புமிக்க கூட்டாளியாக இந்தியாவை அது கருதுகிறது. அதனால்தான் அது, மோடி அரசாங்கமானது குடிமக்களின் உரிமைகளைப்படிப்படியாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது பற்றியோ, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது பற்றியோ, அரசியல் செயற்பாட்டாளர்களுக்கும், இதழாளர்களுக்கும் எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்கள் மிரட்டப்பட்டு வருவது குறித்தோ பொருட்படுத்தவில்லை. அதைப் பொருத்தவரைக்கும், அமெரிக்காவின் திரித்துக்கூறப்படும் தர்க்கங்களின்படி நரேந்திர மோடியைவிட வங்க தேசத்தின் ஷேக் ஹசினா அதிக எதேச்சாதிகாரியாவார்.

அமெரிக்காவில் ஜனாதிபதிகள் மாறியபோதிலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அதன் போலி வேடம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 1980களில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் காலத்தில், ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை (NED-National Endowment for Democracy) ஒன்று நிறுவப்பட்டது. அதன் குறிக்கோள் வாசகம் (motto), “ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக சுதந்திரச் சந்தைகள்” என்பதாகும். இதைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்கா, தனக்கு எதிரான நாடுகள் எனக் கருதிய நாடுகளில் செயல்பட்டுவந்த எதிர்க்கட்சிகளுக்கு ஏராளமான நிதியை அளித்து வந்தது.

இதனைக் கிளிண்டன் அரசாங்கமும் தொடர்ந்தது. இப்போது அந்த மேடையானது “ஜனநாயகங்களுக்கான சமூகம்” (CoD-“Community of Democracies”) என மாற்றப்பட்டது. அதன்கீழ் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த சமயத்தில் 1999-2000இல் இந்தியாவில் ஆட்சி செய்த வாஜ்பாயி அரசாங்கம் இதில் மிகவும் ஆர்வத்துடன் தன்னை இணைத்துக்கொண்டது. இந்த அமைப்பின் சார்பாக 2000 ஜூனில் வார்சாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டை நடத்திட உதவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

பின்னர், ஜார்ஜ் புஷ் ஜனாதிபதியாக வந்தபின்னர், 2005இல் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அமெரிக்காவின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷூம் இணைந்து, “உலகளாவிய ஜனநாயகத்திற்கான முன்முயற்சி” (“Global Democracy Initiative”) என்னும் கூட்டு அறிக்கையை அறிவித்து, இந்தியா, அமெரிக்காவுடன் தன்னை இணைத்துக் கொண்டது.

அமெரிக்க ஜனநாயக நிறுவனம் உலகில் உள்ள பல நாடுகளைக் கவிழ்ப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் உதவுவதேயாகும். இவ்வாறு அது, 1950களிலிருந்தே லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா ஆகியவற்றிலிருந்த கௌதமாலா, பிரேசில், சிலி, கிரேனேடா, ஈரான், தென் கொரியா, இந்தோனேசியா ஆகியவற்றில் ஆட்சி செய்த அரசாங்கங்களைக் கலைத்திடவும், பலவீனப்படுத்திடவும் உதவி இருக்கிறது.

அமெரிக்கா மேற்கொண்ட மற்றொரு முறையானது, “ஜனநாயகத்தை விதைப்பதற்காக” சில நாடுகளுக்கு எதிராக ராணுவரீதியாகவே தாக்குதல்களைத் தொடுப்பதும், அவற்றை ஆக்கிரமித்துக்கொள்வதுமாக இருந்து வந்திருக்கிறது. இவற்றுக்குச் சமீபத்திய எடுத்துக்காட்டுகள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானமாகும்.

File:President of the United States Joe Biden (2021).jpg - Wikimedia Commons

பைடன், இப்போது நடைபெற்ற உச்சிமாநாட்டின் முடிவில், ஜனநாயகத்தைப் புதுப்பித்தல் மற்றும் ஜனநாயகத்திற்கான திட்டத்திற்கான கூட்டுப்பங்காண்மைக்காக ஒரு நிதியம் (Fund for Democratic Renewal and a Partnership for Democracy programme) 424 மில்லியன் டாலர்களில் உருவாக்கப்படும் என்றும், இந்த நிதியம் அமெரிக்கா அரசாங்கத்தாலும், அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்கா ஏஜன்சி (USAID-United States Agency for International Development) மூலமாகவும் நிர்வகிக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் புவிசார்அரசியல் நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிடும் விதத்தில் இதன் நிதிகள் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படும் என்பதைப் புரிந்துகொள்வதில் அதிகம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை.

ஜனாதிபதி பைடன், உலக ஜனநாயகத்திற்காகப் போராடும் வீரனாகத் தன்னைக் காட்டிக்கொள்வதற்குப் பதிலாக, அமெரிக்காவில் ஜனநாயக அமைப்பு முறைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று கவனம் செலுத்துவது நல்லது. பைடன் பேசும்போது, “வாக்குச்சீட்டின் புனித உரிமை” குறித்தும், எப்படி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான உரிமை குறித்தும், அவ்வாறு அறிந்துகொள்வதே “ஜனநாயகத்திற்கான சுதந்திரத்தின் நுழைவாயில்” என்றும் தன்னுடைய நிறைவுரையில் பூசிமெழுகி யிருக்கிறார். இவர் கூறியுள்ள இந்த சுதந்திரமான வாக்களிக்கும் உரிமை என்பது அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்டுக்கொண்டும், சுருக்கப்பட்டுக்கொண்டுமிருக்கிறது. இந்த ஆண்டு மட்டும், அமெரிக்காவின் 19 மாநிலங்களில் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களில், மக்களின் வாக்குரிமைகளுக்கான சட்டங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. கருப்பின மக்களுக்கும், ஒருசில குறிப்பிட்ட மக்கள்தொகை பிரிவினருக்கும் வாக்குரிமைகள் அளிக்கப்பட்டிருந்தது இதன்மூலம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

பைடன், ஜனநாயகம், ஊழல் ஒழிப்புக்கு எதிரான போர் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய மூன்று அம்சங்கள் தொடர்பாகவும் நடந்துள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, அடுத்த ஆண்டு அனைவரும் நேரில் பங்குகொள்ளக்கூடிய விதத்தில் ஓர் உச்சி மாநாடு நடத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார். இவற்றின்மீது தாங்கள் சாதித்தது என்ன என்பது குறித்து கலந்து கொள்ளும் தலைவர்கள் கூறுவார்கள் என அவர் எதிர்பார்த்துள்ளார். இந்த விசயத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்து மோடி அரசாங்கம் கிஞ்சிற்றும் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் அது அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பது என்பதே வேறுசில விஷயங்களை நிறைவேற்றுவதற்காக என்பது அதற்கு நன்கு தெரியும்.

(டிசம்பர் 15, 2021)

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

There is no place in Kerala to divide people on the basis of Sectarianism (மதவெறி) People’s Democracy Article Translated Sa. Veeramani. கேரளாவில் மதவெறி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட இடமில்லை

கேரளாவில் மதவெறி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட இடமில்லை



கேரளாவில் மக்களின் சமூக சேர்மானம் என்பது நிகரற்ற ஒன்றாகும். இங்கே மொத்த மக்கள் தொகையில் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் 45 சதவீதத்தினராகும். மேலும் கேரளாவில் மூன்று மதத்தினருக்கிடையேயான தொடர்புகள் மிகச் சிறந்தமுறையில் பின்னிப்பிணைந்து தனித்துவத்துடன் விளங்கிவருகிறது. அவர்கள் அனைவரும் பரஸ்பரம் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இம்மூன்று மதத்தினரிடையேயும் உள்ள மக்கள் அனைவருமே தங்கள் மதங்களுக்கும் அப்பாற்பட்டு தங்கள் சமூக-கலாச்சாரப் பண்புக்கூறுகளில் அனைவரும் மலையாளி என்ற அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கேரள மக்கள் மத்தியில் அனைத்து மதத்தினரும் சகோதரத்துத்துவத்துடன் வாழ்ந்து வருவதற்கு அரசியலில் ஏற்பட்டுள்ள ஒரு வலுவான மதச்சார்பின்மைப் பாரம்பர்யம் காரணமாகும். இத்தகையப் பாரம்பர்யத்தை உருவாக்கியதில் இடதுசாரிகள் மிகப்பெரிய அளவில் பங்களிப்பினைச் செய்திருக்கிறார்கள்.

சமீப காலங்களில், ஆர்எஸ்எஸ்/பாஜக மூலமாக இந்துத்துவா அமைப்புகள் கேரள மக்கள் மத்தியில் நிலவிவரும் இத்தகைய பரஸ்பர நல்லிணக்க சகோதரத்துவப் பிணைப்பைச் சீர்குலைத்திட தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் பாலா பிஷப், கத்தோலிக்க தேவாலயங்களின் ஒரு பகுதியாக விளங்கும் சைரோ-மலபார் தேவாலயத்தைச் சேர்ந்த ஜோசப் கல்லரங்கத், ஆற்றிய உரையை ஒருவர் பார்த்திட வேண்டும். அவர் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு தேவாலயத்தில் உரையாற்றும்போது, முஸ்லீம் தீவிரவாத நபர்களால் மேற்கொள்ளப்படும் ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’) மற்றும் ‘ஜிகாத் போதை’ (‘narcotic jihad’) ஆகியவற்றுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார். ‘ஜிகாத் காதல்’ குறித்து கத்தோலிக்க தேவாலயங்கள் இதற்கு முன்பு பிரச்சனைகள் எழுப்பியுள்ள அதே சமயத்தில், ‘ஜிகாத் போதை’ அச்சுறுத்தல் என்று கூறியிருப்பது புதிய ஒன்றாகும்.

