Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு

விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் – விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு




Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருதனது அரசாங்கம் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19 அன்று அறிவித்தார். கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அவசரமாகக் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியே அவர் தன்னுடைய அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சட்டங்களைத் திரும்பப் பெறுவதை அறிவித்த தன்னுடைய உரையில் ‘அவர்கள் [தங்களுடைய] வீடுகள், வயல்வெளிகள் மற்றும் [தங்களுடைய] குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம்’ என்று விவசாயிகளிடம் அவர் கூறியிருந்தார். விவசாயிகள் மீது திணிக்கப்பட்ட சட்டங்களை எதிர்த்து ஓராண்டாகப் போராடிய விவசாயிகளை எதிர்மறையாகப் பாதிக்கின்ற சட்டங்களை தன்னுடைய அரசாங்கம் இயற்றியதைப் பற்றி எந்தக் கட்டத்திலும் மோடி ஒப்புக் கொண்டிருக்கவில்லை.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயத்தை தனியார்மயமாக்குகின்ற கொள்கைகளை மோடி கைவிடவ் போவதில்லை; மாறாக அவர் வெவ்வேறு தொகுப்புகளின் மூலம் தனியார்மயத்திற்கே திரும்புவார் என்றே தோன்றுகிறது. தன்னுடைய உரையில் ‘எங்களுடைய அரசு விவசாயிகளின் நலனுக்காகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அதைச் செய்யும்’ என்றே அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெற்றியில் மகிழ்ச்சி
ஆனால் ‘விவசாயிகளின் நலனுக்காக’ பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான மோடியின் அரசாங்கம் வேலை செய்து வருகிறது என்ற எண்ணம் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை. விவசாயிகள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளின் உணர்வை அறிந்து கொள்வதற்காக, முக்கியமான விவசாயிகள் சங்கங்களில் ஒன்றான அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (ஏஐகேஎஸ்) தேசியத் தலைவரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (எஸ்கேஎம்) தலைவருமான அசோக் தவாலேவிடம் நேர்காணலை நடத்தினேன்.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருமூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக மோடி அளித்திருக்கும் வாக்குறுதி ‘போதுமானதாக இல்லாமலும், மிகவும் தாமதத்துடனும்’ இருப்பதாக தவாலே கூறினார். வலுவான குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பிற கோரிக்கைகள் அனைத்தையும் தவிர்த்து விட்டு விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றை (வேளாண் சட்டங்களை ரத்து செய்தல்) மட்டுமே ஏற்றுக் கொண்டிருப்பதால் மோடி அளித்திருக்கும் வாக்குறுதி போதுமானதாக இருக்கவில்லை; ஓராண்டு நீடித்த போராட்டம் ஏற்படுத்திய தனிமைப்படுத்தல், அரசாங்க அடக்குமுறைகள் காரணமாக எழுநூறு விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க நேரிட்ட பிறகு அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது வாக்குறுதி மிகவும் தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது.

‘கடந்த ஏழு ஆண்டுகால ஆட்சியில் மிகவும் அவமானகரமான முறையில் மோடி இவ்வாறு கீழிறங்கி வந்திருப்பது இது இரண்டாவது முறையாகும்’ என்று கூறிய தவாலே ‘முதலாவதாக 2015ஆம் ஆண்டில் நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாக ‘2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை’ திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது’ என்றார். இந்திய விவசாயத்தை மிகப்பெரிய பெருநிறுவனங்களிடம் வழங்குவதற்கான திட்டத்தை 2014ஆம் ஆண்டு தான் ஆட்சியதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே மோடி முன்வைத்து வந்திருக்கிறார். அப்போதிருந்தே அவருடன் போராடி வந்த விவசாயிகள் இன்றைக்கும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

நவம்பர் 19 அன்று வெளியான மோடியின் அறிவிப்பிற்குப் பிறகும் விவசாயிகள் தங்கள் போராட்ட முகாமை விட்டு வெளியேறவில்லை. ‘வேளாண் சட்டங்கள் உண்மையில் [பாராளுமன்றம் மூலம்] ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இருப்பார்கள்’ என்று தவாலே கூறினார். மேலும் ‘விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை அவர்கள் அங்கேயே இருப்பார்கள். போரில் பாதி வெற்றியை அடைந்திருப்பது குறித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் இருந்த போதிலும் போராட்டத்தின் மற்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதைக் காண வேண்டும் என்ற உறுதியும் விவசாயிகளிடம் இருக்கிறது’ என்றார்.

மோடி ஏன் சரணடைந்தார்
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மோடி முடிவு செய்ததன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தவாலே கூறினார். இந்தியத் தலைநகரான தில்லி எல்லையில் அமைந்திருக்கும் மூன்று முக்கிய மாநிலங்களில் (பஞ்சாப், உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம்) வரப் போகின்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களுடன் தொடர்புடையதாக முதலாவது காரணம் இருக்கிறது. சமீபத்திய மாதங்களில் ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் போது தனக்கான ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதை பாஜக கண்டிருக்கிறது. அந்த இடைத் தேர்தல்களில் பாஜக அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கவில்லை.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவட இந்தியாவில் தேர்தல் நடந்திருக்கும் அல்லது நடக்கவிருக்கும் ஆறு மாநிலங்கள் தில்லிக்கு அருகாமையில் உள்ள மாநிலங்களாகும். மேலும் தில்லியின் எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்களில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரின் சொந்த மாநிலங்களாகவும் அவை இருக்கின்றன. போராட்டங்கள் தொடருமானால் விவசாயிகள், தொழிலாள வர்க்கம் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் தங்களுடைய கட்சி மிகப்பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று பாஜகவில் உள்ள தலைவர்கள் கருதினர்.

