iruthippor Translated poem by Vasantheepan மொழிபெயர்ப்புக் கவிதை: இறுதிப் போர் - வசந்ததீபன்

மொழிபெயர்ப்புக் கவிதை: இறுதிப் போர் – வசந்ததீபன்

ஓ... பரமேஸ்வரா! எவ்வளவு மிருகத்தனமாக காலில் போட்டு மிதிக்கிறது எங்களை உன்னுடைய வரலாறு. பார், எங்களுடைய முகங்களைப் பார் பசியின் தாக்குதலின் அடையாளம் தெளிவாக காண்பிக்கும் உனக்கு எங்களின் முதுகைத் தடவினால் கருவேல முட்களால் உன்னுடைய இரண்டு கைப்பிடியளவு நிறையும் எங்களுடைய…
N.Gajeshwari's Poem Unity In Solititude in tamil Translated By Era.Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam. தனிமையில் ஒருமை கவிதை

என்.கஜேஸ்வரியின் ஆங்கில கவிதை தனிமையில் ஒருமை – தமிழில் இரா. இரமணன்




உன்னை நான் அவதானித்திருக்கிறேன்.
என்னருமை உலகே !
உன்னை நான் அவதானித்திருக்கிறேன்.

சுழன்றடித்த புயல்களில்
மீண்டிருக்கிறாய்.
மலரும் ஒவ்வொரு ஆன்மாவையும்
போற்றுகிறாய்
போர்கள்,எரிகற்கள்,வெப்பம்,
நச்சுப் புகைகள்,பிளாஸ்டிக்
எத்தனை வகை சித்திரவதைகள்?
அத்தனையும் தாண்டியிருக்கிறாய்.
எத்தனைக் கொடுமைகள்?
ஆனாலும் அவையனைத்தும் மன்னித்தாய்.

இப்போது இந்தக் கொரோனா.
இது மற்றுமொரு கிருமிதான்.
அதனால், என்னருமை உலகே
ஒருபோதும் நம்பிக்கை இழக்காதே.
இளைப்பாறி புத்தாக்கம் பெற
இன்னும் காலம் இருக்கிறது.
அன்புடை உலகே !
கொஞ்சம் குணமடைந்து கொள்.
கடும் இழப்புகள் ஏற்றோம்.
இதையும் கடந்து போவோம்.
அழிந்துகொண்டிருக்கும் ஆத்மாக்களை
இப்போது கடைத்தேற்றம் செய்ய வேண்டும்.

(தஞ்சை லிட்ரரி ஸ்காலர்ஸ் சொசைட்டியும் இந்தியன் யூனிவர்சிட்டி பிரெஸ்சும் (பாரதி புத்தாகாலயம்)இணைந்து வெளியிட்டுள்ள ‘POEMS APLENTY (A CHOICE OF VERSE) புத்தகத்திலிருந்து என்.கஜேஸ்வரி  அவர்களின்  ‘Unity In Solititude’ கவிதையின் தமிழாக்கம். இவர் ஒரத்த நாடு அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணி புரிகிறார். மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார்.)

Australian Writer and Poet Erin honson You are Poetry Translated By Era. Ramanan. Book Day is Branch of Bharathi Puthakalayam. நீயென்பது கவிதை

எரின் ஹான்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில் இரா. இரமணன்



நீயென்பது

நீ என்பது உன் வயதல்ல
உன் ஆடைகளின் அளவுமல்ல
தசைகளின் எடைக் குவியலல்ல நீ
கேசத்தின் வண்ணமுமல்ல .
பின் என்ன வெறும் பெயரா?
குழி விழும் கன்னம் கொண்டு
உன்னைக் கணிக்காதே.

நீ வாசிக்கும் புத்தகங்களின்
தொகுப்பல்லவோ நீ?
பேசும் சொற்களின்
திரட்டல்லவோ நீ?
கரகரக்கும் காலைக் குரலே நீ!
மறைக்க முயற்சிக்கும் புன்னகையே நீ!
உன் சிரிப்பில் கலந்திருக்கும்
இனிப்பே நீ!
உன் அழுகையில் சிந்திய
கண்ணீரே நீ!
தனிமையை உணரும்போது
உரத்த குரலில் பாடும் பாட்டே நீ!