இவரது கூற்றின்படி, ஜிகாத்துகள் போதை மருந்துகளைப் பயன்படுத்தி, முஸ்லீம் அல்லாதவர்களை அழிக்கிறார்களாம். இத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு, இயற்கையாகவே, கேரள சமூகத்தில் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டில் இதர பகுதிகளில் இயங்கிவருவதுபோல கேரளாவிலும் போதை மஃபியாக்கள் இயங்கி வருகிறார்கள். ஆனாலும் இந்த மஃபியாக்களை எந்தவொரு தீவிரவாத மதக் குழுவுடனும் பிணைத்துக் கூறுவது முற்றிலும் தவறான ஒன்றாகும். இத்தகைய தொடர்பு இருப்பதாக எந்தவித சாட்சியமும் இல்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டியிருந்தது. “எந்த மதமும் இத்தகைய போதை மருந்துகளைப் பயன்படுத்தவில்லை. அதன் நிறம் சமூக-விரோதம்.” என்று அவர் கூறியுள்ளார். “சமூக இழிவுகள் மீது மதச்சாயம் பூசப்படக் கூடாது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

There is no place in Kerala to divide people on the basis of Sectarianism (மதவெறி) People’s Democracy Article Translated Sa. Veeramani. கேரளாவில் மதவெறி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட இடமில்லை

இவ்வாறு அரசியல் வானில் “ஜிகாதிஸ்ட் சதி”யைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கும் அதேசமயத்தில், பாஜக, பிஷப்பின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன், ஜிகாதிஸ்டுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருக்கிறது. பாஜக-வைப் பொறுத்தவரை, முஸ்லீம்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே பிளவினை ஏற்படுத்திடவும், கேரளாவிலும் இஸ்லாமோஃபோபியா (Islamophobia) என்னும் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிட இவருடைய பேச்சு ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கருதுவது போல் தோன்றுகிறது.

கேரளாவில், ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’)-ஐப் பொறுத்தவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சங்கடமான நிகழ்வு நடைபெற்றது. 21 பேர் தங்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறி ஆப்கானிஸ்தானில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்-கோராசான் (ISIS-Khorasan) என்னும் அமைப்புடன் தங்களை இணைத்துக்கொள்வதற்காக, அங்கே சென்றனர். இவர்களின் மத்தியில் இரண்டு கிறித்தவப் பெண்களும் இருந்தனர். இவர்கள் அப்போதுதான் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தனர். பின்னர் அவர்களின் கணவர்களுடன் ஆப்கானிஸ்தானத்திற்குச் சென்றனர். உண்மையில் இவர்களில் ஒருவர் ஒரு கிறித்தவரைத்தான் திருமணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் அவர்களிருவரும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். ஜிகாதிஸ்ட்டுகளின் வலைப்பின்னல் இவர்களைத் தேர்வு செய்தபின்னணியில் இவர்களுக்குத் தீவிரவாத சித்தாந்தத்தையும் போதித்தது.

இவ்வாறு இரு கிறித்தவப் பெண்கள் மதம் மாறியது தொடர்பாகவும், அவர்கள் தீவிரவாதத்தின் செல்வாக்கிற்குச் சென்றிருப்பது தொடர்பாகவும், கத்தோலிக்க தேவாலயம் கவலைப்பட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தங்களுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் இவ்வாறு தீவிரவாத செல்வாக்கிற்கு யாரும் இரையாகக்கூடாது என்று எச்சரிக்கை செய்வதும் சரியானதேயாகும். எனினும், இவையெல்லாம் தனிப்பட்ட நிகழ்வுகளேயாகும். மாநிலக் காவல்துறையினரும், தேசியக் குற்றப்புலனாய்வு முகமையும் இவை தொடர்பாக மேற்கொண்ட புலன் விசாரணைகளிலிருந்து முஸ்லீம் அல்லாத பெண்களைக் கவர்ந்திட ‘ஜிகாத் காதல்’ (‘love jihad’) போன்ற முயற்சிகள் திட்டமிட்டு எதுவும் நடைபெறவில்லை என்றே காட்டியிருக்கின்றன.

‘ஜிகாத் காதல்’ மீதான விவாதத்தில் பல்வேறு மதத் தலைவர்களும், சாதி அமைப்புகளின் தலைவர்களும் தங்கள் மத அடிப்படையிலும் சாதிய அடிப்படையிலும், ஆணாதிக்க மனப்பான்மையுடனும், பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை என்ற அடிப்படையிலும் பேசி வருவது இவ்விஷயத்தை மேலும் குழப்புகின்றன. காதல் மற்றும் திருமணம் போன்ற விஷயங்களில் பெண்களுக்கும் கருத்துக்கள் இருக்கும் என்றோ, அவர்கள் தாங்கள் விரும்பிய ஆடவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றோ இவர்கள் மறைமுகமாக மறுக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிடும் தங்கள் இழிநோக்கத்திற்காக, இத்தகைய கிறித்துவ மதவெறிப் பாதிரியார்களையும் தந்திரோபயத்துடன் அணி சேர்த்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவில் சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பல்வேறு கிறித்தவ தேவாலயங்களின் தலைவர்களை, பிரதமர் மோடி சந்தித்ததை நாம் பார்த்தோம்.

There is no place in Kerala to divide people on the basis of Sectarianism (மதவெறி) People’s Democracy Article Translated Sa. Veeramani. கேரளாவில் மதவெறி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்திட இடமில்லை
The headquarters of the Kerala Catholic Bishops’ Council in Kochi | Photo: Nirmal Poddar/ThePrint

கேரளாவில் கிறித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருக்கும் கத்தோலிக்க தேவாலயங்கள், ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களின் உண்மையான சொரூபத்தை அறிந்துகொள்ள வேண்டும். மதச்சிறுபான்மையினருக்கு எதிராக-அவர்கள் முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, அல்லது கிறித்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அவர்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கிக்கொண்டு வருகின்றன. ‘துன்புறுத்தல் நிவாரணம்’ (‘Persecution Relief’) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, 2016இலிருந்து 2019வரையிலும் நாடு முழுவதும் கிறித்தவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வெறுப்புக் குற்றங்கள் (hate crimes) 1,774 ஆகும். 2016இலிருநது கிறித்தவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வெறுப்புக் குற்றங்களின் எண்ணிக்கை 59.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பின்கீழ் இயங்கும் துணை அமைப்புகள் செப்டம்பர் 25 அன்று ‘மலபார் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம்’ (‘Malabar Hindu Genocide Day’) அனுசரித்துக் கொண்டிருக்கிறது. 1921இல் நடைபெற்ற ‘மாப்ளா கலகம்’ (‘Malabar rebellion’) என்பதைத்தான் இவ்வாறு இவர்கள் திரித்து அனுசரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாப்ளா கலகம் என்பது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கு எதிராகவும் நடைபெற்றதாகும். பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அந்தக் கலகத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் மிகவும் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டார்கள். அதுதான் அந்தக் கலகத்தின் பிரதானமான அம்சமாகும். அக்கலகத்தின் கடைசிக் கட்டத்தில் இந்துக்கள் மீதும் சில தாக்குதல்கள் நடந்தன. ஆயினும் பிரதானமாக மிக அதிக அளவில் ஒடுக்கப்பட்டவர்கள் முஸ்லீம்களாகும்.

ஆர்எஸ்எஸ், தற்போது கேரளாவில் உள்ள கிறித்துவர்களுக்கு இரக்கம் காட்டத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து, இப்போது ‘மாப்ளா கலக’த்தை, இந்துக்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல, கிறித்தவர்களுக்கு எதிரானதாகவும் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

கத்தோலிக்க தேவாலயங்களுக்குள்ளும் பல்வேறு மட்டங்களில் செயல்பட்டுவரும் பாதிரியார்களும் மற்றும் இதர பிரிவு கிறித்தவ அமைப்புகளும் இந்தத்துவா சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் இஸ்லாமோபோபியா (Islamophobia)-வின் ஆபத்துக்களையும், மக்களை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு எச்சரித்திருப்பவர்களில் முதலாவதாக யுஹனான் மோர் மெலெடியஸ் (Yuhanon Mor Meletius) என்னும் மாலங்காரா ஆர்தோடாக்ஸ் சிரியன் சர்ச்சின் திருச்சூர் மறைமாவட்டத்தின் பாதிரியார் (metropolitan) வருகிறார். அவர், “மதச்சிறுபான்மையினருக்கு இடையே பிளவினை ஏற்படுத்திட சங் பரிவாரங்கள் மேற்கொண்டுள்ள சூழ்ச்சிகளுக்கு தேவாலயங்களில் உள்ள தலைவர்கள் இரையாவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிராக” எச்சரித்திருக்கிறார்.

இந்துத்துவாவாதிகள் அள்ளித்தெளித்திடும் பெரும்பான்மை மதவெறியின் ஆபத்துக்களை கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாகவே புரிந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் அது ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்களை அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் எதிர்த்து முறியடித்திட அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. அவ்வாறு நடவடிக்கைகளில் இறங்கும்போது, முஸ்லீம்களுக்கு மத்தியில் செயல்பட்டுவரும் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் அவற்றின் சித்தாந்தங்களால் ஏற்படும் அச்சுறுத்தலையும் கட்சி நன்கு அறிந்திருக்கிறது. இக்குழுக்களில் சில வெளிநாடுகளில் இயங்கிவரும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புகளால் உருவாக்கப் பட்டவைகளாகும்.

கிறித்துவர்கள் மத்தியிலும் தீவிரவாதக் கருத்துக்கள் சில இடங்களில் காணப்படுகின்றன. ஆயினும் இவை மிகவும் சிறிய அளவிலானதாகும். மதவெறியர்களின் பிரச்சாரம் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், சமூகத்தில் சமூக-பொருளாதாரப் பிரச்சனைகளிலிருந்து எழும் பாதுகாப்பின்மையும் அதிகரித்துக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்கள் மத்தியில் நிலவும் மதச்சார்பின்மை மாண்பை சீர்குலைத்திடுவதற்கும், பல்வேறு மதத்தினருக்கிடையே பதற்றத்தை அதிகப்படுத்துவதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது பிஷப் ஒருவர் முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமாகப் பேசிய நிகழ்வு குறித்து சமூக ஊடகங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறுப் பதிவுகள் வந்திருப்பதைப் பார்க்கிறோம். சமூக ஊடகங்களில் மதவெறி நஞ்சு உமிழப்படுவதைக் கட்டுப்படுத்திட மாநில அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அதே சமயத்தில், மதவெறி மற்றும் பிளவுவாத சக்திகளின் வெறிப்பிரச்சாரத்தை முறியடித்து, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாத்திட வேண்டிய பொறுப்பும் கடமையும் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையே சாரும். இதனை அவர்கள் சமூகத்தில் உள்ள அனைத்து முற்போக்குப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டிட வேண்டும்.

