நிவேதிதா லூயிஸ் (Nivedita Louis) எழுதிய சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை (Sindhu Samaveli Naagarigam: Kandupidikkappatta Kathai)

சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை – நூல் அறிமுகம்

“சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை” என்ற தலைப்பை பார்த்ததுமே நூலினை வாசிக்கும் ஆர்வம் கூடியது. நம் முன்னோர்களின் வரலாற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம் அனைவருக்குமே இருப்பது இயல்பு. வெறும் கதைகளாக, ஆதாரமற்ற தகவல்களாக இல்லாமல் பல்வேறு ஆய்வு நூல்களையும், ஆராய்ச்சி…
சகவாசம் – சிறுகதை | Sagavaasam Short Story Tamil - about Drug Abuse (போதைப் பொருள்) In Adolescents Age Group and Its awareness | https://bookday.in/

சகவாசம் – சிறுகதை

சகவாசம் – சிறுகதை கனகாவின் வருகையை எதிர்நோக்கி வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்தாள் பரிமளா. பரிமளா திருமணம் முடிந்து இந்த வீட்டிற்கு வரும்போது கனகாவிற்கு பதினெட்டு வயதிருக்கும். அந்த வயதுக்கே உரிய சுறுசுறுப்புடன் எல்லா வீட்டு வேலைகளையும் புன்முறுவலுடன் செய்வாள். சிறுவயதிலேயே அவள்…
Azha Naadu அழ நாடு

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “அழ நாடு” – பிரியா ஜெயகாந்த்

      தான் பிறந்த தேனி மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தன் தேடலைத் தொடங்கி, பல வருட ஆய்வின், உழைப்பின் பலனாக ஆசிரியர் உமர் பாரூக் அவர்களின் “அழ நாடு” நூல் உருவாக்கப்பட்டுள்ளது. பள்ளி காலத்தில்…
பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்

பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்




நிஜத்தினில் சாதித்தேன்
நீ என்
கனவினைக் கலைத்ததால் !

கலைகளில் தேர்ந்தேன்
நீ எனைக்
காலடியில் கிடத்தியதால் !

உரிமைக்குரல் எழுப்பினேன்
நீ என்
உணர்வை உதாசீனப் படுத்தியதால் !

நிமிர்ந்து நின்றேன்
நீ எனை
நிலம் பார்க்கச் சொன்னதால் !

பேச்சாளரானேன்
நீ எனை
மௌனிக்கச் செய்ததால் !

உயர்கல்வி பயின்றேன்
நீ எனை
அடுக்களையில் அடைத்ததால் !

மேடை ஏறினேன்
நீ எனைப்
படியேற விடாததால் !

முன்னேற்றம் அடைந்தேன்
நீ எனைப்
பின்னுக்குத் தள்ளியதால் !

தன்னம்பிக்கை கொண்டேன்
நீ எனைத்
தனித்து விட்டதால் !

தைரியம் கொண்டேன்
நீ எனைத்
தாழ்த்த நினைத்ததால் !

பன்முகத்தன்மை கொண்டேன்
நீ என்
முகவரியை மறைத்ததால் !

சிகரம் தொட துணிந்தேன்
நீ என்
சிறகை ஒடித்ததால் !

சரித்திரம் படைத்தேன்
நீ எனைச்
சதி ஏற்ற துணிந்ததால் !

பேராண்மை கொண்டேன்
நீ என்
பெண்மையைப் பழித்ததால் !

நீ எனை
வார்த்தை உளிகளால்
சிதைக்கச் சிதைக்கச்
சிற்பமானேன்.

பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
மின்னஞ்சல்: [email protected]

Thaimaikkul Poem By Priya Jayakanth. பிரியா ஜெயகாந்தின் தாய்மைக்குள் கவிதை

தாய்மைக்குள் கவிதை – பிரியா ஜெயகாந்த்




முதல் முறை நீ..
தரித்த தருணம் என் கருவறைக்குள்
சுவாசித்த காற்று என் மூச்சுக்குள்
அழுத அழுகை என் வலிக்குள்
பார்த்த பிம்பம் என் இமைக்குள்

சிரித்த சிரிப்பு என் புன்னகைக்குள்
தீண்டிய ஸ்பரிசம் என் உணர்வுக்குள்
உண்ட உணவு என் சுவைக்குள்
கண்ட கனவு என் உறக்கத்திற்குள்

ஊடுத்திய ஆடை என் அலமாரிக்குள்
படுத்த படுக்கை என் மடிக்குள்
உதிர்த்த வார்த்தை என் மொழிக்குள்
கேட்ட கேள்வி என் சிந்தனைக்குள்