நீ பயணித்த இடங்களே நீயாவாய்.!
இல்லம் என்றழைக்கின்றாயே
அதுவும்தான் நீ!
நம்பிக்கை வைக்கும்
நற்பொருட்களே நீ!
நீ நேசிக்கும் மனிதர்களே நீயாவாய்.
உன் படுக்கையறையில்
மாட்டியிருக்கும் படங்களே நீ!
நீ கனவு காணும் எதிர்காலமே நீ!
நீ அல்லாத விஷயங்களே
உன் வரையறுப்பு
என்றெண்ணும்போது
எத்தனை எழிலோடு
நீ சமைக்கப்பட்டிருக்கிறாய்
என்பதெல்லாம் மறந்துவிட்டாயோ?

26வயதாகும் எரின் ஹான்சன்  எழுதியுள்ள  ஆங்கிலக் கவிதையை என் மகள் மீரா  மிகவும் ரசித்து பாராட்டினார். எனக்கு அனுப்பி மொழிபெயர்க்க கேட்டிருந்தார். ஆகவே மொழியாக்கம் செய்திருக்கிறேன். எரின் ஜான்சன் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். தன்னுடைய 11 வயதில் ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினார்.16ஆவது வயது முதல் அதில் தீவிரமாக எழுதத் தொடங்கினார். மூன்று கவிதைத் தொகுதிகளை எழுதியிருக்கிறார்.(வலைத்தளத் தகவல்கள்)

தமிழில் ரமணன்

You are not your age, nor the size of clothes you wear,
You are not a weight, or the color of your hair.
You are not your name, or the dimples in your cheeks.
You are all the books you read, and all the words you speak.
You are your croaky morning voice, and the smiles you try to hide.
You’re the sweetness in your laughter, and every tear you’ve cried.
You’re the songs you sing so loudly when you know you’re all alone.
You’re the places that you’ve been to, and the one that you call home.
You’re the things that you believe in, and the people whom you love.
You’re the photos in your bedroom, and the future you dream of.
You’re made of so much beauty, but it seems that you forgot
When you decided that you were defined by all the things you’re not.

Erin Hanson is a 26-year-old poet who was born on the 22nd of June 1995 in Brisbane, Australia. She rose to fame for her beautiful poetry. It all started with a blog, a small dream, and a keen desire for expression. Erin started a blog when she was 11 and started taking the blog more seriously in the year 2011.
The Plight of the Shudras poetry Savtribai phule in tamil translated by m dhananchezhiyan சூத்திரர்களின் அவலநிலை

சூத்திரர்களின் அவலநிலை (கவிதை) – சாவித்திரிபாய் புலே | தமிழில்: மு. தனஞ்செழியன்



சூத்திரர்களின் அவலநிலை

சாவித்திரிபாய் புலே

இரண்டாயிரம் ஆண்டுகளாய்
வேட்டையாடுகிறார்கள் ‘கடவுள்’ என்று.
பார்ப்பன சூழ்ச்சியால்
சூத்திரர்களுக்கு இழிவு நிலை.
இதயம் அறைகூவலிட்டு எதிர்த்து,
மன  வெறுமையுடன்
வெளியேற வழி தேடும்
நிலையைப் பாரும்.
சூத்திரர்கள் தலைநிமிர
கல்வி வழியாகுமே.
கல்வி மனிதநேயம் பயிர்க்கும்
விலங்கிட்ட பிடியில் இருந்து விடுவித்துக்கெள்ளும்.