நன்றி: People’s Democracy

தமிழில்: ச.வீரமணி

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  – நிஷித் சௌத்ரி



உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று கூறி மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு சமீபத்தில் நான்கு வருட தேசிய பணமாக்கல் திட்டத்தை (NMP) அறிவித்துள்ளது. உண்மையில் நாட்டில் செயல்பட்டு வருகின்ற பெரும் உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் பெருநிறுவனங்கள், வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பெரிய வணிக நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே இந்த தேசிய பணமாக்கல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்களின் பணத்தில் கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தி பெரும் பணத்தைச் சுருட்டிக் கொள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

நம் நாட்டில் தேசிய சொத்துக்களை தனியார்மயமாக்குகின்ற செயல்முறை 1991ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தக் கொள்கைகளை மாறுபட்ட அளவு தீவிரத்துடன் அடுத்தடுத்து மத்தியில் ஆட்சிக்கு வந்த அரசுகள் பின்பற்றி வந்திருக்கின்றன. பல வழிகளில் அந்தக் கொள்கை தொடர்ந்து வந்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேசிய பணமாக்கல் திட்டம் தேசிய சொத்துக்களை தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக மட்டுமே உள்ளது. எந்த விலை கொடுத்தாவது, எந்த வகையிலாவது தனியார்மயமாக்கலை மேற்கொள்வது என்பது மோடி ஆட்சியின் கீழ் இருக்கின்ற பாஜக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகவே மாறியிருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் நிலையான, தொடர்ச்சியான ஒன்றுபட்ட தலையீடுகள் மற்றும் பிற காரணிகளும்  சேர்ந்து பல துறைகளில் தனியார்மயமாக்கலுக்கான தடைகளை உருவாக்குவதில் முக்கியமான பங்கை வகித்து தனியார்மயமாக்கல்  நடைமுறையின் வேகத்தைத் தணித்தன. அவ்வாறான அரசியல் பொருளாதார சூழ்நிலையில் தேசிய, உலக அளவில் உள்ள தனியார் தொழில் முனைவோர் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாக அரசு சொத்துகளின் விற்பனை ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் மோடி ஆட்சியின் கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 3.96 லட்சம் கோடிக்கு அரசு சொத்துகள் விற்கப்பட்டுள்ள போதிலும் பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அவர்களுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறிடவில்லை.

குறைவான அதிகாரம் கொண்ட இளைய பங்காளியாக

தன்னுடைய லட்சியமான தனியார்மயமாக்கல் இலக்குகளை அடைய முடியாத மோடி அரசு அரசுக்குச் சொந்தமான பெரிய உள்கட்டமைப்பு சொத்துக்களை நடைமுறையில் இலவசமாகவே தனியார் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அவர்களிடம் ஒப்படைக்க முயல்கிறது. பொதுச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து சிறு பகுதியை தனக்கென்று பகிர்ந்து கொள்கின்ற அரசு குறைவான அதிகாரம் கொண்ட இளைய பங்காளியாக மட்டுமே இருக்கப் போகிறது. இவ்வாறாக தேசிய பணமாக்கல் திட்டம் என்றழைக்கப்படுகின்ற அந்த திட்டத்தின் வடிவமைப்பு மோசமாக அமைந்துள்ளது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

தேசிய பணமாக்கல் திட்டம் குறித்த ஆவணத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலை தொடர்பான சொத்துகளில் 22 சதவிகிதம், 400 ரயில் நிலையங்கள், 1,400 கிமீ நீள ரயில் பாதை, 741 கிமீ நீள கொங்கன் ரயில்வே, 90 பயணிகள் ரயில்கள், 15 ரயில் நிலையங்கள், 265 ரயில்வேக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே காலனிகள், நான்கு மலை ரயில்வேக்கள், 25 முக்கிய விமான நிலையங்கள், 28,608 சர்க்யூட் (ckt) கிமீ மின்பரிமாற்றச் சொத்துகள், 160 நிலக்கரி சுரங்கச் சொத்துகள், 14,197 தொலைத்தொடர்பு கோபுரங்கள், 2.86 லட்சம் கிமீ கண்ணாடி இழைகள், என்டிபிசி  மற்றும் என்எச்பிசியின் மின்னுற்பத்தி சொத்துக்கள், ஐஓசிஎல், ஹெச்பிசிஎல், கெயில் நிறுவனங்களின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியத் தயாரிப்புகளின் குழாய்கள், ஒன்பது முக்கிய துறைமுகங்கள் சார்ந்த 31 திட்டங்கள், எஃப்.சி.ஐ மற்றும் மத்திய கிடங்கு கழகத்தின் 39 சதவிகித சேமிப்புத் திறன், ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மற்ற மூன்று சொத்துக்கள் என்று அரசு சொத்துகள் பணமாக்கப்படுவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.

அரசாங்கமோ இந்தச் சொத்துகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படாத நிலையில் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ள (பிரவுன்ஃபீல்ட்) உள்கட்டமைப்பு சொத்துக்கள் என்பதாகக் கூறி வருகிறது. ‘அபாயகரமானவை’ என்று இந்தச் சொத்துக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தனியாருக்கு உறுதியளிப்பது மட்டுமல்லாது, மூலதனச் செலவிற்கான தேவை குறித்த அவர்களுடைய கவலையையும் அரசாங்கம் தணிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தும் வகையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று மக்களை நம்ப வைக்க அரசாங்கம் தவறாக முயல்கிறது.

அரசாங்கத்தின் இந்தக் கூற்று மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் முற்றிலும் தவறான கூற்றாகும். சொத்துகளின் மீது முறையான உரிமை எதுவும் இல்லாமலேயே அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுவதற்கான முதலீட்டை தனியார் நிறுவனங்கள் ஏன் செய்ய வேண்டும்? மாறாக அந்த தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளின் பயனர் கட்டணத்தை தங்கள் விருப்பப்படி அதிகரிக்கவே போகின்றன. அவை புதுமையான முறையில் வணிகமயமாக்கி முப்பது முதல் ஐம்பதாண்டு காலப் பரிர்த்தனைக் காலத்தில் நுகர்வோரை கொள்ளையடித்து அந்த சொத்துக்களில் இருந்து அதிக அளவிலே பணம் சம்பாதித்துக் கொள்ளப் போகின்றன. உள்கட்டமைப்பை அதிகரித்து,  விரிவுபடுத்தும் வகையில் அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யப் போவதான மாயையை உருவாக்கிட அரசாங்கம் விரும்புகிறது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

பணமாக்குதலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்கள் நலிவடைந்து வருபவையாக, முழுமையாகப் பணமாக்கப்படாதவையாக அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுவதாக இருப்பதாக அரசாங்கம் வாதிடுகிறது. மீண்டும் அது ஒரு தவறான, ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது! நெடுஞ்சாலைகள், மின் பரிமாற்றத்திற்கான கம்பிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், ரயில்வே நெட்வொர்க்குகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரங்கள் போன்ற அனைத்து உள்கட்டமைப்பு சொத்துகளும் பல ஆண்டுகளாக தங்களுக்கான பயனர்களைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. இந்த உள்கட்டமைப்புகளின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டு நிலைகள் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைப் பொறுத்ததாகவே இருக்கின்றன. நாட்டில் உள்ள உள்நாட்டு மின்னுற்பத்தித் திறன் மற்றும் மின்னுற்பத்தி நடவடிக்கைகளின் பயன்பாட்டைப் பொறுத்ததாகவே பவர் கிரிட் நெட்வொர்க்கின் பயன்பாடு உள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தித் துறையில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான சரிவின் விளைவாக மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் மீது யாராவது குற்றம் சுமத்த முடியுமா?

இலவசமாக ஒப்படைக்கும் நேர்மையற்ற வழி 

இந்த அறிவிப்பு முழுமையான விற்பனை நடவடிக்கையாக இல்லை என்றும் அரசாங்கம் பொய் கூறுகிறது; முன்பணம், வருவாய்ப் பங்கு, சொத்துக்களில் முதலீட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஈடாக குறிப்பிட்ட பரிவர்த்தனை காலத்திற்கு மட்டுமே தனியாருக்கு வருவாய் உரிமைகளை மாற்றித் தரப் போவதாக அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் தேசிய உள்கட்டமைப்பு மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டு பெருநிறுவனங்களிடம் நீண்ட காலத்திற்கு ஒப்படைக்கப்படப் போகிறது. இவ்வாறு இலவசமாக தேசிய உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது நேர்மையற்ற வழியாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றின் உள்கட்டமைப்புச் சொத்துகளும் தன்னம்பிக்கை பொருளாதாரம், பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் நிச்சயமாக முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றன – இன்னும் வகித்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது தனியார் துறை தொழில்கள் மற்றும் சேவைகளின் கணிசமான வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் அவை பங்களித்துள்ளன. தற்போது மேற்கொள்ளப்படப் போகின்ற இந்த முயற்சி எதிர்காலத்தில் நாட்டிற்கும், மக்களுக்கும் எந்த வகையில் உதவப் போகிறது என்பது குறித்து  எந்தவொரு விளக்கமும் இதுவரையிலும் தரப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் வேலை இழப்பே ஏற்படப் போகிறது. வேலையின்மை பிரச்சனை ஏற்கனவே மோசமாக இருந்து வரும் நிலையில், தனியார் துறை வேலைகளில் சமூகத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு இருக்காது என்பதால் ஏற்படப் போகின்ற வேலைவாய்ப்பு இழப்பு இன்னும் மோசமாகவே இருக்கும். தொழிலாளர்கள், மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள் மோசமடையவே போகின்றன; இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாளிகள் மட்டுமே பயனடையப் போகிறார்கள்.

மேலும் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. பணமாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு சொத்துகள் என்பதற்கு அரசாங்கக் கஜானாவில் அந்த அளவிலான தொகை முன்பணமாகச் செலுத்தப்படும் என்பதாக அர்த்தமில்லை.

சொத்துக்களின் மூலதனத்திற்கான செலவை இன்றைய விலையில் கணக்கிட்டு, கைவரப் போகின்ற பணத்தின் இலக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அரசு சொத்துக்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதை எளிதில் நிறுவிட முடியும்.

