கவிதை தின கவிதை – து.பா.பரமேஸ்வரி

கவிதை தின கவிதை – து.பா.பரமேஸ்வரி




ஒரு கவிதை என்ன செய்யும்…

பிழைகளை காட்சிப் பெருக்கிப்
காட்சிகளைப் படிமமாக்கும்..

படிமங்களை படிவங்களாக்கி
உணர்வுகளை நிரப்பச் செய்யும்

கலைகளைக் கனவுக்குள் பொருத்தி

உணர்வுக்கு உயிர் கொடுக்கும்

கனவுகளை ருசிக்கப் பண்ணி.
நனவுகளை உடுத்திக் கொள்ளும்…

நனவுகளோ
நகக்கண்ணுக்குள்‌ ஒளித்து வைக்கும் நினைவுகளை
சொட்டுச் சொட்டாய் உதிரச் செய்யும்..
கவிதைத் தேன் சமைந்துக் கிடக்கும்
கவிஞனின் உயிர்நாடிக்குள்…

து.பா.பரமேஸ்வரி
சென்னை.