 

The Plight of the Shudras 

                            -Savtribai phule

Haunted by ‘The Gods on Earth’,
For two thousand years,
The perpetual service of the Brahmins,
Became the plight of the Shudras.
Looking at their condition,
The heart screams its protest,
The mind blanks out,
Struggling to find a way out.
Education is the path,
For the Shudras to walk,
For education grants humanity
freeing one from an animal-like existence

Shankha Ghosh Bengali Poetry And A. J. Thomas Malayala Poetry in Tamil Translation By dhananchezhiayan m. இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகள்

வங்க கவி சங்கா கோஷ் மற்றும் மலையாள கவி ஏ.ஜே. தாமஸ் மொழிபெயர்ப்பு கவிதைகள் | தமிழில்: மு. தனஞ்செழியன்



மறைக்கப்பட்ட முகம் – சங்கா கோஷ்

தனியே நிற்கின்றேன் குறுகிய பாதையில்
நான் உனக்காகக் காத்திருக்கிறேன்
நம்பிக்கையுடன் என் முகம் காண்பிப்பேன்.
ஆனால், அது விளம்பரப் பலகையில் மறைக்கப்பட்டுள்ளது.

சாதாரண வார்த்தைகள் உன்னுடன் தனிமையில்
பேச விரும்புகிறேன், யாரும் இல்லாதபோது.
ஆனால், நான் முயலும்போது
பளபளப்பான பட்டொளி விளம்பரத்துடன்
அவர்கள் திகைப்பூட்டுகிறார்கள்!

ஒருவருடைய பார்வையை என்னவென்று
புரிந்து கொள்வது கடினம்.
ஐயோ! என் சாபங்கள் அளவுக்கு மீறின.
ஐயோ! என் மகிழ்ச்சி அற்ற தாய்நாடே.

உனக்கும், எனக்கும் இடையிலான
ஒவ்வொரு பார்வையும் பறந்து போனது
பூரணமாய் விற்கப்பட்டது.
சுயங்கள் அனைத்தும் இப்போது நியான் ஒளியின்
பிரகாசத்தில் விற்பனைக்கு உள்ளது.

குறுகிய பாதையின் மூலையில் கைவிடப்பட்டு
தனியாக இருக்கின்றது என் வார்த்தைகள்.
இப்போது என் முற்றம் சோர்வடைந்தது
முகமூடி விளம்பரப் பலகையில் தொங்குகிறது.

தமிழில்: மு. தனஞ்செழியன்

Shankha Ghosh Bengali Poetry And A. J. Thomas Malayala Poetry in Tamil Translation By dhananchezhiayan m. இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகள்
Legendary Bengali Poet Shankha Ghosh

The face gets covered – Shankha Ghosh

I stand alone, waiting for you
in a corner of the alleyway
I hope to show you my face, but
it gets covered in an ad display

A few simple words, I wish to speak
to you alone, when noone’s there
but when I try, they dazzle and daze
with glitzy advertising flare

How exactly one is viewed
is so tough to understand
Oh my cursed exaggerations
Oh my hapless motherland

Every look between you and me
is hawked off and sold outright
All that’s personal is now on sale
in the glare of the neon light

My words lie abandoned and alone
in the corner of the alleyway
now just my exhausted mask
hangs in the ad display

(Mukh dheke jay bignapaney’, 1984) Translated from the Bengali

சங்கா கோஷ் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வங்காள எழுத்தாளர்.

Shankha Ghosh Bengali Poetry And A. J. Thomas Malayala Poetry in Tamil Translation By dhananchezhiayan m. இரண்டு மொழிபெயர்ப்பு கவிதைகள்
A. J. Thomas

மீண்டும் அறைக்கு – ஏ.ஜே. தாமஸ்

மீண்டும் அறைக்கு
மீண்டும் கருவில்
கருவாக
சமுதாயம் சீரழிகிறது
கட்டுபாடுகளுடன் அறையை மூடவும்

தமிழில்: மு. தனஞ்செழியன்

Back to the cave – A. J. Thomas

Back to the cave
Back to the womb
Embryonic
De-structuring society
Confining to closed rooms

(April, 2020)

இந்திய எழுத்தாளர் , ஏ.ஜே. தாமஸ் ஒரு ஆங்கில கவிஞர், புனைகதை எழுத்தாளர் மற்றும் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பாளர்

Unkown Hindi Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. *நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை

*நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்* ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதை – தமிழில்: வசந்ததீபன்



நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்

நான் சபிக்கப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?
நான் கைவிடப்பட்டு இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன் ?
நான் பூஜை _ஹோமத்தில் அமங்களமாய் இருக்கிறேன்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்?