எடுத்துக்காட்டாக 26,700கிமீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 22 சதவிகிதம் பணமாக்கப்பட உள்ளது. அந்த சொத்தில் இருந்து கிடைக்கப் போகின்ற 1.6 லட்சம் கோடி ரூபாயை முன்கூட்டிய விலையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய உள்கட்டமைப்பிற்கான மூலதனச் செலவு எந்த அளவிற்கு இருந்திருக்கும்? 2019ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூலதனச் செலவை இன்றைக்கு எடுத்துக்கொண்டால், 26,700கிமீ நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானச் செலவு குறைந்தது எட்டு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.

எட்டு லட்சம் கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்கள், இப்போது அதிகபட்சமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் என்று முன்கூட்டிய கட்டணமாக அரசாங்கம் தேர்வு செய்யும் தொழில்முனைவோருக்கு வழங்கப்படப் போகிறது. மேலும் தனியார் நிறுவனம் – அரசாங்கத்திற்கிடையே உள்ள தொடர்பின் காரணமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த தொகை மேலும் குறைக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதுதவிர அந்த தனியார் நிறுவனங்கள் விருப்பப்பட்ட எண்ணிக்கையில் சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துக் கொள்ளலாம். மேலும் சுங்கச்சாவடிக் கட்டணமாக எந்தவொரு தொகையையும் வசூலித்துக் கொள்ளும் அதிகாரமும் அவற்றிற்கு அளிக்கப்படும். எந்தவொரு முதலீடும் இல்லாமலேயே வருவாய் பகிர்வு ஒப்பந்தம் மூலமாக சம்பந்தப்பட்ட பெருநிறுவனங்கள் சேகரித்துக் கொள்ளும் வருவாயில் 70-80 சதவிகிதத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பெருநிறுவனங்களிடம்  இவ்வாறு ஒருபுறம் மக்களின் பணத்தில் கட்டப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு வழங்கப்படுகிற வேளையில், மறுபுறம் அந்தப் பெருநிறுவனங்களால் பயனர் கட்டணங்கள், சுங்கச் சாவடிக் கட்டணங்கள் போன்றவை அதிகரிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படும் வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகின்றது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

அதேபோல இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் ஐம்பது சதவிகித அளவிற்கு அதாவது 8,154 கி.மீ. அளவிலான குழாயை அதிகபட்சமாக 24,642 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் மாதத்தில், இயற்கை எரிவாயுவைக் கடத்தும் பயன்பாட்டைச் செயல்படுத்துவதற்கான மூலதனச் செலவு கிமீ ஒன்றிற்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. அந்த அளவைக் கொண்டு பார்க்கும் போது. மொத்தம் 8,154 கிமீ குழாய்களுக்கான மூலதனச் செலவு நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருகிறது. இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டணம் இப்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. பெருநிறுவனங்களிடமே சேவைக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதால் நாளடைவில் அந்த அதிகாரமும் ஒழிக்கப்பட்டு விடும்.  ஆக சொத்து கைமாறிய பிறகு இந்தக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உயர்த்தப்படுகின்ற சாத்தியம் தெளிவாக இருக்கின்றது. அதன் காரணமாக குழாய் இயற்கை எரிவாயுவின் விலைகள் நிச்சய அதிகரிக்கும். இயற்கை எரிவாயுவை மூலப்பொருளாக அல்லது எரிபொருளாகப் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் விலையும் அதன் விளைவாக அதிகரிக்கும் என்பதால் மீண்டும் பாதிக்கப்படப் போவது மிகவும் சாதாரண எளிய மக்கள்தான்.

அற்ப பணம் அரசுக்கு, அதிக பணம் தனியாருக்கு

மற்ற பிற உள்கட்டமைப்பு சொத்துகளின் விஷயத்திலும் இதேபோன்றே நிகழப் போகிறது. பல ஆண்டுகளாக மக்களின் பணத்தில் கட்டப்பட்டிருக்கும் அரசு சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்படுவதால் கஜானாவிற்கு மிகவும் அற்பமான தொகையே கிடைக்கப் போகிறது. தங்கள் பணத்திலிருந்து கட்டப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு இனிமேல் பயனர் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் மக்கள் அதிக அளவு பணத்தை தனியார் நிறுவனங்களுக்குச்  செலுத்த வேண்டியிருக்கும்.

சுதந்திரம் பெற்ற இந்த எழுபதாண்டுகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை நெட்வொர்க்கால் நிறுவப்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு விரோதமாக இந்த தீவிர வலதுசாரி பாஜக ஆட்சி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை நேரடியாக பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்ற தனியார்மயமாக்கும் திட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் எழுந்த உறுதியான எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாத மோடி அரசாங்கம் அரசாங்க கஜானாவுக்கு வருவாயில் சொற்ப பங்கைப் பெற்றுக் கொண்டு மிகப்பெரிய உள்கட்டமைப்பு சொத்துக்களை கிட்டத்தட்ட இலவசமாக தனியார் பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு பைசா கூட முதலீடு செய்திராத பெருநிறுவனக் கொள்ளையர்கள் இந்த திட்டத்தின் மூலம் பொது உள்கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டு வருவாயின் மிகப்பெரும் பகுதியை சுருட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

ஆளும் கட்சி 2017-18ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட மொத்த நிறுவன நன்கொடைகளில் 92 சதவிகிதத்தை தன்வசம் கைப்பற்றிக் கொண்டதற்கு காரணம் இல்லாமல் இருக்கவில்லை. பெருநிறுவனங்கள் மற்ற தேசியக் கட்சிகளை விட 2017-18ஆம் ஆண்டில் பன்னிரண்டு மடங்கு அதிக தொகையை ஆளும் பாஜகவுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. 2014 முதல் 2018 வரையில் வழங்கப்பட்ட மொத்த நிதியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் ஆளும்கட்சி நன்கொடை பெறுவது தெரிய வருகிறது. இதுவரையிலும் அரசியல் நிதியுதவி அளித்தவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றாலும், அவ்வாறு நன்கொடையாக நிதியளித்துள்ளவர்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டின் பலனைப் பெற்ற அதே பெருநிறுவன/வணிகங்கள் என்பதும், அவர்களுக்காகவே இப்போது நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்புச் சொத்துகளின் கதவு கொள்ளையடிக்கவும் சூறையாடவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் நன்கு தெளிவாகிறது.

https://peoplesdemocracy.in/2021/0912_pd/national-monetisation-pipeline-pipeline-drain-public-wealth-corporate-coffers

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 2021 செப்டம்பர் 12 
தமிழில்: தா.சந்திரகுரு

The toxic mixture of sectarianism and casteism in Uttar Pradesh BJP Politics. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

மதவெறி மற்றும் சாதிவெறி என்னும் நச்சுக் கலவை



பிரதமர் நரேந்திரமோடி தனக்கு மிகவும் பிடித்தமான “இரட்டை என்ஜின் வளர்ச்சி” (“double engine growth”) என்னும் சொற்றொடரை மீண்டும் ஒருமுறை பயன்படுத்தி இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அலிகாரில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் மாநிலப் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல்நாட்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டபோதே, இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் அவர் கூறவிரும்புவது என்ன என்பது மிகவும் தெளிவாகும். இது மதவெறி மற்றும் சாதிவெறி என்னும் நச்சுக் கலவையே தவிர வேறெதுவும் இல்லை.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதையடுத்து, மோடி-ஆதித்யநாத் தலைமையின்கீழ் பாஜக இவ்வாறு மதவெறி-சாதிவெறி நச்சுக் கலவை என்னும் இரட்டை என்ஜினை இயக்கத் தொடங்கி இருக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில் நரேந்திர மோடியின் பேச்சு பார்க்கப்பட வேண்டும். இப்போது அவர் பேசும்போதும் இங்கே ஐந்தாண்டுகளுக்கு முன் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வர பயந்துகொண்டிருந்த நிலைமை இருந்ததாகக் கூறுவதற்குத் தவறவில்லை. இவ்வாறு பயப்படும் சூழ்நிலை இருந்ததால் பலர் தங்கள் மூதாதையர்களின் வீடுகளிலிருந்து ஓடிவிட்டார்கள் என்று பேசினார். பாஜக எம்பி, ஹூக்கும் சிங், 2016இல் சாம்லி மாவட்டத்தில் முஸ்லீம் கிரிமினல்களுக்குப் பயந்து நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஓடி விட்டார்கள் என்று கூறிய பொய்யை எதிரொலிக்கும் விதத்திலேயே மேற்படி பேச்சு அமைந்திருந்தது.

The toxic mixture of sectarianism and casteism in Uttar Pradesh BJP Politics. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.
Raja Mahendra Pratap Singh formed the Provisional Government of India in Afghanistan on his Birthday

மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடித்த மகேந்திர பிரதாப் சிங்

மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக் கழகம் அமைக்கப்படுவது “ஜாட் சிரோமணி”க்கு அளிக்கப்படும் பாராட்டு என்ற விதத்திலும் இந்நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்ட சுவரொட்டிகளில் புகழ்மாலைகள் சூட்டப்பட்டன. மகேந்திர பிரதாப் சிங் ஒரு புரட்சியாளர்தான். அவர், இதர முஜாஹிதீன்களுடன் சேர்ந்து, 1915இல் ஆப்கானிஸ்தானில் காபூலில் இந்தியாவிற்கான தற்காலிக அரசாங்கத்தை (provisional government) அமைத்தார். அவர் அதன் தலைவரகவும், மௌல்வி பரகத்துல்லா அதன் பிரதமராகவும் இருந்தார்கள். அவருடைய சோசலிச மற்றும் மதச்சார்பின்மை கண்ணோட்டம் இவர்களுடைய மதவெறி மற்றும் சாதி வெறி அடையாளங்களுடன் எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதல்ல. ஆனாலும் பாஜக-வானது ஜாட் இனத்தாரின் மத்தியில் நல்லெண்ணத்தை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காக, அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

The toxic mixture of sectarianism and casteism in Uttar Pradesh BJP Politics. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

முற்றிலும் பொய்

ஆதித்யநாத், வழக்கம்போல இப்போதும் தன் மதவெறி நஞ்சை கக்கி இருக்கிறார். ஒருசில நாட்களுக்கு முன்பு அலிகார் அருகே, குஷிநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரைநிகழ்த்தும்போது, இப்போது அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைப்பதாகவும், ஆனால் “2017க்குமுன் ‘அப்பா ஜான்’ (‘abba jaan’) என்று என்று அழைக்கப்படும் முஸ்லீம்களுக்கு மட்டுமே கிடைத்து வந்ததாகவும்” பேசினார். இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக மிகவும் குரூரமான விதத்தில் விஷத்தைக் கக்கினார். இது முற்றிலும் பொய்யான கூற்று. உத்தரப்பிரதேசத்தின் தரவுகள் அனைத்துமே எந்த அளவுக்கு முஸ்லீம்கள், அத்தியாவசியப் பணிகள் அனைத்திலும் மிகவும் மோசமான முறையில் உரிமைகள் பறிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.