நடந்த நடை என் தடத்துக்குள்
எழுதிய எழுத்து என் வாசிப்புக்குள்
கொண்ட கோபம் என் சினத்திற்குள்
பயந்த நிமிடம் என் அச்சத்திற்குள்

செய்த குறும்பு என் ரசனைக்குள்
விழுந்த காயம் என் ரணத்திற்குள்
கற்ற பாடம் என் அறிவுக்குள்
மகிழ்ந்த பண்டிகை என் கொண்டாட்டத்திற்குள்

வரைந்த ஓவியம் என் பார்வைக்குள்
சேமித்த பணம் என் வரவுக்குள்
வாங்கிய விருது என் வெற்றிக்குள்
கொடுத்த பரிசு என் விருதுக்குள்

ரசித்த இசை என் செவிக்குள்
பாடிய பாடல் என் மெட்டுக்குள்
அணிந்த சலங்கை என் ஓசைக்குள்
ஆடிய நடனம் என் பாவத்திற்குள்

கேட்ட பொருள் என் பரிசுக்குள்
சமைத்த உணவு என் ருசிக்குள்
அளித்த அறிவுரை என் கற்பிதத்திற்குள்
அணைத்த அரவணைப்பு என் தாய்மைக்குள் !!!

Niyathi Poetry By Priya Jayakanth. ’நியதி’ கவிதை - பிரியா ஜெயகாந்த். Its About Human Life And Time.

’நியதி’ கவிதை – பிரியா ஜெயகாந்த்



நியதி

துயரங்கள் அனைத்தும் காலச் சுவடாய்
விருப்பங்கள் அனைத்தும் கானல் நீராய்

கனவுகள் அனைத்தும் கலைந்திட்ட மேகமாய்
நினைவுகள் அனைத்தும் நெஞ்சினில் பாரமாய்

விடைபெற நினைத்தும் வழித்தடம் இருளாய்
தொடர்ந்திட நினைத்தும் முடிவற்ற தொலைவாய்

மறந்திட நினைத்தும் மாறாத உணர்வாய்
மருத்திட நினைத்தும் மலர்ந்திட்ட உறவாய்

உணர்வுகள் துளிர்த்தும் உருப்பெறா வடிவாய்
உண்மைகள் துளிர்த்தும் உணராத வடுவாய்

வார்த்தைகள் துளிர்த்தும் மௌனத்தின் பதிலாய்
வாய்ப்புகள் துளிர்த்தும் வாய்த்திடா நிலையாய்

புசித்திட பணித்தும் பசியாத வயிறாய்
புரிந்திட பணித்தும் பொருள்படா வரியாய்

துயிலுற பணித்தும் துவளாத விழியாய்
விழித்திட பணித்தும் விடியாத பொழுதாய் !!!!!

பிரியா ஜெயகாந்த்
சென்னை
மின்னஞ்சல்: [email protected]

சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

சிறுகதை: லாக்டவுன் பண்டிகை – பிரியா ஜெயகாந்த்

இன்று புதன் கிழமை என்பதால் ராமு வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராமுவிற்கு அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் வேலை. சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அறிவிப்புக்கு பின் வீட்டில் இருந்தே பணிபுரிகிறார். வயது…
அவள் – பிரியா ஜெயகாந்த்

அவள் – பிரியா ஜெயகாந்த்

அவள் முகம் நிலவல்ல தேய்ந்தாலும் மீண்டும் வளர்வதில் அவள் நிலவு அவள் புருவம் வில்லல்ல சூழலுக்கேற்ப வளைந்து கொடுப்பதில் அவள் வில் அவள் கண்கள் மீனல்ல உவர்ப்பிலும் வாழப் பழகுவதில் அவள் மீன் அவள் பார்வை அம்பல்ல இலக்கை குறிவைத்து அடைவதில்…
பிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்

பிரியா ஜெயகாந்த் ஹைக்கூ கவிதைகள்

பசியாறிய குழந்தை உறங்கியது நிரந்தரமாக கள்ளிப்பாலின் உபயம்  போராட்டம் முடிந்தது ஏமாற்றத்துடன் இறப்பில் முழங்கியது சங்கு மௌனமாக அரசியல்வாதியின் காதுகளில் ஆறியது நாவினால் சுட்டவடு ஆறாதது உன் மௌனம் உயரப் பறந்தாலும் கடிவாளத்தின் பிடியில் காத்தாடியும் பெண்ணினமோ விடிந்ததும் இருண்டன பசி…