ஆனால் இதை ஏன் மறந்து இருக்கிறாய்,
என நீ இருக்கிறாய்,
நீ , நீ இருக்கிறாய்
ஏனென்றால் நான் ஒரு மாதவிடாய் பெண்ணாக இருக்கிறேன்.

யோனியிலிருந்து பாயும் இரத்தம் எனது கெளரவம்
நான் இயற்கைக்கு சமானமானவளாக இருக்கிறேன்.
அதன் மீது முழு பிரபஞ்சம் தங்கியுள்ளது
நான் அந்த அச்சாக இருக்கிறேன்.

உங்கள் பிறப்பின் விளக்கமாக இருக்கிறேன்.
யாரை பூஜிக்க செல்கிறீர்களோ
நான் அந்த காமாக்யாவாக இருக்கிறேன்.

ஹிந்தியில் : பெயரற்றவர்
தமிழில் : வசந்ததீபன்

Shankha Ghosh Bengal Poetry *Rabindra Bhavan* Tamil Translation By dhananchezhiayan m. வங்க கவிஞர் சங்கா கோஷ் எழுதிய *ரவீந்திர பவன்* கவிதை

வங்க கவிஞர் சங்கா கோஷ் எழுதிய *ரவீந்திர பவன்* கவிதை – மொழியாக்கம்: மு. தனஞ்செழியன்



ரவீந்திர பவன்

பேசவில்லை வெறும் வார்த்தைகள்
ஒளியில்லா ஓலியின் பிரிக்கப்படாத
கீற்றுகள் முகம் அறியாமல் மிதக்கின்றன
மனித மனம் மனிதர்களின் மனைதைத்தேடுகிறது
என்பதை நாம் மறந்து விட்டோம்
நான் உன்னைப் பார்த்து நீண்டகாலம் ஆகிறது
இந்த நிலவில்லா, உணர்வற்ற இருளில்
மனிதர்கள் வெறும் பிஆர் இயந்திரம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஒரு நாள் அவர் இதை என்னிடம் இதைச் சொன்னபோது
அவரது கண்களில் இருந்த வெறுப்பு எனக்கு நினைவிருக்கிறது
ரவீந்திர பவாவின் பாதையில் நின்றேன்
அநேகமாய், அந்தப் படிக்கட்டுகள் அவருக்கு
இதைக் கற்றுத் தந்துதிருந்தன

தாகூர் வழியே, நீங்கள் அதைக் கேட்க வேண்டும்
மனிதர்கள் வெறும் பிஆர் இயந்திரங்களென்று
ஆயினும் மனித மனதைத் தவிர
உங்களுக்கு வேறு எதுவும் தெரியாது
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை
இயற்கையையும் தேடவில்லை
அமைதியாக, இரகசியமாய் இருந்து கொண்டீர்.
அதனால், தான் இயற்கை இப்பொது பழிவாங்க விரும்புகிறது
ஒவ்வொரு நாளும், மீண்டும், மீண்டும்,
இந்த நிலவு இல்லாத, உணர்வற்ற இருளில்.

வங்க கவிஞர் சங்கா கோஷ்
தமிழில்: மு. தனஞ்செழியன்

Ay. Tamizhmani's Tamil Poetry And Thanges English Translation. Book Day and Bharathi Tv Are Branches of Bharathi Puthakalayam

அய். தமிழ்மணியின் தமிழ்க் கவிதையும், தங்கேஸின் ஆங்கில மொழிபெயர்ப்பும்



கவிதை 1

மழைக் காலத்தின்
பெரு இடி முழக்கத்தின்
ஊடாகவும்..