இவ்வாறு இவர்கள் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்திடவும், இழிவானவர்களாகக் காட்டவும் நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்கும் அதே சமயத்தில், உத்தரப்பிரதேச மாநில அரசாங்கமும், ஒன்றிய அரசாங்கமும் தாங்கள் அனைவருக்குமான வளர்ச்சித் திட்டங்களை (“சப்கா விகாஷ்”) மேற்கொண்டு வருகிறோம் என்றும், அரசாங்கத்தின் நலத் திட்டங்களின் காரணமாக அனைத்துத்தரப்பு மக்களும் பயன் அடைந்து வருகிறார்கள் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய அணுகுமுறையுடன் பாஜக தலைமையிலான அரசாங்கங்கள் அரசின் திட்டங்களை பிரதமரின் பெயரிலும் கட்சியின் பெயரிலும் தமதாக்கிக்கொள்ள முயல்கின்றன. நரேந்திர மோடியின் 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக, பாஜக, மோடியின் படத்துடன் 14 கோடி ரேஷன் பைகள் விநியோகிக்கத் தீர்மானித்திருக்கிறது. உணவு தான்யங்களை அளிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைத் தங்கள் கட்சியின் தலைவரைத் துதிபாடுவதுடன் இணைத்திருக்கிறது. பாஜக-வின் நிலப்பிரபுத்துவ சிந்தனை காரணமாக இந்திய மக்கள் அரசாங்கம் அளித்திடும் இனாம்களைப் பெறுபவர்களாகத்தான் பார்க்கப்படுகிறார்களே தவிர, அவர்கள் அனைவரும் சம உரிமைகளுடன் நடத்தப்பட வேண்டிய குடிமக்கள் என்று கருதி அவ்வாறு நடத்தப்படுவதில்லை.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

(தமிழில்: ச.வீரமணி)

The importance of the Muzaffarnagar Farmers Rally Peoples Democracy Article Translated By Sa. Veeramani. Book Day, Bharathi Puthakalayam

முசாபர்நகர் விவசாயிகள் பேரணியின் முக்கியத்துவம்



சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி, செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்திருந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து, நாட்டின் விவசாய இயக்கத்தில் வரலாற்று முத்திரை பதிக்கும் விதத்தில் மாறியிருக்கிறது. இப்பேரணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் உத்தரப்பிரதேசம், ஹர்யானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து கலந்து கொண்டார்கள். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து கணிசமான அளவிற்கும் விவசாயிகள் வந்து பங்கேற்றார்கள்.

விவசாயிகள் மகாபஞ்சாயத்திற்கான அறைகூவல், ஆகஸ்ட் 26-27 தேதிகளில் சிங்கூ எல்லையில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தேசிய சிறப்புமாநாட்டில் விடுக்கப்பட்டது. மகாபஞ்சாயத்து உத்தரப்பிரதேசத்திலும், உத்தர்காண்டிலும் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் அங்கே ஆட்சிபுரியும் பாஜக அரசாங்கங்களை அகற்றுவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக அமைந்திருந்தது. சிறப்பு மாநாடு வரும் செப்டம்பர் 25 அன்று பாரத் பந்த் அனுசரித்திடவும் (பின்னர் அது செப்டம்பர் 27 என மாற்றப்பட்டது) அறைகூவல் விடுத்தது.

தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஒன்பது மாதங்களாக நடைபெற்றுவரும் விவசாய இயக்கத்தின் விரிவான அம்சங்களைக் காட்டியது. இங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் சி2+50 சதவீத உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திய அதே சமயத்தில் தொழிலாளர் வர்க்கம், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினர் போன்ற இதர உழைக்கும் மக்கள் பிரிவினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்க – விவசாயிகள் வர்க்கத்தின் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தைக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தன. தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றியுள்ள நான்கு தொழிலாளர் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மகாத்மா காந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஊதியங்களை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியும், வன உரிமைகள் சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்திடக் கோரியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இவை பிரதிபலித்தன.

Hundreds of thousands of Indian farmers rally against farm laws | Reuters

முசாபர்நகர் பேரணி விவசாயிகள் பெரும்திரளாகக் கலந்து கொண்டதால் மட்டுமல்லாமல், மற்றுமொரு அரசியல் முக்கியத்துவத்தாலும் குறிப்பிடத்தக்கதாகும். எட்டு ஆண்டுகளுக்கு முன்னால், 2013இல், இதே முசாபர்நகர் மாவட்டத்தில்தான் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், பல பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் வகுப்புவாதப் பிளவினை உருவாக்கியது, குறிப்பாக இங்கே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜாட் இனத்தினர் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஏற்படுத்தியது. இதனை பாஜக 2014 மக்களவைத் தேர்தலில் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தேர்தலில் முழுமையாக வெற்றிபெற்றது. இவ்வாறு மதவெறித் தீயை உருவாக்கி மக்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்தியது, ஹர்யானா மற்றும் ராஜஸ்தானில் சில பகுதிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த சமயத்திலும்கூட ஒரு “மகா பஞ்சாயத்து” நடந்தது. 2013 செப்டம்பர் 7 அன்று முசாபர்நகர் அருகே சிகாரா கிராமத்தில் நடந்த அந்த மகா பஞ்சாயத்தில் நரேஷ் திகாயத், ராகேஸ் திகாயத் போன்ற கிராமக் கட்டப்பஞ்சாயத்து (khap leaders) தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏக்கள் சங்கீத் சோம் மற்றும் சுரேஷ் ரானா போன்றவர்களும், சாமியார் பிராச்சி போன்றவர்களும் முஸ்லீம்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கி உரையாற்றினார்கள். இதன் காரணமாக அப்போது முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறித்தீ விரிவான அளவில் இவர்களால் எடுத்துச்செல்லப்பட்டது.

ஆனால் இப்போது முசாபர்நகரில் நடைபெற்றுள்ள இந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்து முற்றிலும் வித்தியாசமானதாகும். சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ராகேஸ் திகாயத், பேசுகையில் மக்களிடையே மதவெறி அடிப்படையில் ‘அல்லாஹு அக்பர்’ என்றும் ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்றும் பிளவினை ஏற்படுத்தும் மதவெறியர்களின் உரைகளுக்கு இரையாகிவிடக்கூடாது என்று அறிவித்தார்.

பேரணியில், பெரும் திரளாக முஸ்லீம்கள் பங்கேற்றதைப் பார்த்தபின், உரைநிகழ்த்திய ஒவ்வொரு பேச்சாளரும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக-விற்கு எதிராக விவசாயிகள் அனைவரும் தங்கள் மதமாச்சர்யங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஒன்றுபட்டுநின்று போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்கள்.

முஸ்லீம்களைக் குறிவைத்துத் தாக்கும் விதத்தில் ‘புனித ஜிகாத்’ போன்ற சட்டங்களைக் கொண்டுவந்துள்ள ஆதித்யநாத் அரசாங்கம் மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணியின் வெறிபிடித்த மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு முற்றிலும் முரணான விதத்தில் அனைத்து விவசாயிகளும் ஒற்றுமையுடனும் மத நல்லிணக்கத்துடனும் ஒன்று சேர்ந்திருப்பதை இந்த மகாபஞ்சாயத்து நன்கு வெளிப்படுத்தியது. இவ்வாறு இந்த மகாபஞ்சாயத்து, பாஜக ஆட்சியாளர்களின் பிளவுவாத மற்றும் முஸ்லீம்களுக்கு எதிரான வெறித்தனமான அரசியலுக்கு சவால்விடும் விதத்தில் அமைந்திருந்தது.

Bhakyu Mahapanchayat In Muzaffarnagar, Farmers Agitated Against Administration - मुजफ्फरनगर: भाकियू की महापंचायत में शासन, प्रशासन के खिलाफ भड़का किसानों का आक्रोश, देखें ...

விவசாய இயக்கம் தன்னுடைய வீர்யத்தை இழந்துவிடவில்லை என்பதையும், அதன் நலன்களைத் தீவிரமான முறையில் பாதுகாத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் ஹர்யானாவில் நடைபெற்ற நிகழ்வுகளும் தெளிவுபடுத்தி இருக்கின்றன. ஹர்யானாவில் ஆட்சி செய்யும் பாஜக அரசாங்கம் கடந்த ஒன்பது மாதங்களாக விவசாயிகளுக்கு எதிரகப் பல்வேறுவிதங்களில் நடவடிக்கைகளை எடுத்துவந்துள்ளது. போராடிவரும் விவசாயிகளுக்கு எதிராக, காவல்துறையினரின் முற்றுகைகள், தடியடிப்பிரயோகங்கள், கண்ணீர்ப்புகை குண்டுவீச்சுகள் வீசியபோதிலும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளபோதிலும் அவற்றையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்து தீவிரமானமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கே ஆட்சி செய்யும் கட்டார் அரசாங்கம் விவசாயிகள் போராட்டத்தை நசுக்குவதற்கு எண்ணற்ற விதங்களில் சூழ்ச்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் எதிலும் வெற்றிபெற முடியவில்லை. காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கை ஒவ்வொன்றும், விவசாயிகளின் உணர்வுமிக்க கிளர்ச்சிப் போராட்டங்களின் மூலமாக முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 28 அன்று கர்னாலில் போராடிய விவசாயிகள் மீது ஏவப்பட்ட தடியடிப் பிரயோகம் கொடுங்கோன்மையின் புதிய உச்சத்திற்கே சென்றது. தாக்குதலில் காயங்களுக்கு ஆளான சுஷில் கஜல் என்னும் விவசாயி, அக்காயங்களினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிர்நீத்தார். ஆயுஷ் சின்கா என்கிற ஐஏஎஸ் அதிகாரியான கோட்டாட்சித் தலைவர், போராடும் விவசாயிகளின் “மண்டையை உடையுங்கள்” என்று கூறியது வீடியோவில் பதிவாகி, மக்கள் மத்தியில் வைரலாகப் பரவி, விரிவான அளவில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. முசாபர் நகர் பேரணி நடைபெற்று இரு நாட்களுக்குப்பின்னர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு, கர்னாலில் உள்ள சிறிய தலைமைச் செயலகத்தின்முன்பு பேரணியாகச் சென்று, மேற்படி ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று கோரியும், விவசாயிகளுக்கு எதிராக தடியடிப் பிரயோகம் நடத்திய காவல்துறையினர்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரியும், முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கை, மோடி அரசாங்கத்திற்கு எதிராக அமைந்துள்ள விரிவான எதிர்க்கட்சிகளின் மேடையின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. 19 கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை செப்டம்பர் 20க்கும் 30க்கும் இடையே நடைபெறவுள்ள கிளர்ச்சிப் போராட்ட நடவடிக்கைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளே முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதேபோன்று விவசாயிகளை விரிவான அளவில் அணிதிரட்டி செப்டம்பர் 27 பாரத் பந்த்தை மகத்தான அளவில் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (செப்டம்பர் 8, 2021)
(தமிழில்: ச. வீரமணி)

