‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா | Haiku Mutram E Magazine Launch Ceremony | ஹைக்கூ கவிஞர்கள் | www.bookday.in

‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா

‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் சென்னை. நவம்.11. கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸின் ஏழாவது தளத்தில் ‘ஹைக்கூ முற்றம்’ ஐந்தாவது நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முனைவர் இரா.பாஸ்கரன்…
தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷ் (M.Murugesh) -https://bookday.in/

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது.

‘தமிழ்ப் பல்லவி’ இலக்கிய வட்டத்தின் சார்பில் சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல் பரிசு கவிஞர் மு.முருகேஷூக்கு வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ்ப் பல்லவி’ இதழும், பாவலர் மலரடியானும் இணைந்து நடத்திய சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான முதல்…
விழியின் ஓசை - நூல் வெளியீடடு | கவிஞர் | கவிதை | சீ.பாஸ்கர் | நூல் | https://bookday.in/

விழியின் ஓசை – நூல் வெளியீடடு

  விழியின் ஓசை - நூல் வெளியீடடு இன்றைய இளைய தலைமுறையினரின் கவிதைகள் புதிய நம்பிக்கையை விதைக்கின்றன கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் நம்பிக்கை சென்னை. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியிலுள்ள வித்யாமந்திர் எஸ்டான்சியா பள்ளியில் கடந்த சனிக்கிழமையன்று (ஜூலை…
Poet M. Murugesh has been selected to receive the Central Government's Bala Sahitya Puraskar Award for the year 2021 2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு

2021-ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற கவிஞர் மு.முருகேஷ் தேர்வு




புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இவர் 10 புதுக்கவிதை, 9 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் உட்பட 47 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.

மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம் போல் பரவலாக கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூல், 2021-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய செப்புப்பட்டயமும் வழங்கப்படவுள்ளது.

கவிஞர் மு.முருகேஷ் தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றவர். இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர். இவரது ஹைக்கூ கவிதைகள் எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் ’நிலா முத்தம்’ எனும் நூலாகவும், தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற நூல் பள்ளி மாணவி வி.சைதன்யா மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ’The first story told by a daughter to her mother’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.

2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9-ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.

பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறித்து கவிஞர் மு.முருகேஷ் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை தரும் வகையில் இந்த விருது அறிவிப்பு உள்ளது. இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறார் படைப்பாளிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.
விருதாளர் செல்பேசி : 94443 60421

சிறுவயதிலேயே புத்தக வாசிப்பு எனும் விதையை குழந்தைகள் மனதில் ஊன்ற வேண்டும் – பள்ளி மாணவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு 

சிறுவயதிலேயே புத்தக வாசிப்பு எனும் விதையை குழந்தைகள் மனதில் ஊன்ற வேண்டும் – பள்ளி மாணவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு 

  பாலக்கோடு: தருமபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோட்டில் விஸ்டம்லேண்ட் மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளின் ஹைக்கூ கவிதை நூல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. பனிரெண்டாம் வகுப்பு மாணவன் சி.கு.கோகுல் சர்வேஸ் எழுதிய ‘விரல் நுனியில் கீதம்’ எனும் ஹைக்கூ கவிதை…