விவசாயிகளின் உண்மையான போராட்டம், உறுதியைக் காட்டிலும் கவனத்தில் கொள்வதற்கு முக்கியமானவை வேறு எதுவுமில்லை என்று கூறிய தவாலே, எடுத்துக்காட்டாக செப்டம்பர் 5 அன்று கிசான் மகாபஞ்சாயத்திற்கு விவசாயிகள் ஏற்பாடு செய்ததைக் குறிப்பிட்டார். ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அழைப்பின் பேரில் நடைபெற்ற அந்த மகாபஞ்சாயத்தில் விவசாயிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருஉத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை மோதலில் ஒன்பது பேர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, அமிர்தசரஸ் புறநகர்ப் பகுதியில் 2021 அக்டோபர் 6 அன்று கூடிய விவசாயிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்து முழக்கங்களை எழுப்பினர்.

மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்த அந்தக் கூட்டத்தின் தொனி மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கவில்லை. அது பாஜக அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள் என்பதையே தெளிவுடன் காட்டியது. விவசாயிகள் போராட்டத்தின் அடிப்படைப் பார்வை மோடியின் தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்துத்துவா அரசியல் சித்தாந்தத்திற்கு முற்றிலும் எதிரானதாக மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவிற்காகப் போராடுவதாகவே இருந்தது.

போராட்டத்தின் வேகம் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. செப்டம்பர் 27 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி இந்தியா முழுவதும் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு (பாரத் பந்த்) அழைப்பு விடுத்தது. அது விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் போது நடைபெற்ற மூன்றாவது வேலைநிறுத்தமாக இருந்தது. லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், நடைபெற்ற மூன்று வேலை நிறுத்தங்களில் மிகவும் வெற்றிகரமானதாக அந்த வேலைநிறுத்தம் அமைந்தது என்று தவாலே கூறினார்.

மத வேறுபாடுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைப் பிளவுபடுத்துவதில் தோல்வியுற்ற பாஜக அரசுக்கு எதிராக ஒரு மாதத்திற்குப் பிறகு, அக்டோபர் 18 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் ரயில் தடங்களை (ரயில் ரோகோ) மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக மோடி அறிவித்த போதிலும், விவசாயிகள் கிளர்ச்சியின் முதல் ஆண்டு தினமான நவம்பர் 26 வெள்ளிக்கிழமையன்று தில்லி எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் மற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
திங்களன்று விவசாயிகளிடம் மோடி சரணடைந்த பிறகு, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் மிகப்பெரிய கிசான் மகாபஞ்சாயத்தில் ஒன்றுகூடிய விவசாயிகள் அமைப்புகளின் தலைவர்கள் போராட்டத்தைத் தொடர்வது என்று உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். ‘வெற்றி குறித்த மனநிலையும், போராட்டத்தைத் தொடர்வது என்ற உறுதிப்பாடும் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக் கொண்டது’ என்று தவாலே கூறினார்.

தீர்க்கப்படாதிருக்கின்ற பிரச்சனைகள்
1995 மற்றும் 2018க்கு இடையிலான காலத்தில் நான்கு லட்சம் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 2014ஆம் ஆண்டு மோடி பதவியேற்றதில் இருந்து ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தவாலே தெரிவித்தார். அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகள் சார்பாக தலையீடு போன்றவற்றை நீக்கியது, பருவநிலை பேரழிவு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றால் இந்தியாவில் உருவாகியுள்ள வேளாண் நெருக்கடியுடன் நேரடியாகத் தொடர்புடையவையாகவே விவசாயிகளின் தற்கொலைகள் இருந்துள்ளன.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுருவிவசாயிகள் தேசிய ஆணையத்திற்குத் தலைமை தாங்குமாறு புகழ்பெற்ற அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனை இந்திய அரசாங்கம் 2004ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. 2006வாக்கில் முக்கியமான பரிந்துரைகளின் நீண்ட பட்டியலுடன் அந்த ஆணையம் தயாரித்துக் கொடுத்த ஐந்து முக்கிய அறிக்கைகளில் இருந்த பரிந்துரைகள் எதுவுமே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரித்து, வலுப்படுத்த வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்று. விவசாயிகளின் நிலைமையை அரசாங்கங்களின் வெற்று அலங்கார வார்த்தைகள் சற்றும் மேம்படுத்தவில்லை; விவசாயிகளின் வருமானம் குறைந்துள்ளதாகவே சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை விவசாயிகள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். விளைபொருளின் விலைக்கான உதவி, கடன் தள்ளுபடி, மின்சார விலையுயர்வைத் திரும்பப் பெறுதல், தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்தல், மானிய விலையில் எரிபொருள் வழங்குதல் மற்றும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். ‘இந்தப் பிரச்சனைகளே விவசாய நெருக்கடி மற்றும் விவசாயிகளின் பெரும் கடன் சுமைக்கு அடிகோலுகின்றன. விவசாயிகளின் தற்கொலை, விவசாய நிலங்களின் விற்பனை போன்ற நெருக்கடிகளுக்கும் அவையே வழிவகுத்துக் கொடுக்கின்றன’ என்கிறார் தவாலே.
Indian farmers who are fighting for the rights of all farmers Article by Vijay Prasad in tamil translated by Tha Chandraguru விவசாயிகள் அனைவரின் உரிமைகளுக்காகவும் போராடி வரும் இந்திய விவசாயிகள் - விஜய் பிரசாத் | தமிழில்: தா.சந்திரகுரு‘நமக்கான உணவை விவசாயிகள் பயிரிட்டுத் தர வேண்டுமென்றால், விவசாயிகளுக்குத் தேவையான உணவு அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்றால், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று தவாலே கூறினார். இது இந்திய விவசாயிகளுக்கான கோரிக்கை முழக்கமாக மட்டும் இருக்கவில்லை. உலகம் முழுவதிலும் உள்ள விவசாயிகளின் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய விவசாயிகள் தொடர்ந்து போராடுவார்கள்.

https://asiatimes.com/2021/11/indian-farmers-defend-rights-of-farmers-everywhere/
நன்றி: ஆசியாடைம்ஸ்
தமிழில்: தா.சந்திரகுரு

Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுரு

தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை – பிருந்தா காரத் | தமிழில்: தா. சந்திரகுரு




Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுருமூன்று வேளாண் சட்டங்களை தனது அரசாங்கம் ரத்து செய்யும் என்ற பிரதமரின் அறிவிப்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்தா கிசான் மோர்ச்சா) தலைமையின் கீழ் நடைபெற்று வந்த விவசாயிகளின் ஓராண்டு கால, வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாகும். தன்னுடைய தோல்வியில் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை.