People's Democracy Prabir Purkayastha Atricle Nuclear Deal and Benefits (The argument of the Leftist) Translated in Tamil By Era Ramanan.

அணுசக்தி ஒப்பந்தமும் அடைந்த பலன்களும் (இடதுசாரிகள் வைத்த வாதம்)



பிரபிர் புர்காயஸ்தா 

2008-2009 ஆண்டுகளில் அன்றைய ஐமு அரசாங்கம் அமெரிக்காவுடன் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சிகள் வைத்த வாதம் என்னவென்றால். நமக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதியை அணுசக்தியின் மூலம் தயாரிக்கமுடியும் என்றே வைத்துக் கொண்டாலும் உள்நாட்டிலேயே அதற்கான திறன்கள் உள்ளன; மேலும் அமெரிக்க மற்றும் மேலை நாட்டு ஒப்பந்தங்கள் மிக அதிக செலவு பிடிக்கக்கூடியவை; நாடு விடுதலை அடைந்ததிலிருந்து மிகுந்த பற்றுடன் காப்பாற்றிய சுய சார்பு எனும் வியூகம் பலவீனப்படும் என்பதே.

இன்றைக்கு என்ன நிலைமை?

இந்த ஒப்பந்தத்தை அடுத்து, நம் நாட்டின்மீது அமெரிக்கா விதித்திருந்த அணு ஆயுத பரவல் தடை நீக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க நிறுவனங்களான ஜிஇ (general electricals), வெஸ்டிங் ஹவுஸ் (westing house), பிரெஞ்சு நிறுவனம் அரேவா (Areva) ஆகியவை நமக்கு 18 அணு ஆலைகளை அளிப்பதென முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றுகூட ஒப்பந்த நிலையைக் கூட எட்டவில்லை. அப்புறம் எங்கிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையை அடைவது? இன்று நாம் மின்தட்டுப்பாட்டையும் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டுகளையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என்பது உண்மைதான். ஆனால் அணு சக்தி ஒப்பந்தத்தினால் அல்ல.

இந்த மூன்று நிறுவனங்களின் இன்றைய நிலை என்ன?

வெஸ்டிங் ஹவுஸ் 2017இல் திவாலாகிவிட்டது. ஜிஇ தனது அணு உலைப் பிரிவை ஹிடாச்சிக்கு விற்றுவிட்டது. அது பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி பெரிய அணு உலைகளைக் கட்டுவதில் விருப்பம் இல்லாமல் உள்ளது. அரேவாவும் திவாலாகி பிரெஞ்சு அரசாங்க நிறுவனத்துடன் (EDF) இணைக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்தியாவில் அணு உலைகள் நம் சொந்த தொழில் நுட்பம் அல்லது ரசிய ரோசாட்டம் நிறுவனத்தின் உதவியுடன் மட்டுமே கட்டப்படுகின்றன.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தின்போது இந்திய அரசாங்கமும் அணுசக்தி பொறுப்பிலிருந்த அதிகாரிகளும் பல படாடோப திட்டங்களை அறிவித்தார்கள். 2031க்குள் 63000மெகாவாட்; அதில் 40000 மெகாவாட் பன்னாட்டு ஒப்பந்தங்கள் மூலம் என்றெல்லாம் பேசப்பட்டது. அன்றைக்கே இடதுசாரிகள் இது சாத்தியமில்லை; அதன் செலவு கட்டுபடியாகதது என்பதையும் சுட்டிக்காட்டினார்கள். இன்றைக்கு ஒரு ஆலைகூட கட்டப்படவில்லை. ஏன்? இந்த ஆலைகளை நடத்தும் எந்த நிறுவனமும் அதன் வானளாவிய செலவுகளால் அழிந்துவிடும்.

People's Democracy Prabir Purkayastha Atricle Nuclear Deal and Benefits (The argument of the Leftist) Translated in Tamil By Era Ramanan.

அரசனை நம்பி

அணு உலைகள் இறக்குமதி செய்யப்படும் என்கிற நம்பிக்கையில் நமது சுயேச்சையான அணுசக்தி திட்டங்களும் தாமதப்படுத்தப்பட்டன. ஒப்பந்த செய்யப்பட்டு கடந்த 12 வருடங்களில் உள்நாட்டில் கட்டப்பட்ட 220MW சக்தி கொண்ட இரண்டு அணு உலைகளும் ரசிய வடிவமைப்பில் இரண்டு 1000MW உலைகளும் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. ஆக இறக்குமதியாகும் என்று கருதப்பட்ட 40000MWஇல் அமெரிக்காவிலிருந்தோ மற்ற மேலை நாடுகளிலிருந்தோ எதுவுமே வரவில்லை.

ஏன் வரவில்லை?

இந்திய அரசாங்கம் இரண்டு தவறான கணக்கீடுகளை கொண்டிருந்தது.

  1. அமெரிக்க அணுசக்தி தொழில்துறையின் ஆற்றல் குறித்த மிகை மதிப்பீடு.
  2. நம் நாட்டின் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் மற்றும் அணுசக்திக் கழகம் திறன் மிக்கதில்லை என்ற கருத்து.

அமெரிக்காவில் திரீ மைல் தீவில் (Three Mile Island accident) நடைபெற்ற அணு விபத்துதான் அமெரிக்காவில் அணுசக்தி மதிப்பிழந்ததற்குக் காரணம் என்கிற தவறான எண்ணம் உள்ளது. உண்மையில் அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் கட்டுமானங்களைக் குறித்த நேரத்தில் முடிக்க இயலாமை மற்றும் திட்ட மதிப்பீடை விட கடுமையான செலவு உயர்வு ஆகியவற்றால்தான் மின்பகிர்மான நிறுவனங்களின் ஆதரவை இழந்தன. மேலும் 80களில் இயற்கை எரிவாயு மலிவாகக் கிடைக்கத் தொடங்கியதால் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் புதிய ஆலைகளுக்கு இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தத் தொடங்கின. மின் உறபத்தியில் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக வாக்களிக்கப்பட்ட ‘அணுசக்தி மறுமலர்ச்சி’ வரவேயில்லை. ஒரு பக்கம் இயற்கை எரி வாயு போன்ற புதிப்பிக்கத்தக்க எரிபொருளின் செலவு தொடர்ச்சியாகக் குறைந்து கொண்டே போனது. இன்னொரு பக்கம் அணுசக்தியின் பிணியான செலவும் காலமும் கூடிக்கொண்டே போனது.

People's Democracy Prabir Purkayastha Atricle Nuclear Deal and Benefits (The argument of the Leftist) Translated in Tamil By Era Ramanan.

அணுசக்தியின் எதிர்காலம்

எம்ஐடி (MIT) குழு ஒன்று ‘கார்பன் நெருக்கடி சூழ் உலகத்தில் அணுசக்தியின் எதிர்காலம்’ என்கிற ஆய்வு ஒன்றை இரண்டு ஆண்டு காலம் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அது அணுசக்திக்கு முடிவுரை எழுதுவதாக உள்ளது.

‘அமெரிக்க, மேலைநாட்டு நிறுவனங்கள் பெரும் அணு உலைகளை கட்டும் ஆற்றலை இழந்துவிட்டன. அணுசக்தியின் பொற்காலத்தில் அதில் ஈடுபட்டிருந்த அணு இயற்பியலாளர்களும் பொறியாளர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர் அல்லது காலமாகிவிட்டனர். இன்னும் பழங்காலப் பெயர்ப்பலகையை தாங்கி நிற்கும் அந்த நிறுவனங்களுக்கு அப்படிப்பட்ட பெரும் உலைகளைக் காட்டும் நினைவாற்றல் இல்லை.’

இதற்கு இரண்டு மூன்று எடுத்துக்காட்டுகளை தரலாம். வெஸ்டிங் ஹவுஸ் அமெரிக்காவில் கட்டிவரும் நான்கு உலைகளில் கரோலினாவிலுள்ள இரண்டு கைவிடப்பட்டன. எப்போது? 900 கோடி டாலர்கள் செலவிடப்பட்டபின். ஒப்பந்த தொகையைவிட மொத்த செலவு இரு மடங்கு அதிகமாகும் என்று தெரிந்தபின். கட்டுமானமும் பல வருடம் பின்தங்கி உள்ளது. ஜார்ஜியாவில் கட்டப்பட்டு வரும் இரண்டு உலைகள் அதனுடைய தொடக்க மதிப்பீட்டான 11.5பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகரித்துவிட்டது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் முடித்திருக்கவேண்டிய அவை எப்போது முடியும் என்று தெரியவில்லை. பிரெஞ்சு அரேவாவின் நிலைமை படு மோசம். 2013 இல் முடிந்திருக்க வேண்டிய பிளமன்விலா உலை பத்து ஆண்டுகள் தாமதத்துடனும் ஆறு மடங்கு செலவினம் உயர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. எம்ஐடி-யின் ஆய்வு இன்னொன்றையும் சொல்கிறது. மேலை நாடுகளின் அணு உலைக் கட்டுமானத் தோல்விகள் ரசியா, தென்கொரியா, சீனா மற்றும் இந்தியாவில் இல்லை. அங்கே அணு உலைகளை திட்ட மதிப்பீடுகளுக்குள்ளும் குறித்த காலத்திலும் கட்ட முடிகின்றது.