வேரென வெட்டி மறையும்
மின்னல் கோட்டிலும்..

லப்டப் லப்டப் எனப்
பெருமழை ஓய்ந்து
சொட்டும் துளிகளில்..

நான் நனைந்து கொண்டிருக்கும்
இவ்வேளையில்..
நீ என்ன செய்து கொண்டிருப்பாய்.?

மண்முட்டி வெடித்துக் கிளம்பும்
காளானின் பரந்த குடையின் கீழ்
நினைவுகளை இளைப்பாற்று..

வெதுவெதுப்புக் குறையாமல்
வந்து சேர்கிறேன்..

சேர்ந்தே சமைக்கலாம்.!
தலையணைப் பஞ்சுகளை
மிச்சம் வை.!

Through the huge
thunderous roar Of the rainy season
which makes the heart dumb bound

Through the lightninng line of the huge flash
Which makes the tree appear and disappear

Through the drops of the rested heavy rain
which makes the sound Lup tup

Iam soaking wet completely
at this moment
what would you be doing there now my dear ?

let the soil too be exploded up automatically
let your memories be relaxed gently
Under that wide mushrooms umbrella ,

Without losing warmth
I will come to you straight away

Let’s cook together secretly !
Darling !
Just spare some
Pillow cotton for that pleasant meeting



கவிதை 2

பார்க்கவும்
பயிலவும்
பழகவும்
நெகிழவும்…
காத்துக் கிடக்கின்றன
வெளிகள்.,

அவ்வெளி கலந்து
மகிழ்விக்க….
அங்குமிங்கும்
அலைந்து திரிகிறது.,
ஓயாது இசை பாடுகிற காற்று

என்
மனதொன்றும்
காற்றுக்குக் குறைச்சலில்லை.,
அதுவும்
அலைந்து திரிகிறது
உன் நினைப்போடு..

நீ என்னைத்
திரும்பிப் பார்க்காமலே
சென்றிருக்கலாம்.

Pleasant places are awaiting
to see, to learn,
to relax to acquaint with us…
getting mingled with that space
there blows the musical wind
dancing with ecstacy,
jumping with rhythm,
and singing with pleasure.

it is singing continuously to please you
leaping here and there expecting your arrival
my heart too is not just lesser than the musical wind
it is roaming here and there with your unforgettable memories
you should have gone without looking me back,

கவிதை: அய் . தமிழ்மணி
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்

Created by Ay. Tamizhmani
Translated by Thanges

Hindi Poet Bhagwat Rawat Three Poetries Translated in Tamil By Poet Vasanthadeepan. Book Day is Branch of Bharathi Puthakalayam.

பகவத் ராவத்த்தின் மூன்று ஹிந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள் – தமிழில்: வசந்ததீபன்



(1) பாறைகள்

நாலாபுறமும் பரவியது.
நிலையான மற்றும் கடினமான பாறைகளின் உலகத்திற்கு மத்தியில்
ஒரு மனிதன்
புதர்களின் உலர்ந்த தண்டுகளை சேகரித்து
தீயை எரிக்கிறான்.

பாறைகளின் முகங்கள் வெளிறிப் போகிறது
மனிதன் அவை எல்லாவற்றிடம் செய்தியற்று
சோதித்துக் கொள்கிறான்
தன்னைத் தானே
எழுகிறான் மற்றும் அவற்றில் ஏதாவது ஒன்றின் மேல் அமர்ந்து
தனது உலகத்திற்காக
மாவைப் பிசைந்து கொள்கிறான்.

தீ வேகமாக எரிகிறது
பாறைகள் முதல் முறை
தமக்கு முன்னால்
சில உருவாகுவதை பார்க்கின்றன.

இறுதியில் மனிதன்
எழுந்து நடக்கிறான் திடீரென்று
இதுபோல செய்தியற்று
பாறைகள் முதல் முறை தமக்கு நடுவிலிருந்து
சில கடந்து செல்கிறதை
உணர்ந்து இருக்கின்றன.