போராட்டத்தில் வீரமரணம் அடைந்த எழுநூறு விவசாயிகளுக்காக அவர் தன்னுடைய உரையில் ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவித்திருக்கவில்லை. விவசாயிகள் மீதான பொய் வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்பதற்கான எந்தவொரு உறுதியும் அவரது பேச்சில் காணப்படவில்லை. பயங்கரவாதிகள், துரோகிகள், குண்டர்கள், சீர்குலைப்பவர்கள், பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் என விவசாயிகளுக்கு எதிராக அவரது கட்சித் தலைவர்களால் இந்த ஓராண்டாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கும் கடுமையான வார்த்தைகளுக்கான மன்னிப்பும் இருக்கவில்லை. லக்கிம்பூர் கேரியில் நடந்த பயங்கரச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தவர் இன்னும் ஒன்றிய அமைச்சரவையில் அங்கம் வகித்து வருகிறார். மோடி அதுகுறித்து கனத்த மௌனம் காத்து வருகிறார்.

சட்டங்களுக்கு ஆதரவாகப் பேசிய பிரதமர் விவசாயிகளில் ‘சிலரை’ நம்ப வைக்கத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று கூறி தன்னுடைய பக்கமே கோல் அடித்து வைத்திருக்கிறார். இங்கே ஒரு கேள்வி நம்மிடையே எழுகின்றது: இந்தச் சட்டங்கள் உண்மையிலேயே நல்லவை என்றால், அவற்றை ‘சில’ விவசாயிகள் மட்டுமே எதிர்த்திருந்தால், அவர் ஏன் அவ்வாறான நல்ல சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்? விவசாயிகளின் போராட்டத்தின் மையப்பகுதிகளான உத்தரப்பிரதேசம், பஞ்சாபில் வரவிருக்கும் தேர்தல்களில் ஏற்படப் போகும் அரசியல் வீழ்ச்சி என்பதைத் தவிர, சட்டங்களை விலக்கிக் கொண்டதற்கான காரணத்தை அறிந்து கொள்ள அரசியல் அறிவியலாளர் எவரின் உதவியும் நமக்குத் தேவைப்படப் போவதில்லை.

வாய்ப்பு கிடைத்து அந்த மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற்றால், அரசாங்கம் அந்தச் சட்டங்களை மீண்டும் விவசாயிகள் மீது திணிக்கும் என்பதாகவே சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்போது கூட, சட்டங்களுக்கு ஆதரவாக இருந்த பிரதமரின் அந்தக் குரல் உரத்து, மிகத்தெளிவாக விவசாயிகளின் காதுகளை எட்டியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் முக்கிய போட்டியாளராக அதிகாரத்திற்கு வருவதற்காக காத்திருக்கும் சமாஜ்வாதி கட்சி, ஏற்கனவே ‘அவர்களுடைய நோக்கங்கள் பெருந்தன்மையுடன் இருக்கவில்லை; தேர்தலுக்குப் பிறகு மீண்டும் சட்டங்களைக் கொண்டு வருவார்கள்’ என்ற முழக்கத்தை உருவாக்கியுள்ளது.
Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுருகுறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வமான உத்தரவாதம் வேண்டும் என்று தாங்கள் எழுப்பி வரும் மிக முக்கியமான பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை, தங்களுடைய போராட்டத்தைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மின்சாரத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தீர்க்கப்பட வேண்டிய மற்ற பிரச்சனைகளும் விவசாயிகளின் தலைவர்களால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அந்தத் தலைவர்களில் பலரும் பிரதமரின் அறிவிப்பு குறித்து தங்களுடைய சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்தின் மீதான அவநம்பிக்கை அவர்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. எனவே சட்டங்களைத் திரும்பப் பெறுவது என்ற நடவடிக்கையின் மூலம் விவசாயிகளின் கோரிக்கைகளை தேர்தல் களத்திலிருந்து நீக்கிவிடலாம் என்று பாஜக நினைக்குமென்றால், விரும்பத்தகாத ஆச்சரியத்திற்கே அந்தக் கட்சி உள்ளாக நேரிடும்.

பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு மேலும் ஓர் இழிவான காரணமும் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடந்தப்பட்ட வகுப்புவாத கலவரங்கள் பாஜகவிற்கு தேர்தல் பலன்களை அளித்தன. இம்முறையும் தேர்தலுக்கான ஆயத்த வேலைகள் தொடங்கியதில் இருந்தே, வகுப்புவாத நச்சு முழக்கங்கள், சிறுபான்மையினரைக் குறிவைத்து ‘லவ் ஜிஹாத்’ பிரச்சாரங்கள், வன்முறையுடனான பசுவதை எதிர்ப்பு பிரச்சாரங்கள், தங்கள் விருப்பப்படி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதற்கான உரிமத்தை காவல்துறைக்கு வழங்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் வகுப்புவாத ஒற்றுமையை சீர்குலைக்கும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

ஆனாலும் அவர்களுடைய வகுப்புவாத பிரச்சாரத்திற்கான எதிர்வினை மந்தமாகவே உள்ளது. மத சமூகங்கள், சாதிகளுக்கு அப்பாற்பட்டு விவசாயிகளிடம் இருக்கின்ற ஒற்றுமையானது பாஜகவின் இயல்பான தேர்தல் வியூகத்திற்குத் தடையாக இருந்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் இப்போதைக்கு விவசாயிகளின் பிரச்சனையிலிருந்து விடுவித்துக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்துகின்ற தங்களுடைய திட்டங்களை முன்வைப்பதற்கான சிறந்த வாய்ப்பைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது. விவசாயிகள் கற்றுக் கொடுத்திருக்கும் பாடங்களை அரசாங்கம் கற்றுக்கொள்ளுமேயானால் அது இந்தியாவிற்கு மிகவும் நல்லது.

