Posted inPoetry
பாவ கணக்கில் கவிதை – கனிராஜ் சௌந்திரபாண்டியன்
நினைவுச்சிறகுகளை விட்டுச்செல்லும்
புல்லினங்களின் வருகைக்காக காத்திருக்கும் கானகங்கள்
ஓலையேதும் எழுதுவதில்லை
உடன்படிக்கை ஏதுமில்லை
பகலை எங்கோ தின்று
ஒரு பிரகாசமான இருளுக்காய் வரும்
அவைகளுக்கு அறிமுகமானான்
மனிதன் யாரென்று..!
கனிராஜ் சௌந்திரபாண்டியன்
இராம்நாடு