(2) மாறிய பருவத்தின் சுபாவம்

எப்போதிருந்து
பூமி மண்டலம்
இல்லாமல்
இருந்து கொண்டிருக்கிறது புவியியல்
ஏறிப் போயிருக்கிறது
உலகமயமாக்கலின் காய்ச்சல்
எப்போதிருந்து மறையத் தொடங்கியது
தாராள மனப்பான்மை
பரவியது பிளேக் போல
தாராளமயம்
எப்போதிருந்து நாசமாகிப் போயின
கிராமங்கள், தொழில்கள் மற்றும் நகரங்களின் திறந்தவெளி மைதானங்களின் சந்தைகள்
வீடுகளுக்குள் நுழைந்தது
முக்காடிட்ட சந்தைவாதம்

இது காரணமின்றி இல்லை என்று அப்போதிருந்து இயற்கையும்
பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்து
தமது நியமம், அறம்
மாற்றி இருக்கிறார்கள்
தமது நடத்தையும் இயல்பும்
இப்போது இங்கே பாருங்கள் என்று
தெரியவில்லை என்று
மகிழ்ச்சி அல்லது கோபம் இருக்கின்றன
இவை புதிர்
பங்கு தரகர்களின் தூக்கி எறியப்பட்ட சென்செக்ஸ் போல.

பலத்த மழை பெய்துள்ளது இந்த ஆண்டு.

ஏதோவொரு மிகப் பெரிய பணக்காரனாக
தமது செல்வத்தின் அடி
இது மாதிரி என்பது போல
பசித்த பிச்சைக்காரர்களுக்கு
ஏதோ ஒரு நாள்
பலவந்தமாக திணித்தபடி
உணவிட்டார் எல்லா தின்பண்டங்களை
அவர்கள் சாப்பிட்டுச் சாப்பிட்டு
இறக்காமல் போகும் அப்போது வரை.

ஏதோவொரு தண்ணீர் கோட்பாடு மட்டும் தனது பயிற்சிக்காக
காரணமற்று ஒருவர் கீழ் உத்தியோகம் பார்க்கிறது மேல்
அப்போது வரை பெய்தது
சவுக்கு மேல் சவுக்கு தொடர்ந்து
எப்போது வரை சுயமாக களைத்து தோற்று தூங்காமல் போனார்கள்.

பாருங்கள் மறுபுறம் இந்தக் காட்சியை
அத்தகைய மழையில், போதையில் அசைந்து
தன்னுடையதான குடிவெறியில் நிற்கின்றன நகராமல்
உயர்ந்த, தாழ்ந்த மலைகள்
நிலையான ஞானத்தைப் போல
தனதான பொய் ஆடம்பரத்தில்நின்று இருக்கின்றன
உயரமாக, உயரமாக எழுகிற
கட்டடங்கள்

மேலும் துக்கத்தை விடவும் அதிகமான துக்கத்தில்
மூழ்கி இருக்கின்றன
அனைத்து தாழ்ந்த குடியிருப்புகள்
பாய்ந்தோடுகின்றன அவற்றின் எல்லாக் கூரை வீடுகள்

இவர்கள் தான் இறக்க இருக்கிறார்கள் காற்றினால், தண்ணீரினால், நெருப்பால்
மாறிய பருவத்தின் சுபாவத்தால்
சில நேரங்களில் தாகத்தால்,
சில நேரங்களில் மூழ்கி
சில நேரங்களில் வாயுவால்
சில நேரங்களில் நெருப்பால்.