பாடம் 1: முரட்டுத்தனமான பெரும்பான்மை என்ற பலத்தைப் பயன்படுத்தி பாராளுமன்ற நடைமுறைகளைத் தகர்ப்பது பெருத்த இழப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும். மசோதாக்களை நிலைக்குழுவிற்கு அரசு அனுப்பியிருந்தால், விவசாயிகளின் கருத்தைக் கேட்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தால், நியாயமான வாக்குப்பதிவு நடைமுறைகளை பாராளுமன்றத்தில் அனுமதித்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நிச்சயம் அந்த மசோதாக்கள் சட்டங்களாக மாறியிருக்காது.

பாடம் 2: எதிர்க்குரல்களைப் புறக்கணிப்பதும், அவமதிப்பதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். இந்த அரசு ஆரம்பத்திலிருந்தே தன்னுடைய ஒட்டுமொத்த அதிகாரத்தை விவசாயிகளை இழிவுபடுத்துவதற்கே பயன்படுத்தியது. ஆதிவாசிகள், தலித்துகள், சிறுபான்மையினருக்கான நீதிக்காக வாதிடுபவர்களை ‘நகர்ப்புற நக்சல்கள்’ என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்ததைப் போல, விவசாயிகள் தலைவர்கள் மீதும் தேச விரோதிகள் என்று முத்திரையைக் குத்தியது. இந்த நிலையில் மத்தியிலும் மாநிலங்களிலும் உள்ள பாஜக மற்றும் அதன் அரசுகளுக்கு எதிரான வெகுஜனப் போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் இயல்பாக மாறியது. விவசாயிகளின் ஒன்றிணைந்த இயக்கங்களின் பலம் அரசாங்கத்தைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியது.
எந்த விளக்கமும் தேவைப்படாத பாடம் 3: இந்திய தொழிலாளர் வர்க்கங்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தங்களுடைய துணிச்சலின் மூலம் சர்வாதிகாரம் பலிக்காது, சர்வாதிகாரத்தைத் தோற்கடிக்க முடியும் என்பதைச் சாதித்துக் காட்டியுள்ளனர்.
Prime Minister Modi has not been generous in his defeat Article by Brinda Karat in tamil translated by T.Chandraguru தன்னுடைய தோல்வியில் பிரதமர் மோடி பெருந்தன்மையுடன் இருந்திருக்கவில்லை தமிழில் தா. சந்திரகுருவிவசாய இயக்கத்தின் வெற்றி பரந்த தாக்கங்களைக் கொண்டிருக்கின்றது. இந்த வெற்றி நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றின் மீது அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

https://www.ndtv.com/opinion/opinion-three-lessons-for-modi-government-from-farmers-struggle-2617153
நன்றி: என்டிடிவி
தமிழில்: தா.சந்திரகுரு

Identity politics of tribals and right Article in tamil translated by Sa.Veeramani பழங்குடியினரும், வலதுசாரிகளின் அடையாள அரசியலும் தமிழில்: ச.வீரமணி

பழங்குடியினரும், வலதுசாரிகளின் அடையாள அரசியலும் – தமிழில்: ச.வீரமணி




பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 15 அன்று, போபாலில் பழங்குடியினத்தவரின் முதுபெரும் தலைவரான பிர்சா முண்டா பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற பழங்குடியினர் பேரணி/ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையில், சுதந்திரத்திற்குப்பின் கடந்த பல ஆண்டுகளாகவே, பழங்குடியினர் உரிமைகள் உதாசீனப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்று கூறியிருக்கிறார். மேலும், தன்னுடைய அரசாங்கம்தான் நாட்டின் வளர்ச்சியில் அவர்களையும் பங்காளிகளாகச் சேர்த்து, பல்வேறு நலத் திட்டங்கள் மூலமாக அவர்களைப் பயனாளிகளாக மாற்றியிருக்கிறது என்றும் பீற்றிக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தக் கூட்டத்தின்போது தங்கள் அரசாங்கம் பழங்குடியினர் ஆதரவு அரசாங்கம் என்பதைப்போல் காட்டிக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இனிவருங்காலங்களில் பிர்சா முண்டா பிறந்த நாள், “ஜன்ஜதியா கவுரவ் திவாஸ்” (“பழங்குடியினரை கவுரவிக்கும் தினம்”) என அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மோடி, மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில்வே நிலையத்தை, கோண்ட் ராணி, ராணி கமலாபதி ரயில்வே நிலையம் என மாற்றும் விழாவிலும் பங்கேற்றார். அதேநாளன்று, மோடி, காணொளிக் காட்சி மூலமாக, ராஞ்சியில் பிர்சா முண்டா மற்றும் பழங்குடியினர் வரலாற்று அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார்.

இவை அனைத்தும் தாங்கள்தான் பழங்குடியினர் நலன்களுக்காகப் பாடுபடுபவர்கள் எனக் காட்டும் விதத்தில் அமைந்திருந்தன. ஆனால் உண்மையில் மோடி அரசாங்கமானது பழங்குடியினர் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் வனங்கள் மற்றும் வன நிலங்களில் அவர்களுக்கு இருந்துவந்த வாழ்வாதாரங்களையும், வாழ்வதற்கான வழிவகைகளையும் அழித்துக்கொண்டும் இருக்கின்றன.