பொறிக்குள் விழுந்த இந்தியா

அமெரிக்கா இந்தியாவை இந்தப் பொறிக்குள் விழ வைக்க இரண்டு பிரதான காரணங்கள். எதிர்காலமே இல்லாத,அழிவின் விளிம்பிலிருக்கும் தனது அணு தொழில்துறையை காப்பாற்ற வேண்டும். நாவில் நீர் ஊற வைக்கும் இந்திய சந்தை. குறிப்பாக ஜிஇ மற்றும் வெஸ்டிங் ஹவுஸ் இடமிருந்து விலை உயர்ந்த அணு உலைகளை இந்தியா வாங்க வைக்க முடிந்தால் என்கிற கணக்கு.

இரண்டாவது காரணம், அணுத் துறையில் தடைகளை நீக்கி இந்தியாவிற்கு இடம் கொடுப்பது போல காட்டி அதன் எதிர்கால திட்டங்களை முடக்கிவிடலாம்; அதன் கூட்டு சேராக் கொள்கையை அழித்து தனது திருதாஷ்டிர பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என்பது.

1974 பொக்ரான் அணு வெடிப்பிற்குப் பிறகு நமது நாடு அமெரிக்கா விதித்த தடைகளால் அலைக்கழிக்கப்பட்டது. ஆனால் சுயேச்சையான அணு தொழில்துறையைக் கட்டினோம். இப்போது மீண்டும் மேலை நாடுகளுடன் நம்மை பிணைத்துக் கொண்டால் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தாராப்பூர் அணு உலைகளின் விஷயத்தில் நடந்தது போல தடைகள் விதிக்கப்படும். தாராப்பூர் அணு உலை நுணுக்கத்தை கற்றுக்கொள்ள பாபா அணுசக்தி மையத்திற்கும் இந்திய அணுசக்திக் கழகத்திற்கும் நீண்ட காலம் தேவைப்பட்டது.ஆனால் அதன் பலனாக இந்தியா, சுயேச்சையான மின்னணு தொழில்துறை, சிக்கலான உலோக செயல்முறைகள், தரக் கட்டுப்பாடு போன்ற பொறியியல் துறைகளை வளர்க்க முடிந்தது.

அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தினால் என்ன நடந்தது? இந்திய அணுசக்தி துறையை கைப்பற்றும் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் இந்தியாவை அமெரிக்காவின் கீழ்ப்படியும் கூட்டாளியாக மாற்றுவது வெற்றி அடைத்துள்ளது போல் தெரிகிறது.

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்கிரசி – ஆகஸ்ட் 09-15
https://peoplesdemocracy.in/2021/0815_pd/looking-back-india-us-nuclear-deal

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

தமிழ்நாடு மாநில நிதி நிலைமை : வெள்ளை அறிக்கையும் பட்ஜெட்டும் – பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா



மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்திமுக அரசு அமைந்த உடன் தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் அரசாங்க நிதி குறித்த உண்மையான நிலைமையை சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களும் புரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிலைமையை விவரிக்கும் வெள்ளை அறிக்கை ஒன்று பொதுவெளியில் அரசால் வைக்கப்படும் என்று சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியானது மாநில பட்ஜெட்டைஆகஸ்ட் 13 அன்று சட்டமன்றத்தில் தாக்கல்செய்வதற்கு முன்பாக ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டு நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் நிறைவேற்றப்பட்டது.

முக்கிய விவரங்கள்

நிதியமைச்சரின் அந்த வெள்ளை அறிக்கை 2006-07 மற்றும் 2020-2021க்கு இடையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டு அரசின் நிதி நிலைமையின் போக்குகளை ஆராய்வதாக இருந்தது. குறிப்பிடப்பட்ட அந்தக் காலகட்டத்தில் 2006 முதல் 2011வரையிலும் திமுக ஆட்சியில் இருந்தது.2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி இருந்தது. 2011 முதல் 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறையும் வரையில் முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். மாநில நிதி மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அந்த வெள்ளை அறிக்கையில் 2006-2011 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2011-2021 காலகட்டத்தில் மாநிலஅரசின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசின் வருவாய் வரவுகள் (மாநிலத்தின் சொந்த வரி வருவாய், ஒன்றிய அரசிலிருந்து கிடைக்கும் நிதி மற்றும் மாநில அரசின் வரி அல்லாத வருவாய் ஆகியவற்றால் ஆனது) மற்றும் வருவாய் செலவுகளுக்கு (சொத்துகளை உருவாக்காத செலவுகள்) இடையிலான வித்தியாசமாக இருக்கின்ற வருவாய் பற்றாக்குறை முழுமையான அடிப்படையிலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) அடிப்படையிலும் காலப்போக்கில் அதிகரித்துக் கொண்டே வந்திருப்பதாக இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2013-14இல் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.18 சதவிகிதமாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2019-20இல் 1.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் ஆண்டான 2020-21இல் அந்தப் பற்றாக்குறை 3.16 சதவிகிதமாக மேலும் அதிகரித்தது. இந்த எண்களின் அடிப்படையில் தமிழ்நாடு நீடித்திட முடியாத நிதி நிலைமையில் இருப்பதாக வெள்ளை அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

கேள்விக்கு உள்ளாக்கப்படாதது

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை குறித்த அளவுகளை முன்னிலைப்படுத்தி அதே முடிவையே வெள்ளை அறிக்கை எட்டியிருக்கிறது. இருந்த போதிலும் தேசிய அளவில் உள்ள நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின் தர்க்கம், அந்தச் சட்டம் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் இருக்க வேண்டிய நிதி பற்றாக்குறையின் அளவு குறித்து முன்வைக்கின்ற கட்டுப்பாடுகள் இந்த வெள்ளை அறிக்கையில் கேள்விக்கு உள்ளாக்கப்படவில்லை. தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் கடன் வாங்குவதன் மூலம் அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறைகளுக்கு நிதியளிக்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுமையான அடிப்படையிலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவிலும் தமிழக அரசின் ஒட்டுமொத்தக் கடன் வேகமாக அதிகரித்திருப்பதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது. 2006-07, 2010-11க்கு இடையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கக் கடனுக்கு இருந்த விகிதம் நிலையாக இருந்தது. அதாவது 2006-07இல் இருந்த 18.37 சதவிகிதம் என்ற அளவிலிருந்து 2010-11இல் 16.68 சதவிகிதம் என்று குறைந்தது. 2011-12 முதல் 2015-16 வரையிலான காலகட்டத்திலும் அந்த விகிதம் நிலையாகவே இருந்தது. 2011-12 இல் 15.36 சதவிகிதம் என்று குறைவாகவும், 2015-16இல் 17.94 சதவிகிதம் என்று அதிகமாகவும் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அந்த விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது. 2016-17இல் 20.83 சதவிகிதம், 2020-21க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 24.98 சதவிகிதம், கடந்த பிப்ரவரியில் முந்தைய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021-22க்கான இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகளின்படி 26.69 சதவிகிதம் என்று அது அதிகரித்துள்ளது.

வருவாய் வரவு குறைவு

2008-09இல் 13.35 சதவிகிதமாக இருந்த மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் மாநில அரசின் வருவாய் வரவு 2015-16இல் 11 சதவிகிதத்திற்கு கீழே சரிந்தது. அது 2020-21இல் 8.70 சதவிகிதம் என்ற அளவிற்கு மேலும் குறைந்து விட்டது. 2016-2021 காலகட்டத்தில் சராசரியாக அது பத்துசதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் மாநிலத்தின் சொந்த வரிவருவாய் (SOTR) 2013-14ல் 8.4 சதவிகிதத்தில் இருந்து 2019-20இல் 5.8 சதவிகிதம்,2020-21இல் 5.4 சதவிகிதம் என்று குறைந்துள்ளதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் வரி அல்லாத வருவாயும் குறைந்திருப்பதை வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2006 மற்றும் 2011க்கு இடையில் 1.02 சதவிகிதம் என்றிருந்த அந்தவிகிதம் 2011 மற்றும் 2016க்கு இடையில் 0.81 சதவிகிதம் எனவும், 2016 மற்றும் 2021க்குஇடையில் 0.71 சதவிகிதம் என்றும் குறைந்தது.

மாநில வருவாயின் மற்றொரு முக்கிய ஆதாரமாக மத்திய வரிகளில் இருந்து கிடைக்கின்ற மாநிலத்திற்கான பங்கு இருக்கிறது. 2006 மற்றும் 2011க்கு இடையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் கிட்டத்தட்ட 1.95 சதவிகிதமாக இருந்த அந்த மாநிலப் பங்கு 1.67 சதவிகிதமாக குறைந்துள்ளது. வருவாய் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கின்றன. 2006 முதல் 2021 வரையிலான ஒட்டுமொத்த காலத்திற்கும் ஆண்டிற்கு 12.71 சதவிகிதம் என்றிருந்த வருவாய் செலவினங்களின் வளர்ச்சி விகிதம் வருவாய் வரவில் இருந்த 9.92 சதவிகித வளர்ச்சியை விடக் கூடுதலாகவே இருந்துள்ளது. விளைவாக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் வருவாய் பற்றாக்குறையின் விகிதம் அதிகரித்தது.

செஸ், கூடுதல் கட்டண விகிதம் அதிகரிப்பு

இந்திய அரசால் விதிக்கப்படும் செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்களின் விகிதம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாதது என்பதை வெள்ளை அறிக்கை மிகச் சரியாகவே சுட்டிக் காட்டுகிறது. 2011-12இல் 10.4சதவிகிதமாக இருந்த செஸ் மற்றும் கூடுதல்கட்டண விகிதம் 2019-20-க்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 20.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த செஸ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியாதவையாகும். தமிழ்நாட்டுக்கான மத்திய பங்களிப்பில் மானிய உதவியின் பங்கு அதிகரித்து வருவதையும், அது நிதி மற்றும் கொள்கை குறித்து மாநில அரசின் தன்னாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்முறையாக இருப்பதுகுறித்தும் வெள்ளை அறிக்கை கவனத்தைஈர்க்கிறது. மாநில அரசுக்குச் செலுத்தப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டை ஒன்றிய அரசு செலுத்தத் தவறியிருப்பது பற்றியும் வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது.

