அதிர்ஷ்டம் சிறுகதை – சக்தி ராணி
“நம்ம நிறுவனம் ரொம்ப பெருசு… உலகளவில் பெயர் வாங்கியிருக்கு… இந்தப் பெயரைக் காப்பாற்ற வேண்டியது நம்ம பொறுப்பு…” என மீட்டிங்கில் முக்கியமான உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே…
“ஏம்பா, குமார்” நம்ம டேட்டா என்ட்ரில கார்த்திக்னு யாரும் வேலை பார்க்குறாங்களா?”
“ஆமா, சார். இருக்காங்க…பதினைந்து வருஷத்துக்கும் மேல இருக்கும். அவர் இங்க தான் வேலை பார்க்குறார்”
“அப்படியா…நான் ஒரு போதும் பார்த்தில்லையே…கொஞ்சம் வர சொல்றியா ?”
“ஏன் சார்…எதும் பிரச்சனையா…இல்ல ஏதும் உறவுக்காரங்களுக்கு தெரிஞ்சவங்களா ?”
“ம்ம்…நீ வரச் சொல்லு நான் பார்த்துக்குறேன்.”
“ஒ.கே சார்…”
“கார்த்திக்…உன்னை மேனஜர் பார்க்ககணும்னு சொல்றாரு.சீக்கிரம் போவியாம்…”
“என்ன சொல்ற குமார்…என்ன கூப்பிடுறாரா…எதும்..” அப்படின்னு சிந்திக்குறதுக்குள்ள…
“நீ எதுவும் பயப்படாத…சும்மா பார்க்கணும்னு சொன்னார் அவ்ளோ தான்…”
“அப்படியா…இப்போதே போறேன்.”
“மே ஐ கமின் சார்?”
“வாங்க கார்த்திக்…ஆர் யூ பைன்?”
“ஃபைன் சார்…சொல்லுங்க…”
“உங்க அப்பா பெயர் சேர்மமா?”
“ஆமா சார்…பெரிய நிறுவனத்துல மேனஜர் வேலை பார்த்தாங்க…”
“ம்ம்…எனக்கு ரொம்ப நல்ல பழக்கம் பா..சமீபத்தில் தான் அவரோட பையன் இங்கு வேலை பார்க்குறதா சொன்னாங்க…அதான் விசாரிச்சதுல உன்னை சொன்னாங்க…”
“ஆமா சார் நான் தான்…”
“உங்க அப்பா பெரிய திறமைசாலி… நல்லா வேலை பார்ப்பார்… என்ன, திறமையோடு அதிர்ஷ்டம் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்…அது மட்டும் அவர் வாழ்க்கையில தவறிடுச்சு…உங்க குடும்பத்தில் முன்பு எல்லாரும் பழக்கம் எனக்கு…அப்புறம் காலங்கள் மாற மாற ஆளுக்கு ஒரு திசையில அவங்க அவங்க வேலைன்னு போயிட்டோம்…”
“ம்ம் சார்…அப்பா வேலை பார்க்கும் போது..” என பேச்சுகள் விழுங்கியவனாய் கார்த்திக் நினைவுகளை அசைபோட ஆரம்பித்தான்
“சரி கார்த்திக்…உன்னைப் பார்த்தது சந்தோஷம் ..எதுவும் நினைக்காத…வேலையைப் பாரு…” என்று அனுப்பி வைத்தார்.
அறையை விட்டு வெளியில் வந்ததும்…நினைவுகளால் உடல் சிலிர்த்தது…அங்குள்ள அனைவரும் மேனேஜர் என்ன சொன்னார்…என்ன சொன்னார் எனக்கேட்க…
புன்னகையைப் பதிலாய்க் கூறி…திறமையுடன் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.