இந்தியா சுதந்திரம் பெற்றபின், அது முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தபோதே, பழங்குடியின மக்களின் அவலநிலையும் தொடங்கிவிட்டது. அரசாங்கங்களாலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களாலும் பின்பற்றப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பழங்குடியின மக்களை அவர்களின் பாரம்பர்ய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடித்தன, பலரையும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பேராசைபிடித்த ஒப்பந்தக்காரர்களின் கீழ் அடிமை ஊழியஞ்செய்வதற்குத் தள்ளின. பழங்குடியினரின் அடிப்படை ஜனநாயக உரிமைகளும், அரசமைப்புச்சட்ட உரிமைகளும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன.

2014இல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், இவ்வாறு பழங்குடியினர் தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்படுவதும், அவர்கள் உரிமைகள் பறிக்கப்படுவதும் நின்றிடவில்லை. மாறாக, அதன்பின்னர் வனங்களில் உள்ள இயற்கைச் செல்வங்களும், கனிம வளங்களும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களால் சூறையாடப்படுவது முன்னிலும் மோசமான முறையில் அதிகரித்தன.

நாட்டில் ஐந்தாவது மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகளிலிருந்த கனிம வளங்கள் நிறைந்த சுரங்கங்களைக் குத்தகைக்கு விடுவதற்கு முன்னால் அப்பகுதிகளிலிருந்த கிராம சபைகளிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று சட்டம் இருந்தது. மோடி அரசாங்கம் வந்தபின்னர், இது தொடர்பான சட்டத்தில் முதல் திருத்தம் 2015இல் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) திருத்தச் சட்டத்தின்மூலம் இவ்வாறு கிராம சபையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றிருந்த நிலைமை ஒழித்துக்கட்டப்பட்டது. மேலும் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, 2011இல் ஐமுகூ அரசாங்கத்தால் பழங்குடியினர் பாதுகாப்புக்காகக் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்களும் ஒழித்துக்கட்டப்பட்டன. மேலும், இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக, ஐந்து மற்றும் ஆறாவது அட்டவணைப் பகுதிகளிலிருந்த சிறிய சுரங்கங்களை பழங்குடியினர் கூட்டுறவு சங்கங்களுக்கு குத்தகைக்கு விடலாம் என்கிற சட்டப்பிரிவும், இப்பகுதிகளில் செயல்படும் நிலக்கரி நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் 26 சதவீதத்தை சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள மாவட்ட கனிம நிறுவனங்களுக்கு (District Mineral Foundation) அளித்திட வேண்டும் என்கிற சட்டப்பிரிவும் மோடி அரசாங்கத்தால் ஒழித்துக்கட்டப்பட்டது. இவ்வாறு ஒருபக்கத்தில் பழங்குடியினருக்கு விரோதமாக நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் அரசமைப்புச்சட்ட உரிமைகளுக்குக் குழிதோண்டிப்புதைத்துள்ள அதே சமயத்தில், பழங்குடியினர் வாழ்ந்துவந்த வனங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் கனிம வளங்களைச் சூறையாட அனுமதியும் அளித்துவருகிறது.

1927ஆம் ஆண்டு இந்திய வனச் சட்டத்தில் ஒன்றிய அரசாங்கம் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமுன்வடிவு, வனங்கள் மீதான உரிமைகள் தொடர்பாக பழங்குடியினத்தவரை இதர இனத்தவருடன் சமமாகக் கருதுவதற்கு கிராம சபைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த பங்களிப்பினை அழித்திட இட்டுச் செல்கிறது. மேலும் பழங்குடியினர் வனங்களில் விவசாயம் செய்வதையும், மீன் பிடிப்பதையும், வன உற்பத்திப் பொருள்கள் மீதான உரிமைகளையும், கால்நடை மேய்ச்சல் நிலங்கள் மீது இருந்த உரிமைகளையும் கிரிமினல் குற்றமாக்கும் விதத்திலும் அமைந்திருக்கின்றன.

இந்தச் சட்டமுன்வடிவுக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பதால், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆனாலும், மோடி அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள 2018-19 ஆம் ஆண்டு வனக் கொள்கையாக இருந்தாலும் சரி, அல்லது 1980ஆம் ஆண்டு வனப் பாதுகாப்புச் சட்டம் (Forest Conservation Act, 1980)-ஆக இருந்தாலும் சரி, நாட்டின் வனங்கள் அனைத்தையும் வனங்கள் அல்லாத நோக்கங்களுக்குத் திருப்பி விடுவதற்கும், தனியார்மயத்தையும், வணிகமயத்தையும் ஊக்குவிப்பதற்கும், வனங்களின் மீது கிராம சபைகளுக்கு இருந்த அதிகாரங்களை ஒழித்துக்கட்டுவதற்கும் வழிவகைகள் செய்வதேயாகும்.

மோடி அரசாங்கம் கொண்டவர உத்தேசித்துள்ள அனைத்து மாற்றங்களும், வன உரிமைகள் சட்டத்தின் ஷரத்துக்களை அரித்து வீழ்த்தி, வன நிலங்களில் பழங்குடியின மக்களுக்கும், வனங்களில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கும் இச்சட்டத்தின் மூலமாக அளிக்கப்பட்டிருந்த உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கும், அவர்கள் வன நிலங்களில் விவசாயம் செய்வதற்கும், சிறு அளவில் வன உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கும் இருந்த உரிமைகளை ஒழித்துக்கட்டுவதற்கும் இட்டுச்செல்கிறது. இவ்வாறு பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2006ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின்கீழ் பழங்குடியின மக்களுக்கு வன நிலங்களில் அளிக்கப்பட்ட உரிமைகளும், அவற்றை விவசாயம் செய்வதற்கான உரிமைகளும் இப்போது ஒன்றிய ஆட்சியாளர்களால் மீறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒன்றிய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, 2020 ஆகஸ்ட் 31 வரையிலும் வன நில உரிமைகளுக்காக தாக்கல் செய்த மனுக்களில் (claims for titles) 46.69 சதவீதம் மட்டுமே ஏற்கப்பட்டிருக்கின்றன. அதாவது, அவர்களின் கோரிக்கை மனுக்களில் பாதிக்கும் கீழேயே அவர்களுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. பழங்குடியின மக்களுக்காக தங்கள் அரசாங்கம் ஏராளமாகச் செய்துள்ளது என்று மோடி பீற்றிக்கொண்டுள்ள மத்தியப் பிரதேசத்தில், உரிமை கோரி மனுக்கள் செய்துள்ள ஐந்து பழங்குடியினர் குடும்பங்களில் அநேகமாக மூன்று குடும்பங்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.