2008-09இல் ஏற்பட்ட உலகளாவிய நிதிநெருக்கடி மற்றும் கோவிட் தொற்றுநோய் பற்றி உள்ள குறிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச காரணிகளும் கூட மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக வெள்ளை அறிக்கை குறிப்பிடுகிறது. ‘தேசிய அளவில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியது. அவசர அவசரமாக ஜிஎஸ்டியை ஏற்றுக் கொண்டதால் அந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்தது…’ என்று மிகச்சரியாக வெள்ளை அறிக்கை கூறுகிறது என்றாலும் அது அதிக ஆதாரங்களை வழங்கிடாமல் ‘நிதி ஒழுக்கம் மற்றும் நிர்வாகத்தின் போதாமை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி, இந்தியாவின் பிற பணக்கார மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, நமது பொருளாதார மற்றும் வளர்ச்சிவீழ்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது’ என்று முடிகிறது. மேலும் ‘இந்த அறிக்கையில் வழங்கப்பட்ட தரவுகளில் இருந்து நமது தற்போதைய குறிப்பாககடந்த ஏழு ஆண்டுகளில் உருவாகியிருக்கும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை சரியான நிர்வாகத்தின் போதாமையின் விளைவாகவே இருப்பது தெளிவாகிறது’ என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
புதிய தாராளமய அழுத்தங்களை எதிர்க்க வேண்டும்

‘இனிமேலும் வழக்கம் போல் நம்மால் தொடர முடியாது, கடன் மற்றும் வட்டி செலவுகளை அதிகரிக்கும் மோசமான சுழற்சியிலிருந்து நாம் வெளியேற வேண்டுமானால் அடிப்படையில் நமது அணுகுமுறை மாற வேண்டும். மறுபுறத்தில் இது ஒரு தலைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்பாகவும் உள்ளது. பொறுப்புள்ள அரசாங்கத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்’ என்று வெள்ளை அறிக்கை அறிவிக்கின்றது.

Tamil Nadu State Finance Situation : White Paper and Budget Article By Venkatesh Athreya. Is Translated in Tamil By Prof. T. Chandraguru

வெள்ளை அறிக்கையில் உள்ள இந்த அறிவிப்பு மிக எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். பெருநிறுவன ஊடகங்களிடம் அதிரடியான புதிய தாராளவாத சீர்திருத்தங்களுக்கான அழைப்பு இந்த வெள்ளை அறிக்கையில் இருப்பதாக முன்னிறுத்துகின்ற ஒருங்கிணைந்த முயற்சி இருந்தது. அவர்களுடைய பல்லவி கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டின் மாநில நிதி நிலைமை குறித்து கிடைக்கக்கூடிய தகவல்களை ஒருங்கிணைப்பதில் வெள்ளை அறிக்கை பயனுள்ள பணியைச் செய்திருக்கிறது. வெளிப்படைத்தன்மைக்கான அதன் அர்ப்பணிப்பு, தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து பொது விவாதத்தை ஊக்குவிப்பதில் அதற்கிருக்கும் விருப்பம் போன்றவை உண்மையில் பாராட்டத்தக்கவையாகும். இருந்தபோதிலும் அடையாளம் காணப்பட்டிருக்கும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பதில் தெளிவான, திட்டவட்டமான பரிந்துரைகளை முன்வைக்காமல் இந்த வெள்ளை அறிக்கை தவிர்த்திருப்பதை எவராலும் உணர முடியும். நிதி அடிப்படைவாதமும், நிதி பற்றாக்குறையைக் குறைப்பதற்கான புதிய தாராள மனப்பான்மையும் அதில் இருப்பதாகவே தெரிகிறது.இந்த வெள்ளை அறிக்கை நிதிபொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் குறித்து விமர்சனப்பூர்வமான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை.

மாநில அரசுகளின் நிதி அதிகாரங்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒன்றியஅரசின் நகர்வுகள் மீது கூர்மையான விமர்சனத்தை அறிக்கை முன்வைக்கவில்லை. ஒன்றிய அரசின் இது போன்ற சில நகர்வுகளை மாற்றியமைக்கும் வகையில் மாநில நிதியை மேம்படுத்துவதில் ஒத்த எண்ணம் கொண்ட மாநில அரசுகளுடனான கூட்டுநடவடிக்கைகளுக்கான திறன், சாத்தியக்கூறுகள் போன்றவற்றை இந்த அறிக்கை முன்னிறுத்திடவில்லை. மாநில, ஒன்றியஅரசுகளால் பெருநிறுவனத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஏராளமான சலுகைகளை மதிப்பீடு செய்கின்ற பொறுப்பை வெள்ளை அறிக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் பெருநிறுவனங்களின் அனுமானிக்கப்பட்ட மற்றும் உண்மையான மதிப்பு, அவற்றின் முதலீடுகளுக்காகஅளிக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகை குறித்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகைகள் நிச்சயமாக மாநில நிதி நிலைமை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியே இருக்கின்றன!

எதிர்வினை பற்றி…

கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசால் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ள ஊழலை ஒழிப்பது, தூய்மையான நிர்வாகம், போதுமான தொழில்நுட்பம், சந்தைப்படுத்தலுக்கான உதவிகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் மாநில பொதுத்துறையில் இழப்பை உருவாக்கி வருகின்ற தொழிற்சாலைகளை மீட்டெடுப்பதற்கான சாத்தியம் இந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. வெள்ளை அறிக்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் சில சிக்கல்களைக் கையாளும் போது கலப்பு மானியக் கொள்கை மற்றும் சமூக நோக்கங்களைக் கருத்தில் கொண்டு வணிக லாபத்தின் அடிப்படையில் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களை மதிப்பீடு செய்யமுடியாது என்பதை அங்கீகரிப்பது என்பவைகுறித்து மாநில அரசு மேற்கொள்ளப் போகும் எதிர்வினை பற்றியும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசாங்கத்தின் கடன் மற்றும் வருவாய்பற்றாக்குறை குறித்த பிரச்சனைகள் பரந்தகண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

வெள்ளை அறிக்கையில் உள்ள எண்களைப் பார்க்கும் ஒருவர் 2020-2021க்கான புள்ளிவிவரங்கள் மட்டுமே (குறைந்த அளவில் 2019-20க்கான எண்கள்) முந்தைய ஆண்டுகளுக்கான எண்களுடன் பொருந்தவில்லை என்பதைக் காண முடியும். நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (FRBM) சட்டத்தின்அடிப்படையில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனுக்கான விகிதத்தை தனித்துப் பார்க்க முடியாது. நாட்டின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் பொதுச் செலவுகளுக்கு பணக்காரர்களிடமிருந்து வளங்கள் திரட்டப்பட வேண்டும். ஆனால் அந்த வளத்தில் மிகச் சிறிய பகுதியை மட்டுமே தங்களுடைய ஊதியம் மற்றும் வருமானமாகப் பெற்று வருகின்ற உழைக்கும் மக்கள் கணிசமான மறைமுக வரிகளைச் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கிடையிலான நிதி உறவுகளின் தன்மையால் மாநில அரசுகள் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களாலேயே அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற யதார்த்தங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றாலும் கண்டிப்பாக சரணடைந்து விடத் தேவையில்லை. நியாயமற்ற, சமமற்ற விநியோகத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் பணியையும் மறந்து விடக் கூடாது!

தமிழ்நாடு பட்ஜெட்

பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13 அன்று மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அது நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கு இருப்பதைத் தக்க வைத்துக் கொள்கின்ற நடவடிக்கையாகவே இருந்தது. வரிச்சுமையை அதிகரிக்க வேண்டும் என்ற கடுமையான புதிய தாராளவாத கோரிக்கைகளுக்கு அடிபணியாதது, அனைத்து சமூகநல நடவடிக்கைகளுக்கும் எதிரானதாக உள்ள தாராளவாத சாப வார்த்தையான ‘ஜனரஞ்சகத்திற்கு’ முற்றுப்புள்ளி வைத்திருப்பது என்று அது குறிப்பிடத்தக்க பட்ஜெட்டாகவே இருக்கிறது. பெட்ரோல் மீதான மாநில வரிகளைக் குறைத்ததன் மூலம் பெட்ரோல் விலையைலிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்திருப்பது பட்ஜெட்டின் மிகவும் முக்கியமான அம்சமாகும். நிதிச் சிக்கல்களை அரசு எதிர்கொண்டு வரும் நிலைமையில் இது மிகவும் தைரியமான நடவடிக்கையாகும். இந்தநடவடிக்கை மக்களுக்குத் தேவையான நிவாரணத்தை அளிக்கும். முக்கியமான பிரச்சனையில் ஒன்றிய அரசை அது பின்னுக்குத் தள்ளும்.இதற்கு அப்பால் வெள்ளை அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகளை ஆராயும்சில குழுக்களை உருவாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படையில் பாதி ஆண்டிற்கானதாக இருக்கின்ற இந்தவரவு செலவுத் திட்டத்தில் இன்னும் கூடுதலாகச் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிச்சயம் நிதியமைச்சர் உணர்ந்திருக்க மாட்டார்.

விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளுக்காக தனியாக முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் நெல், கரும்பிற்கான குறைந்தபட்ச ஆதார விலையில் அறிவிக்கப்பட்டுள்ள மிகச் சிறிய அளவிலான அதிகரிப்பு, அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவசாயிகளின் நலனுக்கான பல பரிந்துரைகள் கவனிக்கப்படாமை ஏமாற்றத்தையே அளிக்கின்றன. கிராமப்புறப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கும் இந்த நேரத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்களுக்கு ஆதரவான எந்தவொரு குறிப்பு அல்லது நடவடிக்கைகள் வேளாண் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமே அளிக்கின்றது.

கட்டுரையாளர் : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா
பீப்பிள்ஸ் டெமாக்ரசி 2021 ஆகஸ்ட் 22
தமிழில்: தா.சந்திரகுரு