Posted inPoetry
சாதீயத்தில் ஹைக்கூ கவிதை – ச.லிங்கராசு
நல்ல வேளை அவள் மீதான காதலைச்
சொல்ல வில்லை அவன்
ஆணவக்கொலையிலிருந்து
தப்பினான்
யாரோ என்பதில் முகிழ்த்த
நட்பு
யார் என்பதில் அழிந்து போனது
எந்த யுக்தியும் பிடிபடவில்லையே
இவன்இன்னார் என்று அறிந்திட
சாதீயம் தொடர்கிறது
பெயரைச் சுருக்கியும் கூட
பெருமிதப்படுகிறது வர்ணம்
கந்தனாம் கபாலியாம்
கலியுகத்திலும் கல்கியாய்
கீதை பாடினால் எங்ஙனம்
ஒழியும் சாதி?
செய்தவன் நெசவாளி சூத்திரன்
தொட்டு தூக்கிப் போடுவதோ
சாஸ்த்திரன்
மதமே இங்கு மதம் பிடிக்க
வைக்க மனிதர்கள் வாழ்க்கை
சூன்யம்
ச.லிங்கராசு