மோடி அரசாங்கம், பழங்குடியின மக்களின் “சமூக நலனில்” எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருக்கிறது என்பதை பழங்குடியினக் குழந்தைகள் கல்வி கற்க முடியாத அவல நிலையே நன்கு எடுத்துக்காட்டும். 2020 மார்ச்சுக்குப்பின்னர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதல் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, பழங்குடியினக் குழந்தைகளுக்கான அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டதால், பழங்குடியினக் குழந்தைகளில் 90 முதல் 95 சதவீதம் வரை எவ்விதமான கல்வியும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இணையயவழிக் கல்வி உலகம் (The world of online education) என்பது பழங்குடியின மாணவர்களுக்கு மூடப்பட்டிருக்கிறது. அநேகமாக அனைத்துப் பழங்குடியின மாணவர்களுக்கும் கல்வி உரிமை ஒழித்துக் கட்டப்பட்டிருக்கிறது.

உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தவரை கிராமப்புற பழங்குடியினக் குடும்பங்கள் மிகவும் வறியநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இவர்களின் மத்தியில் பசி-பட்டினிக் கொடுமை கடுமையாக இருக்கிறது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு வேலை அளிப்பதிலும் அநேகமாக இவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். பழங்குடியினர் குறித்த மோடி அரசாங்கத்தின் இந்துத்துவா அணுகுமுறை, வலதுசாரி அடையாள அரசியலின் வகையைச் சார்ந்தது. மோடி, தன்னுடைய உரையில், பழங்குடியின சமூகத்தினருடன் ராமனுக்கு இருந்த தொடர்பைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்து சமூக அமைப்பில் அடித்தட்டில் பழங்குடியின மக்களை வைத்திடும் இந்துத்துவா திட்டத்தின் ஒரு பகுதியே இதுவாகும்.

இவ்வாறு இவர்கள் பழங்குடியின மக்களுக்காகப் போராடியவர்களைப் புகழ்ந்துகொண்டும், அவர்களின் பெயர்களை ரயில் நிலையங்களுக்கு வைத்துக்கொண்டும், அவர்களுக்காக சிலைகள் எழுப்பிக்கொண்டும் உள்ள அதே சமயத்தில், அவர்களுக்கு வன நிலங்களிலும், வனங்களிலும் இருந்துவந்த உரிமைகளையும், அவர்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசமைப்புச்சட்ட உரிமைகளையும் ஒழித்துக்கட்டும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. பழங்குடியினர், இந்துத்துவா-கார்ப்பரேட் ஆட்சியாளர்களால் பலிகொடுக்கப்படுபவர்களில் பிரதானமாக இருக்கிறார்கள்.

(நவம்பர் 17, 2021)
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

Sleep deprived small manufacturers and the Prime Minister who works without sleep Article by Kanagaraj தூக்கம் தொலைத்த சிறுகுறு உற்பத்தியாளர்களும் தூங்காமல் பணிபுரியும் பிரதமரும் கட்டுரை - கனகராஜ்

தூக்கம் தொலைத்த சிறு-குறு உற்பத்தியாளர்களும்; ‘தூங்காமல்’ பணிபுரியும் பிரதமரும்! – கனகராஜ்



சமீப நாட்களாக சில ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அசையா சொத்துக்கள் ஏலம் பற்றிய விளம்பரங்கள் மிக அதிகமாக தென்படுகின்றன. அவற்றை கூர்ந்து கவனித்தால் ஆகப்பெரும்பாலனவை 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை சிறு-குறு நிறுவன உரிமையாளர்களின் சொத்துக்களாக இருக்கின்றன. இவர்களின் கடன் தொகை சில லட்சங்களிலிருந்து அதிகபட்சமாக ஒன்றிரண்டு கோடிகள் வரை இருக்கிறது. கோடிகளில் கடன் இருப்பவை மிகச் சொற்பமாக இருக்கின்றன. பொதுவாக, இந்தியாவில் பெருமளவு வேலைவாய்ப்புகளை வழங்கி கொண்டிருப்பது சிறு-குறு தொழில்கள் தான். இந்தியா முழுமைக்கும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான சிறு-குறு நடுத்தர தொழில்கள் உள்ளதாக அமைச்சர் நிதின்கட்கரி ஒருமுறை அறிவித்திருந்தார். சராசரியாக 5 பேர் என்று வைத்துக்கொண்டாலும் 30 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு தொழிலும், வாழ்வும் அளிக்கும் துறையாக இது இருக்கிறது. குறைந்தபட்சம் இந்திய உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதம் அளவிற்கு பங்களிப்புச் செய்பவையாக இந்த தொழில்கள் தான் விளங்கிக் கொண்டிருக்கின்றன. உள்ளூர் பொருளாதார நடவடிக்கையில் சிறு-குறு தொழில்களின் பங்கு மிக முக்கியமானது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்திற்கு வந்த பிறகு இவை கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டன. உண்மையில், மிகக் கடுமையான தாக்குதல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையோடு வந்து சேர்ந்தது. அதன்பிறகு ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்கு பிறகு ஒலிம்பிக் போட்டியாளரோடு உள்ளூர் போட்டியாளர் போட்டியிட வேண்டிய நிலைமையைப் போன்ற கடுமையான சூழலுக்குள் சிறு-குறு தொழில்கள் தள்ளிவிடப்பட்டன. கோவிட் பாதிப்பு காலத்தில் சிறு-குறு தொழில்களை வாழ்வா? சாவா? என்ற நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ளது. அதன் வெளிப்பாடு தான் ஆங்கில பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வரும் இ-ஏல அறிவிப்புகள்.

