பிச்சுமணி எழுதிய தமிழ் கவிதைகள் (Tamil Poems) | Tamil Kavithaikal | 1. வெய்யோன் துயில் | 2. மரக்கட்டைகளே மாண்டு போகும் பாறைகள் அல்ல

பிச்சுமணி எழுதிய தமிழ் கவிதைகள்

பிச்சுமணி எழுதிய தமிழ் கவிதைகள் 1. வெய்யோன் துயில் மின்சார மின்மினிகள் அவனின் நகலாய் நடித்துக்கொண்டிருக்கிறது அவளின் தலைமையில் எண்ணிலடங்கா வீரர்கள் விழி விரித்து காவல்காக்கிறார்கள் உயிர்கள் அனைத்தும் ஓய்வெடுக்கும் அவனுக்கு உதவ.. உறக்கம் தவமிருக்கிறது தினம் தினம் தன் ஒற்றை…
Bookshelf (புத்தக அலமாரி) கவிதை | Puthaga Alamari Kavithai

கவிதை: புத்தக அலமாரி – பிச்சுமணி

  என்னுடைய புத்தக அலமாரி சாக்கு மூட்டைகளுக்குள் இருக்கிறது படிக்க நினைக்கும் புத்தகத்தை பத்து மணிக்குள் எடுத்து வைக்கவேண்டும் எடுத்து வைக்கத் தவறினால் எலி உருட்டுவதாய்.. எல்லோரும் முழித்துக் கொள்வார்கள் யாரேனும் முழித்தால்.. பெரிய கலெக்டர் இவரென்று.. எதிர்மறை பட்டம் கிடைக்கும்.…
கவிதை மனிதம் கடந்து வரும் பாதை

கவிதை: மனிதம் கடந்து வரும் பாதை – பிச்சுமணி

    மனிதம் கடந்து வரும் பாதை அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும் பல நூற்றாண்டு காலமாய்.. இறக்காமல் இயங்குபவர்கள்.. நீங்கள் எங்கும்தேடி அலைய தேவையில்லை அவர்களை. உங்கள் பக்கத்தில் நீங்கள் தேடிப் பார்க்கும் தூரத்தில் உங்களோடும் உங்களுக்குள்ளும் அவர்கள் பயணித்து…
கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

கவிதை: புரட்சித் தலைவன் – பிச்சுமணி

      பிடல் - நீங்கள் பிறந்து ஆண்டுகள் பல ஆயின ஆனாலும் நீங்கள் இன்றைக்கும் இடதுசாரி இளைஞன் நீங்கள். காலம் யாருக்காவும் காத்திருக்காது அதுதன் கடமையைச் செய்து கொண்டே இருக்கும் காலம் தாழ்த்தாதீர்களென்ற ஜோஷ்மார்டியை நீங்கள் தேசியத் தலைவனாய்…
கவிதை: என்.சங்கரய்யா – பிச்சுமணி

கவிதை: என்.சங்கரய்யா – பிச்சுமணி

      என்.சங்கரய்யா அவர் எங்கள் சங்கரய்யா பிரிட்டீஷ் அரசுக்கெதிராய் நின்றவரய்யா பிற்போக்குதனத்தை வெறுத்தவரய்யா விடுதலைப் போராட்ட வீரரய்யா தியாகி பென்சனை மறுத்தவரய்யா மதத்தை மறுத்து வாழ்ந்தவரய்யா சாதியை ஒழிக்க மணம் புரிந்தவரய்யா தமிழை சுவாசித்த தலைவரய்யா வாசிப்பை நேசித்த…
தண்ணீர் தொட்டியில் சாதி மலம் கவிதை – பிச்சுமணி

தண்ணீர் தொட்டியில் சாதி மலம் கவிதை – பிச்சுமணி




தண்ணீர் டேங்கில்
மலம் கலந்தது கேட்டு
பேண்ட சாதி பெருமை
அவளுக்கும் கலந்திருக்கிறது

டீக்கடை
இரட்டை டம்ளரில் ஒற்றை டம்ளர்
எச்சில் உசந்ததுயென
உள்ளுக்குள் கர்வம்
உண்டவளுக்கு

அய்யனாருக்கு
ஆவாத சாதியை ஆட்சியர்
அழைத்து வந்து விட்டாரென
சாதி பிடித்து சாமியாடிவர்

முன்னொரு காலத்தில்
அரசிடம் அளித்த சாட்சியங்கள்

வருமானத்துறை வந்தபோது
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதை
ஒத்துக்கொண்டார்

ஏதுமற்ற ஏழை எங்களுக்கு
இலவச ரேஷன் அரிசிதான்
வயித்தை காப்பாத்துது என்றார்

கவர்மென்ட் ஆஸ்பத்திரி இல்லனா
இந்தக் கட்டைக்கு சுகர் மாத்திரை
யார் தருவார்?

மிகவும் பின் தங்கியிருக்கோம்
மூத்த மவன் தான்
எங்க பரம்பரையில்
முதன் முதலில் காலேஜ்க்கு போறான்..
என்றெல்லாம் அவர் சொன்னார்….

தண்ணீர் டேங்கில்
மலம் கலந்தது கேட்டு
பேண்ட சாதி பெருமை
இன்னுமா
அவளுக்குள் கலந்திருக்கும்?….

-பிச்சுமணி

Bhagathsigidam uraiyadal kavithai by Pitchumani பகத்சிங்கிடம் உரையாடல். -பிச்சுமணி

பகத்சிங்கிடம் உரையாடல். -பிச்சுமணி




உன்னை எதற்காக
தூக்கிலிட்டார்கள் பகத்?

ஏகாதிபத்தியத்தை
எதிர்த்து…
தேசவிடுதலையை
வர்க்க மொழியால்
வழிமொழிந்தால் தோழா.
புரட்சி என்றால் என்ன பகத்?
அநீதியால் கட்டப்பட்ட
சமூக அமைப்பை
அடியோடு மாற்றுவது தோழா.
புரட்சியென்பது
வன்முறையானது இல்லையா பகத்?
இல்லை…அது
மனிதனை மனிதன்
சுரண்டிக்கொழுக்கும்
வர்க்கத்தின் எதிர்ச்சொல் தோழா.
உன் கடைசி நிமிடம் வரை
லெனினை வாசித்தாயே ஏன் பகத்?
எந்த நிலையிலும்
எதிர்கொள்ளும்
மார்க்சிய இயங்கியல்
அவரிடம் கண்டதால் தோழா.
எப்படிப்பட்ட சுதந்திரம்
உனது கனவாயிருந்து பகத்?
அந்நிய ஆதிக்கம் வெளியேறி
ஏகாதிபத்தியம் அழிந்து
பட்டாளி வர்க்க சோசலிசமே
என் கனவு தோழா.
நீ ஜனநாயகவாதியா?
சர்வாதிகாரியா? பகத்.
நான் வர்க்க சார்ப்புடைய
மானுடவாதி தோழா.