(3) இந்த அந்நிய நகரத்தில்

சிலர்
காயமடைந்து வெளியேறிஇருந்தார்கள்
வீட்டிலிருந்து.
கதை சொல்லும் மக்கள் சொல்கிறார்கள்
தண்ணீர் குடிப்பதற்கு
குவளை கயிறு வரை இல்லாமல் இருந்தது என்று.
அவரிடம் எதுவுமில்லாமலிருந்து
வாழ்க்கையைத் தொடங்கினார் அவர்
அந்நிய நகரத்தில்
மற்றும் உடல், மனம் ஈடுபாட்டோடு
பணம் சம்பாதித்தார்
பணத்துடன் மரியாதை
மரியாதையுடன் பெயர்
இந்த மாதிரி அவர் ஒரு நாள்
நகரத்தின் முதலாளியானார்
வாழ்ந்தார் முழு வயது
வெற்றிக் கொடியைப் பறக்க விட்டு
அவர் பலரக வாத்தியங்களின் இசையோடு
சொர்க்கவாசியானார்
முடிவுகள் திடமானதாக
அவர் எப்பவும் திரும்பிச் செல்லவில்லை
தனது வீட்டின் பக்கமாக
வீடு தான் வந்தது அவர் வரை
அவருக்கு வணக்கம் செலுத்தவும்
போற்றவும்.
ஒவ்வொரு கோட்டையின்
எந்த மாதிரி இருக்கிறது ஒரு
பெரிய கதவு
அதிலிருந்து
கோட்டை திறக்கிறது
அது போல
ஒவ்வொரு நகரத்திற்கும் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு
அது போன்ற
பெரிதான பகுதி
அதனாலே திறக்க இருந்தன
நகரின்
மறைவான கதைகள்
அந்த நாட்கள் தான் கொஞ்சம் மற்றும் இருந்தன
மக்கள் சொல்லிச் சொல்லி

மனம் தளர்ந்து போய்
இருக்கிறார்கள்
மற்றும் நேரத்தை நிந்தித்து நிந்தித்து
அது போன்ற ஏதாவது ஒரு
கதையின் சுவரிலிருந்து
முதுகில் தாங்கச் செய்கிறது
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக
ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில்
வீடற்றவராகி
ஒவ்வொரு வருடமும்
வெளியேறிச் செல்கிறார்கள் மக்கள்
நகரங்களின் உடைந்து நொறுங்கிய சாலைகள்
அழைக்கின்றன அவர்களை
அந்நிய சமையலறைகளின் பாத்திரங்கள்
அவர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துகின்றன
தட்டுகளின் எச்சில்
அவர்களை அழைக்கிறது
மென்மையான படுக்கை
விரிப்பதற்கு
அவர்களின் கைகள்
எதிர்பார்க்கின்றன
மற்றும் எப்போது புரள்கின்றன அவை
வீடுகளின் பக்கம்
அவர்களை மறுபடியும் வாழ வைக்கவும்
பின்னர் ஏதோ தண்ணீர் நிரம்பிப் போகிறது
பின்னர் ஏதோ விலங்கு
பகல் கர்ஜித்து நுழைகிறது
அவர்களின் வீடுகளில்
பல ஆண்டுகளுக்கு முன்பு
தமது நேரத்தின்
முழுவதும் யெளவனமுள்ள பையன்களைப் போல
நானும் வெளியேறி இருந்தேன் வீட்டை விட்டு
துணிப்பையில் சில காகிதங்களை வைத்து
ஆனால் விட்டுவிடுங்கள்
இந்த கதையில் எதுவும் புதிதாக இல்லை
நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் எப்போது மற்றும் ஏன் வந்தீர்கள்?
இந்த அந்நிய நகரத்தில்.

ஹிந்தியில் : பகவத் ராவத்
தமிழில் : வசந்த தீபன்

பகவத் ராவத்
பிறப்பு : 13,செப்டம்பர் 1939
பிறந்த இடம் : டேஹர்கா கிராமம், டீகம்கட் மாவட்டம், மத்திய பிரதேசம்.

முக்கிய படைப்புகள் :

(1) ஸமுத்ர கே பாரே மேன் (1977)
(2) தீ ஹுஈ துனியா (1981)
(3) ஹுஆ கிஸ் இஸ் தரஹ் (1988)
(4) ஸுனோ ஹீராமன் (1992)
(5) ஸச் பூச்சோ தோ (1996)
(6) பிதா_கதா (1997)