ஒன்றிய அரசாங்கம் ஏதோ இந்த தொழில்களை காப்பாற்றுவதற்கு மிகப்பெரிய அளவிற்கு உதவி செய்துவிட்டது போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் வெளியிட்ட ட்வீட்டில் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அசாமில் 5,20,000 சிறு-குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுக்கு ரூ. 2482.23 கோடி உதவி செய்திருப்பதாக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2482 கோடி என்பது பார்த்தவுடன் மிகப் பெரிய தொகையாக தோன்றும். ஆனால், உண்மையில் அதனால் பலனடைந்ததாகச் சொல்லப்படும் 5,20,000 என்கிற எண்ணிக்கையால் வகுத்து பார்த்தால் சராசரி ரூ. 47,735/-தான். இது மூன்று பேர் பணிபுரியும் நிறுவனத்திற்கு ஒரு மாத சம்பளத்திற்கு கூட போதுமானதா என்று தெரியவில்லை. இப்படித்தான் அரசாங்கம் பீற்றிக்கொள்கிறது.

சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசாங்கம் இந்தியா முழுவதும் சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் புரிவோருக்கு உதவுவதற்காக கேரண்டி ஸ்கீம் ஒன்றை அறிவித்தது. அதற்காக மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக ஏராளமான விளம்பரங்கள் செய்யப்பட்டது. அதில் தமிழகம் தான் அதிகம் பயன்பெற்றதாக அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பிறகு செய்திகளை பார்க்கும்போது 62,999 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்க அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால், 34,626 பேர் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதுபற்றி விசாரித்த போது உண்மையில் இந்த பணத்தில் ஒரு பைசா கூட பெரும்பாலானோரில் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரவில்லை என்றும், வங்கிகளே நேரடியாக அந்த பணத்தை ஜி.எஸ்.டி. உள்ளிட்ட சட்டப்படியான நிலுவைத் தொகையினை கட்டுவதற்கு அனுப்பி விட்டதாகவும் சொல்லப்பட்டது. அதாவது உண்மையில், ஒருவருக்கும் கூட இந்த பணம் அவர்கள் கணக்கிற்கு வரவில்லை. மாறாக, அவர்கள் கணக்கில் கடன் ஏற்றப்பட்டது. இதனால் தான் மீதிப்பேர் இதை பயன்படுத்த முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் மேற்கண்ட ஏல விளம்பரங்கள் மிக கடுமையானதாகவும் பல தொழில்கள் மூடப்படுவதோடு உரிமையாளராக உள்ள குடும்பங்களும், தொழிலாளர்களும், தொழிலும், வேலையும் இன்றி தள்ளப்படும் நிலை ஏற்படும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. பொதுவான கோவிட் பாதிப்பு கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சமமற்ற போட்டி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கந்துவட்டித் தனம் அனைத்தும் சேர்ந்து இவர்கனை இந்த நிலைமைக்கு தள்ளியிருக்கிறது.

கோவையில் உள்ள ஒரு நிறுவனம் 2015ல் ஐ.டி.பி.ஐ. வங்கியில் 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்த கடனுக்கான வட்டியை 2020 மார்ச் வரை பாக்கியில்லாமல் காலம் தாழ்த்தாமலும் கட்டி வந்திருக்கிறார்கள். 2020 மார்ச்சுக்கு பின்பு அவர்களால் வங்கி வட்டியை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனம் பள்ளி கல்லூரிகளுக்கு சீருடை, காலணிகளை உற்பத்தி செய்து வழங்கும் நிறுவனம். ஆண்டு முழுவதும் இந்த காலணிகளை உற்பத்தி செய்து பள்ளி துவங்கும் காலத்தில் மட்டுமே அதிகளவு விற்பனை செய்யும் நிறுவனம். அவர்களுக்கு ரூ. 2 கோடி பெறுமானம் உள்ள சீருடைக் காலணிகள் உற்பத்தி செய்து வைத்திருந்த நிலையில் பள்ளிக் கூடங்கள் திறக்காததால் அவை முழுவதும் தேங்கி போய்விட்டன. இதனால் அவர்களால் வங்கிக்கான வட்டியை செலுத்த முடியவில்லை. எனவே, 50 லட்சம் கடனுக்காக மேற்கண்ட வங்கியில் அடமானம் வைத்துள்ள சொத்தை ஏலம் விடப்போவதாக வங்கி மிரட்டியிருக்கிறது. வேறுவழியின்றி 25 லட்சம் ரூபாய் கடன் புரட்டி வங்கிக்கு கட்டியிருக்கிறார்கள். ஆனாலும் வங்கி விடவில்லை. கடந்த ஜூலை மாதத்தில் அடமானம் வைக்கப்பட்டிருந்த சொத்தில் உரிய காலத்தில் கட்டவில்லையென்றால் சொத்து ஏலம் விடப்படும் என்று அந்த சொத்துள்ள இடத்தில் எழுதி வைத்துவிட்டார்கள். சிறு-குறு தொழில் முனைவோரின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் திரு. ரகுநாதன் Raghunathan K E அவர்களை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சந்தித்திருக்கிறார். நிதியமைச்சர் சிறு-குறு தொழில் துறை செயலாளர், வங்கி என்று ஒவ்வொருவருக்கும் முறையீடு செய்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலாளரின் உதவியையும் நாடியிருக்கிறார்கள். அவர் தலையிட்ட பிறகும் கூடுதலாக, ஒரு மாதம் அவகாசம் வழங்கியதைத் தவிர வேறொன்றும் நடக்கவில்லை.

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் M. K. Stalin அவர்கள் சமீபத்தில் 12 மாநில முதல்வர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சிறு-குறு தொழில்துறையினர் வாங்கிய கடனுக்கான வட்டி ஓராண்டுக்கு வரிவிலக்கு அளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும் என்பது தான் அந்த கடிதம். ஆனால், ஒன்றிய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சிறு-குறு உரிமையாளர் சங்கங்கள் எல்லாம் ஒரு காணொளியை https://youtu.be/04tFuIA5fRI வெளியிட்டுள்ளார்கள். அந்த காணொளியில் சிறு-குறு தொழிலில் உள்ளோர் தங்களுடைய பிரச்சனைகளை பட்டியலிட்டிருக்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமான பிரச்சனைகள் என்று சொல்வது ஒன்று, பெருநிறுவனங்களுக்கு இணையாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (ஜி.எஸ்.டி. வருவதற்கு முன்பு சிறு-குறு தொழில்களுக்கு மதிப்புக் கூட்டல் வரி 5 சதவிகிதம் மட்டும் தான் இருந்தது. ஆனால் பெருநிறுவனங்களுக்கு மதிப்புக் கூட்டல் வரியும், மத்திய கலால் வரியும் இணைந்து 17.5 சதவிகிதம் இருந்தது. இப்போது இரண்டு துறைகளுக்கும் 18 சதவிகிதம் வரி.) இரண்டாவது, வங்கிகள் கடன் தருவதிலும், கடனை வசூலிப்பதிலும் காட்டும் நெருக்கடி. (இந்த காலத்தில் பெருநிறுவனங்களுக்கு 9 லட்சம் கோடி கடன் வாராக் கடன் என்று தள்ளுபடி செய்யப்பட்டதை நினைவில் கொள்க), மூன்றாவதாக, இடுபொருட்களின் விலை அவ்வப்போது உயர்வு (கடந்த காலத்தில் விலை கட்டுப்பாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு விலைக்கட்டுப்பாடு அமலில் இருந்தது. தற்போது நிறுவனங்களே விலையை ஏற்றிக் கொள்கிறார்கள்), நான்காவதாக, பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் போதாமை ஆகியவற்றை பட்டியலிட்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் மோடியின் தீவிர ஆதரவாளர்கள். ஆனால், இதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாது என்பதற்காக ஒரு வீடியோ வடிவில் அவர்களுடைய பிரச்சனையை சொல்ல முனைந்திருக்கிறார்கள்.

இந்த கடனுக்காக ஏலம் விடும் அறிவிப்புகளும், தொழில்துறையினர் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்கள் குறைகளை வாய் விட்டு அழ முடியாத அளவிற்கு சொல்வதும், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் என்றே சொல்ல வேண்டும். இது, சிறு-குறு உற்பத்தியாளர்களின் பிரச்சனை மட்டுமல்ல. அதை சார்ந்த தொழிலாளர்கள் அந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் இயங்கும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் பிரச்சனைகளும் தான் இந்திய பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும்.

விவசாயத்தைக் காப்பாற்ற ஏறத்தாழ 11 மாதமாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஃபோர்டு உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்படாமல் பாதுகாப்பதற்காக தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா பட்டினிக் குறியீட்டில் 94வது இடத்திலிருந்து 101வது இடத்திற்கு ‘முன்னேறியிருக்கிறது’. இப்படி இந்தியாவில் ஒவ்வொரு துறையும் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் மிகப் பெரும்பாலானோருக்கு வேலை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு-குறு தொழில்கள் எப்படியாவது பிழைத்திருக்க வேண்டும் என்கிற நிலையில் அதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். மற்ற பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும் பெருநிறுவனங்களுக்கு இந்த காலத்தில் 9 லட்சம் கோடி தள்ளுபடி செய்த ஒன்றிய அரசாங்கம் இந்த சிறு-குறு தொழில்கள் பெற்ற கடனுக்கு கடந்த ஏப்ரல் முதல் இந்தாண்டு தற்போது வரையிலான காலத்திற்கான வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உரத்துக் குரல் எழுப்ப வேண்டியது மிகவும் முக்கியமாகும். இன்னும் சிறிது காலத்திற்கு ஜி.எஸ்.டியிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று கோருவதும் பொதுவான மக்கள் நலனிலிருந்தும், இந்தியாவின் பொருளாதாரத் தேவையிலிருந்தும் ஒலிக்க வேண்டிய முழக்கங்களாகும்.

“பிரதமர் விமானத்தில் பறந்து கொண்டே வேலை செய்கிறார். விமானத்திலிருந்து இறங்கியதும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பார்வையிடுகிறார். உணவும், உறக்கமும் இன்றி 24 மணி நேரமும் பணிபுரிகிறார்” என்றெல்லாம் பாஜகவினர் பேசுவது உண்மையானால், அழிவின் விளிம்பில் நிற்கும் சிறு-குறு தொழில்களையும், அதில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பங்களையும் காப்பாற்றுவதற்கு சிறிது நேரத்தையாவது ஒதுக்கட்டும்.

 

https://youtu.be/04tFuIA5fRI

இந்தியப் பிரதமரின் பணத் தொழிற்சாலையான கொரோனா! – அறிவுக்கடல் (இங்கிலாந்தின் க்ரிட்டிக் இதழிலிருந்து)

இந்தியப் பிரதமரின் பணத் தொழிற்சாலையான கொரோனா! – அறிவுக்கடல் (இங்கிலாந்தின் க்ரிட்டிக் இதழிலிருந்து)

  கோவிட்-19 தாக்குதல் என்பது, ஒரு நோய் என்பதைவிட, வாராது வந்த மாமணியான வாய்ப்பாகவே நரேந்திர மோடிக்கு அமைந்துவிட்டது. வரலாற்றின் மிகப்பெரிய 'லாக்-டவுண்' என்று வருணிக்கப்பட்ட ஊரடங்கை மார்ச் 24 அன்று அறிவிப்பதற்குமுன்,  இந்தியாவின் மதச்சார்பின்மையின்மீது, குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில்,…